Following is a statement I found in a blog. It is produced here in 'copy & paste' method.
ஜெயலலிதா ஒன்றைச்செய்ய வேண்டுமென்று நினைத்தால் அதைச் செய்தே தீருவார். யாரும் தடுக்க முடியாது. சீனிவாசன் என்பவரைத் தூண்டிவிட்டு வழக்கு போட வைத்தவரும் அவர்தான். இப்போது போக்குவரத்துக்கு சிலை இடையூறாக இருக்கிறது என்று காவல்துறை ஆணையரை சொல்ல வைத்தவரும் அவர்தான். அது போக்குவரத்துக்கு இடையூறோ அல்லது கத்தரிக்காய்க்கு இடையூறோ காரணம் அல்ல. அந்த திறப்புவிழா கல்வெட்டில் கருணாநிதி பெயர் இருக்கிறது. அது ஒன்றே காரணம். உலகத்தமிழ் மாநாட்டின்போது திறக்கப்பட்ட 10 சிலைகளில் கண்ணகி சிலையில் மட்டுமே கருணாநிதி பெயர் இருந்தது. அதனால் இடையூறு என்று நீக்கப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் கருணாநிதியால் வைக்கப்பட்டது. இப்போது இடையூறு என்று நீக்கினால் குதர்க்க எண்ணம் வெளிப்பட்டுவிடும் என்பதால் கண்ணகி விடப்பட்டாள், இப்போது சிவாஜி மாட்டிக் கொண்டார்.
புதிய தலைமைச் செயலகம் மாற்றப்பட்டதற்கு என்ன காரணமோ, அண்ணா நூற்றாண்டு நூலகம் மாற்றப்பட்டதற்கு என்ன காரணமோ அதுதான் சிவாஜி சிலைக்கும் காரணம். அந்தக் காரணத்தின் பெயர் கருணாநிதி.
சென்னையில் சாலைகளின் நடுவே எத்தனை சிலைகள் உள்ளன. அதையெல்லாம் சீனிவாசன் கவனிக்காதது ஏன்?. அவற்றை எதிர்த்து ஜெயலலிதா வழக்குப்போட சொல்லவில்லை. அதுதான் காரணம். சென்னை அண்ணா சாலையில் ஜெயலலிதா தலைமையில் ராஜீவ்காந்தி திறந்து வைத்த சிலையும் நடுரோட்டில்தான் உள்ளது. அது இடைஞ்சலாக இல்லையா?. வாகன ஓட்டிகளை மறைக்கவில்லையா?.
ஒரு தமிழனின் சிலையை வந்தேறிகள் எல்லாம் எப்படி அவமானப் படுத்துகிறார்கள். இவர்களா மண்டபம் கட்ட அனுமதி தரப்போகிறார்கள்??.