கொஞ்ச நாட்களுக்கு முன்பு சுவாசமே பாடலை ரோஷன் சிலாகித்து எழுதியிருந்தார். அதுவும் பாலு பாடிய விதத்தை. மெலடி என்ற அடிப்படையில் மட்டுமே "போர்க்களம் எங்கே" பாடல் உயர்ந்த இடத்திற்கு சுலபமாக போய்விடுகிறது போலத் தெரிகிறது. சுவாசமே சுவாசமே, குறிப்பாக இஞ்சாருங்கோ பாடலில் வரும் வாத்தியக்கருவிகள், தெனாலி பாடல் - ஷங்கர் மகாதேவன் குரலில் வெளிப்படும் பயம், அத்தினி சித்தினி பாடலின் சரணங்களின் அமைப்பு- எல்லாவற்றிலும் ரஹ்மானின் முத்திரைகள் நிறைய.