http://i1302.photobucket.com/albums/...psed380214.png
Printable View
மூன்றே ஆட்கள் மட்டும் முதல் கட்சி மற்றும்
மூன்று காட்சிகள் மட்டும் ஓடி அடுத்த நாள் தூக்க படுகின்ற நாட்களில் சர்வ சாதாரணமா தினசரி நான்கு காட்சி ஓடி வசூலில் சாதனை பண்ணிய நடிகர்திலகத்தின் வைர நெஞ்சம் மதுரை அலங்கார் சண்டே ரசிகர்கள் அலப்பரை காட்சிகள்
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...33241865_n.jpg
https://fbcdn-sphotos-a-a.akamaihd.n...85867738_n.jpg
https://scontent-a-sin.xx.fbcdn.net/...21647235_n.jpg
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...31152728_n.jpg
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...49983628_n.jpg
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...68365356_n.jpg
சிவாஜிகணேசனுக்கு பாடிய முதல் பாட்டு, மார்ச் 27, 6:25 PM IST
http://mmimages.maalaimalar.com/Arti...e_S_secvpf.gif
"சுமதி என் சுந்தரி'' படத்தில் வரும் "பொட்டு வைத்த முகமோ'' என்ற பாடல், சிவாஜிகணேசனுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல்.
"ஆயிரம் நிலவே வா'', "இயற்கை என்னும் இளைய கன்னி'' ஆகிய பாடல்கள் மூலம் புகழ் பெற்ற பாலசுப்பிரமணியத்துக்கு, ஏராளமான படங்களில் பாட வாய்ப்பு வந்தது.
அந்தக் கால கட்டத்தில், எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிகணேசனுக்கும் டி.எம்.சவுந்தரராஜன்தான் பாடிக்கொண்டிருந்தார்.
ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன் ஆகியோர் முன்னேறிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடலானார்.
சிவாஜிகணேசன் நடித்த "சுமதி என் சுந்தரி'' என்ற படத்தில், சிவாஜிக்கு குரல் கொடுக்கும் வாய்ப்பு பாலுவுக்கு கிடைத்தது. "பொட்டு வைத்த முகமோ'' என்ற அந்தப்பாடலை, முதலில் வேறு ஒருவர் பாடுவதாக இருந்தது. பின்னர் பாலுவை எம்.எஸ்.விஸ்வநாதன்
தேர்ந்தெடுத்தார்."சிவாஜிக்கு முதன் முதலாகப் பாடப்போகிறோம். நன்றாக அமையவேண்டுமே'' என்ற பயத்தோடு, பாடல் பதிவுக்குச் சென்றார், பாலு. அங்கே சிவாஜிகணேசன் வந்திருந்தார்.
பொதுவாக, பாடல் பதிவுக்கு சிவாஜி வருவதில்லை. சிவாஜிக்காக டி.எம்.சவுந்தரராஜன் எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிறார். அப்போதெல்லாம் வராத சிவாஜி இப்போது ஏன் வந்திருக்கிறார் என்று பாலு உள்பட அனைவரும் வியப்படைந்தனர்.
பாலுவை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார், சிவாஜி.
"பாலு! எனக்குப் பாடப்போவதை நினைத்து, உன் ஸ்டைலை மாற்றிப் பாட முயற்சி செய்யாதே! உன் பாணியில் பாடு. நான் உன் பாட்டைக் கேட்கவேண்டும் என்பதற்காக இங்கே வரவில்லை. எனக்காக நீ உன் பாணியை மாற்றிப்பாட வேண்டும் என்று யாராவது சொல்லி உன்னைக் குழப்பி விடுவார்கள் என்று நினைத்தேன். அதனால்தான் இங்கே வந்தேன். நீ உன் பாணியில் பாடு. அதற்கேற்றபடி நான் நடித்து விடுகிறேன்'' என்று கூறினார்.
சிவாஜி இப்படி கூறியது, பாலுவுக்கு தைரியத்தைக் கொடுத்தது. பாட்டை நன்றாகப் பாடமுடியும் என்ற நம்பிக்கை வந்தது.
சிவாஜியும், பாலுவும் வெளியே வந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஏதோ கூறிவிட்டு, சிவாஜி அங்கே இருந்து புறப்பட்டுச் சென்றார்.
பின்னர் பாடல் பதிவு நடந்தது. எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் அந்தப்பாட்டை பாடி முடித்தனர். பாடல் நன்றாக வந்திருப்பதாக எம்.எஸ்.வி. கூறினார்.
சி.வி.ராஜேந்திரன் டைரக்ஷனில் உருவான "சுமதி என் சுந்தரி''யின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்குப் படம் போட்டுக் காட்டப்பட்டது. பாலசுப்பிரமணியம், தன் குடும்பத்துடன் சென்றிருந்தார்.
"பொட்டு வைத்த முகமோ'' பாடல் காட்சியில், பாலுவின் பாட்டுக்கு ஏற்ப சிவாஜி தன் பாணியை மாற்றி நடித்திருந்தார். சிவாஜியின் ஆற்றலைக் கண்டு பிரமித்துப்போனார், பாலு.
படம் முடிந்ததும், எல்லோரும் பாலுவை சூழ்ந்து கொண்டனர். "பொட்டு வைத்த முகமோ பாடல் பிரமாதம்'' என்று பாராட்டினர்.
1971 ஏப்ரல் 14-ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று வெளிவந்து "சுமதி என் சுந்தரி'' வெற்றிப்படமாக அமைந்தது.
தெலுங்கில் என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வரராவ் ஆகிய இருவரும் கொடிகட்டிப் பறந்த காலக்கட்டம் அது. அவர்களுக்கு கண்டசாலாதான் பின்னணியில் பாடி வந்தார். தெலுங்கு பின்னணி பாடகர்களில் "முடிசூடா மன்னன்'' அவர்தான்.
வயதானதால், பாடுவதை குறைக்கலானார், கண்டசாலா. அப்போது பாலசுப்பிரமணியத்துக்கு வாய்ப்புகள் வரலாயின. அதிலும் ஒரு இடைïறு. ராமகிருஷ்ணன் என்ற இளம் பாடகர், ஏறக்குறைய கண்டசாலாவைப் போன்ற குரல் கொண்டவர். அவர் என்.டி.ராமராவுக்கு குரல் கொடுக்கலானார். கண்டசாலாவின் குரலை மறக்க முடியாத ஆந்திர ரசிகர்கள், ராமகிருஷ்ணன் குரலில் ஆறுதல் அடைந்தனர்.
தெலுங்கு காமெடி நடிகர்களுக்கு, பாலு பாட நேரிட்டது.
இந்த சமயத்தில், ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. நடிகர் கிருஷ்ணா நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றதால், அவர் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். அவருக்கு பாலசுப்பிரமணியத்தின் குரல் வெகுவாகப் பொருந்தியது. "இனி என் படங்களுக்கு நீங்களே தொடர்ந்து பாடுங்கள். மற்ற பிரபல நடிகர்களுக்கும் நீங்கள் பாடலாம். ஆனால், காமெடி நடிகர்களுக்குப் பாடாதீர்கள்'' என்று பாலுவிடம் கூறினார், கிருஷ்ணா.
அதைத்தொடர்ந்து கிருஷ்ணாவுக்கும், மற்ற பிரபல நடிகர்களுக்கும் பாலு பாடினார். தெலுங்கு பின்னணி பாடகர்களில் முதல் இடத்தை விரைவிலேயே பெற்றார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் தினமும் இரவு, பகலாக பாடினார், பாலசுப்பிரமணியம். அவர் புகழ் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போயிற்று.
malaimalar
30.03.2014 . இன்று ஞாயிற்று கிழமை
பகல் 12 மணிக்கு சண் டீவியில்
தில்லானா மோகனாம்பாள்
12.01 .1970ஆம் ஆண்டு இலங்கையில் திரையிடப்பட்ட பொழுது
100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது
கொழும்பு....கெப்பிட்டல்......104 .நாட்கள்
கொழும்பு....பிளாசா..............61...நாட்கள்
கொழும்பு....சபையர்.............04...நாட்கள்
கொழும்பு.....மைலன்............03..நாட்கள்
யாழ்நகர்......வெலிங்டன்.......91..நாட்கள்
கொளுத்தும் வெய்யிலில் குளிர்நிலவாய் ஒளிவீச CID RAJAN தயாராகிறார் !
அவரை, அவரது ஸ்டைலின் உச்சத்தை காண நாமும் தயாராவோம் !
ஏப்ரல் 4 முதல் சென்னை பைலட் இல் மாலை 4 PM மற்றும் 7 PM காட்சிகள் ...
மற்றும் காஞ்சிபுரம் பாலசுப்ரமணிய திரை அரங்கில் தினசரி 4 காட்சிகள் - CID RAJAN கண்டுபிடிக்கும் தங்க சுரங்கம் !!
இணையதளத்தில் முன்பதிவு ஏப்ரல் 2 முதல் www.ticketgreen.com (or) www.bookmyshow.com
ADVANCE BOOKING from APRIL 2nd @ www.ticketgreen.com (or) www.bookmyshow.com
http://i501.photobucket.com/albums/e...psa50e660b.jpg
NOW SHOWING IN SUN TV ...! NADIGAR THILAGAM's THILLAANA MOHANAMBAL !
http://i501.photobucket.com/albums/e...ps3e6b849e.jpg
DEDICATING THIS SONG TO GOPAL SIR, VIETNAM !
http://www.youtube.com/watch?v=IYit_3Tf_Bw
MANNAVAN VANDHAANADI !!
http://www.youtube.com/watch?v=k-WAz4j6IEk
SABAASH !!!
http://www.youtube.com/watch?v=9DYca1SmrN0
பாலுவின் பாட்டுக்கு ஏற்ப சிவாஜி தன் பாணியை மாற்றி நடித்திருந்தார். சிவாஜியின் ஆற்றலைக் கண்டு பிரமித்துப்போனார், பாலு.
http://www.youtube.com/watch?v=op4GivMzxNY
Majestic Movements from the Greatest Actor of the Universe !!!
http://www.youtube.com/watch?v=VyJ9BU2DEtI
ONE ACTOR - MANY SINGERS - DIFFERENT MIMING ! ! ! ALL ARE PERFECT IN SYNC !
http://www.youtube.com/watch?v=Vd_RC89xYeg
ONE ACTOR - MANY SINGERS - DIFFERENT MIMING ! ! ! ALL ARE PERFECT IN SYNC ! - TA MOTHI SINGS FOR THE WORLDS GREATEST ACTOR OF ALL TIME !
http://www.youtube.com/watch?v=MewOsMqwg3Y
NADIGAR THILAGAM's THILLAANA MOHANAMBAL !
அன்புள்ள சிவா - நன்றி - முரளியின் விரிவான பதிவை படித்தபின் பார்த்த படம் ஆனதால் கூடுதல் சுவையுடன் ரசிக்க முடிந்தது - எவ்வளவு அருமையான காலம் அது - எப்படி பட்ட படங்கள் !! எப்படி பட்ட கலைஞ்சர்கள் !! காதலைத்தான் எவ்வளவு மென்மையாக கையாண்டு உள்ளார்கள் - NT நடித்த படங்களே குடும்பத்ததுடன் பார்த்து மகிழ்ந்த படங்கள் -------
தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தைப் பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். நான் பிறந்து வளர்ந்த கிராமம் (ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், தற்போதைய திருவாரூர் மாவட்டம்) நாதஸ்வர மற்றும் தவில் வித்வான்கள் நிறைந்த ஊர். சிறு வயதில் தில்லானா மோகனாம்பாள் பார்த்துவிட்டு அதன் பின்னர் கோவில் திருவிழாக்களில் வாசிக்கும் நாதஸ்வரக் கலைஞர்களைப் பார்த்து (அவர்கள் பெரிய புகழ்பெற்ற கலைஞர்களாக இருப்பார்கள்) சிவாஜி வாசிப்பதுபோல இவர்களால் வாசிக்க இயலாது என்று ஒரு விவாதமே செய்த நினைவுகள் இன்றும் என் நினைவில் பசுமையாக நிழலாடுகிறது. என்னைப் பொறுத்தவரை First Impression is the best Impression என்பது போல, எனக்குப் பிடித்த திரைப்படங்களை வரிசைப்படுத்தச் சொன்னால் அதில் முதலிடம் பிடிப்பது தில்லானா மோகனாம்பாள் தான்.
கடந்த 2008 ஆம் வருடம், சிவாஜி - ஒரு வரலாற்றின் வரலாறு என்ற நூலிற்காக மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் அவர்களை சந்தித்தேன். அப்போது அவர் மிருதங்கச் சக்கரவர்த்தி திரைப்படத்தைப் பற்றி குறிப்பிட்டார். மிருதங்கச் சக்கரவர்த்தி திரைப்படத்தில் சிவாஜிக்காக மிருதங்கம் வாசித்தேன். அதற்கு முன்னதாக நான் வாசித்த கச்சேரிக்கு வந்து முன்வரிசையில் வந்திருந்து அமர்ந்து நான் வாசிப்பதை கூர்ந்து கவனித்தார். திரைப்பட ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கும் என்னை வரவழைத்தார். ஒவ்வொரு ஷாட் முடிந்தவுடனும் என்ன வாத்தியார் சரியாக இருக்கிறதா என்று கேட்டுக்கொள்வார். அவருடைய Sincerity ஐ எண்ணி வியந்தேன். மிருதங்கச் சக்கரவர்த்தி திரைப்படம் வெளியான பிறகு கச்சேரிகளில் வாசிக்கும்போது பல பேர் என்னிடம் வந்து என்ன இருந்தாலும் சிவாஜி வாசித்த மாதிரி இல்லை என்று சொல்லுவார்கள். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது அவருடைய சின்சியாரிட்டியின் ரகசியம் என்று உமையாள்புரம் சிவராமன் நடிகர்திலகத்தைப் பற்றி குறிப்பிட்டார்.
அப்போது புரிந்தது தில்லானா மோகனாம்பாளில் நடிகர்திலகத்தின் நாதஸ்வர வாசிப்பில் நாம் ஏன் ஈர்க்கப்பட்டோம் என்று.
இன்று பகல் 12.) மணிக்கு சன் தொலைக்காட்சியில் ந்டிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த மாபெரும் வெற்றிப் படமான " தில்லானா மோகனாம்பாள் " திரைக் காவியம் திரையிடப்பட்டது. பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இப்படத்தை பார்க்கும் வாய்ப்பு இன்று கிடத்தது.
என்ன ஒரு அற்புதமான திரைக்காவியம். திரு.கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் தொடர்கதையாக ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய பொழுதே பலரின் பாராட்டுதலைப் பெற்ற இக் கதையை படமாக எடுக்க ஏ.பி.நாகராஜன் முடிவு செய்து சிவாஜியை அனுகிய பொழுது அவர் மிகவும் உற்சாகமாக இப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
மிகவும் சாதாரண நிலையில் இருந்த ஏ.பி.என். அவர்களை ஒரு பெரும் படாதிபதியாக்கியது நடிகர் திலகம் அவர்கள் தான். எத்தனை வரிசையான வெற்றிப் படங்கள் - நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட் செல்வர், திருமால் பெருமை.இப்படி பல வெற்றிப் படங்களின் வரிசையில் அமைந்ததுதான் தில்லானா மோகனாம்பாள். ஆனால் தன்னை பெரும் தயாரிப்பாளராக்கி அழகு பார்த்த வெள்ளை உள்ளம் கொண்ட ஒரு நல்லவருக்கு துரோகம் இழைத்துவிட்டு மாற்று முகாமுக்குச் சென்ற ஏ.பி.என். அந்த மாற்று நடிகரை வைத்து எடுத்த ஒரே ஒரு படத்திலேயே தான் இத்தனைக் காலம் சம்பாதித்து வைத்திருந்த செல்வத்தையும், நற்பெயரையும் இழந்து ந்டுத்தெருவுக்கு வந்தது வேறு கதை.
. இன்று என் நினைவுகள் இப்படத்தையே சுழன்றன என்றால் அது மிகையில்லை. ஆம். என் இளமைக் காலங்களில் எப்பொழுதும் நடிகர் திலகத்தின் படங்களை முதல் நாளன்றே பார்த்துவிடும் நான் இப்படத்தை சென்னை மிண்ட் அருகில் உள்ள கிரௌன் திரைஅரங்கத்தில் முதல் நாள் இரவுக் காட்சியில் கண்டு ரசித்தேன். அதன் பிறகு பல முறை சென்னை சாந்தி மற்றும் கிரௌன் திரையரங்குகளில் மாறி மாறி பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். சிவாஜியின் படங்களைப் பொருத்தவரையில் சாந்தி அரங்கில் பார்த்தால்தான் எங்களைப் போன்ற சிவாஜி ரசிகர்களுக்கு மிகவும் இன்பமாக இருக்கும்.
நடிகர் திலகத்தின் மிக இயல்பான நடிப்பில் வந்த பல படங்களுள் இப்படம் ஒரு மைல் கல். அது மட்டுமின்றி இப்படத்தில் நடிகர் திலகத்துடன் நடித்த பல அற்புதமான கலைஞர்களின் அணி. பத்மினி, பாலையா, நாகேஷ், சாரங்கபாணி, தங்கவேலு, டி.ஆர்.ராமச்சந்திரன், கருணாநிதி, மனோரமா,ஏவிஎம்.ராஜன் இப்படி பலர். சிவாஜி என்றுமே திறமையான நடிகர்களுடன் நடிப்பதைத்தான் விரும்புவார். அப்பொழுதுதான் அவரின் நடிப்பின் சிறப்பு பரிமளிப்பதுடன் படமும் பெரும் வரவேற்பு பெரும் என்பதில் நம்பிக்கை உடையவர். மேலும் தன்னுடன் நடிக்கும் நடிகர் சில காட்சிகளில் இவரை விடவும் சிறப்பாக நடித்து பேர் வாங்கிவிட்டால் அதனைக் கண்டு பொறாமைப்பட்டு அந்த நடிகர் அல்லது நடிகையின் அக்காட்சியை நீக்க சொல்லமாட்டார். ஏனென்றால் அவரது திறமையின் மேல் அவருக்கு எப்பொழுதுமே நம்பிக்கை உண்டு.
இதற்கு உதாரணமாக நடிகர் அசோகனுடன் நடித்த உயர்ந்த மனிதன், வாணிஸ்ரீயுடன் நடித்த குலமா குணமா, எம்.ஆர்.ராதாவுடன் நடித்த பாவ மன்னிப்பு, நாகேஷுடன் நடித்த திருவிளையாடல், பத்மினியுடன் நடித்த வியட்னாம் வீடு என்று இப்படி பல படங்கள்.
இப்படிப்பட்ட ஒரு மஹா கலைஞன் மீண்டும் ஒரு முறை பிறந்து நம் எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.
I have literally shed tears on your readings How APN raised to the peak in combination with NADIGAR THILGAM and also his downfall subsequently just because of one movie when changing colours VERY WELL WRITTEN sir three cheers. Incidently myself also belong to mint area and all NT movies seen mostly in crown krisna theatres.
தில்லானா பற்றி வருவதால்,தில்லானா தொடர்பான அற்புத பதிவுகள்.
Posted by P_R
Finally finally saw ThillAnA on the large screen
Arguably the most complete Tamil film of all time.
Sivaji, KV Mahadevan, APN, Padmini, Nagesh, Baliah, Manorama
An outstanding performance from Sivaji. As I tried to write once earlier, SikkalAr is one of his very best characters/performances. The naturally hypersensitive supreme artist is depicted with such fluency and perfection.
Right from the first சமிக்ஞை to the (தன்னையே மறந்து வாசிக்கும்) Baliah - to notice Mohana to the dazed expression when glancing at his hand - which had just slapped Mohana - in the intermediate moment between the Maharaja clearing the air and exiting and Thangarathnam (AVM Rajan) entering to inform him of Mohana's suicide attempt. சிக்கலார் பத்தி எவ்வளவு தான் சொல்றது. It always feels incomplete. Such a wholesome performance.
Hats off to APN - every single larger-context (நாதச் சக்ரவர்த்தி) line was placed with maximum effect without affecting the balance of the script - indeed accentuating the aesthetics. And some camera movements can only be appreciated fully on large screen - with larger than life images - like the confrontation with Mohana in Madhanpur - the drama is there even in the arcs the camera cuts to capture Shanmugam back and forth.
My favourite Nagesh performance of all time. I have possibly quoted most of his lines. He is at his funniest best when he attempts to insult Sivaji - which he does in many places in the film. The way he asks them to start performing in the Rao Bahadur function..
"சண்முகசுந்தரம், நீ சட்டையெல்லாம் அவுத்துட்டு... '
Still laughing as I type this.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Posted by Murali Srinivas
சிக்கல் சண்முகசுந்தரம்.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டுமல்ல கலைகளஞ்சியமும் தஞ்சை மாவட்டம் என்றே சொல்லலாம். தமிழகத்திற்கே உரித்தான பரதமும் நாதமும் கருக்கொண்டதும் உருப்பெற்றதும் தஞ்சை மாவட்டத்தில்தான். நாத பிரம்மம் என்றழைக்கப்படுகின்ற மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பெருமை பாடும் திருவையாறு முதல் பரத நாட்டியத்தின் இரு பெரும் முறைகளாக சொல்லப்படுகின்ற பந்தநல்லூர் மற்றும் வழுவூர் ஆகியவை அமைந்திருப்பதும் பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில்தான். அதனால்தான் என்னவோ நாயகி மோகனா திருவாரூரை சேர்ந்தவளாக சித்தரிக்கப்படுகிறாள். நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள சிக்கல் எனும் ஊரை சொந்தமாக கொண்டவர் சண்முகசுந்தரம்.
பொதுவாகவே திறமை வாய்ந்த கலைஞர்கள் சற்று முன் கோவம் கொண்டவர்களாகவும் தங்கள் திறமையின் மீது அசாத்திய நம்பிக்கை கொண்டவர்களாகவும் அதன் காரணமாகவே வித்யா கர்வம் [சாதாரண வார்த்தைகளில் சொன்னால் திமிர்] மிகுந்தவர்களாகவும் விளங்குவார்கள் என்பது பரவலான ஒரு நம்பிக்கை/கருத்து. அந்த கருத்துக்கு வலு சேர்பவர்கள்தான் சண்முகமும் மோகனாவும்.
அதிலும் சண்முகம் உண்மையிலே மனதளவில் சிக்கலார்தான். தன் தொழிலின் மேல் அபார பக்தி, தன் திறமை மேல் அசாத்திய நம்பிக்கை, தன் தன்மானத்திற்கு ஊறு நேரும்போது யாராக இருந்தாலும் அவர்களுடன் மோத தயங்காத குணம், தான் காதலிக்கும் பெண் மீது வைக்கும் அதீத அன்பு, அவள் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற வெறி, பெரிய கலைஞனாக இருந்தாலும் ஒரு சாராசரி மனிதனுக்கு உள்ளது போன்ற பயம், சந்தேகம் இத்யாதிகள். மொத்தத்தில் ரத்தமும் சதையுமான ஒரு பச்சை மனிதன்.
முதன் முதலாக கோவிலில் கச்சேரி செய்துக் கொண்டிருக்கும் போது வண்டியில் வந்து இறங்கும் மோகனாவை பார்த்தவுடன் பாலையாவிடம் அதை சுட்டிக் காட்டும் கண் அசைவு, தொடர்ந்து வேட்டு சத்தம் கேட்டவுடன் வரும் கோவத்தில் கச்சேரியை நிறுத்திவிட்டு வெளியேறுவது, வெளியில் நிற்கும் தன் மனம் கவர்ந்த பெண்ணிடம் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் நாத பரத கலைகளைப் பற்றி வாதம் புரிவது என்று அந்த முதல் காட்சியிலே கேரக்டர்-ஐ establish பண்ணி விடுவார்கள். காதல் கோவம் கர்வம் எல்லாம் அப்படியே அந்த முகபாவங்களில் ஜொலிக்கும்.
முதலில் சொன்னது போல் சண்முகசுந்தரம் ஒரு அசாதாரணமான ஹீரோ இல்லை. சராசரி மனிதன். வெளியே வீம்புக்கு நாட்டியம் பார்க்க வரமாட்டேன் என்று சொல்லி விட்டாலும் தன் வாத்திய குழுவினரை போக கூடாது என விரட்டினாலும் மனதின் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் கச்சேரிக்கு போய் மறைந்திருந்து பார்க்கும் ஒரு காதல் வயப்பட்ட மனிதனை எப்படி வெளிக் கொண்டு வருகிறார். அடுத்து தற்செயலாக ஒரே ரயிலில் சண்முகமும் மோகனாவும் பயணம் செய்யும் வாய்ப்பு. அத்தனை பேர் சூழ்ந்து இருந்தும் காதல் எப்படி பொங்கி பெருகிறது? பாலையா துணையுடன் விளக்கு அணைக்கப்பட்டு இருவருமே கண்களால் பேசிக் கொள்ளும் காட்சி. தமிழ் சினிமாவில் இதுவரை இடம் பெற்றுள்ள காதல் காட்சிகளுக்குள் தலையாய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
தஞ்சாவூரில் இறங்குகிறார்கள். சிங்கபுரம் மைனர் வீட்டு நிகழ்ச்சிக்கு கூட்டிப் போக வந்திருக்கும் வைத்தி, படியில் நிற்கும் மோகனாவைப் பார்த்துவிட்டு யாரு மோகனாவா என்று கேட்டுவிட்டு அங்கே போக முற்படும்போது அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற possessiveness மீண்டும் சண்முகத்திடம் தலை தூக்க எங்களை பார்க்க வந்தியா இல்லை அவங்களை பார்க்க வந்தியா என்று முறுக்கும் சண்முகம், அங்கே மீண்டும் அந்த கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை அழகுற காட்சி வைக்கிறார் நடிகர் திலகம்.
சிங்கபுரம் அரண்மனையில் சுய கெளரவம் மிக்க அந்த கலைஞ்னுக்கு ஏற்படும் அவமானம், கோவித்துக் கொண்டு வெளியேற உங்கள் கச்சேரியை கேட்கத்தான் வந்தோம் என்று திரண்டிருக்கும் பொது மக்கள் சொல்ல அந்த பெருமிதம் முகத்தில் ஒரு கனம் மின்னி மறைவதை என்னவென்று சொல்லுவது? வாசிப்பை கேட்டு வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் வந்துவிட அவர்கள் இங்கிலீஷ் நோட்ஸ் வாசிக்க முடியுமா என்று கேட்க முதலில் அந்த ஆங்கிலம் புரியாமல் ஒரு கனம் குழப்பமாய் பார்க்க வைத்தி அது என்னவென்று விளக்க உடனே பாலையாவைப் பார்த்து கண் அசைவிலே ஓகே என்று சொல்லி அவர் வாசிக்கும் காட்சி அற்புதமான ஒன்று.
திருவாரூர் சென்று மோகனாவைப் பார்க்க வேண்டும் என்ற அந்த ஆசையை வெளியில் தெரியாமல் மறைக்க முற்பட்டு ஆனால் பாலையாவிற்கு புரிந்து விட அந்த தர்மசங்கடத்தை கோவப்படுவது போல் வெளியில் காண்பிப்பது, சிங்கபுரம் மைனரின் கோச் வண்டியை பார்த்ததும் வரும் அதிர்ச்சி, ஆத்திரம். இவற்றிக்கு காரணமில்லாமல் இல்லை. அந்தக் காலத்தில் [அதாவது கதை நடப்பது சுதந்திரத்திற்கு முன் உள்ள காலகட்டம். அது படத்தில் சொல்லப்படவில்லை என்றாலும் கூட தொடர் கதையாக வந்த போது அப்படித்தான் சொல்லப்பட்டது] பொதுவாக நாட்டிய பெண்மணிகளைப் பற்றிய சமூகத்தின் பார்வை, பொதுமக்களின் கருத்து எல்லாம் தவறான கண்ணோட்டத்திலேயே அமைந்திருந்தன. அந்த சூழலில் வளர்ந்த சண்முகத்திற்கும் சந்தேகம் வந்ததில் ஆச்சரியமில்லை.
படம் முழுவதும் வரக்கூடிய சண்முகத்திற்கும் ஜில் ஜில்லின் நாடகக் கொட்டகையில் இருக்கும் போது திரையில் தோன்றும் சண்முகத்திற்கும் வித்தியாசம் இருக்கும். அங்கே மட்டும்தான் அந்த கோபதாபம் இல்லாமல் சற்றே சிரிக்கும் சண்முகத்தைப் பார்க்கலாம்.
நாடகம் பார்க்க வரும் மோகனா சண்முகத்தை சீண்டும் காட்சியெல்லாம் யாரும் எடுத்து சொல்லாமலே அற்புதமான காட்சி என்று அனைவருக்கும் தெரியும். ஒரு மனிதனுக்கு அதுவும் இயல்பிலே முன்கோபியான ஒருவனின் தன்மானம் சீண்டப்பட்டால் அந்த கோபத்தின் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதை இதில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். ஒரு ஆணுக்கு மற்றொரு ஆணுடன் அப்படி ஒரு வாக்கு வாதம் ஏற்படுகிறது என்றால் அங்கே கைகலப்பு ஏற்பட்டு விடும் ஆனால் சீண்டியவள் ஒரு பெண் என்பதனால் அதுவும் பத்து பேருக்கு முன்னால் தன்னை கேலி பேசி விட்டாள் என்று வரும் போது அது எப்படி அந்த உடல் மொழியில் வெளிப்படுகிறது. அடிவயிற்றிலிருந்து வரும் கோவத்தோடு அவள் சவாலை ஏற்று தில்லானா வாசித்து உன் காலை உடைக்கிறேன் என்று சவால் விட்ட பிறகும் கூட அந்த ஆத்திரம் தணியாமல் மீண்டும் மீண்டும் திரும்பி வந்து கோவத்தில் உதடுகள் துடிக்க வார்த்தை வராமல் அந்த துண்டை உதறியவாறே போகும் அந்த காட்சியெல்லாம் அது போல செய்வதற்கு மீண்டும் நடிகர் திலகமே பிறந்து வந்தால்தான் உண்டு.
தில்லானா பட்டம் கொடுக்கும் காட்சியெல்லாம் பற்றி ஏற்கனவே பிரபு அருமையாக எழுதியிருக்கிறார் [சண்முகத்திற்கு மேடை புதியதல்ல ஆனால் மேடை பேச்சு புதிது]. ஆகவே அடுத்த கட்டம் என்றால் அவர் மருத்துவமனையில் நர்சின் பணிவிடையைப் பார்த்து தவறாக நினைத்து அதை தவிர்க்க நினைப்பதை சொல்ல வேண்டும். அடிப்படையில் பெண்களிடமிருந்து ஒதுங்கி இருக்கும் ஒரு கூச்ச சுபாவி. நர்ஸ் உரிமை எடுத்துக் கொண்டு தனக்கு பணவிடை செய்யும் போது தர்மசங்கடத்தில் தவிக்கும் அந்த உடல் மொழி ஒரு பரிமாணம் என்றால், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சத்தம் போட்டு விட, அந்த நர்ஸ் ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ததாக சொன்னவ்டன் அவசரப்பட்டு தவறாக பேசி விட்டோமே என்ற வேறொரு தர்மசங்கடத்தில் தவிக்கும் போது காட்டும் உடல் மொழி அவரின் இன்னொரு பரிமாணம்.
நலந்தானா பாடல் காட்சி எல்லாம் சொல்லவே தேவையில்லை. நான் பலரிடமும் சொல்வது எல்லா வரிகளையும் விட்டு விடுவோம் அந்த கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நானறியேன் என்ற வரிகளின் போது விழி சிவந்து கண்ணில் நீர் பெருக்கி ஒரு சின்ன தலையாட்டலில் உன் உள்ளத்தையும் அதில் என் மேல் உள்ள காதலையும் எனக்கு ஒன்று என்றால் நீ துடித்துப் போவதையும் நான் உணர்ந்திருக்கிறேன் என்ற புரிதலையும் அவர் வெளிப்படுத்தும் அந்த பாங்கு இருக்கிறதே அப்போது அவர் கன்னங்களில் மட்டுமா கண்ணீர் வழியும், காட்சியை காண்பவர் எல்லோர் கண்களிலும்மல்லவா கண்ணீர் வடியும்.
மதன்பூர் செல்லும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் போது, படித்து பார்த்து விட்டு போடுங்கள் என்று ராஜன் சொல்ல அதிலே என்னடா இருக்கப் போகுது என்று சமாதானம் சொல்லி கையெழுத்து போட்டுவிட்டு பின்னர் தன்மானத்திற்கு ஊறு வரும் என்ற நிலையில் வாசிக்க மாட்டேன் என்று சொல்ல ஒப்பந்ததை காட்டி கேஸ் போடுவேன் என்று வைத்தி சொல்லும் போது அன்று கூட இருந்தவர்கள் சொன்னபோது கேட்காமல் போனோமே என்ற குற்ற உணர்வை கூட எவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.
இறுதியாக மதன்பூர் மகராஜாவின் அறையிலிருந்து வெளியே வரும் மோகனாவை தாறுமாறாக பேச அதற்கு அறிவு கெட்டதனமாக பேசாதீர்கள் என்று மோகனா சொல்ல கண் மண் தெரியாத கோவத்தில் பளாரென்று அறையும் சண்முகம் செத்து போ என்று சொல்லிவிட்டு போகும் அந்த உடல் மொழி, மறக்கவே முடியாது.
கொஞ்சம் யோசித்துப் பார்தோமென்றால் தில்லானா அடிப்படையில் ஒரு காதல் கதைதான். காதலிக்கும் இருவர் அந்த காதல் வெற்றி பெற எதிர்கொள்ள வேண்டிய போராட்டங்கள்தான் கதை. ஆனால் கதையின் பின்புலம் இசையும் இசை சார்ந்த சூழலுமாக அமைக்கப்பட்டிருந்ததுதான் அந்தப் படத்தின் சிறப்பு.
தில்லானா என்று எடுத்துக் கொண்டால் ஒருவரை கூட விட்டு விடாமல் பாராட்ட வேண்டும். ஆனால் இங்கே பாட்டுடை தலைவன் நடிகர் திலகம் பற்றிய அலசல் மட்டுமே இப்போது என்னால் எழுத முடிந்திருக்கிறது. பின்னொரு நாளில் மற்றவர்களைப் பற்றியும் எழுதலாம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சில நாட்களுக்கு முன்பு ஜெய்-யுடன் இதைப் பற்றி தான் விவாதித்துக்கொண்டிருந்தேன். எத்தனை shadesஐ அசாத்தியமாக காண்பித்திருப்பார். அசுர சாதனை. அடங்கிய தொனியில் இருக்கும் காட்சிகளிலும்.
"கோவந்தேன்..." என்று ஜில்லு சொன்னதும்
"குறை இல்லாத மனுஷன் ஏது ஜில்லு.." என்று சொல்வார். இது ஞானியின் வார்த்தையோ, விரக்தியில் சொல்வதோ இல்லை. ஒரு மாதிரி tired and dry குரலில் சொல்வார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
PR & Murali
Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
முதன் முதலாக கோவிலில் கச்சேரி செய்துக் கொண்டிருக்கும் போது வண்டியில் வந்து இறங்கும் மோகனாவை பார்த்தவுடன் பாலையாவிடம் அதை சுட்டிக் காட்டும் கண் அசைவு,
PR
பிரமாதமான tag-team!
அதற்கு லயித்து வாசித்துக் கொண்டிருக்கும் பாலையா விழித்து, கவனித்து, சிரிப்பது.
தத்தம் கலைகளின் உச்சத்தில் இருக்கும் தருணத்தில் கூட இந்த இரு கலைஞர்கள் 'have some attention to spare' என்ற அளவுக்கு அந்த சித்தரிப்பிலேயே தெரிந்துவிடும்.
Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் கச்சேரிக்கு போய் மறைந்திருந்து பார்க்கும் ஒரு காதல் வயப்பட்ட மனிதனை எப்படி வெளிக் கொண்டு வருகிறார்.
P_R
அதுவும் அந்த 'ஷண்முகா'வுக்கு 'அடி!' என்று அந்த துடுக்குத்தனத்துக்கு react செய்யும் விதம்
Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
அடுத்து தற்செயலாக ஒரே ரயிலில் சண்முகமும் மோகனாவும் பயணம் செய்யும் வாய்ப்பு.
P_R
தற்செயல் இல்லை. குழுவையே கடைசி ரயிலுக்காக காக்க வைப்பார். பாலையா காரணத்தை உடைக்கப்போக, வேறு வழியில்லாமல் அரைமனதுடன் கிளம்புவார். கனவானின் காதல் அல்லவா
Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
வைத்தி, படியில் நிற்கும் மோகனாவைப் பார்த்துவிட்டு யாரு மோகனாவா என்று கேட்டுவிட்டு அங்கே போக முற்படும்போது அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற possessiveness மீண்டும் சண்முகத்திடம் தலை தூக்க எங்களை பார்க்க வந்தியா இல்லை அவங்களை பார்க்க வந்தியா என்று முறுக்கும் சண்முகம், அங்கே மீண்டும் அந்த கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை அழகுற காட்சி வைக்கிறார் நடிகர் திலகம்.
P_R
இப்படியும் சொல்லலாம். நான் இதை வேறு மாதிரி நினைத்தேன். அந்த தருணத்தில் அவன் மகாகலைஞன். தன்னை வரவேற்க வந்தவன், தனக்கு உரிய மரியாதையைச் செய்யவேண்டுமே ஒழிய, இன்னொரு கலைஞரை சந்தித்துப் பேசி, தன்னை incidentalஆக வரவேற்றதாக இருக்கக்கூடாது என்ற பிடிவாதம் தெரிந்தது.
Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
உங்கள் கச்சேரியை கேட்கத்தான் வந்தோம் என்று திரண்டிருக்கும் பொது மக்கள் சொல்ல அந்த பெருமிதம் முகத்தில் ஒரு கனம் மின்னி மறைவதை என்னவென்று சொல்லுவது?
முதலில் அந்த ஆங்கிலம் புரியாமல் ஒரு கனம் குழப்பமாய் பார்க்க வைத்தி அது என்னவென்று விளக்க உடனே பாலையாவைப் பார்த்து கண் அசைவிலே ஓகே என்று சொல்லி அவர் வாசிக்கும் காட்சி அற்புதமான ஒன்று.
P_R
வைத்தி மொழிபெயர்த்ததும் "இவ்வளவு தானா எப்படி ஊதித் தள்ளுகிறோம் பார்" என்று இருவரும் முகபாவங்கள் மூலமாகவே காட்டி விடுவார்கள்.
ஜில்ல்லு நிறுத்து...எனக்கு வாசிப்பே மறந்து போய்டறமாதிரி இருக்கு - என ரிலாக்ஸ் ஆகி ந.தி சிரிக்கும் சிர்ப்பாகட்டும்,
ரயில்பயணத்தில் கண்ணும் கண்ணும் கலந்து மோகனாவுடன் சிக்கலார் சொந்தம் கொண்டாடுவதாகட்டும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது..வாசிக்கும் பாணி..ம்ம் நிறைய எழுதலாம்.. நன்றி.. நினைவுகளைக் கிளறியமைக்கு..
P_R
Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
ஒரு ஆணுக்கு மற்றொரு ஆணுடன் அப்படி ஒரு வாக்கு வாதம் ஏற்படுகிறது என்றால் அங்கே கைகலப்பு ஏற்பட்டு விடும் ஆனால் சீண்டியவள் ஒரு பெண் என்பதனால் அதுவும் பத்து பேருக்கு முன்னால் தன்னை கேலி பேசி விட்டாள் என்று வரும் போது அது எப்படி அந்த உடல் மொழியில் வெளிப்படுகிறது. அடிவயிற்றிலிருந்து வரும் கோவத்தோடு அவள் சவாலை ஏற்று தில்லானா வாசித்து உன் காலை உடைக்கிறேன் என்று சவால் விட்ட பிறகும் கூட அந்த ஆத்திரம் தணியாமல் மீண்டும் மீண்டும் திரும்பி வந்து கோவத்தில் உதடுகள் துடிக்க வார்த்தை வராமல் அந்த துண்டை உதறியவாறே போகும் அந்த காட்சியெல்லாம் அது போல செய்வதற்கு மீண்டும் நடிகர் திலகமே பிறந்து வந்தால்தான் உண்டு.
PR's Reply-
பிறந்து வரக்கூடும் என்ற நம்பிக்கையுமே மிகை. ஏனன்றால், அந்த காலகட்டத்தின் aesthetic, ஆண்-பெண் உறவுகள், மான-அவமான மதிப்பீடுகள் எல்லாவற்றையும் அத்தனை துல்லியமாக ரசிக்கக் கூடிய சூழலும் இன்று இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இது அங்கலாய்ப்பு அல்ல. காலப்போக்கில் இந்த வகை மாற்றங்கள் நடக்கத்தான் செய்யும்.
இன்று ஒரு சரித்திரப் படம் எடுத்தாலும், உடை,சூழல் போன்ற வெளிப்பூச்சு விஷயங்களை சிறப்பாக கொண்டு வர முடியுமே தவிர, அந்த காலகட்டத்தில் உறவுகள்- 'இன்னின்ன வார்த்தை இத்தகைய மனிதர் மீது இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்' என்பதை எல்லாம் ஓரளவுக்கு மேல் கொண்டு வர முடியாது. நமது இன்றைய சட்டகத்தில் இருந்து தான் பார்க்க முடியும். அதற்கு மேல் அதை எல்லாம் உணர்ந்து, சிறப்பாக உள்வாங்கி வெளிக்கொண்டுவர இதைப் போன்ற அசாத்திய திறமை வேண்டும்.
கோவத்துடன் மோகனாவைப் பார்ப்பதும், பேச்சுகொடுக்கும் வைத்தியை "சும்மார்ரா டேய்" என்று சொல்லி வாயடைக்க வைக்கும்போதும் 'கனன்றுகொண்டிருக்கும் சீற்றம், எந்நேரமும் வெடித்து வெளிவரலாம்' என்று நமக்குத் தெரிந்துவிடும். கோவத்திலும் இத்தனை நிறங்களா!
தெய்வமகனின் : damn your hotel என்று சொல்லும்போது ஒரு disappointment கலந்த கோவம், தேவர் மகனில் பொறுப்பில்லாமல் எதிர்த்துப் பேசும் மகனிடம் 'தர்க்கம் பண்றீய?' என்ற சீற்றம், சில பக்கங்கள் முன் நாம் பார்த்த சத்ரபதி சிவாஜியின் கோவம்..இவையெல்லாம் பற்பல இடங்களில் பார்த்தவை. தில்லானாவில் ஒரே படத்தில்...ஏன் இந்த ஒரே காட்சியில்!!
அந்த காட்சித்தொடரே சிறப்பாக வந்திருக்கும். Mood மாறுவது, மனமாற்றம் நிக்ழவது, ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பதட்டம். மைனருக்கு, வடிவு'க்கு...என்று ஏ.பி.என் masterclass.
"வேறு ஆரு காப்பாத்துனாஹ"..என்று ஜில்லு நடுங்கும் அழுகுரலுடன் கேட்கும்போது அந்த குழந்தைத்தனம் நம்மை கிட்டத்தட்டநெகிழச்செய்யும்.
சற்று முன்வரை இவர்கள் சண்டை மறந்து சேரக்கூடாதா என்று நினைத்துக்கொண்டிருந்த நாம், மோகனா வம்பிழுப்பதை, 'எத்தனை புத்திசாலி இந்தப் பெண்!' என்று ரசிக்கத் தொடங்கிவிடுகிறோம். APN makes the audience root for the exact opposite, within a matter of minutes!!
Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
நர்ஸ் உரிமை எடுத்துக் கொண்டு தனக்கு பணவிடை செய்யும் போது தர்மசங்கடத்தில் தவிக்கும் அந்த உடல் மொழி ஒரு பரிமாணம் என்றால், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சத்தம் போட்டு விட, அந்த நர்ஸ் ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ததாக சொன்னவ்டன் அவசரப்பட்டு தவறாக பேசி விட்டோமே என்ற வேறொரு தர்மசங்கடத்தில் தவிக்கும் போது காட்டும் உடல் மொழி அவரின் இன்னொரு பரிமாணம்.
PR's Reply-
பலவகை நடிப்பு உள்ள காட்சி அது..
அந்த காட்சியிலும் நகைச்சுவை இருக்கும் -தெர்மாமீட்டரை வாயில் வைத்துக்கொண்டு முழிப்பது
ஜன்னலை மூடியதும் நடுக்கம், பணிவிடைகளை தட்டும்போது "கொஞ்ச்சம்" அதிகமாக கவனம் எடுத்துக்கொள்வதாய் தோன்றுவதைச் சொல்லும்பொழுது அந்த emphasis, கடைசியில் "சரிதான்..உங்களுக்கு நாதஸ்வரம் தவிர ஒண்ணும் தெரியாது போலயிருக்கு" எனும்போது வரும் நெகிழ்வு. முதல் சிலமுறை எனக்கு அந்த நெகிழ்வு கொஞ்சம் மிகையாகத் தான் தெரிந்தது.
ஆனால் அந்த வரி சண்முகத்தை எப்படி எல்லம் குத்தியிருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளமுடியும் தானே. நாதஸ்வரத்தைத் தவிர அவனுக்கு என்ன தெரியும்? கலைஞனுக்கே உரித்தான தீவிர உணர்ச்சிகளோடு தான் அவன் உறவுகளை அணுகுகிறான். இம்முனைக்கும் அம்முனைக்குமாக தாவுகிறான். அவன் காதல் எத்தனை தீவிரமோ, அத்தனை தீவிரம் அவன் கசப்புக்கும், வெறுப்புக்கும், கோபத்துக்கும். எல்லாம் தன் சின்னத்தனமான முன்முடிவுகளால், என்பதை இந்தச் சின்னப்பெண் எத்தனை லாவகமாக அவனுக்கு உணர்த்திவிடுகிறாள்!
Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
நலந்தானா பாடல் காட்சி எல்லாம் சொல்லவே தேவையில்லை.
PR's Reply-
என்று சொல்லிவிட்டு அழகாக சொல்லிவிட்டீர்கள்!
அந்த கண்ணீரிலும், இத்தனை கரிசனம் உள்ள தன் காதலியைப் பற்றிய பெருமிதமும் தெரியும்.
பல்வகை உணர்வுகள் சங்கமிக்கும் தருணங்களை (moments of confluence of emotions) தெளிவாக பார்வையாளர்களுக்கு உணர்த்துவது ஒரு நடிகனுக்கு உச்சகட்ட சவால். அனேகம் பேர் அத்தகைய தருணங்களை எழுதவே மாட்டார்கள். ஏனென்றால் அதை தெளிவாக சித்தரிப்பது கஷ்டம். ஆனால் அவையே திரைப்படக்கலையின் உச்ச தருணங்கள்.
ஒரு உணர்விலிருந்து இன்னொன்றுக்கும் அழகாக மாறுவதைச் சொல்லவில்லை. அதையும் பலமுறை செய்திருக்கிறார். பலரும் செய்திருக்கிறார்கள். That is also no mean task. ஆனால் நான் சொல்வது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதை.
எழுத்தில் 'ஒரே நேரத்தில் நெகிழ்ச்சியும், பெருமிதமும்' என்று எழுதும் வாக்கியத்தில் கூட அவை அடுத்தடுத்து வரும் சொற்கள். Trivially true. நாம் படித்து, நம் புத்தியில் அவற்றைப் பிணைத்து ஒன்றாக்கிக் கொள்கிறோம். இசையில் simultaneity சாத்தியம் என்றாலும், இசைக்கும் அது ஏற்படுத்தும் உணர்வுக்கும் உள்ள உறவு விவரணை சட்டகங்களுக்கு அப்பார்ப்பட்டது (அதுவே அதன் சிறப்பு). மேலும் ஒருவருக்கொருவர் சற்றளவேனும் மாறக்கூடியது அந்த associations. ஆனால் நடிப்பில் தெளிவின்மை ஒரு தோல்வி. 'அவன் மனத்தெளிவில்லாமல் குழப்பமாக இருந்தான்' என்பதைக் கூட தெளிவாகக் காண்பிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு கலையில் முற்றிலும் வித்தியாசமான இரண்டு உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது எத்தனை அபாரமான ஒரு சாதனை என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் - and by the way, all this while incidentally happening to play the naadhaswaram flawlessly
Quote Originally Posted by முரளிஶ்ரீநிவாஸ்
அதிலே என்னடா இருக்கப் போகுது என்று சமாதானம் சொல்லி கையெழுத்து போட்டுவிட்டு
PR's Reply-
சமாதானமே கிடையாது. ஒருதலைபட்ச முடிவுதான்.
Permit me a digression here..இந்த தம்பி சொல் கேட்காத hot-headed அண்ணன் என்கிற archetype கிட்டதட்ட அப்படியே கம்பனில் வருகிறது.
பல இடங்களில் இலக்குவன் தான் யோசித்து நல்ல முடிவு எடுப்பதாகக் காட்டுகிறார். ராமன், இலக்குவனை "பிள்ளாய் பெரியாய்" என்று விளிக்கிறான். (இளையவன் நீ, அதே சமயம் விவேகம் உள்ளவன் நீ!)
மாறாக, ராமன் உணர்ச்சிப்பிழம்பாகவே காண்பிக்கப்படுகிறான்.தன் அண்ணனைக் கொல்ல ஒருவன் (சுக்ரீவன்) நினைக்கிறான், என்பதையே இலக்குவனால் ஜீரணிக்க முடியவில்லை. அண்ணனை எதிர்த்து பொதுவில் பேசக்கூடாது என்று மௌனம் காக்கிறான். தனிமையில் ராமன் அவன் கருத்தைக் கேட்டதும், இலக்குவன் ராமன் அவசரப்பட்டு கொடுத்த வாக்கை 'பிழை' என்று சொல்கிறான். ராமனுக்கு தான் பிழை செய்துவிட்டோம் என்று தெரிகிறது (தீயரே எனினும், உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார் - சுக்ரீவா..உனது உற்றார் யாராவது தீயவர்களாகவே இருந்தாலும் கூட அவர்கள் எனக்கும் உற்றார்...என்று தனது வாக்கில் கூறுகிறான்).
இலக்குவன் தன் பிழையை சுட்டிக்காட்டிவிட்டான் என்றதும் அவனைப் - தனக்காக தன் வாழ்வையே அழித்துக்கொண்டிருப்பவனைப்- பார்த்து, குத்தலாக ராமன் சொல்கிறான் 'நம் அண்ணன் தம்பிகளில், பரதன் தானே உயர்ந்தவன். எல்லோரும் ஒன்றா? அதுபோல எல்லா அண்ணன் தம்பிகளும் ஒரே மதிரியா, இந்த சுக்ரீவன் போன்றவர்களும் உண்டு' என்று சொல்லி தட்டி கழிக்கிறான்.
இவற்றுக்கு தி.மோ-வுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகச் சொல்லவில்லை. ஆனால் இத்தனை அற்புதமான கலைஞன், உணர்வுவேகத்தில் சின்னத்தனமாக நடக்கும் தருணங்களை நினைக்கும்போது ராமனின் க்ரூரம் நினைவுக்கு வந்தது.
இவர்கள் எல்லாரையும் பாதிக்கும் ஒரு ஒப்பந்தத்தை படிக்காமல் கையெழுத்துப் போடுபவன் சண்முகம். அந்த அளவுக்கு தங்களை இவன்வசம் ஒப்படைத்தவர்களைப் பார்த்த அழகர் கோவிலில் என்ன வார்த்தை சொல்கிறான், 'உங்களுக்கு பணம் வேண்டும் என்றால் வேறெதாவது ஒரு நாதஸ்வர வித்வானுக்கு வாசித்துக்கொள்ளுங்கள்' என்று. How uncharitable!
அன்று கூட இருந்தவர்கள் சொன்னபோது கேட்காமல் போனோமே என்ற குற்ற உணர்வை கூட எவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.
"நீ சொன்னே..நான் கேட்கலை" என்று வேகமாக சொல்லித் தாண்டி செல்ல முனைவதில் அந்த குற்ற-உணர்வைச் சிறப்பாக காண்பிப்பார்.
"பணம் என்ன மகாராஜா பணம்..." என்று நம்பியாரிடம் பேசும் காட்சி.....திருவாரூரை நியாபகப்படுத்தும். உணர்வுகள், வார்த்தைகளை விஞ்சும்.
A wondrous performance that is at once power-packed and highly layered and nuanced.
நினைவுபடுத்தியதற்கு நன்றி திரு.முரளி.
PR(Continues)
நாவலில் எப்படி என்று தெரியவில்லை.
சண்முகம் காண்பதெல்லாம், குடும்பத்தோடு மைனர் போட்டியைப் பார்க்க திருவாரூருக்கு வந்திருக்கிறார் என்பது தான். வைத்தி ஏற்படுத்தும் இடையூறுகளை சபையிலிருந்து அகற்றுகிறார் என்பது தான். இதனாலேயே சண்முகம் போன்ற ஒரு சந்தேகப்பேர்வழிக்கு சந்தேகம் போய்விடுமா என்ன?
அந்த ஆட்டத்தின் முடிவில் அந்த சந்தேகம் எங்கே இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது? முன்னைவிட ஆழமான ஒரு காதலை மட்டுமே அங்கே காண்கிறோம். இந்தக் கலைஞனுக்கு, மோகனாவின் கலையின் பரிமளிப்பு தன் சந்தேகத்தைத் தாண்டி செல்ல செய்துவிட்டது.
ஒரு absurd foil கொடுக்கவேண்டும் என்றால்: பாலசந்தரின் டூயட்டை நினைத்துப்பாருங்கள். 'அந்த இசையைத் தான் நான் காதலித்தேன்' என்று ஒரு வசனம் வரும். எத்தனை அபத்தமான ஒரு வசனம். என்ன கோமாளித்தனமான ஒரு தருணம். ஒரு அழகான conceptஐ சொதப்பியிருபார்கள்.
ஆனால் தி.மோ-வில் எத்தனை அழகாக காண்பித்திருப்பார்கள். கலைஞனின் கலையால் ஆகர்ஷிக்கப்படும்பொழுது, அந்த கலைஞனின் ஆளுமையை, personalityஐயும் சேர்த்தே உணர்ந்துவிட்டதாகத் தோன்றுவதையல்லவா அந்தக் கணம் காண்பிக்கிறது.
இந்தி இயக்குனர்/நடிகர் குரு தத்'தின் ப்யாஸா'வில் கதாநாயகன் ஒரு கவிஞன். அவன் கவிதைகளைப் படிக்கும் கதாநாயகி வஹீதா ரஹ்மான் அவனை நன்கு அறிந்தவள் போல பேசுவாள். அவன் 'என்னைப் பற்றி உனக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்க. "உன் (ஆழ்மன வெளிப்பாடான) கவிதைகளையே நான் படித்துவிட்டேனே. இதற்குமேல் உன்னைப் பற்றி தெரிந்துகொள்ள வேறென்ன இருக்கிறது என்கிறாய்" என்பாள்.
கிட்டத்தட்ட அதைத் தான் வார்த்தைகளின்று இக்காட்சியில் இசைமூலம் சாதித்திருப்பார்கள். நமது திரைப்பட வரலாற்றில் ஒரு அழகியல் மைல்கல் இப்படம்.
அந்த உரை ஒரு wonder! தயக்கம், வார்த்தைகளைத் தேடித் துழாவிப் பேசுவது என்று. Spot improvisation என்று சொல்லலாம். ஆனால், சிவாஜியைப் பொருத்தவரை பல takeகள் இருந்தாலும் அதை அப்படியே திரும்ப பேசியிருப்பார் என்பது நமக்குத் தெரியும். பிரமிக்கவேண்டியது தான்.
Deleted.
//நாவலில் எப்படி என்று தெரியவில்லை.// நாவலில் ஷண்முக சுந்தரத்திற்கும் மோகனாவிற்கும் திருமணம் ஆகி குழந்தையும் பிறக்கும் வரை கதை தொடரும்.. வெகு சின்ன வயதில் படித்தது..அதுவும் பக்கத்து வீட்டில் பைண்ட் செய்து வைக்கப் பட்ட முதல் பாகம் - கோபுலுவின் வெகு அழகிய படங்களுடன்..மோஹனா ஷண்முகத்தின் போட்டிக்கு வெகு வெகு அழகாக வரைந்திருப்பார்..இரண்டாம் பாகம் மதுரை மாவட்ட மைய நூலகத்தில் விட்டு விட்டுப் படித்த நினைவு..
எவ்வளவு பெரிய நெத்தி, எவ்ளோ பெரிய பொட்டு ம்ம் எடம் இருக்கு கொடுத்து வச்சவ வெச்சுக்கறெ..
வைத்தி..போதுமய்யா என்னை வர்ணிச்சது...
வாங்கோ வாங்கோ..இந்தாங்கோ எலுமிச்சம்பழம்.. பெரியவா யாரையாவது பார்த்தா எலுமிச்சம் பழம் கொடுக்கறது என் வழக்கம்... கையிலே!!
எப்போ நினச் சாலும் சிரிப்பு வரும்..
// ஆனால் அந்த வரி சண்முகத்தை எப்படி எல்லம் குத்தியிருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளமுடியும் தானே. நாதஸ்வரத்தைத் தவிர அவனுக்கு என்ன தெரியும்? // மிக மிக வெகு அழகாக ப் பதறி நெகிழ்ந்திருப்பார் நடிகர் திலகம்..
பிற்காலத்தில்பைண்ட் புக்கில் கிடைத்த குமுதம் விமர்சனத்தில் - நாதஸ்வர வித்வானைச் சந்தேகப் பிராணியாகக் காட்டியது சரியா எனக் கேட்டிருப்பார்கள்..//கலைஞனுக்கே உரித்தான தீவிர உணர்ச்சிகளோடு தான் அவன் உறவுகளை அணுகுகிறான். இம்முனைக்கும் அம்முனைக்குமாக தாவுகிறான். அவன் காதல் எத்தனை தீவிரமோ, அத்தனை தீவிரம் அவன் கசப்புக்கும், வெறுப்புக்கும், கோபத்துக்கும். எல்லாம் தன் சின்னத்தனமான முன்முடிவுகளால், என்பதை இந்தச் சின்னப்பெண் எத்தனை லாவகமாக அவனுக்கு உணர்த்திவிடுகிறாள்!// இந்த பதில் தான் அதற்கு..
கோபால் சார்,
ராஜராஜ சோழன் வெற்றி படமா தோல்வி படமா என்று தங்களிடம் யாராவது கேட்டார்களா? ஏன் same side goal போடுகிறீர்கள். தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை கடந்து போய் கொண்டே இருப்பது தானே?
அற்புதமான எழுத்து திறன் கொண்ட தாங்கள் இது போன்ற பதிவுகளை தவிர்ப்பதே நல்லது.