//உங்கள் ஜொள்ளை நிறுத்த' ரொம்ப ரசித்தேன்.// வாசு சார் :sad:
ஜொள்ளெனச் சொல்வது யாதெனின் யாதொன்றும்
வன்மை இலாத செயல்
என்று ஆன்றோர் சொல்லியிருக்கிறார்கள்.. :)
Printable View
//உங்கள் ஜொள்ளை நிறுத்த' ரொம்ப ரசித்தேன்.// வாசு சார் :sad:
ஜொள்ளெனச் சொல்வது யாதெனின் யாதொன்றும்
வன்மை இலாத செயல்
என்று ஆன்றோர் சொல்லியிருக்கிறார்கள்.. :)
சி.க.சார்,
பதிவுகளுக்கான பாராட்டுதல்களுக்கு நன்றி!
'அவளே என் காதலி' லிரிக்ஸ் தந்ததற்கு நன்றி ஏற்கனவே பாடல் பதிவிட்டிருந்தாலும்.
'கல்யாண ராமனுக்கும்' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஜெய், லட்சுமி செம ஜோடி.
வலையில் மாட்டிய வாணிஸ்ரீ அருமை. நன்றி! சி.க.சார்.
சி.க சார்,
நெசம்மா உங்களுக்கு வாணிஸ்ரீ எம்ஜிஆர் ஜோடி சேர்ந்து நடித்த படங்கள் தெரியாதா? என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?
http://i1.ytimg.com/vi/UbxEeGWQhoM/sddefault.jpg
சி.க சார்,
அதே மேட்டா ரெங்ரூட்டா. வயசாயிடுத்தோன்னோ...
http://1.bp.blogspot.com/_vJf4GU6InG...400/Role06.jpg
//சி.க.சார்,
பதிவுகளுக்கான பாராட்டுதல்களுக்கு நன்றி!
'அவளே என் காதலி' லிரிக்ஸ் தந்ததற்கு நன்றி ஏற்கனவே பாடல் பதிவிட்டிருந்தாலும்.
'கல்யாண ராமனுக்கும்' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஜெய், லட்சுமி செம ஜோடி.
வலையில் மாட்டிய வாணிஸ்ரீ அருமை. நன்றி! சி.க.சார்.// இதுல ஏதோ பொடி இருக்கா :) நினைவுக்கு வந்த ஜோக்..
“இன் டர் வியுவில எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்னு கேட்டாங்க”
“அவ்வளவு சிம்ப்பிளாவா கேட்டாங்க..”
“ஆமா அதான் ஏதோ பொடி இருக்கும்னு ஆறு கால்னு சொல்லிட்டேன்!”
//நெசம்மா உங்களுக்கு வாணிஸ்ரீ எம்ஜிஆர் ஜோடி சேர்ந்து நடித்த படங்கள் தெரியாதா? என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?// நெசம்மாவே தெரியலைங்க..இந்த நீராழி மண்டபத்தில் வீடியோ முன்னாலேயே இங்க வந்திருந்தாலும் நான் பார்க்கலை.. நெஜம்மாவே நிறைய வீடியோக்கள் பார்க்கணும்.. பெண்டிங்க் ஒர்க்ஸ் நிறைய இருக்கு :)
//அதே மேட்டா ரெங்ரூட்டா. வயசாயிடுத்தோன்னோ// ஹப்பாடி.. இப்பத்தான் இது எங்க வாசு சார் :)
இருந்தாலும் கொஞ்சம் வயசான படங்களைப் பதிவிடும் போது சொல்லிட்டுச் செய்ங்க வாசு சார்..பாப்பக்கு பயம்மா இருக்கு :) (எனக்குத் தான்)
அவளே என் காதலியைப் பத்தியும் எழுதிட்டீங்களா வாசுசார்..தெரியாதே.. ஹப்பாடி மூணு பாட்டுக்கு ஒரு பாட்டு தேறிடுச்சு..
காதல் படுத்தும் பாடு வில் தான் வாணிஸ்ரீயின் முதல் படம் என்று போட்டிருந்தார்கள்..அவருக்கு ராஜஸ்ரீ ரெகமண்ட் செய்தாராம்..உண்மையா.
திரு.எம்.ஜி.ஆர் அவர்களும், சரோஜாதேவியும் இணைந்து நடித்த 'நான் ஆணையிட்டால்' திரைப்படத்தில் வரும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆகும். மெல்லிசை மன்னரும், சுசீலாவும் இணைந்து பாடி இருப்பார்கள். அருமையான பாடல்.
இப்பாடலை படத்தில் பார்த்ததாக நினைவில்லை. படத்தில் இப்பாடல் உண்டா?
எம்.ஜி.ஆருக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் ஹம்மிங் குரல் தந்தாரா? ஆச்சரியமாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் எப்படி ஒத்துக் கொண்டார்?
ஒருவேளை இப்பாடல் படத்தின் ரிலீஸ் சமயத்தில் இருந்து பின் தூக்கப்பட்டதா?
இப்பாடலின் ஷூட்டிங் நடந்ததா?
மேலதிக விவரங்களை வினோத் சாரும், கார்த்திக் சாரும் அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
http://i.ytimg.com/vi/MgJPv59KO94/hqdefault.jpg
இனி பாடலின் வரிகள்.
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
MSV: ...ஆஹஹாஹாஹா
என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
MSV:...ஒஹொஹொஹொஹொ
நினைத்து நினைத்து நெஞ்சம் இனிக்குமே
MSV:...ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்
உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே
MSV:...ஆஹஹாஹாஹா
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
MSV:...ஆஹஹாஹாஹா
என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
MSV:...ஒஹொஹொஹொஹொ
நினைத்து நினைத்து நெஞ்சம் இனிக்குமே
MSV:...ஒஹொஹொஹொஹொ
உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே
MSV:...ஒஹொஹொஹொஹொ
நினைத்தேன் உடன் பார்த்தேன்
மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்
நினைத்தேன் உடன் பார்த்தேன்
மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்
களித்தேன் சுகம் குளித்தேன் கதை படித்தேன்
என்னை மறந்தேன்..என்னை மறந்தேன்..என்னை மறந்தேன்.....
பாலும் புது தேனும் பனி போல் என் மேலே
படர்ந்தோட இடம் தேட அமுதாகவே பாய்ந்தாய்
என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன்
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
MSV:...ஆஹஹாஹாஹா
என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
MSV:...ஒஹொஹொஹோ
நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே
MSV:...ஒஹொஹொஹொ
உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே
MSV:...ஒஹொஹொஹொஹோ
ஆஹா......
சிரித்தாய் முகம் சேர்த்தாய் வலை விரித்தாய் சிறை பிடித்தாய்
சிரித்தாய் முகம் சேர்த்தாய் வலை விரித்தாய் சிறை பிடித்தாய்
அணைத்தாய் அதில் நிலைத்தாய் சுவை அறிந்தாய் உடல் சிலிர்த்தேன்
என்னை மறந்தேன்..என்னை மறந்தேன்
தேடும் வரை நானும் சிலை போல் நின்றேனே
சிலை பேச இசை பாட கதை போல் அதில் சேர்ந்தாய்
என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன்
http://www.youtube.com/watch?v=4fYR-...yer_detailpage
Enjoy the song from Sunayna from the one & only the great Dr Yesudoss. Honey soaked voice.
http://youtu.be/iiE_r0pjoec
Enjoy one more song from the Movie Sajan Bina Suhagan sang by the one & only Dr Yesudoss. God's gift to the music industry. Honey sokaed voice. Great song.
http://youtu.be/zupNCGk__iQ
Enjoy the classical beauty from the movie Chashm-e-buddoor. Mesmerising voice of one & only Dr Yesudoss. What a melody.
http://youtu.be/btEihqzggYw
'வைகை கரையினில்' பாடலுக்கு வாசு சாரின் பாராட்டுக்கு மிக்க நன்றி. உடனடியாக வீடியோவைத் தந்து பார்க்காதோரை பார்க்க வைத்த மது சார் அவர்களுக்கு மிக்க நன்றி.
வாசு சார்,
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே பாடல் நான் ஆணையிட்டால் படத்தில் நான் பார்க்கவில்லை. படம் வெளியானபோதே இல்லைஎன்று அப்போது பார்த்தவர்கள் சொன்னார்கள். எப்போது எந்த நிலையில் கழற்றி விடப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் வானொலியில் படத்தின் பெயரைச்சொல்லி ஒலிபரப்புவார்கள்.
இதுபோல வானொலியில் மட்டும் ஒலித்த, படத்தில் ஒளிந்துகொண்ட மேலும் சில பாடல்கள்...
கண்களினால் காண்பதெல்லாம் (நாடோடி)
பாடினார் கவிஞர் பாடினார் (நிச்சய தாம்பூலம்)
சின்னஞ்சிறு வீடு இது சிங்கார வீடு ( பணமா பாசமா)
தென்றல் வரும் சேதி வரும் (பாலும் பழமும்)
மலர்களே நாதஸ்வரங்கள் (கி.போ.ரயில்)
புத்தபுது காலை (அலைகள் ஓய்வதில்லை)
குழந்தையும் தெய்வமும் படத்தில் 'நான் நன்றி சொல்வேன்' பாடலில் எம்.எஸ்.வி. ஹம்மிங் கேட்கும்போது, 'கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே' பாடல் நினைவுக்கு வரும்.
பல்லவியின் முதல்வரியைக் கேட்கும்போது சென்சாரில் பாடல் வெட்டப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது...
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் பாராட்டிற்கு நன்றி!
இழுக்க இழுக்க பாடல் அபூர்வமான ஒன்று. அதை நமது திரிக்கு அளித்து ஆனந்தப்பட வைத்து விட்டீர்கள். 'என்னைப் போல் ஒருவன்' படத்தில் இந்தப் பாடல் இல்லை. நடிகர் திலகம் ஹிப்பி வேடம் புனைந்திருக்கும் போது உஷா நந்தினியுடன் இப்பாடல் இடம் பெற்றிருக்க வேண்டும். அப்படித்தானே!
அருமையான பாடல்.
நன்றி கார்த்திக் சார் தங்கள் விளக்கத்திற்கு.
எனக்குத் தெரிந்த இன்னும் சில பாடல்கள் படத்தில் இடம் பெறாமல் வானொலியில் மட்டுமே கேட்டவை. நண்பர்கள் தொடருவார்களாக.
ஆழக் கடலில் தேடிய முத்து ..... சட்டம் என் கையில்
சின்னப் பெண் ஒருத்தி சிரிக்கிறாள்.... அதே கண்கள்
தாழம்பூவே தங்க நிலாவே...... ரத்தத் திலகம்
அடியம்மா ராஜாத்தி சங்கதி என்ன ........ வசந்த மாளிகை
பாக்கியராஜின் சின்ன வீடு படத்தில் 'ஜாமம் ஆகிப் போச்சு என் மாமோ மாமோய்' என்று ஒரு பாடல்.
இப்பாடல் படத்தில் உண்டா இல்லையா என்று தெரியவில்லை.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Kvhy8MZl__g
'ராசாத்தி ராசாத்தி உன்னை எண்ணி'
பாடல் 'பூவரசன்' படத்தில் இடம் பெற்றதா?
http://shakthi.fm/ta/album/show/621738e4
//கொடுக்கக் கொடுக்க இன்பம் பிறக்குமே// ஓ எனக்குப் பிடித்த பாடல் நன்றி வாசு சார்..எம்.ஜி.ஆருக்கு எம்.எஸ்வி வாய்ஸ்.. பொருந்தியுமிருக்கும்..
நான் பார்க்க நினைத்து படத்தில் இல்லாத பாடல் எது தெரியுமா..விக் விக் விக்.. மகாராஜன் உலகை ஆளுவான் இந்த மகாராணி அவனைஆளுவாள்...
அடியம்மா ராஜாத்தி சங்கதி என்ன ...// இது அந்த மலைப்பகுதி வாழ் மக்களுடன் இருக்கும் போது இந்தப் பாட்டு இருந்திருக்கும் என நினைக்கிறேன்..சரியா..
பாடினார் கவிஞர் பாடினார், தென்றல் வரும் சேதிவரும் பாட்டெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் தாங்க்ஸ் டு கார்த்திக் சார்..
ஹப்பாடி.. அஞ்சு பாட்டும் இப்போது தான் பார்த்து முடிச்சேன்..
கண்கள் இரண்டும் விடிவிளக்காக – நல்லபாட்டு அண்ட் டான்ஸ்..விஷீவலில் இளமை.
நீராழி மண்டபத்தில் கொஞ்சம் வானத்தில் பறந்தாலும் நன்றாக இருந்தது..
வைகைப் பாட்டு தான் கொஞ்சம் சோகமாக இருந்தது..இன்னொரு தடவை கேட்டுப் பார்க்க வேண்டும்..
சாமி சத்தியமாக அவளே என் காதலி விஷூவல் இப்படி இருக்குமென்று நினைக்கவில்லை.. இதைப் பற்றி எழுதியதாக வேறு வாசு சார் எழுதியிருந்தார்.. என்னை ப் பார்க்கவொண்ணாமல் தடுக்கவைத்தது எதுவாக இருக்கும்..
வானம் இங்கே மண்ணில் வந்தது..அதுவாசல் தேடி வாவா என்றது – கேட்ட பாடல் தான்.. விஷீவல் நன்றாக இருந்தது..
கண்கள் இரண்டும் விடிவிளக்காக கொடுத்த எஸ்.வி சார், நீராழி மண்டபத்திலும் வைகைப்பாட்டும். அவளே என் காதலியையும் கொடுத்த மதுண்ணா. வைகைப் பாட்டுப் பற்றி நன்றாக எழுதியிருந்த் கார்த்திக் சார் வானம் இங்கே மண்ணில் வந்தது பாடலை வழங்கிய வாசு சார் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் நன்றி..
ஒரிஜினல் சிவரஞ்சனி மிகப்பிரமாதமான படம்
அதையும் அதன் இசையயும் எப்படி சொதப்ப வேண்டும் என்று ஸ்ரீபிரியாவிடமும் சங்கர் கணேஷிடமும் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்
ரமேஷ் நாயுடு உருகி உருகி போட்ட மெட்டுக்கள் ஆஹா ஜோருமீதுன்னாவோ தும்மெதா, நவமி நாட்டி வெண்ணெல நீவு தசமி நாட்டி (ஆஹா இசையரசியும் பாலுவும் இசைத்த காதல் காவியப்பாடல்)
http://www.youtube.com/watch?v=0-IYBCkQG6o
http://www.youtube.com/watch?v=lxrBUz7uSw4
தெலுங்கு ஒரிஜினலில் உள்ள உணர்ச்சிகரமான கதையமைப்போ நடிப்போ இசையோ தமிழில் இல்லவே இல்லை .. அதனால் தான் படம் தொபுக்கடீர் என ஊத்திக்கொண்டது. ஸ்ரீபிரியா நடிப்பார் தான் இல்லை என்று சொல்லவில்லை ஆனாலும் தெலுங்கு மலை என்றால் தமிழ் சிவரஞ்சனி மடுவிற்கும் கீழே
Navami naati in Malayalam KJY With ISaiyarasi
navami_naalin.mp3
எம்.எஸ்.வியின் புத்தம் புது பழுசுகள்.
Rare &Unique ones .
https://www.youtube.com/watch?v=JVfuAws-lpY
நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
மேகம் கொண்டு வீடொன்று
மின்னல் கொண்டு விளக்கொன்று
விண் மீனால் பூவொன்று சீர்கொண்டு
உன்னோடு நானும் வருவேன்
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
காமதேனு வந்து கறந்த பாலைத் தந்து
அருந்தும்போது உன்னை அணைக்க வேண்டும் கண்ணே
வானவீதி ஓரம் தெய்வ வீணை நாதம்
கேட்கும்போது மெல்ல கிள்ள வேண்டும் கன்னம்
தேவமாதர் கூட்டம் காம தேவன் ஆடம்
ஆடும்போது நாமும் ஆடிப் பார்க்க வேண்டும்
ஆகாய கங்கை அருகில் இந்த மங்கை
குளிக்கும்போது நானும் ஒளிந்து பார்க்க வேண்டும்
எம்.எஸ்.வியின் புத்தம் புது பழுசுகள்.-2
https://www.youtube.com/watch?v=bXBgDtu5_AY
I will write an exclusive article on M.S.V.
இன்றைய ஸ்பெஷல் (71)
படம்: எங்க வீட்டு பெண்
http://www.inbaminge.com/t/e/Enga%20...enn/folder.jpg
நடிகர்கள்: ஜெய்சங்கர், ஏ.வி.எம்.ராஜன், எஸ்.வி.சுப்பையா, எம்.ஆர்.ராதா, நாகேஷ், தங்கவேலு, வசந்தா, 'ஞான ஒளி' நிர்மலா, மனோரமா, மாதவி
கதை: சக்ரபாணி
வசனம்: ச.அய்யாப் பிள்ளை
இசை: கே.வி.மகாதேவன்
பாடல்கள்: கண்ணதாசன், ஆலங்குடி சோமு
தயாரிப்பு: நாகிரெட்டி, சக்ரபாணி
இயக்கம்: சாணக்யா
பிரம்மாண்டமாக செலவு செய்து பல படங்களைத் தந்த ஏ.வி. எம்.நிறுவனம் செலவே செய்யாமல் 'சம்சாரம் அது மின்சாரம்' படம் எடுத்தது கல்லாவை நிரப்பியது போல அதிக பொருட்செலவில் பல படங்களை எடுத்த விஜயா வாகினி நிறுவனம் அப்போதைய துண்டு துக்கடா நடிகர்களை வைத்து 'எங்க வீட்டு பெண்' படத்தைத் தயாரித்து வெற்றி கண்டது.
1965 இல் தீபாவளித் திருநாளன்று வெளியான விஜயா கம்பைன்ஸ் தயாரித்த 'எங்க வீட்டு பெண்' திரைப்படத்திலிருந்து 'தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்' என்ற ஒரு அருமையான மென்மையான காதல் பாடல். தென்றல் உடலைத் தழுவும் சுகம் போல மனதுக்கு சுகம், இதம் தரும் பூ போன்ற பாடல் இது.
http://i.ytimg.com/vi/4Gz7wNu0dJo/hqdefault.jpg
ஏ.வி.எம்.ராஜனும், விஜயநிர்மலாவும் இணைந்து பாடும் மிக அருமையான காதல் பாடல். (மிக அபூர்வமான ஜோடி இது என்பதும் தனி சிறப்பு) இருவருமே மிக இளமையாக காட்சி தருகிறார்கள். முதல் சரணம் ராஜன் வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம் சகிதம் புடவையுடன் மணப்பெண் போல விஜயநிர்மலாவுடன் வருவது 'பூவும் பொட்டும்' படத்தின் 'நாதஸ்வர ஓசையிலே' பாடலை நினைவு படுத்துகிறது. இரண்டாவது சரணத்தில் கோட் சூட் அணிந்த நடிப்புச் சுடரையும், நவநாகரீகமான சேலை உடுத்திய நிர்மலாவையும் காண கொள்ளை அழகு.
பாடகர் திலகமும், பாடகியர் திலகமும் படுபாந்தம். அதுவும் சுசீலா அம்மா
'தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மணம் திருமணம்'
என்று பாடுகையில் தெய்வாம்சம் அவர் குரலில் குடி கொண்டிருப்பதைக் காணலாம். கண்ணதாசனின் அழகழகான தமிழ் வரிகள். கேட்க, கேட்கஅவ்வளவு சுகம். 'திரை இசைத் திலகம்' மிக அமைதியாக, ஆழமாக டியூன் தந்து நம்மை மூக்கின் மேல் விரல் வைக்க வைக்கிறார்.
பாடல் சற்று பெரிய பாடல்தான். மாலையும், இரவும் சந்திக்கும் நேரத்தில் அமைதியான சிச்சுவேஷனில் இப்பாடலைக் கேளுங்கள். அப்படியே மேகங்களூடே சேர்ந்து நீங்களும் வானில் தவழ்வீர்கள். அமைதியாக நம் நெஞ்சை ஆர்ப்பாட்டம் செய்ய வைக்கும் பாடல்.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/kar.jpg
இது மட்டுமலாமல் மிக அற்புதமான பாடல்களை இந்த 'எங்க வீட்டுப் பெண்' நமக்குத் தந்து நம்மை மகழ்வு கொள்ளச் செய்கிறாள்.
1. டைட்டில் சாங்கான
'இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோருக்கு சொந்தமடா'
சீர்காழியின் சிருங்காரங்களில் ஒன்று.
2. பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடும்
'சிரிப்பு பாதி... அழுகை பாதி... சேர்ந்ததல்லவோ மனித ஜாதி'
3. பாடகர் திலகம், இசையரசி பட்டை கிளப்பும்
'கால்களே நில்லுங்கள்... கண்களே சொல்லுங்கள்'
4. சுசீலா குழுவினருடன் இணைந்து பாடும் தீபத் திருவிழாப் மங்கலப் பாடல்
'கார்த்திகை விளக்கு திரு கார்த்திகை விளக்கு'
என்று என்றும் சூப்பர் ஹிட்டாய் நம் மனத்தைக் கொள்ளை கொண்ட பாடல்கள்.
இப்போது நம் பாடலுக்கு வந்து விடுவோம்.
http://static.gaana.com/images/album...x175_18255.jpg
இனி பாடலின் முழு வரிகள்
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்
உந்தன் முகத்தோடு வந்த மணம் பால்மணம்
உந்தன் முகத்தோடு வந்த மணம் பால்மணம்
வண்ண முன்னழகில் வந்த மணம் தேன்மணம்
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்
மலர் இருக்கும் கைகளிலே மணம் இருக்கும்
அந்த மனத்தினிலே குலமகளின் குணம் இருக்கும்
மலர் இருக்கும் கைகளிலே மணம் இருக்கும்
அந்த மனத்தினிலே குலமகளின் குணம் இருக்கும்
குணமிருக்கும் இடத்தினிலே குலமிருக்கும்
அந்த குலத்தினிலே திருமகளின் துணை இருக்கும்
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்
பொட்டு மஞ்சள் முகத்தின் மீது பொட்டு வைத்து
அந்தக் கோலத்திலே என்னுயிரைத் தொட்டு வைத்து
பட்டு போன்ற கூந்தல் தன்னைக் கட்டி வைத்து
பட்டு போன்ற கூந்தல் தன்னைக் கட்டி வைத்து
அதில் பருவத்தையும் உருவத்தையும் சுற்றி வைத்து
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்
நன்றி சொல்ல வேண்டும் அந்த இறைவனுக்கு
இந்த நான்கு கண்கள் சேர வைத்த தலைவனுக்கு
நன்றி சொல்ல வேண்டும் அந்த இறைவனுக்கு
இந்த நான்கு கண்கள் சேர வைத்த தலைவனுக்கு
நன்றி சொல்ல வேண்டும் இந்த தலைவனுக்கு
நன்றி சொல்ல வேண்டும் இந்த தலைவனுக்கு
என்னை நாயகியாய்க் கொள்ள வந்த இறைவனுக்கு
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்
உந்தன் முகத்தோடு வந்த மணம் பால்மணம்
உந்தன் முகத்தோடு வந்த மணம் பால்மணம்
வண்ண முன்னழகில் வந்த மணம் தேன்மணம்
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்
http://www.youtube.com/watch?v=4Gz7wNu0dJo&feature=player_detailpage
சின்ன கண்ணன் போல மூணு பக்கம் முன்னிருப்பதை கூட பார்க்காமல்,காந்தியடிகள் செத்துட்டாராமே என்ற ரீதியில் வர முடியாததால் ,முந்தினதை படித்தேன்.
எல்லாமே வழக்கம் போல full form .வாசுதான் கொஞ்சம் பிஸி போல.
கார்த்திக்- உங்களுக்கு...
நான் 70 க்கு பிறகு நல்ல பாடல்களே வரவில்லை என்று சொன்னது போல ஏதோ சில பாடல்களை குறிப்பிட்டு ,பார்த்தியா...பார்த்தியா ரீதியில் சில வரிகள்.
தெளிவு படுத்தி விடுகிறேன்.M .S .V -T.K .R best composers in india ,all time best என்றெல்லாம் மற்ற திரியிலும் வாதாடும் என்னை எம்.எஸ்.வீ எதிரி போல சித்தரிக்க வேண்டாம். எம்.எஸ் .வீ யை தூக்கி பிடிக்க பலர். டி.கே .ஆர் என்ற மேதை, அவர் சாதனைகள் மறக்க,மறுக்க பட்டதால் ,அவருக்காக,ஆதாரங்களுடனே வாதாடினேன்.
சில மிகைகள் இருந்திருக்கலாம். ஒன்றதை ஓங்கி சொல்ல ,மற்றதை குறைக்கும் வழக்கமான பாணியே அன்றி, எம்.எஸ்.வீ க்கு நான் எதிர் கட்சியல்ல.
என் ஒரே கேள்வி.... ஆலயமாகும் மங்கை மனது, நல்ல பாடல்,நல்ல படமாக்கம்,புதுமையான காட்சியமைப்பு. ஆனால் சராசரி நல்ல பாடல்,1971 இல் வந்தது.
ஆனால் இதே ராகம் சார்ந்து 1965 இல் ஹலோ மிஸ்டர் ஜமிந்தார் என்ற படத்தில், இருவர் இணைப்பிசையில் வந்த காதல் நிலவே என்ற பாடல் ஒரு composition marvel .அதை ஒப்பிடும் போது ,ஆலயமாகும், ஒரு பலவீன நிழலே.
நான் சொல்ல வருவது புரிந்ததா?(உங்களுக்கு புரியாததா?அறிந்தது,அறியாதது,தெரிந்தது,தெரியாத து அனைத்தும் உணர்ந்தவராயிற்றே தாங்கள்?)
vasu, deivam malarodu, cute song. Thanks.
வாசு சார்
அருமையான பாடல் -அடிக்கடி முணு முணுக்கும் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று .நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்த பாடலை பார்த்ததில் எல்லையில்லா ஆனந்தம் .நன்றி .
கோ,
வாங்க. எப்படி இருக்கீங்க? வியாபாரத் தொல்லைகளெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துதா? கலை களை கட்டுது. பிஸி இல்ல கோ. போட்டுக்கிட்டுதானே இருக்கேன். ஸ்பெஷலுக்கு தனி கேர் எடுத்துகிறதாலே அதுக்கே ரொம்ப டைம் ஆயிடுது.
என்னது காந்தியடிகள் செத்துட்டாரா? இது எப்போ?
MELLISAI MANNAR - KANNADASAN - TMS- SUSEELA & MAKKAL THILAGAM - JAYA- SUPER COMBINATION HIT SONG.
சின்னவளை முகம் சிவந்தவளைநான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
சின்னவளை முகம் சிவந்தவளைநான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு
வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
பூக்குவளை கண்கள் கொண்டவளைபுது
பூப் போல் பூப் போல் தொட்டு
தூயவளை நெஞ்சைத் தொடர்ந்தவளை
மெல்லத் தான் தொட்டால் துவளும்
பால் மழலை மொழி படித்தவளை
சுகம் பட்டால் பட்டால் படியும்
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
இரு கண்ணால் சொன்னால் பக்கம்
வந்தால் தந்தால்நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ
வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு
வான மழை போல் ஆனவளை
சுவை எங்கே எங்கே மறப்பாய்
நீ அவளை விட்டுப் போகும் வரை
அது இங்கே இங்கே இருக்கோ
மின்னும் கை வளைமிதக்கும்
பெண்களை அசைத்தால் அசையாதோ
அது இன்னும் கொஞ்சம் என்று
பெண்ணைக் கெஞ்சும் வரை சுவைத்தால் சுவைக்காதோ
வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொண்டாய் வளையிட்டு
பூக்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப் போல் பூப் போல் தொட்டு
சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொண்டேன் கரம் தொட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொண்டேன் வளையிட்டு
http://youtu.be/_RdGKzMihhQ
எஸ்வி சார்,
நன்றி! இந்தப் பாடல் தங்களுக்கு மிகப் பிடிக்கும் என்று தெரியும். நாமும் போனில் இப்பாடலைப் பற்றி ஒருமுறை பேசியுள்ளோம்.
'குமரிப் பெண்' ஆவணம் அசத்தல். எனக்கு ரொம்பப் பிடித்த ஜாலியான ஒரு படம்.
பாட்டுக்கள் அருமை.
ரவி வழக்கம் போல ரகளைதான்.
http://i1.ytimg.com/vi/L_t8ON6U4sQ/maxresdefault.jpg
கியூட் மேடம். திருஷ்டி படும் அழகு.
http://images.mavshack.com/PicturePu...77fdb23b8a.jpg
நாகேஷின் நகைச்சுவை தனி சுவை
https://i.ytimg.com/vi/6YJBW2HlKNY/0.jpg
வருஷத்தைப் பாரு ஈஸ்வரி ஈர்ப்பு
https://i.ytimg.com/vi/BkOgesr7AC0/0.jpg
நடந்தது என்னவென்று நீயே சொல்லு. பேக் புரஜெக்ஷன் சைக்கிள் ஷாட்ஸ்.
http://i.ytimg.com/vi/0MelToooF2s/0.jpg
நட்சத்திரப் பட்டாளம்
https://i.ytimg.com/vi/dta_rNZ3wQE/0.jpg
https://i.ytimg.com/vi/l5lrR0SbU2Q/0.jpg
http://i.ytimg.com/vi/oUrnn-lPcqM/hqdefault.jpg
குணச்சித்திர நடிப்பில் ரங்காராவ் கலக்கல்.
http://i1.ytimg.com/vi/gozJDiJRF3g/sddefault.jpg
வில்லன் ஜாபுக்கு நம்ம விஸ்வம்
http://i1.ytimg.com/vi/xwiiCyOFLNU/sddefault.jpg
எஸ்வி சார்,
எவர்க்ரீன் பாடல் 'சின்னவளை முகம் சிவந்தவளை' க்கு நன்றி!
வாசு ஜி
வாங்கோ வாங்கோ
தெய்வம் மலரோடு பாடல் அருமை அற்புதம்.. எனக்கு மிகவும் பிடித்த பாடல்
இது தான் விஜய நிர்மலாவின் முதல் படம்
நன்றி! ஆஹா! ராஜேஷ்ஜி! நீண்ட நாட்களானது போல் இருக்கிறது தங்களை சந்தித்து. நலமாய் இருக்கிறீர்களா?
'நட்சத்திரம்' பற்றிய தங்கள் கருத்துக்கள் அத்தனையும் நிஜம். ஸ்ரீப்ரியா சுரத்தே இல்லாமல் சுவாரஸ்யமில்லாமல் செய்திருப்பார். அலுப்பூட்டும் காட்சிகள் நிறைய. நடிகர் திலகம் ஒரு 5 நிமிடம் வந்தாரோ நாங்கள் பிழைத்தோம்.
சிவரஞ்சனி ஒரு அற்புதம்.