100% correct sir.
Printable View
'புடவை கட்டிக் கொண்டு பூ ஒன்று ஆடுது'
நடிகர் திலகம் சரிதாவிடம் சின்னா ரேஞ்சுக்குப் பாடும் டூயட் பாட்டு 'சிம்ம சொப்பனம்' படத்தில்.
https://youtu.be/yvZiXcFtsC8
ஜி க்குப் பிடித்தமான சரோ கிளி சோகத்தில் பாடுவது 'கல்யாணியின் கணவன்' படத்தில்
கல்யாணப் புடவை கட்டி
காலெடுத்து மனையில் வைத்து
பல்லாக்கு போல நின்றேன் நேரிலே
அந்த பருவ மகன் பறந்து விட்டான் தேரிலே
https://youtu.be/EHgXOUE2XDs
பருவம் கனிந்து வந்த பாவை வருக
புடவை அணிந்து வந்த பூவே வருக.
சிவக்குமாரும், ஜெயஸ்ரீயும் 'யாரோ எழுதிய கவிதை'யில். ஆனால் ஸ்ரீதர் எழுதவில்லை.
https://youtu.be/qRfpO798gt4
//ஸ்ரீதரின் இளமை பொங்கும் காதல் காவியமான அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தில் பிரகாஷ் என்னும் புதுமுக நடிகர் அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வைத்தேன் இளையராஜா பாடலுக்கு துறுதுறுப்பாக நடன அசைவுகளை வெளிப்படுத்தி இவர்தான் அடுத்த ரவிச்சந்திர கமலஹாசன் என்று குமுதம் விமர்சனத்தில் பாராட்டுப் பெற்றார் !
ஆனால் இந்த மின்னல் கீற்றும் அடுத்து வந்த படங்களில் பார்க்க முடியவில்லையே !//
இரண்டு சந்தேகங்கள்.
'அவள் தந்த உறவு' படத்தில் பாலாவின் அதியற்புதப் பாடலான 'நினைத்துப் பார்க்கிறேன்....என் நெஞ்சம் இனிக்கின்றது..பாடலைப் படத்தில் பாடுவது யார்?
'நூல்வேலி' நாராயண ராவ்? இல்லையென்றால் சின்னி?
இன்னொரு பிளாக் அண்ட் ஒயிட் படத்தில் பெரிதாக பெல்பாட்டமெல்லாம் போட்டுக் கொண்டு, ஸ்டெப் கட்டிங் வைத்துக் கொண்டு சின்னி பிரகாஷ் மாஸ்டர் மைக் பிடித்து ஸ்டேஜில் ஒரு பாடல் பாடுவார். பாடல் அருமையாக இருக்கும். ஆனால் எனக்கு நினைவில்லை. நண்பர்கள் ஹெல்ப் ப்ளீஸ்.
//எந்தக் காலத்திலே ஓய் இருக்கீர்.. இது லெக்கிங் காலமாக்கும்.. யாராவது போர்கொடி தூக்கிடப் போறாங்க.. உஷார்.// ராகவேந்தர் சார்..ஹி.ஹி..:)
பிரமீளா ஜோஷாய் புகைப்படங்களுக்கு நன்றி வாசு.
.
//ம்ம்...அவ்வளவு பலவீனமாகவா போய் விட்டோம்? ஏதோ மதுர கான வலைப் பின்னலில் மன்மதி மஞ்சுளாவை காட்டியிருந்தாலூம் பரவாயில்லை//
இப்ப எதுக்கு இந்தக் குறைங்கறேன்..இதோ சேப்புச் சேப்பா பாட் தர்றேங்கறேன்…
சலசலகா உண்டுடா ஒய் ராமா ஒய் ராமா? :)
https://youtu.be/mi2D0cd8p8k
சின்னி பிரகாஷுக்கு என்ன வயசு ? விக்கிபீடியாவில் அவர் 1962லிருந்து கோரியோகிராஃப் செய்வதாக போட்டிருக்காங்க...
வாசுஜி... உயிரோவியம் என்ற படத்தில் 1990 நடித்திருப்பதாக வேறு போட்டிருக்கு.. எனி ஐடியா ? சிக்கா... வந்து சொல்லுங்க.
//ஒரு சில நடிகைகளுக்குத்தான் புடவை ரொம்ப பாந்தமாக இருக்கும். அதில் முதன்மையானவர் அந்தகக் கால சுஜாதா. எனக்கும், ஜிக்கும் ரொம்பப் பிடித்த நடிகை. அவருடைய உடலமைப்பும் புடவைக்கு மிகப் பொருத்தம். அதுபோல் புடவை கட்டும் விதமும் அருமை. வாணிஸ்ரீயும் இந்த வகையே. இருவரும் அதற்குத் தகுந்த உயரம் உடையவர்கள் வேறு.// கரெக்ட் வாசு.. புடவைக்காக நானும் உழைத்தேனாக்கும்..! சரோஜாதேவிக்கு அவ்வளவு பாந்தமாக இல்லை.. பிற்காலத்தில் ஒரு தலை ராகத்தில் உஷா நன்றாகக் கட்டியிருப்பார்.. பின் டி.ஆரைக் கட்டிக்கொண்டு பொய்விட்டார்..
புடவை கட்டும் விதங்கள் லாம் பார்த்து அதுக்குப் பொருத்தமா பாட் போடலாம்னாக்க ஒரு மகாராஷ்ட்ர உடை டைப் கிடைச்சது.. போய்ப் பார்த்தா அது இல்லை..
http://www.astroulagam.com.my/Defaul...66740#f9b19dac
வாசுஅழகான புடவைப் பாடல்களுக்கு நன்றி.. தாங்க்ஸ்..
ம்ம் ஒரு பாட் செலக்ட் பண்ணிட்டேன்..அதுக்காக சில என்னோட பழைய பாட்டும் கொடுத்திருக்கேன்..
..
வதைக்கும்விழி அழைப்பால்மனங் கலங்கிக்குளச் சுழலாய்
பதைக்கும்பொழு தினிலேயவள் பருவத்தெழில் துணையில்
விதைப்பாள்சில விருப்பங்களை இதயம்மகிழ்ந் திடவே
கதைகள்பல் சொலியேமுகம் களிக்கும்படி உரைப்பாள்
வேல்விழிகள் நெஞ்சத்தை வேரோடே தானழிக்க
பால்நிறத்துக் கன்னமதும் பண்கூட்டிப் பாநவில
மேலாடை அணிந்திருந்தாள் மெய்யிலே பொய்கூட்டிக்
கேளாமல் கொன்றாளே காண்
அகராதியில் இருக்காதவோர் அசைத்தாடிடும் உணர்வாய்
பகராததாம் எழிலாயென பலபாவலர் திகைக்கும்
நகராமலே இதயந்தனில் நல்மாகவே எழும்பும்
நகங்கள்முதல் உடலெங்கிலும் துலங்குமவள் அழகே
இருந்தாலும் இந்தப் பாட்டில பார்த்தீங்கன்னா இந்த நங்கை எவ்ளோ அழகா தன்னோட உணர்வுகளைச் சொல்றான்னு தெரியும். .
இளமை பத்மினி (?!) எஸ்.எஸ்.ஆர்..
பத்மினியின் உடை மகாராஷ்டிரியன் உடையாகத் தெரிந்தாலும் அது புடவை இல்லை.. தாவணி ப்ளவுஸ் பின் சாஸ்திரத்துக்குத் துப்பட்டாவான்னு தெரியலை! மலர் மணம் வருகின்றதான்னு சொல்றச்சே கண்கள் சொருகுவது எஸ்.எஸ்.ஆருக்கு மட்டுமல்ல என ஆன்றோர்கள் சொல்வார்கள்!
https://youtu.be/8QR4pJrOaQo
கதவு திறந்ததா காட்சி கிடைத்ததா
காணும் உலகம் புரிந்ததா.. காணும் உலகம் புரிந்ததா
இதோ இதோ இந்த பூமியிலே
எத்தனை ஜாலங்கள் காதலிலே
அதே அதே நிலை நீ அறிந்தால்
ஆனந்தம் வேறில்லை வாழ்க்கையிலே அஹ அஹா… ஒஹ ஒஹோ..ஓஹோஹொஹோ..
சிலை சிலை ஒன்று நேரினிலே
சிரிப்பதன் காரணம் புரிகின்றதா
அலை அலை எனக் கண்களிலே
ஆயிரம் கலைகள் தெரிகின்றதா
மலர் மலர் மணம் வருகின்றதா
மயக்கத்திலே மனம் அசைகின்றதா..
இனம் இனம் அது புரிகின்றதா
இயற்கையின் ரகசியம் தெரிகின்றதா.. ( என்ன தாம்மே சொல்ற நீ):)
//வாசுஜி... உயிரோவியம் என்ற படத்தில் 1990 நடித்திருப்பதாக வேறு போட்டிருக்கு.. எனி ஐடியா ? சிக்கா... வந்து சொல்லுங்க.// விக்கிப் பீடியா கன்ஃப்யூஸ் பண்ணுது மதுண்ணா..பட் அழகே உன்னை ஆராதிக்கிறேன் சின்னி ப்ப்ரகாஷ் தான் டான்ஸராவும் கொரியோக்ராஃபராகவும் பணியாற்றினார்னு படிச்சுருக்கேன்..
அவள் தந்த உறவு' படத்தில் பாலாவின் அதியற்புதப் பாடலான 'நினைத்துப் பார்க்கிறேன்....என் நெஞ்சம் இனிக்கின்றது..பாடலைப் படத்தில் பாடுவது யார்?// அந்த வீடியோ போட்டீங்கன்னா பார்த்துச் சொல்றேன்.. யூட்யூப்ல படப் பாடல் நாட் அவெய்லபிள் ஒன்லி ஆடியோ தான் இருக்கு..
ஹப்புறம்..ஏதோ சுஜாதா வோட கூட நடிச்சவர் யார்னு சொன்னா கேட்டுட்டுப் போறேன்..யூஸீ..எனக்கு ஆண்கள் பற்றில்லாம் திங்க் பண்ண நேரமில்லை :)
நான் லாக் இன் பண்ணித் தானே வச்சுருக்கேன்..ஸேவ் பாஸ்வேர்ட் போட்டு.. அதே மாதிரி நீங்களும் ஏன் செய்யக் கூடாது..?