-
L .K .G ,ஹை ஸ்கூல் கூட போகாமல் PHD பண்ண விரும்பும் (பிரம்மச்சரியம் to துறவு)ப்ரொபசர் கிருஷ்ணனுக்கு அகம்-புறம் இரண்டும் சோதனைக்குள்ளாவது வியப்புக்குரியதல்ல.
புற சோதனையில் பரிதாப தோல்வியுடன் திரும்பும் கிருஷ்ணன் (வயதுக்கேற்ற ஆண்மைக்கு திட்டத்துடன் விட பட்ட சவாலை இந்த நேர்க் குணமுள்ள பேராசிரியர் எதிர் கொள்ள முடியாமல் முதல் பந்தில் CLEAN BOWLED ஆன சச்சின் போல பரிதாப நிலையில்
அக சோதனையில் இறங்குவார்)
ஆனால் மருந்தை குடிக்கும் போது தேவதையை நினைக்காதே என்ற பலவீன நோக்குடன் தொடங்குவதில்தான் ஆபத்தே. மருந்தை விட இந்த தேவதையின் நினைவையே அதிகம் பருகுவார். தன்னுடைய லட்சியங்களை கொல்ல வேண்டிய இந்த துர்பாக்கிய பேராசிரியருக்கு , duncan ஐ கொலை செய்த Macbeth போராட்டமே. moral values ஒரு புறம்,Vacillating own conscience நடுநிலை தவறிய நடுவராய் ,Tortured by the thoughts of passion மறுபுறம்.....
தொடர்ந்து பேராசிரியர் என்ன செய்தார் என்று தொடர்வோம்.
-
கார்த்திக் சார்,
ரசிகர்களை குதூகலத்தில் தள்ளி time Machine போல பின் நோக்கி போக வைக்க வேண்டுமா, கூப்பிடு கார்த்திக் சாரை,கூப்பிடு முரளி சாரை என்றாகி விட்டது. (சென்னை,மதுரை என்றால்)
கிராமம் என்றால் நம்மிடையே ஒரு கிராம ராஜன் உருவாகி தூள் கிளப்புகிறார்..
மிக்க நன்றி.
மாயாவியை கண்டு பிடிக்க ஒரு மாத விடுமுறையில் வருகிறேன்.பிரபாத் டாக்கீஸ் பின்புறம் 70 களில் வசித்த சிறுவனை பற்றி பெரிமேசன் (அல்லது குலோத்துங்க சோழன்)போல துப்பு துலக்கி மர்மத்தை விடுவிக்க போகிறேன்.
-
கார்த்திக் சார்,
அற்புதம், அபாரம்!!! ஆண்டவன் கட்டளை - தரிசனம் அபூர்வ விவரிப்பு. அழகிய திரைப்படம். இன்னும் இவ்வளவு பேச வைக்கிறது என்பதிலேயே அதன் உயர்ச்சி தெரிகிறது. நானும் 80-களின் துவக்கத்தில் திருச்சி-க்கு ஒருமுறை சென்றபோது திருச்சி-பிரபாத் தியேட்டர்-இல் பார்த்து ரசித்திருக்கிறேன். எனக்கும் மிக பிடித்த படம். பின்னர் தொலைக்காட்சிகளில் ஓரிரு முறைதான் பார்க்க முடிந்தது. எல்லோரும் எழுதியதை படித்த பின்பு உடனடியாக பார்க்க வேண்டும் என்று ஆவல் உண்டாகிறது. முயற்சிக்கிறேன். உங்கள் கருத்துக்கு மீண்டும் என்னுடைய பாராட்டுக்கள்.
-
ஆடைகளுக்கேன்றே பிறந்த ஆணழகர் (தொடர் 1)
அனைவருக்கும் வணக்கம். புதிதாக மேலும் ஒரு விஷுவல் தொடர். நம் இதயதெய்வத்தின் புகழை மேலும் மெருகூட்டக் கூடிய வகையில். ஆம். நடிகர் திலகத்தின் உடை ரசனையை விளக்கும் விஷுவல் தொடர்.
நடிகர் திலகத்தின் உடை அணியும் ரசனையை வியக்காதவர்களே இருக்க முடியாது. அந்தக் காலக் கட்டத்திலேயே உடைகளில் அதிநவீன நாகரீகத்தைப் புகுத்தி அனைவர் கவனத்தையும் ஈர்த்தவர் அவர். பலர் பலமுறை நம் ரசிகரல்லாதோர் கூட அவருடைய உடைகள், அவற்றை அவர் அணியும் பாங்கு, நேர்த்தி, உடைகளில் காட்டிய உன்னத டிசைன்கள் இவற்றை மனதாரப் புகழ்ந்ததை பலமுறை கேட்டிருக்கிறேன்.
பொதுவாகவே உடைகள் அணியும் விதத்தில் நடிகர் திலகம் மிகவும் பெயரும் புகழும் பெற்றவர். தனது திரைப்படத் தொழிலில் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு உடைகளைத் தேர்ந்தெடுப்பதில் வல்லுநர் அவர். அந்த அசாத்திய திறமை அவருக்கு முதல் படத்திலேயே வந்து விட்டது.
முதலில் திரைப்படங்களில் அவர் எப்படிப்பட்ட உடைகளை அணிந்தார், அதை எவ்வாறு அணிந்தார், அணிவதில் கூட எத்தகைய ஸ்டைல்களைக் காட்டினார் என்று எழுதுவதை விட நிழற்படங்களாக சிறு விளக்கங்களுடன் அளித்தால் இப்போதுள்ள தலைமுறையும் வருங்கால தலைமுறைகளும் நன்கு தெரிந்து கொள்ள முடியும் என்ற ஆவலில் எழுந்ததே இந்தத் தொடர்.
தனது தொழில் அல்லாது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, குடும்ப வாழ்விலும் சரி அவர் உடைகளில் செலுத்திய கவனம் கூட இந்தத் தொடரில் வெளியாகும்.
இப்போது முதலில் 'பராசக்தி'
இந்த முதல் காவியத்திலேயே அவரின் ஆடைகள் சாம்ராஜ்யம் தொடங்கியது. ஏனென்றால் பணக்கார குணசேகரன் அணிந்த ஹைகிளாஸ் ஆடைகள், அவன் ஏழ்மை நிலையைத் தொட்டதும் ஏற்பட்ட உடைகளின் உருமாற்றம் என்று இருவேறுபட்ட உணர்வுகளை உடைகளின் மூலமும் வடித்துக் காட்ட அவருக்குக் கொடுக்கப் பட்ட முதல் சந்தர்ப்பம். சந்தர்ப்பத்தைத் தவற விடுபவரா நம் ஆருயிர்த் திலகம்?. இப்போது பார்க்கலாம்.
நடிகர் திலகத்தின் திரைப்பட வாழ்வின் நம் கண்களுக்கு விருந்தளித்த முதல் உடை. கிட்டத்தட்ட நைட் டிரஸ். அவருக்கு அவ்வளவு மேட்சாகக் கவர் ஆகும். ஷர்ட், பேன்ட் இவற்றின் மேலிருந்து கீழ் நோக்கி வரும் அழகான கோடுகள் இன்னும் அவரை அழகாகக் காட்டும்.
இதை எப்படி உடுத்தியிருப்பார் என்று கவனியுங்கள். அதுதான் விசேஷம். இரவில் படுத்து காலையில் கண் விழிக்கையில் full hand ஷர்ட்டின் கைப்பகுதிகளை ஏனோதானோவென்று அரைகுறையாக மடித்தும் மடிக்காதது போல உடுத்தியிருப்பார். இரவில் தூங்கி எழுந்தவனின் ஆடைகள் எப்படி சரிசெய்யப் படாமல் இருக்குமோ அப்படியே அணிந்திருப்பார். அப்போதே அப்படி ஒரு பெர்பெக்ஷன்.
http://imageshack.us/a/img571/8365/p...dripmovie7.png
http://i1087.photobucket.com/albums/...%20-2/1-41.jpg
ஹோட்டலில் அணிந்து வரும் அழகான டிரஸ் பொறுப்பாக கோட்டை ஹேங்கரில் மாட்டிய பிறகு. வாட்சில் டைம் பார்க்கும் அழகைப் பாருங்கள். அதில் ஒரு அவசரம் தெரியும்..
http://i1087.photobucket.com/albums/...%20-2/2-41.jpg
கைகள் மடித்துவிடப்பட்ட நிலையில். 'டை' அருமையாக உள்ளது. .
http://imageshack.us/a/img153/5360/p...dripmovie9.png
புதுப் பெண்ணின் மனதைத் தொட்ட அழகான, அம்சமான full covered உடை.
http://i1087.photobucket.com/albums/...%20-2/3-26.jpg
காதலியை வசப்படுத்தும் அருமையான கோட் சூட், டையுடன்
http://i1087.photobucket.com/albums/...%20-2/7-10.jpg
உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த famous கோர்ட் உடை. கை மடித்து விடப்பட்ட ஸ்டைல் என்றுமே புகழ்க் கொடி நாட்டும்.
http://i1087.photobucket.com/albums/...%20-2/4-19.jpg
கிளைமாக்ஸ் காட்சியின் கலக்கல் neck cover பனியன் டைப் உடை. அந்த சிரிப்பு அப்படியே நெஞ்சை அள்ளிக் கொண்டு போய்விடும்
http://i1087.photobucket.com/albums/...%20-2/5-12.jpg
போனஸ் ஸ்டைல் போஸ்
http://i1087.photobucket.com/albums/...%20-2/6-13.jpg
-
வாசுதேவன் சார்
நீங்கள் என்னென்ன பதிவிட்டாலும்
இனிமை
புதுமை
அருமை
அட்டகாசமான ஆரம்பம்
அமர்க்களம் தொடரட்டும்
உங்களின் அசூர உழைப்பு - பாராட்டப்படவேண்டும்
-
வாசு,
அமர்க்களமான ஆரம்பம் .முதல் படத்திலிருந்தே துவங்குகிறாய் வேலையை. நடக்கட்டும்.
50 களில் அகில இந்திய அளவில் ஒரு வடக்கிந்திய பத்திரிகையால் "Best Dressed Man" in Indian Cinema வாக தேர்ந்தெடுக்க பட்டவராயிற்றே?
என்னா அழகு, handsome நம் திராவிட மன்மதன்? அனைத்து உடைகளும் அவருக்காகவே தவம் இருந்து அவரை அடைந்தது போல பொருந்தும் அழகு!!!!
-
டியர் கார்த்திக் சார்,
நீண்ட நாளைக்குப் பிறகு தங்களுடைய "ஆண்டவன் கட்டளை" திரைப்பட வர்ணணை, எப்போதும்போல நாங்களும் தங்களுடனேயே அமர்ந்து திரைப்படத்தைப் பார்த்த திருப்தியைத் தந்தது. நன்றி.
-
டியர் வாசுதேவன் சார்,
நடிகர்திலகத்தின் ஆடையழகிற்கென்று ஒரு தொடர். முதல் படத்திலேயே, நைட் டிரஸ் முதல் வரை அழகினை தாங்கள் ஆராதித்திருக்கும் பாங்கு அருமை.
-
வாசு சார்,
புதுத்தொடர் துவக்கத்திலேயே பிரமாதப்படுத்தி விட்டீர்கள். அதுவும் முதல் படத்திலிருந்தே. வரப்போகும் பதிவுகளை நினைத்தால்... ஒன்ஸ் மோர்-லேயிலும் கலக்கியிருப்பாரே. என்ன சொல்வது? அபாரம். உங்களை இதற்க்காக கேட்டுக் கொண்ட ராகுல்-க்கும் நன்றி.
ஒரு சின்ன விண்ணப்பம். எல்லாத் தொடர்களையும் சிறிது இடைவேளை மட்டுமே விட்டு அடிக்கடி கவனியுங்கள்.
-
Mr Vasu Sir,
Your new series on Dressing of NT is simply Superb. Whenever Gnana Oli shown
I will definitely come to chennai to watch Mr Antony as well as our friend Mr Gopal.
Mr Karthik Sir,
NIce writeup on Andavan Kattalai. We expect many more from you.