May 13 2009.
Part 1:
ஆஷோக்கிற்கு சிகிச்சை அளிப்பதாய் உறுதியளித்த இரண்டு மருத்துவர்களும், தற்போது முடியாது என்று கைவிரித்துவிட, எரிச்சலாகிறார் நாதன். அவனுக்கு வியாதியும் இல்லை, விரக்தியும் இல்லை. யோகாபிமானம் மட்டும் ச்ற்றே இல்லை என்றும், வாழ்க்கை மீதும், மனிதர்களின் மீதும் பற்றுதலை உண்டாக்கிவிட்டால், அஷோக் நிலமை மாறிவிடும் என்று வசு கூற, ஆக, இவன் சந்யாசியாகவும் இல்லாமல், சக மனிதரைப் போலவும் இல்லை, "திரிசங்கு சொர்கம்" என்கிறார் நாதன்.
--
"திரிசங்கு சொர்கம்" என்றால் என்ன என்று தயாரிப்பாளர் கேட்க, சோ அதற்கு விளக்கம் அளிக்கிறார். (Folks, I will try to search for this story in net and post it soon. In case i dont get it, akka please help :cry2: )
--
கோவிலுக்கு போவது, பூஜை செய்வது என எதிலும் குறைவில்லை, இருப்பினும் தம் ப்ரார்த்தனைகள் பகவான் செவிகளுக்கு எட்டவில்லை என்றும், பகவானுக்கு ஒரு Hearing Aid தேவைப் படுகிறது என்றும், வசு நகைச்சுவை கலந்து தன் வேதனையை வெளிப்படுதுகிறாள். அதற்கு "சாஸ்திரிகள் தான் அந்த Hearing Aid என்றும், நம் ப்ரார்த்தனைகளை பகவான் செவிகளுக்கு எட்டச் செய்வது இவர்கள் தான் என்று சாஸ்திரிகளை பர்த்து நாதன் கூற, சாஸ்திரிகள் முகத்தில் மட்டும் அல்ல மலர்ச்சி, நம் முகத்திலும் தான் :)
---
Note: Giri's parents eloped and married! :)
கிரி (கிருபவின் நண்பன்), ஸ்லோக புத்தகங்கள் விற்கும் தாத்தாவை காண்கிறான். தான் அவரிடம் புத்தகங்கள் வாங்கி இருப்பதை நினைவுப்படுத்தி, அவரை தன் இல்லத்திற்கு அழைத்து செல்கிறான். அவரைப் பார்த்த மாத்திரதில் அதிர்ச்சி அடைகிறாள் அவன் அம்மா. காரணம், அவர் வேறு யாருமில்லை, அவளின் சொந்த அப்பா தான். இத சற்றும் எதிர்ப்பார்க்கத கிரி, இத்தனை நாளும் வயது காரணமாக அவரை தாத்தா என்று அழைத்ததையும், இன்று அவர் தான் அவனின் சொந்த தாத்தா என்ற உண்மை தெரிந்ததும், நெகிழ்கிறான்.
கிரியின் அப்பா வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன் நடந்ததை மனதில் வைத்துக்க்கொண்டு, கிரியின் தாத்தாவை அவமதிப்பார், என்று நாம் யூகித்துக்கொண்டிருக்க, அவரோ, தன்னை ஆசிர்வதிக்குமாறு வேன்டுகிறார். திருமணதின் போது கிடைக்காமல் போன ஆசிர்வதம் இப்போது கிடைக்கட்டும் என்று கூறுகிறார். ச்ந்தோஷம் ஒரு புறம் குற்ற உணர்ச்சி மறுபுறம் என தாத்தாவின் முகபாவம் கனகச்சிதம்.
இளையவளின் பேச்சைக் கேட்டு இவர்கள் கல்யாணத்தை ஒதுக்கியதாகவும், பின் இளயவளே இவரின் சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வாங்கிக்கொண்டு விட்டாள் என்றும், அவளின் மூலமாக வந்த பிள்ளைகள் எஞ்சி இருந்த சொத்தையும் வாங்கிக்கொண்டு தன்னை ஒதுக்கி விட்டாதாகவும், கூறி தன் குமுறலை அழுகையாக வெளிப்படுதுகிறார் தாத்தா. அன்று இவர்களுக்கு செய்த பாவம் மொத்தமும் தன்னையே திருப்பி தாக்கி விட்டதாக கூரி அழுகிறார். அதனை மறுத்து பேசும் கிரியின் அப்பா, பெற்றவரின் மனதை ரணமாக்கி விட்டு, அவரின் பெண்ணை திருமணம் செய்துக்கொண்டது மட்டும் எப்படி சரியாகும் என்று கூறி தன் குற்ற உணர்ச்சியையும் வெளிப்படுதுகிறார். நடந்தஹை மறந்து, இனி தங்களுடனே சேர்ந்து இருக்குமாறு தாத்தாவை கேட்டுக்கொள்கிறார் அப்பா. தன் விருப்பமும் அது தான் என்று கூறி சம்மதிக்கிறார் தாத்தா.
அன்றே உங்கள் திருமணத்திற்கு சம்மதித்து சந்தோஷமாக இருந்திருக்கலாம் என்று எண்ணி வருத்தப்படும் தாத்தாவை, "Past is an outdated cheque, future is a post dated cheque but present is the hot cash" என்று கிரியின் அப்பா கூற, கிரி தன் பங்குக்கு, வாழ்க்கை என்பது ஒரு Cone Ice cream அது உருகிவிடும் முன், நாம் அதனை அனுபவித்துவிடவேன்டும் என்கிறான். அதற்கு, எல்லா ice cream'um உருகிப்போய், வெறும் empty cone-ஆகத்தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன் என்று வருதத்துடன் பதிலளிக்கிறார் தாத்தா. "We will fill the empty cone " தாத்தா என்று கிரி கூற, "with more and more ice creams" என்று கூறி முடிக்கிறார் கிரியின் அப்பா.