courtesy- nadigarthilagam .com
http://i1146.photobucket.com/albums/...ps30e6e04e.jpg
Printable View
courtesy- nadigarthilagam .com
http://i1146.photobucket.com/albums/...ps30e6e04e.jpg
courtesy- pradeepbalu sir
http://youtu.be/oIFVcdYtTic
நிஜ அண்ணன் தங்கையை நிழலில் கொண்டு வந்து திரையுலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய 'என் தங்கை' திரைப்படத்தின் அபூர்வ பதிவுகளை வெளியிடும் திரு. செல்வகுமார் அவர்களுக்கும், தலைவரின் புகைப்படங்களை அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக நிறைய நேரம் செலவு செய்து மிகவும் நேர்த்தியாக பதிவிடும் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி...இவரது சிறந்த பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
மக்கள் திலகத்தின் 28வது திரைப்படம் " என் தங்கை" திரைப்படத்தில் இடம் பெற்ற
பாடல்களின் முதலிரண்டு வரிகள் :
1. ஆண் - பெண் ஜோடிப்பாடல் : காதல் வாழ்விலே மகிழ்ந்தோம் - கவலை தவிர்ந்தோம்
நாம் கவலை தவிர்ந்தோம்
2. குழுப்பாடல் : தீம் தன தீம் ! தன தீம் ! தீம் தன தீம்
அழகாய் பொம்மை வைத்தே -
கொலுவைச் சிங்காரித்தே
3. ஜோடிப்பாடல் : ஆடும் ஊஞ்சலைப் போலே அலையே ஆடுதே
ஆறு வந்து கடலில் சேருதே - வாலிபம் போலே
ஆசை வளருதே.
4. தனித்த குரலில் பெண் பாடல் : தீன தயாபரி தாயே ... அம்பா ... திருவாகும் உருவே
நீ அருள்வாய் தேவி ... மானிலமதில் நீயே கதி
5. நகைச்சுவை ஜோடிப் பாடல் : குட்லக் ! குட்லக் ! குட்லக் ! என் வாழ்விலே
(வசன நடை ) கட்டக் கந்தல் இல்லாத ஏழை
கஷ்டம் நீக்கும் , குபேரன் ஆக்கும்
6. தனித்த பெண் குரலில் சோகப்பாடல் : மீளா துயரமோ மாதா ... மனமிளகாதா
கண்களிரண்டும் இழந்தவன் பேதை
7. தனித்த குரலில் பெண் பாடல் : அன்னையே , அன்னையே , அன்னையே
அருள் தாரும் மேரி தாயே - ஊழ்வினையதாலே
நானே --- உள்ளம் உடைந்து நொந்தேன்
8. தனித்த குரலில் பெண் பாடல் : இன்பமே சிறுதும் அறியாத பெண் ஜன்மம் (பல்லவி)
துன்பம் என் வாழ்வினில் இல்லாத நாளில்லை
பேதை யாது செய்வேன் கண்ணில்லாத (சரணம்)
9. ஜோடிப்பாடல் : என் இன்ப ஜோதியே ! உன் அன்புப் பார்வையால்
இன்பத்தென்றல் எந்தன் வாழ்வில் இசைந்தே வீசுதே
10. தனித்த குரலில் ஆண் பாடல் : வாழ்வதிலும், நலம் சூழ்வதிலும் புவி மக்களெல்லாம்
ஒப்புடையார் .. ஏழ்மையில் மக்களை தள்ளுவதோ !
11. பின்னணிப்பாட்டு : வறுமைப்புயலாலே துயரக்கடல் மேவும் (தொகையறா)
கருவிலே உருவான காயம் !
================================================== ====================================
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம். ஜி ஆர்
எங்கள் இறைவன்
பேரன்புக்குரிய நண்பர் பேராசிரியர் செல்வகுமார் சார்,
எப்பொழுதும் போல் புதுப்பொலிவோடும், புத்துணர்ச்சியோடும் மீண்டும் தாங்கள் பொன்மனச்செம்மல் Filmography திரியில் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் குறித்த அரிய பதிவுகளை அளிக்கத் தொடங்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி. வெற்றியோடு தொடரட்டும் தங்களது திருப்பணியாகிய இந்தத் திரிப்பணி ! தங்களது சேவையாலும், ஏனைய அனைவரது பங்களிப்புகளாலும் இத்திரி ஒரு தகவல் களஞ்சியமாக விளங்கப் போவது திண்ணம்.
தற்போது இடம்பெற்றுவரும் "என் தங்கை" குறித்த தகவல்கள், நிழற்படங்கள் அசத்தல் ! பாசத்தைப் பொழியும் அண்ணனாக அண்ணல் எம்.ஜி.ஆர். அவர்கள் அருமையாக நடித்திருப்பார்.
"என் தங்கை" குறித்த தங்களது முதல் பதிவில், படத்தின் சிறப்பம்சம் என்கின்ற பகுதியில், தாங்கள் அளித்துள்ள சென்னை சம்பந்தப்பட்ட புள்ளிவிவரத்தில் சில சிறுதிருத்தங்கள்:
"என் தங்கை", 31.5.1952 சனிக்கிழமையன்று சென்னை மற்றும் தென்னகமெங்கும் வெளியானது. சென்னையில் சித்ரா, பிராட்வே, சரஸ்வதி ஆகிய மூன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 'சித்ரா'வில் 31.5.1952லிருந்து 6.8.1952 வரை 68 நாட்கள் ஓடியது. 7.8.1952 வியாழனன்று 'சித்ரா'வில் திலீப்குமார் நடித்த "ஆன்" ஹிந்தித் திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பு வெளியானது. அதே போல், 'பிராட்வே'யில் 31.5.1952 தொடங்கி 14.8.1952 வரை 76 நாட்கள் ஓடியது. சுதந்திரத் திருநாளான 15.8.1952 வெள்ளியன்று 'பிராட்வே'யில் என்.டி.ஆர். கதாநாயகனாக நடித்த விஜயா-வாஹினியின் ஹாஸ்யச் சித்திரமான "கல்யாணம் பண்ணிப்பார்" திரைப்படம் வெளியானது. 'சரஸ்வதி'யில் 100 நாள் ஓடியதா என்பது பற்றி ஆராய்ந்துதான் கூற வேண்டும். 'சரஸ்வதி'யில் அடுத்து வெளியான படம் பற்றிய தகவல் தற்பொழுது என்னிடம் இல்லை. சித்ரா, பிராட்வே அரங்குகளிலேயே 100 நாட்களை எட்டாதபோது 'சரஸ்வதி'யில் மட்டும் 100 நாட்கள் ஓடியிருக்க வாய்ப்புகள் இல்லை அல்லது மிகமிகக் குறைவு. மேலும். சித்ரா, பிராட்வே அரங்குகளில்கூட இடையில் வேறு ஏதாவது படம் வெளியானதா என்பது பற்றியும் தகவல்கள் இல்லை. எனவே ஓடிய நாட்களை அதிகபட்சம் ஓடிய நாட்களாகவே கொள்ள வேண்டும்.
ஆக, "என் தங்கை"யின் சென்னைப் புள்ளிவிவரம் (approx.):
சித்ரா - 68 நாட்கள் (அதிகபட்சம்)
பிராட்வே - 76 நாட்கள் (அதிகபட்சம்)
சரஸ்வதி - 100 நாட்களுக்கு குறைவாக (அதிகபட்சம்)
சென்னையைப் பொறுத்தவரை, "என் தங்கை" வர்த்தகரீதியாக வெற்றிப்படம் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
அன்புடன்.
பம்மலார்.
I had watched En Thangai in Satellite TV in early 90s. I was very astonished on the story part. As there is no action scene for our Thalaivar. MGR had mentioned that the movie had a lucrative run and the producers (Asoka Pictures) had mailed him and praised about his performance in En Thangai. And further MGR states that this is the only movie and only producer to thank him after his commitment in his entire film career.
MGR attended the function in Trichy for its victory day and the photo was also publihsed in Olikirathu Urimaikural magazine.
ஒஹ்.....அப்படியா ! ஆச்சர்யமாக இருகிறதே சார் !
இரண்டு data வுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறதே ? இதில் எது சரி ...எது திருத்தப்படவேண்டியது ?
காரணம் prof அவர்கள் தகவல் தவறாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. காரணம் அவர் prof . ஆராயாமல் வெளியிடமாட்டார் என்பது அனைவரது எண்ணம் நான் உட்பட..நீங்களும் அதே போல்தான் ...Encyclopaedia of film Data with related documents . நீங்களோ வெளிவந்த, எடுக்கப்பட்ட தேதிகளையும் அதற்க்கு பின்னர் வந்த படங்கள் பற்றிய தகவல்வரை வெளியிட்டுளீர்கள் ...ஒரே குழப்பம்...
எது எப்படியோ...தகவல் களஞ்சியம் தொடரட்டும்...அடுத்த பதிவுக்கு பதிவிறக்கம் செய்ய காத்திருக்கும் சுப்பு..!
மக்கள் திலகத்தின் 29வது திரைப்படம் " நாம்" படம் பற்றிய தகவல்
1. படம் வெளியான தேதி : 05-03-1953
2. படத்தை தயாரித்த நிறுவனம் : ஜுபிடர் பிக்சர்ஸ் & மேகலா பிக்சர்ஸ்
3. கதாநாயகன் : மக்கள் திலகம்
4. மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : குமரன்
5. பாடல்கள் : மு கருணாநிதி
6. கதை வசனம் : மு கருணாநிதி
7. இசை அமைப்பு : சிதம்பரம் எஸ். ஜெயராமன்
8. இயக்குனர் : ஏ. காசிலிங்கம்
9. படத்தில் பங்கு பெற்ற இதர கலைஞர்கள் : எம் ஜி சக்கரபாணி, பி. எஸ். வீரப்பா, எம். என். நம்பியார், எம். எம். ஏ. சின்னப்பா தேவர், வி. என். ஜானகி, பி. கே. சரஸ்வதி, எஸ். ஆர் ஜானகி, எம். எஸ். எஸ். பாக்கியம் உட்பட மற்றும் பலர்.
குறிப்பு : இத்திரைப்படம் காஷியின் "காதல் கண்ணீர்" என்ற கதையை தழுவி எடுக்கப்பட்டது.
இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.
http://i42.tinypic.com/8xtvd5.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்