Originally Posted by
venkkiram
விசாரிக்கிறேன் பேர்வழி என காவலர் பாத்திரத்தில் கலாபவன் மணி சுயம்புலிங்கம்-ராணி குடும்பத்தை கொடுமைப்படைத்தும் காட்சிகள் ஓரளவிற்குமேல் பார்க்க திகட்டிவிடுகிறது. தணிக்கைக் குழு இதற்கெல்லாம் U சான்றிதழ் கொடுப்பார்களா!
சுயம்புலிங்கமாக கமலைத்தவிர வேறு ஒருவர் செய்திருந்தால் இந்த அளவு மேன்மை அடைந்திருக்குமா? பதில் இல்லை. ஆனால் கமல் இதுவரை கடந்துவந்திருக்கும் பாத்திரப் பயணங்களை அசைபோட்டால், பாபநாசம் அப்படியொன்றும் பெரிதாய் கவரவில்லை. பலவித சுவாரஸ்யங்களை தன்னகத்தைக் கொண்டு ஒவ்வொருமுறை பார்த்து பரவசப்படக் கூடிய அளவிற்கு பாபநாசம் அப்படியொரு ஆகச்சிறந்த படைப்பாகவும் தோன்றவில்லை. உத்தமவில்லன் பார்த்தபிறகு எழுந்த அடுத்த முறை எப்போது பார்ப்பது என்ற ஈர்ப்பு பாபநாசத்தில் எழவில்லை. பார்த்த ஒரே முறையிலேயே திருப்தி கிடைத்துவிட்டது. கதை, திரைக்கதையில் கமலை விஸ்வரூபமாக பலபடங்களில் தரிசித்துவிட்டதால் அப்படி ஒரு நிலையை உணர்கிறேன்.
பாபநாசத்தைப் பார்த்துவிட்டு த்ரிஷ்யத்தை கண்டுகளிக்கலாம் என முடிவெடுத்திருந்தேன். ஆனால் த்ரிஷ்யத்தை முழுதும் பார்க்க பொறுமை இருக்குமா எனத் தெரியல. அதனால, லால்-கமல் நடிப்பில் யார் சிறப்பு என்ற வட்டத்திற்குள் போகவில்லை.
திருநெல்வேலித் தமிழுக்கு, கலாச்சாரத்திற்கு ஒரு அடையாளமாக இப்படம். வழங்கிய ஜீத்து ஜோசப், கமல், ஜெயமோகனுக்கு நன்றி.
:notworthy: