http://www.accesskollywood.com/photo...achan-0109.jpg
Printable View
Is that really Abbas.. he looks like old bollywood actor...?
What is shocking in Ramesh Arvind's pic? :confused2: Actors vayasane photos-la laam enna shocking irukku?
He means that there is nothing shocking in the pictures that you have posted. Go through the previous pages so that u can get a fair idea on what to and what not to post.
k..cool...
காமெடி சந்தானம் மீது ரூ.10 லட்சம் மோசடி, கொலை மிரட்டல் புகார்
தனது வீட்டை வாங்கிய நடிகர் சந்தானம் பாக்கித் தொகையான ரூ.10 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் தொழில் அதிபர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை உத்தண்டியைச் சேர்ந்தவர் ரவி கிஷன் (42). ஐஸ் கம்பெனி நடத்தி வருகிறார். அவர் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து நடிகர் சந்தானம் மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனது பெயரில் விருகம்பாக்கம் தாங்கல் உள்வாய் தெருவில் பங்களா ஒன்று இருந்தது. நடிகர் சந்தானம் என்னையும், என் தந்தையையும் மிரட்டி ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள சொத்தை ரூ.1 கோடியே 85 லட்சத்திற்கு பேசி 10-3-2010 அன்று கட்டாய பதிவு செய்து கொண்டார். ஆனால் பேசிய பணத்தை தராமல் ரூ.1 கோடியே 75 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதியுள்ள ரூ.10 லட்சம் பணத்தை பிறகு தருவதாக நடிகர் சந்தானம் கூறினார்.
முதலில், ரூ.2.5 லட்சத்திற்கான செக்கை என்னிடம் கொடுத்தார். ஆனால் பணம் இல்லாமல் செக் திரும்பி வந்தது. மீதியுள்ள ரூ.7.5 லட்சம் பணத்தை கேட்டபோது பணத்தை தரமுடியாது என்று கூறிவிட்டார்.
தொடர்ந்து பணம் கேட்டு வந்ததற்கு இதற்கு மேல் ஒன்றும் தர முடியாது என்றும் மீறி கேட்டால் கொலை செய்து விடுவேன் என்றும் நடிகர் சந்தானம் கூறினார்.
மேலும், வீட்டில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் தூக்கி சென்றுவிட்டார். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
http://tamil.oneindia.in/movies/news...m-aid0128.html
evano vechanda aapu!
சந்தானம், உதயநிதி ஸ்டாலின் மீது மோசடி புகார்...!
http://l.yimg.com/bt/api/res/1.2/qDd...5146000000.jpg
நடிகர் சந்தானம் மற்றும் உதயநிதிஸ்டாலின் ஆகியோர் தன்னிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்துவிட்டதாகவும், பணத்தை கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுவதாக சென்னையை சேர்ந்த ஐஸ் கம்பெனி அதிபர் ரவி கிஷன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருக்கிறார்.
சென்னை உத்தண்டியை சேர்ந்தவர் ரவி கிஷன். இவர் *சொந்தமாக ஏஞ்சல் என்ற பெயரில் ஐஸ் கம்பெனி நடத்தி வருகிறார். ரவிகிஷனுக்கு விருகம்பாக்கம் அருகே 2 கிரண்வுட் இடத்தில் பங்களா ஒன்று உள்ளது. இதனை வாங்க நடிகர் சந்தானம் முயற்சி செய்துள்ளார். பங்களாவின் மதிப்பு ரூ.2.25 கோடி. ஆனால் சந்தானம், உதயநிதி ஸ்டாலின் உதவியோடு ரூ1.85 கோடிக்கு விலை பேசி, கடந்த 2010-ம் ஆண்டு பத்திரபதிவும் நடந்தது. பத்திரபதிவின் போது சந்தானம் ரூ.1.75 கோடி தான் ரவி கிஷனிடம் கொடுத்துள்ளார். மீதி ரூ.10 லட்சத்தை பின்னர் தருவதாக கூறியுள்ளார். ஆனால் இன்று வரை பணத்தை சந்தானம் தரவில்லை. இடையில் காசோலையும் கொடுத்துள்ளார். ஆனால் அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது.
இதனையடுத்து சந்தானத்திடம் பணம் கேட்டுள்ளார் ரவி கிஷன். ஆனால் அவர் பணம் தர மறுக்கிறார். மேலும் பணத்தை கேட்டால் உதயநிதி துணையோடு அடியாட்களை வைத்து மிரட்டவும் செய்துள்ளார். இதனையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சந்தானம் மற்றும் அவருக்கு துணையாக இருந்த தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மீது புகார் கொடுத்திருக்கிறார் ரவி கிஷன். அதில் பணத்தையும் தராமல், அடியாட்கள் வைத்து தன்னையும், தனது குடும்பத்தையும் மிரட்டுவதாகவும், தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார்.
http://tamil.yahoo.com/%E0%AE%9A%E0%...102100058.html