http://i1234.photobucket.com/albums/...psxssrqidc.jpg
http://i1234.photobucket.com/albums/...pscckpfo3i.jpg
http://i1234.photobucket.com/albums/...psc7rmuc79.jpg
http://i1234.photobucket.com/albums/...psllqmarbt.jpg
Printable View
Iam extremely sorry mr ammu iwas totally absent for the last 10days that is the reason i could not acknowlege your pp stills.kindly do not take it to heart. all your workings of NT are EXCLLENT ALWAYS.
கத்தார் நாட்டில் தமிழருக்கு பெருமை சேர்க்கும் திரு. சீதாராமன் அவர்களை, உலக தமிழருக்கு பெருமை சேர்க்கும் நடிகர் திலகம் பிறந்த நாள் விழாவிற்கு தலைமை தாங்க அழைத்தது சால பொருத்தம். நன்றி கத்தார் வாழ் தமிழர் சார்பாக, பரணி.
ஈடு இணையற்ற அப்பழுக்கற்ற உத்தமனை, உயர்ந்த மனிதனை, தெய்வப் பிறவியை, தவப்புதல்வனை, தெய்வமகனை, கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்ததில், ஆதரிப்பதில் மிகவும் பெருமையும் கர்வமும் கொள்கிறேன். இதை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன். இதைச் சொல்வதிலும் நான் மட்டுமே தனி ஒருவனாக இருந்தாலும் கூட கவலைப்பட மாட்டேன். மிகவும் நன்றி.Quote:
உங்களைப் பொருத்தவரை நடிகர்திலகம் எடுத்த எல்லா நிலைப்பாட்டையும் ஆதரித்தவர். ஸ்தாபன காங்கிரசில் இருந்தபோது அது சரியெனப்பட்டது, இந்திராகாந்தி பக்கம் சென்றபோது அதையும், ஏற்றுக் கொண்டீர்கள், தமிழக முன்னேற்ற முன்னணி கண்டபோது அதையும் முழுமையாக ஏற்றுக்கொண்டீர்கள். ஜனதா தளத்தில் இருந்ததையும் ஆதரித்திருப்பீர்கள். அதாவது அரசியலில் நடிகர்திலகம் எது செய்தாலும் ஓ.கே.
உங்கள் நிலைப்பாட்டை தவறு என்றோ, குற்றம் என்றோ சொல்லவில்லை. உங்கள் முடிவு முழுக்க முழுக்க உங்கள் விருப்பம். அதே சமயம், நடிகர்திலகத்தின் அரசியல் முடிவுகளை பற்றி தங்கள் எண்ணங்களை தெரிவிப்பவர்களை நடிகர்திலகத்துக்கு எதிரிகள் போலவும், அவரை குறை சொல்ல சமயம் கிடைக்காதா என்று அலைபவர்களைப் போலவும் சித்தரிக்காதீர்கள் என்பதுதான் என் வேண்டுகோள்.
எனது அடுத்து பதிவு இது..எனக்கு மிகவும் பிடித்த படம்..
http://i60.tinypic.com/jtotpj.jpg
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் நடிகர் திலகத்தைக் குறை சொல்ல சமயம் கிடைக்காதா என்று அலைபவர்கள் தான்.Quote:
உங்கள் நிலைப்பாட்டை தவறு என்றோ, குற்றம் என்றோ சொல்லவில்லை. உங்கள் முடிவு முழுக்க முழுக்க உங்கள் விருப்பம். அதே சமயம், நடிகர்திலகத்தின் அரசியல் முடிவுகளை பற்றி தங்கள் எண்ணங்களை தெரிவிப்பவர்களை நடிகர்திலகத்துக்கு எதிரிகள் போலவும், அவரை குறை சொல்ல சமயம் கிடைக்காதா என்று அலைபவர்களைப் போலவும் சித்தரிக்காதீர்கள் என்பதுதான் என் வேண்டுகோள்.
நடிகர்திலகத்தின் பிறந்த நாள் (அக்டோபர் 1ல் கரைகடக்கும்) நினைவலைகள் !
Quote:
மனிதனும் தெய்வமாகலாம் ...எப்போது?
அவன் பிறந்தது முதல் அமரத்துவம் அடையும் வரை சக மனித குலத்திற்கு அவன் ஆற்றும் சமூகப் பணிகள், ஒரு வாழ்வியல் எடுத்துக்காட்டாக விளங்கும் அவனது நடை உடை பாவனை நடவடிக்கைகள், தலை முறைகள் தாண்டி அவன் வாழ்ந்த வாழ்வு இந்த சமுதாயத்துக்கு உரைக்கும் பாடம் ........
...........எல்லாவற்றுக்கும் மேலாக வாழும் போதும் அமரராக தொழும் போதும் மக்களின் மனதில் எப்படி ஒரு நிரந்தர அடிச் சுவட்டை அவன் பதித்து, காலங்கள் மாறினும் காட்சிகள் மாறினும் அவன்தான் மனிதன் என்ற அளவில் ஊனோடும் உதிரத்தோடும்...... இதயத்தோடும் மனதின் நினைவலைகளோடும்.... எப்படி இரண்டறக் கலந்து வாழ்ந்து கொண்டேயிருக்கிறான் என்பதையும் பொறுத்தே !!
இந்த உலகம் சுழல்வது நிற்கும் வரை நம்மை உயிரூட்டம் செய்யும் சூரியன் இயங்கும் வரை கர்ணனாக கட்டபொம்மனாக திருவருட்செல்வராக சிக்கலாராக பாரிஸ்டர் ரஜினிகாந்தாக பிரஸ்டிஜ் பத்மநாபனாக கப்பலோட்டிய தமிழனாக சாக்ரடீஸாக அசோகராக பரதனாக பாசமலராக வசந்தமாளிகை மன்னனாக அம்பிகாபதியாக காளிதாசனாக விக்ரமனாக சௌத்ரியாக ஞான ஒளியாக எங்கமாமாவாக மனிதரில் மாணிக்கமாக ....வாழ்ந்துகொண்டேயிருப்பார்.....
எனது வாழ்வியல் தமிழ் உச்சரிப்புக்கும் காலம் தவறாமைக்கும் கடமை உணர்வுக்கும் பொதுநல அர்ப்பணிப்புக்கும் முன்மாதிரி ரோல்மாடலான நடிகர்திலகம் என்னும் படிக்காத மேதை !!
தொழுதல்களுடன்
செந்தில்
https://www.youtube.com/watch?v=5DhrsSQ-2aY
Muthayyan sir
Nadigar Thilagam avargaludaya asaththalaana pala pose ungal kaivannaththil Stills Arunachalathirkku piragu kaangirom.
Vaazhga ungal thondu...iraivan ungalukku nalla arogyam kodiththu anaivarayum magizha vaikkattum.
Nandriyudan
RKS
Senthil sir...Super
நடிகர்திலகத்தின் பிறந்தநாள் நினைவஞ்சலி
சிவாஜி / ஜெமினி கணேசன்களின் இணைவின் முன்னோட்ட நினைவலைகள் !
Quote:
சம அந்தஸ்தில் மக்களின் வரவேற்பைப் பெற்று புகழ் வெளிச்சத்தில் மின்னி ஒளிர்ந்த இரு நடிப்புச் செம்மல்கள் நடிகர்திலகமும் காதல் மன்னரும்!
அகில உலக அளவிலும் ஒரு நல்ல புரிதலுடன் கதைக் களத்தின் வெற்றிகரமான நடிப்பு உருவகத்தை மட்டுமே மனதில் இருத்தி எந்த வித ஈகோவுக்கும் இடம் தராது பதினைந்து படங்கள் இணைந்து இரு கதாநாயகர்கள் கலக்கியது பெருமையுடன் நினைவுகூரத் தக்க சாதனையே !!
வீரபாண்டிய கட்டபொம்மன்,கப்பலோட்டியதமிழன், பாசமலர், பாவமன்னிப்பு,பதிபக்தி, பந்தபாசம், நாம் பிறந்த மண், சரசுவதி சபதம், திருவருட் செல்வர், கந்தன் கருணை போன்ற படங்களில் நடிகர்திலகத்துடன் கதை முக்கியத்துவம் கருத்தில் கொண்டு அளவாக அடக்கி வாசித்திருப்பார் காதல் மன்னர் !
சாவித்திரியை தனது பாசமலர் தங்கையாகவும் ஜெமினியை மாப்பிள்ளை என்றுமே நிஜ வாழ்விலும் மதித்தவர் நடிகர்திலகம்! குலமகள் ராதை படத்தில்உலகம் இதிலே அடங்குது என்னும் பாடல் காட்சியில் சினிமாக்காரங்க படத்தைப் போட்டா பத்திரிகைகள் கடைகளில் விரைவில் தீர்ந்துவிடும் என்ற கருத்துப்பட வரும் காட்சியில் நடிகர்திலகம் தன்னை முன்னிலைப் படுத்தாது ஜெமினி சாவித்திரி படங்களைக் காட்டி தனது கர்ணன் காலத்துத் தொடர்ச்சியான நன்றியறிதலையும் (கட்டபொம்மனில் எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்கள் நடிக்க இயலாத இக்கட்டான சூழலில் நடிகர்திலகத்தின் பாசமலர் வழி வேண்டுதலை ஏற்று எந்த ஈகோவுமின்றி உடனே வந்து நடித்துக் கொடுத்து படத்திற்கே இனிமையும் பெருமையும் சேர்த்தவர் ஜென்டில்மேன் ஜெமினி) மரியாதையையும் வெளிப்படுத்தி அவர்களைப் பெருமைப்படுத்தியிருப்பார் !!
பெண்ணின் பெருமை, பார்த்தால் பசி தீரும், உனக்காக நான் திரைப்படங்களில் இன்னும் ஒருபடி மேலே போய் ஜெமினிகணேசனின் பாத்திரப்படைப்பை கதையின் நாயகனாக முன்னிலைப் படுத்தும் வண்ணம் தனது விட்டுகொடுக்கும் மனப்பாங்கை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர்திலகம் !!
https://www.youtube.com/watch?v=3qMekkGIgLg
https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA
முத்தையன் அம்மு சார்,
'புதிய பறவை' ஸ்டில்கள் அருமை. இப்போதுதான் பார்ப்பது போல பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறீர்கள். நான் இரண்டு நாட்களாய் ஊரில் இல்லை. அதுதான் பின்னூட்டம் இட லேட்.
அடுத்து என் உயிரான ஆண்டனி, அருண் இருவரையும் உயிரோட்டமாக உலவ விட்டு என் உறக்கத்தைக் கெட வைக்கப் போவதற்கு முன்னமேயே வாழ்த்துக்களும், நன்றிகளும்.
அந்தக் காவியம் உங்களுக்கு மட்டுமா பிடித்தது? உலகில் உள்ளோர் அத்தனை பேருக்கும் அந்த 'ஒளி' பிடிக்கும். என் ஒருவனுக்கு பைத்தியமே பிடிக்கும். வெறி பிடிக்கும். பசி, தூக்கம் எதுவும் இருக்காது. என் ஆண்டனி, அருண் இவர்கள் போதும். இவர்களே என் சொந்தங்கள். இவர்களே என் தெய்வங்கள். என்னைப் பொறுத்த வரையில் ஆண்டனி, அருண், மாதா, பிதா, குரு, தெய்வம். இப்படித்தான் என்னால் வரிசைப்படுத்த முடியும். என் உடலை பல கூறாக்கினாலும் ஒவ்வொரு கூறும் ஆண்டனி, அருண் என்றே துடிக்கும்...ஒலிக்கும்...கூப்பாடு போடும். அன்புக்கும் அடிதடிக்கும் ஆண்டனி...அறிவுக்கு அருண். இரண்டையுமே என் தெய்வம் ஏற்று ஒருவனின் இருநிலையை அத்தனை பேர் மனதிலும் அற்புதமாக இருத்தியது. இறக்கியது.
இப்போதே இதயத் துடிப்பு எகிறுகிறது. காத்திருக்கிறேன்.
நடிகர் திலகம் அவர்களுடைய பிறந்தநாளில் வெளிவர இருக்கும் புலி திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.
அக்டோபர் 2அம் தேதி மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் வெளிவரும் நமது நடிக பேரரசர் அவர்களின் உத்தமன் திரைப்படம் மிகச்சிறந்த வெற்றியும் வசூலும் பெற்றிட நம் திரி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.
மதுரை சிவா மூவீஸ் நிறுவனத்திற்கு எமது வாழ்த்துக்கள்.
மதுரை ஜல்லிக்கட்டு காளை திரு சுந்தர்ராஜன் அவர்களின் விளம்பரங்கள் கண்ணை பறிக்கும் வண்ணங்களில் உள்ளது கூடுதல் பலம் !
வளர்க ஜல்லிக்கட்டு காளை சுந்தர்ராஜன் அவர்கள் தொண்டு !
கிசு கிசு
நிலக்கரி நகர வைரம் .....தென்னிந்தியாவின் மன்செஸ்டர் சென்றாராமே ?
இதுபோன்ற விஷயங்களை நாம் விவாதிப்பது எப்படி இருக்கிறது தெரியுமா ?
நடுரோட்டில் கண் மூடி சென்றால்...லாரியில் அடிபட்டு இறப்பது சிறப்பா அல்லது பஸ்சில் அடிபட்டு இறப்பது சிறப்பா ? என்பது போல உள்ளது !
நடிகர் திலகம் அவர்களுக்கு முதல்வர் ஆகவேண்டும் என்ற எண்ணம் என்றுமே இருந்ததாக நாம் கருதவில்லை. அப்படி இருந்திருந்தால் இவ்வளவு பண்ணின நடிகர் திலகத்திற்கு அதற்க்கு தகுந்தாற்போல நடந்திருப்பார் என்பதே எனது கருத்து.
அவர் கட்சி தொடங்கியது, திரு mgr அவர்களுக்கு உதவுவதற்காக மட்டுமே என்பதுதான் உண்மை. அவர் மீது அந்தளவிற்கு அன்பும் மரியாதையும் பாசமும் வைத்திருந்திருக்கிறார் நடிகர் திலகம்.
ப்ரூக்ளின் ஆஸ்பத்திரியில் திரு mgr இருந்தபோது, பிரசாரத்திற்கு இப்போதைய தமிழக முதல்வரா போனார் ? இல்லையே ! போக முடியாது என்றல்லா இருந்தார் ? தமிழகம் முழுதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டது நடிகர் திலகம் அவர்கள் மட்டும்தானே !
நடிகர் திலகம் அவர்களுக்கு பதவி மேல் ஆசை இருந்தால் இதை ஒருக்காலும் செய்திருக்க மாட்டார் ! மேலும் திருமதி ஜானகி அவர்களுடன் எதற்கு கூட்டணி வைக்க வேண்டும் ? சந்தர்ப்பவாத அரசியல் செய்திருந்தால் சுலபமாக 35 இடங்களை நடிகர் திலகம் மிநிமும் வென்றிருப்பார் ! அதுகூட நடிகர் திலகம் செய்யவில்லை !
அவரது முடிவு...அவரது எண்ணங்கள்..பல காரணங்கள் மனதளவில் அவருக்கு இருந்திருக்க கூடும்....அவரை சும்மா விட்டுவிடுங்கள் ப்ளீஸ்...!
அவர் அரசியல் பொதுமக்களுக்காக மட்டும்தான்...அவருக்காக அவர் எண்ணவே இல்லை !
அவருடைய எண்ணத்திற்கு மதிப்புகொடுப்பதே நாம் அவருக்கு செய்யும் மரியாதை !
*குழந்தைப் பேறில்லாதவள்
வருஷக்கணக்கில்
காத்திருக்கிறாள்..
மாசமாக".
* ஞாயிற்றுக்கிழமை
கடைவீதியாய் வெறிச்சோடிக் கிடக்கின்றன..
குழந்தை இல்லாத வீடுகள்.
-இவையெல்லாம், ஒரு குழந்தைக்காக ஏங்கிக் கிடப்போரின் மனநிலையைக்
கற்பனை செய்து நான் எழுதிய
கவிதைகள்.
உலகத்திலேயே மிகக் கொடிய
சோகம்,குழந்தைப் பேறு இல்லாதவளின் சோகமென்றால்.. உலகத்திலேயே மிக உயர்வான
சந்தோஷம், தாய்மையடைந்தவளின் சந்தோஷம் எனலாம்.
போற்றி மதிக்கும் அன்புக்
கணவனிடம், மனைவி அவனது காதல்மிகு பரிசு
தன் வயிற்றிலிருப்பதைத்
தெரிவித்து மகிழ்வதாய் வரும்
"தியாகி" படப்பாடல் இது.
"வலது கையில் தாய் படுத்தால் ஆம்பளைப் பிள்ளை.
மாங்காய் தின்னா,சாம்பல்
தின்னா பொம்பளைப் பிள்ளை.
இதில் சந்தேகம் இல்லை"
-என்று பாடுகையில் குறும்பும்,தகப்பனான பெருமிதமும்
காட்டும் அந்த எழில் முகம்..
"அட..சும்மா போங்க
நீங்க ஒன்னும்
மருத்துவரில்லை.
தொட்டதுதான் உங்க சேவை..
மத்தது இல்லை".
-என்று மனைவியும் குறும்பாய் மடக்க..
நாக்கு துருத்தி
பொய்க் கோபம் காட்டும்
அந்த திறமை முகம்..
நடிகர் திலகத்தின் அன்பு முகம்
கண்டு,தாம் மலர்ந்த முகங்கள்தாம் எத்தனை கோடி?
"எப்போ..எப்போ?" என்று ஆர்வமாய்க் காத்திருந்து..
தடைகளை நொறுக்கியெறிந்து
விட்டு இந்தப் படம் வந்து
பார்த்த நிமிடம்..
நம் இதயமும்தானே
துள்ளலாய்ப் பாடிற்று..?
"இந்த யோகம்..
நல்ல யோகம்!"
https://youtu.be/Jl4O6bpklj0
Evergreen Hero ...Everlasting songs!
Dev Anand's Birthday reminiscence!
ஹிந்தி மார்க்கண்டேயன் தேவ் ஆனந்தின் 92 வது பிறந்தநாள் நினைவஞ்சலி!
ஹாலிவுட் கிரிகிரி பெக்கின் எதிரொலியான பாலிவுட்டின் தேவ் ஆனந்துக்கு பேஸ்மென்ட் ஸ்ட்ராங் தலை மட்டும் வீக்!! ஆடிக்கொண்டே இருக்கும்!!
https://www.youtube.com/watch?v=3lVxnIAGDFk
நடிகர்திலகத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டான அமரதீபத்தின் சிவாஜி தயாரிப்பான இந்திப் பதிப்பில் தேவ் சிவாஜி ரோலில்! ஜானி மேரா நாமின் தமிழ்ப் பதிப்பில் தேவ் ரோலில் ராஜாவாக சிம்மாசனமிட்டார் நடிகர்திலகம் !
https://www.youtube.com/watch?v=sHWZbgTR1n8
அன்பு நண்பர் ரவிகிரன் சார்
உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்!
ஒரு விஷயம் நினைவிருக்கிறதா? கட்டபொம்மன் படத்துக்கு சாந்தி திரைஅரங்கு கொடுக்காமல் விக்ரம்பிரபு நடித்த இது என்ன மாயம் படத்துக்கு கொடுத்த
ஒரு சாதாரணமான விசயத்துக்கு எவ்வளவு ஆத்திரபட்டீர்கள்! இது என்ன மாயம் படம் dvd யில் கூட பார்க்க கூடாது, அந்த படத்துக்கு ஒரு ரூபாய் கூட செலவு
செய்ய கூடாது என்று நீங்கள் கூறவில்லையா? இத்தனைக்கும் விக்ரம்பிரபு சிவாஜியின் சொந்த பேரன்! ஆனாலும் உங்கள் கோபம் நியாயமானது என்று
உங்களுக்கு கைபேசியில் தொடர்புகொண்டு என் ஆதரவை தெரிவித்தேன்! உண்மை தானே சார்?
கட்டபொம்மன் சாந்தியில் வராமல் வேறு மவுண்ட் ரோடு திரையில் வெளிவந்தால் என்ன கெட்டு விட போகிறது? சிவாஜி நடித்த காலங்களில் மற்ற திரைகளில் அவர் நடித்த படங்கள் வெளியாகி 100 நாட்கள் ஓடிய நிகழ்வுகள் நிறைய உண்டே!
இதை இப்போது ஏன் சொல்லுகிறேன் என்றால் சிவாஜிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற நியாயமான உங்கள் எண்ணங்களுக்காக ஒரு மிக
சாதாரணமான விசயத்துக்காக நீங்கள் அவரின் மகன்கள் பேரன் எல்லோரையும் துச்சமென தூக்கி எறியும் போது சிவாஜியின் அரசியல் தவறுகளால் இன்றைக்கும் அவரை ஒரு mla கூட ஆக லாயக்கில்லாதவர் என்று பொதுமக்களே கேலி பேசும் போது என்னை போன்ற அவரின் உண்மையான ரசிகர்களுக்கு
நெஞ்சில் எவ்வளவு ரணம் இருக்கும் என்பது உங்களை போன்றவர்களுக்கு புரியாது!
1989 இல் mgr அவர்களை ஆதரிக்க தான் கட்சி ஆரம்பித்தார் என்றால் அந்த கட்சியிலேயே போய் சேர வேண்டியதுதானே? ஏன் சொந்தமாக கட்சி
நடத்தி தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையும் புகழையும் இழக்க வேண்டும்? பிரச்சாரத்தோடு நிற்காமல் ஏன் திருவையாறில் போட்டியிட வேண்டும்?
உங்களை போன்றவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது!
அவரின் அரசியலால் அவர் புகழ் பொதுமக்கள் மத்தியில் பெரிதும் பாதித்த நிலைதான் இன்றைக்கும் உள்ளது! மையம் திரியில் எழுதும் நம்மை போன்ற
சிலரின் எண்ணங்களை வைத்து எதையும் முடிவு செய்யவேண்டாம்! நீங்கள் மற்ற சிவாஜிரசிகர்கள், மற்ற கட்சியினர், பொதுமக்கள் போன்ற எல்லோரிடமும் உங்களுக்கு அவகாசம் கிடைக்கும் போது பேசி பாருங்கள்! நான் சொல்வது தான் எல்லோர் கருத்துமாகவும் இருக்கிறது என்ற உண்மை
உங்களுக்கு தெரியும்!
நன்றி !
கலை சார்,
தங்கள் பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
இந்த வாதம் மிகவும் நன்றாக இருக்கிறது.
மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை உயிராக மதித்த அவரது ரத்தத்தின் ரத்தமான தொண்டர்களில் ஒரு பகுதியினரே (பெரும்பகுதியினர்) தங்கள் அண்ணியார் வி.என்.ஜானகி அவர்களையும், தங்கள் தலைவரின் உயர்வுக்கு பெரும்பணி ஆற்றிய ஆர்.எம்.வீரப்பன் அவர்களையும் தோற்கடிக்க ஜெயலலிதாவின் பக்கம் நின்றபோது.......
எந்த எம்.ஜி.ஆர். அவர்களை எதிர்த்து காலமெல்லாம் தனக்காக பாடுபட்டார்களோ அந்த ரசிகர்களின் / தொண்டர்களின் உழைப்பை எம்.ஜி.ஆரின் மனைவியை அரியணையில் அமர்த்த நடிகர்திலகம் கட்சி ஆரம்பித்தாராம்.
கட்சி துவங்குவதிலும் இவர் வித்தியாசமானவர் தான்.
தமிழ்நாட்டில் அரசியல் என்றால் அது சந்தர்ப்பவாத அரசியல்தான். யார் செய்யவில்லை சந்தர்ப்பவாத அரசியல்?. எம்.ஜி.ஆர், அவர்களே 1977-ல் ஜனதாவை எதிர்த்து காங்கிரசுடனும், 1980-ல் காங்கிரசை எதிர்த்து ஜனதாவுடனும், 1984-ல் மீண்டும் காங்கிரசுடனும் கூட்டணி வைக்கவில்லையா?. கருணாநிதியும் 77-ல் ஜனதாவுடனும், 80-ல் காங்கிரசுடனும் பிற்பாடு பல சந்தர்ப்பங்களில் மாறி மாறி கூட்டணி வைக்கவில்லையா?. மக்கள் இவ்விரு கட்சிகளை நிராகரித்து விட்டார்களா?. இன்றைக்கும் தமிழகத்தில் முதலிரண்டு இடங்களை இவைதானே பிடித்து வைத்துள்ளன.
1989-ல் கருணாநிதி தருவதாக சொன்ன 35 இடங்களை பெற்று தேர்தலை சந்தித்திருந்தால் நிச்சயம் 25 இடங்களில் த.மு.மு. வென்றிருக்கும், வென்றிருக்கும், இவரும் வென்றிருப்பார். 'அரசியலில் தோற்றவர்' என்ற பழியும் ஏற்பட்டிருக்காது.
இதோ இன்றுவரை மாற்றுத்திரி நண்பர்கள் இவரை 'அரசியலில் தோற்றவர்' என்று கிண்டலடிப்பது அந்த 89 திருவையாறு தேர்தலை வைத்துதானே. யாருக்காக கட்சி ஆரம்பித்து தோற்றார், யாருடன் சேர்ந்து நின்றதால் தோற்றார், எந்த நட்புக்காக இந்த பழியை சுமந்தார் என்று அவர்கள நினைத்துப் பார்த்தால் இப்படி கிண்டலடிக்கத் தோன்றுமா?.
'புதிய தலைமுறை' என்று பெயர் வைத்து பழைய வரலாற்றுச் சுவடுகள் தெரியாமல் பண்பாளரைப் பழிக்கும் தலைமுறைக் கூட்டம் ஆதாரங்கள் தந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக மேலுக்கு ஏதோ பூசி டபாய்க்கப் பார்க்கிறது. ஆர்.கே.எஸ் ஆதாரங்களோடு சுட்டிக்காட்டியும் கூட மன்னிப்புக் கேட்க மறுக்கிறது. இந்தக் கை கொடுப்பது அந்தக் கைக்குத் தெரியாது வாழ்ந்த வள்ளல் பெருந்தகை எங்கள் திலகம்.
கரை படிந்த தலைமுறை. இந்த தடம் புரண்ட தலைமுறைக்கு புத்தி புகட்ட ஒரு சின்ன சாம்பிள்தான்.
http://i62.tinypic.com/nnaa9h.jpghttp://i59.tinypic.com/9u91sh.jpg
http://i60.tinypic.com/25s92et.jpghttp://i57.tinypic.com/1z169gy.jpg
அன்றே தலைவன் ஏழைகளின் பசியறிந்து வாரி வழங்கினானே! அவர்களுக்காகக் கவலைப்பட்டானே! விளம்பரம் விரும்பா வள்ளலாக வலம் வந்தானே!
கொளுத்துகிற வெயிலில் நடைபாதை மீதிலே
குடியிருக்கும் ஏழைகளின் துயர் தீரச் செய்யணும்
குணமுள்ள சீமான்கள் பணம் காசு உதவணும்
குடியிருக்க வீடு தந்து விளக்கேற்றி வைக்கணும்
பாடுபடும் ஏழைகள் பசியின்றி வாழவே
பணக்காரர் முன் வந்து உணவளிக்க வேணுமே
உடையின்றி வாழ்வோரின் தன்மானம் காக்கவே
உடை அளித்து அன்போடு உதவி செய்ய வேணுமே
நான் சொல்லும் ரகசியம்
கண் காணும் அதிசயம்
நன்றாக எண்ணிப் பாருங்க இதை
அவசியம்
அவசியம் அவசியம்
'புதிய தலைமுறையே'! நீயும் அவசியம் எண்ணிப்பார். இதுதான் வருந்தும் பண்பா?
https://youtu.be/nTxe-ZhwO7U
http://i59.tinypic.com/314a00p.jpg
http://i61.tinypic.com/2e49imd.jpg
http://i59.tinypic.com/1z6e1vr.jpg
http://i59.tinypic.com/25jl8k8.jpg
அன்பு நண்பர் நெய்வேலி வாசு சார்
நடிகர்திலகம் அளித்த நன்கொடைகள் விவரம் தாங்கள் பதிவு செய்தமைக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்!
நம் ரசிகர்கள் அனைவரும் ஒரு முக்கியமான காரியம் உடனே செய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்!
தங்கள் பதிவில் உள்ள விவரங்களோடு இன்றைய ருபாய் மதிப்பையும் சேர்த்து நோட்டீஸ் அடித்து அவரின் பிறந்தநாள் விழாக்கள்,மற்றும் பழைய படங்கள்
வெளியிடும் திரைஅரங்குகளில் பொது மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்! முடிந்தவரை எல்லா சிவாஜி நிகழ்ச்சிகளிலும் இதை தொடர்ந்து செய்ய
வேண்டும்! அந்த உயர்ந்தமனிதன் செய்த தர்மங்களை நாம் விளம்பரபடுத்த வேண்டியது அவசியமான ஒன்று!
சிவாஜியின் அவதாரதினம் இன்னும் சில தினங்களில் வர இருக்கிறது! நாம் அந்த நல்ல காரியத்தை தொடங்கலாம்!
நன்றி வாசு சார்
முகநூலில் இருந்து
நடிகர் திலகம் அவர்கள் விட்ட மகப்பெரிய தவறு தன்னுடன் ஒரு படப்பிடிப்பாளனையும்Quote:
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...91&oe=56A856CB
தானமும் தர்மமும் தவமும் தனி மனிதனின் ஆத்ம திருப்திக்காக உணர்வுப்பூர்வமான சந்தோஷத்திற்காக இதில் விளம்பரம் தேவையில்லை என்பது என் கருத்து அப்பொழுதும் சரி இப்பொழ...ுதும் சரி நானும் பிரபுவும் சமூக சேவைக்கும் கஷ்டப் படும் மக்களின் மேம்பாட்டிற்கும் இயன்றதை செய்து வருகிறோம் இதற்காகவே சிவாஜி பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட் என்ற தார்மீக ஸ்தாபனத்தை உருவாக்கியுள்ளோம் என் தாயார் தயாள குணமிக்கவர்கள் ஏழ்மையிலும் பிறருக்குக் கொடுத்து வாழ வேண்டும் என்பதை எங்கள் குடும்பக் கலாச்சாரமாக மாற்றி விட்டார்கள் அதையேதான் என் மனைவியும் செய்து வருகிறாள் ஆனால் எங்கள் யாருக்கும் இக்காரியங்களில் வரும் விளம்பரம் பிடிக்காது NADIGAR THILAGAM
செய்தி எழுதுபவனையும் கொண்டு திரியாதது
மக்கள்தலைவர் சிவாஜியின் அன்பு இதயங்களே, மதுரை சென்ட்ரலில் மக்கள்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 வெள்ளி முதல் வெளியாகும் உத்தமன் திரைப்படத்திற்கு நமது இணையதளத்தில் உத்தமன் கொண்டாட்டம் என்ற தனிப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் உத்தமன் திரைப்படம் தொடர்பான அனைத்து தகவல்களும் இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
http://www.sivajiganesan.in/Images/2709_4.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
மக்கள்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை சென்ட்ரல் திரையரங்கில் அக்டோபர் 2ந் தேதி முதல் நடிகர்திலகத்தின் மாபெரும் காதல் காவியம் உத்தமன் திரைப்படம் மதுரை சிவா மூவீஸ் சார்பாக வெளியிடப்படுகிறது. எப்பொழுதுமே வித்தியாசமான விளம்பரச் சுவரொட்டி மற்றும் பழைய திரைப்படங்களுக்கு புதிய திரைப்படங்களுக்கு இணையாக போட்டா காா்டு வைத்து அறிமுகப்படுத்திய மதுரை சிவா மூவீஸ் உத்தமன் திரைப்படத்திற்கு வைத்துள்ள போட்டோ கார்டு உங்கள் பார்வைக்கு....
http://www.sivajiganesan.in/Images/2709_8.jpg
மேலும் போட்டோ கார்டு காண www.sivajiganesan.in செல்லவும்.
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தில் சிவாஜி சமூகநலப் பேரவையைத் துவக்கி, மக்கள்தலைவர் புகழ்பரப்ப புறப்பட்டிருக்கும் தங்களுக்கு நமது சிவாஜிகணேசன்.இன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. அழைப்பிதழ் முகநுாலில் இருந்து....
http://www.sivajiganesan.in/Images/2709_2.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
திரும்பத் திரும்ப தங்களின் வாதத்தையே நிலைநிறுத்தி நடிகர் திலகத்தைக் குறை கூறுவதைத் தவிர வேறென்றறியேன் பராபரமே என இருப்பவர்களிடம் பேசிப்பயனில்லை.
வாசு சார்
தாங்கள் அளித்துள்ள நன்கொடைப் பட்டியலில் உள்ள ரூபாயை பாஸ்கரின் விருப்பத்திற்கேற்ப இன்றைய தேதிக்கு மதிப்பீடு செய்ய உதவும் அட்டவணை -
Year Exchange rate
(INR per USD)
1948 3.30
1949 3.67
1950 - 1966 4.76[16]
1966 7.50[16]
1975 8.39[16]
1980 7.86[17]
1985 12.38[17]
1990 17.01[17]
1995 32.427
2000 43.50[17]
2005 (Jan) 43.47[17]
2006 (Jan) 45.19[17]
2007 (Jan) 39.42[17]
2008 (October) 48.88
2009 (October) 46.37
2010 (22 January) 46.21
2011 (April) 44.17
2011 (21 September) 48.24
2011 (17 November) 55.3950
2012 (22 June) 57.15[18]
2013 (15 May) 54.73[19]
2013 (12 Sep) 62.92[20]
2014 (15 May) 59.44[21]
2014 (12 Sep) 60.95[22]
2015 (15 Apr) 62.30[23]
2015 (15 May) 64.22
2015 (19 sep) 65.87
2015(27 sep) 66.16
இதன் படி பார்த்தால் 1965ல் டாலரின் மதிப்பு 4.76, இன்றைய தேதியில் 66.16 என்கிற போது 13.90 மடங்கு பெருகியுள்ளது.
உதாரணத்திற்கு அன்று ரூ 5000 ரூபாய் இன்றைய மதிப்பில் ரூ 69,500.00.
இந்த மதிப்பீட்டின் அடிப்படை விவரம் விக்கிபீடியா இணைய தளத்தில் உள்ளது.
https://en.wikipedia.org/wiki/History_of_the_rupee
இதை வைத்து நாம் கணக்குப் போட்டுக்கொள்ளலாம்.
01.01.1972 அன்று சென்னை வானொலி நிலையத்தில் 1971ம் ஆண்டிற்கான அதிக அளவில் நேயர் விருப்பக் கடிதம் பெற்ற பாடல்களின் விவரம்..
வரிசை எண், பாடல், வந்த மொத்த விருப்பக் கடிதங்கள், பாடலைப் பாடியவர், இடம் பெற்ற படம் என்கிற வரிசையில்
1. இதோ எந்தன் தெய்வம் - 633 - டி.எம்.எஸ் - பாபு
2. அழகிய தமிழ் மகள் - 595 - டி.எம்.எஸ். பி.சுசீலா - ரிக்ஷாகாரன்
3. நிலவைப் பார்த்து வானம் சொன்னது - 117 - டி.எம்.எஸ். - சவாலே சமாளி
4. நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் - 87 - பி.சுசீலா - நூற்றுக்கு நூறு
5. அங்கே சிரிப்பவர்கள் - 83 - டி.எம்.எஸ். - ரிக்ஷாகாரன்
6. பொட்டு வைத்த முகமோ - 76 - எஸ்.பி.பாலா, பி.வசந்தா - சுமதி என் சுந்தரி
7. நீலக்கடலின் ஓரத்தில் - 70 - டி.எம்.எஸ். மற்றும் குழு - அன்னை வேளாங்கண்ணி
8. நீ இல்லாத இடமே இல்லை - 54 - எம்.எஸ்.விஸ்வநாதன் - முகமது பின் துக்ளக்
9. இன்று முதல் செல்வமிது - 51 - எஸ்.பி.பாலா, பி.வசந்தா - வீட்டுக்கு ஒரு பிள்ளை
10. வசந்தத்தில் ஓர் நாள் - 48 - பி.சுசீலா - மூன்று தெய்வங்கள்
11. கடலோரம் வாங்கிய காத்து - 48 - டி.எம்.எஸ். - ரிக்ஷாகாரன்
12. குறவர் குலம் காக்கும் - 45 - எம்.ஆர்.விஜயா - கண்காட்சி
13. முள்ளுக்கு ரோஜா சொந்தம் - 41 - பி.சுசீலா - வெகுளிப்பெண்
14. நான் போட்ட புள்ளி - 37 - டி.எம்.எஸ். - வீட்டுக்கு ஒரு பிள்ளை
15. விளக்கேற்றி வைக்கிறேன் - 34 - பி.சுசீலா - சூதாட்டம்
மொத்த விருப்பக்கடிதங்களின் எண்ணிக்கையான 2016ல் நடிகர் திலகம் திரைப்படப்பாடல்களைக் கேட்டு வந்த கடிதங்களின் எண்ணிக்கை மட்டுமே 874. கிட்டத்தட்ட 43 சதவீதம்.
இந்த நிகழ்ச்சி ஆண்டு மொத்தம் ஒலிபரப்பப்ட்ட பாடல்களின் விருப்ப அடிப்படையில் பெற்ற கடிதங்கள் பற்றிய தொகுப்பாகும்.
இது இல்லாது நேயர் தேன்கிண்ணமாக விவித் பாரதியில் வாராவாரம் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியில் சிவந்த மண்ணிலிருந்து ஒரு ராஜா ராணியடம், பார்வை யுவராணி கண்ணோவியம், பட்டத்து ராணி, நம் நாடு படத்திலிருந்து நல்ல பேரை வாங்க வேண்டும், நினைத்ததை நடத்தியே, தெய்வ மகன் படத்திலிருந்து கேட்டதும் கொடுப்பவனே என்று இருவருடைய படப்பாடல்களும் மாறி மாறி முதல் இடத்தில் வந்துள்ளன.
நீங்கள் உதாரணம் காட்டியவர்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்தால் நடிகர் திலகம் அவர்களும் செய்ய வேண்டுமா என்ன ?
செய்தால் என்ன ? என்பது தானே வாதம் ? ....இல்லை இல்லை...விதண்டா வாதம் ?
நல்ல கதையப்பா உங்கள் கதை !
உங்கள் பக்கத்துவீடுக்காரன் திருடுவதை தொழிலாக கொண்டுள்ளான்...நீங்களும் அதை செய்வீர்களா ? பக்கத்துவீடுகாரன் திருட்டு தொழிலை செய்கிறான்...தமிழகத்தில் நிறைய பேர் திருட்டு தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்...யார் செய்யவில்லை திருட்டு தொழில் ...? நீங்களும் திருடலாமே...அந்த திருட்டு தொழில் செய்யலாமே சார்..ஏன் அப்படி செய்யவில்லை ?
மன்னிக்கவும் ..நடிகர் திலகம் அப்படி செய்யமாட்டார் !
நீங்கள் சினிமா வரை அவரை பார்த்து ரசியுங்கள் போதும் அதுவும் முடிந்தால் .....அவர் அரசியல் ...அவர் இஷ்டம்...அதில் நீங்கள் தலையிட ...யாருக்கும் உரிமை இல்லை. இதனால் அவர் படம் பார்க்கமாட்டோம் என்கிறீர்களா ...பரவா இல்லை....நீங்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் அவர் வர முடியாது !
நீங்கள் நேசிப்பது அவர் கலையை ....அதை மட்டும் செய்யுங்கள் அதுவும் மனம் இருந்தால்...இல்லையா..அதுவும் உங்கள் இஷ்டம்...உங்கள் உரிமையில் யாரும் தலையிடபோவதில்லை.
Rks
இதனை இப்போது பேசி பயன் யாருக்கும் இல்லை நமது ரத்தகொதிப்பு தான் அதிகரிக்கும் என்பதே எனது நிலைப்பாடு...நடிகர் திலகம் அவர்களின் அரசியல் பற்றி பேச்சை தொடங்கினால் ..!
திரு MGR அவர்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்ததாக நினைக்க எனக்கு உடன்பாடு இல்லை. அவருடைய அரசியலில் ஒரு PLANNING 1953 முதலே இருந்தது ...ஒரு குறிக்கோள் இருந்தது ..அதாவது OBJECTIVE ..என்றாவது ஒரு நாள் நாமும்.....என்ற ஒரு PLANNING .....ஒரு DECISION ...இருந்தது..!
நமது நடிகர் திலகம் அவர்களிடம் அப்படி ஒன்றும் இருந்ததாக எனக்கு தெரியவில்லை. காரணம் 24 மணிநேரத்தில் 20 மணி நேரம் அவர் தமது தொழிலில் மிக கெட்டியாக ..மற்ற எவரை காட்டிலும் PLANNED ஆக...OBJECTIVE ஆக ...SUBJECTIVE ஆக இருந்துள்ளார்....பிறகு எப்படி அரசியலில் அந்த PLANNING OBJECTIVE SUBJECTIVE இருக்க முடியும் ?
1952 டிசம்பர் முதல் 1987 வரை திரைப்பட தயாரிப்பாளர்கள் அவரை விட்டபாடில்லை...வருடத்திற்கு 8 படங்கள் என்று இருந்தவரை ...அவரது திரைப்படங்கள் தமிழகத்தில் ஏற்படுத்தும் லாபம் மற்றும் வியாபாரம் காரணமாக வருடத்தில் 10 படம்.....13 படங்கள் ....இப்படி ஒரு GRAPH உயர்ந்துகொண்டே எப்போதும் இருந்துள்ளது....இதில் எங்கிருந்து அரசியலில் யோசிக்க நேரம் இருக்கும் ?
இத்துனை BUSY க்கு நடுவே பெற்ற இந்த TOTAL VOTES அதுவே மிக பெரிய இமாலய சாதனை சார் !
திரு MGR அவர்கள் அரசியல் வேறு...அவர் நிறைய நேரம் செலவுசெய்தார் அதற்காக...IMAGE என்ற ஒன்று கச்சிதமாக மக்கள் முன் நிறுவினார்....!
அவரை சுற்றி தம்பி, தமக்கை, அண்ணன் இப்படி ஒரே வீட்டில் 30 முதல் 40 பேர் வரை இருந்தார்களா அவர்களுக்கும் சேர்த்து சம்பாதிக்க...அவர்கள் வாழ்கையும் வளப்படுத்த...?
அப்படி இருந்திருந்தால் திரு MGR அவர்களும் நடிகர் திலகம் போல திரையுலகில் CONCENTRATE செய்திருப்பார் ...!
அவருக்கும் நடிகர் திலகம் போல நிகழ்வுகள் நடந்திருக்கும்...! முதலில் அதை புரிந்துகொள்ளுங்கள் !
Rks
நினைவலைகள்
நடிகர் திலகத்தை நான் முதன் முதலில் சற்று அருகில் பார்த்தது, 1964ம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி பாரகன் திரையரங்கில். எதிரில் இருந்த பாலர் அரங்கில் (பின்னாளில் கலைவாணர் அரங்கம்) குழந்தைகளுக்கான படங்கள் திரையிடுவார்கள். சிறியவர்களுக்கு 6 பைசா, பெரியவர்களுக்கு 12 பைசா. அந்த 6 பைசா கிடைப்பதே பெரிய விஷயம். பள்ளி 12 மணிக்கு முடிந்தவுடன் சாப்பிட்டு விட்டு எங்கள் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து, 6 பைசா டிக்கெட்டில் குழந்தைகளுக்கான படம் பார்ப்போம். அப்போது அடிக்கடி திரையிடக்கூடிய படங்கள், The Amphian Man, Operation Tiger உள்ளிட்ட அட்வென்சர் படங்கள். கூடவே நியூஸ் ரீலாக இந்தியன் நியூஸ் ரிவியூ போடப்படும்.. இதற்காகவே போவோம். பார்த்த படமாக இருந்தாலும் கூட, காரணம் கிரிக்கெட் தொகுப்பு மற்றும் ஸ்கோர் இடம் பெறும். அவ்வாறான கால கட்டத்தில் தான் உங்கள் நண்பன், சிங்க நாதம் கேட்குது படங்களைப் பார்த்தோம்.
இதே மாதிரி ஒரு நாள் குழந்தைகள் படம் பார்க்க்போனால் அன்றைக்கு படம் ஆரம்பித்து கவுண்டர் மூடி விட்டார்கள். எதிரில் உள்ள பாரகன் தியேட்டருக்கு வந்தோம். நண்பன் ஒருவன் செலவு செய்ய தயாராக இருந்தான். ஆனால் பாரகன் தியேட்டர் மூடியிருந்தது. அதற்கு முன் தான் ஆண்டவன் கட்டளை ஓடிக்கொண்டிருந்ததே, ஏன் தியேட்டரை மூடி விட்டீர்கள் என ஊழியரிடம் கேட்டதற்கு, சிவாஜி புதுப்படம் வரப்போகுது, தியேட்டரில் புதுசா சவுண்டு சிஸ்டம் போடப் போறாங்க என்று கூறினார்.உள்ளே எட்டிப் பார்த்தோம்.
அங்கே...
தொடரும்..
[quote=sundarajan;1254797]மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தில் சிவாஜி சமூகநலப் பேரவையைத் துவக்கி, மக்கள்தலைவர் புகழ்பரப்ப புறப்பட்டிருக்கும் தங்களுக்கு நமது சிவாஜிகணேசன்.இன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. [/size]/quote]
சுந்தரராஜன் சார்,
தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.
Congratulation Mr KC Sir for spreading the wings outside TN.