http://youtu.be/6T0cMP1T_U8
Printable View
அய்யய்யோ, ஆபாச பதிவுகள்,இரட்டை அர்த்த பதிவுகள்,அதிரடி பதிவுகள் இனிமேல் மாட்டேன் என்று அவசர பட்டு சத்தியம் செஞ்சு கொடுத்திட்டேன். சிந்து பைரவி ஜனகராஜ் மாதிரி தலை வெடிக்கத்தான் போகுது. இந்த நேரம் பார்த்து துரோகிகளா, குளியல் கேக்குதா உங்களுக்கு?மித்திர சத்துருக்கள்.
அடடா.. கஷ்டப்பட்டு டைப் செஞ்சு மதியம் பதிவு செஞ்சது காணாம போயிடிச்சே !
மறுபடி எங்கே தேடி எடுப்பேன் ???
ம்ஹ்ம்ம்.. அப்புறம் பார்க்கலாம் :(
டியர் வாசு சார்,
இன்றைய ஸ்பெஷல் வரிசையில் தேவரின் கெட்டிக்காரன் படத்திலிருந்து "தேன் சொட்ட சொட்ட சிரிக்கும் ஒரு திருமண மேடை கை தட்ட தட்ட துடிக்கும் இதன் கருவிழி ஜாடை" பாடலைத்தந்து அசத்திவிட்டீர்கள். உங்களுக்கு எப்படி இந்த பாடல்களெல்லாம் நினைவுக்கு வருகின்றன என்பதே ஆச்சரியப்பட வைக்கிறது. (99% காரர்கள் இதுபோன்ற பொதுப்பாடல்களை எங்கெங்கோ தேடிக்கொண்டு வந்து பதிக்கிறீர்கள். ஆனால் 1% காரர் கர்ம சிரத்தையாக தன தலைவரின் பாடல்களை அசராமல் பதித்து தள்ளுகிறார்).
கெட்டிக்காரன் வெளியானபோது நான் சின்னப்பையன். நடிகர்திலகம் படங்கள் தவிர அவ்வளவாக ஆர்வமின்மை (ச்சும்மா.., உண்மையில் பொருளாதார நெருக்கடி, எப்போதும் பற்றாக்குறை பட்ஜெட்). திரையரங்கில் படம் பார்த்த காலத்துக்கும், சிடி - டிவிடி காலத்துக்கும் நடுவே வீடியோகேசட், விசிஆர் பிளேயர் காலம் ஒன்று இருந்ததல்லவா அப்போது கெட்டிக்காரனை (தேடிப்பிடித்து) பார்த்தது.
நல்லவேளை எம்.ஏ.திருமுகம் இயக்கவில்லை. இயக்கியிருந்தால் லீலாவெல்லாம் இழுத்துப் போர்த்திக்கொண்டு வந்திருப்பார்கள். இந்தப்படத்தில் உருப்படியான சில விஷயங்களும் அடிபட்டுப் போயிருக்கும். ஹெச்.எஸ்.வேணு நம்மைப்பொறுத்தவரை இன்னொரு கர்ணன். (அதாவது இயக்குனர் கர்ணன்) . புராணக் கர்ணன் தன்னிடம் இருந்தவைகளை அள்ளி வழங்கினான். இந்த கர்ணன்களோ தங்கள் கதாநாயகிகளிடம் இருந்தவற்றை அள்ளி வழங்கினார்கள். (கார்த்திக் பதிவைப் படிக்கிறோமா அல்லது கோபால் பதிவைப் படிக்கிறோமா என்று சந்தேகம் வந்திருக்கணுமே)
தேவர், மக்கள் கலைஞர் ஜெய்யை வைத்து அக்கா தங்கை, பெண் தெய்வம், மாணவன் போன்ற அருமையான படங்களுக்கு நடுவே கெட்டிக்காரன், நேர்வழி போன்ற படங்களையும் தந்து நிழலின் அருமையை நமக்கு உணர்த்தினார். 'நேர்வழி' படத்துக்கு இசையமைத்த பி.எஸ்.திவாகர், நடிகர் ரமேஷ்கன்னாவின் மாமனாராம். ரமேஷே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
ரொம்ப பாப்புலரான பாடல்களெல்லாம் எப்போதும் சுலபமாக கிடைத்துவிடும். இதுபோன்ற பாடல்களைப் பார்ப்பதுதான் மிக மிக அரிது. அவற்றுக்கு அழகான விளக்கங்களும் தந்து அசத்துகிறீர்கள்.
(பொண்ணு மாப்பிளே படத்தின் 'மணமகன் அழகனே' பாடலுக்கு விரிவான பதில் டைப் செய்து போஸ்ட் பண்ணப்போகும் நேரத்தில் கரண்ட் கட். அவ்வளவும் போச்சு. மீண்டும் எழுதுவதற்குள் பல பக்கங்கள் ஓடிப்போய் தங்களின் அந்தப்பதிவு ரொம்ப பின்னாடி போய்விட்டது. அதனால் முயற்சியைக் கைவிட்டேன்).
தங்களின் 'இன்றைய ஸ்பெஷல்' பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை...
vasu ji..
அவனா இவன் போன வருடம் டி.வியில் ஒளிபரப்பானபோது பார்த்ததுதான். ஆரம்பத்திலிருந்து பார்க்காததால் படத்தில் "கல்யாணப் பொண்ணு கலங்காதே கண்ணு" பாட்டு வரும்போதுதான் எந்த படம் என்று புரிந்து கொண்டேன். நெட்டில் வீடியோ கிடைக்கவில்லை. கோலாலம்பூர் கொலம்பியாவிலும் இல்லை. என்னைக்காவது "மனம்விட்டு" மாட்டாமலா போய்விடும் ?
என்னவோ எல்.ஆர். ஈஸ்வரியின் பாடல்களில் இது போன்ற பாடல்கள் என்னை மிகவும் கவரும்.
மனைவி படத்தில் விஜயகுமாரியைப் பார்த்து ரமாபிரபா பாடும் இந்தப் பாடலில் ஈஸ்வரியின் குரல் கொஞ்சம் வித்தியாசமாக ஒலிப்பதாக எனக்குத் தோன்றும்
சிக்கா.. உங்க அபிப்ராயம் என்ன ?
http://youtu.be/b1vVwlhJJYo
Madhu,
Annai pola ,is one of my favourites. Thanks sir.
தலைவரின் சமூகப் படங்களில் மூன்றாவது கலர் படம். செட்தான் என்றாலும் வெளிப்புறக்காட்சி போலவே நேச்சுரலாக, நைட் எபெக்ட் தான் என்றாலும் மேதாவி இயக்குனர்கள் போல இருட்டு கிடையாது. எல்லாமே நமக்குத்தெரிவது போலவே பளிச் காட்சி.
சுருள் சுருளான சொந்த முடியுடன் பிரௌன் பேண்ட், வெள்ளை அரைக்கை சட்டையில் பதினாறு தாண்டி பதினேழு போகும் இளமையுடன் திராவிட மன்மதன். ஒல்லியான அழகான, ஆனால் சேற்றில் மலர்ந்த... ஸாரி... விழுந்த செந்தாமரையாக பாரதி (பாரிலேயே ரதி) மெல்லிசை மன்னர் ராமமூர்த்தியின் அழகான மெட்டில் பாடகர்த்திலகத்தின் டீஸிங் பாடல்.
கட்டழகு பாப்பா கண்ணுக்கு
கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு
அகப்பட்டுக்கொண்டதோ - இல்லை
சிக்கிக்கொண்டதோ
உடல் சேறானதோ சிலை போலானதோ
கடைசி பல்லவியில் ஹேன்ட் ஷவரை எடுத்து நாயகியை குளிப்பாட்ட, மேகத்துக்குள் இருந்து வெளிப்படும் வெண்ணிலாவாக பாரதி வெளிப்படும்போதுதான் என்ன ஒரு குதூகலம். (தலைவரே, இன்னும் மூன்று நான்கு படங்களிலாவது ஜோடி சேர்ந்திருக்கணும். மொக்கை விஜயாவையே கட்டிக்கிட்டு அழுதியே, நியாயமா?).
இந்தக்காட்சியின்போது பின் சீட்டிலிருந்து ஒரு தாய்க்குலத்தின் குரல் "சி.ஐ.டி.வண்டின்னா அதிலேயே குளிக்கிற வசதியெல்லாம் கூட இருக்குதடி"...
then sotta sotta- nejamagave then sottuthu. jaali pattuppa vasu.
கட்டழகை ஞாபக படுத்தி மூடை வர வழச்சுட்டாருப்பா.
டி.கே .ஆர்,கண்ணதாசன் .
டி.எம்.எஸ் ,ராமண்ணா, சிவாஜி,பாரதி, கேட்கவும் வேண்டுமோ? சிவாஜி எனக்கு பிடித்த இடத்தில் இரண்டு முறை தட்டி.....
முடிக்கும் போது ஷவருக்கு அழகாக ,தோதாக முகம் காட்டும் பாரதி.
என் வயிற்றெரிச்சலை ,நான் பேச நினைப்பதெல்லாம், கார்த்திக் பேசி விட்டாரே?
https://www.youtube.com/watch?v=TojrKH2x7lo
கார்த்திக் சார்
காதலிக்க வாங்க படத்தில் இடம் பெற்ற பாடல் .
http://youtu.be/UaCwDYkXs5k