-
பேராசிரியர் செல்வகுமார் அவர்களும் வினோத் அவர்களும் போட்டி போட்டுக் கொண்டு மக்கள் திலகத்தின் அரிய புகைப்படங்களை அள்ளி அள்ளி வழங்கி வருகிறார்கள். நன்றி.
யுகேஷ் சார் தாங்கள் பதிவிட்ட உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பின் போதான புகைப்படம் இது வரை பார்க்காதது. மிக மிக அழகான புகைப்படம். பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.
-
ஆயிரத்தின் ஒருவன் 150ஆம் நாள் விழாவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். மேலும் எங்கவீட்டுப்பிள்ளை, அன்பே வா, அடிமைப்பெண் உள்ளிட்ட பல படங்களை டிஜிட்டலில் எதிர்பார்க்கிறேன்.
-
வாலிபன்
வாலி அவர்களின் நினைவு நாள் இன்று .
மக்கள் திலகத்தின் படங்களில் பட்டுகோட்டையார் - கண்ணதாசனுக்கு பிறகு வாலியின் பாடல்கள் என்றென்றும்
நினைவில் பசுமையாக இருக்கும் என்பது உண்மை .
காதல் - வீரம் - கொள்கை - தத்துவம் என்று பல இனிய பாடல்களை வாலி வழங்கியுள்ளார்
நான் ஆண்யிட்டால் அது நடந்து விட்டால் .....
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ......
தாய் மேல் ஆணை ..தமிழ் மேல் ஆணை ....
வாங்கய்யா வாத்தியாரய்யா ......
நினைதததை நடத்தியே முடிப்பவன் .....
நான் செத்து பொழைச்சவன்டா .. எமனை ......
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் .. அது ..
நான் ஏன் பிறந்தேன் ..நாட்டுக்கு நலமென .......
காஷ்மீர் பியூட்டி புல் காஷ்மீர் .....
தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று ....
ஒரு தாய் வயிற்றில் பிறந்த..........
எம்ஜிஆரின் வெற்றிகளை பறை சாற்றிய காலத்தால் அழியாத பாடல்கள் .
வாலியின் வரிகள் ...
எம்ஜிஆர் நிஜமாக்கினார் . சரித்திரம் பதிவு செய்து கொண்டது .
பட்டுகோட்டை - காரைக்குடி - ஸ்ரீரங்கம்
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து இமயத்தை
மூன்று சகாப்த பாடலாசிரியர்கள்
முக்காலமும் எம்ஜிஆர் புகழ் பாட
அன்றே எழதி விட்டு போன பாடல்கள்
எம்ஜிஆர் அவர்களை எல்லாம் நினைவு படுத்தி கொண்டு வருகிறார் .
எம்ஜிஆருக்கு பொருந்தியது போல் பாடல்கள் வேறு எவருக்கும் நேற்றும் இல்லை - இன்றும் இல்லை - நாளையும்
இல்லை .
-
1954- மலைக்கள்ளன்
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ....... பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடல் .
எம்ஜிஆர் நாடறிந்த நாயகன் - திரை உலக வசூல் சக்கரவர்த்தி என்ற பட்ட பெயர் கிடைத்த ஜனாதிபதி விருது
கிடைத்த படம் .
1964- தெய்வத்தாய்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் . வாலியின் வரிகள் 50 ஆண்டுகளாக உலகமெங்கும் உள்ள எம்ஜிஆர் ரசிகர்கள்
உள்ளத்தில் ஒலித்து கொண்டிருக்கும் பாடல் ..
1974 - நேற்று இன்று நாளை .
திண்டுக்கல் வெற்றியை ஒரு பாடல் மூலம் ஒலிக்க செய்த பெருமை பெற்ற படம் . சம்பவம் - சரித்திரம் - சாதனை
என்று கூறிய மக்கள் திலகம் 1977ல் நிருபித்து காட்டியவர் .
1984- மரணத்தை வென்ற மக்கள் திலகம் .
மூன்றாவது முறை ஆட்சியில் அமர்ந்த மக்கள் திலகம் தன்னுடைய மூன்றாவது முறை மரணத்தை வென்ற காலம் .
1968ல் வெளியான ஒளி விளக்கு -பாடல் ''ஆண்டவனே உன் '' பிராத்தனை பாடலாக மாறிய உண்மை .
http://i59.tinypic.com/24zxk49.jpg
1994 - மக்கள் திலகத்தின் அதிமுக ஆட்சி 1991- 1996
தமிழகமெங்கும் எம்ஜிஆர் படங்கள் - இடை வெளி இல்லாமல் ஓடியது .எம்ஜிஆரின் சாமாதி புதுப்பிக்கப்பட்டது .
எம்ஜிஆர் மன்றங்கள் சிறப்பாக செயல் பட்டு வந்த காலம் .
2004-மக்கள் திலகத்தின் அதிமுக ஆட்சி 2001-2004
மக்கள் திலகத்தின் புகழ் பாடும் பத்திரிகைகள் - எம்ஜிஆர் பட விழாக்கள் என்று கொண்டாட்டங்கள் நிகழ்ந்த காலம் .
2014-மக்கள் திலகத்தின் அதிமுக ஆட்சி 2011- 2014 தற்போது நடந்து கொண்டு வருகிறது .
எம்ஜிஆரின் புகழ் - இரட்டை இலை - எம்ஜிஆர் இயக்கம் - பாராளுமன்ற தேர்தல் மூலம் ''எம்ஜிஆர் '' மாபெரும்
சக்தி என்பதை உலகம் உணர்த்தியது .மக்கள் திலகத்தின் புகழ் பாடும் பத்திரிகைகள் - எம்ஜிஆர் பட விழாக்கள் என்று கொண்டாட்டங்கள் நிகழ்ந்த காலம் .
60 ஆண்டுகளாக ஒரு தனி மனிதரின் புகழ் - திறமை - சாதனைகள் இன்றளவும் பேசப்படுகிறது என்றால் உலகில்
எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே சாத்தியம் .
எம்ஜிஆரின் ரசிகர்கள் என்று சொல்லி கொள்வதில் உள்ள பெருமை வேறு எதற்கும் ஈடாகாது .
-
-
-
-
-
-