-
உச்சகட்டம் 1980
சூர்யா ஆர்ட் films
ராஜ்பரத் direction
இன்னிசை வேந்தர்கள் இசை
சரத்பாபு சுனித ராஜ்குமார் (ஸ்ரீப்ரிய),ars நடித்து வெளி வந்தது
ராஜ்பரத்க்கு இது முதல் படம்
படத்தில் direction கார்டு விழும்போது "கெட் இன் " என்ற டயலாக் உடன் "ராஜ் பரத் " என்று வரும்
திவாரி கேமரா (கார்த்திக் சார் உங்களுக்கு பிடிக்கும்)
இரண்டே பாட்டு தான்
1.பாலாவின் குரலில் குழுவினர் துணையுடன்
"சித்தர் கூட புத்தி மாறி தத்துவங்கள் சொல்லலாம் "
மெண்டல் hospital location பாடல்
ஷங்கர் கணேஷ் இன் கலந்து கட்டிய இசை அமைப்பு
violin drum தபேல என்று களேபரம் பண்ணி இருப்பார்
பாலாவின் ஒத்துஉழைப்பு நன்றக இருக்கும்
அதிலும் பாடலின் ஊடே
"நிறுத்து நான் ஏந்தும் தேன் கிண்ணம் வாழ்க " என்று பாடும் போது
ஒரு violin பீஸ் வரும்
2. இதழின் தென் பாண்டி முத்துகள் " மலேசிய வித் ஜானகி
(ராஜ்குமார் வித் சுனிதா ப்லஷ்பக்
SG இன் தபலா துண்டா தெரியும்
இது போக "saxophone மற்றும் drum உடன்" ஒரு 2 அல்லது 3 நிமடங்கள் ஒரு பீஸ் வரும்
SG இந்த பீஸ் ஐ பின்னாடி "பணம் பெண் பாசம் " படத்தில்
"கலை மாமணியே சுவை மாங்கனியே செந்தூர செவ்வானமே "
(ஜெயச்சந்திரன் வாணி கம்போவில் ) உபயோகித்து இருப்பார்கள்
படத்தில் ஹீரோக்கு (சரத்பாபு ) பாட்டு கிடையாது
anti ஹீரோ subject
நம்ம ARS க்கு நல்ல ரோல்
படம் செம ஹிட்
ஆனால் இதற்கு பிறகு ராஜ் பரத் எடுத்த எல்லா தமிழ் படங்களும்
"சொல்லாதே யாரும் கேட்டால்,சின்ன முள் பெரிய முள் ,
தொட்டால் சுடும்" எதுவுமே எடுபடவில்லை . ஆனால் தெலுகில் எடுத்த "புலி" சூப்பர் ஹிட் (சிரஞ்சீவி நடித்து வெளி வந்தது )
-
கார்த்திக் சார்
ஜெயந்தி பற்றிய உங்கள் information அவ்வளுவும் கரெக்ட்
செம updation
நேற்று ck சார் கூட கன்னட சுந்தர் வித் பிரமிள ஜோஷி பற்றி ஒரு அப்டேட் கொடுத்து இருந்தார்
நம்ம டீம் எல்லாமே லேட்டஸ்ட் version
-
1972-ல் வெளியான பக்திப்படம் 'அன்னை வேளாங்கண்ணி' வண்ணத்தில் எடுக்கப்பட்டு எல்லோரது எண்ணத்தைக் கவர்ந்த படம். தேவரின் தெய்வம், துணைவன் போல கிருஸ்துவ பக்திப்படம். ஆனால் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அழகாக உருவாக்கப்பட்டிருந்தது. தேவராஜன் இசையில் பாடல்கள் நன்றாக அமைந்திருந்தன
'நீலக்கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம்' அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று. டி.எம்.எஸ். கோரஸுடன் இணைந்து பாடியிருந்தார்.
'கடலலை தாலாட்டும் வேளாங்கண்ணி' என்ற பாடலும் கோரஸ் பாடல்தான்.
தன் சப்பாணி மகனின் கஷ்டத்தைப்போக்கி அவனுக்கு கால்கள் குணமாக பத்மினி (சுசீலா) பாடும் 'கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ' பாடல் நம் மனதைப் பிசையும். இந்தக்காட்சியில் மாஸ்டர் சேகர் நடிப்பு அபாரம். கால்களை மடக்கியபடி கைகளை ஊன்றி நக்கரித்து நக்கரித்து வரும்போது, ஒரு கட்டத்தில் மேலும் நகர முடியாமல் தூக்கச்சொல்லி அம்மாவிடம் கைநீட்டும் காட்சி கண்களில் நீர் கட்ட வைக்கும்.
ஜெமினிகணேஷ் - ஜெயலலிதா கனவு டூய்ட் 'வானமெனும் வீதியிலே, குளிர்வாடைஎனும் தேரினிலே ஓடிவரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்' பாடல் ஜேசுதாஸ் மாதுரி பாடியது.
நட்சத்திரக் கூட்டம் நிறைந்து மனதை நிறைவாக்கிய படம் 'அன்னை வேளாங்கண்ணி'...
-
நன்றி கார்த்திக் சார் ஃபார் அப்டேட் அபெளட் அ,வே. இந்த வானமெனும் வீதியிலே எனக்கு ரொம்ப ப் பிடிக்கும்..தியேட்டரில் பார்த்த படம் ..மீனாட்சி என நினைக்கிறேன்..
பாராட்டுக்கும் நன்றி..
அப்புறம் ஜெயந்தி குறித்த தகவல்கள் நான் அறியாதது..அடடே.. இந்தக் கன்னி நதியோரம் இவ்ளோ இருக்கா..
-
உச்சக்கட்டம் ஸ்ரீதேவியில் நன்றாக ஓடியது..மேபி 50 நாள்..அந்தக் கால விகடனில் கிருஷ்ணா சார்..ஏகத்துக்கு பில்டப் கொடுத்து 13 ரீலில் நல்ல படம் எனச் சொன்னதாலும் கூட.. ரொம்ப ஓஹோ இல்லாவிட்டாலும் ஓகே..ஒய்.ஜி.எம் சரத்பாபு,சுனிதா..என நினைவு..
அடுத்த படம் சொல்லாதே யாரும் கேட்டால் அதே ஸ்ரீதேவி தியேட்டர்..ரொம்ப எதிர்பார்த்துப் போய் ஏமாந்தது..ராஜ்பரத்தின் மற்ற எல்லாமும் சுமார் ரகம் அண்ட் மோர் வயலன்ஸ்.. நன்றிகிருஷ்ணா சார்..
-
வணக்கம் கிருஷ்ணா சார்,
அனைத்தையும் அனுபவித்து படித்துக் கொண்டிருக்கிறேன்.
சும்மா கில்லி.
உங்கள் உச்சக்கட்டம் டாப்போ டாப். அருமயான அலசல்.
அப்போது இப்படத்தின் ரீரிகார்டிங் வேறு மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
ராஜ்பரத் தன் தனித்தன்மையை நிரூபணம் செய்து பின் வீணானார்.
-
'உச்சக்கட்டம்' சுனிதா பரவாயில்லை. அந்த காலகட்டத்தில் ஒருமாதிரியான மலையாளப் படங்கள் வந்து கொண்டிருந்தன. wine and women என்ற ஆங்கிலப் பெயரிலேயே ஒரு மலையாளப் படம் வந்தது படு கவர்ச்சிகரமான காட்சிகளுடன். (ம்ம்.. கிருஷ்ணாஜி என்ன சொல்லப் போறாரோ!)
அதில் சுனிதா பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாள காமெடி ஆக்டர் ஜகதீ ஸ்ரீகுமார் சுனிதாவின் கணவராக மனைவியை சந்தேகப்படும் ரோலில் மதுவுக்கு அடிமையானவராக நடித்திருந்தார்.
இதழில் தென்பாண்டி முத்துக்கள் பாடலை வீடியோவாக பார்க்க முடியாவிட்டாலும் ஆடியோவாக கேட்கலாம். நன்றாகவே இருக்கிறது.
https://www.youtube.com/watch?featur...&v=ZOqHeA3S0uY
-
டியர் கார்த்திக் சார்
"அன்னை வேளாங்கண்ணி " தங்கப்பன் மாஸ்டர் எடுத்த ஒரு நல்ல படம்
கமல் கூட இந்த படத்தில் உதவி டைரக்டர் ஆக பணி புரிந்ததாக நினவு
பாடகி மாதுரி MD தேவராஜன் சார் வேலை செய்த எல்லா படத்திலும் ஒரு பாடல் பாடுவார் (லைக் குமார் வித் ஸ்வர்ணா) .
மாதுரியின் வாய்ஸ் கொஞ்சம் சைலஜா ஜாடையில் இருக்கும் (என்னுடய கணிப்பு may be wrong )
"வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சின் இளமை ராகம்
பாட வந்ததோ பருவ ராகம் "
பருவகாலத்தில் வந்த மிக இனிமையான பாடல்
இந்த பருவகாலம் 1974 ரிலீஸ் என்று நிநேகிறேன்
ஜுபிட்டர் ஆர்ட் films
ஏ.எஸ் பிரகாசம் வசனம்
பெர்னாண்டோ இன்னு ஒருத்தர் டைரக்ட் செய்தார் என்று நினவு
ஸ்ரீகாந்த் ,சுப்பையா,சசிகுமார்,சுதர்சன்,ரோஜாரமணி,பிரமீள,க மல் என்று ஒரு பெருங்கூட்டமே நடித்து இருக்கும் . கமல் தான் வில்லன் ஆக வருவர்
இந்த படத்தில் ஐய்யப்ப பாடல் ஒன்று கூட நினவு உண்டு
அப்ப எல்லாம் சபரி மலை சீசன் க்கு இந்த பாடல் தான் பாடுவார்கள்
பாடல் வரி மறந்து விட்டது
இவர்கள் குரலில் இன்னும் ஒரு பாடல் கேட்டு இருக்கிறேன்
"ப்ராநேசன் எங்கே பதில் சொல் " (வெள்ளி ரதங்கள் போன்றே )
என்ன படம் என்று தெரியவில்லை
-
கிருஷ்ணா சார்,
'பருவகாலம்' படத்தில் வரும் அந்தப் பாடல் இதுதான்
சரணம் ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா
சபரிமலைநாதா
சாமி சரணம் ஐயப்பா
சாமி சரணம்
ஐயப்பா சரணம்
பம்பா நதி தீர்த்தமாடி
உள்ளுறங்கும் ஆத்மஜோதி தன்னை உணர்த்தி
இப்படி வரும்.
ஏன்! வீடியோவாகவே கண்டு களியுங்களேன்.
http://www.youtube.com/watch?v=_labMNf5S4k&feature=player_detailpage
-