http://i66.tinypic.com/6du368.jpg
Printable View
சூர்யா, கார்த்தி பங்கேற்ற எம்ஜிஆர் புத்தக வெளியீட்டு விழா
சில தலைவர்கள் மறைந்த பிறகும் எத்தனை ஆண்டுகள் , எத்தனை காலங்கள் ஆனாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள். அப்படி மறைந்த பிறகும் மக்கள் மனதில் எப்போதும் குடிகொண்டிருக்கும் ஒரே தலைவர் புரட்சி தலைவர்.
அவரை பற்றிய பல அறிய தகவல்களை எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்த பொது ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த கற்பூர சுந்தரபாண்டியன் ‘நான் கண்ட எம்.ஜி.ஆர்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். அப்புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சூர்யா, கார்த்தி, லதா, அம்பிகா, மயில்சாமி போன்ற நடிகர் நடிகைகள் மற்றும் வி.ஜி.சந்தோசம், ஏ.சி.சண்முகம் இதயக்கனிவிஜயன்,வள்ளி நாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
இப்புத்தகத்தின் முதல் பிரதியைவி.ஜி.சந்தோசம் வெளியிட ஏ.சி.சண்முகம் பெற்று கொண்டார் .இந்நிகழ்வில் ஏ.சி.சண்முகம் பேசுகையில், எம்.ஜி.ஆரின் மிக தீவிரமான ரசிகரான என்னை போன்றவர்களுக்கு கற்பூர சுந்தரபாண்டியன் எழுதியுள்ள இந்த புத்தகமும் மிகபெரிய விருந்து. எம்.ஜி.ஆருடன் கற்பூர சுந்தரபாண்டியன் உறவு பற்றி எவ்வளவோ பேசலாம் . எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்த போது ஐஏஎஸ் அதிகாரியாக கற்பூர சுந்தரபாண்டியன் இருந்தார். அவர், அவருடைய பணியை முடித்து இரவு வீட்டிற்கு செல்ல மிகவும் தாமதமாகிவிடும். இரவு எம்.ஜி.ஆருடன் உணவருந்திவிட்டு தான் அவர் வீட்டிற்கு செல்வார்.இப்படி நிறைய நிகழ்வுகளை சொல்லிக்கொண்டே போகலாம் என்றார் சண்முகம் .
கற்பூர சுந்தரபாண்டியன் பேசுகையில்,நான் இந்த புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று நினைத்த போது புரட்சி தலைவர்க்கு நெருக்கமான யாரவது தான் வெளியிட வேண்டும் என்று நினைத்தேன்.மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை மலேசியாவில் நடத்திய வி.ஜி.ந்தோசம் மற்றும் சென்னையில் பிரமாண்டமாக நடத்திய ஏ.சி.சண்முகமும் அவ்விழாவிற்கு என்னை அழைத்து சிறப்பித்தார் .
இப்புத்தகத்தில் புரட்சி தலைவரை பற்றி யாரும் அறியாத பல விஷயங்களை ஒன்றாக தொகுத்துள்ளேன்.எம்.ஜி.ஆர் மதுரையில் நடந்த அகில உலக எம்.ஜி.ஆர் மன்ற பேரணி அணிவகுப்பில் அப்போது கலந்து கொண்டார் .பேரணி மற்றும் மாநாட்டை துவக்கி வைக்க விழா மேடை ஏறும் பொது எம்.ஜி.ஆர் அங்கே மோர் விற்கும் மூதாட்டி ஒருவரை பார்த்தார்.அதை அருகில் இருந்த நானும் பார்த்தேன்.பேரணியில் அணிவகுத்து செல்லும் தொண்டர்களை பார்த்து கையசைக்கும் அவர் பின்னால் திரும்பி பார்த்தார் .அந்த இடத்தில் அந்த மூதாட்டி இல்லை. உடனே அவரிடம் சென்று அந்த மோர் விற்கும் மூதாட்டியை அழைத்து வரவா என்றேன் அவரும் மகிழ்ச்சியுடன் சரி என்றார் .
அங்கே இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் சொல்லி அந்த மோர் விற்க்கும் பாட்டியை அரை மணி நேரத்தில் அழைத்து வந்தேன் . எம்.ஜி.ஆர் முகத்தில் அவ்வுளவு மகிழ்ச்சி .அந்த பாட்டியின் அருகே சென்று அதன் பையில் இருந்த பணம் எவ்வுளவு என்று கூட எண்ணாமல் ஒரு கட்டு ரூபாய் நோட்டுகளை அள்ளி கொடுத்தார் .கொடுத்துவிட்டு ஏதாவுது கடை வைத்து பிழைத்துக்கொள்ளுங்கள் என்றார் .அதுதான் எம்.ஜி.ஆர் இதை போன்ற அவரை பற்றி யாருக்கும் தெரியாத விஷயங்கள், நான் அருகிலிருந்து பார்த்த பல விஷயங்கள் இந்த புத்தகத்தில் உள்ளது என்றார் .
https://s14.postimg.cc/9xau1x7ox/IMG_8540.jpg
நன்றி - மக்கள் குரல்
நாடோடி
மன்னன்
25-வது
வெற்றி
விழாவில்
கலந்து
கொண்ட
ரிஷி மூவிஸ் நாகராஜ்
அவர்களிடம்
பேசியபோது
உலகம்
சுற்றும்
வாலிபன்
வரும்
மே 19 முதல்
தமிழகமெங்கும்
பவனி
வர
உள்ளார்
என்ற
தித்திக்கும்
செய்தியை
பகிர்ந்து
கொண்டார்.
ஒரு பாடல்
தங்கத்தோணியிலே
இடைவேளையில்
திரையிட்டார்கள்
அசத்தல்.
மக்கள் திலகம் வசூல் சக்ரவர்த்தி "நினைத்ததை முடிப்பவன்" திருநெல்வேலி- ரத்னா அரங்கில் 3 நாட்களில் மட்டும் ஒரு லட்சம் ரூபாயை தாண்டியுள்ளதாக நண்பர் தகவல், பல சென்டர்களில் புரட்சி நடிகர் காவியங்கள் வெற்றி முகம் காண்கிறது, மகிழ்ச்சி பரவட்டும் நம் ரசிக உடன் பிறப்புகளுக்கு...
-15/4/18 மக்கள் குரல்
http://i64.tinypic.com/2zpk41u.jpg
தின செய்தி -16/4/18
http://i64.tinypic.com/nx2hp2.jpg