-
இன்று காலை 7-12-2019 வீட்டில் விஜய் டிவி நிகழ்ச்சியை காண நேர்ந்தது, அதில் கமலஹாசன் திரையுலக பிரவேசம் செய்து 60ஆண்டுகள் ஆனதையொட்டி பாராட்டு விழா, சத்தியராஜ் பேசும்போது
" இந்த சாதனை யாராலும் செய்யமுடியாத உலக சாதனை "
என்று பேசினார், இதை கேட்ட எரிச்சலில் இந்த பதிவு, தமிழ்த்திரையுலக சாதனை சரித்திரத்தை படைத்தவரே மக்கள் திலகம் எம்ஜிஆர்தான் என்பதை மறந்துவிட்டு என்னன்னவோ உளருகிறார்கள், அன்றைய சினிமா விலிருந்து இன்றைய சினிமாவரை யார் யாரோ சாதனை படத்திருக்கலாம், ஆனால் புரட்சி தலைவரின் சாதனையை யாராவது படைக்கமுடியுமா..?
இன்று சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என்று பீற்றிகொள்ளும் நடிகர்களே உங்களின் நேற்றைய பிரமாண்ட படங்களை இன்று வெளியிட்டு நூறு நாள் ஓட்டமுடியுமா ..?
புரட்சி தலைவரின் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன் வெளியான படங்கள் இன்று வெளியிட்டாலும் நூறு நாள் ஓடுகிறதே..! இந்த ஒரு சாதனையை இன்றுள்ளவர்களால் முறியடிக்கமுடியுமா..?........... Thanks mr.Hussain...
-
கோவை சண்முகாவில் க்யூப் இயந்திரம் பழுதடைந்ததாலும் , ஏற்கனவே திரையிடப்பட்ட படத்திற்கு கூட்டம் இல்லாததாலும்* , பிரிண்ட் இயந்திரம் மூலம் இன்று (08/12/19) மேட்னி காட்சி முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "முகராசி " தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது .
தகவல் உதவி: நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .
-
திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி தனது நடிப்பை, கலையை மக்களுடைய நல்வாழ்விற்கு அர்ப்பணித்து, வியாபார ரீதியிலான சினிமா உலகை மனசாட்சியின் படி நடந்து தான் நடித்த திரைப்படங்களை, திரை காவியங்களாக உயர்த்தி, அன்றும், இன்றும், இனி என்றென்றும் பிரயோஜனமாக ஆக்கி எப்பொழுதும் வாழும் நம் மக்கள் திலகம் அவர்களின் தரமான சினிமா & அரசியல் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள்... திரையாட்சியின் வசூல் நிலவரங்கள் உட்பட பல்வேறு தொகுப்புகள் அடங்கிய கருத்து பெட்டகமாக உருவாக்கி கொண்டிருக்கும் திரு பம்மல் சாமிநாதன் வழங்கும் ஆல்பம் துரிதமாக தயாராகி கொண்டிருக்கிறது எனும் சிறப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.........
-
கடந்த வெள்ளி முதல் (06/12/19)* காஞ்சிபுரம் பாலசுப்ரமணியாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி ;திரு.ராமு, தங்கசாலை, சென்னை** * * * * * * * * * * * * * *திரு.செல்வராஜ், ஆட்டோ இயக்குனர்,காஞ்சிபுரம்*
-
-
-
-
-
-
-
-
எம்.ஜி.ஆரும்..! பாரதிராஜாவும்..!
“மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அரசியலில் எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ...
அப்போதெல்லாம் பாரதிராஜாவை அழைத்து சினிமா உலகம்பற்றி மனம்விட்டுப் பேசி ரிலாக்ஸ் செய்துகொள்வார்” என்று ரஜினி பாரதிராஜாவுக்கும் எம்.ஜி.ஆருக்குமான நட்பு பற்றி பாராட்டிப் பேசியிருந்தார்.
எம்.ஜி.ஆர் உடனான நட்பு பற்றி இயக்குநர் பாரதிராஜா...
”நான் சினிமாவில் இயக்குநராவதற்கு முன் ஒரு தயாரிப்பாளர் அலுவலகத்தில் இருந்தேன்.
ஒருநாள் திபுதிபுவென பலர் அந்த தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, ‘சின்னவர் வருகிறார்… சின்னவர் வருகிறார்… ‘ என்று பயங்கர பரபரப்பு.
அப்போது அலுவலக வளாகத்தில் படகுபோல ப்ளைமவுத் கார் வந்து நின்றது. காரிலிருந்து ஆயிரம் சூரியன் ஜொலிப்போடு குல்லா, கறுப்புக் கண்ணாடியுடன் மல்லிகைச் சிரிப்போடு எல்லோரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி எம்ஜி.ஆர் வந்திறங்கினார்.
‘இவருக்கு யார் சந்திரன் என்று பேர் வைத்தது, சூரியன் என்றல்லவா பெயர் வைத்திருக்கவேண்டும்’ என்று நினைத்தபடி ஆச்சர்யம் அகலாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
அருகில் வந்ததும என் கைகள் தன்னிச்சையாக அவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டது.
ரோஜா மலரின் வாசத்தோடு ராஜா மாதிரி எங்கள் அலுவலகத்துக்குள் வந்தார். பிற்காலத்தில் நான் அந்த ராஜகுமாரனின் பாசத்துக்கு ஆளாவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை.
அன்று அவரது அன்பில் வீழ்ந்த என்னையும் அவரையும் பின் 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதிவரையிலும் எந்தக் கொம்பனாலும் பிரிக்க இயலவில்லை.
தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் இருந்த ப்ரிவ்யூ தியேட்டரில் என் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை எம்.ஜி.ஆருக்குத் திரையிட்டுக் காட்டினேன்.
அப்போது எம்.ஜி.ஆர் முதல்வர். எனது படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு என்ன விமர்சனம் சொல்லப்போகிறாரோ என்கிற பதைபதைப்போடு தியேட்டர் வாசலில் காத்திருந்தேன்.
படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தவர், நேராக என் அருகில் வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டார்.
“அஞ்சு பத்து ‘அண்ணா’க்கள் செய்ய வேண்டிய பகுத்தறிவுப் பிரசாரத்தை ஒரே படத்தில் சாதித்துக் காட்டிட்ட. என் படத்துல நான் சொல்லத் தயங்குற பல விஷயங்களை தைரியமாப் படமாக்கியிருக்க. பாராட்டுக்கள்” என்று கூறியபடி என்னை கட்டியணைத்துக் கொண்டார்.
ஒருமுறை எம்.ஜி.ஆர் தலைமையில் சென்னை விஜயசேஷ மஹாலில் நடந்த கல்யாணத்துக்கு என்னையும் அழைத்து இருந்தனர்.
எம்.ஜி.ஆர் என்னைப் பார்த்துவிட்டு உதவியாளர் மூலம் மேடைக்கு அழைத்தார். திடீரெனப் பேசவும் சொல்லிவிட்டார்.
‘எங்கள் கிராமத்தில் இருக்கும் சினிமா கொட்டகையில் ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தைப் பலமுறை பார்த்துப் பிரமித்தவன் நான்.
ஒருமுறை எம்.ஜி.ஆர் எங்கள் கிராமத்துக்கு வந்தார். எப்படியாவது அவரது சில்க் ஜிப்பாவைத் தொட்டுவிடவேண்டும் என்பது எங்களுக்குள் போட்டி, கடைசியாக நான் தொட்டுவிட்டேன்’ என்று நான் பேசியபோது பச்சைக்குழந்தை மாதிரி எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே இருந்தார்.
அதன்பிறகு அவருடைய கண்கள் கடைசியாகப் பார்த்த படம் ‘வேதம் புதிது’. ‘வேதம் புதிது’ திரைப்படம் வெளிவந்துவிடக்கூடாது என்று சிலர் கட்சி கட்டிக்கொண்டு வேலை பார்த்தனர், என்னென்ன உள்ளடி வேலைகள் செய்யவேண்டுமோ, அனைத்தையும் செய்தனர்.
அப்போது ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமனிடம் போனில் பேசி, எனக்காக உரிமையுடன் சண்டை போட்டு அந்தப் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் வாங்கிக் கொடுத்தவர், எம்.ஜி.ஆர்............. Thanks.........
-
சின்னத்திரை புகழ் ஸ்ரீராம் அவர்களின் கீதரஞ்சனி* குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி* சென்னை தி.நகர் , பி.டி.தியாகராயர் அரங்கில் இன்று (08/12/19) பிற்பகல் 3.30 மணியளவில்* நடைபெற்றது .* பிரபல பின்னணி பாடகர் கோவை முரளி மற்றும் இதர பாடகர்கள்* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்பட பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர் . நிகழ்ச்சியில் கீழ்கண்ட பாடல்கள் இசைக்கப்பட்டன :*
1. தாயில்லாமல் நானில்லை* - அடிமைப்பெண்*
2.ஒன்றே குலம் என்று பாடுவோம் - பல்லாண்டு வாழ்க*
3.நாளை நமதே* - நாளை நமதே*
4.நீங்க நல்லா இருக்கோணும் - இதயக்கனி*
5.பனியில்லாத மார்கழியா* - ஆனந்த ஜோதி*
6.நினைத்ததை நடத்தியே முடிப்பவன்* - நம்நாடு*
7.அழகிய தமிழ்மகள் இவள்* - ரிக் ஷாக்காரன்*
8.காஷ்மீர் பியூட்டி புல் - இதயவீணை*
9.குமாரி பெண்ணின் உள்ளத்திலே* - எங்க வீட்டு பிள்ளை*
10.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ* - சந்திரோதயம்*
11.பால் வண்ணம் பருவம் கண்டு* - பாசம்*
12.பொன்னெழில் பூத்தது புதுவானில்* - கலங்கரை விளக்கம்*
13.ஆயிரம் நிலவே வா* - அடிமைப்பெண்*
14.நீ என்னென்ன சொன்னாலும் கவிதை* - நேற்று இன்று நாளை*
15.எங்கிருந்தோ ஆசைகள்* - சந்திரோதயம்*
16.தொட்டால் பூ மலரும்* - படகோட்டி*
17..பதினாறு வயதினிலே* - அன்னமிட்டகை*
18.அவள் ஒரு நவரச நாடகம்* - உலகம் சுற்றும் வாலிபன்*
19.பாட்டுக்கு பாட்டெடுத்து* - படகோட்டி*
20.விழியே கதை எழுது* - உரிமைக்குரல்*
-
*எனக்குப் பிடித்த மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர்*
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று பாடலுக்கு உயிர் கொடுத்து இறவாப் புகழுடன் இதய தெய்வமாக மக்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி அவரது ரசிகனாக தொண்டராக பக்தராக பல தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் மலேசியா சிலாங்கூர் டாக்டர் எம்ஜிஆர் கொள்கை இயக்கத்தின் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் கமல்ராஜ் தெரிவித்துக் கொள்ளும் அன்பு வணக்கம் .
அன்றும் இன்றும் என்றென்றும் வானத்தில் இருப்பது ஒரு சந்திரன் , மக்கள் உள்ளத்தில் இருப்பது ஒரு சந்திரன் அவர்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் .
அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக என் உயிரோடும் உணர்வுகளோடும் கலந்து என் வாழ்க்கைப் பாதைக்கு வாத்தியராக இருந்து வழிகாட்டியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் . அவர்கள்தான் என்றால் அது மிகையல்ல .
எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்து எட்டு வயது சிறுவனாக இருந்த காலம் முதலாக நான் பார்த்த எம்ஜிஆர் அவர்களின் திரைப்படங்கள் என்னை மிகவும் கவர்ந்தன .
நம்மைப் பெற்ற தாய் தந்தையர்கள் நமக்கு சொல்லும் நல்ல அறிவுரைகளை வாழ்க்கை நெறிமுறைகளை பின்பற்றி நாம் நடப்பதில்லை அவர்கள் சொல்லும் அறிவுரைகளை நாம் மிகவும் ஆர்வமாகக் கேட்பதும் இல்லை .
தாய் தந்தை சொல் கேட்பதனால் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கைப் பாதையில் அடையக்கூடிய வெற்றிகளை தன்னுடைய திரைப் படங்களில் அருமையாகப் படம்பிடித்து மக்கள் மனதில் எளிதில் பதியும் வண்ணம் காட்டியிருப்பார் புரட்சித்தலைவர் .
தனக்குகொரு கொள்கை
அதற்கொரு தலைவன்
அதற்கொரு பாதை
அதற்கொரு பயணம்
உனக்கென வேண்டும்
உணர்ந்திடு தம்பி
உழைத்திட வேண்டும்
கைகளை நம்பி . என்று
தன் திரைப்பட பாடல்களில் இளைய தலைமுறைக்கு வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழி காட்டுவார் .
நீதிக்குப் பின் பாசம்
தர்மம் தலை காக்கும்
திருடாதே
என்று அவர் நடித்த
திரைப்படங்களின் தலைப்புகளையே மக்கள் உள்ளங்களில் எல்லாம்
எளிதில் பதியும் வண்ணம் நல்ல போதனையாக தந்தார் .
புரட்சித்தலைவர் மக்கள் உள்ளத்தில் ஒரு உயர்ந்த இடத்தை பிடிக்க அடிப்படையாக அவரது படங்களின் தலைப்புகளே அமைந்து இருந்தன .
மக்களும் இவரை எங்கள் வீட்டுப் பிள்ளை எம்ஜிஆர் எங்கள் தங்கம் எம்ஜிஆர் அண்ணாவின் இதயக்கனி எம்ஜிஆர் என்று நெஞ்சார வாழ்த்தி மகிழ்ந்தார்கள் . அந்த பெயர்களிலும் தலைப்புகளாக கொண்டு திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு அந்தத் திரைப்படங்களும் வெற்றிகரமாக ஓடி வசூலில் சாதனை படைத்தன . தமிழ் திரைப்பட உலகின் முன்னனி கதாநாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் .
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நடிக்கும் திரைப்படங்களில் ஏழையாக நடித்தாலும் , செல்வந்தராக நடித்தாலும் , மன்னனாக நடித்தாலும், நடோடியாக நடித்தாலும், தொழிலாளியாக நடித்தாலும், முதலாளியாக, நடித்தாலும் தன்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை தவறாமல் வழங்குவார்.
அவருடைய திரைப்படங்களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மது அருந்தும் காட்சிகளிளோ புகைப்பிடிக்கும் காட்சிகளிளோ நடிக்கவே மாட்டார் .
புரட்சித்தலைவரின் திரைப்படங்களைப் பார்த்துதான் நானும் இன்னும் என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் புகைப் பிடிக்கும் பழக்கத்தையோ மது அருந்தும் பழக்கத்தையோ ஏற்றுக் கொள்ளமாட்டோம் .
மலேசியாவில் சிறப்பாகச் செயல்படும் டாக்டர் எம்ஜிஆர் கொள்கை இயக்கத்தின் தலைவர் நான் . எங்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் முக்கிய கொள்கையே ஊத்த மாட்டோம் ( குடி )
ஊத மாட்டோம் ( புகை )
என்பதுதான் .
புரட்சித்தலைவர் தன்னுடைய திரைப்படங்களைப் பணம் சம்பாரிக்கும் தொழிலாகப் நினைக்காமல் சமுதாயத்திற்கு நல்ல கருத்துகளைச் சொல்லும் மேடையாக பயண்படுத்தி அதில் மிகப்பெரிய வெற்றியும் கண்டார் .
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் செல்லும் இடங்களில் எல்லாம் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் மக்கள் வெள்ளம் திரண்டது .
எம்ஜிஆர் நடந்தால் ஊர்வலம் நின்றால் மாநாடு என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் மக்கள் செல்வாக்கை சிறப்பாக புகழ்ந்துரைத்தார் .
அரசியலில் ஈடுபட்ட புரட்சித்தலைவர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவராக இருந்த சமயத்தில் நடைபெற்ற தேர்தலின் பொழுது பேரறிஞர் அண்ணா அவர்களிடம் கட்சிக்கு தேர்தல் நிதியாக ஒரு பெரும் தொகையை வழங்கினார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ராமச்சந்திரா நீ கொடுத்த தேர்தல் நிதியை விட திமுகழகத்திற்கு உன்னுடைய பி்ச்சாரம்தான் முக்கியம் உன் முகத்தை காட்டினாலே முப்பதாயிரம் ஓட்டுகள் கழகத்திற்கு கிடைத்திடும் என்று புகழ்ந்து பேசிய அண்ணாவின் கருத்தை மக்கள் உண்மை என்று ஒவ்வொரு தேர்தலிலும் நிரூபித்தார்கள் .
அண்ணா அவர்களின் மறைவுக்குப் பின்னர் திமுக கட்சியிலிருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிரடியாக நீக்கப்பட்டார் .
அதுவரை புரட்சிநடிகராக அவரைக் கொண்டாடிய தமிழ்நாடு புரட்சித்தலைவராக எம்ஜிஆரை ஏற்றுக் கொண்டது . அஇஅதிமுக என்ற கட்சியை துவக்கி அதன் தலைவரானார் . அதன் பின்னர் நடைபெற்ற தின்டுகல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் அஇஅதிமுக மாபெரும் வெற்றியைப் பெற்றது.
அதன் பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக கட்சி அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்தது. புரட்சித்தலைவர் தமிழகத்தின் முதலமைச்சராக ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான மக்களின் முதல்வராக பணியாற்றினார் .
தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வென்று மூன்று முறை முதல்வர் என்ற சாதனை படைத்தார் .
யாரும் எதிர்பாராத தருனத்தில் உடல் சுகவீனமுற்று மண்னை விட்டுப் பிரிந்தாலும் இன்றும் மக்கள் உள்ளங்களில் இதய தெய்வமாக வாழ்ந்து வருகின்றார் .
நன்மை செய்வதே என் கடமையாகும் என்று எட்டாவது வள்ளலாக வாழ்ந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் . அவர்கள் பத்தொன்பதாவது சித்தராக மறைந்தும் மறையாது மக்கள் உள்ளங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் .
புரட்சித்தலைவரின் அதிதீவிர ரசிகராக இருந்த நான் அவரது தொண்டராக பல நற்பணிகளை எங்கள் பகுதி மக்களுக்குச் செய்து வந்தேன் . அவரது மறைவுக்குப் பின்னர் தமிழகம் செல்லும் ஒவ்வொரு முறையும் தலைவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவேன்.
அதன் பின்னர் அவர் வாழ்ந்த ராமாபுரம் தோட்டத்தில் உள்ள அவரால் உருவாக்கப்பட்டு இருக்கும் ஊமைகள் செவிடர்கள் பள்ளியில் நல்ல தரமான உணவுகளை அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு வழங்குவேன் .
2014ஆம் ஆண்டு மலேசியாவின் புகழ்பெற்ற மேடை கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்து , காமராஜர் அரங்கத்தில் புரட்சித்தலைவர் அவர்களின் 97 வது பிறந்தநாள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி என்னுடைய தலைமையில் ஒரு பிரமாண்டமான விழாவை நடத்தினோம் . அதே விழாவில் மலேசிய அரசாங்கத்தின் மூலம் புரட்சித்தலைவருக்கு தபால் தலையும் வெளியிட்டோம். அந்த விழாவிற்குப் பின்னர்தான் டாக்டர் .கமல்ராஜ் ஆகிய நான் டாக்டர் .எம்ஜிஆர் கமல்ராஜ் என்று புரட்சித்தலைவரின் பக்தர்களால் அழைக்கப்பட்டேன் .
ஒரு முறை நான் புரட்சித்தலைவரின் தோட்டத்திற்குச் சென்ற பொழுது என்னுடைய உடல் சிலிர்த்தது, அது போன்ற உணர்வை நான் என் வாழ் நாளில் பெற்றதில்லை.
புரட்சித்தலைவர்தான் உங்களை ஆசிர்வதிக்கின்றார் என்று அங்கே இருந்தவர்கள் சொன்ன பொழுது என் கண்களில் நான் அறியாமலேயே ஆணந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அன்று இரவு என் கனவில் தோன்றிய புரட்சித்தலைவர் உன்னுடைய நற்பணிகளை ஒரு இயக்கமாக தொடங்கினால் சிறப்பாகச் செய்யலாம் என்று குறிப்பிட்டார் .
அவரது வழி காட்டலிலும் ஆசிர்வாதத்தாலும் தோன்றியதுதான் மலேசியா சிலாங்கூர் டாக்டர் எம்ஜிஆர் கொள்கை இயக்கம் .
புரட்சித்தலைவர் அவர்களின் அருள்வாக்கின் படி உருவாக்கப்பட்ட டாக்டர் எம்ஜிஆர் கொள்கை இயக்கம் மூலம் சிறப்பான நற்பணிகளை ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உலகமெங்கும் வாழும் புரட்சித்தலைவரின் பக்தர் உள்ளத்திலும் தனி இடம் பிடித்து வருகின்றோம் .
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார் ?
என்று பாடிய எங்கள் புரட்சித்தலைவரின் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் .
நன்றி , வணக்கம் ............ Thanks.........
-
மதுரையில் திருமண வரவேற்ப்பு விழாவில் கல்கண்டு ஆசிரியர் திரு . லேனா தமிழ்வாணன் அவர்கள் மக்கள் திலகம் பட்டம் கொடுக்கப்பட்டது பற்றியும் மக்கள் திலகத்தை பாராட்டி பேசிய வீடியோ தொகுப்பு மற்றும் புகைப்படங்கள் இதில் மதுரை ராமகிருஷ்ணன் கலந்து கொண்ட தொகுப்பு.......... Thanks.........
-
-
மாலை மலர் -சிறப்பு மலர் - 10/12/19
-------------------------------------------------------
நடிகர் ரஜினிக்கு மிகவும் பிடித்தமான தலைவர் எம்.ஜி.ஆர். ஒருமுறை எம்.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழாவில், சென்னையில் சினிமாக்காரன் என்றால் வீடு வாடகைக்கு தரமாட்டார்கள் .* ஆனால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நம்பி இந்த நாட்டையே கொடுத்து இருக்கிறார்கள் என பாராட்டி பேசினார் .**
-
நடிகர் ரஜினியின் பட தயாரிப்பில் பங்குதாரர்களில் ஒருவராக இருந்தவர் திரு.பத்மநாபன் .ரஜினியுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவர் .* சரியாக சொல்ல போனால் இந்த பத்மநாபன் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி .* எம்.ஜி.ஆருக்காக*உயிரையும் விட தயங்காதவர்* என்கிற முறையில் எம்.ஜி.ஆரின் அன்பை பெற்றவர் . எம்.ஜி.ஆருக்காக வாழ்ந்து அவர் மறைந்த சில மாதங்களில் , அதே கவலையில் இறந்தும் போனார் .* எம்.ஜி.ஆர். நாடக கம்பெனி தொடங்கி நடத்திய போதே உடனிருந்தவர் இந்த பத்மநாபன் .* எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு கால கட்ட வளர்ச்சியிலும் உடனிருந்தவர் . எம்.ஜி.ஆர். வளர்ந்து புகழ் பெற்ற நேரத்தில் அவருக்கு வலதுகரமாக திகழ்ந்தவர் .* எம்.ஜி.ஆர். வெளியூர் போகின்ற நேரங்களில்* கூடும் திரளான ரசிகர்கள் கூட்டத்தில் எம்.ஜி.ஆரை பூப்போல தாங்கி கூட்டத்தை தனது கட்டுகோப்பால் ஒழுங்கு படுத்தியவர் .*
எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்து முதலமைச்சர்* ஆனபோதும் அவருடன் இருந்தார் .* பத்மநாபனுக்கு 6 பெண்கள்.* குடும்ப சூழ்நிலையும் சொல்லி கொள்கிற மாதிரி இல்லை* என்பதை தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். இவருக்கு உதவ விரும்பினார் . சிகிச்சைக்காக அமேரிக்கா சென்று திரும்பிய பின்னர் , சரளமாக பேச முடியாத சூழ்நிலையில் பத்மநாபனை அழைத்த எம்.ஜி.ஆர். சைகை மூலமாக தனது உதவும் நோக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் .* ஆனால் அந்த உதவியை கண்ணீருடன் மறுத்த பத்மநாபன் , உங்கள் நலம் மட்டுமே என் சொத்து .* எனக்கு அதுவே போதும் என்று கூறிவிட்டு வந்துவிட்டார்.* இரண்டொரு நாளில் எம்.ஜி.ஆர். மறைந்துவிட , அதன் பிறகு வாழ்ந்த ஒன்றிரண்டு மாதங்களும் மிக சிரமத்தோடு வாழ்ந்து இருக்கிறார் .* எம்.ஜி.ஆரின் மீது விசுவாசம் வைத்தவரின் சுவாசம்* அவரை எண்ணியே போய்விட , ஆறு பெண்களுடன் பத்மநாபனின் மனைவி தவித்து வருகிறார் . இந்த விஷயங்கள் தனது கலை நண்பர்கள் மூலம் தனக்கு தெரிந்ததாக நடிகர் ரஜினி கூறினார் . தலைவருக்கான விசுவாசத்தை மட்டுமே காட்டி, அவர் மூலம் கிடைக்கவிருந்த வளமான எதிர்காலத்தையும்*துச்சமாக கருதிய பத்மநாபன் ஏற்படுத்திய பிரமிப்பு தான் அவரை பங்குதாரர் ஆக்கியதாம் .
-
-
-
இனிய காலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!..........
ப*ழ*ம்பெரும் ந*டிகை சவுக்கார் ஜான*கியின் 88வ*து (12/12/1931) பிற*ந்த* தின*ம் இன்று.
இவ*ர் மக்கள் திலகத்துட*ன்" ப*ணம் ப*டைத்த*வ*ன்", "தாய்க்குத் த*லைமகன்", "ஒளிவிளக்கு", "பெற்றால்தான் பிள்ளையா", ஆகிய ப*ட*ங்க*ளில் ந*டித்துள்ளார். "ஒளிவிளக்கு" ப*ட*த்தில் ந*டித்த*த*ற்கு சிற*ந்த* ந*டிகை ப*ட்ட*மும் பெற்றுள்ளார். அப்ப*ட*த்தை ப*ற்றிய ஒரு சிற*ப்பு க*ட்டுரை...
மக்கள் திலகம் ந*டித்த 100 வ*து வெற்றிப்ப*டைப்பு "ஒளி விளக்கு". 1968ல் வெளியாகி (20-09-1968) 100 நாட்க*ளுக்கு மேல் ஓடி, இப்போதும், எப்போதும் திரையிட்டாலும் ச*லிப்பு த*ட்டாத* அர*ங்கு நிறைந்த* காட்சிக*ளுட*ன் ஓடும் ப*ட*ம்.
இப்ப*ட*ம் 1966ல் ஹிந்தியில் வெளியான "பூல் அவ*ர் ப*த*ர்" (பூவும், பாறையும்) ப*ட*ம் த*ர்மேந்திராவிற்கு முத*ல் வெள்ளி விழா ப*ட*ம். இவ*ர் எம்ஜிஆரின் வேட*த்தை ஏற்றிருந்தார். மீனாகுமாரிக்கு ச*வுகார் ஜான*கி வேட*ம், ஷசிக*லா- ஜெய*லலிதா, மத*ன்பூரி-அசோக*ன், ஓ.பி.ரெஹ*லான் (சோவின் பாத்திர*ம்- மற்றும் இப்ப*ட*த்தின் க*தாசிரிய*ரும் இவ*ரே). இசைய*மைப்பு ர*வி.
ஒளிவிளக்கு ப*ட*த்தை ஜெமினி ஸ்டூடியோ அதிப*ர் வாச*ன் த*மிழில் த*யாரிக்க முடிவு செய்து எம்ஜிஆரை அணுகினார். எம்ஜிஆர் அவ*ர்க*ள் நீண்ட யோச*னைக்குப்பின் சில திருத்த*ங்க*ள் செய்வ*த*ற்கு அனுமதித்த*வுட*ன் ஒத்துக் கொண்டார்.
எம்ஜிஆர் செய்த* திருத்த*ங்க*ள் ஒளிவிளக்கு ப*ட*த்தையும், ப*ட*த்தின் கேர*க்ட*ர்க*ள், விறுவிறுப்பு இவ*ற்றை இன்னமும் அதிக*ப்ப*டுத்தின. அவ*ற்றை காண்போமா!
1. த*ர்மேந்திரா சிறுவ*னாக இருக்கும்போதே பிக் பாக்கெட் அடிக்கும் திருட*னாக*வும், திருட்டு தொழிலை விரும்பி செய்ப*வ*ராக*வும் வ*ருவார். மற்றும் புகை, குடிப்ப*ழ*க்க*ம் தாராளம்.
எம்ஜிஆர் இப்ப*ட*த்தில் சிறுவ*னாக இருக்கும்போது ப*சிக்கு க*டையொன்றில் ரொட்டியை திருடி மாட்டிக்கொள்வார். பின்ன*ர் திருட*னாக மாறிய*த*ற்கு ப்ளாஷ் பேக் காட்சி உண்டு. ருக்மணி பேங்க்கில் அசோக*ன், ஜெய*லலிதா மற்றும் த*ன் கூட்டாளியுட*ன் கொள்ளை அடிக்கும்போது அதை த*டுத்து ப*ணத்தை மீட்பார். அப்போது ப*ணப்பையுட*ன் எம்ஜிஆர் போலீஸிட*ம் மாட்டிக்கொண்டு த*ண்ட*னையும் பெறுவார். பின்ன*ர் வெளிவ*ந்த*தும் இன்ஸ்பெக்ட*ரிட*ம் உண்மை குற்ற*வாளிக*ளை காட்டுகிறேன் என்று கிளப்பிற்கு கூட்டிச்செல்வார். அந்த* முய*ற்சி தோல்விய*டைய பின் ஜெய*லலிதா த*ங்கியுள்ள அறைக்கே சென்று அவ*ரிட*ம் விசாரிப்பார். அப்போது ந*ட*க்கும் ச*ண்டையில் கொலைப்ப*ழி ஜெய*லலிதா மீது விழ அவ*ரைக் காப்பாற்ற அசோக*ன் சொல்ப*டி திருட்டு தொழில் செய்வார். பின் ஒருக*ட்ட*த்தில் ஜெய*லலிதாவையும் அந்த பொய்யாக ந*ட*ந்த* கொலைக்கான ஆதார*த்தை அசோக*னிடமிருந்து மீட்டு கொடுத்துவிட்டு செல்வார். மொத்த*மாக சுமார் 40 நிமிட*ங்க*ள் ந*டைபெறும் இக்காட்சி இந்தியில் கிடையாது.
2. எம்ஜிஆரை, ஜெய*லலிதா அசோக*னின் தூண்டுத*லால் ஒரு காட்சியில் குடிக்க* வைத்துவிடுவார். அதை த*வ*று என்று ர*சிக*ர்க*ள் உண*ரும்வ*ண்ண*ம் "தைரிய*மாகச் சொல் நீ மனிதன்தானா?" என்ற பாடல்மூலம் கூறுவார். இப்பாட*லும் இந்தியில் இல்லை.
3. க*ள்ளபார்ட் ந*ட*ராஜ*ன் எம்ஜிஆரை ரோட்டில் பார்த்துவிட்டு போலீசுட*ன் துர*த்தி வ*ருவார். அப்போது ஜெய*லலிதாவுட*ன் சேர்ந்து எம்ஜிஆர் ஓடி குற*வ*ர்க*ள் கூட்ட*த்தின் உத*வியுட*ன் த*ப்புவார். நாங்க புதுசா க*ட்டிக்கிட்ட சோடிதானுங்க என்ற* பாட*லும் சூப்ப*ராக இருக்கும்.
இந்தியில் இதே காட்சி ந*கைச்சுவை ந*டிக*ர் ரெஹ்லான் (பிக்பாக்கெட் வேட*த்தில் சோ) வைத்திய*ரிட*ம் த*ப்பி ஓடி த*ன் காத*லியுட*ன் மாறுவேட*மிட்டு பாடி ஆடுவ*துபோல் வ*ரும்.
4. கிளைமேக்ஸ் ச*ண்டையில் கிளப் டான்ச*ராக வ*ரும் ஷசிக*லா (ஜெய*லலிதா) மத*ன்பூரியால் கொல்லப்ப*டுகிறார். அவ*ர் போலிசால் சுட*ப்ப*ட்டு இற*க்கிறார். மீனாகுமாரியை (ச*வுகார் ஜான*கி) த*ர்மேந்திரா மண*ந்து கொள்கிறார்.
த*மிழில் ச*வுகார் ஜான*கி உயிர் துற*க்கிறார். எம்ஜிஆரும் ஜெ.வும் ஒன்று சேர்வார்க*ள்.
இப்ப*ட*த்தில் ச*வுகார்ஜான*கிக்கு 1968ஆம் ஆண்டின் சிற*ந்த* ந*டிகை விருது த*மிழ*க அர*சால் வ*ழ*ங்க*ப்ப*ட்ட*து.
" ஓளிவிளக்கு", ப*ட*மான*து 1979ல் மலையாள மொழியில் "புதிய வெளிச்ச*ம்" என்ற பெய*ரில் வெளியாகி வெற்றி பெற்ற*து. எம்ஜிஆரின் வேட*த்தை ஜெய*ன் அவ*ர்க*ளும், ச*வுகாரின் வேட*ம் ஸ்ரீவித்யாவும், ஜெய*லலிதாவின் வேட*த்தை ஜெய*பார*தியும் ஏற்று ந*டித்த*ன*ர்........... Thanks.........
-
கோவை டிலைட்டில் நாளை வெள்ளி முதல்* (13/12/19)* புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த தேவரின் "விவசாயி " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : கோவை நண்பர் திரு.கமலக்கண்ணன்*
-
மதுரை சென்ட்ரல் சினிமாவில்* நாளை வெள்ளி முதல் (13/12/2019) முன்னாள் தமிழக முதல்வரும் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் அன்பு மனைவியுமான* திருமதி*வி.என். ஜானகி நடித்த "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது ,
தகவல்* உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .
-
குமுதம் வார இதழ் -18/12/19
வாலிப வாலி நூலில் கவிஞர் வாலி.
---------------------------------------------
எம்.ஜி.ஆர். முதன் முறையாக நாகிரெட்டி தயாரிப்பில் ஆக்ட் பண்ண படம்தான் எங்க வீட்டு பிள்ளை.* அந்த படத்துக்கு பாட்டு எழுத எம்.ஜி.ஆர். சொல்லி நாகிரெட்டியின் பி.ஏ. ராதாகிருஷ்ணன்* என்னை தேடி வந்தார் ..அந்த படத்துல*நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்கிற பாடல் மிக பிரபலம் ஆனது .
ஆனா , முதல்ல நான் எழுதினது நான் அரசன் என்றால் , என் ஆட்சி என்றால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார் .என்றுதான் ரிக்கார்ட் பண்ணினோம் . இந்த பாட்டை நாகிரெட்டி கேட்டுவிட்டு இது ரொம்ப அரசியல்தனமா இருக்குன்னார் .அப்போ காங்கிரஸ் கவர்ன்மென்ட் நடந்துட்டு இருந்தது . அப்போ நாகிரெட்டியோட நண்பர் ஒருத்தர் சென்சார் ஆபீஸ்ல இருந்தாரு.* வேணும்னா அவர்கிட்ட முதல்லே போட்டுக் காட்டிடலாம்னு சொன்னார் .நாங்களும் அவர்கிட்ட* அந்த முழு பாடலை போட்டுக் காண்பித்தோம் .* அவர் அந்த பாட்டில் இருந்து பத்து வரிகளை நீக்கிவிட்டார் .
உடனே நாகிரெட்டி என்னை கூப்பிட்டு பாட்டை மாத்தணும்னு சொன்னார்.உடனே, நான் எம்.ஜி.ஆர். கிட்ட போய்* அந்த சென்சார் ஆபீசர் பத்து வரிகளை இந்த பாட்டில் இருந்து நீக்க சொல்கிறார் , என்ன பண்ணலாம்னு* கேட்டேன்.* அதுக்கு எம்.ஜி.ஆர். அந்த பாட்டை படித்து பார்த்துவிட்டு , நானா இருந்தா இந்த பிள்ளையார் சுழியை தவிர எல்லா வரிகளையும் நீக்கி இருப்பேன்னு சொன்னார் .* வேறு பாட்டும் எழுத சொன்னார் .* அப்போ பேரறிஞர் அண்ணா ஓர் மீட்டிங்கில் பேசின ஒரு வசனம் என் ஞாபகத்திற்கு வந்தது ,* நான் ஆணையிட்டால், தமிழ்நாட்டில் எந்த ரயிலும் ஓடாது ன்னு* பேசுவார்.* அந்த வார்த்தையை நான் எடுத்துக் கொண்டேன்* *இப்படி நான் எழுதின வரிகளை மாற்றித்தான் அந்த பாடல் வெளியாகி* பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து மிக பிரபலம் ஆனது .
-
MGR .,ன் "உலகம் சுற்றும் வாலிபன் ",திரைப்படம்(திரைக்காவியம்) கருணாநிதியின் குள்ளநரித்தனத்தையும் தாண்டி எப்படி ரிலீஸ் ஆனது தெரியுங்களா?..........
அந்த படத்தை MGR தனது டைரக்*ஷனில், தனது தயாரிப்பில், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக எடுத்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்?
ஆனால் அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி இந்த படத்தின் கதை அமைப்பை உரிய ஆட்கள் மூலம் மோப்பம் பிடித்து, இந்த படம் வெளியானால் MGR இன்னும் சுலபமாக முதல்வராகி விடுவார், என்று கணக்கிட்டு இந்த படம் வெளிவராமல் தடுக்க அனைத்து உத்திகளையும் தயாராக வைத்து இருந்தார்.
இந்த விசயம் படத்தின் financial ஐ கவனிக்கும் இராம வீரப்பன் மூலம் இறுதிகட்ட படப்பிடிப்பில் ஜப்பானில் இருக்கும் MGR அறிகிறார்.
சரி நான் பார்த்துகொள்கிறேன் என்று, படத்தின் எடிட்டர் குழுவை நேரே பம்பாய்க்கு வரச்சொல்லி, படச்சுருள்களும் நேரே அங்கு கொண்டுசெல்லப்பட்டு அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.
தியேட்டர் ஓனர்கள் கருணாநிதியின் மிரட்டலையும் மீறி நாங்கள் வெளியிடுகிறோம் தலைவா என்று 1.05.1973. தொழிலாளர் தினத்தன்று வெளியிட தேதி முடிவாகிறது.ஆனால் ரகசியம் காக்கப்படுகிறது MGR வேண்டுகோளின்படி.
இப்பொழுது தான் ஒரு வரலாற்று முக்கிய நிகழ்வை MGR செய்கிறார்.இந்த படத்தில் பணியாற்றாத கவிஞர் வேதாவை மும்பைக்கு அழைத்து, சூழ்நிலையை விளக்கி அவரே ஒரு சில வாக்கியங்களை ( நீதிக்கு இது ஒரு போரட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும்,...நமை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் என்னும் கதை மாறும் போன்ற வரிகளை)சொல்லி, ஒரு பாடல் எழுதுங்கள் என்கிறார்.
இதனிடையே இராம வீரப்பன் மூலம் M.S.விஸ்வநாதனையும், சீர்காழி கோவிந்தராஜனையும், மும்பைக்கு வரவழைத்து இந்த பாடலுக்கு இசை போடச்சொல்கிறார்.MSV க்கு சொல்லியா தரணும்.ஒரு சரித்திர பாடல் உருவாகிறது.
எடிட்டர் உமாநாத் இந்த பாடலை எங்கு எப்படி இணைப்பது என்று குழம்புகிறார்.அதையும் எம்.ஜி.ஆரே தீர்த்து, எடுத்தவுடனே எழுத்து ரீல் ஓடாம கொஞ்சம் படத்தை ஓட விட்டு பிறகு இணைக்கிறார்.
படம் பார்த்தவங்களுக்கும், இப்பொழுது பார்க்க நினைப்பவர்களுக்கும் புரியும். இந்த பாட்டு படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் தெரியும்,ஒரே ஒரு போட்டோவின்மீது தான் மொத்த பாடலும் நகரும்....அந்த பாடல் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்று ஆரம்பிப்பதாக இருந்தது, அதையும் நமது என்பதை நீக்கி #வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்று பாடவைக்கிறார்.
இந்த விசயம் கருணாநிதிக்கு தெரியாமல் காக்கப்படுகிறது.
தி.மு.க.வினரை அந்த அந்த தியேட்டர் முன்பு நிறுத்தி மே 1 அன்று படம் திரையிடப்படாமல் பார்த்து கொள்ளும் வேலைகள் கன கச்சிதமாக கருணாநிதியால் ஏற்பாடாகிறது.
இந்த விசயமும் மும்பைக்கு போகிறது.ஏற்கெனவே பெரிய சைசில் போஸ்டர்கள் அடித்து ஒட்டியதின் மேல் சிறிய அளவு போஸ்ட்டரை 11.5.1973 அன்று ரிலீஸ் என்று ஒட்டச்சொல்கிறார்.படப்பெட்டிகளுடன் சென்னை வருகிறார் M.G.R.
கருணாநிதி வழக்கல்போல் அன்றைய தேதியில் தன் கட்சிக்காரர்களை என்ன செய்ய வேண்டுமோ அந்த ஏற்பாடுகளுடன் அங்கங்கு செல்ல பணிக்கிறார். 10 ம் தேதி இரவு படப்பெட்டிகள் அனைத்து ஊர்களுக்கும் போய் சேர்ந்தன.
சென்னை மவுண்ட் ரோடு தேவி பாரடைஸும் படம் ரிலீசாகும் தியேட்டர்களில் ஒன்று. தியேட்டரின் வெளி வாசலில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ஆவலோடு கூடி எப்பொழுது விடியும் என்று காத்து இருக்கிறார்கள். தி.மு.க.வினரும் அப்படியே கூடுகிறார்கள் ரகளை செய்து ரிலீஸை தடுக்க.
அலங்கார் தியேட்டரும் அதே மவுண்ட் ரோடில் 5 அல்லது 6 பில்டிங் தள்ளி உள்ளது.இந்த தியேட்டரில் வேறுபடம் ஓடிக்கொண்டிருக்கிறது,ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லை, இரவு இரண்டாம் காட்சிக்கு டிக்கட் எடுத்து உள்ளே போனவர்களுக்கு எடுத்த எடுப்பிலே வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்று படம் ஆரம்பிக்கிறது.படம் பார்ப்பவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை? பிறகு தான் புரிந்தது நாம் பார்ப்பது நாளை ரிலீசாக வேண்டிய உலகம் சுற்றும் வாலிபன் படம் என்று!!! ஆச்சர்யம் அதிசயம் மக்கள் ஆரவாரம் வெளியே தெரியவரும்போது நடந்த கூத்தை எழுதி மாளாது...
11.05.1973 அன்று குறிப்பிட்ட அனைத்து தியேட்டர்களிலும் முறைப்படி ரிலீஸ் செய்யப்பட்டு சிறந்த படம்,சிறந்த டைரக்*ஷன்,சிறந்த தயாரிப்பு என 3 விருதுகளை வாங்கியது.(கருணாநிதி அலங்கார் தியேட்டர் ஓனர், மேதா,சீர்காழி இவர்களை எப்படி பழிவாங்கினார் என்பதை தனிப்பதிவாகவே எழுதலாம்.அது இப்ப வேண்டாம்)
சென்னை தேவி பாரடைஸ்....182 நாட்கள்
சென்னை அகஸ்தியா.............176 நாட்கள்
மதுரை மீனாட்சி........................217 நாட்கள்
திருச்சி பேலஸ்..........................203 நாட்கள்
கோவை ராஜா...........................150 நாட்கள்
கொழும்பு கேப்பிடல்............................203 நாட்கள்...தமிழ்நாடு 20, பெங்களூர் (கர்நாடகா) 3, ஸ்ரீலங்கா 2 மொத்தத்தில் 25 திரையரங்குகளில் 100 நாட்கள்...
என ஓடி சரித்திரம் படைத்தது.
கருணாநிதியின் சூழ்ச்சியை வீழ்த்தி எப்படி தனது படத்தை எம்.ஜி.ஆர். வெளியிட்டார் என்பதற்காக மட்டும் நான் இந்த பதிவை போடவில்லை.கருணாநிதியின் நிஜ முகம் இது தான் என்பதை காட்டத்தான் போட்டேன்.
காரணம் அன்று அடையார் கேன்சர் ஆஸ்பிடலில் அண்ணா இறந்தவுடன் யார் முதல்வர் என்ற சர்ச்சையின் போது, எம்.ஜி.ஆரிடம் சென்று, என்னை ஆதரிப்பதாக நீங்கள் ஒருவர் சொன்னால்போதும், மற்றவர்களை நான் சமாளித்துக்கொள்கிறேன் என்று வேண்டிய கருணாநிதி தான்.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியவுடன் தனது எதேச்திகாரத்தனத்தை எம்ஜி.ஆர். எதிர்க்கிறார் என்றவுடன், நன்றி மறந்து எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கியதோடு அவரை அனைத்து விதத்திலும் அழிக்க முயன்றார்.
அனைத்தையும் தரையில் அடிக்கப்பட்ட பந்து போலவும்,நீரில் அமுக்கப்பட்ட பந்து போலவும்,சுவரில் மோதப்பட்ட பந்து போலவும் எதிர்கொண்டு எழுச்சி கண்டார் என்பதையும் நாடறிந்ததே. அதனால் தான் தலைமுறை கடந்து இன்றும் சரித்திர நாயகனாக மக்கள் மனதில் வாழ்கிறார்...நன்றி.(நண்பரின் பதிவில் இருந்து...)............ Thanks.........
-
-
-
-
-
-
மக்கள் திலகம் எம.ஜி.ஆர். இந்திய மொழிகள் பலவற்றில் திரைப்படமாக எடுக்கப்பட்ட "தேவதாஸ்" படத்தை தமிழில் எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டும் என்றாராம் வாலி. அதற்கு எம்.ஜி.ஆர்,
"ஆண்டவனே!(எம்.ஜி.ஆர் வாலியை இப்படி அழைப்பாராம்) எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு..அது - நானா முயன்று முன்னின்று உருவாகிக் கொண்டதல்ல..படத்துக்குப் படம் அது இயற்கையா எற்பட்டுடுச்சு...கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், நீங்க - இப்படி கவிஞர்களும், நான் கருத்தாழம் மிக்க பாடல்களைப் பாடற மாதிரியே எழுதிடீங்க..எந்த பாட்டுலயும் சமூகத்துக்கு ஒரு சேதி இருக்கற மாதிரி பாடிட்டு ஒரு குடிகாரனா கதைக்கே தேவைப்பட்டாலும் நான் வந்தா எப்படி? இயல்பாவே எனக்கு அந்த பழக்கம் கிடையாது! குடிகாரனா நடிக்கிறது வேற;குடிச்ச மாதிரி நடிக்கிறது வேற..நான் இந்த ரெண்டாவது வேஷத்தை பல படத்துல பண்ணியிருக்கேன் - அதுவும் வில்லனின் வில்லங்கங்களை கண்டுபிடிக்க...நீங்க பார்த்து இருக்கலாம்..அவன் மதுக் கிண்ணத்தை என் கிட்ட கொடுத்தா கூட, அதை பக்கத்துல இருக்கற பூந்தொட்டில கொட்டிட்டு - சாப்ட மாதிரி சமாளிப்பேன்.."
எம்.ஜி.ஆர்.அவ்வளவு தூரம் தன்னிலை விளக்கம் தந்தும் வாலி விடவில்லையாம். "அண்ணே!நீங்களும் சிவாஜியும் சேர்ந்து நடிச்ச படம் 'கூண்டுக்கிளி';விந்தனோட கதை வசனத்துல, ராமண்ணா டைரக்க்ஷன்ல வந்த படம்..அதுல - நீங்க சிகரெட் பிடிக்கறீங்களே - ஒரு காட்சில? அது எப்படி?
எம்.ஜி.யார் சொன்னாராம், "அப்பல்லாம் - நான் பொது வாழ்க்கைல அவ்வளோ தீவிரமா ஈடுபடல...ஒரு நல்ல நடிகன்..ஒரு நல்ல மனிதன் - என்கிற அளவிலதான் என்னைப் பற்றி அபிப்பிராயம் இருந்தது..வளர வளர "வாத்யா"ராயிட்டேன் - உழைக்கும் வர்க்கத்துக்கு ! அந்த சிகரெட் பிடிக்கிற சீன் கூட - பின்னாளில் அந்த படத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது!"
எம்.ஜி.ஆரின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டாராம் கவிஞர் வாலி ............ Thanks.........
-
திரு.ராஜீவ் காந்தி பிரதமராகஇருந்தபோது, தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமரை சந்திக்க. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். டெல்லி சென்றார். தமிழக அரசு அதிகாரிகளை அழைத்து, ‘‘எல்லா பள்ளிபிள்ளைகளுக்கும் சீருடை வழங்க பிரதமரிடம் மாநில அரசின் சார்பில் நிதி கேட்கலாம் என்று இருக்கிறேன். எவ்வளவு தேவைப்படும் என்று கணக்கிட்டு வாருங்கள்’’ என்று எம்.ஜி.ஆர்.கூறினார். அதிகாரிகள் கணக்கிட்டு 120 கோடி ரூபாய் தேவை படுவதாக தெரிவித்தனர்.
ராஜீவ் காந்தியுடனான சந்திப்பின் போது எம்.ஜி.ஆரின் மற்ற எல்லாக் கோரிக்கைகளையும் அவர் ஏற்றுக் கொண்டார்.சீருடைத் திட்டத்துக்கு மானியம் வழங்குவதைமட்டும் ஏற்கவில்லை. ‘‘பின்னர் பார்க்கலாம்’’ என்று கூறிவிட்டார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. ‘‘தமிழ்நாட்டுக்கு மானியமே வேண்டாம்’’ என்று எழுந்துவிட்டார்.
பிறகு, தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த எம்.ஜி.ஆரை பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஆர்.கே.தவான் தொடர்பு கொண்டு ‘‘மாலையில்வேண்டுமானால் நீங்கள் மீண்டும் பிரதமரைசந்திக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார். ராஜீவை மீண்டும்சந்திக்க புறப்படும் முன் அதிகாரிகளிடம், ‘‘பிரதமர் நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் பார்ப்போம். இல்லாவிட்டால் தமிழக அரசின் நிதி நெருக்கடியை மக்களிடம் சொல்லி வீட்டுக்கு கொஞ்சம் பணம் வாங்கி நாமே சீருடைத் திட்டத்தை செயல்படுத்துவோம்" என்றார் எம்.ஜி.ஆர்.!
ஆனால், அதற்கு அவசியம் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆர். மீது கொண்டிருந்த அன்பு, மதிப்பு காரணமாக மத்திய அரசின் சார்பில் மானியம் வழங்க ராஜீவ் காந்தி சம்மதித்துவிட்டார். ‘‘சிறுவயதில் ஒரு வேளை சோற்றுக்கும் ஒரு ஜோடி துணிக்கும் எவ்வளவு கஷ்டப் பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும். அதனால்தான் சத்துணவோடு சீருடையும் கொடுக்க விரும்புகிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.
இந்த திட்டங்களை யெல்லாம் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அவர் சொன்னதில்லை.......... Thanks.........
-
#முதுமையை #வென்ற #வாத்தியார்........
எம்.ஜி.ஆர் எப்போதும் எந்தப் பேட்டியிலும் பேச்சிலும் தன் வயதைக் குறிப்பிட்டுச் சொல்ல மாட்டார். ‘அது உங்களுக்கே தெரியும்’ என்று பொதுவாகச் சொல்லிவிடுவார். ஆனால், தன் ரசிகர்களின் ஆதரவு தனக்கு இருப்பதை அழுத்தமாகச் சொல்லி விமர்சனக்காரர்களின் வாயை மூடிவிடுவார்.
அதேவேளையில், படத்தில் இளமையாகத் தோன்றுவதற்கு என்னென்ன தேவையோ அவற்றை மிகச்சரியாகச் செய்துவிடுவார். அந்த வகையில் தன் பிம்பம் சிதையாமல் பார்த்துக்கொள்வார். தன் திரைப் பிம்பம் வெறும் மாயை அல்ல, அதில் உண்மையும் உண்டு என்பதை அவ்வப்போது வெளியே வரும் வேளைகளில் சில வீரதீர சாகசங்களை நிறைவேற்றி உறுதிப்படுத்திவிடுவார்.
அவர் தன் எதிரிகளோடு போராடி ஜெயித்த அதே வேளையில், தன் வயதோடும் வயோதிகத்தின் பலவீனங்களோடும் போராடி ஜெயித்தார். `மீனவ நண்பன்’ [1977] படத்தில் கடற்கரை மணலில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் வாள் சண்டைபோடும் காட்சி எடுக்கப்பட்டது. ஒரு ஷாட் முடிந்ததும் ஓரமாகப் போய் அமைதியாக நின்றுகொள்வார். அவருக்கு மூச்சுவாங்குவது மற்றவருக்குத் தெரியாமல் இருப்பதற்காக அவர் இவ்வாறு சிறிது நேரம் யாரோடும் பேசாமல் நிற்பாராம். `மீனவ நண்பன்’, எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகு 1977-ம் ஆண்டில் வெளிவந்தது.
எம்.ஜி.ஆர் ., வயதான காலத்திலும் தனக்கு வாய்ப்பு வந்தால் அதற்கு, தான் தகுதி உடையவனாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறு வயதிலேயே குஸ்தி, சிலம்பம், பளுதூக்குதல். உடற்பயிற்சி ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். ஐசோமெட்ரிக் பயிற்சிக்குரிய கருவி வாங்கக் காசு இல்லாத காரணத்தால், ஒரு மரத்தில் குனிந்து சாய்ந்து நின்று அந்தப் பயிற்சியைச் செய்து வயிற்றையும் மார்பையும் வனப்பாக வைத்திருந்தார்.
பளுதூக்குவதில் சாண்டோ சின்னப்பா தேவர் மற்றும் நம்பியாரைத் தோற்கடிக்கும்வகையில் அதிக பளுதூக்கிக் காட்டுவார்.
இதனால்தான் ‘அன்பே வா’ படத்தில் ‘ஃபைட்டிங் புல்’ என்ற வீரரை அவரால் உயரே தூக்கி கீழே எறிய முடிந்தது. வேறு பல சண்டைக் காட்சிகளிலும் அவர் வில்லனையும் ஸ்டண்ட் ஆள்களையும் முதுகில் தூக்கி கீழே எறிவது அவருக்கு சிரமமில்லாமல் இருந்தது.
கடின முயற்சிகளை மேற்கொண்டு, வாத்தியார், மற்ற நடிகர்கள் போல் வெறும் மேக்கப்பினால் தன் இளமையைக் காண்பிக்காமல், உடலை வலுவாக்கும் கடின உடற்பயிற்சிகளை மேற்கொண்டு முதுமையை வென்று, தனது 60 வயதிலும், 20 வயதுடைய இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் தன் இளமையை நிரூபித்துக்காட்டினார் என்றால் அது மிகையாகாது............ Thanks..........
-
இன்று பிறந்த நாள் கொண்டாடும் மதுரை நண்பர் திரு.எஸ். குமார் அவர்கள் இன்று* போல் என்றும் எல்லா வளமும் , நலமும் பெற்று ,இன்புற்று, பல்லாண்டு காலம் வாழ்க என என் சார்பிலும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு , சென்னை சார்பிலும் நல்வாழ்த்துக்கள்.
-
நாளை ஞாயிறு முதல் (15/12/19) ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும்*மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் " படகோட்டி " நீண்ட இடைவெளிக்கு பிறகு*தூத்துக்குடி சத்யா அரங்கில் தினசரி 3 காட்சிகளில்* வெள்ளித்திரைக்கு வருகிறது .
தகவல் உதவி :நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .
-
வரும் வெள்ளி முதல் (20/12/19) ஏழைகளின் இதயதெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவுநாள் முன்னிட்டு* ,மதுரை அனுப்பானடி பழனி ஆறுமுகாவில்*மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக நடித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .
-
27/12/19* வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "கலங்கரை விளக்கம் "* தினசரி 4 காட்சிகளில் வெளியாகிறது .
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.*
-
வேலூர் குறள் அரங்கில் வெள்ளி முதல் (13/12/19) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக் ஷாக்காரன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது*
-
20.12.2019 வெள்ளிகிழமை முதல் புரட்சித்தலைவரின் நினைவுநாள் வருவதையொட்டி மதுரை அனுப்பானடி -பழநி.ஆறுமுகா DTS.,திரையரங்கில் மற்றும் திண்டுக்கல் - N.V.G.B. DTS.,திரையரங்கிலும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்., அவர்களின் இருவேடநடிப்பின் மகத்துவத்தில் வெள்ளிவிழாகண்ட "எங்கவீட்டுப்பிள்ளை ", வெற்றிப்பவனி வருகின்றார் ......... நன்றி மதுரை எஸ் .குமார்...... Thanks.........
-
இயற்கையை படைத்த இறைவன் தங்கள் லீலைகளை ஒழுக்கம், பண்பு, வள்ளல் குணம், வீரம், அழகு, நேர்மை, வசீகரம், இரக்க உள்ளம், ஆளுமை என்று ஒன்று சேர காட்சிபடுத்திய உருவம் தான் புரட்சி தலைவர். .........அந்த மகத்தான தெய்வம் தன் லீலைகளை நிறைவேற்றி கொண்டு தன் இருப்பிடம் நோக்கி சென்ற 32 வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக பக்தர்கள் ஒன்று சேர்ந்து போஸ்டர் அடித்து ஊர்வலம் செல்ல அனைத்து பக்தர்களின் நீண்ட நாள் ஆவல். அதை நிறைவேற்ற சென்ற(2018) வருடம்தான் பிள்ளையார் சுழியே போடப்பட்டது.அதன் தொடக்கமாக இந்த வருடம் மேலும் விரிவுபடுத்த 08.12.2019 அன்று ஆலோசனை கூட்டம் தி.நகரில் திரு முருகு பத்மநாபன் தலைமையில் தமிழகம் முழுவதும் உள்ள அமைப்புகளில் இருந்து அனைவரும் கலந்து கொண்டு பலதரபட்ட வாகனங்களில் தலைவர் புகைபடத்துடனும் பதாகைகளுடனும் நீண்ட வரிசையில் சென்னை வாலாஜா சாலை யில் உள்ள பேறறிஞர் அண்ணா சிலையில் இருந்து பேரணியாக சென்று தலைவரின் வங்ககடலோரம் உள்ள நினைவாலயத்தில் மலர்வளையம் வழிபாடு செய்வதென ஆலோசிக்கப்பட்டது.அந்த கூட்டத்தில் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை, அனைத்துலக எம்ஜிஆர் பொது நல சங்கம், பொன்மனசெம்மல் எம்ஜிஆர் நற்பணி சங்கம், மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள், அனைத்துலக எம்ஜிஆர் திரைபட திறனாய்வு சங்கம், தர்மம் தலைகாக்கும் எம்ஜிஆர் நற்பனி மன்றம், எங்கள் தெய்வம் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை, வெற்றி தேவன் எம்ஜிஆர் மன்றம் ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள்.மற்றும் சைதை கலையுலக பேரோளி எம்ஜிஆர் தலைமை மன்றம், சென்னை கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள், பொன்மன பேரவை, மகளிர் முன்னேற்றம் கழகம், புரட்சி மன்னன் எம்ஜிஆர் மன்றம், பொன்மன செம்மல் எம்ஜிஆர் பக்தர்கள் குழு ஆகிய அமைப்புகள் தொலைபேசி யில் ஒத்துழைப்பு வழங்கின. அதன் பொருட்டு ஒவ்வொரு அமைப்பும் தனித்தனியாக ஆலோசிக்க 15.12.2019. ஞாயிறு அன்று 11.05 மணிக்கு சென்னை ராஜாஜி ஹால் அருகில் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருவாளர்கள் முருகு பத்மநாபன், பேராசிரியர் செல்வகுமார்,மனோகரன், தேவசகாயம், மின்னல்பிரியன், ரங்கராயல் ரங்கராஜன், S.சிவா சந்திரசேகர், மதிப்பிற்குரிய அம்மா அவர்கள், M.சத்யா, N.பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக திருவாளர்கள்.பாஸ்கரன், லோகநாதன், ஷிவபெருமாள், கலைமணி, சாந்தகுமார், வேலு, வேதா, D.ரவி, பாபு,ராமமூர்த்தி, சிவா, மணி, சீனிவாசன், சரவணன், ராஜேந்திரன், காதர், ராஜேஷ், பக்தா, ரவி, R.சரவணன், கோவிந்தராஜன், சந்தானம், கணேசன், ஏழுமலை, யுவராஜ், குட்டி ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு 31 வருடங்களாக தொடர்ந்து போஸ்டர் அடித்து தலைவர் திருவுத்திற்கு மாலை அணிவித்து, அன்னமிட்டு, மலர்வளையம் வழிபாடு செய்யும் அதே சேவையை 32வது வருடமும் அதே வாலாஜா சாலையில் உள்ள பாரகன் தியேட்டர் அருகில் செய்வதென முடிவெடுத்து திரு. வெற்றி லை.குமார், ம.சோ.நாராயணன், M.மகேந்திரன் தாயார் அவர்களின்(14.12.2019) மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இவன். ஷிவபெருமாள். செயலாளர்.கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை .......... Thanks.........