Dont know how far it is true, but looks like Kamal is back with IR for his next film!
If it is true, am wondering about the timing here?
Why now?
Printable View
Dont know how far it is true, but looks like Kamal is back with IR for his next film!
If it is true, am wondering about the timing here?
Why now?
wwwwwwooooowwwwwwww :boo:
Great news.
Looooonging for this to happen.
TKR missed the opportunity for chanakyan and making up for that loss.
For an engrossing family drama and where the scope for acting and emoting frame by frame is on the cards who else but Raaja can do justice on screen.
Ellam enna ippadi nadakkuthu?
27 years appuram TKR
26 years appuram Amala
10 years appuram Raaja
Andavarukku than velicham
மொதல்ல இது நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து கசிந்த தகவலாக தெரியல. இப்போதைக்கு எல்லோருடைய விருப்பமே இச்செய்தி உண்மையாக இருக்கக் கூடாதா என்பதே! ஏனெனில் கமல்-ராஜா இணைவது எப்படிப்பட்ட நல்ல விஷயங்களை இசை ரசிகர்களுக்கு தரும் என்பது வரலாறு. அதனால் "ஏன் இப்போது?" என ஆச்சர்யப்படவேண்டாம். ஜிப்ரானுடன் தொடர்ந்து நான்கு படங்கள் செய்துவிட்டதால் ஒருவேளை மாற்றம் வேண்டி கமல் ராஜாவை நாடியிருக்கலாம்.
Kamal's multiple expressions in a single Scene
http://i1277.photobucket.com/albums/...pspcqjxuyo.jpg
(Padmashree Dr.Kamal Haasan Facebook)
Kamal's MANMATHA LEELAI (Direction: K. Balachander) on Raj TV today at 12 noon.
http://i1277.photobucket.com/albums/...ps1yzofkyq.jpg
Kamal's THENAALI on Raj TV @ 4 p.m. today
http://i1277.photobucket.com/albums/...pstm74oltn.jpg
http://i1277.photobucket.com/albums/...ps0qtrmpue.jpg
Kamal - Ilaiyaraja?
http://i1277.photobucket.com/albums/...psarulg0ri.jpg
Chanakyan miss? It was a very successful movie. Besides Kerala, it ran 50+ days in Chennai as well.
Read the director's old interview where he explains it.
http://m.rediff.com/movies/2000/may/12raj.htm
hi hh welcome back
i think he mention about TKR missing raaja for chanakyan
Kamal's uncomparable records of filmfare award...
http://i1277.photobucket.com/albums/...psl1agc8nj.jpg
aandavar hav more number of all india all time blockbusters as well more number of awards ...:notworthy:
-deleted-
Next movie is Thoongavanam remake(not dubbing) in Hindi?
How many movies lined up? Rajeev Kumar movie, Thalaivan Irukkindran, Thoongavanam remake???
சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமல் வெளியிட்டதாக சொல்லப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து அமைச்சர் o.பன்னீர்செல்வம் நடிகர் கமலுக்கு கண்டன அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் கமல் தற்போது தனது விளக்கத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அதில் தான் ஈமெயில் மூலமாக ஆங்கிலத்தில் வடநாட்டு பத்திரிக்கையாள நண்பருக்கு கொடுத்த பேட்டி தவறாக தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் தமிழக மக்களுக்கு நேர்ந்த துயரதைப்பற்றிய புலம்பலே இடம்பெற்றிருந்ததாகவும், தமிழக அரசைப் பற்றியோ, என் வரிப்பணம் என்னவாயிற்று என்றோ தான் கேட்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
இது அமைச்சர் o.பன்னீர்செல்வம் அவர்களுக்கு அளிக்கும் பதில் அறிக்கையல்ல என்றும், மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கும் தனது இயக்கத்தினருக்கு தெளிவு படுத்தவே இந்த அறிக்கை என்றும், களமிறங்கி மக்களுக்கு உதவிக்கொண்டு இருக்கும் யார் மனமாவது நான் சொன்னதாக சொன்ன அறிக்கையால் புண்பட்டிருந்தால் மன்னிப்புகூட கேட்டுக்கொள்வதாகவும், தனிமனித கோபதாபங்களை தவிர்த்து கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இந்த பெரிடர்காலத்தில் அனைவரும் பணிபுரியவேண்டுமேன்றும் நடிகர் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்
Yeah, India today also says Kh denying that! Nice that it is all cleaned. The fans were defending him and now they would have been in big trouble as he denies that! :oops:
feel like.. kadaisileh enayum araseyel vathi akitingeh! Muthalvan!
but anyways as of now the important is to help makkals there.. i have done my part..
seriously, hope am there to help people in ground..
I was in the same state as Unmai Vilambi here in this Hub...Questioning the known facts during a Disaster. Some Hubbers also took this Opportunity to Vent Out Political anguish and some painted an Atheist picture to it as well. I am Glad that Opportunists and People who cause rifts are put to bed.
முதல் முறை பிரசுரமானது..
http://www.firstpost.com/bollywood/t...i-2531358.html
The unprecedented rains in Chennai have left the city marooned and helpless.
The rich and privileged have not been spared either. However, Kamal Haasan who lives on the posh Eldams Road in Chennai's Teynampet area is relatively sheltered and safe from the deluge.
But many of his friends and relatives are hugely affected.
Speaking exclusively from his residence in Chennai, Kamal Haasan in an interview with Firstpost said, “To describe the situation as calamitous would be an understatement. If this can happen in Chennai can you imagine the plight of the rest of Tamil Nadu?”
“It’s a nightmare for the poor and the middle class. The rich should feel guilty. I am not so rich and yet I feel guilty when I look outside my window and see how people in my city are suffering,” the actor adds.
He also lashed out at the powers-that-be for neglecting their civic duties. “The entire system has collapsed. It will take Chennai months to get back to normal even when the rains stop. Where is all of the taxpayer’s money going? I don't take black money. I pay my taxes. What is being done for me and my people with my hard-earned money?”
Questioning the basic tenet of civil existence, the actor asks, “I have no God. And I definitely won’t accept the authority and decisions of the self-appointed Gods— the politicians. The ruling party ,whoever they are, don’t mind spending Rs 4000 crore for corporate projects. We are around 120 crore people in the country. Why not distribute all the Rs 4000 crore among us? That would make all Indians tri-crorepatis.”
The actor who is known to stand up for causes is extremely disillusioned by the collapse of the state administration in Tamil Nadu.
He ended the conversation by saying, “I am truly sad and sick. I feel guilty for my being in a comfortable home. I earn very little compared to the government. But now when our state is in distress they are asking for donations to do what we appointed the government to do. Of course I will pay because I am constrained to respect the government’s authority. The reason I pay is not to be perceived as one the rich who suck on people, because I am not. I love my people truly. All this drama of rich and poor is a farce, though. The politicians give a damn about social equality as long as they remain in power.”
இரண்டாவது முறை பிரசுமானது..
http://www.vikatan.com/cinema/article.php?aid=56021
அண்மையில் கமல் வெளியிட்டதாகச் சொல்லப்பட்ட அறிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். கமலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து கமல் வெளியிட்டிருக்கும் விளக்கம்.....
நான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று என்று நான் கேள்வி எழுப்பியது போல் சில ஊடகங்களில் சற்று நாட்களுக்கு முன் வந்த செய்தி நான் அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டி அல்ல. மின் அஞ்சல் வழி என் வடநாட்டு பத்திரிகையாள நண்பருக்கு எழுதிய ஆங்கிலக்கடிதம். அந்தக் கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது.
என் கடிதம் தமிழகத்திற்கு நேர்ந்த பேரிடர் பற்றியும் மக்களின் அவதியை பற்றிய புலம்பலே. கடிதத்தில் எங்கும் தமிழக அரசு என்ற குறிப்போ, என் வரிப்பணம் என்னவாயிற்று? என்ற கேள்வியோ இல்லை. அவ்வளவு சந்தேகம் இருந்திருந்தால் இவ்வளவு வருடம் தொடர்ந்து முழு வருமானத்தையும் சொல்லி அத்தனை வரி கட்டியிருக்கவே மாட்டேன். எந்த நிலைமையிலும் என் கடமையைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான்.
என் வீட்டிற்க்கு சில நாட்களாகச் செய்தித்தாள் விநியோகம் இல்லை. விட்டு விட்டு வரும் தொலைபேசித் தொடர்பும், எப்போதோ வரும் வலையதள தொடர்பினாலும் என்னைப் பற்றி ஊடகங்களில் வரும் வாதப்பிரதிவாதங்கள் நண்பர்கள் சொல்லியே தெரிந்துகொண்டேன். எனது சில நண்பர்களைப் போல் எப்போதுமே ஒரு கண்ணை முகநூலில் வைத்திருக்கும் முகநூல்வாசியல்ல நான்.
பதில் ஏதும் பேசாமல் இருந்தால் உண்மை தன்னால் வெளிப்படும் என் உண்மை நிலை புரியும் என்று நான் எண்ணியது தவறு என உணர்கிறேன். என் நற்பணி இயக்கத்தாருடன் தொலைபேசி தொடர்பு கிடைக்கும்போதெல்லாம் பேசிவருவதினாலும், அவர்களை எந்த ஆர்ப்பாட்டமுமின்றி மக்களுக்கு உதவும் அன்புக் கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்ததாலும் அவையே முக்கியம் இந்த வாதங்களை பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். அது தவறு, அத்தவறு இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
இது திரு. ஓ. பன்னீர் செல்வம் அவர்களின் அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல. களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும், பல வேறு கட்சிகளுக்கும் ஓட்டு போடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழப்பத்தில் நற்பணி செயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக் கூடாது என்பதற்கே இவ்விளக்கம்.
பக்தரும் பகுத்தறிவாளரும் பல மதத்தாரும் உண்டு எங்கள் இயக்கத்தில். இந்த நேரம் கட்சிகளுக்கு அப்பாற்பட வேண்டிய நேரம் மதங்கள் தனிமனிதக் கோபங்களையும் தவிர்த்து செயல்பட வேண்டிய பேரிடர் காலம். களமிறங்கி வேலை செய்யும் யார் மனதையும் நான் சொன்னதாகச் சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் கூட மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
வாதப்பிரதிவாதங்களைப் புறந்தள்ளி ஆக்கவேலையில் முன் போல் முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்து செய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன். கோபதாபங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
தண்ணீரும் கண்ணீரும் வடிந்த பிறகும் கூட, சூழக்கூடும் என அஞ்சும் அபாயங்கள் அண்டாதிருக்க ஆவணம் செய்வோம். ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து நற்பணிகளை 36 ஆண்டுகளாக எங்கள் இயக்கம் செய்து வருகிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் எல்லோருடனும் சேர்ந்து ஒத்துழைப்பதே நற்பணிச் சேவைகளை தொடரும் அந்த சந்தோஷத்திற்க்காகவும் செளகரியத்துக்காகவும் தான்" இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
இன்னொரு முறை சொல்கிறேன்.. இங்கே வந்து ஷோல்டர் ஏத்தி அட்டைக்கத்தி வீசி மறையும் வீரர்கள் இரண்டையும் இன்னொருமுறை வாசிக்கவும். எதற்கெல்லாம் மன்னிப்பு கேட்கிறார், எதற்கெல்லாம் கேட்கவில்லை என்றெல்லாம் புரிந்துகொள்ளும் சக்தி இருந்தால் புரிந்து தெளியவும். இதுதான் வாய்ப்பு என கமலின் குடும்ப வாழ்க்கையை பற்றியெல்லாம் விமர்சித்து கருத்து வாந்தி எடுத்தவர்கள் மீண்டும் அதை தின்று ஜீரணிக்க முடியுதா எனப் பார்க்கவும். கடவுள் நம்பிக்கை - கடவுள் நம்பிக்கை இல்லாத நிலை இதையெல்லாம் கூட சகித்துக் கொள்ளாத மனிதர்கள் எல்லாம் இதுபோன்ற உரையாடல் தளத்தில் சக மனிதர்களோடு உரையாடவே தகுதியில்லாதவர்கள். நான் முன்பே சொன்னதுபோல அவர்களையெல்லாம் இயற்கையே நன்றாக வழிநடத்தட்டும்.
அட வெங்கங்கெட்டவங்களா ! அவர் அப்ப்டி சொல்லிட்டார்ன்னு பொங்கி வழிஞ்ச உங்க மூஞ்சிய எங்க கொண்டு போய் வச்சுக்குவீங்க ?
அவர் சொன்னதாக சொல்லப்பட்ட அனைத்தும் சரியான கருத்துகள் . அவர் சொல்லவில்லையென்றால் ,சொல்லாத ஒண்ணுக்கு பன்னீரும் சில பரதேசிகளும் பொங்கியதும் தான் செம காமெடி :lol:
கமல் தைரியசாலி! அதனால் முதலில் அப்படி அறிக்கை விட்டார்! பின்பு நான் அப்படி சொல்லலைன்றதுல்லாம் எல்கேஜி குழந்தை கூட நம்பாதுன்னு அவருக்கே தெரியும்! அரசை நல்லா கிள்ளிட்டு, அப்புறம் சாரின்னு சும்மானாச்சும் கேட்டார்! கிள்ளினப்ப வலிச்சிதானே இருக்கும்? அதை அந்த சாரி ஒண்ணும் செய்ய முடியாது! கிள்ள தைரியம் வேணும்!
http://www.newtamilcinema.com/kamal-back-to-his-words/
//அன்றிரவே கமல் வீட்டில் கரண்ட் பிடுங்கப்பட்டது என்றெல்லாம் வதந்திகள் உலாவின. //
அப்புறம் அவர் மன்னிப்பு கேட்டதுல்லாம், களப்பணி ஆற்றுபவர்கள் மனத் புண்பட்டிருந்தால்! சும்மா ட்விட்டரில் RT செஞ்சிட்டிருந்தா கூட நமக்குல்லாம் அந்த மன்னிப்பு இல்லை! only for field workers who felt bad! அது மட்டுமல்ல, இப்ப கூட அவர் தான் சொன்னதை எல்லாம் வாபஸ் வாங்கிக்கறேன்னு சொல்லலை. டைமிங்குக்காக மட்டும் மன்னிப்பு கேட்கிறார். உண்மைவிளிம்பி மாதிரி கமல்ஃபேன்ஸ் சந்தோஷப்பட்டுக்கலாம்!
அந்த மன்னிப்பை அவர் சொல்றதுக்கும் முன்னாடியே, தெளிவா, இது ஓபீஎஸ்ஸுக்கான பதில் கடிதம் அல்லன்னு சொல்றாரு! செமக்கேடிப்பா இந்த கமல்சார்! :D
கமல் எப்போதுமே சென்னை/தமிழகம், சுத்தம், கூவம், சுற்றுச்சூழல் மாசு இதைப்பற்றியெல்லாம் பேசியபடியே தான் இருந்திருக்கிறார். Its very natural that he got huge anger over this man made disaster floods
கமல் பேட்டி, ஆனந்த விகடன் 29.10.2000
http://www.mayyam.com/talk/attachmen...0&d=1449557068
Attachment 4760
சுவாரசியமா இருக்கே..ஃபுல் பேட்டி பார்ஸல் ப்ளீஸ்
கமல் நன்கொடை தரலைன்னு சொல்லும் முட்டாள்களுக்கு தெரியாது, கமல் எப்போதுமே பேட்டி / படங்களில் சுற்றுச்சூழல் மாசு பற்றியும் மனிதனின் சுயநலம் பறியும் விடாமல் பேசுபவர் என்று.
தசாவதாரத்தில் மணல் கொள்ளை, ”ஆத்து மணலைத்திருடுறது தேசத்துரோகம், பூமித்துரோகம், நமக்கிருக்குற ஒரே உலகத்தை அழிச்சிட்ட் எங்க போவலே?!”
நம்மவர் படத்தில் கல்லூரி பராமரிப்பு & சுத்தம்,
மகாநதியில், மறைமுகமாக கூவம் பற்றிய பேச்சு,
பாபநாசத்தில், Composite & மண்புழு இயற்கை உரம்,
விருமாண்டியில் இயற்கை விவசாயம் பற்றின வசனங்கள்(நீ இங்கிலீஷு உரத்த போட்டு என் மண்ணை சாகடிச்சிருவ),
தேவர்மகனில் கண்மாயை தூர் வாருவது,
இப்படி இயற்கை, சுற்றுச்சூழல் மாசு, மனிதனி சுயநலம் பற்றியெல்லாம் படங்களிலும் பேட்டிகளிலும் விடாமல் பேசி, சராசரி ரசிகனுக்கும் கொண்டுபோய் சேர்ந்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு, எத்தனை கோடிகள் கொடுத்தாலும் ஈடில்லை
https://www.facebook.com/photo.php?fbid=765618413583200&set=a.1046358263481 32.7847.100004051444169&type=3&theater …
நடிகர் கமஹாசனை எதற்காக திட்ட வேண்டும் . அவரை திட்ட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?! -செ. நிருபன் சக்ரவர்த்தி.
1995-la ஒரு காமெடி ஸ்டார், இதே முதல்வர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று கூறினார். 20 வருடம் கழித்து அதே முதல்வரின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு போட்டாவுக்கு போஸ் கொடுக்கிறார். அவரது முட்டாள் ரசிகர்கள் இப்பொழுது மானத்தை பற்றி பேசுகிறார்கள். அந்த காமெடி ஸ்டாரின் ரசிகர்கள் யாராவது சென்னையில் மக்களுக்கு உதவி செய்கிறர்கள?