Vasu Sir,
Telugu is the original from which, Nam Naadu was born later in Tamil and then was remade in Hindi as Apna Desh, like "Ramudu Bheemudu", original Telugu, then Tamil "Enga Veettu Pillai" and then
Regards,
R. Parthasarathy
Printable View
திருச்சியில் என் நண்பர்களுடன் மன்னார்புரம் வெங்கடேஸ்வரா என்று ஒரு தியேட்டரில் ஒரு நண்பனின் பிறந்த நாளுக்காக எல்லோராலும் இழுத்துச் செல்லப்பட்டு பார்த்த படம். அந்த நண்பன் இன்று இல்லை என்றாலும் என்றும் அவ்னை நினைவுபடுத்தும் இந்தப் பாடல்..
படம் முழுக்க கறுப்பு பட்டிக்காட்டுப் பெண்ணாக வரும் ஐஸ்வர்யா இந்தப் பாட்டில் மட்டும் க்லராக வருவார். கண்ணதாசன் காதல் பாட்டு வரிகளை திருத்திக் கொடுப்பாரா என்ன ? ம்ம்..
தேவா இசை பல பேருடைய கலவை போலத் தெரிந்தாலும் அனேகமாக மனதில் நிற்கும் இசையாகவே இருக்கும். இந்தப் பாடலும் விதிவிலக்கல்ல.
வாசு ஜி..
கற்பூரம், அவள் தந்த உறவு பாடல் வீடியோக்கள் சிக்கவில்லை. கண்டிப்பாக விரைவில் வலையில் சிக்கும் என சென்னை வானிலை இயக்குனர் ரமணன் போல ஹேஷ்யம் சொல்கிறேன்.
சங்கமம் நல்ல பாடல்கள் கொண்ட படம். ஆனால் கண்டிப்பாக முடிவு வரை படத்தைப் பார்ப்பது தலைவலிக்க வைக்கும்.
வாழ்த்துக்களை உரைத்த
நான்கு திரிகளிலும் அன்புடன் வாழ்த்துக் கூறிய அன்பு நண்பர் வினோத்,
அன்பு நண்பர் நெய்வேலி வாசுதேவன்,
அன்பு நண்பர் சின்னக்கண்ணன்
அன்பு நண்பர் கிருஷ்ணா
மற்றும் பெயர் விட்டுப் போன நண்பர்கள் இருந்தால் அவர்களும் சேர்த்து அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
வாசு சார்
மேலும் மேலும் இது வளரட்டும்..
ஆம் தங்களுடைய சிறந்த பங்களிப்பால் மய்யத்தின் மய்யமாக இத்திரி மேலும் மேலும் வளரட்டும் என வாழ்த்துகிறேன்.
ராக்வ் ஜி..
6000 பதிவுகள் கண்டு ஆனந்தக் களைப்பில் வீழ்ந்த உங்களை குளிர்விக்க தேன் நிலா வந்து விட்டது
கங்கிராஜுலேஷன்ஸ்
http://youtu.be/Y5m0m5zSbEo
சங்கமம் நல்ல முயற்சி. ஆனால் பிரசவ காலம் மிக மிக நீண்டு, டினோசர் குழந்தை போல டெலிவரி ஆன படம்.
டி.கே.ஆர் பளிச்சிடுவார். முக்கியமாக வண்ண பூ போல சேலை கட்டி.
வாசு கண்ணில் படாமலா போகும்?கழுகு கண் ஆயிற்றே?
இன்றைய ஸ்பெஷல் (98)
கமால் பிரதர்ஸ் தயாரித்த 'கண் கண்ட தெய்வம்' படத்தில் ஒரு கலக்கல் சாங். நம்ம சூர்யாவோட அப்பா சிவக்குமார் தென்னை மரத்துல உட்கார்ந்துகிட்டு அரை நிஜார் போட்டுகிட்டு என்ன ரகளையா சைட் அடிச்சுகிட்டு கலாட்டா பண்ணி இந்த பொண்ணுகிட்டே பாடுறார் பாருங்க. பாட்டு முழுக்க மனுஷர் தென்னை மரத்திலேயே பாடி முடிச்சுடுவாரு. நம்ம பாடகர் திலகம் சௌந்தரராஜன் செமத்தியா பாடியிருப்பாரு. சிவக்குமார் பாக்குறதுக்கு அப்படியே சூர்யா மாதிரியே இருப்பாரு.
பாடல் வரிகள் செம ஜனரஞ்சகம். அப்பா! இந்தப் பாட்டுல மொத்தம் எத்தன 'பாப்பா' வருதுன்னு ஒரு போட்டியே வைக்கலாம்.
இசை கே.வி. மகாதேவன். இயக்கம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். அண்ணன், தம்பி ஒற்றுமையை அப்பட்டமாகப் பிரதிபலித்த படம் இது. உணர்ச்சிக் குவியல்கள் நிறைந்தது. ரங்காராவ், சுப்பையா, பத்மினி, சிவக்குமார், நாகேஷ் என்று பலர் நடித்த வெற்றிப் படம் இது. ரங்காராவ் மிகச் சிறப்பான நடிப்புக்காக இப்படத்தின் மூலம் மிகவும் புகழ் பெற்றார். இப்படத்தையே கே.எஸ்.ஜி. பின்னாளில் நடிகர் திலகத்தை வைத்து 'படிக்காத பண்ணையார்' என்று எடுத்தார். தேங்காய், கே.ஆர்.விஜயா, ஒய்.ஜி.எம் உடன் நடித்தனர்.
இந்தப் பாடல் ஒரு உற்சாகமான பாடல். நல்லா என்ஜாய் செய்யலாம்.
இனி பாடலின் வரிகள்
தென்ன மரத்துல குடி இருப்பத சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
அவ தெரிஞ்சுகிட்டா சிரிச்சுகிட்டே என்ன பாப்பா
எதுத்த வூட்டுப் பாப்பா
நான் தென்ன மரத்துல குடி இருப்பத சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
அவ தெரிஞ்சுகிட்டா சிரிச்சுகிட்டே என்ன பாப்பா
எதுத்த வூட்டுப் பாப்பா
என் பாட்டு சத்தம் கேட்டுதுன்னா சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
அவ ஆட்டத்தோடு அபிநயத்த புடிச்சி பாப்பா
என் பாட்டு சத்தம் கேட்டுதுன்னா சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
அவ ஆட்டத்தோடு அபிநயத்த புடிச்சி பாப்பா
கொடுங்கோடையில குளுகுளுங்குற குமரிப் பாப்பா
எங்க குமரிப் பாப்பா
பனி வாடையிலே வெதுவெதுங்குற வயசுப் பாப்பா
நல்ல வயசுப் பாப்பா
கொடுங்கோடையில குளுகுளுங்குற குமரிப் பாப்பா
எங்க குமரிப் பாப்பா
பனி வாடையிலே வெதுவெதுங்குற வயசுப் பாப்பா
நல்ல வயசுப் பாப்பா
என் ஆசையெல்லாம் நீதான்னா சின்னப் பாப்பா
எங்க சின்னப் பாப்பா
அய்யோ எனக்கு அப்படி இருக்குதும்பா அறிவுப் பாப்பா
நல்ல அழகுப் பாப்பா
என் ஆசையெல்லாம் நீதான்னா சின்ன பாப்பா
எங்க சின்னப் பாப்பா
அய்யோ எனக்கு அப்படி இருக்குதும்பா அறிவுப் பாப்பா
நல்ல அழகுப் பாப்பா
நான் எறங்கி வந்து எதுக்க நின்னா சின்ன பாப்பா
எங்க சின்னப் பாப்பா
நீங்க இங்கே எப்படி வந்தீங்கேன்னு என்ன கேப்பா
நான் எறங்கி வந்து எதுக்க நின்னா சின்ன பாப்பா
எங்க சின்னப் பாப்பா
நீங்க இங்கே எப்படி வந்தீங்கேன்னு என்ன கேப்பா
நான் அக்கம் பக்கம் பாக்கையிலே சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
இங்கே யாருமில்ல சொல்லுங்கன்னு வாயப் பாப்பா
என் வாயப் பாப்பா
நான் அக்கம் பக்கம் பாக்கையிலே சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
இங்கே யாருமில்ல சொல்லுங்கன்னு வாயப் பாப்பா
என் வாயப் பாப்பா
நான் போட்டுக்கவா அத போட்டுக்கவா
நான் போட்டுக்கவா தாலியின்னா சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
சர்தான் போட்டுக்கோன்னு கழுத்த மெல்ல நீட்டிப் பாப்பா
கழுத்த நீட்டிப் பாப்பா
நான் போட்டுக்கவா தாலியின்னா சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
சர்தான் போட்டுக்கோன்னு கழுத்த மெல்ல நீட்டிப் பாப்பா
கழுத்த நீட்டிப் பாப்பா
பாப்பா பாப்பா யப்பா தப்பா யப்பபபப்பப பப்பா
நான் தென்ன மரத்துல குடி இருப்பத சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
அவ தெரிஞ்சுகிட்டா சிரிச்சுகிட்டே என்ன பாப்பா
எதுத்த வூட்டுப் பாப்பா
http://www.youtube.com/watch?v=w-zzW...yer_detailpage
காலை வணக்கங்கள்
வாசு ஜி, ஐஸ்வர்யா பற்றிய கருத்தில் எனக்கு உடன் பாடிருந்தாலும் அந்த குரல் .. அதுவும் அது மாறி இன்று இருக்கும் குரல் அய்யயோ முடியாது ...
==============================================
தேனிசை தென்றலின் முத்துக்கள் - 7
ஆரம்ப காலத்தில் அன்பாலயா பிரபாகரன், மணிவாசகம் போன்றோர் தேவாவிற்கு வாய்ப்பு வழங்கினர்
அப்படி மணிவாசகம் இயக்கி முரளி, கெளதமி நடித்த “ நம்ம ஊரு பூவாத்தா” திரைப்படத்தில் ஒலித்த இந்த பாடல்
குறைந்த அளவு ஒலிபரப்பட்டது . கொஞம் பிரபலமும் கூட
கானகந்தர்வன் திரு யேசுதாஸ் மற்றும் சித்ராவின் குரல் “ஆவாரம்பூவு ஒன்னு நாரோடு வாடுதுன்னு காதோரம் வந்ததா சேதி “
பழைய மெட்டை நினைவூட்டினாலும் நல்ல பாடல்
http://www.youtube.com/watch?v=cYVCd7w2kbU