மேகம் பொழிதலை மறக்கலாம்
ஆதவன் ஒளிர்தலை மறக்கலாம்
வானம் நிலவை மறக்கலாம்
அலைகள் பாய்தலை மறக்கலாம்
வீணை இசையை மறக்கலாம்
கிளிகள் கொஞ்சலை மறக்கலாம்
கால்கள் நடையை மறக்கலாம்
நாசி சுவாசித்தலை மறக்கலாம்
எங்கள் இதய தெய்வம் உம்மை
எந்நாளும் எவர் இதயமும் மறக்காது
இன்று மட்டுமா உன் நினைவு நாள்
என்றென்றும் உன் நினைவுகள் மட்டுமே அல்லவா
எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன
வழிநடத்திக் கொண்டிருக்கின்றன
excellent kavidhai jai sir
congratulations

