http://i62.tinypic.com/2cprhbb.jpg
Printable View
Courtesy: Tamil Hindu
காற்றில் கலந்த இசை 15: வானை நோக்கிப் பொழியும் சாரல்
ஒரே மெட்டைப் பல்வேறு மொழிகளில் பயன்படுத்துவது என்பது இசையமைப்பாளரின் சுதந்திரம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல; வெவ்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மாநிலங்களின் ரசிகர்களின் மனதைத் தொடும் அளவுக்கு, குறிப்பிட்ட அந்தப் பாடலை மெருகேற்றுவதைப் பற்றியது. ராஜேஷ் கன்னா, அமிதாப் நடித்த ‘ஆனந்த்’ படத்துக்காக இசையமைத்த ‘நா ஜியா லாகே நா’ பாடலின் மெட்டை பாலுமகேந்திராவின் முதல் தமிழ் படமான ‘அழியாத கோலங்கள்’ திரைப்படத்தில் ‘நான் எண்ணும்பொழுது’ பாடலாகத் தந்தார் சலீல்சவுத்ரி. இந்திப் பாடலின் சூழல் வேறு. இளமைக் கால நினைவுகளின் தொகுப்பாகவே தமிழில் இப்பாடலை உருவாக்கியிருந்தார் சலீல் தா. இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.
தமிழ்த் திரைக்கு அறிமுகமான காலத்திலேயே பிற தென்னிந்திய மொழிகளிலும் இசையமைக்கத் தொடங்கிவிட்ட இளையராஜாவும் ஒரே மெட்டை வெவ்வேறு மொழிகளில் பயன்படுத்தியிருக்கிறார். ஆனந்த் நாக், ரஜினிகாந்த், சாரதா நடித்த ‘மாத்துதப்பட மக’ (1978) எனும் கன்னடப் படத்துக்காக அவர் இசையமைத்த ‘பானு பூமியா’ பாடலின் தமிழ் வடிவம்தான் ஜேசுதாஸ், எஸ்.பி. ஷைலஜா பாடிய ‘ஏதோ நினைவுகள்’ பாடல்.
விஜய்காந்த், ஷோபா நடித்த ‘அகல் விளக்கு’ (1979) படத்தில் இடம்பெற்ற பாடல் அது. புகழ்பெற்ற கதாசிரியர் ஆர். செல்வராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். கன்னடப் பாடலை எஸ்.பி.பி.யும் எஸ். ஜானகியும் பாடியிருந்தார்கள். ஒரே மெட்டுதான். ஆனால், பாடகர்கள் தேர்வு, தாளம், நிரவல் இசை தொடங்கி பாடலின் உணர்வு வரை, இதன் தமிழ்ப் பிரதி தரும் அனுபவம் முற்றிலும் வேறானது. ஓராண்டுக்கு முன்னர் உருவாக்கிய கன்னடப் பாடலை அந்த அளவுக்கு மிக நேர்த்தியாக மெருகேற்றியிருந்தார் இளையராஜா.
ஆங்கிலத்தில் haunting என்று ஒரு வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். இதற்கு ஆட்கொள்ளுதல் என்று தமிழில் பொருள் கொள்ளலாம். அந்த வகையில், கேட்பவர்களை மெள்ளமெள்ள ஆட்கொண்டுவிடும் பாடல்களில் ஒன்று இது. காதலின் களிப்புடன் பாடப்படும் டூயட் பாடலாக அல்லாமல், கைவிட்டுப்போன காதலின் நினைவு தரும் வலியின் இசை வடிவமாகவே இப்பாடலைக் கொள்ளலாம். விரிந்து வியாபித்திருக்கும் இயற்கையின் பிரம்மாண்டத்துக்குள் தன்னைக் கரைத்துக்கொள்வதன் மூலம், இழப்பின் வலியை மறக்கச் செய்யும் போதை வஸ்து என்றே இப்பாடலைச் சொல்ல முடியும்.
‘ம்..ஹ்ம்..’ என்று ஜேசுதாஸின் மெல்லிய ஹம்மிங்குடன் தொடங்கும் பாடலின் உயரத்தை, தொடர்ந்து ஒலிக்கும் ஷைலஜாவின் ஹம்மிங், பரந்து விரிந்திருக்கும் வானம் வரை இட்டுச் செல்லும். சுற்றியலையும் மெல்லிய காற்று தவழ்ந்து பூமியில் படர்வதைப் போன்ற உணர்வைத் தரும் முகப்பு இசையுடன் பாடல் தொடங்கும்.
‘ஏதோ நினைவுகள்…’ எனும் பல்லவியின் முதல் வார்த்தைகளே, கடந்து வந்த வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில் தேங்கி நிற்கும் வசந்த காலத்தின் உறைவிடத்துக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும். நண்பகல் வேளை ஒன்றில், சமவெளியான நிலப்பரப்பில் நின்றுகொண்டு வானில் மிதக்கும் மேகங்களை ரசிக்கும் உணர்வைத் தரும் நிரவல் இசையைத் தந்திருப்பார் இளையராஜா. பூமியிலிருந்து வானை நோக்கிப் பொழியும் சாரல் மழையாக, இப்பாடலின் இசையை தன் மனதுக்குள் அவர் உருவகித்திருக்க வேண்டும். கேட்பவர்களின் அப்போதைய மனநிலைக்கு ஏற்ப வெவ்வேறு மனச் சித்திரங்களை உருவாக்கும் தன்மை கொண்ட பாடல் இது.
குறிப்பாக, இப்பாடலின் இரண்டாவது நிரவல் இசை தரும் உணர்வு விவரணைகளுக்கு அப்பாற்பட்டது. கடந்த கால நினைவின் நெகிழ்ச்சியான தருணங்களையும், மெல்லிய சோகத்தையும் தனக்குள்ளேயே மீட்டிப் பார்க்கும் பாவத்துடன் ஒலிக்கும் கிட்டார் இசையைத் தொடர்ந்து, அலை அலையாகப் பரவும் காற்றில் மிதக்கும் எண்ணங்களாக விரிந்து செல்லும் வயலின் இசைக்கோவையை அமைத்திருப்பார் இளையராஜா.
பகல் நேரத்துத் தனிமையில் அமர்ந்து இப்பாடலைக் கேட்பவர்களை இனம்புரியாத அமானுஷ்ய உணர்வு ஆட்கொண்டுவிடும். பாடலின் இறுதியில் ஒலிக்கும் பல்லவியின் வார்த்தைகளை ஜேசுதாஸும் ஷைலஜாவும் பகிர்ந்துகொள்ளும்போது பாடலின் வடிவம் வேறொரு தன்மையை அடைந்து முடிவுறும். “காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் ஏங்கும் எந்நாளும்” எனும் உணர்வுபூர்வமான வரிகளை எழுதியவர் கங்கை அமரன்.
எஸ். ஜானகி பாடிய ‘மாலை நேரக் காற்றே’, சசிரேகா பாடிய ‘நீ கண்ணில் வாழும் மன்னன்தானே’ போன்ற பாடல்களும் இப்படத்தில் உண்டு. ‘ஓட்டு கேட்க வருவாங்கண்ணே’ பாடலில் பாவலர் வரதராசன் பேனருடன் தோன்றிப் பாடுபவர் இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி. பாஸ்கர்.
மாற்றார் தோட்ட மெல்லிசை மதுரங்கள்
ஜேம்ஸ் பாண்ட் படங்களின் தீம் இசை மற்றும் கிராபிக்ஸ் கலக்கலான டைட்டில் பாடல்கள் தொகுப்பு
பகுதி 25 : கோல்டன் ஐ / GOLDEN EYE (1995) debut starring by PIERCE BROSNAN as JAMES BOND OO7!
Quote:
திமோதி டால்டனின் லிவிங் டே லைட்ஸ் மற்றும் லைசன்ஸ் டு கில் படங்கள் நல்ல முறையில் விமரிசகர்களின் மதிப்பான வரவேற்பினைப் பெற்றாலும் வசூலில் திருப்தியளிக்கவில்லை. பல்வேறு தயாரிப்பு ரீதியான தடங்கல்களுக்கு உள்ளான டால்டன் தானே முன்வந்து விலகிக் கொண்டார்.
இருப்பினும் மீண்டும் காலதாமதங்கள் எற்பட்டு ஒரு வழியாக பியர்ஸ் பிராஸ்னன் 1995ல் புதுப்பொலிவு கொண்ட ஜேம்ஸ் பாண்டாக கோல்டன் ஐ படம் மூலமாக அறிமுகமாகி நல்ல வரவேற்ப்பை பெற்று பட வசூலையும் உயர்த்தி அடுத்தடுத்து நான்கு படங்களில் நடிக்க முடிந்தது!
Official Trailer!
https://www.youtube.com/watch?v=lcOqUE0u1LM
Tina Turners' scintillating titile song!
https://www.youtube.com/watch?v=bkBYVNrjjIs
The Gun Barrel opening and titles as the credentials of a James Bond Movie till date!!
எரிக் செர்ராவின் புதுமைப் படுத்தப் பட்ட ஜான் பேரியின் தீம் மியூசிக் மற்றும் இசைக்கோர்வையில் டினா டர்னர் டைட்டில் பாடலை பாடினார்!!
ஜோர்ரோ சவுக்கடிப் படப் புகழ் மார்டின் கேம்பெல் இப்படத்தை விறுவிறுப்புக் குன்றாமல் இயக்கியிருந்தார் பின்னாளில் இவரே மீண்டும் கேசினோ ராயல்படத்தில் டேனியல் கிரைக்கை ஜேம்ஸ் பாண்டாக அறிமுகப் படுத்தினார் !!
https://www.youtube.com/watch?v=0WWsRJ2M67Y
https://www.youtube.com/watch?v=mSvuHSqqGSw
https://www.youtube.com/watch?v=UHl6yPL0800
மிகவும் பாராட்டுப் பெற்ற ஆக்ஷன் காட்சிகளை உள்ளடக்கிய படம் பின்னணி இசைக்கோர்ப்பும் நேர்த்தியானதே!
வில்லங்கமான வில்லி.... உடன் பணிபுரிந்த OO6 கூட இருந்தே குழிபறிக்கும் வில்லன்!
மாஸ்கோ தெருக்களில் ராணுவ டாங்கியில் ஜேம்ஸ் பாண்டின் பரபரப்பான துரத்தல் அசர வைக்கும் பங்கீ ஜம்ப் ஆரம்பம் ...சூப்பர் கிளைமாக்ஸ் பைட்
https://www.youtube.com/watch?v=yy-MKdRwhHs
https://www.youtube.com/watch?v=vtYZYxvsToM
Monotony Breakers!
வில்லங்க கானங்களும் வெல்லங்களே!
Quote:
அக்மார்க் வில்லன்கள் கோலோச்சிய தமிழ்த் திரையில் அந்த முத்திரையை உடைத்துக் கொண்டு இந்தப் பூனையும் பால்குடிக்குமா பாவனையில் அவர்கள் பாடினால் எப்படி இருக்கும் ?!
சில வில்ல(ன்)ங்கானங்களும் ரசனைக்குரிய பக்கங்களே!
Part 1 : S.A. Natarajan / Mandhiri Kumari (1950)
வில்ல நாதம் 1 : எஸ் ஏ நடராஜன் / மந்திரிகுமாரி (1950)
வில்லநாதம் என்றதும் பளீரென்று மனதில் முதல் சிம்மாசனமிடுவது மந்திரிகுமாரியின் மனம் கவர்ந்த உன்மத்த வில்லன் திரு எஸ் ஏ நடராஜன் அவர்கள் மாதுரியின் இணைவில் திருச்சி லோகநாதனாரின் வெண்கலக் குரலில் பாடிய வில்லங்க கானங்களே !
வித்தியாசமான வில்லத்தனம் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது !
https://www.youtube.com/watch?v=T32rZg8M4xs
https://www.youtube.com/watch?v=0NL8bj5yj2o
ஏனோ சரியாக ஜொலிக்காது மின்னி மறைந்த நட்சத்திர வில்லன் !
https://www.youtube.com/watch?v=plqO-ExzqLY
From Chandi Rani (Tamil)
Vaan meethile....
http://www.youtube.com/watch?v=5PdL5VnbXnw
From Chandi Rani (Telugu)
O Taraka....
http://www.youtube.com/watch?v=NcCanl78qsU
From Chandi Rani (Hindi)
Chanda Tale Muskuraye
http://www.youtube.com/watch?v=Utp7OQq-nM0
ChinnakkaNNan: Hope you get to sleep well listening to these songs ! :)
Monotony Breakers!
வில்லங்க கானங்களும் வெல்லங்களே!
Part 2 : S.V. Ramadas / Karnan (1964)Quote:
அக்மார்க் வில்லன்கள் கோலோச்சிய தமிழ்த் திரையில் அந்த முத்திரையை உடைத்துக் கொண்டு இந்தப் பூனையும் பால்குடிக்குமா பாவனையில் அவர்கள் பாடினால் எப்படி இருக்கும் ?!
சில வில்ல(ன்)ங்கானங்களும் ரசனைக்குரிய பக்கங்களே!
வில்ல நாதம் 2 : எஸ் வி ராமதாஸ் / கர்ணன் (1964)
எனக்குத் தெரிந்து வேறு எந்தப் படத்திலும் திரு ராமதாஸ் அவர்களுக்குப் பாடும் வாய்ப்பு தரப்படவில்லை!
எப்பேர்ப்பட்ட வாழ்நாள் வாய்ப்பு நடிகர்திலகம் ரசித்து நோக்க ஜெமினியை நினைவு படுத்தும் ஒப்பனையிலும் ஜெமினியின் பி பி எஸ் குரல் குழைவிலும் பசுமையான நினைவுப் பாடலை அவரால் முடிந்த அதிகபட்ச நடிப்பில் வெளிப்படுத்திய ராமதாஸ் அவர்கள் வியப்பின் சரித்திரக் குறியீடே!!
அதற்கப்புறம் அவர் பாடிக்கொண்டேயிருந்த ஒரே பாடல் அவரது டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டாரான 'எஸ் பாஸ்....எஸ் பாஸ்' பாட்டே!!
நடிகர்திலகத்தின் புதிய பறவை, உயர்ந்த மனிதன், வசந்த மாளிகை, பாரத விலாஸ் படங்களிலும் முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களை ஏற்றார் !
https://www.youtube.com/watch?v=yVK484f064M
வில்லங்க கானங்களும் வெல்லங்களே!!
பகுதி 3 : எம் என் நம்பியார் / மக்களைப் பெற்ற மகராசி
தமிழ்த் திரையுலக உச்ச வில்லனாகத் திகழ்ந்தவர்! உத்தம புத்திரன், குடியிருந்த கோயில்.......
மக்கள் திலகத்தின் பெரும்பாலான படங்களில் பிரதான வில்லனானாலும் நடிகர்திலகம் / காதல் மன்னர் படங்களிலும் மனதில் பதியும் பாத்திரங்களை திறம்பட
ஏற்றவர். அவரும் பாடல் காட்சியில் பாந்தமாக நடித்திருக்கிறார் என்பதை நம்பவே முடியவில்லை !
மீசையற்ற மழித்த முகவெட்டில் எவ்வளவு அமைதியான ஹீரோவாகப் பாடி நடிக்கிறார் !!எம் என் ராஜம் பொருத்தமான ஜோடியே !
https://www.youtube.com/watch?v=KycUfixL14U
mirudhanga sakkaravarthi !வில்லப் பாடகர்
https://www.youtube.com/watch?v=grg1KgK0r8I
16 Vayathinile (1977) was Bharathiraja’s debut movie; with Kamal, Sridevi and Rajinikanth
in the lead roles. Music was composed by Ilaiyaraja, and the songs were very popular.
Here is “செந்தூரப் பூவே…”, for which S. Janaki won the National Award for Best Female Singer:
https://www.youtube.com/watch?v=fDWzxR0N8Sk
The Telugu version Padaharella Vayasu (1978) featured Chandra Mohan, Sridevi and Mohan Babu,
and was directed by K. Raghavendra Rao. Music was by K. Chakravarthi, but Ilaiyaraja’s tune was
reused in “sirimallepoovaa sirimallepoovaa…” sung again by S. Janaki…
https://www.youtube.com/watch?v=0v2C8m1lM1Y
In 1979, Bharathiraja himself directed a remake of the movie in Hindi. Solva Sawan had
Amol Palekar, Sridevi and Kulbhushan Kharbanda in the lead. This was Sridevi’s and Bharathiraja’s
first Hindi movie. Jaidev composed the music, and “செந்தூரப் பூவே…” became
“pee kahaan pee kahaan…” sung by Vani Jairam:
https://www.youtube.com/watch?v=-Jefskd5SEc
சிவாஜிசெந்தில் சார்..
இதோ கவிதா படத்தில் ராஜசுலோசனாவுடன் எம்.என்.நம்பியாரின் இன்னொரு டூயட்...
https://www.youtube.com/watch?v=IBUG2Am8mPo
[quote]மது சார்
நல்ல கிளிப்பிங் தேடிப்பிடித்து ஞாபகப் படுத்தியமைக்கு நன்றிகள்
நிச்சய தாம்பூலம் படத்திலும் நடிகர்திலகத்தோடு ஆரம்பப் பாடலில் ஹம்மிங் வாயசைப்பார் நம்பியார் சுவாமி
வில்லத்தனம் நெளியும் ஹம்மிங்கே!!
https://www.youtube.com/watch?v=q--oOSZlz-g
//இந்த கான்செப்டுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஷம்மி கபூர் ...சைனா டவுன் மூலமாக//
செந்தில் சார்,
ஜாலியான கான்செப்ட். ரசித்தேன். 'சைனா' டவுன் பாடலை ஏற்கனவே மதுர கானத்தில் பதித்து அலசியுள்ளோம். இப்போது தலைப்புக்கு பொருத்தமாக தந்து குஜால் படுத்தியுள்ளீர்கள்.
//ஒரு காலகட்டத்தில் இந்திய கதாநாயகர்கள் பெரும்பாலும் கிளப்புகளில் ஆடிப் பாடிப் பிழைத்துக் கொண்டிருந்தனர். அப்போது வேலை வெட்டியில்லாமல் தோழிகளுடன் ஊர் சுற்றும் கதாநாயகிகள் இம்மாதிரி கிளப்புகளுக்கும் பொழுது போக்க வருவார்கள் !!//
அருமை! ரசித்துச் சிரித்தேன். உண்மையும் கூட. அதுவும் ஹிந்தித் திரைப்படங்களில் நீங்கள் மேற்கூறிய விஷயங்கள் அப்போது ஒரு திரைப்படம் விடாமல் அத்தனைப் படங்களிலும் ஆட்கொள்ளும்.
'பத்லி கமர் ஹே திரிச்சி நசர் ஹே'
என்று ராஜ்கபூரின் 'பர்ஸாத்' திரைப்படத்தில் முகேஷ் பிரேம்நாத் அவர்களுக்காகப் பாடும் பாடல் ஒன்று வரும். 1949 ல் வந்த படம். சும்மா கலக்கல் பாடல். நிம்மியின் சோகத்துக்கு லதா குரல் கொடுக்க சோகமும், சரசமும் மாறி மாறி அற்புதமான பாடலாக இது அமைந்து விட்டது. கிளப் ஆர்ப்பாட்டம் பாதியும், கலங்க வைக்கும் கண்ணீர் பாதியுமாக அற்புதக் கலவை இந்தப் பாடல். நடுவில் வரும் அந்த உற்சாக 'யேய்' குரலை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாதே. சங்கர் ஜெய்கிஷனின் அற்புதங்களில் ஒன்று, பிரேம்நாத் நெடுநெடுவென்று இளமையாக, ஜோராக இருப்பார். காட்சி ரிச். உடன் குக்கூ ஆடுவார். முகேஷின் குரல் காந்தம் போல இழுக்க லதாவின் குரல் அப்படியே உருகும். நம்மை உருக்கும்.
https://youtu.be/ApgDXzpYRKw
நம்ம நம்பியார் 'மர்மயோகி' திரைப்படத்திலேயே நல்ல கருத்துக்களை கழுதை மூலம் சொல்லி விட்டார் பாடல் வழியாக . நம்பியார் வழு வழு என்று அவ்வளவு அழகு. படத்தில் ஹீரோவுக்கு கவுண்டமணி, சந்தானம் போல பக்க பலம்.
'கழுதையிலே ரெண்டு விதம்
நல்லதுண்டு கெட்டதுண்டு
ஒன்று கத்தயிலே நல்லதென்பார்
மற்றொன்றை புத்தியிலே கெட்டதென்பார்
குட்டியாய் இருக்கையிலே
குதிரையைக் காட்டிலும்
லட்சணத்தில் எட்டு மடங்கு
கழுதை
குட்டியாய் இருக்கையிலே
குதிரையைக் காட்டிலும்
லட்சணத்தில் எட்டு மடங்கு
ஆளைப் பார்க்காதே கழுதை
அடிபட்டு செத்துப் போவே
ஒழுங்கா நடந்துக்கோ'
என்று ஜாடைமாடையா நம்பியார் கழுதையை திட்டும் சாக்கில் மனிதர்களைத் திட்டுவார். அருமை.
https://youtu.be/fJ0FupumG_w
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
*
சி.செ..கோல்டன் ஐ பார்த்தது துபாயில் நள்ளிரவு 01.15 மணிக்காட்சி.. காலங்காலை 4 மணி அளவில் படம் முடித்து விட்டு சோடியம் வேப்பர் விளக்கொளியில் காரில் வந்து கொண்டிருந்தபோது போலீஸ்கார் கைகாட்டி ஓரங்கட்டச் சோல்லி - மனைவியார் தான் ஓட்டிவந்தார்- லைசென்ஸ் எடு எனக் கேட்டது மறக்க இயலாத ஒன்று.. டிக்கெட் எல்லாம் கேட்கவில்லை..! கொஞ்சம் த்ரில்லான படம் தான்..வேறென்ன செய்வது என 006 அந்த டாங்கரை ரயிலில் மோதச் சொல்லும்போது அவருக்கே சிரிப்பு வந்தது துல்லியமாகத் தெரிந்தது..வில்லங்க வில்லி, ஹீரோயின் ஸோ ஸோ.. கட்டக் கடோசியில் ஐயாம் இன்வின்சிபிள் எனும்போது லிக்விட் நைட்ரஜன் வந்து அந்தக் குண்டுப்பையனை உயிர்(இல்லாத) சிலையாக்குவது ஜோர்.. அந்த பேனா அமுக்கும் நிமிடங்களில் ஹ்ருதயத்துடிப்பு எகிறும்..
வில்லங்க வில்லன்களில் பறக்கும் பறவை நீயே பாட் போடலாம் என்றால் மதுண்னா முந்திக் கொண்டுவிட்டார்
எஸ்.வி.ராம்தாஸ் டூயட் பாடியிருக்கிறார் தெரியுமோ.. ஏதோ ஒன்று தேடுகையில் பார்த்த நினைவு..சேமிக்க மறந்து விட்டேன்..இனி மதுண்ணா வாசுண்ணா பாடு..
//ஒன்று கத்தையிலே நல்லதென்பார்
மற்றொன்றை புத்தியிலே கெட்டதென்பார்// வாஸ் பாட் இனிதான்கேக்கணும்..ம்ம் ஆனாக்க ஒங்க பேர்ல கோபமாங்காட்டியும்..ஒய்.. சொல்றேன்..
ஏ.சி.தி யின் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேனா நேற்று..( சுவாரஸ்யமாக அவருக்கு எழுதத் தெரியவில்லை இது என்கருத்து) அதில் ஒரு பாட் - ஆசாரியெல்லாம் பிடித்து அவர் மனதில் தோன்றிய காட்சியை- வட்ட வட்டமான தாமரை இலை செய்து அடியில் கயிறெல்லாம் கொடுத்து மரத்தில் இருத்தி, பின் நடுவில் தாமரைப்பூ என செட் போட்டு- ஏவிஎம் செய்ததை - அந்தப் பாட்டை- அது எடுபடாமல் போனதை எழுதியிருந்தாரா..அதுபற்றி எழுதலாம் என நான் நினைத்தேனா..கூகுள் செய்தேனா..
பார்த்தால் வாசு ஏற்கேனவே போட்டாச்.. விலாவாரியாக.. நற நற..
http://www.mayyam.com/talk/showthrea...%AF%8D/page282
ஏ.சி.தி சொன்ன அடிஷனல் இன்ஃபோ.. இதைக் கலர் ப்ரிண்ட் போட்டு போவோர் வருவோரிடமெல்லாம் காட்டிக் கொண்டிருந்தாராம் ஏ.வி.எம்.சிலகாலம்..
ம்ம் இது மட்டுமில்லை..வேறு ஏதாவது ரேர் சாங்க் தேடினால் நமது நெய்வேலி கூகுள் அல்லது கடலூர் கூகுள் வாசு ஏற்கெனவே போட்டு வைத்திருக்கிறது.. அவர் போடாத பழைய பாட் கொடுக்காத விஷயம், விளக்கம், படங்கள் தேடுவதே சாலஞ்சிங்கான விஷயம் தான்..வாசு சார்..தாங்க்ஸ்ங்க்ணா ஃபார் யுவர் உழைப்பு.. ஸ்டில் வி வாண்ட் மோர் :)
ராகதேவனின் , ராஜ்ராஜின் பாடல்கள் இனி தான் கேட்கவேண்டும்.. முன்புகொடுத்த பா.பாடல்களுக்கு தாங்க்ஸ் ராஜ்ராஜ்சார்..:)
நம்பியார் இந்த நஙகையுடன் உள்ளத்தில் நஞ்சு உதட்டில் புன்னகையுடன் படகு விடும் தேன் நிலவை விடலாமோ சி.செந்தில்..
https://youtu.be/9g2xFmZzTv4
மீள் பதிவு
**
*****
கறுப்பு உருவம்.. திடகாத்திரமான தேகம்..கண்களில் கொஞ்சம் அனுபவ அறிவு..இருபது வயதுக்கு அதிகம் தான்.. நான் சொல்வது என் கல்லூரி சினேகிதன் ரகுராமனைப் பற்றி..செல்லமாய் ஆர்க்யூப் என்றழைப்பேன்.(ஆர்.ரகுராம்)..
அந்த ரகுராம் ஒரு நாள் கல்லூரியில் “வாடா.. அபிராமின்னு புதுசா ஒரு தியேட்டர்..அதுல ஒரு நல்ல ஹிந்திப் படம் போகலாம்” எனக் கேட்க லவ்லெட்டர் கொடுத்த இளைஞனை முறைக்கும் இளைஞியைப் போல் முறைத்தேன்..
“டேய்.. எனக்கோ ஹிந்தி சுட்டும் வராது..உனக்குத் தெரியும்.. தியேட்டர்ல நான் என்ன பண்ண” “ச்சும்மா வாடா..பிகு பண்ணாம”என மூன்றாம் பீரியட் தமிழை வெட்டி விட்டு, தரதரவென்று பஸ்ஸில் இழுத்துச் சென்று கல்லூரியிலிருந்து 45 நிமிஷப் பயணத்தில் பெரியார் பஸ்ஸ்டாண்ட் வந்து அரக்கப் பரக்க 4ம் நம்பர் பெரியார் பேருந்து நிலையம் டு தெப்பக்குளம் பஸ் ஏறி அலங்கார் தியேட்ட்ருக்கு அடுத்த ஸ்டாப்பான அபிராமி என இறங்கி இருந்தபெட்டிக்கடையில் ‘அபிராமி’ என விசாரிக்க(அப்போ குணாவெல்லாம் வரவில்லை) புது தியேட்டராப்பு என எதிர் தெரிந்த சந்தினைக் காட்டினார் பெட்டிக்க்டைக்காரர்..
வாடா என ரகு அவசரப் படுத்த வேக வேகமாக சந்துகளில் புகுந்துபுறப்பட்டு தியேட்டரில் நுழைந்து ‘என்ன படம்டா..எனக்குப் பசிக்குதே” எல்லாம் உள்ள வாங்கித் தரேன் வா – படம் பேரு கர்ஸ் எனச் சொல்ல ஏண்டா என்னை சபிக்கிறே எனச் சொன்னதும் என்னை ரகுமுறைத்தது இன்னும் நினைவிருக்கிறது..
உள் நுழைந்து சந்தோஷமாய் சூடாய்க் கிடைத்த ஏதோ வடையோ சமோசாவோ உள்ளே தள்ளி தியேட்டரில் நுழைந்தது முதல் அவனைக் கலாய்த்துக் கொண்டுதானிருந்தேன்..
மூக்கும் முழியுமாய் குட்டிப் பெண்ணாய் லட்சணமாய் அவ்வப்போது குட்டைப் பாவாடையில் டினா முனிம், செவேலென்று வார்த்த ஸ்பெஷல் ரோஸ்ட் தோசை நிற்மாய் ரிஷிகபூர் என படம் புரிவதற்கு ஒன்றும் கஷ்டமில்லை தான்..இருந்தாலும் து சோல பரஸ்கி மே சத்ர பரஸ்கா என பாட ஆரம்பிக்க என்னடா அவ சோழ தேசத்தவ இவன் பல்லவன் கறானா என அப்பாவியாய் நான் கேட்க வெகுசீரியஸாய் படத்திலிருந்துகண்ணெடுக்காமல் ரகு பதில் சொன்னான்..- அவளுக்கு பதினாறு வயசு இவனுக்குபதினேழு வயசுங்கறாண்டா.. ஓம் சாந்தி ஓம் பாடலின் போது யாருடா அந்த சாந்தி..அதுபாட்டுடா.. இப்படியே பல விஷயங்கள் வாரிக்கொண்டிருந்தேன்..
பிற்காலத்தில் ஒருவருஷமோ இருவருஷமோ கழித்து எனக்குள் ஒருவன் பார்த்தபோது கர்ஸ் பார்த்த திருப்தி ஏற்படவில்லை..
முந்தா நாள் ஸீ க்ளாஸிக் சினிமாவில் கர்ஸ் பார்த்த போது இந்த நினைவெல்லாம் வர, கண்ணில் நீர் முட்டியது..ஏனெனில் நான்கு வருடம் முன்பே ரகு சடன் ஹார்ட் அட்டாக்கில் இறந்ததாய்க் கேள்விப் பட்டேன்..அதுவும் அவனைப் பார்த்தே பல வருடங்கள் இருக்கும்..என்றாவது ஒரு நாள் பார்க்கலாம் என்றிருந்த் போது அந்த எ ஒ நா வராமலேயே போய்விடும் என நினைத்துக் கூட ப் பார்க்கவில்லை..
*
https://youtu.be/7_DT-fnCImQ
டூயட் பாட்டுன்னா ரெண்டு பேர் பாடுறதில்லையா சிக்கா...
இந்தாங்கோ மூணு பேர் பாடும் பாட்டில் ராமதாஸும் நடிக்கிறாருங்க..
குழந்தைக்காக படத்தில் சீர்காழி, டி.எம்.எஸ்., பி.பி.எஸ் குரல்களில் மேஜர் சுந்தரராஜன், மனோகருடன் ராமதாசும்..
( சிக்கா தேடினாலும் சிக்காத வகையில் சிவாஜி ரேர் சாங்க்ஸ்னு தலைப்பு வச்சிருக்காங்க :) )
https://www.youtube.com/watch?v=pCyi8pKyCzk
சின்னா!
நன்றி. மது அண்ணா தந்தது போல் இன்னொரு பாடல். ஏற்கனவே இன்றைய ஸ்பெஷலில் போட்டிருந்தாலும் ராமதாஸ் பங்கு கொள்வதால் இந்தப் பாடல் 'விஜயபுரிவீரன்' திரைப்படத்திலிருந்து.
'உள்ளத்திலே உரம் வேணுமடா
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா'
https://youtu.be/x6hZNQ-chcw
ராமதாஸ் பங்கு கொண்ட இன்னொரு பாடல். ஆனால் ஈஸ்வரி மட்டுமே பாடுவார்.
'வீரத் திருமகன்' படத்தில்
'கேட்டது கிடைக்கும்
நினைப்பது நடக்கும்
பதவி வேண்டுமா
என் உதவி வேண்டுமா'
அருமையான பாடல்.
https://youtu.be/lBMcYqu8ZV4
ஊக்கம் தரும் ஆக்க பூர்வமான கருத்து எண்(ணை)ணப் பரிமாறல்கள்தான் இந்தத் திரி நன்கு தூண்டப் பட்டு சுடர் விட்டுப் பிரகாசிக்க செய்கின்றன வாசு சார்/மது சார்/ சி க சார்/ரவி சார் !
எந்த சூழலிலும் மன முதிர்வுடன் அனைவரையும் அரவணைக்கும் அருமையான பதிவத்தோழர்கள் குழாமில் இணைந்திருப்பது மன ஆறுதலைத் தருகிறது.
மனக் காயங்களுக்கு மருந்தாக இங்கு பதிவிடப் படும் தேனிசைப் பாடல்கள் பற்றிய அலசல்கள் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே வருகின்றன.
திரியின் அபார வளர்ச்சியும் கண் பட வைத்திடும். ஊர் கூடித் தேரிழுத்திடுவோம்...இதே உற்சாகத் துள்ளல்களுடன்!
வில்லங்க கானங்களும் வெல்லங்களே!
பகுதி 4 அசோகன் / இது சத்தியம்...வல்லவனுக்கு வல்லவன்..பாத காணிக்கை....
Quote:
தமிழ்த் திரை பாரம்பரியத்தில் அசோகனுக்கு ஒரு தனியிடமுண்டு அவரும் சில பல திரைப்படங்களில்...இது சத்தியம், வல்லவனுக்கு வல்லவன், மணப்பந்தல்...கதா நாயகராகவும் பாத காணிக்கை, கர்ணன், உயர்ந்த மனிதன் போன்ற படங்களில் நல்ல குணசித்தரிப்பிலும், அடிமைப்பெண், உ சு வா பிரதான வில்லனாகவும், நான், மூன்றெழுத்து..நகைச்சுவைப் பங்களிப்பிலும் மிளிர்ந்தார்! உயர்ந்த மனிதனில் நடிகர்திலகத்துடன் உன்னத இடம்!!
சத்தியம் இது சத்தியம் பாடல் காட்சியமைப்பும் அசோகனின் உடல்மொழி அசைவுகளும் பாசம் மக்கள் திலகத்தின் உலகம் பிறந்தது எனக்காக பாணியில் !
https://www.youtube.com/watch?v=17pPQil2Jc0
வல்லவனுக்கு வல்லவனிலும் எம் ஜி ஆரை நினைத்து நடன அசைவுகள் ..
https://www.youtube.com/watch?v=olTtgpu4au4
இன்னொரு உத்தம வில்லர் மனோஹருடன் ..சாவித்திரியுடன் (ஜெமினியும் இப்படத்தில் மாறுதலான வில்லன்!!)
https://www.youtube.com/watch?v=olTtgpu4au4
ஓராயிரம் பார்வையிலே ...ஒரு சில ப்ரேம்களே!! அருமையான பாடல் காட்சிப் பதிவு
https://www.youtube.com/watch?v=C9muhp0Upuc
பாதகாணிக்கையில் ஜெமினி இணைவில் ..நடிகர்திலகம் தரப் பாடல்! வீடுவரை உறவு....
https://www.youtube.com/watch?v=4cEOPNXnESw
'ஆணையிட்டேன் நெருங்காதே' (புன்னகை)
ஜெயந்தியின் கட்டளைக்கு அடிபணியாமல் மிகக் கொடூரமான காம வெறியுடன் ராமதாஸ் குடி போதையில் அவரை சீரழிக்கத் துடிப்பது படம் பார்ப்பவர் ஒவ்வொருவர் நெஞ்சத்திலும் 'திக்திக்'கை ஏற்படுத்தும். ஜானகி கத்தல், கதறல், பதப்படுத்தப்பட்ட புலி உருவம், சுழலும் காமெரா என்று திரில்லர் ரேஞ்சுக்கு பயமுறுத்தும் பாடல்.
https://youtu.be/Fvff4uFR8mo
ராமதாஸ் பங்கு கொள்ளும் பாடல்களில் மேலும் ஒன்றிரண்டு என் நினைவுக்கு எட்டிய வரையில்...
கற்பழிப்பு காட்சியில் சாவகாசமாக பாட்டுப் பாடி கெஞ்சும் பெண்மணியைப் பார்த்திருக்கிறீர்களா.. இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம்..
https://www.youtube.com/watch?v=uAqGxGFDv-I
வாசு சார் சொன்னதெல்லாம் வாஸ்தவம்.. அந்த உணர்வெல்லாம் நிஜமே.. ஆனால் கான்செப்ட் தான் இடிக்கிறது...
https://www.youtube.com/watch?v=3kJm5268QTk
இதுவும் கிட்டத்தட்ட அந்த மாதிரி சூழல் தான்.. ஆனால் அந்த அளவிற்கு அல்ல.. அதற்கு ஒரு தயார் நிலையில் வில்லன் நெருங்க முற்படுகிறான்.. சூழ்நிலை சற்றே வித்தியாசமானது..
வாசு சார்
என்ன சார் இது டெலிபதி...இரண்டு நிமிட இடைவெளியில் இருவருமே ஒரே பாடலைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்..
சரி சரி..அப்படியே இருக்கட்டும்... நம் டெலிபதிக்கு இது ஒரு உதாரணமாகட்டுமே...
சின்னா
அது போலவே 'சத்திய முத்திரை கட்டளை இட்டது நாயகன் இயேசுவின் வேதம்'.... 'கண்ணே பாப்பா' படப் பாடலில் விஜயகுமாரியுடன் இணைந்து குழந்தைகளுடன் குதூகலிக்கும் நம்பியாரையும் பார்த்து விடுவோம். பாடலின் துவக்கத்தில் நம்பியார் கைவிரல்களால் போடும் 'சொடுக்'கைக் கவனியுங்கள்.
https://youtu.be/3o_VSo6wTo8
https://www.youtube.com/watch?v=s8X8RDou9-Y
மனோகரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற பாடல்களில் இதற்கு தனி இடம் உண்டு. இன்னொன்று வண்ணக்கிளி. அடிக்கிற கைதான் அணைக்கும்.
மனோகர் ஷீலாவுடன். அருமையான ஜோடிப் பொருத்தம். ஈஸ்வரியின் அலட்சியக் குரல் பாவம்.
அம்மம்மா!
கன்னத்தில் கை வைத்தால் எடுக்காமல் நம்மை மறந்து பார்க்கத் தூண்டும் பாடல். கிடாரின் இனிமை ஒன்றுக்கே காசு. சுகம் என்ன சொல்லு.:)
https://youtu.be/D6MeYM6Z7kI
ஹ்ம்.. தலைவர் பட வசனம் நமக்கு எப்படியெல்லாம் கை கொடுக்கிறது..Quote:
தம்பி .. நான் நெனச்சேன் நீ சொல்லிப்புட்டே..
அதாண்ணே நமக்குள்ள அதிசயப் பொருத்தம்...
[ அங்கே யாரோ சில நண்பர்கள் நற நற... இவர்களுக்குள்ளேயே பேசிக்கிறார்கள் ... இது எந்தப் படத்து வசனம்னு தெரியலியே.. தலைவர் படம்னு வேற சொல்றாங்க...]
வில்லங்க கானங்களும் வெல்லங்களே!
பகுதி 5 மனோகர் / வண்ணக் கிளி
வண்ணக்கிளியில் அடிக்கிற கைதான் அணைக்கும் ....எப்போதும் பேசப்படும் பாடல் காட்சியமைப்பு!Quote:
நாடகங்களுக்கு நல்லாதரவு தந்திட்ட திரைக்கலைஞரான மனோகர் அவர்கள் ஆரம்ப காலங்களில் சில படங்களில் கதாநாயகராகவும் (தாய் உள்ளம் மனோகர் கதாநாயகராகவும் ஜெமினி வில்லராகவும்) , காலப் போக்கில் பல வருடங்கள் மாடர்ன் தியேட்டர்ஸின் (with TR Ramannaa's RR and Vinaayakaa pictures too!) முதல் போடாத பார்ட்னராகவும் பின்னாளில் முழுநேர வில்லனாகவும் மாறினார் !
ஆயிரத்தில் ஒருவன், வல்லவன் ஒருவன், தங்கசுரங்கம்,நான், மூன்றெழுத்து, மீண்டும் வாழ்வேன் சொர்க்கம், ஒளிவிளக்கு, ராஜா குறிப்பிடத் தகுந்தவை
https://www.youtube.com/watch?v=iH5qj1ADzS8
அகத்தியரில் ராவணேஸ்வரனாக ....வென்றிடுவேன்.....
https://www.youtube.com/watch?v=z5wZVG_oJiI
ஏனோ தமிழ்த் திரை இடிச் சிரிப்பு வில்லன் பி எஸ் வீரப்பாவுக்கு மட்டும் பாடல்கள் அமையவில்லை !
ஆனாலும் அவர் பங்கு பெறும் 'சபாஷ் சரியான போட்டி' வஞ்சிக்கோட்டை வாலிபன் இரு துருவம் பாடல் காட்சிகள் ரசிக்கத் தகுந்தவை !
https://www.youtube.com/watch?v=nksJd_aANLE
அடடடா... ஆஃபீஸ் லருந்து வீட் வர்றதுக்குள்ற இவ்ளோ பாட் கொத்துக்களா.. ஆல் நன்றிங்கோவ் :)
இனி ஒன் பை ஒன்..
( சிக்கா தேடினாலும் சிக்காத வகையில் சிவாஜி ரேர் சாங்க்ஸ்னு தலைப்பு வச்சிருக்காங்க// :) அதானே மதுண்ணா ரொம்ப மோஸ்ஸம் அவங்க..தாங்க்ஸ்..
*
வாசு
உள்ளத்திலே உரம் வேண்டுமடா ( ராமதாஸ் நன்னா கை நீட்டறார்!)
கேட்டது கிடைக்கும் (என்னா பாட்டுங்க இது- நான் மட்டும் ராம்தாஸ் போஸ்ட்ல இருந்தேன்னா பொண்ணுக்காக இல்லாட்டியும் குரலுக்காக பதவில்லாம் வேண்டாம்புள்ள..ஹெல்ப் மீ சொல்லியிருப்பேன்..:)
நாங்களும் ஆணையிட்டேன் நெருங்காதே நெனச்சோமுல்ல.. நீங்களும் ராக்வேந்திரா சாரும் சொல்லிட்டீங்க..//
ஹப்புறம் சத்திய முத்திரை கட்டளையிட்டவர் பாட் கேக்கப் பிடிக்கும்.. நிறைய தபா கேட்டு மனம் கவர்ந்த சாங்க்.. பாத்ததுங்கறது ரொம்ப ரேர்.. நம்பியார் சொடுக் பேஷ் பேஷ்..
அம்மம்மா கன்னத்தில்கன்னம் வைத்துக் கொள்ளு..ம்ம் கொ.வை. ம. தாங்க்ஸ் ஃபார் த குட் பாட் ஸ் வாசு
*
நிலவு வந்து பாடுமோ நல் பாட் தான் ராகவேந்தர் சார்..பட்ட் ஆகட்டும்…அங்கு வந்து பார்க்கட்டும்..அப்படின்னு வீச்சுன்னு ஹைபிட்ச்ல கத்துறப்ப நான் பயந்து போயிருக்கேன்.. சின்ன வயசுல..!
*
ஹை.. தோப்பில் மாடு மேஞ்சா என்ன
தோட்டம் வீணாப் போனா என்ன –
என் ஆசை மானே உதவி பெறலாம் சும்மா கிட்டே வா ( நல்லாருக்கே கதை!)
ஆசை கொண்ட மங்கையோடு ஆயுள் பூரா வாழவேண்டும்…
என் ஆசை மாமா பாடி என்னை மயக்கிடாதேடா (இலக்கணப்பிழை.. … மாமா என்றால் மரியாதைச் சொல்..ஸோ மயக்கிடாதேங்கன்னு வந்துருக்கணும்..!)
தாயுமில்லை தந்தையில்லை வேறு எனக்குத் தெரியவில்லை.
.நானும் உன்னை நாடி வந்தேனே ..
என் ஆசை மாமா நானும் உனக்கே அடிமை ஆனேனே..( அப்ப்டிச் சொல்லாதே செல்லம்!)
ஆசையாலே பாசத்தாலே அன்பினாலே சேர்ந்த நெஞ்சம்
பேசி ப் பேசி இன்பம் கண்டிடுமே (ரியலி..ஓ போரா இருக்காது :))
என் ஆசை மானே..பிறவிப்பயனை இன்று கண்டோமே (மவனே.. ஒரு அஞ்சுவருஷம் கழிச்சுச் சொல்லிப்பாரு!)
நல்ல பாட்..பட் நான் கேக்க மட்டும் செஞ்சுருக்கேன் இப்பதான் பாக்கறேன் ( மறுபடியும் செள.. நற நற) இந்தப் பாட்டா மனோகரை உச்சிக்குக் கொண்டு போனது (எம்.எஸ்.ராஜேஸ்வரியோட வாய்ஸ் ரொம்பக் க்யூட் ஸம் வாட் இட் சூட்ஸ் த டான்ஸிங் லேடி!) தாங்க்ஸ் ராகவேந்தர் சார்..
*
சி.செ.. அகெய்ன் இதுசத்தியத்தில் அசோகனுக்கு வந்த வாழ்வு எல்லாப் பாட்டும் அட்டகாசம்.. இது சத்தியம் பாட்டை விட மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்கல்லும் கனியாகும்.. அதை விட் புட் டீஹளே நியாயமா.. தென் வித் யுவர் பெர்மிஷன்.. நீங்கள் போடப் போகும்- வில்லன் பாட்டுக்களிலிருந்து ஒரு வில்லன் பாட்டு (பிற்காலத்துல வில்லனானவர்..அவர் பாட் போட்டுக்கட்டா..)
*
https://youtu.be/conoVD4PL5M
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னைக் கேட்டால் என்ன தெரியும்
என் மனம் என் வசமில்லையே.. mm jaishankar Lakshmi.. படம் ஒருவனுக்கு ஒருத்தியாம் ஜேசுதாஸ் ஜானகி.. படம் எப்படி இருக்கும்?
பின்ன வாரேன் :)
ஆஹா.. போட்டு வாங்குறீங்களே சார்..Quote:
ஏனோ தமிழ்த் திரை இடிச் சிரிப்பு வில்லன் பி எஸ் வீரப்பாவுக்கு மட்டும் பாடல்கள் அமையவில்லை !
ஆனாலும் அவர் பங்கு பெறும் 'சபாஷ் சரியான போட்டி' வஞ்சிக்கோட்டை வாலிபன் இரு துருவம் பாடல் காட்சிகள் ரசிக்கத் தகுந்தவை !
இப்படியெல்லாம் கேட்டா நாங்க சொல்ல மாட்டோமாக்கும்..
பாடல் விவரம் வேணும்னா கேட்டுத் தான் வாங்கணும்... போட்டு வாங்கக் கூடாது..
இருந்தாலும் போனால் போகட்டும் சொல்றேன்..
ஓ...மாமா...மாமா...
வாசு சார்... வீடியோ ப்ளீஸ்....லிங்க் கிடைக்கவில்லை...
மாற்றார் தோட்ட மெல்லிசை மதுரங்கள் !
ஹாலிவுட்டின் ஆடல் பாடல் காவியங்கள் !!
பகுதி 26 : Fred Astaire :
பிரெட் ஆஸ்டையரின் காலம் வென்ற நடனப் பாடல்கள்!!
Quote:
ஹாலிவுட்டைப் பொறுத்த வரை நடனங்களும் பாடல்களும் படங்களில் இடைச் செருகலாக இல்லாமல் பெரும்பாலும் தனிப்பட்ட கதையமைப்புடன் சிறப்புப் படங்களாகவே எடுக்கப் பட்டன !
இந்த வரிசையில் பிரெட் ஆஸ்டையர், ஜீன் கெல்லி இருவருமே உலகின் நடன ஆரம்ப கட்ட ஜாம்பவான்கள். பெரும்பாலான பிரபுதேவா நடனங்களில் இவர்கள் சாயலும் ஜாக்ஸன் சாயலும் தூக்கலாக இருக்கும் ! எல்விஸ் பிரஸ்லியும் இந்த வரிசை ஆடல் பாடல் ஜாம்பவானே!!
பிரெட் ஆஸ்டயரின் நினைவு கூரல்!
சுவற்றிலும் சீலிங்கிலும் ஏறி ஆடும் அற்புதப் படப் பதிவு கிராபிக்ஸ் இல்லாத காலத்திலேயே (1951)
https://www.youtube.com/watch?v=RU_hFQg700s
உனக்காக எல்லாம் உனக்காக ..சந்திரபாபுவுக்கும் இவரே இன்ஸ்பிரேஷன்!!
https://www.youtube.com/watch?v=oglrB4w6jaY
https://www.youtube.com/watch?v=yTH9VwACh7o
https://www.youtube.com/watch?v=myBhVCik8xk
https://www.youtube.com/watch?v=MsS7B8nyw5Y
ம்ஹ்ம்.. இந்தப் பாட்டு எப்பவுமே பயமுறுத்தற பாட்டுத்தேன்... அப்போ கேட்டு பயந்திருப்பீஹ.. இப்பா ஹீரோயினைப் பாத்து பயந்திருப்பீஹளோ..Quote:
நிலவு வந்து பாடுமோ நல் பாட் தான் ராகவேந்தர் சார்..பட்ட் ஆகட்டும்…அங்கு வந்து பார்க்கட்டும்..அப்படின்னு வீச்சுன்னு ஹைபிட்ச்ல கத்துறப்ப நான் பயந்து போயிருக்கேன்.. சின்ன வயசுல..!
//இப்பா ஹீரோயினைப் பாத்து பயந்திருப்பீஹளோ// ஹாங் ஜி ஹாங்க் :)
சி.செ.. உங்களுக்காகவும் ராஜ் ராஜ் சாருக்காகவும் :)
என் ஆட்டமெல்லாம்... பானுமதி பி.எஸ்.வி..
https://youtu.be/ghcaG6cgAjE
காமெடியர்களின் ஷாம்பெயின் கலக்கல் மதுர கானங்கள்
பகுதி 5 சந்திரபாபு
காமெடி பாடல் ஆடல் முக்கோணத்தின் புவியீர்ப்பு மையப் புள்ளியாக ரசிக இரும்பு துகள்களை ஈர்த்திட்ட காந்தப் புலம்!!
கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே!! ...மீண்டும் எல்லாம் உனக்காக பிரெட் ஆஸ்டையர் பாதிப்பில்!!
https://www.youtube.com/watch?v=vNiSTIT-Uyo
ஆளை ஆளை பார்க்கிறார் ...ரத்தக் கண்ணீர் கிளப்டான்ஸ் பாடல்!
https://www.youtube.com/watch?v=67zlw6YpKtM
குங்குமபூவே ..புதையல்
https://www.youtube.com/watch?v=IA1s8rwx9R8
அவன் கனவில் அவள் வருவாள் அவனைப் பார்த்து சிரிப்பாள் ...ஜீன் கெல்லியின் பாதிப்பில் !!
https://www.youtube.com/watch?v=8ImA2bPgICM
சோகரசமும் கூட ..
https://www.youtube.com/watch?v=OslLZDX_rW0
ராகவேந்திரன் சார்,
இந்தாங்க....
ஹோ ..மா....மா ...மா
முல்லைப் பூவைப் போல என்னைக் கிள்ளு
ஹோ ..மா....மா ...வா
மோகம் கொண்டு தாகம் தீர்த்துக் கொள்ளு
வீரப்பாவின் அராஜகம். அதைவிட ஆடும் பெண்மணி (சோபனா) இன்னும் அராஜகம். ஆனால் விஜயசந்திரிகா ஜாடையில் இருப்பார். அழகுதான்.
சரியாகப் பாடல் 3.59 க்கு அதாவது 'அகரம் தமிழுக்கு சிகரம்' பாடல் முடிந்தவுடன் தொடங்கும்.
https://youtu.be/zlvYm6FQ-zA