Thanxs Easygoer appreciated !
Mr. Rajnikanth ! Not all your Fans are thrilled about.. you continuing acting.. ! (I am 1 of them)
Cow Cow Cash Cow ! Can Can !
And ofcourse we have a good old english statement " Falling from grace"
Printable View
:lol: A2A bro -what can I say, I can't accept everything Mr. RK does (always)! Again in Demogracy ! Everyone has their own onions !
End of the day , "Raana, Gaana Paana" I Will be seeing it FDFS. As we all know following Mr.RK is not a mere Fanfare affair !
"Its like a Religion" Passion does take best of us (sometime)
ரஜினி தனது வழக்கமான உற்சாகத்துக்குத் திரும்பிவிட்டார். அவர் வரும் ஜூலை மாதம் சென்னை திரும்புகிறார். இன்னும் 15 நாட்களில் அவர் வந்துவிடுவார், என்றார் நடிகர் தனுஷ்.
கடந்த ஏப்ரல் 29 முதல் உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட ரஜினி, சென்னை மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தார். ஆனாலும் சிறுநீரகப் பிரச்சினை மட்டும் தொடர்ந்ததால், சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
கடந்த ஏப்ரல் 14-ம் தேதி சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் டிஸ்சார்ஜ் ஆனால். ஆனால் வழக்கமான சில பரிசோதனைகளுக்காக அவர் சிங்கப்பூரிலேயே ஒரு மாதம் தங்கியிருப்பதாக அறிவித்தார்.
ஜூலை முதல் அல்லது இரண்டாவது வாரம் அவர் சென்னை திரும்பக் கூடும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் திருப்பதி திருமலையில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியின் மூத்த மருமகனும் நடிகருமான தனுஷ், "சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் ஆரோக்கியத்துடன் உள்ளார். வீட்டில் உடற்பயிற்சி செய்கிறார். யோகாவைத் தொடர்கிறார்.
சிங்கப்பூரில் உள்ள கடைகளுக்கு சென்று ஷாப்பிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். இன்னும் 15 நாளில் அவர் சென்னை திரும்பிவிடுவார். விரைவில் நானும் சிங்கப்பூர் செல்வேன்," என்றார்
Singapore-leyE oru aaru maasam irukkaRadhu nalladhu, ingE vandhA pichu pidunguvAnga. MediallAm Airport to Home, 15 reporters per square inch vechurpAinga.
Yes, can recommend a nice place to have Soup Tulang (Bone marrow soup, only in Singapore), dark Carrot Cake (it's not a cake). Joe, paarta sollungga.
:smile: "Sar eppadi irukingga-nu" keettu keettu pulichi poyirukkum. Nengga recommend pannungga. Appadiye Fish Head curry, Hokkien Mee, Bak Kut Teh,....
NOV-um Grouch-um engE pOnAlum sAppAttu viLambarathai vuda mAttAnga
grouse, oru doubt.
maattu-vaal soup pathi ungalukku therijadha sollunga.
Had it once, not too impressed - the western version. Not sure about the Chinese version, though. You?
naan kudichadhilla...
nanbar orutthar innoru nanbarukku avar kalyanatthappo recommend pannaar... marutthuva gunatthukkaaga... ;)
adhan ungalukku kandippa theriyumnu kaeten...
CC'la reply pannungo.
Unga weird japanese/chinese/singaporean fan...
http://www.youtube.com/watch?v=VCIzJcpvY_4
http://www.youtube.com/watch?v=K3gHd...eature=related
A2a :lol: look at this one ! 0.53 onwards..
A rare pic
http://i56.tinypic.com/2jetdlf.jpg
Tollywood star Chiranjeevi visits Rajini in Singapore
It is known news to everyone that Superstar Rajinikanth is taking rest in Singapore after discharging from the hospital.
He is staying in an ultra modern service apartment in an up market area in Singapore and will be back in Chennai mostly by 30 days. Tollywood Megastar Chiranjeevi who is a very close friend to Rajini flew to Singapore in order to inquire about his health condition. He visited Rajini and spent sometime and discussed about his health condition. Rajini is visiting the hospital for periodic check ups and now his health is absolutely fine.
He is spending his time with his grand children and doing yoga which is a regular part of his life. Rajini will be starting the shoot of Rana, after taking a few weeks rest.
Meanwhile, his fans are planning for a big reception for Rajini as soon as he returns from Singapore.
சிகிச்சை முடிந்து, சிங்கப்பூரில் ஓய்விலிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நலமுடன் திரும்பி வரவும், புதிய வேகத்துடன் கலைத் துறையில் சாதனை படைக்கவும் அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் கெயக்வாட் பெங்களூர் கோயிலில் தொடர்ந்து 3 நாட்கள் சிறப்புப் பூஜை மற்றும் யாகம் நடத்தினார்.
பெங்களூர் கோவிபுரத்தில் உள்ள அம்பா பாவனி கோயிலில் காலை 8.30 மணிக்கு பூஜை தொடங்கியது. பல்வேறு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. பின்னர் வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திங்கள்கிழமை தொடங்கிய இந்த பூஜைகள் இன்று வரை 3 நாட்கள் நடந்தன. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர்.
இது பற்றி சத்யநாராயணா கூறுகையில், "மருத்துவமனையிலிருந்து தம்பி ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். அவருக்காக ரசிகர்கள் செய்த பிரார்த்தனைக்கு ரஜினி நன்றி தெரிவித்துள்ளார்.
விரைவில் ராணா ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டு நடிப்பார். அதற்கு ஏற்ற வகையில் அவர் முழுமையான உடல் நலம் பெற வேண்டி இங்கு சிறப்பு பூஜை, பிரார்த்தனை செய்தோம்," என்றார்.
Vikatan - Take this with a bucket of salt
ரஜினி ரிட்டர்ன்ஸ்!
இரா.சரவணன்
''இந்த விஞ்ஞான உலகத்தில்கூட எந்த விளையாட்டை விளையாடினாலும், காசை மேலே தூக்கிப் போட்டு யார் முதலில் ஆடுவது என முடிவு செய்றாங்க. காசை மேலே தூக்கிப் போடுவது மட்டும்தான் மனிதனின் வேலை. பூவா... தலையான்னு தீர்மானிப்பது ஆண்டவன் வேலை!'' - படத்தில் அல்ல... படுக்கையில் இருந்தபடி ரஜினிகாந்த் சொன்ன வசனம் இது.
சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் ரசிகர்களுக்கு ரஜினி எழுதிய கடிதத்தில், 'என்னுடைய இந்த விளையாட்டில் ஒரு பக்கம் பணம், மருத்துவம், மிகச் சிறந்த மருத்துவர்கள் என இருக்க... இன்னொரு பக்கம் நான் நலம் அடைய, பிரார்த்தனை கள், பூஜைகள், ஹோமங்கள், விரதங்கள் ஆகியவைதான் என்னைக் காப்பாற்றின. ரஜினிக்கு எவ்வளவு மக்களின் அன்பு இருக்கிறது என்பதை உலகத்துக்குக் காட்டிவிட்டீர்கள். நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை!’ என்று நெகிழ்ந்து இருக்கிறார்.
ரஜினியிடம் இருந்து ஒரு வார்த்தை வராதா என ஏங்கிய ரசிகனுக்கு, இது அடை மழை ஆனந்தம். சிறுநீரக மாற்று சிகிச்சை வரை அவசியம் என்கிற அளவுக்குப் பரபரக்கப்பட்ட ரஜினியின் உடல்நிலை இப்போது, டயாலிசிஸ்கூட அவசியம் இல்லை என்கிற அளவுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது.
இன்னும் 20 நாட்கள் சிங்கப்பூரில் ஓய்வு எடுக்க இருக்கும் ரஜினி, சென்னையில் கால் வைக்கும்போது 'பழைய ரஜினி’யின் சுறுசுறுப்பில் துளி அளவும் குறைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்காக யோகா பயிற்சியை மேற்கொள்ள ரஜினி விரும்ப, 'இப்போதைக்கு வேண்டாம்’ எனத் தவிர்த்தார்கள் மருத்துவர்கள். 'ரெஜு வெனேஷன் தெரபி’ மட்டுமே ரஜினிக்கு இப்போது வழங்கப்படுகிறது. குறைவான உணவு, பிரார்த்தனை, நல்ல தூக்கம், மாடி யில் வாக்கிங் என ரஜினியின் பொழுதுகள் இப்போது ஆரோக்கியமாகக் கழிகின்றன.
சென்னைக்குத் திரும்பிய உடன் செய்ய வேண்டிய வேலைகளாகப் பல முக்கிய விஷயங்களை ரஜினி பட்டியல் போட்டுவைத்து இருக்கிறார். இதோ அந்தப் பட்டியல்...
முதல்வரைச் சந்திக்கிறார்!
ராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினி சேர்க்கப்பட்டபோது, 'அவருடைய உடல்நிலை குறித்த தகவல்களைத் தினமும் கார்டனுக்குச் சொல்லுங்கள்!’ என உத்தரவே போடப்பட்டது. ரஜினியின் சிகிச்சைக்கு அரசுத் தரப்பிலான எத்தகைய உதவியையும் வழங்கத் தயார் எனவும் கார்டனில் இருந்து சொல்லப்பட்டது. 'பழைய’ வருத்தங்களை எல்லாம் மறந்துவிட்டு, ஜெயலலிதா காட்டிய இந்த அக்கறை ரஜினியை வியக்கவைத்தது. அதனால்தான், குணமான உடனேயே முதல் வேலையாக ஜெயலலிதாவுடன் பேசினார். சென்னைக்கு வந்த உடன் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக் கவும் இப்போதே தேதி கேட்கப்பட்டு இருக்கிறது. 'எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்!’ என கார்டனும் க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறது.
கருணாநிதிக்குப் பரிசு!
உடல்நிலை சரி இல்லை எனத் தெரிந்த உடனேயே முதல் ஆளாக ரஜினியைப் பார்க்க ஓடியவர் கருணாநிதிதான். இதற்கு நன்றி கூறி, சமீபத்தில் ரஜினி கருணாநிதிக்கு போன் செய்தார். அப்போது, கருணாநிதி பகிர்ந்து கொண்ட விஷயம் ரஜினியையே அதிரவைத்தது. ''உங்க உடம்புக்குப் பெரிய சிக்கல்னு டாக்டர்கள் மூலமா செய்தி வந்தது. 'அவரால் நடக்கவே முடியாது’ன்னு சொன்னாங்க. அதனால்தான் பதறி அடிச்சு ஓடி வந்தேன். உண்மையைச் சொல்ல ணும்னா, அன்னிக்கு எனக்கும் உடம்பு சரி இல்லை. மற்றபடி, கடந்த ஆட்சியில் என்னால் ஏதாவது சங்கடம் வந்திருந்தா, தவறா எடுத்துக்காதீங்க!'' என கருணாநிதி சூசகமாகச் சொல்ல, ரஜினி பதறிப்போனாராம். 'நேரில் சந்தித்து உங்களிடம் நிறையப் பேச வேண்டும்!’ என்று மட்டுமே சொன்ன ரஜினி, சென்னைக்கு வந்ததும் கோபாலபுரம் செல்கிறார். கருணாநிதிக்குக் கொடுப்பதற்காகவே விசேஷப் பரிசு ஒன்றும் இப்போது ரஜினி கையில்.
மன்றத் தலைவர்களுக்கு அழைப்பு!
சௌந்தர்யா திருமணத்தின்போது ரசிகர்களுக்கு விருந்துவைப்பதாகச் சொன்னார் ரஜினி. ஆனால், ரசிகர்கள் எவ்வளவு பேர் திரளுவார்கள் என்பதைக் கணக்கிட முடியாததாலும், தேர்தல் பரபரப்பாலும் விருந்து தள்ளிப்போனது. ரசிகர்களின் பிரார்த்தனை களைக் கேள்விப்பட்டு சிலிர்த்துப்போன ரஜினி, அனைத்து மாவட்டத் தலைவர்களையும் சந்திக்க இருக்கிறார். ரஜினிக்காகப் பிரார்த்தனை நடத்திய ரசிகர் மன்ற நிர்வாகிகளின் பட்டியலும் தீவிரமாகத் திரட்டப்படுகிறது. 'அரசியல் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம்!’ என மன்றப் பொறுப்பாளர் சுதாகருக்குச் சொல்லப்பட்டு இருக்கிறது.
'ராணா’வுக்குத் தயார்!
ஷூட்டிங்கில் கலந்துகொள்கிற அளவுக்கு ரஜினியின் உடல்நிலை இன்னும் சரியாகவில்லை. வேகமாக நடக்கவோ, விறுவிறுவெனப் பேசவோ ரஜினியால் முடியவில்லை. ஆனால், ஒரு மாத காலத்துக்குள் இதெல்லாம் சரியாகிவிடும் என உறுதியாக நம்புகிறார் ரஜினி. ரஜினிக்கு சிரமத்தை ஏற்படுத்தாதபடி 'ராணா’வின் கதை சற்றே மாற்றப்பட்டு வருகிறது. ரஜினியின் போர்ஷனும் குறைக்கப்படலாம் என்கிறார்கள்.
வடிவேலுவுக்கு வாய்ப்பு!
'ராணா’ படத்தில் இருந்து வடிவேலு நீக்கப்பட்டதால், ரஜினி குறித்து அவர் ஆவேசமாகச் சீறினார். தேர்தலுக்குப் பிறகு திரைத் துறையே வடிவேலுவை ஓரமாகத் தள்ளிவைத்துவிட்டது. தன்னை வசை பாடிய மனோரமா வுக்கு 'அருணாச்சலம்’ படத்தில் வாய்ப்பு அளித்து அசத்திய ரஜினி, அதே பாணியில் 'ராணா’வில் வடிவேலுவைச் சேர்க்கச் சொல்லி இருக்கிறார். வடிவேலு உடன் கஞ்சா கருப்புவும் படத்தில் இருப்பார் என்கிறது யூனிட். இது குறித்து வடிவேலுவுக்குத் தகவல் சொல்லப்பட... தழுதழுப்பே பதிலாக வந்ததாம்.
மருத்துவர்களுக்கு விருந்து!
தான் மீண்டு வந்ததற்கு மிக முக்கியக் காரணமாக ரஜினி கருதுவது டாக்டர்களைத்தான். இசபெல்லா, ராமச்சந்திரா மற்றும் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை களில் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் களை வீட்டுக்கு அழைத்து விருந்துவைக்கத் திட்டமிட்டு இருக்கிறார் ரஜினி. மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில், ''உங்களை எல்லாம் சென்னைக்கு அழைத்துப்போய் 'எனக்கு மறுவாழ்வு அளித்த தெய்வங்கள்’ எனச் சொல்ல வேண்டும்!'' என உருகினார் ரஜினி.
கடிதத்துக்கு ரியாக்ஷன்!
தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினிக்கு உருக்கமான ஒரு கடிதத்தை ஃபேக்ஸ் அனுப்பி இருக்கிறார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். 'இது உங்களுக்கு மறு பிறப்பு. போன பிறவி யில் ஒரு நடிகராக மட்டுமே இருந்தீர்கள். மகத்தான மாற்றத்தை உண்டாக்கும் வாய்ப்பு உங்களுக்கு இருந்தாலும், அதனை நீங்கள் பயன்படுத்தவே இல்லை. இந்தப் பிறவியிலாவது மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக நீங்கள் போராட வேண்டும். உங்களுக்குக் கிடைத்த உயரிய சிகிச்சைகள் சாதாரண குடி மகன்களுக்குக் கிடைப்பது சாத்தியம் இல்லை. அடிப்படை மருத்துவத்துக்கே வழியற்ற நிலைமை தமிழகத்தில் நிலவுகிறது. அதனைத் தீர்க்கும் விதமான முன்னெடுப்பைச் செய்வதுதான் உங்களைக் கொண்டாடும் தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் பதிலீடாக இருக்கும்!’ என அழுத்தமாக எழுதி இருக்கிறார் சௌந்தர்ராஜன்.
உயிர் மீண்ட நெகிழ்வில் இருக்கும் ரஜினியை அந்தக் கடிதம் ரொம்பவே உசுப்பி இருக்கிறதாம். சமூகம் சார்ந்த கைகோப்புக்கான அழைப்பு எப்போதும் ரஜினியிடம் இருந்து கிளம்பலாம்!
These guys will never change :sigh2:Quote:
Originally Posted by JV
நல்லதோர் வீணையை...
ஏப்ரல் மாதம் இருபத்தெட்டாம் தேதி, இரவு பத்தரை மணியளவில் என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது.
''அண்ணா! நாளைக்குக் காலேல, ஒன்பது மணிக்கு - ஏவி.எம் ஸ்டூடியோ பிள்ளையார் கோவில்ல - 'ராணா’ பட பூஜை; நீங்க அவசியம் வரணும்!''
- ரஜினிதான் பேசியது.
'அவ்ளோ சீக்கிரம் காலேல - என்னால ரெடியாக முடியாதே... மருந்து மாத்திரைஎல்லாம் சாப்டணும்... நான் வரணும்னு - நீர் ஆசைப்படறீரா?’
- இப்படி நான் கேட்டவுடன், ''நீங்க வராம எப்படி? நியாயமா, நான் நேர்ல வந்துதான் கூப்டிருக்கணும்; அதுதான் மரியாதே! But உடம்பு கொஞ்சம் சரி யில்லேண்ணா எனக்கு... அதான்!''
- என்று ரஜினி சொல்லும்போதே, வழக்கமாக அவர் குரலில் உள்ள குதூகலம் - missing!
விழாவிற்கு, மறுநாள் சென்றேன்; என்னை ஆரத்தழுவி வரவேற்றார்.
அப்பொழுதும் கவனித்தேன் - ரஜினி, ரஜினியாக இல்லை; ஏதோ ஓர் உபாதை, பாதாதிகேசம் படர்ந்து அவரது இயல்பு நிலையைப் பாதித்திருப்பதாக என் உள் மனம் உணர்த்தியது.
'ஹஹ்ஹஹ்ஹா’ என்று - 'மாயா பஜார்’ எஸ்.வி.ரங்கராவைப்போல் ஓர் அவுட்டுச் சிரிப்பும் -
'அண்ணா! அண்ணா!’ என்று என்னை அடிக்கொருதரம் அழைத்து அளவளாவுகையில், துரிதகதியில் உதடுகள் துப்பும் தமிழ்ச் சொற்கள் தலைபோகிற அவசரத்தில் வந்து விழுகின்ற அழகும் -
சற்றே புருவங்களைச் சுருக்கி, நம் கருத்துகளுக்குச் செவிசாய்க்கும் சிரத்தையும் -
இரு இமைகளுக்கிடையே, இரண்டு தணற் துண்டுகளைப் பொருத்தினாற்போல் - சதா கனன்றுகொண்டிருக்கும் கருவிழிகளின் தகிப்பும் -
காஞ்சி மஹாப் பெரியவாளை நமக்கு நினைவூட்டுகிறாற்போல், ஓர் ஆன்மிக வெளிச்சத்தைப் பிலிற்றும், அருளார்ந்த அறிவுசார்ந்த கூர்த்த நோக்கும் -
இத்யாதி; இத்யாதி... அன்றைய ரஜினியிடம் - அவர் ஒப்பனையில் வந்தபோதும், காணக் கிடைக்காதுபோய் - அவரைப் புகைபடிந்த ஓவியமாய்க் காண நேர்ந்தது!
எனது எண்ண ஓட்டம் - அநேகமாக அந்த விழாவிற்கு வந்திருந்த எல்லோரது எண்ண ஓட்டமாகவும் இருந்திருக்கக்கூடும்; ஆதலால்தான் - களிப்பும் கலகலப்புமாக இருக்க வேண்டிய நேரத்தில், ஓர் இறுக்கம் -
நாம் வாயால் ஊதினால், நிலைக் கண்ணாடியின் மேல் ஒரு mist படர்ந்திருக்குமே - அப்படிப் படர்ந்திருந்தது பலர் பார்வையில்!
இவ் விழாவிற்கு ஓரிரு மாதங்கள் முன்புதான் -
ரஜினி வீட்டிலிருந்து எனக்கோர் அழைப்பு வந்தது; திருமதி லதா ரஜினிகாந்த்தான் பேசினார் தொலைபேசியில்.
''வாலி சார்! நம்ம சாருக்கு - பாலசந்தர் சார் 'ரஜினிகாந்த்’னு பேர் வெச்சு, இன்றோடு முப்பத்தஞ்சு வருஷமாகிறது... இன்று அந்தப் பேருக்கான birth day. நீங்க அவசியம் சாப்பிட வரணும்... வந்தா - i will feel as if i have been highly blessed!'
நான் அவ் விருந்துக்குப் போனேன். அற்புதமான சாப்பாடு; ஆத்மார்த்தமான விருந்தோம்பல்!
நூறு விழுக்காடு - ரஜினி ரஜினியாக இருந்தார் அன்று - so cute; so cheerful; with ecstasy and energy!
- இப்படி இருந்த ஒருவர், இத்துணை குறுகிய காலத்திற்குள், எப்படி இப்படிப் பொலிவிழந்து வலுவிழந்துபோனார் என்று எண்ணுங்கால் - விந்தை ஒரு புறமும் விசனம் ஒரு புறமும் மேலிட்டு நின்றாலும் -
நான் என் நெஞ்ச அலமாரியில் அடுக்கிவைத்திருக்கும் நினைவு ஏடுகளை இப்போது, தூசி தட்டிப் பார்க்கத் தோன்றுகிறது!
ஒருநாள் இரவு பத்து மணிக்கு எனக்கொரு phone வந்தது.
''அண்ணா! Music academy ல உங்க நாடகம் பாத்தேன்; ப்ரமாதம்; என்னெ என்னவோ பண்ணிருச்சு உங்க dialogue எல்லாம்! இந்த நாடகத்துல நான் பாரதியாரா நடிக்கணும்... என்ன சொல்றீங்க?''
- இப்படி ரஜினி கேட்டதும் - நான் திகைத்துப்போனேன்.
அப்போதே அவர் சூப்பர் ஸ்டார். 'அன்னை ஓர் ஆலய’த்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
அவர் வீட்டுக்கு என்னை வரவழைத்து - ''நாடகத்துக்குத் தகுந்த மாதிரி - என் பட வேலைகளை நான் தள்ளிவெச்சுக்கறேன்; நான் பாரதியாரா நடிக்கணும்; தமிழை - தினம் பிழையில்லாம உங்ககிட்ட பேசிக்காட்டறேன்!'' என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.
அடுத்தவர்; உணர்வுகளை அணுவளவும் ஊனப்படுத்தாத உத்தமர் திரு.ரஜினிகாந்த்!
அவர் படத்தைப் பார்க்க -
ஜப்பானிலும்; கொரியாவிலும்; தைவானிலும் 'க்யூ’ நிற்கிறது; இனியும் அதுபோல் நிற்கும்; விரைவில் நலம்பெற்று வந்து, அவர் வெள்ளித்திரையை ஆளுவார்!
ஏனெனில் -
'நல்லதோர் வீணையை - இறைவன்
நலங்கெடப் புழுதியில் எறிவதில்லை!’
English please.. !
Thanks Nerd and easygoer for the articles:ty:
Dilbert,here is the short synopsis
Rajini is doing good in singapore. Now rejenuvation theraphy is being offered to him.Less food,walking,good sleep,prayers,likewise he is spending quality and healthy time there. He has planned some list of activities to do,once he returns back to chennai...
(1) To meet jayalaliyha- CM had forgotten all the past incidents and had assured to do any help to superstar at any time when he was ill. He was very much moved by this gesture and has decided to meet cm immediately after his return...
(2)To meet karunanithi- Kalaignar was the first person to run to hospital on hearing news about rajini's health. When rajini made a phone call from singapore to kalaignar,he said, "one doctor had informed me that your health condition is very worse and you couldn't even walk,thats why immediately I came to see you.He also said that,if rajini has faced any difficulties during his rule,he apologize for it. This made rajini very emotional and he is going to meet kalaignar at gopalapuram with a gift...
(3)RANA shooting: Rajini's health has not improved upto the level of shooting for the movie.He couldn't speak and walk fastly like before. still he believes that,Within a month,he will be absolutely fine.
(4)Rajini has decided to cast vadivelu in RANA. This news has been sent to vadivelu too. Vadivelu ss very moved on hearing it.Along with vadivelu,kanja karupu will also be in the cast...
(5) He is going to call all the distict heads of fan clubs who prayed for him and is going to offer big treat for them...
(6) Similarly,he also has plans of honouring all the doctors from isabella,ramachandra and mt.elizabeth hospitals who treated him. He feels that,they are the ones,who gave him rebirth.
(7)Thamilizhai soundarrajan has written a letter to rajinikanth that, "you consider this as your second birth...In the first birth,Though you had everything to bring social change, you was only doing the job of an actor. In this birth,do some social welfare too and bring some change,That's the greetest thing,you can do in reponse to the love people ,show on you" This letter has made rajini to think a lot.
See the pics!
http://new.vikatan.com/av/2011/06/zd...ge_wrapper.jpg http://new.vikatan.com/av/2011/06/zdynmu/images/p6.jpg
They know how to make a story! எது எப்படி இருந்தாலும், விகடன் போட்டிருக்கும் ஃபேன்ஸ் பிட்டை பார்த்தால், இவன் (விகடன்) எப்படியும் பக்காவாக பிழைத்துக்கொள்வான் என சொல்லத்தோன்றுகிறது! அதனால் தான் அவர்களால் இன்னமும் ரஜினி பேரை போட்டு கல்லா கட்ட முடிகிறது! கேடிப்பயல்கள்
ivingale fans meet pannuvaarnnu oru bit pottuttu, meet pannalainaa, mottai kadudhaasi eluthuvaainga :lol2:
kalaignarukku vera ippo gift vaanganum...
VV'ku chance kudukkanum...
doctors, engineers kooptu soru podanum...
apdiyE andha pilots, air hostess..........
//dig// Remember the movie called " Terminator 1 ,2,3, synopsis was they will pass a defense bill called "SKYNET" . Eventually Machines takes over the world etc etc.
in the same connection IBM invented a Machine called "Watson" which can think like human but billion times faster . On 02.14.2011 this machine took part in jeopardy american quiz show (not our Joe's party) it did exceptionally well and won it hands one against the 2 most brillant human beings in the joepardy's history! joepardy questions are not staright forward GK questions. It has to think like human to answer them. NOW IBM is planning to use this as a next step in Medical Field to help Doctors by Answering most complex medical cases in Emergency room example what kind of surgery / medicines and how it might save ppl lives.
If this becomes a reality ! (which it will) Human brains are left with nothing much to do :-) ofcourse hubbing for which you don't need to think much :lol:// end dig//
Wifey asked to pass this to you guys. Is this during Endhiran shoot? And Ayypan veshti?http://a7.sphotos.ak.fbcdn.net/hphot..._2520433_n.jpg
வாஸ்துப்படி மாற்றப்படுகிறது ரஜினியின் போயஸ் கார்டன் வீடு!
போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடு வாஸ்து சாஸ்திரப்படி புதுப்பிக்கப்படுகிறது. சிங்கப்பூரிலிருந்து ரஜினி வரும்போது புதுமனை புகுவிழா நடத்தி குடியேற திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி சென்னையில் நடந்த 'ராணா' படப்பிடிப்பின்போது, ரஜினிகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை மருத்துவமனை, சிகிச்சை என அவர் பெரும் சோதனைக்கு உள்ளானார்.
அவருக்காக உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இப்போது ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, கடந்த வாரம் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். இப்போது அவர், டாக்டர்கள் அறிவுரையின்படி, குடும்பத்தினருடன் சிங்கப்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கிறார். டாக்டர்கள் தினமும் அங்கு சென்று அவரது உடல்நிலையை அடிக்கடி பரிசோதித்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த் இன்னும் சில வாரங்கள் சிங்கப்பூரிலேயே தங்கியிருப்பார். அவருடைய உடல்நலனை கருதி, அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டாக்டர்களின் அறிவுரையின்படி பார்வையாளர்கள் முக்கிய பிரமுகர்களாக இருந்தால்கூட, ரஜினிகாந்தை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
சமீபத்தில் அவரை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் கன்னட நடிகர் அம்பரீஷும் சந்தித்தாக செய்திகள் வந்தன. ஆனால் இதை அவரது வீட்டினர் உறுதி செய்யவில்லை.
இதற்கிடையில், சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவருடைய வீடு, ஜோதிடர்களின் ஆலோசனைப்படியும், வாஸ்து சாஸ்திரப்படியும் மாற்றி அமைக்கப்படுகிறது. வீட்டில் உள்ள சில பகுதிகளை இடித்துவிட்டு, வாஸ்துப்படி மாற்றியமைக்கிறார்களாம்.
ரஜினிகாந்த் சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பும்போது, போயஸ்கார்டனில் உள்ள வீட்டில் 'புதுமனை புகுவிழா' நடத்தி குடியேற திட்டமிட்டிருக்கிறார்கள்.
ரஜினியின் வீட்டுக்குப் பெயர் பிருந்தாவனம். அதன் முகப்பில் வாய்மையே வெல்லும் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை 2001-ம் ஆண்டு ரஜினி புதுப்பித்துக் கட்டினார்.