https://scontent.fymy1-1.fna.fbcdn.n...0b&oe=5FCAF0CD
Printable View
அறுபது வருடங்களுக்கு முன்னர் ஏழைகளின் சத்துணவுத் திட்டத்திற்கு ஒரு லட்ச ரூபாயை முதலமைச்சர் காமராஜர் அவர்களிடம் சமர்ப்பித்திருக்கிறார் சிவாஜி அவர்கள், இது குறித்து அப்போதே ஆனந்த விகடன் ஒரு 12.4.1959 இதழில் தலையங்கமும் எழுதியது. அன்று 100 ரூபாய் என்பது இன்றைய 7500 ரூபாய் என்று online inflation calculator சொல்கிறது,இன்று ஒரு லட்சம் ஏறக்குறைய 75 லட்சம் ரூபாய்,வயல் வரப்பிலும் ,கொல்லன் பட்டறையிலும் கல்குவாரியிலும் , மாட்டுக் கொட்டகையிலும் எடுபிடி வேலை செய்து கொண்டிருந்த பிஞ்சு சிறார்களை துவக்கப் பள்ளிகள் நோக்கி இழுத்தது இந்த மதிய உணவுத்திட்டம் என்றால் மிகையில்லை. சிவாஜி வீட்டின் கொல்லைப்புரத்தில் எப்போதும் உணவு உலை கொதித்துக் கொண்டே இருக்கும், யார் வந்தாலும் சாப்பாடு உண்டு,இப்போதும் அப்படித்தான் இருக்க வேண்டும், சில உதவிகள் வலது கை தருவதை இடது கை கூட அறியாது, சிவாஜி அவர்களை கஞ்சன் கருமி என்று விட்டேத்தியாக சிலர் சொல்லுவார்கள், அவர் என்றுமே அதற்கெல்லாம் விளக்கம் சொன்னது இல்லை,மீண்டும் எளியாருக்கு உதவாமல் போனதுமில்லை. தகவல் & PC விகடன் காலப்பெட்டகம் #சிவாஜி,#வள்ளல்குணம்,#மதியுணவுத்திட்டம்
வாட்ஸ்அப்பில் வந்த பதிவு
நடிகர் திலகத்தின் இமாலய திரைப்பட சாதனைகளில் இருந்து ஒரு சாம்பிள்,
1952 ல் முதல் படமான பராசக்தியிலேயே நாயகனாக அறிமுகமாகி 12 வருடங்களிலேயே 100 திரைக்காவியங்களில் நடித்து முடித்தார் நடிகர் திலகம்,
100 வது திரைக்காவியமான நவராத்திரி 1964 ல் வெளியானது,
1964 ஆண்டில் சென்னையை பொறுத்த அளவில் 16 திரையரங்குகளில் 100 நாட்கள் வெற்றியையும் 25 திரையரங்குகளில் 50 நாட்கள் வெற்றியையும் பதிவு செய்தன நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
1) கர்ணன் - 14-01-1964
2) பச்சை விளக்கு - 03-04-1964
3) ஆண்டவன் கட்டளை- 12-06-1964
4) கை கொடுத்த தெய்வம்- 18-07-1964
5) புதிய பறவை - 12-19-1964
6) முரடன் முத்து - 03-11-1964
7) நவராத்திரி - 03-11-1964
ஆகிய ஏழு திரைக்காவியங்கள் வெளியானது,
ஏழு திரைக்காவியங்களில்
கர்ணன்
பச்சை விளக்கு
கை கொடுத்த தெய்வம்
புதிய பறவை
நவராத்திரி
ஆகிய ஐந்து திரைக்காவியங்கள் வெற்றிகரமாக நூறு நாட்களைக் கொண்டாடியது,
மேலும் 63 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான அன்னை இல்லமும் 100 நாட்களை 64 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொண்டாடியது,
ஆண்டவன் கட்டளை, முரடன் முத்து ஆகிய திரைக்காவியங்களும் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் 50 நாட்களைக் கடந்து வெற்றி முரசுக் கொட்டியது,
மொத்தத்தில் சென்னை நகரை மட்டுமே கணக்கில் கொண்டு பார்த்தால்
100 நாட்கள் வெற்றிக் கொண்டாட்டத்தை
கர்ணன் - 1) சாந்தி திரையரங்கு
2) பிரபாத்
3) சயானி
பச்சை விளக்கு- 4) வெலிங்டன்
5) மஹாராணி
6) ராக்ஸி
கை கொடுத்த தெய்வம்- 7) மிட்லண்ட்
8) பிரபாத்
9) சரஸ்வதி
10) ராம்
புதிய பறவை - 11) பாரகன்
நவராத்திரி - 12) மிட்லண்ட்
13) மஹாராணி
14) உமா
15) ராம்
அன்னை இல்லம்- 16) காஸினோ
ஆகிய 16 திரையரங்குகளில் இமாலய வெற்றியை பதிவு செய்தன,
புதிய பறவை 3 அரங்கு, ஆண்டவன் கட்டளை 4 அரங்குகள் , முரடன் முத்து 4 அரங்குகளில் என ஒட்டுமொத்த 50 நாட்கள் கொண்டாடிய திரையரங்குகளின் எண்ணிக்கை 25 ,
எவரும் எட்ட முடியாத எவரெஸ்ட் சிகரம் நடிகர் திலகம் என மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆன வண்ணம் தொடர்ந்தது சாதனைகள்,
சாதனைத்தகவல்கள் உதவி மொகமட்ட தமீம் அவர்கள்.
https://scontent.fymy1-2.fna.fbcdn.n...8d&oe=5FCC79EC
நன்றி சேகர்.பரசுராம்
[COLOR=var(--primary-text)][COLOR=var(--primary-text)]பாகப் பிரிவினை மதுரை சிந்தாமணியில் 216 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதனை முறியடிக்க மாற்று முகாம் எவ்வளவோ முயற்சித்தது. சென்ட்ரலில் எங்க வீட்டுப் பிள்ளை 176 நாட்களில் நின்று போனது. அதே சிந்தாமணியில் அடிமைப் பெண் 176 நாட்களோடும், மாட்டுக்காரவேலன் 177 நாட்களோடும் ஓட்டத்தை முடித்துக் கொள்ள, அவர்கள் நம்பியிருந்த ஒரே துருப்புச்சீட்டு உலகம் சுற்றும் வாலிபன்தான். அதை மீனாட்சியில் 217 நாட்கள் ஓட்டி அதை சாதனை என்று நிலைநாட்டினர். சரியாக 217 நாட்களில் எடுக்கப்பட்டபோதே தெரிந்து போயிற்று, எந்த நோக்கத்தில் ஓட்டப்பட்டது என்று.
1959 சாதனையை முட்டி மோதி 1973 ல் முறியடித்தனர்.
நன்றி நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்கள் குழு மொகமட் தமீம்
பராசக்தி மூலமாகவே மிகப்பெரிய ஹீரோ ஆகிட்டார்.. அதன் பிறகு பல படங்களில்.. ஆன்டி ஹீரோ.. வில்லன்.. குணச்சித்திரம் என்று தன் வழி தனி என்று தனது பன்முகத் தன்மையை நிரூபித்துக் கொண்டிருந்தார்.. சரியாக ஏழாண்டுகளில் அதே தீபாவளியில் பாகப்பிரிவினை வந்தது.. இதில் சுவாரஸ்யம் எனனவென்றால் ஜஸ்ட் 5 மாதங்களுக்கு முன்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் வந்து தமிழ் திரைப்பட வரலாற்றை திருப்பிப் போட்டது.. அதிக பொருட் செலவு.. அதற்கேற்ற பிரம்மாண்டம்.. ஒரு பாளையக்காரரை மஹாராஜா ரேஞ்சுக்கு உயர்த்தி எடுக்கப்பட்ட சினிமா.. ஹீரோ அந்தஸ்து 100 மடங்கு உயர்ந்தது.. அந்தப்படம் மிக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்த அந்த தருணத்தில்த்தான் "பாகப்பிரிவினை" என்கிற மிகக்குறைந்த பட்ஜெட்டில் மிகச்சாதாரணமாக வெளிவந்தது.. ஒரு மாற்றுத்திறனாளி மனிதனாக கதைக்குள் உலவினான் கன்னையன்.. வரலாறு வியந்தது.. தன்னுடைய மிகப்பெரிய ஹீரோ இமேஜை தானே அடித்து நொறுக்கினார்.. வரலாற்றில் எந்த சூப்பர் ஹீரோவுக்கும் வராத அசாத்திய துணிச்சல் இவருக்கு வந்தது? ஏன் தான் ஒரு நடிகன்.. கதாபாத்திரங்களை தன்னுள் ஏற்றுக் கொண்ட கலை வித்தகன் என்ற கலை மாமணி அவர்.. எல்லோரும் எதிர் பார்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வசூல் சாதனைகளை எல்லாம் விஞ்சி நின்றது பாகப்பிரிவினையின் வசூல்.. ஆம்.. 1959ல் வசூலில் பாகப்பிரிவினைதான் முதலிடம் பெற்றது..
Thanks Jahir Hussain
கவர்ச்சி நடிகைகளை ஜோடி சேர்க்காமல் டூயட் பாடல்கள் இன்றி தன்னை மட்டுமே நம்பி இரட்டை வேடங்களில் நடித்த அகில உலக தமிழ்த்திரைப்பட வசூல் சக்கரவர்த்தியின் நடிப்பில் 4/11/1983 ல் வெளிவந்த வெள்ளைரோஜா ( வசூல் கிடைத்த) 23 ஊர்களில் 28 தியேட்டர்களில் மட்டும் 1 கோடிக்குமேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. முதல் 40 பிரிண்டுகளில் மட்டும் 1 1/2 கோடிக்குமேல் வசூலாகி சாதனை செய்தது
சென்னை ...தேவி........................... 104 நாள்...7,22,685.00
சென்னை...சபையர்.......................76 நாள்....8,15,663.00
சென்னை புவனேஸ்வரி............104..நாள்..5,16,565.50
சென்னை..கிரௌண்....................104..நாள்..4,72, 690.60
சென்னை உதயம்............................104 ..நாள்..3,14,695.00
சென்னை அபிராமி.........................104..நாள்..2,46,61 8.50
சென்னை நகர் மொத்த வசூல்...................30,88,917.60
கோவை...அர்ச்சனா..........................106..நாள் ..13,08,683.95
திருச்சி..ரம்பா................................... .100..நாள் ..9,41,638.65
சேலம் பிரகாஷ்..................................104.நாள். ...7,76,118.50
மதுரை..சென்ட்ரல்................................10 6..நாள்..7,41,407.60
வேலூர்..ஶ்ரீகிருஷ்ணா...................... 63..நாள்..4,64,703.35
நெல்லை..பூர்ணகலா...........................51..நாள ்..2,96.810.10
ஈரோடு..ரவி........................................ ......42..நாள்..2,94,384.30
தஞ்சை ..ஜுபிடர்..................................60..நாள ்..2,93,380.50
பொள்ளாச்சி..துரைஸ்.......................50..நாள். .2, 87,650.40
காஞசி..அருணா....................................54 ..நாள்..2,56,292.25
நாஞசில்..ராஜா..................................... .61..நாள்..2,42,074.50
திண்டுக்கல்..கணேஸ்.........................50..நாள ்..2,40,734.00
குடந்தை...கற்பகம்................................6 0..நாள்..2,04,686.50
திருப்பூர்...டைமண்ட்............................31 ..நாள்..1,89,722.00
கரூர்........அஜந்தா............................... ...35..நாள்...1,50,163.20
மாயூரம்...சுந்தரம்................................ .50..நாள்...1,50,077.90
ஊட்டி...கணேஷ்....................................3 1..நாள்....1,26,329.80
நாமக்கல்...K.S அரண்மனை.............23..நாள்...1,02.016.40
பட்டுக்கோட்டை...ராஜாமணி...........45..நாள்..1.23,9 61.40
துறையூர்..அஜந்தா..............................35.. .நாள்...1,00,693.00
பள்ளிபாளையம்..கார்த்திகேயன்..21...நாள்....87,206.6 0
குமாரபாளையம்....ஶ்ரீராஜம்..............21...நாள்.. .84,060.90
23 ஊர் 28 தியேட்டர்கள் மொத்த வசூல் 1,05,51,713.40
ஒரு கோடியே ஐந்துலட்சத்து ஐம்பத்து ஓரயிரத்து எழுநூற்றி பதின்மூன்று ரூபாய் நாற்பது பைசா.
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...ad&oe=5FCCA2A2https://scontent.fybz2-1.fna.fbcdn.n...c1&oe=5FCD8A71
Thanks Sivaji Group[/COLOR]
நடிகர் திலகத்தை இயக்கியவர்கள் 3
ஸ்ரீதர்
ஸ்ரீதர் அமரதீபம் படத்தை தயாரிக்க முடிவு செய்து படத்தின் கதையை, நடிகர் திலகத்திடம் கூறினார்.
நடிகர் திலகம் நடிக்க ஒப்புக் கொண்டார்.
ஆனால் உங்களுக்கு 'முன்பணம் ' கொடுக்க, என்னிடம் வசதி இல்லை' என்றார் ஸ்ரீதர்.
'பரவாயில்லை. படத் தயாரிப்புக்கு எப்படி பணம் ஏற்பாடு செய்வாய்' என்றார் நடிகர் திலகம்.
ஸ்ரீதர் தயங்கி, நீங்கள் ஒப்புக் கொண்டால் நாளிதழ்களில் சிவாஜி கணேசன் நடிக்கும் "அமரதீபம்" என்று விளம்பரம் கொடுத்தால் விநியோகஸ்தர்கள் முன்பணம் கொடுப்பார்கள், அதனால் பைனான்ஸியர்கள் முதலீடு செய்வார்கள் படத்தை முடித்து விடுவேன் என்றார்.
ஆச்சரியத்துடன் ஸ்ரீதரை பார்த்த
நடிகர் திலகம் தட்டிக் கொடுத்து
ஒரு ரூபாய் கூட, 'அட்வான்ஸ்' வாங்காமல், முழு படத்தையும் நடித்து கொடுத்தார்.
பத்மினி, சாவித்ரியிடமும் இதைப் போலவே பேசி ஒப்புக் கொள்ள வைத்து விட்டார் ஸ்ரீதர்.
"அமரதீபம்" நடிகர் திலகம், சாவித்ரி, பத்மினி, ஸ்ரீதர் தயாரிப்பு கூட்டணியில் வெற்றிப்படமாக அமைந்தது.
நெஞ்சிருக்கும் வரை
நடிகர், நடிகைகளுக்கு ஒப்பனை இல்லாமல் எடுத்திருக்கிறார். ‘முத்துக்களோ கண்கள்’ பாடலை குறைவான வெளிச்சம் வெளிச்சத்தில் படமாக்கினர். திருமண அழைப்பிதழ் வாசகங்களை பாடலாக்கி
‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி’ என்று வைத்திருப்பார்.
‘சிவந்த மண்’ இன்னொரு பிரமாண்டம். ‘பட்டத்து ராணி’யும் ‘ஒரு ராஜா ராணியிடம்’ பாட்டும், பட்டத்து ராணி பாட்டும் ஸ்ரீதரின் புதுமையான முயற்சிகள். வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் படம். இதிலும் நடிகர் திலகத்திற்கு ஒப்பனை இல்லை.
‘பொம்மை’ மாத இதழ் நடிகர்திலகம் பற்றிய பேட்டியில் ஸ்ரீதர்.
விடிவெள்ளி படம் வெளியாகி சில மாதங்களுக்கு பின் எனக்கும் தேவசேனாவுக்கும் திருமணம் நடந்தபோது நடிகர் திலகம் ஜெய்ப்பூர் ‘கர்ணன்’ படப்பிடிப்பில் இருந்தார். ஆனாலும் தன் குடும்பத்தினர் அனைவரையும் கலந்து கொள்ளச் செய்தார். திருமணச் சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது ஜெய்ப்பூரில் இருந்து ட்ரங்காலில் நடிகர் திலகம் எனக்கு மனதார வாழ்த்துச் சொல்லி. ‘நம்ம வீட்டிலிருந்து எல்லோரையும் வரச் சொல்லியிருந்தேனே, வந்திருக்காங்களா?’ என்று கேட்டார். சற்று முன்னர் வி.சி.சண்முகம் எனக்கு கை குலுக்கி வாழ்த்து சொல்லியிருந்தது நினைவுக்கு வர, ‘ஆமாண்ணே, வந்திருக்காங்க’ என்றேன். ‘உன் திருமணத்தில் கலந்துகொள்ள கமலாவுக்கும் ரொம்ப ஆசை. ஆனா நான் இங்கே அழைச்சிக்கிட்டு வந்திட்டேனே’ என்றார்.
சில நாள் கழித்து அவர் ஜெய்ப்பூரில் இருந்து திரும்பி வந்ததும், அவரது இல்லத்தில் எங்கள் இருவரையும் அழைத்து பெரிய விருந்து கொடுத்தார். புறப்படும்போது கமலா அம்மா ஒரு தங்கச் சங்கிலியை என் மனைவிக்கு அணிவித்தார்.
நடிகர் திலகம்‘இதோ பாரும்மா, இதுவும் உனக்கு ஒரு மாமியார் வீடுதான். நீ எப்போ வேணும்னாலும் வரலாம் போகலாம்’ என்றவர் என்னைப் பார்த்து, ‘இதோ பாரு, இது வரைக்கும் சதா ஸ்டுடியோவிலேயும் சித்ராலயா ஆஃபீஸ்லேயும் பழியா கிடப்பே. இனிமேலாவது ராத்திரியில் நேரத்தோடு வீட்டுக்கு வந்து சேர். அது மட்டுமில்லே, காலேஜில படிச்சிக்கிட்டு இருந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டே. அதுக்காக அந்தப் பொண்ணோட படிப்பை நிறுத்திடாதே. தொடர்ந்து படிக்கட்டும்’ என்று அட்வைஸ் பண்ணினார். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நல்லா படிக்கணும்ங்கிறது அவர் எண்ணம்.
‘காதலிக்க நேரமில்லை’ படம் பார்த்துவிட்டு நடிகர் திலகம் உடனே போன் செய்து பாராட்டினார். ‘உன் பேரைச் சொன்னாலே ‘அழுமூஞ்சி டைரக்டர்’ என்று சொன்னவர்கள் முகத்தில் கரி பூசுகிற மாதிரி படத்தை அருமையா எடுத்திருக்கே.
எனக்கும் கூட அது மாதிரி ஒரு பேர் இருக்கு. அதை உடைக்கிற மாதிரி என்னையும் வச்சு ஒரு காமெடி படம் பண்ணேன். சண்முகம் கிட்டே சொல்லி டேட்ஸ் தரச்சொல்றேன்’ என்றார்.
‘அண்ணே, ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ என்ற ஒரு காமெடி ஸ்க்ரிப்ட் யோசனை பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம்’ என்றேன்.
ஆனால் இடையில் வெண்ணிற ஆடையில் நான் பிஸியாக இருந்ததால், உடனடியாக அவரோடு படம் பண்ண முடியவில்லை.
இடையிடையே செட்டில் சந்திக்கும் போதெல்லாம் அதைப் பற்றிக் கேட்பார். ‘அண்ணே அந்த ஸ்க்ரிப்டை உங்களுக்காக ஒதுக்கி வச்சிட்டேன். பண்ணினால் அதை உங்கள வச்சுதான் பண்ணுவேன். இப்போ நாம ரெண்டு பேருமே பிஸி. கொஞ்சம் பொறுங்கள் பண்ணிடுவோம்’ என்றேன். சொன்ன மாதிரியே அந்தக் கதையை அவரை வச்சு பண்ணினேன். கோவை செழியன்தான் தயாரிப்பாளர்.
‘ஊட்டி வரை உறவு’ படமாக வெளியாகி சக்கைபோடு போட்டது.
சில பல காரணங்களால் ஹீரோ-72 படம் வெளியாவது தள்ளிப் போய்க் கொண்டிருந்த போதிலும், எங்களுக்கிடையில் இருந்த நட்பில் விரிசல் விழுந்ததில்லை. ‘உரிமைக்குரல்’ பட பூஜைக்காக சிவாஜியை சென்று அழைத்தேன்.
‘பூஜையை சத்யா ஸ்டுடியோவில் வச்சிருக்கே. அண்ணன் (எம்ஜிஆர்) ஸ்டுடியோ ஆரம்பிச்சு இது வரைக்கும் ஒரு நாள் கூட என்னை அங்கே கூப்பிட்டதில்லை. அப்படியிருக்க இப்போ நான் எப்படி வர முடியும் சொல்லு. ஆனா, வராவிட்டாலும் என்னுடைய வாழ்த்துக்கள்
உனக்கு நிச்சயம் இருக்கும்’ என்று வாழ்த்தினார்.
‘பொம்மை’ மாத இதழ் நடிகர்திலகம் பற்றிய பேட்டியில் ஸ்ரீதர்.
Thanks Sampath Gs
அதோ ஆட்சி பீடம் தெரிகிறது !
இதோ அதன் படி !
படி அல்ல, என் அன்னையின் மடி !
இப்படித்தான் துவங்குகிறது அந்த டெலி பிலிம்..
சத்ரபதி சிவாஜி என்பது அந்த டெலி பிலிம்மின் பெயர்...
1974 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், சிவாஜி மகாராஜா அரியணை ஏறிய 300 ஆம் ஆண்டு நிறைவை கொண்டாட பம்பாய் தூர்தர்ஸன் அந்த டெலி பிலிமை தயாரிக்க திட்டமிட்டது.
அவர்கள் பட்ஜெட் மிக குறைவு...
நடிகர் திலகத்தை தயக்கத்துடன் அணுகிறார் திரு. நாராயண சாமி. பம்பாய் D. D. யின் உயர் அதிகாரி அவர்...
உள்ள நிலையை சொல்லி, தயாரிப்பு செலவும் சிக்கனமாக இருக்க வேண்டும் என்ற நிலையையும் சொல்கிறார்.
பம்பாய் தொலை காட்சி நிலையத்திற்கு பருத்தி புடவையாய் காய்த்தது அன்று..
அப்படிதான் சொல்ல வேண்டும்.
புன்னகையோடு அந்த தொலைக்காட்சி படத்தில் நடிக்க சம்மதிக்கிறார் நடிகர் திலகம்... ஊதியம் ஒன்றும் வேண்டாம் என்கிறார்....
அதனுடன் நிற்கவில்லை.
தயாரிப்பு செலவு முழுதும் தன்னை சேர்ந்தது என்கிறார்.
AVM அவர்களிடம் N. T. பேச, அவரும் ஸ்டுடியோவை கட்டணம் இல்லாமல் பயன் படுத்தி கொள்ள அனுமதிக்கிறார்.
தஞ்சை வாணன், வசனம் எழுதி தருகிறார்...
அந்த வசனம் தான் அதோ ஆட்சி பீடம் தெரிகிறது !!!
அந்த டெலி பிலிம் 1974 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் நாள் பம்பாய் தொலைக்காட்சி நிலையத்தால் தமிழில் ஒளி பரப்பு செய்ய பட்டது.
பின் நாடு முழுவதும் அத்தனை தொலைக்காட்சி நிறுவனங்களும் தமிழில் அப்படியே ஒளி பரப்பின..
எவ்வளவு பெரிய அங்கீகாரம் தமிழனுக்கு....
மராட்டிய மன்னனின் சரித்திர சாதனையை ஒரு தமிழ் கலைஞன் தமிழிலேயே நடித்து நாடு முழுக்க ஒளி பரப்பப்படுகிறது என்கிற நிகழ்வு !
மட்டுமல்ல, பம்பாயில் நேரு பூங்காவில் உள்ள சத்திரபதி சிவாஜியின் திரு உருவ சிலை அமைக்க பட பெரும் தொகையை கொடுத்தவர் சிவாஜி கணேசன்.....
அந்த மாநிலத்தில் பல இடங்களில் உள்ள மாவீரன் சிவாஜியின் சிலைக்கு நிதி கொடுத்திருக்கிறார் இந்த சிவாஜி....
மராட்டியத்திற்கு நடிகர் திலகம் செய்த உதவிகள் ஏராளம், ஏராளம்....
அவரின் தாராள மனதிற்கு இன்னுமொரு நிகழ்வு சான்றாக இருக்கிறது....
1961-62 ஆம் ஆண்டு.
Y.B.சவாண் மகாராஷ்டிராவின் முதன் முதல் அமைச்சர் அப்போது.
மஹாராஷ்டிராவில் உள்ள koyna அணை உடைந்து போகிறது....
பேரிடர் அது... பெரும் சேதம்.. உயிர் சேதமட்டுமல்ல, எதிர்கால வாழ்வே கேள்வி குறியாக போனது மராட்டியருக்கு.
அணையை புனரமைக்க வேண்டும். அதுவும் உடனேயே, தாமதம் உதவாது...
நாட்டில் உள்ள நல்லோர் யாவரும் உதவி செய்யுங்கள் ! உடனடியாக !என்று அபய குரல் கொடுக்கிறார் அம்மாநிலத்தின் முதல்வர்...
என்ன கொடுப்பான்? எதை கொடுப்பான்?
என்று இவர்கள் எண்ணும் முன்னே,
பொன்னும் கொடுப்பான், பொருள் கொடுப்பான் எங்கள் கர்ண வீரன்...
துணைக்கரம் நீட்டுகிறார் நம் தூயவர்....
நாட்டின் எந்த ஒரு நிறுவனத்தை காட்டிலும்....
எந்த ஒரு தனி மனிதனை காட்டிலும்,
எந்த ஒரு பாலிவுட் நடிகரை காட்டிலும்
அதிகமாக, தனி ஒரு மனிதனின் நன்கொடையாக 11 லட்சங்களை நிதியாக தந்தார் நடிகர் திலகம்...
தேசம் அந்நிய நாட்டுடன் போரில் இறங்கிய போது 65, 000 ரூபாய் கொடுத்த நடிகரின் பெயர் பத்திரிகைகளில் பத்தி பத்தியாக வந்தது அன்று, பலரும் பேசுகிறார்கள் இன்றும் அது பற்றி..
1961 ஆம் ஆண்டிலேயே
அண்டை மாநிலம் கூட அல்ல, மத்திய இந்தியாவில் ஒரு மாநிலம்..
பேரிடரில் சிக்கி தவிக்கும் தருணத்தில்
நடிகர் திலகம் மனம் துடித்து
கொடுத்த தொகை 11, 000, 00....
தோழர்களே ! நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் இந்த கொடையை பற்றி...
வருமான வரி துறைக்கு மட்டுமே இந்த தகவலை தந்திருக்கிறார் எங்கள் தங்க ராஜா...
Thanks Vino Mohan
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வரலாறு / sivaji ganesan history
https://youtu.be/CV8_rc3U1lI
கொடை வள்ளல் சிவாஜி#சிவாஜி-கணேசன்-மன்றாயர் எனும் உலகப்புகழ்பெற்ற மகா கலைஞனை நடிகர் திலகமாகவும், சிம்மக்குரலோனாகவும் அனைவரும் அறிவோம். சிவாஜி கணேசனின் கொடைத்தன்மையை பற்றி இந்த தலைமுறையினர் முழுமையாக அறிந்திருக்க வாயப்பில்லை. சிவாஜி கணேசன் திரைப்படத்தில் மட்டும் அல்லாது நிஜ வாழ்க்கையிலும் கர்ணனாகவே வாழந்தவர். சிவாஜி கணேசனை போல கொடை பண்பில் சிறந்தவர் வேறு யாரும் இலர் எனும் கூறும் அளவுக்கு, எந்த விளம்பரமும் இல்லாமல் இவர் செய்த கொடைகள் பல. இவர் தமிழ் இனத்தின் சொத்து. தமிழ் தாய் ஈன்ற முத்து. சிவாஜி கணேசன் அளித்த கொடைகளில் பொதுவெளியில் பதிவு செய்யப்படாதது பல. வெளி உலகத்திற்கு தெரியவந்தது சில.அவற்றை காண்போம்.தமிழக அரசு ஆடும் வைஜெயந்தி மாலாவுக்கு மாதம் ரூ 1000 மும், பாடும் மதுரை சோமுவுக்கு மாதம் ரூ 1000 மும் அளித்துவிட்டு, வறுமையில் வாடிய கக்கன்ஜிக்கு வெறும் ரூ 500 ஐ அளித்தது. அதைக்கண்டு வெகுண்ட சிவாஜி கணேசன் தனது 10 பவுன் தங்க சங்கிலியோடு( இன்றைய மதிப்பில் 2,50,000 ரூ) சேலம் நேரு கலை அரங்கில் " தங்கப் பதக்கம்" நாடகம் நடத்தி கிடைத்த தொகை ரூ 15000 ( இன்றைய மதிப்பு 5 லட்சம்) அளித்தார்.பல கோடிகள் மதிப்புள்ள , தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக அளித்தார்கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலப்பட்ட இடத்தை ( 47 சென்ட்) வாங்கி தனது சொந்த செலவில் கட்டபொம்மனுக்கு சிலை வைத்து அது நினைவு சின்னமாக திகழ்கிறது.பாண்டிச்சேரி பள்ளிகளுக்கு பகலுணவு நிதியாக ரூ 1 லட்சம்( இன்றைய மதிப்பில் ரூ 51 லட்சம்) அளித்தார்.மதுரையில் சரஸ்வதி பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்த பொழுது பாதிக்கப்பட்ட மாணவியருக்கு ரூ 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு ரூ 50 லட்சம்)கோயில் திருப்பணிகளுக்காக கிருபானந்த வாரியாரிடம் பல்லாயிரம் ரூபாய்களை நன்கொடையாக வழங்கினார்.தமிழக வெள்ள நிவாரண நிதியாக முதல்வர் எம்ஜிஆரிடம் நாடக வசூல் மூலம் ரூ 1 கோடிக்கு மேல் அளித்தார்.( இன்றைய மதிப்பு :11 கோடிக்கு மேல்)சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் அண்ணல் அம்பேத்காருக்கு சிலை அமைத்தார்.தமிழகத்தில் பல பகுதிகளில் அம்பேத்கார் சிலை அமைய தாராளமாக நிதியுதவி செய்துள்ளார்.சென்னை பெசன்ட் நகரிலுள்ள மங்கையர்கரசி மகளிர் மன்றக் கட்டிடத்திற்காக தங்கப்பதக்கம் நாடகத்தின் ஒரு நாள் வசூலை அளித்தார்.தேசப்பாதுகாப்பு நிதிக்காக தமிழகத்தின் சார்பில் ரூ 5 லட்சம் வசூலித்து கொடுத்தார்.1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம், திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1.5 கோடி கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 8.5 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.1959ல் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் , மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் 70 லட்சம்) வழங்யுள்ளார்.சேலத்தில் தங்கப்பதக்கம் நாடகம் நடத்தி அதன்மூலம் வசூலான தொகையில் சேலம் முள்ளுவாடி கேட் அருகில் உள்ள மாவட்ட காங்கரஸ் கமிட்டி கட்டிடத்தை வாங்கிக் கொடுத்தார்.1962 ல் இந்தியா சீனா போரின் போது பிரதமர் நேருவை சந்தித்து ரூ 40 ஆயிரம் யுத்த நிதியாக கொடுத்த முதல் இந்தியர் சிவாஜிதான்.( இன்றைய மதிப்பு :26 லட்சம்)1962 ல் இந்தியா சீனா போரின் போது டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மீண்டும் ரூ 25000 த்தை( இன்றைய மதிப்பு 16 லட்சம்) போர் நிதியாக கொடுத்தார்.1962ல் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்ட ராக்கி திரைப்படத்தின் அகில இந்திய ஒரு நாள் வசூல் முழுவதையும் யுத்த நிதியாக அளித்தார்.1960 களில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 22 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் போது அப்போதைய குடியரசு தலைவர் ஜாகிர் உசேனை சந்தித்து ரூ 50 ஆயிரத்தை(இன்றைய மதிப்பு 21 லட்சம்) யுத்த நிதியாக அளித்தார்.பெங்களூர் நாடக அரங்கம் கட்ட" கட்ட பொம்மன்" நாடகம் மூலம் ரூ 2 லட்சம்( இன்றைய மதிப்பு 1.5 கோடி) நன்கொடையாக அளித்தார்.பெங்களூர் மக்கள் நலனுக்காக ரூ 15 லட்சம்( இன்றைய மதிப்பு 10 கோடி) நிதியினை வழங்கினார்.கம்யூனிஸ்ட் கட்சிக்காக கட்டபொம்மன் நாடகம் நடத்தி தோழர் ஜீவாவிடம் நிதி உதவி அளித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருவூலத்தில் திமுகவை வளர்த்தவர்கள் வரிசையில் சிவாஜி கணேசனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.திமுகவை வளர்க்க பல நாடகங்களை ஒரு பைசா கூட பெறாமல நடத்திக்கொடுத்தவர் சிவாஜி, மற்றும் பல நாடகங்கள் மூலம் நிதி வசூல் செய்து திமுகவிற்கு அளித்தவர் சிவாஜி என கலைஞர் தனது நூலான நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிட்டுள்ளார்.தேசத்தந்தை காந்திக்கு சிலை, நேருவுக்கு சிலை, இந்திரா காந்திக்கு சிலை, பெரியாருக்கு சிலை, கன்னியாகுமரியின் தந்தை ஐயா நேசமணிக்கு சிலை என நாட்டுக்காக உழைத்தவர்களுக்கு சிலை வைத்து அழகு பார்த்தார் சிவாஜி. பெருந்தலைவர் காமராஜருக்கு தமிழகமெங்கும் சிலைகள் வைத்து பெருமை சேர்த்தார்.தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் கட்டிட நிதிக்காக " வியட்நாம் வீடு" நாடகம் மூலம் ரூ 30 ஆயிரம் நிதியை அளித்தார்.( இன்றைய மதிப்பு : 12 லட்சம்)வேலூர் பென்லன்ட் மருத்துவமனை கட்டிட நிதிக்காக வியட்நாம் வீடு நாடகத்தின் மூலம் ரூ 2 லட்சம் நிதி அளித்தார்.( இன்றைய மதிப்பு 80 லட்சம்)தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவராக 8 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது பெரிய நாடக அரங்கம் ஒன்றினை சங்கரதாஸ் சுவாமி பெயரிலும், திரையரங்கம் ஒன்றினை தேவர் பெயரிலும் கட்டினார்.
வசந்த மாளிகை திரைப்படத்திற்கு சிவாஜி கட் அவுட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மாலை அணிவிக்கப்பட்டது
https://youtu.be/pZnsJ-1amN0
Thanks சிவாஜி ரசிகன் Sivaji rasikan Youtube Channel