-
சாமி
உன்னை வேண்டிக்கிட்ட்து பலிச்சு
எனக்கு கிடச்சுடுத்து நான் வேண்டிய்து
ரொம்ப நன்றி சாமி
குதித்தான்
தட்டில் பல பணத்தைப் போட்டான்..
பய்பக்தியுட்ன்
நெற்றியில் இட்டுக்கொண்டான்
சென்றான்
சில தின்ங்கள் கழித்து
அதே ஆள்..
சாமி
இது என்ன அனியாயம்
கொடுக்கரமாதிரிக் கொடுத்து
எடுத்துக்கிட்டியே
நியாயமா
இனி உன்னைப் பார்க்க மாட்டேன் போ...
இரண்டு தடவைகளிலும்
ச்லனமில்லாம்ல்
சாமி காத்தது மெளனம்
-
மௌனம் மயான மௌனம்
இருட்டு கருவறை இருட்டு
அடுத்ததும் பொட்டையா
கூசாமல் கொன்று விடு
அல்லது ஓடு அப்பன் வீட்டுக்கு
அடுத்து கட்டப்போகும் மகராசி
பெறுவாள் மகனை புருசனுக்கு
கள்ளிப்பாலும் நெல்லுமணியும்
பழசாகி குளிப்பாட்டி குளிரில்
விறைக்க வைப்பது புது உத்தி
சட்டம் என்ன செய்யும் பாவிகளே
அதி நவீன சோதனைக்குப்பின்
ஓசையின்றி ஒழிக்கும் பட்டணமே
நாலெழுத்து சொல்லித்தர ஏலாதாம்
நகை நட்டு போட வக்கில்லையாம்
வேலியிட்டு பயிரை பாதுகாக்கணுமா
பொய்யாய் புனைய எத்தனை காரணம்
இரண்டாம் தர குடிமகளாய் அழுத்தி
குடி முழுகிப் போகவே குழி பறிக்கிறார்
கண்ணே கண்மணியே கலங்காதே
முடிவில்லா கிரகணமிருந்ததில்லை
வெள்ளி நிலவே வெள்ளை மலரே
விசும்பின் ஒளியே வாழ்வின் சுவையே
வினைகளின் வினாக்களின் விடை நீயே
-
நீயே தான்
எல்லாம் செய்ய வேண்டும்
போகுமிடத்தில்
வா சொல்லிக் கொடுக்கிறேன்..
அக்காவுக்குக் கல்யாணம்
நிச்சயமானதும்
அம்மா
சுத்தமாய் மாறி
என்னை ஒதுக்கி
எல்லாம் அவளுக்கே
சமையல், ஒப்பனை இன்னபிற
சொல்லிக் கொடுத்தாள்..
கல்யாணம் ஆன பின்பும்
கூட
இருவரும் பேசிக்கொள்ளும்
சம்பாஷணையில்
என்னை சேர்க்க மாட்டார்கள்..
போடி அந்தண்டை
என அதட்டுவார் அம்மா..
என்ன ரகசியம் வேண்டியிருக்கிறது
முணுமுணுத்து நகர்வேன்..
ஒருவருடம் கழித்து
எனக்கு நிச்சயம் ஆன பிறகு
என்னிடம் பேச வந்த போது
போ அவளிடமே போய் பேசு
எனக் கோபிக்க
அம்மா சிரித்து
அடி குட்டி...
இப்ப தான்
உன் கிட்ட பேசணும்..
எனச் சொல்லி
பேசி, கற்றுக் கொடுக்க..
ஒரே ஒருகேள்வி எழுந்தது மனதில்
கல்யாணம் ஆனால்தான் பெரிய பெண்ணா
-
பெரிய பெண்ணா இல்லை சின்ன பெண்ணா
பெரிய குழப்பம் தொடருது என்னுள்ளே
வருடத்தோடு வயது வளரவில்லையோ
வதனபுத்தக பண்ணை விளையாட்டிலே
விதையாக பூ கனி தானியங்களோடு
வானவில்லும் கிடைக்கக் கண்டு விதைத்திட
வயலெல்லாம் வெடித்துச் சிரிக்கும் வானவில்கள்
வியப்பான வெள்ளைக் களிப்பிலெனை ஆழ்த்துதே
நடை தளர்ந்த வயதிலே நான்கும் பார்த்தபின்னே
நடப்பதும் நடக்காததும் மறந்து முன்னம் போல்
கற்பனைகளும் கதைவிடும் விளையாட்டு களங்களும்
களிப்பாக்கி அமுதுண்ட தேவர் லோகம் காட்டுவதேன்
-
காட்டுவதேன் என்ப்து புரியாத புதிர்...
எனக்கே தெரியாதா என்ன..
என்ன தான் கொஞ்சம் குண்டா இருந்தாலும்
உன்னோட க்ண்ல மின்ற் குறும்பு
ச்ற்றே விலகியிருக்கும் நடுப்ப்ல்..
குழ்ந்தைத் த்னமான உன் குரல்..
என்க்கு ரொம்ப்ப் பிடிக்கும்..
க்ல்யாண்மான புதிதில்
மனைவியின் வார்த்தைக்ள் இவை..
எப்ப்டியிருந்தாலும் சார்
கொஞ்சம் சிரித்தே
பிரச்னைகளை எதிர் கொள்கிறீர்கள்
ஐ லைக் இட்
சொன்ன்வள்
அலுவ்லக மார்க்கெட்டிங் பெண்..
கண்ணா
கொஞ்சூண்டு தொப்பையைக் குறை
அப்புறம் பாரு
இந்த டானிஷ் குட்டி
ஒம் பின்னாலேயே வரும்
உபதேசித்த்து அலுவ்ல்க
விற்பனை மேலாளர்..
இருந்தாலும்
கண்ணாடி முன் பார்க்கும்போது
எவ்வ்ளது தடவை
இருட்டை அப்பப்பார்த்தாலும்
தலை தூக்கி
கள்ளத்தன்மாய்ச் சிரித்தப்டி
வெளிவ்ரும்
வெள்ளி ஒற்றை முடி...
கோபத்துடன்
கத்திரி எடுத்து வெட்டினேன்..
ஹேய் நான் இப்போ இளமையாக்கும்...
என
கெக்கெக்கே என் கொக்க்ரித்தால்
ஆர்ப்பரிக்காமல்
சிரித்து
வெள்ளிமுடி சொல்கிறது சேதி..
-
சேதி சென்றது பல காதம்
டாம் டாமென தட்டித் தட்டி
பறந்து சென்றது புறாவுடன்
மடித்துக் கட்டிய மடலாய்
கடல் தாண்டியது கடிதத்தில்
விரைந்து வந்தது தந்தியாய்
காதில் சொன்னது வானொலிப்பெட்டி
கண்ணுக்குத் தந்தது தொலைக்காட்சி
கணிணியில் குவிந்திருக்கும் கடல்
உள்ளங்கை அலைபேசியில் இப்போது
விரல் தொடக் கொட்டிடக் காத்திருக்கு
மூளை வளருது துரத்துது முன்னேற்றம்
-
முன்னேற்ற்ம் வேண்டுமென்றால்
கொஞ்சம் சிரி
க்ண்களை அகலவிரி
அப்பொழுது தான் பெண்கள்
உன்னை ச் சூடுவார்கள்..
பெரிய் ரோஜா
சற்றே சோம்பியிருந்த
குட்டி ரோஜாவிடம் சொல்ல.
ம்ம்
என்ன பண்ணுவது
நீ நன்னா வள்ந்துட்ட
அதனால தெனாவட்டாசொல்ற
பாரேன் நேத்து மழை
அப்புறம் தோட்டக்காரன் வேற
த்ண்ணி ஊத்தினான்..
எவ்ளோ குடிச்சும் வள்ர முடியலை..
விதிப்படி ந்டக்கட்டும்
பெரிய ரோஜா தலையிலடித்துக்கொள்ள
பறிக்கும் பெண் வ்ந்தாள்...
கையில் இரு கூடைகள்
பெரிய ரோஜா ஒரு கூடை
சின்னது இன்னொன்றில் விழ..
க்டைக்குச் சென்று மாலைகளானதில்...
தொம்மென்று வைக்கப்பட்ட் பெரிசு
சுற்றும் முற்றும் பார்த்தால்
உயிரற்ற உட்லின் மேல்..
சுற்றியுள்ளவர்களுடன் சேர்ந்து
அதுவும் அழுத்து....
டப்க்கென்று விழுந்த
மாலையிலிருந்த குட்டி ரோஜாவிற்கு
கற்பூர் வாச்னை..ம்ற்றும் இன்பமான
சொல்ல முடியாத ந்றுமணம்...
உற்றுப் பார்த்தால்
இருப்பது அம்பாள் கழுத்தில்..
ஓ தாங்க்யு
ஓ நன்றி
ஓ நன்னி அம்மே
என பல் மொழிகளில் குழறி
சந்தோஷப் பட்டது..
புரிவதே இல்லை
எப்பொழுதும்
இறைவனின் கணக்கு
-
கணக்கு போடுகிறான்
கூட்டிக் கழித்து
அழித்துத் திருத்தி
அந்தர் பல்டி அடித்து
கபடதாரி அரசியல்வாதி
கடிமனதாளின் காதலன்
வேட்டைக்காரர் குறி பாவம்
வலையில் மீனாய் சிக்கும்
-
சிக்கும்
சுற்றிச் சுற்றிப் பார்க்கும் விழிகளில்..
ஒரு சின்ன சமிக்ஞை..
உடனே
குதி குதி எனக்
குதிக்க ஆரம்பித்து விடுவோம்..
கையில் உள்ள
காகித மாலைகளும் ஜொலிக்கும்..
எங்களது பற்களும் ஆடைகளும்
பளபள விளக்கொளியில்
இன்னும் பளபளப்பாக...
சுற்றியிருக்கும் ஜனம்
ரசிக்குமோ இல்லையோ தெரியாது..
ஆரம்பத்தில்
சின்ன வயதில்
நான் நன்றாக ஆடுவேனாம்..
பாட்டி உச்சி முகர்வாள்
அம்மா பாராட்டுவாள்
அப்பா பர்ஸ் திறந்து
பணம் கொடுப்பார் ஆடல் வகுப்பிற்கு..
எல்லாம் நன்றாகத் தான் சென்றது..
படிப்பும் நன்றாக வந்தது..
எங்கு வாழ்க்கை திரும்பியது தெரியவில்லை..
கடைசியில்
இப்படி
விளையாட்டுப் போட்டி மைதானத்தில்
குதிக்க வேண்டியதாகி விட்டது..
இதோ
மறுபடி சமிக்ஞை..
நாலா ஆறா ஆட்டமிழப்பா தெரியாது..
கால்கள் தாவுகின்றன
கைகள் விரிகினறன
இதழ்கள் மலர்கின்றன
ஆரம்பித்து விட்டோம் குதிக்க
ஒரு சின்ன
வயிற்றுக்காக...
-
வயிற்றுக்காக உண்ணமாட்டாள்
வடிவம் காக்க உருகுவாள்
குச்சி குச்சி ராக்கம்மா
சுவரில்லாமல் சித்திரமா