Page3
http://i1065.photobucket.com/albums/...psfsnfpprb.jpg
End
Printable View
வாசு சார்
அருமையான நிழற்படம். இதைப் பார்த்தவுடன் எனக்கு மனதில் ஒரு எண்ணம் தோன்றுகிறது. 87 ஆண்டுகளை நிறைவு செய்து அதனை உணர்த்தும் விதமாக 87 நிழற்படங்களைப் பகிர்ந்து கொள்வோமே. எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு எல்லோருமே பகிர்ந்து கொள்ளலாம்.
தொடக்கமாக, திரு கௌஷிகன் அவர்களின் உயிரோட்டமான எண்ணியல் ஓவியம்.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...84&oe=56A8DB56
http://i59.tinypic.com/k20mis.jpg
அன்புள்ளம் கொண்ட நடிகர் திலகம் திரி நண்பர்களுக்கு, முதலில் நடிகர் திலகம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
சமீப காலமாக நடிகர் திலகம் திரியினில், மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களின் அரசியல் ஈடுபாடு பற்றி சில சர்ச்சைகளும், வாதங்களும் நடைபெற்று வருகின்றன. என்னைப் பொருத்தவரை இந்த வாதங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று விரும்புகிறவன். இந்த சர்ச்சைகளை மேலும் வளர்க்க்காமல், ஊக்குவிக்கமால் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
இருப்பினும், இந்த அரசியல் விவாதங்களில், என்னுடைய பெயரும் இடம் பெற்றிருப்பதால், ஒரு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். என்னைப்பற்றி முழுவதும் அறிந்த அன்பு சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்கள், நடிகர் திலகம் அவர்களின் தமிழர் முன்னேற்ற முன்னணி வெற்றிக்காக எந்த அளவு பாடுபட்டேன் என்று எழுதியதற்கு பதிலுரையாக, சகோதரர் திரு. திருச்சி பாஸ்கர் அவர்கள், " மாற்று திரி நண்பர் செலவு செய்தால் என்ன செலவு செய்யா விட்டால் என்ன, அதைப்பற்றி கவலையில்லை " என்ற தொனியில், விமர்சனம் செய்துள்ளார்.
நான் பணிபுரிந்த, மணலியில் உள்ள, சென்னை எண்ணெய் சுத்திகரிப்பாலை நிறுவனத்தில் ENCASHMENT OF EARNED LEAVE FACILITY இருந்தும், பல நாட்கள் தொடர்ந்து ஈட்டிய விடுப்பு (EARNED LEAVE) எடுத்துக்கொண்டு, உறக்கத்தை துறந்து, BONUS, INCENTIVE, FESTIVAL ADVANCE, LTA போன்றவைகள் மூலம் பெற்ற என் சொந்த பணத்தை அதிகமாக செலவழித்தது. எங்கள் புரட்சித்தலைவரின் அருமை மனைவி அன்னை ஜானகி அணியின் வேட்பாளருக்கல்ல ! இரட்டைபுறா சின்னத்துக்கும் அல்ல. நடிகர் திலகம் கட்சியான தமிழர் முன்னேற்ற முன்னணி சார்பாக ஏணி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் திரு. கே. வி. பி. பூமிநாதன் அவர்களுக்காக !
இதே போன்று, சிவாஜி ரசிகர்கள் அன்னை ஜானகி அணி வேட்பாளர்களுக்கு செலவு செய்திருந்தால் எனக்கென்ன ? என்று நான் திருப்பி கேட்டால், அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கண்ட கூட்டணியின் தர்மத்துக்கு விரோதம் ஆகாதா ? இப்படி கேட்கும் ரசிகர்களை வைத்துக் கொண்டுதான் நடிகர் திலகமும் தேர்தலை சந்தித்துள்ளார். பின் எப்படி வெற்றி எதிர் பார்க்க முடியும் ?
காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்காமலிருந்த காலத்தில் கூட,, கருவேப்பிலை மாதிரி தன்னை பயன்படுத்தி கொண்ட காலத்தில் கூட, சகிப்பு தன்மையுடன் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், அன்னை ஜானகி அவர்களுக்கு சோதனை ஏற்பட்ட காலத்தில், அந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, அவருக்கு உறுதுணையாக உதவ முன் வந்த செயலினால் என் போன்ற மக்கள் திலகத்தின் தீவிர பக்தர்கள் மட்டுமல்லாது, பொதுவான அரசியல் நோக்கர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்தது நிதர்சனமான உண்மை, அவரின் இந்த செயலினால் அவர் உயர்ந்துதான் நின்றார்.
அரசியலில் வெற்றி தோல்விகள் சகஜம். நடிகர் திலகம் அவர்களும், அன்னை ஜானகி அவர்களும் முதன் முறையாக சட்டமன்ற பொது தேர்தலை சந்தித்து வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள். 1957ல் வெற்றி பெற்ற எங்கள் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1962ல் தோற்க வில்லையா ? 1962ல் வெற்றி பெற்ற மறைதிரு. காமராஜர் 1967ல் தோற்க வில்லையா ? இத்தனைக்கும் இவர்கள் ஏற்கனவே தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றவர்கள். அதனால் அவர்கள் அரசியல் ஈடுபாட்டை விமர்சனம் செய்ய முடியுமா ? உடனே, அவர்களுக்கு அரசியல்தான் முழு நேர தொழில் என்று நினைப்பது எனக்கு புரிகிறது. இருந்தாலும், தமிழகத்தில் கலைவாணர் முதற்கொண்டு இன்றைய நடிகர் விஜயகாந்த் வரை நடிகர்களின் அரசியல் ஈடுபாட்டினை மக்கள் ஒப்புக்கொண்டார்கள் என்றே கூற வேண்டும். இல்லையெனில், 1962;ல் இலட்சிய நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் அவர்கள் வெற்றி கண்டிருப்பாரா ?
ஆந்திர மாநிலத்தில் என்.டி. ஆர். அவர்கள் கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்தில் வெற்றி பெற வில்லையா என்று ஒரு விதண்டா வாத ஒப்பீடு ! மறைதிரு. என்.டி. ஆர். அவர்கள் கட்சி ஆரம்பித்து, தேர்தலை சந்தித்த போது ஆந்திர மாநிலத்தில் இருந்த சூழ்நிலை - தினம் ஒரு முதல் மந்திரியை (அஞ்சையா முதற் கொண்டு சென்னா ரெட்டி வரை) டெல்லி தலைமை மாற்றியதாலும், நிரவாகத்திறமை குன்றியதாலும், காங்கிரஸ் கட்சி முற்றிலும் செல்வாக்கிழந்திருந்தது. மேலும், அபோது ஆந்திர மாநிலத்தில் பலம் வாய்ந்த எதிர் கட்சி இல்லாமல் போனது தான். இந்த சாதகமான சூழ்நிலை நிலவிய போதுதான் மறைதிரு. என்.டி. ஆர். அவர்கள் வெற்றி பெற முடிந்தது. ஆனால், அவரும், அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் தோற்றுப் போனார். ஆனால், தமிழகத்தில், நான்கு முனை போட்டி இருந்தது. பலம் வாய்ந்த கட்சிகள் இருந்தன.
பொற்கால ஆட்சி தந்த எங்கள் பொன்மனச்செம்மல் அவர்கள், காலமாவதற்கு சில நாட்கள் முன்பு, அவருக்கு துரோகம் இழைத்தவர்களை அடையாளம் கண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அழைத்து, " தம்பி உனக்கு ஒரு பெரிய பொறுப்பினை வழங்கப் போகிறேன்" என்று கூறியதாக, சில நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை அப்படி நடந்திருந்தால், தமிழக அரசியலில் நடிகர் திலகம் அவர்கள் பிரகாசித்திருப்பார்.
எங்கள் மக்கள் திலகம் 1972ல் தி. மு. க. வை விட்டு நீக்கப்பட்ட பின்பு, என் போன்ற லட்சக்கணக்கான ரசிகர்களின் நிர்ப்பந்தத்தால் புதிய கட்சி ஆரம்பித்தார். அதற்கு பிறகு, அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் எங்கள் வேத வாக்கு. அவர் 1980ல் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பினை இழந்த போதும் ரசிகர்கள் அனைவரும் அவரை விமர்சனம் செய்ததில்லை. சில பதவி சுகம் கண்ட அரசியல் வாதிகளான துரோகிகள் மட்டுமே விலகினர். எந்த ஒரு எம். ஜி. ஆர். ரசிகனும் அவரை விட்டு விலக வில்லை. இன்னும், சொல்லப்போனால், முன்பை விட அதி தீவிர விசுவாசிகளாக மாறினர். இதையெல்லாம், எதற்கு சொல்கிறேன் என்றால், தலைவர் ஒரு முடிவை எடுத்து விட்டால் அதனை உறுதியாக பின்பற்றுவன்தான் உண்மையான தொண்டன். அதை விடுத்து, இறந்த பின்பு, நடிகர் திலகத்தின் செயல்பாடுகளை விமர்சிப்பவன் உண்மையான சிவாஜி ரசிகனாக இருக்க மாட்டான்.
அவரை பற்றிய மரியாதைக்குறைவான விமர்சனம் செய்வதற்கு (அதுவும் நடிகர் திலகம் திரியினிலேயே) , சிவாஜி ரசிகன் என்ற போர்வை தேவை தானா ? அப்படி தாங்கள் விமர்சிப்பதை மறைப்பதற்காக, நாங்கள் மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கும் மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களை எதோ நாங்கள் கடுமையாக விமர்சிப்பது போல ஒரு போலித்தோற்றத்தை உருவாக்குவது சரிதானா ? நீங்கள் நடிகர் திலகத்தை குற்றம் சாட்டும் அளவுக்கு கூட நாங்கள் விமர்சனம் செய்ததில்லை. அதுவும், நீங்கள் மக்கள் திலகத்தை விமர்சிக்கும் போதுதான் சில உணர்ச்சிகரமான, ஆக்ரோஷமான பதில் கூற நேர்கிறது.
திரு. ராகவேந்திரா மற்றும் திரு. ரவி கிரண் சூரியா அவர்கள் நட்புணர்வுடன் இருப்பது பிடிக்க வில்லை போல் தெரிகிறது. இரு திரிகளுக்குள்ளும், சுமுகமான உறவு நிலவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களில் நானும் ஒருவன்.
நடிகர் திலகத்தை உண்மையிலேயே நேசிக்கும் அவரது ரசிகர்களே ! சற்று சிந்திப்பீர் !
Delete
Muktha Films Produced lot of movies with Nadigar thilagam:
Even few months before his last days.. Muktha Sundar told him the story of " Nick of the Time" .story adapted to Nadigar thilagam ".An old man brings his American grandson to show to his bedridden wife and while landing in india .. how he gets into the clutch of Terrorists for their master plan to kill the president of a foreign country"
He was planning his role walking style... but could not go forward ...as his health was not fit enough to take such characters. emotional and lot of tensions..
an unfulfilled wishes of Sundar and Muktha Films.. Kannada Famous Director Sunil kumar Desai Did the same in Kannada with Sudeep and Ramesh Arvindh
https://www.facebook.com/photo.php?f...6628677&type=3
நன்றி : https://www.facebook.com/muktha.ravi?fref=nf
திரு முக்தா ரவி முக நூல்
http://i1028.photobucket.com/albums/...psaaddv2j1.jpg
வலி தந்து நிகழ்கின்ற
சராசரி பிறப்பல்ல..
நம் வலி தீர்க்கவே
நிகழ்ந்த பிறப்பிது.
எங்கள் கடவுளின்
அவதாரத் திருநாளை
எல்லோரும் கொண்டாடுவோம்.
Watch "Ellorum Kondaaduvom" on YouTube - https://youtu.be/Z5t4k1ue7Qs
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...pshbq32fii.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
கலைத்தாயின் அருந்தவப்புதல்வன், தமிழகக் கலையின் அடையாளம், நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 88வது பிறந்தநாளில் (01-10-2015), அவர் புகழ் போற்றி, தமிழனின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கப் பாடுபடுவோம்.
மனக் கோயிலில் வீற்ற இறைகளுக்கு நிஜகோயிலும்
கண்டன மதங்கள் தமிழ்மதம் தலைநிமிர ஒரேஇறை
பணிக்கான தமிழ்மன கோயிலின் கொற்றவனுக்கு
மணி கோ யிலில் வீற்றிருக்க காலம் வந்ததே கண்டதே
பெருமிதத்துடன் தொழ தமிழனுக்கு தமிழ்க் கோட்டம்
இருதிசைகளில் தொழுகை அன்னையில்ல திசையொ ன்று
ஆட்சியன்னை தந்த மணிக் கோயில் திசையின்று
மாட்சிமைமிக்க மகாசிவனுக்கும் ராஜராஜனே கண்டான்
கோட்டம் திருவிளையாடிய சிவனுக்கோ தமிழ் அய்யன்
தந்தருளிய சிலையொன்று அன்னையின் மண்டபமொன்று
அந்தவகையில் ஆட்சியாளர் கடன் தீர்த் தனர் தமிழர்க்கு
திகதியில் காணும் திருநாள் தித்திப்பல்ல உவப்பல்ல
ஆகமக் கடவுள் போல நட்சத்திர,திதிகளில் காணும் திருநாளே
நல்மரபாம் நம்மிறைகளுக்கு நடிப்பின் கலையிறைக்கும் காண்போம்
வெல்வது தமிழேயென தரணி காண செல்வோமினி தமிழ்மண்டபம்
இத்திருநாள் குடும்ப கொண்டாட்டமல்ல மக்கள் திருநாள்
முத்தமிழும் முத்தமிடும் முதற் திருநாள் முதற் தமிழனுக்கு
மாற்றோர் பண்பாள ர்களின் சிற்றவைக்கு பிரதியாக
போற்றுவோர் போற்றும் மறத்தமிழனின் பேரவை
உண்டு கொழுக்காமல் உண்ணாமல் வென்று
கண்ட மண்டபம் கண்ட கண்ணிமைக்காத சந்திரனுக்கு
என்றுமே வென்றுநிற்கும் அதிசய எழுத்தால் அர்ச்சித்த
மன்றமே வியந்து போற்றும் கோபாலனின் தலைவணக்கம்.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...fb&oe=56A22F0A
நண்பர்களே, கலை, அரசியல், பொது வாழ்வு, இல்லறம் என அனைத்திலுமே அப்பழுக்கற்ற, தூய்மையான, நேர்மையான, வெளிப்படையான வாழ்க்கையினை வாழ்ந்து காட்டி, ஒவ்வொருவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்து தலைவன் என்கிற சொல்லுக்கும் உண்மையான விளக்கமளித்து, தியாகம், பண்பு இவற்றின் உறைவிடமாக விளங்கும் மக்கள் தலைவன் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் அனைத்து நற்பண்புகளையும் பரப்பி அவருடைய மேற்கண்ட அத்தனை சிறப்புகளையும் எதிர்காலத்தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு சிவாஜி ரசிகனுக்கும் உள்ளது. அதை நிறைவேற்ற நமக்கு உந்து சக்தியாக விளங்கப் போவது இந்த உறுதிமொழி. இதை நாம் தாரக மந்திரமாக எண்ணி மக்கள் தலைவரின் பாதையில் பயணிப்போம் என்பதற்கான உத்தரவாதமாகக் கூறி சபதமேற்போம்.
அன்பு நண்பர் கலைவேந்தன்
தங்களுடைய அன்பிற்கும் ஆதரவான வார்த்தைகளுக்கும் உளமார்ந்த நன்றி. என்னைப் பொறுத்தவரையில் மக்கள் தலைவன் சிவாஜியை ரசிகனாக மட்டுமல்லாமல் ஒரு தொண்டனாகவும் தன்னை பாவித்துக்கொண்டு அவருடைய பாதையில் பயணிக்கும் ஒவ்வொருவரையும் என் அன்பு சகோதரனாகத் தான் போற்றுகிறேன். அந்த வகையில் இங்கு ஒவ்வொருவரும் அப்படியே. நடந்ததெல்லாம் மறந்திருப்போம், நடப்பதையே நினைத்திருப்போம் என்ற வரிகளுக்கேற்ப, இந்நாளில் தொடங்கி இனி வரும் காலங்களில் அவருடைய புகழைப் பாடுவதில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே என் வேண்டுகோள். இதற்கெனத் தனியாக உறுதிமொழியும் உருவாக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கும் மற்றும் அனைத்து எம்.ஜி.ஆர். அவர்களின் ரசிக சகோதரர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.
அன்பு நண்பர் பேராசிரியர் செல்வகுமார்,
தங்களுடைய ஆதரவான அன்பான பதிவிற்கு என் உளமார்ந்த நன்றி. தாங்கள் தங்களுடைய அனைத்து அலுவலக சலுகைகளையும் புறந்தள்ளி, தங்களுடைய சொந்த செலவில் த.மு.மு. விற்காகப் பணியாற்றியது உளமார்ந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தாங்கள் மட்டுமல்ல தங்களைப் போன்ற பல எம்.ஜி.ஆர். ரசிகர்கள் த.மு.மு. விற்காக உழைத்ததை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம். அதே போல ஜானகி அம்மையாரின் அணி சார்பாக போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் மக்கள் தலைவன் சிவாஜியின் தலைமையில் பல்லாயிரக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் தங்களுடைய சொந்த செலவில் உளமார்ந்த உழைப்பினை அளித்துப்பணியாற்றியதையும் தாங்கள் அறிவீர்கள். ஒரு சிலர் கேள்வி கேட்பதை நாம் புறந்தள்ளுவோம்.
இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாளையொட்டி அன்னை இல்லம் விழாக்கோலம் பூண்டிருக்கும். ஏராளமான ரசிகர்கள் நடிகர் திலகம் வாழும் போதும் சரி, அவர் பூவுடலால் இவ்வுலகை விட்டுச் சென்று 14 ஆண்டுகளாகியும் இன்றும் சரி, அவர் அங்கு இருப்பதாகத் தான் உணர்கிறார்கள். இதை அனைவரும் அறிவர்.
ஆனால் பலர் அறியாத ஒன்று, இதே திருவிழாக் கோலத்தை அன்னை இல்லம் ஜானகி அம்மையாருக்காக நடிகர் திலகம் காங்கிரஸை விட்டு விலகி வந்த மறுநாள் தொடங்கி தொடர்ந்து தேர்தல் வரையில் நீடித்தது என்பதை. நான் பலமுறை முன்பே இங்கு பகிர்ந்து கொண்டுள்ளேன். நடிகர் திலகத்தின் வீட்டருகில் சாலையெங்கும் லாரிகள் அணிவகுத்து நிற்கும், பல்வேறு வயதையொட்டிய ஆண்களும் பெண்களும் லாரியிலிருந்து இறங்கி நேராக அன்னை இல்லத்தில் நுழைந்து மக்கள் தலைவர் சிவாஜியின் காலடியில் விழுந்து உணர்ச்சி வசத்தோடு நன்றி கூறி கண்ணீர் விட்டு அழுததைக் கண்ணால் பார்த்தவன் நான். எத்தனையோ எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்னிடமே வந்து அவரைப் பற்றி தழுதழுத்தவாறு பாராட்டியதைக் காது குளிரக் கேட்டவன். அப்போது தொடங்கிய இறுமாப்பு இன்னும் பல ஜென்மங்களுக்குத் தொடரும். புராணங்களிலும் கதைகளிலும் படித்த நட்பின் சிறப்பை அன்று நடிகர் திலகம் இந்த 20ம் நூற்றாண்டில் நிரூபித்துக் காட்டினார். கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையர் உள்பட பல நட்பின் சிறப்பைப் படித்த நாம் அதை நடிகர் திலகம்-எம்.ஜி.ஆர். அவர்களிடம் கண்டோம். எம்.ஜி.ஆர். அவர்கள் நடிகர் திலகத்திடம் ஒப்படைக்க இருந்த பெரும் பொறுப்பை நடிகர் திலகம் கண்ணியமாக மறுத்து அதை அவரிடம் எடுத்துரைத்து, அவருக்குப் பிறகும் தன் முழு ஆதரவை அவருடைய வேண்டுகோளுக்கேற்ப நல்குவதாக உறுதியளித்தார். இதை அன்றைய எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பலரும் அறிவர்.
அந்த அடிப்படையில் இந்திய அரசியல் வரலாற்றில் தியாகத்தின் அடையாளமாக வாழ்ந்து காட்டிய நடிகர் திலகத்தின் பிறந்த நாளில் அவருடைய ரசிகர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்களை அளித்த தங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
அன்பு மிக்க பம்மலார்
தங்களுடைய இரு புத்தகங்களையும் விரைவில் எதிர்பார்க்கிறோம்.
அதுவும் புகழ்மாலை 2ல் மேலே காணப்படும் நிழற்படம் அபூர்வமானது. பத்திரிகைகளில் மட்டுமே வெளியாகியிருந்த இந்நிழற்படம் இதுவரையில் இவ்வளவு தெளிவாக நான் பார்த்ததில்லை. இதற்காகத் தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
எம்ஜியார் பக்தர்கள் சார்பில் நடிகர் திலகதிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
http://i60.tinypic.com/107kf81.jpg