டிஜிட்டல் 'வசந்த மாளிகை'யின் புத்தம் புது விளம்பர டிசைன்கள் 5
http://chennaionline.com/images/gall..._Photos_34.jpg
டிஜிட்டல் 'வசந்த மாளிகை'யின் புத்தம் புது விளம்பர டிசைன்கள் 5
http://chennaionline.com/images/gall..._Photos_34.jpg
Today 'Malai Malar' News paper.
http://epaper.maalaimalar.com/241120...8/14849224.jpg
குறிப்பு: மாலை மலர் செய்தியில் 'வசந்த மாளிகை' காவியம் (29.9.1972) 1973 என்று தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
vasantha-Maligai to be released all over Tamilnadu on 7 December
http://tamil.cinesnacks.net/news/201...res-again.html
டிஜிட்டல் 'வசந்த மாளிகை'யின் புத்தம் புது விளம்பர டிசைன்கள் 6
http://chennaionline.com/images/gall..._Photos_35.jpg
டிஜிட்டல் 'வசந்த மாளிகை'யின் புத்தம் புது விளம்பர டிசைன்கள் 7
http://chennaionline.com/images/gall..._Photos_36.jpg
டிஜிட்டல் 'வசந்த மாளிகை'யின் புத்தம் புது விளம்பர டிசைன்கள் 8
http://chennaionline.com/images/gall..._Photos_37.jpg
டிஜிட்டல் 'வசந்த மாளிகை'யின் புத்தம் புது விளம்பர டிசைன்கள் 9
http://chennaionline.com/images/gall..._Photos_38.jpg
டிஜிட்டல் 'வசந்த மாளிகை'யின் புத்தம் புது விளம்பர டிசைன்கள் 10
http://chennaionline.com/images/gall..._Photos_39.jpg
என்னை அன்புடன் வரவேற்ற அன்பு உள்ளங்கள்
சந்திரசேகரன் சார்
ராதாகிருஸ்ணன் சார்
ராகுல்ராம் சார்
ஆனந்த் சார்
அனைவருக்கும் மிக்க நன்றிகள்
வாசுதேவன் சார் நீங்கள் பதிவிட்ட வசந்த மாளிகை விளம்பரங்கள் அருமை
1973ம் ஆண்டுக்கு என்னை கொண்டு சென்றுவிட்டது
நன்றி சிவா சார்.
நடிகர் திலகத்துடன் மறைந்த வி.என்.சிதம்பரம் அவர்கள்.
http://balhanuman.files.wordpress.co...hidambaram.jpg
vasantha maligai.
http://chennaionline.com/images/gall..._Photos_19.jpg
சிவாஜியைப் பார்க்க ஆசைப்பட்ட காஞ்சிப் பெரியவர் — வி.என்.சிதம்பரம்
http://awardakodukkaranga.files.word...61&h=300&h=300http://www.thehindu.com/multimedia/d...AR_555735g.jpg
ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி காஞ்சிப் பெரியவர் தாம்பரம் தாண்டி நடந்து போயிருக்கார். அப்போது அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை எதேச்சையா பார்த்ததும் பெரியவாளுக்கு பயங்கர கோபம். தன்னோட உதவியாளர்களை கூப்பிட்டு “எனக்கு விளம்பரம் பண்றது பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியுமில்லே அப்புறம் எதுக்கு என்னோட படத்தை போட்டு போஸ்டர் ஒட்டியிருக்கேள்…” என்று கடுமையாக திட்டியிருக்கார். அப்போது “அந்த போஸ்டர்ல இருக்கறது நீங்க இல்லை… சினிமா நடிகர் சிவாஜி ‘திருவருட் செல்வர்‘ படத்துல சாட்சாத் உங்களை மாதிரியே மேக்கப் போட்டுண்டு நடிச்சார். அதைத்தான் நீங்க போஸ்டராக பார்த்து இருக்கேள்…” என்று சொல்ல… திகைத்துப்போன பெரியவாள், ‘நேக்கு சிவாஜியை பார்க்கணும்போல் இருக்கறது அவரை மடத்துக்கு அழைச்சுண்டு வாங்கோ…’ என்று தனது விருப்பத்தை தெரிவிச்சார். பெரியவாளை தரிசிக்க எத்தனையோ பேர் காத்துண்டு கிடந்தப்போ சிவாஜியை பார்க்க ஆசைப்பட்டது எவ்ளோ பெரிய புண்ணியம். பெரியவாள் கேட்டுக் கொண்டபடி காஞ்சீபுரம் போய் மடத்துல தங்கி பெரியவாகிட்டே ரொம்பநேரம் மனசுவிட்டு பேசிட்டு வந்தார், சிவாஜி.
– வி.என்.சிதம்பரம் (நன்றி விகடன்)
காஞ்சி பரமாச்சாரியார் பற்றி நடிகர் திலகம்
http://balhanuman.files.wordpress.co...yava.jpg?w=600http://i.ytimg.com/vi/UP2sfgxGK5I/0.jpg
‘எனக்கு ‘காஞ்சி பரமாச்சாரியாள்‘ மீது மதிப்பும், பக்தியும் உண்டு. அதற்கு ஒரு காரணம் உண்டு. அது ஒரு முக்கியமான சம்பவம். ஒரு நாள், காஞ்சி முனிவர் பரமாச்சாரியாள் அவர்கள் என்னைக் கூப்பிட்டு அனுப்பியதாக, சங்கர மடத்திலிருந்து செய்தி வந்தது. அவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார். அந்தமடம், கற்பகாம்பாள் கல்யாண மடத்திற்குப் பக்கத்தில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
நான், எனது தாயார், எனது தந்தையார், எனது மனைவி நான்கு பேரும் சென்றோம். சென்றவுடன் எங்களை உள்ளே ஒரு அறையில் உட்கார வைத்தார்கள். நாங்கள் ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தோம். காஞ்சி முனிவர் அங்கே மக்களுக்கு உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லைட்டெல்லாம் அணைந்துவிட்டது. அவர் கையில் ஒரு சிறிய குத்து விளக்கை எடுத்துக்கொண்டு, மெதுவாகப் பார்த்துக் கொண்டே வந்தார். மெல்லக் கீழே உட்கார்ந்து, கையைப் புருவத்தின் மேல் வைத்து எங்களைப் பார்த்தார். ‘நீதானே சிவாஜி கணேசன்?‘ என்றார். ‘ஆமாங்கய்யா! நான்தான்‘, என்று காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன். என் மனைவியும், பெற்றோர்களும் அவரை வணங்கினார்கள்.
அப்போது அவர், “உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம். திருப்பதி சென்றிருந்தேன். அங்கு ஒரு யானை எனக்கு மாலை போட்டது. யானை நன்றாக இருக்கிறதே யாருடையது? என்றேன். ‘சிவாஜி கொடுத்தது‘ என்றார்கள். திருச்சி சென்றிருந்தேன். அங்கு திருவானைக்கா கோவிலுக்குப் போனேன். அங்கும் யானை மாலை போட்டது. யானை அழகாக இருக்கிறது. யானை யாருடையது? என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள். தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சென்றிருந்தேன். அங்கேயும் யானையை விட்டு மாலை போட்டார்கள். ‘இது யாருடையது ?’ என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள். நாட்டில் பணக்காரர்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்கள் பப்ளிசிடிக்காக சில சமயம் கோயில்களுக்குப் பணம் தான் நன்கொடையாகக் கொடுப்பார்கள்”.
“ஆனால், யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும். அந்த மனசு உனக்கிருக்கிறது. ஆகையால் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்“ என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார். அப்போது என் மனம் எப்படியிருந்திருக்கும் ? எத்தனை அனுக்கிரஹம்! எண்ணிப் பாருங்கள்.”
ஒரு வேளை, இந்தச் சம்பவம் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கலாம். பரமாச்சாரியாளை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன். எனவே, அது ‘அப்பராக’ பிரதிபலித்திருக்கலாம் .
Today 'Thinathanthi' Ad.
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/av.jpg
ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்... மீண்டும் மயக்க வரும் வசந்தமாளிகை!
http://tamil.oneindia.in/movies/news...tml#slide19883
dear vasudevan sir. I find no words to describe the recreation of freshness in VN digital advts. Padharaadha Kariyam sidharaadhu. If planned meticulously in the foot prints of Karnan, no doubt, VM will surpass Karnan's records as this movie is unique for its storyline, acting and entertainment values beyond time and generations. thank you sir.
Looks like NT has created same record as MJ in giving posthumous box office hits!!
பதவியில்லை, அதிகாரமில்லை, எந்த ஒரு அரசியல் பின்புலமுமில்லாத தனி மனிதராக விளங்கும் நடிகர் திலகத்திற்கு, புகழும் செல்வாக்கும் குன்றாத மாமனிதருக்கு, மறைந்து 11 ஆண்டுகள் கழிந்த பின்னர் புதியதாக மன்றம் நேற்று 25.11.2012 துவங்கப் பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. அவருடைய புகழைப் பரப்ப தங்களின் உழைப்பில் ஈட்டிய வருவாயை செலவு செய்யத் துடிக்கும் உள்ளங்களைப் பெற்ற ஒரே மனிதர் நடிகர் திலகம் மட்டுமே என்பதை மீண்டும் நிரூபித்த திருப்பூர் ரசிகர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
Mr Raghvendra Sir,
That is the uniqueness as well as affection by our fans to NT. He will live forever
in the hearts of million of our fans all over the world.
Mr Vasu Sir,
Digital advt's are kalakkal.
Today 'Malai Malar' News
http://i1087.photobucket.com/albums/...0-2/v1-1-1.jpg
Thanks Senthil sir and Vasu sir
நேற்றைய தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ள செய்திக் குறிப்பு .. இணைய தள இணைப்பு ..
http://cinema.dinamalar.com/tamil-ne...igitalised.htm
http://img1.dinamalar.com/cini//CNew...1827000000.jpg
இதனுடைய அச்சு வடிவத்தின் நிழற் பிரதிQuote:
மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் வசந்த மாளிகை படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. சிவாஜி கணேசன் - வாணிஸ்ரீ ஜோடியாக நடித்து 1973ல் ரிலீசான படம் வசந்த மாளிகை. டைரக்டர் கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார். டி.ராமாநாயுடு தயாரித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்தது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மயக்கம் என்ன, கலைமகள் கைப்பொருளே, இரண்டு மனம் வேண்டும், யாருக்காக, ஒரு கிண்ணத்தில் ஏந்துகிறேன் ஆகிய அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்கள். படம் ரிலீஸ் ஆன நாட்களில் பட்டி தொட்டி எங்கும் கலக்கின.
இந்த படத்தை நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்கின்றனர். ஏற்கனவே திருவிளையாடல், ராஜ ராஜ சோழன், கர்ணன் உள்ளிட்ட பல சிவாஜி படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆனது. பாசமலர் படமும் மீண்டும் வருகிறது என்பது கூடுதல் தகவல்.
http://i872.photobucket.com/albums/a...alar261112.jpg
ஆலயமணி ...
ஒவ்வொரு காட்சியிலும் நடிகர் திலகத்தின் CLASS மிளிரும் படம். சென்னை நகரைப் பொறுத்த மட்டில் முற்பகல் அல்லது நண்பகல் காட்சி எனப்படும் NOON SHOW என்ற concept ஐ துவக்கி வைத்தது ஆலயமணி தான். சென்னை ஸ்டார் திரையரங்கில் - தற்போது அத் திரையரங்கு செயல்படவில்லை - நண்பகல் காட்சியாக ஆலயமணி திரையிடப் பட்டு அனைத்து நாட்களிலும் வெற்றிகரமாக நடை போட்ட படம். இதனைத் தொடர்ந்து படிப்படியாக அனைத்துத் திரையரங்குகளும் இந்த நேரத்தில் படங்களைத் திரையிட ஆரம்பித்தன. பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் வகுப்பிற்கு கட் அடித்து விட்டு சினிமா செல்ல வசதியாக அமைந்தது இந்த நண்பகல் காட்சி. குறிப்பாக தாய்மார்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் இந்த காட்சி நேரம். ஆலயமணி படம் நண்பகல் காட்சியில் பெற்ற வெற்றியே இன்று இந்த நண்பகல் காட்சி பிரம்மாண்ட வெற்றியடைய அடிகோலியது என்றால் மிகையில்லை. எனக்கு வீட்டிலிருந்து 15 நிமிட தூரம் என்பதால் பெரும்பாலான நாட்களில் மக்களின் வரவேற்பைக் காண்பதற்காகவே போவோம். 100 பேர் ஆடியன்ஸ் என்றால் கிட்டத்தட்ட 60 முதல் 65 வரை பெண்கள் இருப்பார்கள். அப்போது இந்த க்ரேஸை வைத்து சூரியகாந்தி படத்தில் மனோரமாவின் கதாபாத்திரத்தை அமைத்திருந்தார்கள் என்றால் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
படத்திற்கு வருவோம். உண்மையாகவே நானாக இருந்தாலும் சரி, என் வயதையொத்த எந்த ரசிகராயிருந்தாலும் சரி, அன்று நாங்கள் பார்த்ததை விட பற்பல மடங்கு அதிக ரசிப்புத் தன்மையோடு இன்று நடிகர் திலகத்தைப் பார்க்கிறோம் என்பதே உண்மை. அப்போதைய வேகம் வேறு இன்று நிதானமாக ஒவ்வொரு காட்சியையும் பார்க்கும் போது கலை சிற்பி என்று தான் நடிகர் திலகத்தைக் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு காட்சியிலும் என்ன ஒரு Finishing, Perfection, Landing, Take off என்று நுணுக்கமாக செய்துள்ளார். காட்சியை முடிக்கும் போது அதனை சரியான முறையில் landing செய்வது ... அதே போல் துவக்கத்தின் போது take off செய்வது என்று Perfection தான். ஒரு காட்சியில் அவர் நுழைகிறார் என்றால் விமானம் take off செய்யும் ஒரு ஆளுமையோடு தான் நுழைகிறார். அதே போல் காட்சி முடிகிறது என்றால் ஒரு விமானம் தரையிறங்கும் போது ஏற்படும் ஒரு சிறிய அதிர்வை ஏற்படுத்தி விட்டுத் தான் முடிக்கிறார்.
குறிப்பாக அந்த வீரப்பாவிற்கு உதவும் காட்சி. தன்னுள் இருக்கும் மிருக உணர்வை வென்று விட்டேன் என்கிற பெருமையோடு - அதே சமயம் தொடர விருக்கும் காட்சியில் அதே மிருகம் தலைதூக்கும் உணர்வை அறியாதவராய் - ஆல்பத்தை எடுத்துக் கொண்டே மன நிறைவோடு இறங்கி வந்து சோபாவில் அமரும் வரை இருக்கும் ஒரு திருப்தியான உணர்வினை வெளிப்படுத்தும் முகம் ... ஆல்பத்தில் அந்த சிறுவனின் நிழற்படத்தைப் பார்த்த வுடன் அப்படியே மாறுவது குறிப்பிடத் தக்க காட்சி. தன்னால் அந்த சிறுவன் மரணமடைந்து விட்டானே என்கிற குற்ற உணர்ச்சியும் அதே சமயம் அதற்கு நியாயம் கற்பிப்பது போல் அந்த சிறுவனை பழி வாங்கி விட்டோமே என்று சிறு வயதில் ஏற்பட்ட ஒரு அல்ப சந்தோஷம் இன்னும் தொடரும் உணர்ச்சியும் ஒரு சேர வெளிப் படுத்தி அதனை அந்தக் குரலில் கொண்டு வந்து நம்மை அப்படியே மூழ்கடிக்கும் காட்சி ...
உமக்கு யாரய்யா இதையெல்லாம் சொல்லித் தந்தார்கள் ..
எந்த film institute இதையெல்லாம் போதித்தது ...
என்று தான் கேட்கத் தோன்றுகிறது .
விக்ரகமாய் பிரதிஷ்டாபனம் செய்து கோயில் கட்டி நித்ய பாராயணம் செய்து உம்மை வழிபட்டு வந்தால் சிலை கூட நடிக்கத் தொடங்கி விடும்.
ராகவேந்திரன்