கலை சார்!
தங்கள் கண்ணியத்திற்கும், பெருந்தன்மைக்கும், உயர் குணத்திற்கும் மிக மிக நன்றிக் கடன் பட்டவனாகிறேன். பதிவுக்கான தங்கள் நன்றிக்கும் என் அன்பு பதில் நன்றிகள்.
Printable View
கலை சார்!
தங்கள் கண்ணியத்திற்கும், பெருந்தன்மைக்கும், உயர் குணத்திற்கும் மிக மிக நன்றிக் கடன் பட்டவனாகிறேன். பதிவுக்கான தங்கள் நன்றிக்கும் என் அன்பு பதில் நன்றிகள்.
ராகவேந்திரா அவர்களே,
நீங்கள் கொடுக்கும் அரிதான ஒவ்வொரு பாடலுக்கும் பெரிய நன்றி பதிவுகள் இடலாம். என்ன செய்வது கிடைக்கும் குறைந்த நேரத்தில் செய்ய முடியவில்லையே.
துள்ளி ஓடும் புள்ளிமான் திரைப்படம். நான் இப்படி ஒரு படத்தை கேட்டதாக கூட நினைவு இல்லை. எப்போது நேரம் கிடைக்கிறதோ கட்டாயம் பார்கிறேன். பாடல்களின் பதிவிற்கும் நன்றி.
அடுத்து மக்கள் கலைஞர் அவர்களின் பிறந்தநாளுக்கு கொடுத்த பாடல் என் மனதை மிகவும் கவர்ந்த பாடல் இதற்காக ஒரு தனித்துவமான நன்றி.
வாசு,
இப்படி நாங்கள் கேட்கும் விவரத்திற்கு பக்கெட் எடுத்து கொடுத்தும், எங்கள் சந்தேகங்களை தீர்த்தும், சில பிரச்சினைகளால் மன உளைச்சல் பட்டு எழுதியும், ... உமது நேரம் சரியாகப் போய் விடுகிறது. இவைகளுக்கெல்லாம் நேரம் ஒதுக்காமல் நீங்களாக பாடலின் விவரத்தை உங்கள் பாணியில் எடுத்துக் கொடுத்தால்... அம்மாடி. நினைத்துப் பார்க்கவே பிரமாதமாக உள்ளது. என்ன செய்வது சிலவற்றை இழந்தால்தான் சிலவற்றை பெறமுடிகிறது. சில தடங்கல்களும் நடந்து விடுகின்றன. என்ன செய்வது? விட்டுத் தள்ளுங்கள். தொடருங்கள் உங்கள் மதுர கானப் பணியை. ரசிப்பதற்கு காத்திருக்கிறோம்.
நமது நடிகர் திலகம் திரியிலும் நீங்கள் தொடர வேண்டும். இது எனது வேண்டுகோள்.
சி.க.
நேரமின்மை, உங்கள் பதிவுகளை படித்தாலும் விவாதிக்க முடியவில்லை. கவிதைகளுக்கும், பாடல்களுக்கும் நன்றி.
ராகவேந்திரன் சார்,
சரியாக ஜெய் அவர்களின் நினைவு தினத்தை ஞாபகம் வைத்து அவர் பாடலைத் திரியில் தந்தமைக்காக தங்களுக்கு மதுர கானங்கள் திரியின் சார்பாக
https://youtu.be/VXHH1TH3vwA
நன்றி கல்நாயக்.
உண்மைதான். நேரம் சரியாக இருக்கிறது. பதிவுகளுக்கான பின்னூட்டங்கள் வேறு முக்கியம். எல்லாவற்றுக்கும் பதிலும், நன்றியும் அளிக்க ஆசை இருந்தாலும் முடிவதில்லை. ஆனால் முடிந்த மட்டும் முக்கியமானவைகளுக்காகவாவது பின்னூட்டங்கள் தர வேண்டும். பதிவர்களுக்கும் உற்சாகம் பிறக்கும். நானும் என்னால் ஆனவரை கொடுக்க முயற்சிக்கிறேன்.
அடுத்த பாலா பதிவை ரெடி செய்ய மூன்று நாட்களாக முயல்கிறேன். முடியவில்லை. தாங்களும் நேரம் இல்லாமல் தவிப்பது நன்றாகப் புரிகிறது.
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி வாசு சார், கல்நாயக் சார் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்.
ராஜேஷ் சார்,
பக்தி மணம் கமழும் பாடல்கள் மட்டுமின்றி, இதர மொழிகளிலும் அருமையான பாடல்களை அதுவும் அபூர்வமான பாடல்களைப் பகிர்ந்து கொண்டு இத்திரியின் மதுரத்தை இன்னமும் கமழ வைக்கிறீர்கள்.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
அபூர்வ கானங்கள்
காஞ்சனா, மோகினி, முனி என டிவி. வழியாக நம் வீட்டுக் கதவுகளைப் பேய்கள் தட்டுகின்றன. டிரைலர் வழியாகவோ முழுப்படம் மூலமாகவோ நடக்கிறது.
ஆனால் இதெல்லாம் ஜூஜூபி.. நாங்களெல்லாம் அந்தக் காலத்திலேயே கதவைத் தட்டிப்புட்டோமே என இங்கே ஒரு குரல் வருகிறது பாருங்கள்..
ஆனால் இது இனிமையான குரல்.. இன்றைய வாழ்க்கையின் தத்துவத்தை அன்றே சொல்லிவிட்ட பாடல்.
சி.என். பாண்டுரங்கன் இசையில், வேம்பார் மணிவண்ணன் புண்ணியத்தில் ஏ.எம். ராஜாவின் குரலைக் கேட்போமா..
படம் - கதவைத் தட்டிய மோகினிப்ப பேய்.. வாழ்க்கை என்பது சீட்டாட்டம்.
https://www.youtube.com/watch?v=jrd2AUMKklM
அபூர்வ கானங்கள்
வாசு சார் கோபித்துக் கொள்ளாதீர்கள், முன் கூட்டியே போட்டு விட்டேனே என்று. தாங்கள் எழுதும் போது அதனுடைய சிறப்பே தனியாய்த் தெரியும். இன்று ஜெய் நினைவாக இடம் பெறுகிறது.
படம் - ராஜாவுக்கேத்த ராணி
இசை விஜய பாஸ்கரி
குரல்கள் - எஸ்.பி.பாலா, வாணி
அம்மாடி பொண்ணு என்னம்மா கண்ணு
https://www.youtube.com/watch?v=HB11Arzw6oI