தேடி வந்த அழைப்பு
https://pbs.twimg.com/media/BT0H6-qCcAAzB_L.jpg:large
நடிகர்திலகம் பாகம் 11.பக்கம் 187
Printable View
தேடி வந்த அழைப்பு
https://pbs.twimg.com/media/BT0H6-qCcAAzB_L.jpg:large
நடிகர்திலகம் பாகம் 11.பக்கம் 187
திரை உலகில் அதுவும் தமிழ் திரை உலகில் இது போல பல அதிசயங்கள், எவராலும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத சாதனைகளை அடிக்கடி நடிகர் திலகம் அவர்கள் செய்து காட்டியதால் தானே மற்றவர்களுக்கு அவர் மீது அப்படி ஒரு வயிதெரிச்சல் !
நாம் இங்கு குண்டு சட்டியில் குதிரை ஒட்டிகொண்டிருக்க இவன் மட்டும் என்னதான் நாம் சதி செய்தாலும் உலகளவில் புகழ் பெருகிறானே என்ற பொறாமை தானே இன்று வரை தொடர்கிறது !
என்றைக்கு நாம் விருதை தேடி போனோம் ? அங்கிகாரமும், பாராட்டும், பட்டமும் நம்மை அல்லவா தேடி வந்தது 1952 தீபாவளி முதல் !
நாம் என்றைக்கு நமக்கு நாமே மானியம் விட்டுகொண்டோம் ? இன்று வரை நாம் அதை செய்வதில்லை !
எட்டுதிக்கும் தேடி வந்து பாராட்டப்பட்ட ஒரே நடிகர் அவர் காலத்தில் நடிகர் திலகம் மட்டுமே என்பதை உலகறியும் என்பதை ஆதார ஆவங்களுடன் நிரூபிப்பவர் நாம் ! அதன் வழியில் இதோ !
நடிகர் திலகத்துடன் நடித்ததால் நடிப்பில் நல்ல தேர்ச்சி பெற்று சிறந்த நடிகை என்று பெயர் பெற்றவர்கள் !
1) சரோஜா தேவி - கவர்ச்சி பதுமையாக வலம் வந்தவர் - நடிகர் திலகத்துடன் இனைந்து பாலும் பழமும் ,பாகபிரிவினை, இருவர் உள்ளம், புதியபறவை, தேனும் பாலும் படங்கள் - நடிப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் அவருக்கு வந்த வாய்ப்பு கல்யாணபரிசு, குலவிளக்கு, மற்றும் பல படங்கள்.
2) ஜெயலலிதா - சற்று கூடுதல் கவர்ச்சி பதுமையாக பயன்படுத்தப்பட்ட நடிகை - நடிகர் திலகத்துடன் நடித்த படங்கள் தான் இவருக்கு சிறந்த நடிகை என்ற நிலைக்கு கொண்டு சென்றது. மற்ற நாயகர்களுடன் நடித்ததை விட அதிக 100 நாட்கள் இவர் நடிகர் திலகத்துடன் நடித்தபோதுதான் கிடைத்தது, சிறந்த நட்சத்திர அந்தஸ்தும் கிடைத்தது - தெய்வமகன், கலாட்ட கல்யாணம், ராஜா என்ற நேரம் போக்கு படங்கள் நடித்து பெரு வெற்றி பெற்றாலும் அதை விட பெரு வெற்றி பெற்ற படங்கள் - எங்கிருந்தோ வந்தாள், சவாலே சமாளி, பட்டிக்காடா பட்டணமா, அவன்தான் மனிதன் - அன்பை தேடி, பாட்டும் பாரதமும் ஆகிய படங்களில் சிறந்த நடிப்பில் பரிமளித்து தேர்ச்சி பெற்றார் - சூரியகாந்தியாக !
இப்படி எந்த நடிகையின் வளர்ச்சியை எடுத்துகொண்டாலும் நடிகர் திலகம் அவர்களுடன் இணைந்த பிறகே இவர்களுக்கு ஒரு பெரும் நட்சத்திர அந்தஸ்த்தும், நடிப்பு திறமையும் அதிகரித்து பல நல்ல நடிப்பு திறமை வெளிப்படும் கதாபாத்திரங்கள் அமைந்தது !
நடிகர் திலகம் ஒரு பல்கலை கழகம் ! அதில் பயின்றவர்கள் என்றுமே சோடைபோனதில்லை !
தங்கை வனஜா ,
நீட நாள் சென்று திரியில் வந்தது சந்தோசம் முன்பு அளித்தது போல நல்ல பதிவுகளை அளிக்கவும்.வருக என்று வரவேற்கிறேன்.
அனைத்து சகோதர உள்ளங்களுக்கும் எங்கள் இனிய ரமதான் வாழ்த்துக்கள். அந்த ஓரிறை உலகில் சாந்தியும் சமாதானமும் நிலவிட அருள் புரியுமாக. மனிதம் ,மதங்களை முந்தட்டும்.
முரளி அவர்களே
தங்கள் நடுநாயகமான தீர்ப்புக்கு நன்றி.நான் நிறைய உங்களிடம் எதிர்பார்த்தேன்.அது என்னுடய தவறுதான்.இனி என்ன கரடியாகக் கத்தினாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை.ஆனால் இந்தத் திரியைப் பற்றிய என்னுடைய கருத்துக்கள் தொண்ணூறு சதவீத உறுப்பினர்கள் மத்தியில் ஏன் உங்கள் மனதிலும் கூட நியாயம் என்று தெரிவதை உங்கள் மனசாட்சிப்படி மறைக்க முடியாது. உங்கள் சூழ்நிலை அப்படி. உங்களின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் உங்களை நன்றாகவே காட்டிக் கொடுத்து விட்டன. தங்கள் பதிவில் நாகரீகம் குறைந்து அகங்காரம் தெரிய ஆரம்பித்துவிட்டது.மற்றவர்களுக்கு உண்மை உணர வைக்கும் நீங்கள் நிறைய உண்மைகளை உணர்ந்து உணராதது போல் பாசங்கு செய்வது எவ்வகையில் நியாயம். திரியை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று கூறும் நீங்களே சொல்லுங்கள். திரி திரியாகவா இருக்கிறது. நீங்களும்தானே உயிரைக் கொடுத்து இந்தத் திரியை வளர்த்தீர்கள். நீங்களே அது உங்கள் கண்முன் அழிவதை வேடிக்கை பார்க்கிறீர்கள் அதுவும் கை தட்டிக் கொண்டு.அப்படி என்ன நிர்ப்பந்தம் உங்களுக்கு. இளிச்சவாயர்களுக்கு மட்டுமே உங்கள் எச்சர்ரிக்கை செல்லுபடியாகும்.உங்கள் கோபம் எங்களைப் போன்றோரிடம்தான் செல்லும்.கோபால் போன்றவர்களிடம் செல்லாது.அதிகாரம் உங்களிடம் இருக்கும் போது நான் தொண்டைத் தண்ணீர் வத்தி கத்தி என்ன பயன்.உங்களுக்குக் கோபம் வரும்படி நான் ஒன்றுமே எழுதவில்லையே.சிவாஜியைப் பற்றி பதிவிட்டால்தான் கேட்க உரிமை உண்டு என்ற ஒரு வாதத்தை வைக்கிறீர்கள்.அப்படிப் பார்த்தால் இந்தத் திரியில் மூன்று பேரைத் தவிர யாரும் தேற மாட்டார்கள்.எல்லாமே எஸ்,சூப்பர்,அருமை இப்படித்தான் போடுவார்கள். அவர்களை நான் குறை சொல்லவில்லை. உங்களுக்கு புரிவதற்காக சொல்கிறேன்.இதற்கும் எங்களுக்கு எல்லாம் தெரியும் வேலையைப் பார் என்பீர்கள்.
ஒரு படத்தைப் பார்ப்பவன் அதை தாரளமாக விமர்சனம் செய்யலாம். அவன் அந்தப் படத்தில் பங்கு கொண்டிருக்க தேவை இல்லை. இந்த சின்ன விஷயம் கூட புரியாத இத்திரியில் நான் இனி பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. ஆதரவு அளித்த நண்பர்களுக்கும்,எதிர்த்த நண்பர்களுக்கும் உங்களுக்கும் நன்றி கூறி எப்போது இந்தத்திரி நியாயத்தின் பக்கம்நகர ஆரம்பிக்கிறதோ அப்போது மீண்டும் வருவேன் என்று கூறி தற்காலிகமாக விலகுகிறேன்.இனி இந்தத் திரியை காப்பாற்ற அந்த ஆண்டவனால் கூட முடியாது.வணக்கம். நன்றி.
ராமதாஸ்
மனதை கவர்ந்த பாடல்கள் வரிசையில்
https://www.youtube.com/watch?v=e1bidmRMFbU
https://www.youtube.com/watch?v=T9cjvtnF-eM
ராமதாஸ்,
தங்கள் பிரச்சினை புரியவில்லை. ஆனாலும் அது உங்களுக்கும் moderator அவர்களுக்கும் உள்ள பிரச்சினை.அதில் நான் தலையிட விரும்பவில்லை.
கீழ்கண்ட பதிவு தங்களால் 6 மே 2014 இல் போடப்பட்டது.
6th May 2014, 10:16 AM #2654
Rama Doss
Rama Doss is offline
Junior Member Junior Hubber
Join Date
Apr 2014
Posts
29
Post Thanks / Like
கோபால் அவர்களே!
நன்றிகள் பல. தங்கள் எழுத்துக்களை அணுஅணுவாகப் படித்து ரசித்து வருகிறேன். தங்கள் பதிவுகள் திரியோடு முடிந்து போகாமல் திக்கெட்டும் புகழ் பரவியதாய் இருக்க வேண்டும். கண்டிப்பாக புத்தகமாக வெளியிடப் படவேண்டும். உள்ளதை உள்ளபடி உரைக்கும் தங்கள் துணிச்சல் மெச்சத் தகுந்தது.
இது தங்களின் பதிவுதானே?நான் ஒன்றும் தவறாக quote செய்யவில்லையே? உங்களுக்கு என்னை பற்றி
அபிப்பிராயம் மாறியிருக்கலாம். ஆனால் என் பதிவுகள் எப்போது புரியாததாக ஆயின? சொன்னால் திருத்தி கொள்வேன்.விமரிசிப்பது உங்கள் உரிமை என்றாலும் இரண்டே மாதங்களில் இவ்வளவு முரணா ?மற்ற படி எனக்கு சலுகை காட்டி எதோ திரியில் அனுமதிக்கிறார்கள் என்ற ரீதியில் நீங்கள் எழுதுவது உள்நோக்கம் கொண்டது.
சாதாரண அகவற்பா மரபு முறையில் ,சாதாரண தமிழ் சொற்களால் எழுத பட்ட,பாடு பொருள் நன்கு தெரிந்த கவிதையில் புரியாமல் என்ன உள்ளது?நீங்கள் ஒரு ஆசிரியர் எனவே நம்பி,உங்கள் பழைய மாணவர்களை எண்ணி கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியவில்லை.ஆனாலும் ,தங்கள் பிரச்சினை தீர ,ஒரு கோனார் நோட்ஸ் போட்டு விடுகிறேன் ,என் கவிதைக்கு.
இனிய ரமலான் நல்வாழ்த்துகள்
எங்கும் சகோதரத்துவம் விளங்கட்டும்
http://www.hindu.com/thehindu/gallery/sg/sg005.jpghttp://www.123telugu.com/content/wp-...h-Sivaji-G.jpg
உத்தமன் திரை படத்தில் இருந்து நடிகர் திலகம் அவர்கள்
அனார் சலீம்
'அனார் என்றால் மாதுளம் ஆசை கொண்ட மாதிடம்
சலீம் என்ற மன்னவன் சலாம் வைத்தான் உன்னிடம் '
http://www.youtube.com/watch?v=_4qQLyrynfs
அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் ஈஃத் திருநாள் வாழ்த்துகள்.
அன்புடன்