ஆத்ம ஜெயம்
____________
கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ -அட
மண்ணில் தெரியுது வானம் அதுநம்
வசப்பட லாகாதோ
எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ -அட
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு ப்ராஷக்தியே!
என்ன வரங்கள், பெருமைகள்,வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ!
தன்னை வென்றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்
முற்றுமுணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ?
______
That poetry comes under the title "ஆத்ம ஜெயம்" . I dont know if this was composed as a song :? but used to love reading it and indulging in its deep meanings.
முனிவரும் இன்னும் பலரும் உரைத்த மறைபொருளை உணர்ந்த பின்னும்
( முற்றும் உணராததால்....என்று நான் கொள்கிறேன்...
ஒருவன் முற்றும் உணர்ந்தால், தான் என்பதே அழிந்து விட, அங்கு ஜெயிக்க ஒன்றும் இல்லை...ஆகவே முற்றும் உணராததாலே அவன் தாழ்வுற்று இன்னும் நிற்கிறான்)
தன்னை (ego) ஜெயிக்க முடியாமல் தாழ்வுற்று நிற்போமோ?!?
a line for every spiritual aspirant :?