https://scontent-yyz1-1.xx.fbcdn.net...30&oe=58AB38B2
Printable View
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...11498666_o.jpg
(நன்றி சுந்தரராஜன் முகநூல்)
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...b7&oe=5867A98C
(நன்றி சுந்தரராஜன் முகநூல்)
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...f6&oe=586AC7D2
(நன்றி சுந்தரராஜன் முகநூல்)
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...eb&oe=586E82B8
(நன்றி சுந்தரராஜன் முகநூல்)
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...27574464_o.jpg
(நன்றி சுந்தரராஜன் முகநூல்)
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...92779275_o.jpg
(நன்றி சுந்தரராஜன் முகநூல்)
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...38375234_o.jpg
(நன்றி சுந்தரராஜன் முகநூல்)
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...06&oe=5875FAE8
(நன்றி பாலகிருஷ்ணன் முகநூல்)
நடிகர் திலகத்தின் 88-வது பிறந்த நாளை முன்னிட்டு உருவாக்கப்பட்ட காணொளிக் காட்சி. 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் - அருண் காந்த் இசையமைப்பில் சூப்பர் சிங்கர் புகழ் ரோஷன் மற்றும் கோகுல் பாடியிருக்கின்றனர். பாடல் வரிகள் இன்பா. இதற்கு காட்சிகளை தந்து உதவியவர் நமது ராகவேந்தர் சார்.
https://www.youtube.com/attribution_...eature%3Dshare
அன்புடன்
நன்றி முரளி சார்
நடிகர் திலகத்தின் 88வது பிறந்த நாள் விழா சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் 01.10.2016 மாலை சென்னை மியூஸிக் அகாடமி அரங்கில் நடைபெற்றது. விழாவில் நடிகையர் வாணிஸ்ரீ, நிர்மலா, நடிகர் ஒய்.ஜீ.மகேந்திரா, ஒளிப்பதிவாளர் விஸ்வநாத் ராய், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மற்றும் மூத்த சிவாஜி ரசிகர்கள் திரு ஜெயவேலு, நாகமணி மற்றும் ராஜசேகரன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
விழாவில் கௌரவிக்கப்பட்ட திரையுலகக் கலைஞர்கள் நடிகர் திலகத்துடன் பணியாற்றிய படங்களிலிருந்து காட்சிகள் ஒளிபரப்பப் பட்டன.
திருமதி வாணிஸ்ரீ -
உயர்ந்த மனிதன் - வெள்ளிக்கிண்ணம் தான் பாடலின் ஒரு பகுதி, வசந்த மாளிகையில் தலைவரின் வசனக்காட்சி, குலமா குணமா படத்தில் பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு போவதில்லை என வாணிஸ்ரீ ஏற்ற பாத்திரம் கூறும் காட்சி மற்றும் மேள தாளம் பாடலின் ஒரு பகுதி.
செல்வி நிர்மலா - எங்க மாமா படத்தில் சொர்க்கம் பக்கத்தில் பாடலிலிருந்து ஒரு பகுதி, லக்ஷ்மி கல்யாணம் படத்தில் வசனமில்லாத காட்சி, பாபு படத்தில் நிர்மலா பாடுவதாக வரும் இதோ எந்தன் தெய்வம் பாடல் காட்சியின் ஒரு பகுதி
திரு சங்கர் கணேஷ் - அன்புள்ள அப்பா படத்திலிருந்து அன்புள்ள அப்பா பாடலின் ஒரு பகுதி, ஆனந்தக் கண்ணீர் படத்திலிருந்து எங்கள் குடும் பாடலின் ஒரு பகுதி, நீதியின் நிழல் படத்திலிருந்து குத்து விளக்கோ பாடலின் ஒரு பகுதி.
திரு விஸ்வநாத் ராய் - திருடன் படத்தில் ஸ்பென்சர் கட்டிடத்தின் முன்பு படப்பிடிப்பு நடத்தி கொள்ளையடிக்கும் காட்சி, எங்கிருந்தோ வந்தாள் படத்திலிருந்து ஔவையார் மற்றும் பாரதிதாசன் வேடத்தில் தலைவர் நடித்தவை, தர்மராஜா படத்தின் ஜெயித்துக்கொண்டே இருப்பேன் பாடலின் முதல் பகுதி, பாரத விலாஸில் இந்திய நாடு என் வீடு பாடலின் பகுதிகள்
திரு ஒய்ஜீ.மகேந்திரா - கௌரவம் மாதிரி கோர்ட் சீன், வெள்ளை ரோஜா படத்தில் நாகூரு பக்கத்திலே பாடலின் ஒரு பகுதி, உருவங்கள் மாறலாம் படத்தில் தலைவரின் ஒரிஜினல் கெட்டப்பில் மகேந்திரனுக்கு கடவுளாய்க் காட்சி தருவது, மற்றும் பரீட்சைக்கு நேரமாச்சு படத்தில் சிக்கன் 65 காட்சி.
ஒரு சிவாஜி ரசிகனாக தான் அவரை ரசிப்பதைத் தன் பேச்சில் அழகாக சொன்ன மாண்பு மிகு மத்திய அமைச்சர் திரு வெங்கய்ய நாயுடு அவர்களின் உரை கேட்கத் தெவிட்டாத தெள்ளமுது.
விழா துவங்குதற்கு முன், திரு அருண் காந்த் அவர்களின் காணொளித் தொகுப்பு திரையிடப்பட்டு பலத்த கரகோஷத்தைப் பெற்ற தோடு மீண்டும் ஒளிபரப்பக் கோரி எழுந்த குரல்களை மதித்து மீண்டும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அன்புச் சகோதரர் திரு ராம்குமார் அவர்கள் வரவேற்புரையாற்ற, திரு பிரபு அவர்கள் நன்றி கூறினார்.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, விழாவிற்கு வெள்ளமெனத் திரண்டிருந்த மக்கள் கூட்டம்.
விழாவைப் பற்றி விரிவாகவும், மற்றும் திரு அருண் காந்த் அவர்களின் பங்களிப்புப் பற்றியும் நம் முரளி சார் எழுத்தில் படிக்க ஆவல்.
விழாவினைப் பற்றிய காணொளி இணையத்தில் தரவேற்றப்ப்ட்டுள்ளது. அதற்கான இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=DrcCdze-GR8
நண்பர்களே,
இந்த முறை சிவாஜி பிறந்த நாள் விழாவில் கௌரவிக்க பட்ட வாணிஸ்ரீ, விஸ்வநாத ராய், y .G. M ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
வெங்கையா நாயுடுவின் சுருக்கமான ,செறிவான உரையை கேட்டு களித்தேன்.
நடிகர்சங்க நிர்வாகிகள் விஷால்,நாசர் போன்றோரை வன்மையாக கண்டிக்கிறேன். அவரின் சிலைக்கு மரியாதை செலுத்தி நடிகர் தினத்தை கொண்டாடாத இவர்களால் ,நடிகர் என்று பட்டம் சுமந்து எப்படி திரிய முடிகிறது?
அ .தி .மு .க பற்றி கவலையில்லை. தி .மு .க பிரமுகர்கள் வந்திருக்கலாமே?மரியாதை செலுத்தி இருக்கலாமே?தி.மு.க வை ஆரம்ப காலத்தில் வளர்த்ததில் நடிகர்திலகம் பங்கு உண்டே? அண்ணா,கருணாநிதி,உட்பட எல்லோரும் சிவாஜி ரசிகர்கள்தானே ?
கலைஞர்களால் வளர்ந்த தி.மு.க அந்த கலைக்காவது வணக்கம் செலுத்த வேண்டாமா? கலைஞர் திறந்து வைத்த சிலைக்கு உரிய மரியாதை செலுத்தியிருக்க வேண்டாமா?
கமல்,ரஜினி போன்றோர் தீவிர நடிகர்திலகம் பக்தர்கள். அவருடைய நடிப்பை பிரதியெடுத்து அவரை முன் மாதிரியாக சுமப்பவர்கள். அவர்கள் வந்து உரிய மரியாதை செலுத்தியிருக்க வேண்டாமா?
அவன்தான் மனிதனின் சாதனை வியக்க வைக்கிறது. ராஜபார்ட் ரங்கதுரை வெற்றி காண வாழ்த்துக்கள்.
இன்னும் மூன்று பதிவுகளில் 4000 எட்டி விடுவேன். 4000 ஆவது பதிவாக நவராத்திரி இருக்கும். பிறகு ,திரியில் இருந்து ஓய்வு பெற எண்ணியுள்ளேன்.
இதுவரை எனக்கும் இடம் கொடுத்த திரிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
என் பரீக்ஷா கால நண்பன் ,இன்றைய நடிகர்சங்க தலைவன் நாசரிடம் தொலைபேசியில் மனம் விட்டு பேசினேன் .
கீழ்கண்ட விஷயங்களை தெளிவாக கூறினார்.
1)நடிகர்திலகத்திடம் ,இன்றைய நிர்வாகிகள் பெருமதிப்பு கொண்டுள்ளனர்.
2)அரசியல் ரீதியாகவோ,தனி பட்ட முறையிலோ யாருக்கும் எந்த வித தயக்கமோ நெருக்கடியோ இல்லை.
3)இந்த முறை ஹைட்ரபாத் நகரில் ஒரு படப்பிடிப்பில் இறுதி கட்டத்தில் மாட்டி கொண்டதால், அக்டோபர் 1 அன்று நடிகர்திலகத்தின் சிலைக்கு மரியாதை செலுத்த,சக நிர்வாகிகளை பணித்துள்ளார்.
4)எனது,நடிகர்திலகம் புத்தகத்துக்கு ,இயக்குனர் மகேந்திரன்,நடிகர் நாசர்,அஜித் ஹரி போன்றோர் முன்னுரை அளிக்க இசைந்துள்ளனர்.
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...2f&oe=586298AB
(பத்மநாதன் அவர்களின் முகநூலில் இருந்து)
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...29&oe=58A1E1F2
நடிகர் திலகம் சிவாஜிக்கு எத்தனையோ சிறப்புகள் உள்ளது. அவற்றில் முக்கியமானது அவர் அமெரிக்காவில் உள்ள பிரபலமான சுற்றுலாத்தலமான நயாகரா மாநகரத்தின் ஒரு நாள் மேயராக ப...தவி வகித்தது.
நடிகர் திலகத்தின் நடிப்பிற்கு மிகப்பெரிய ரசிகர் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான்.எப் கென்னடி. அவர் சிவாஜியை நேரில் பார்க் விரும்பி 1962ம் ஆண்டு அமெரிக்காவுக்கு அழைத்தார். அந்த நாட்டின் சிறப்பு விருந்தினராக சிவாஜி அமெரிக்கா சென்றார். அங்கு அதிபர் ஜான் எப்.கென்னடியை சந்தித்தார். பின்னர் அவர் உலகிலியே பிரமாண்ட அருவி கொட்டும் நயாகரா நகர ஒரு நாள் மேயராக நியமிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். மாநகர் மன்ற கூட்டத்தில் சிவாஜி பேசினார்.
சிவாஜியின் வருகையை அறிந்த அன்றை ஹாலிவுட் நடிகர்கள் அவரை சந்தித்து பேசினார்கள். டாவரிச் வரிசை படங்களின் நாயகன் ஜேம்ஸ் கார்னர், ஆஸ்கர் விருது பெற்ற ஜேக் லெம்மோன், தி டென் கமாண்ட்மேண்ட்ஸ், பென்ஹர் பட நாயகன் கார்ல்ட்ன் ஹெஸ்டன், ஹாலிவுட்டின் ஆரம்ப கால ஹீரோ ஜார்ஸ் சேன்ட்லியர், ஊமை படங்களின் நாயகன் வால்டர் பிட்ஜியோன் ஆகியோர் அவரை சந்தித்து சிவாஜியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்திய நடிகர்கள் எவருக்கும் கிடைக்காத மிகப்பெரிய கவுரவம் இது.
(சேகர் பரசுராம் அவர்களின் முகநூலில் இருச்து)
நமது நடிகர் திலகத்தின் அலாதி சிரிப்பு....அவரது வெகுளித்தனமான குழந்தை மனதிற்கு இந்த புகைப்படம் ஒரு எடுத்துக்காட்டு...அந்த சமயம் திரு.வி.பி.சிங் அவர்கள் இந்தியாவின் பிரதம மந்திரி என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி திரு.பழனியப்பன் சுப்பு - புகைப்படம்
(நன்றி திருச்சி சிறினிவாசன் முகநூல்)
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...fa&oe=58711E95
" நாம் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது "
Welcome for our James Bond
October 14 rh onwards chennai mahalakhsmi theatre
" தங்கச் சுரங்கம் "
http://oi67.tinypic.com/29d9c4.jpg
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 147 – சுதாங்கன்.
http://www.dinamalarnellai.com/site/...k%20thevar.jpg
ஏழு இரவுகளோடு போராடி `புதிய பறவை’ படத்திற்கான முழு வசனங்களையும் எழுதி முடித்துவிட்டு சிவாஜியிடம் தெரிவித்தார் ஆரூர்தாஸ்!
அவருக்கு இருந்த படப்பிடிப்பு பணிகளுக்கிடையில் ஆரூர்தாஸ் எழுதியதை படித்துக் கேட்பதற்கு ஒரு நாளை ஒதுக்கினார் சிவாஜி! தெற்கு போக் ரோட்டிலிருந்த சிவாஜியின் `அன்னை இல்லம்’ வீடு! தரையில் சிவாஜியும், ஆரூர்தாஸும் அமர்ந்து கொண்டார்கள். கீழே தரையில் உட்கார்ந்து சோபாவில் சாய்ந்தபடி காலை நீட்டியபடி கேட்பது சிவாஜிக்கு மிகவும் பிடிக்கும். ஆரூர்தாஸ் எப்போதுமே தனது வசனங்களை இரண்டு கோப்புகளாகப் பிரித்து வைத்திருப்பார். ஒன்று– இடைவேளை வரையில். இன்னொன்று– இடைவேளைக்குப் பிறகு! இருவரும் காலை சிற்றுண்டி முடித்து காபி சாப்பிட்டார்கள். அந்த வீட்டில் உள்கூடத்தில் இருந்த அந்த ஆள் உயர அயல்நாட்டு கடிகாரம் ஒன்பது முறை அடித்து ஓய்ந்தது. சிவாஜி சிகரெட் பற்ற வைத்துக்கொண்டார். ஆரூர்தாஸ் நெற்றிக்கும் நெஞ்சுக்குமாக கைகளால் சிலுவைக் குறி போட்டுக்கொண்டார்.
படிக்கத் தொடங்கினார். `நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும் சிவாஜி பிலிம்ஸின் ` புதிய பறவை’. காட்சி ஒன்று – பகல் – சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வரும் கப்பல் நடுக்கடலில் மிதந்து வருவது காட்டப்படுகிறது.
காட்சி இரண்டு – பகல்– கப்பலில் உள்ளே முதல் வகுப்புப் பகுதியில் பயணிகளுக்கிடையில் கதாநாயகன் கோபால் ( சிவாஜி), நாயகி லதா ( சரோஜாதேவி) மற்றும் அவருடைய தந்தை (வி.கே. ராமசாமி) அறிமுகமாகிறார்கள்.
ஒவ்வொரு காட்சியாக திரைக்கதையை விவரித்து அதற்கான வசனங்களைப் படித்துக்கொண்டே வந்தார். சிவாஜி வைத்த விழி வாங்காமல் ஆரூர்தாஸையே பார்த்துக்கொண்டிருந்தார். இடையில் தொலைபேசித் தொல்லைகள், நண்பர்கள் வருகை எதுவும் இல்லாதபடி முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் ஆரூர்தாஸின் `மூடு’க்கு எந்த இடைஞ்சலும் இல்லை. ஆரூர்தாஸும், சிவாஜியும் தெளிவான கதை சிந்தனையிலேயே இருந்தார்கள். இடைவேளையை நெருங்கிக்கொண்டிருந்தார் ஆரூர்தாஸ்! மதிய உணவு வேளையும் வந்து கொண்டிருந்தது. உள்ளே இருந்து சிவாஜியின் துணைவியார் கமலாம்மாள் வந்தார். `மாமா! மணியாகுது சாப்பாடு ரெடி’ என்றார்.
சிவாஜி : ஆரூரான்! உனக்கு பிடித்த வரால் மீன் குழம்பும், வறுவலும் இருக்கு. காலையிலேயே அம்மாகிட்ட சொல்லிட்டேன். சாப்பிட்டுட்டு ஒரு சின்ன தூக்கம் போட்டுட்டு, நாலு மணிக்கு மேலே இடைவேளைக்கப்புறம் இருக்கிறதை படிக்கலாம்.
கமலாம்மாளும் தஞ்சாவூர்காரர் என்பதால், அவர்களது ஊர்ப்பக்குவத்தில் புளி சற்று தூக்கலாக கரைத்து கறிவேப்பிலை. பச்சை மிளகாய் போட்டு ‘திக்’காக வைக்கும் மீன் குழம்பும், நிறைய மிளகாய் சாந்தில் போட்டு பொன்வறுவலாக வறுக்கும் மீனும் ஆரூர்தாஸுக்கு மிகவும் பிடிக்கும்.
சாப்பிட்டு முடித்ததும், கட்டில் மெத்தை இல்லாமல், கீழே தரையில் துண்டை விரித்து தூங்குவது சிவாஜிக்கு பிடிக்கும்.
அந்த நாட்களில், சிவாஜி பிலிம்ஸுடன், சிவாஜி நாடக மன்றமும் சொந்தமாக வைத்து, தனது பழைய சக்தி நாடக சபா நடிகர்களுடன் நாடகங்களையும் நடத்தி வந்தார் சிவாஜி.
`வீரபாண்டிய கட்டபொம்மன், `வியட்நாம் வீடு’ `தங்கப்பதக்கம்’ ஆகிய படங்கள் நாடகங்களாக வந்தவைதான்.
ஆரூர்தாஸுக்கும் சினிமா புகழ் இருந்ததால், அவரையும் நாடகம் எழுதித்தரும்படி சிவாஜி கேட்பார்.
அப்போதெல்லாம், `நாடகம் எழுதிக் கொடுத்து, நாடகம் நடக்கிற அன்னிக்கு நூறோ இருநூறோ பணம் வாங்கறதை விட, உங்க படத்துக்கு எழுதி ஆயிரக்கணக்கில் வாங்கிக்கிறேன்’ என்பார் ஆரூர்தாஸ்.
சில சமயங்களில் நாடகம் நடக்கிற நாட்களில் தனக்கு படப்பிடிப்பு இல்லாவிட்டால், பேச்சுத்துணைக்காக ஆரூர்தாஸை அழைத்துக்கொண்டு, ராஜா அண்ணாமலை மன்றம், `மியூஸிக் அகாடமி,’ ` ஆர்.ஆர். சபாவிற்கு காலையிலேயே போவார் சிவாஜி.
மதியம் வரையில் பழைய கதைகளையெல்லாம் பேசுவார். வீட்டிலிருந்து சாப்பாடு வரும். சாப்பிட்டுவிட்டு, அங்கேயே மேடையிலேலே துண்டை விரித்து போட்டுத் தூங்கிவிடுவார். சொல்லி வைத்தாற்போல் சரியாக நான்கு மணிக்கு எழுந்துவிடுவார். உடனே ஒரு காபி குடித்துவிட்டு ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொள்வார். அதை அப்படியே இழுத்துக்கொண்டு நாடக ஆசிரியரை வரவழைத்து அன்றைய நாடக வசனங்களை அப்படியே படிக்கச் சொல்லி கேட்பார்.
இதையெல்லாம் அருகிலிருந்து பார்த்த ஆரூர்தாஸ் பிரமித்துப் போவார். சிவாஜியின் தலைசிறந்த நடிப்பு ஒரு புறம் இருக்கட்டும். மறுபுறம் அவருக்கு இருக்கும் `கலை ஒழுக்கம்,’ உண்மையான தொழில் பக்தி, `அக்கறை’ இவைதான் சிவாஜி கணேசன் என்ற ஒரு மாபெரும் நடிகனை செதுக்கி உருவாக்கி, உன்னதமான நிலைக்கு உயர்த்தி இருக்கிறது.
`செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம்’ என்று பாடினார் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அந்தப் பாடல் சிவாஜிக்கு மிகவும் பொருந்தும்.
இப்போது அன்னை இல்லத்தில் கதையின் இரண்டாவது பகுதியை படிக்க ஆரம்பித்தார் ஆரூர்தாஸ். சிவாஜியின் அந்த கதாபாத்திரத்தோடு அப்படியே ஒன்றிப்போய் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டு படித்துக்கொண்டிருந்தார் ஆரூர்தாஸ். அதுவரையில் லேசாக இருந்த அந்த கதாபாத்திரம், இடைவேளைக்குப் பிறகு வரும் நிகழ்ச்சிகளால் கனமாக இருக்கவேண்டும் என்பதற்காக வசனங்களின் எடையைச் சற்று கூட்டி இருந்தார் ஆரூர்தாஸ். சிவாஜி அதை புரிந்துகொண்டார் என்பதை அவரது முகபாவத்திலிருந்து புரிந்து கொண்டார் ஆரூர்தாஸ்.
படித்துக்கொண்டே வரும்போது, இடையிடையே ஆங்காங்கே அவர் கேட்ட விவரங்கள், அதற்கு ஆரூர்தாஸ் அளித்த விளக்கங்களுடன் படத்தின் உச்சக்கட்ட காட்சிக்கு வந்தார் ஆரூர்தாஸ். சரோஜாதேவி – போலி சவுகார் ஜானகி – எம்.ஆர். ராதா, ஓ.ஏ.கே. தேவர் – எஸ்.வி. ராமதாஸ் ஆகிய பாத்திரங்கள். நடுவே சிக்கிக்கொண்ட சிவாஜி!
(தொடரும்)
நடிகர்திலகம் 89வது பிறந்தநாள் விழா, திருச்சி
-----------------------------------------------------------------
08-10-2016 - நடிகர்திலகம் 89வது பிறந்தநாள் விழா, திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வாக, சிவாஜி சமூகநலப்பேரவையின் திருச்சி புறநகர் மாவட்டத் தலைவராக இருந்து சமீபத்தில் காலமான திரு.சிறுகமணி கந்தசாமி அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000/- நிதி உதவி வழங்கப்பட்டது. மற்ற அரசியல் கட்சிகள்போல லட்சத்தில் உதவிடவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், லட்சியத்தை மட்டுமே மனதில் கொண்டு நடைபோடும் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் சிறு உதவியாயினும் அது சிறப்பானதே என்ற வகையில் ₹50,000/- உதவி என்பதும் சிறப்பானதே.
இப்பணியில் என்னோடு பணியாற்றும மற்றும் உதவிடும் நண்பர்களுக்கு நன்றி,
நடிகர்திலகம் புகழ்பரப்பும் பணியில்,
K.சந்திரசேகரன்
http://i1234.photobucket.com/albums/...pso7t8fgwh.jpg
http://i1234.photobucket.com/albums/...psvhm081vh.jpg
http://i1234.photobucket.com/albums/...psc9efoxh7.jpg
http://i1234.photobucket.com/albums/...psw0ifef5j.jpg
http://i1234.photobucket.com/albums/...ps4ydxg2ca.jpg
[URL=http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/Photo6_zpswzrjrmbz.jpg.html]
இன்று பராசக்தி வெளிந்த 64 வது வருடம்
http://i66.tinypic.com/2zpp4kp.jpg
http://i65.tinypic.com/2s6jw9i.jpg
http://i67.tinypic.com/1mbsl.jpg
From Vikatan,
கண்ணதாசனின் தத்துவப்பாடல்களும் சிவாஜிகணேசனின் கதாவிலாஸமும்!
http://img.vikatan.com/news/2016/10/...kannadasan.jpg
அறிஞர் என்றால், அண்ணா
கலைஞர் என்றால், கருணாநிதி
கவிஞர் என்றால், கண்ணதாசன்'
என்று சொல்வார்கள். இன்று கண்ணதாசன் நினைவு நாள். பூமிப்பந்தின் வரலாற்றில், தனது சொந்த வாழ்க்கையையே ஒரு பரிசோதனைக்களமாக்கி அதில் பலதரப்பட்ட அவதாரங்களையும் அதற்கேற்ற பலவிதமான வாழ்க்கையையும் வாழ்ந்து பார்த்து, அதன் விளைவுகளை, அதன் முடிவுகளை வெளிப்படையாக எல்லோருக்கும் கூறிய பெருமை ஒருவருக்கு, ஒரே ஒருவருக்கு உண்டு என்றால், அது கவிஞர் கண்ணதாசனுக்கு மட்டுமே உண்டு.
குழந்தையைப்போல் வெள்ளை உள்ளம் படைத்த அவர், மனிதனாக, ஞானியாக தன் வாழ்க்கையை ஆய்ந்து, அதில் இறைவனின் பங்களிப்பையும் கலந்து அவற்றைத் தன் பாடல்களின் மூலம் வெளிப்படுத்தினார். அதனால்தான் `வனவாசம்’என்னும் தனது சுயசரிதையின் முன்னுரையில், 'ஒரு பெருமிதம் எனக்குண்டு. என் தலைமுறையில் வாழும் எந்த மனிதனுக்கும் தலைவனுக்கும் கவிஞனுக்கும் இத்தகைய சுயசரிதம் அமையாதென்பதே அது. இப்படி ஒன்று அமையவேண்டும் என்றால், யாரும் நீண்டகாலம் முட்டாளாக இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் கைவரக்கூடிய கலை அல்ல! ‘எப்படி வாழவேண்டும்?’ என்பதற்கு இது நூலல்ல; ‘எப்படி வாழக்கூடாது!’ என்பதற்கு இதுவே வழிகாட்டி' என்று குறிப்பிடுகின்றார்.
கண்ணதாசன், எழுத்தாளர், கவிஞர், நாவலாசிரியர், பத்திரிகையாளர், திரைப்படப் பாடலாசிரியர், கதை-வசனகர்த்தா, அரசியல் கட்சித் தலைவர், திரைப்படத் தயாரிப்பாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். இதில், பலவற்றில் வெற்றியையும் சிலவற்றில் தோல்வியையும், நிறைய நண்பர்களையும், நிறைய எதிரிகளையும் அவர் சந்தித்தார். இப்படிப் பலதரப்பட்ட முகங்களை அவர் கொண்டிருந்தாலும், திரைப்படப் பாடலாசிரியராகத்தான் அவர் பெரும் வெற்றி பெற்றுள்ளார்.
காலத்தால் அழியாத சாகா வரம் பெற்ற பாடல்களை வழங்கியதில், அவர் நேற்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் முடிசூடா மன்னனாக, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கவிஞராகத் திகழ்கிறார். வாழ்க்கைப் படிப்பினைகளை, தோல்விகளை, துன்பங்களை சிக்கல்களை தானே அனுபவித்ததால் நெருப்பில் புடம்போட்ட தங்கமாக மின்னும் ஞானத்தை அவருக்கு இணையாக இன்றளவும் எவரும் பெறவில்லை என்றே சொல்லலாம்.
55 வயது மட்டுமே வாழ்ந்த முத்தையா என்னும் கண்ணதாசனுக்கு கண்ணனின் மேல் அலாதிப் பிரியம். கண்ணனைப் பாடு பொருளாகக் கொண்டு சிலேடையுடன் சினிமா கதாபாத்திரங்களுக்கு எழுதிய பாடல்கள் எல்லாம் ஹிட் என்றாலும், 'வானம்பாடி' திரைப்படத்தில் அமைந்த இந்தப் பாடலில்,
'கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே காலையிளங்காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே... கண்ணன் முகத் தோற்றம் கண்டேன்... கண்டவுடன் மாற்றம் கொண்டேன்' என்பவர், 'கண்ணன் முகம் கண்ட கண்கள், மன்னன் முகம் காண்பதில்லை...கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை' என மேலும் சொல்வது, ரொம்பவே சிறப்பு.
நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் திரைக் கதாபாத்திரங்களுக்கும் கண்ணதாசனின் சொந்த வாழ்வு அனுபவங்களுக்கும் நிறையவே தொடர்பு இருப்பதுபோல் அவரது படத்தில் இடம் பெற்ற தத்துவப் பாடல்கள் அமைந்திருக்கும். அந்தப் பாடல்களுக்கான பின்னணி, கண்ணதாசன் வாழ்வின் ஏதோ ஒரு சம்பவத்துடன் தொடர்புள்ளதாக இருக்கும். சிவாஜி கணேசன் நடிக்க, கண்ணதாசன் பாட்டெழுத, டி.எம்.சௌந்தர்ராஜன் பாட எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைக்கவேண்டும். அதை இரவு நேரங்களில் கேட்க வேண்டும். இத்தனைக்கும் இந்தப் பாடல்களை எழுதும்போது கவிஞரின் வயது 35தான் என்பது மிகப்பெரிய ஆச்சர்யமான ஒன்றாகும். கண்ணதாசனின் தங்க வரிகளில் மின்னும் சில வைரங்கள்:
படம்: பார்த்தால் பசி தீரும்
'உள்ளம் என்பது ஆமை... அதில் உண்மை என்பது ஊமை...
சொல்லில் வருவது பாதி... நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி...
தெய்வம் என்றால் அது தெய்வம்... அது சிலை என்றால் வெறும் சிலைதான்
உண்டென்றால் அது உண்டு... இல்லை என்றால் அது இல்லை'
படம்: பாவ மன்னிப்பு
'வந்தா நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை...
வான்மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை... மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
பறவையைக் கண்டான்... விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான்... வானொலி படைத்தான்
எதனைக் கண்டான்... பணம்தனைப் படைத்தான்'
படம்: பாவ மன்னிப்பு
`எல்லோரும் கொண்டாடுவோம்... அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம்...
நூறு வகைப் பறவை வரும்... கோடி வகைப் பூ மலரும்...
ஆட வரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா...
கறுப்பில்ல வெளுப்பும் இல்லே... கனவுக்கு உருவமில்லே (2)
கடலுக்குள் பிரிவும் இல்லை.... கடவுளில் பேதமில்லை...
முதலுக்கு அன்னையென்போம்... முடிவுக்கு தந்தையென்போம்
மண்ணிலே விண்ணைக் கண்டு ஒன்றாய்க் கூடுவோம்...’
படம்: ஆலயமணி
`சட்டி சுட்டதடா கை விட்டதடா! புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா!
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா! நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா! சட்டி சுட்டதடா கை விட்டதடா!
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக்கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டிவைத்ததடா
ஆட்டிவைத்த மிருகம் இன்று அடங்கிவிட்டதடா
படம்: ஆண்டவன் கட்டளை
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் - இதில்
மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த
ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்’
படம்: குங்குமம்
`மயக்கம் எனது தாயகம், மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம், நான் கண்ணீர் வரைந்த ஓவியம்
நானே எனக்குப் பகையானேன் - என்
நாடகத்தில் நான் திரை ஆனேன், தேனே உனக்குப் புரியாது
அந்த தெய்வம் வராமல் விளங்காது, விதியும் மதியும் வேறம்மா - அதன்
விளக்கம் நான்தான் பாரம்மா, மதியில் வந்தவள் நீயம்மா - என்
வழி மறைத்தாள் விதியம்மா’
படம்: நிச்சயதாம்பூலம்
'படைத்தானே, மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை
குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லை
ஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியைக் காணவில்லை
அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை’
படம்: புதிய பறவை
'எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?
எங்கே மனிதன் யாரும் இல்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்...
எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே...
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே!’
படம்: பார் மகளே பார்
அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பாக்கும்போது கண்களிரண்டைக்
கவர்ந்து போனாளே
அவள் எனக்கா மகளானாள்? நான்
அவளுக்கு மகனானேன் என்
உரிமைத் தாயல்லவா என்
உயிரை எடுத்துக்கொண்டாள்...
படம்: பாலும் பழமும்
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
படம்: வசந்தமாளிகை
கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ...
விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரலில்லையோ...
சொர்க்கமும் நரகமும் நம்வசமே - நான்
சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே...
சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே - இது
தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே...’
படம்: அவன் தான் மனிதன்
'மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
தந்தை தவறு செய்தான் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்துவிட்டோம் வெறும் பந்தம் வளர்த்துவிட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன... அவன் ஆட்சி நடக்கின்றது...’
கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கண்ணதாசனுக்கும் சிவாஜிக்கும் திரைப்படத்துறை வாயிலாகவும் , அரசியல் ரீதியாகவும் தொடர்பிருந்தது. இருவருமே தி.மு.க-விலிருந்து காங்கிரஸுக்கு வந்தவர்கள். சிவாஜிகணேசன் ஏற்ற கதாபாத்திரங்களின் நகர்வுகளில் கண்ணதாசனின் பாடல்கள் கதையம்சத்துடன் ரொம்பவே நெருக்கமாக ஒட்டி உறவாடியவை. குறிப்பாக `வசந்த மாளிகை’யில் சிவாஜி ஏற்ற ஆனந்த் கதாபாத்திரம் கண்ணதாசனின் குணங்களோடு ரொம்பவே நெருக்கமானவை. அதனால்தான் காலங்கள் மாறினாலும், தரம் மாறாத பாடல்களாக இன்னமும் இனிக்கின்றன.
நடிகர் திலகம் நடிப்பில் தங்கச் சுரங்கம் என்றால் அவரது படங்கள் பட வெளியீட்டாளருக்கு தங்கச் சுரங்கம் என்பதில் ஐயமில்லை. சென்னை மகாலட்சுமிக்கு விஜயம் செய்த சி.பி.ஐ, ஆபிஸர் ராஜன் பொது மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்று வசூலையும் அள்ளியிருக்கிறார்.
முதல் மூன்று நாட்களில் வெறும் 6 காட்சிகளில் [தினசரி 2] ராஜனை கண்டு களித்தவர்கள் 2000-2100 க்கும் அதிகம் மொத்த வசூல் ரூபாய் 55 ஆயிரத்திற்கும் அதிகம். ஆறே காட்சிகளில் அரை லட்சத்தை தாண்டுவது என்பது பெரிய வெற்றி.
இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் இதே தங்கச் சுரங்கம் திரைப்படம் கடந்த 2 வருடங்களில் எத்தனை முறை திரையிடப்பட்டிருக்கிறது என்பதை பார்த்தாலே அதன் வெற்றியின் வீச்சு புரியும். கடந்த 2 வருடங்களில் சென்னை பைலட் திரையரங்கில் வெளியாகி சாதனை புரிந்தது. பின் மகாலட்சுமியில் வெளியாகி வசூலை குவித்தது. பின் மீ ண்டும் ஓரு சிறிய இடைவெளியை நிரப்ப அதே மகாலட்சுமியில் திரையிடப்பட்டது. இப்போது மீண்டும் வெளியாகி சாதனை படைக்கிறது. நேற்றைய தினம் [ஞாயிறு அன்று] இந்திய அணி விளையாடிய ஒரு நாள் போட்டி தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பு [மதியம் மற்றும் மாலை இரண்டு காட்சிகளையும் ஒரு சேர பாதிக்கும் கால அளவில்] இருந்தும் இந்த சாதனை. அதுதானே நமது நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் பவர்.
நடிகர் திலகம் திரையுலகில் உதயமான நாளன்று [அக்டோபர் 17] இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்வதில் பெருமையடைக்கிறேன்.
அன்புடன்