Quote:
ராதிகா சரத்குமாரின் ராடான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் "செந்தூரப்பூவே' என்ற புதிய தொடர் சன் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது. இதில் ரஞ்சனி கிருஷ்ணா கதாநாயகியாக நடிக்கிறார். இவருடன் டெல்லி குமார், நித்யா, பத்மா செüத்ரி, ராஜலட்சுமி, கெüசிக், அப்ஸர், மோனிகா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
மலேசியாவின் ஆஸ்ட்ரோ வானவில் நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற "மல்லிகைகள் நிறம் மாறுவதில்லை' என்ற நாவலை மையமாக வைத்து இந்தத் தொடர் உருவாக்கப்பட்டிருக்கிறது. நடுத்தர வர்க்கத்தில் வாழ்ந்துவரும் பெண்களின் பொறுமை, தியாகம் போன்றவற்றை யதார்த்தமாகப் பிரதிபலிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆபாவாணன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த "செந்தூரப்பூவே' படத்தில் இடம்பெற்ற "செந்தூரப்பூவே... இங்கு தேன் சிந்த வா! வா!' என்ற பாடல் இந்தத் தொடரின் டைட்டில் பாடலாக ஒலிக்கிறது.
இந்தத் தொடர் ஜூலை 28-ம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.
திரைக்கதை -"மெட்டி ஒலி' முத்துச்செல்வம். வசனம் -பன்னீர்செல்வம். இசை -கிரண். ஒளிப்பதிவு -அனில் வாஸ். இயக்கம் -சுகி ஜெயராம்.