நன்றி திரு. ராகவேந்திரன்.
:clap:அடுத்த பதிவு ஒத்திவைக்கப்படுகிறது :-)Quote:
Originally Posted by Murali Srinivas
Printable View
நன்றி திரு. ராகவேந்திரன்.
:clap:அடுத்த பதிவு ஒத்திவைக்கப்படுகிறது :-)Quote:
Originally Posted by Murali Srinivas
இத்தகைய தாக்கத்தை ஒரு மாபெரும் நடிகர் திலகம் நம்மிடயே உருவாக்கி இருப்பதில் அளவிலா மகிழ்ச்சி. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Dear PR, பெரிய தேவர் பற்றிய உங்கள் கட்டுரை முடிவுறாத நிலையில் இடையில் குறுக்கிட்டு இந்தக் கேள்விகளை கேட்பதற்கு மன்னிக்கவும்.
1. PD கதாபாத்திரம் திரையில் இன்னும் அதிக நேரம் வரும்படி கதையிலும் திரைக்கதையிலும் சிறிது மாற்றம் செய்திருந்தால் இன்னும நன்றாக இருந்திருக்குமோ ??
(sorry, due to time factor, will continue to type in Tanglish. Pls bear with me :( )
Andha kala kattathil NT க்கு kidaitha super ஆன kadhapathiram adhu. Adhai innum muzhumayaga naam anubavikka mudiyamal poivittadho endru ungal katturaiyai padithapin thondrukiradhu. (Shakthi மனம் மாற வேறு காட்சிகளையும் உத்திகளையும் பயன்படுத்தி PD இறுதிவரை சக்தியுடன் இருக்குமாறு கதை அமைந்திருந்தால் ????? :D )
Ennai poruthavarai Devar Magan kooda nam thilagathin nadippu pasikku kidaitha chinna virundhu dhan. Adhil avarai முறையாக பயன்படுத்தினார்கள் ஆனால் முழுசாக பயன்படுத்தவில்லை என்ற ஏக்கம் ஒரு சாதாரன ரசிகனான எனக்கு ஏற்படுகிறது.
2. NT nadithadhil, PDக்கு aduthapadiyaaga ஆழமாக oppittu aaraindhu alasakkoodiya alavukku thagudhi petra kadhapathiramaaga neengal edhai kooruveergal ??
மேலும், neengal, Murali sir & Sarada avargal kurippittadhupol, pala samayangalil avarudaya abarimidhamaana thiramai veenadikkappattadhu mutrilum unmai.
Nadippukku sariyana alavukol therindhirundhum, soozhnilayin kattayathal thanadhu nadippai siridhu maatriyamaithu, palarum kanmoodithanamaga Over-acting endru sollumalavukku oru dhurbhagiyamana nilaikku thallappattar.
Mannikkavum, idharku oru vagayil perumbaalana avarin rasigapperumakkalum, thaangale unaradha vagayil kaaranamaagivittargal !! :( அதாவது, therindho, theriyaamalo, oru Image Factor க்குள் sikkikkondaar endru sollalam. This seems to be both his plus & minus.
Matra nadigargalai vida siridhu adhigamaaga seidhaalthan avar Sivaji endra manobhavathodudhan பெரும்பாலான rasigargal avar padangalai edhirkondaargal endru ninaikkiren.
Idhuv, Sodhanai muyarchigalil avar adhigam eedupadaamal irukkavum, melum, iyalbaana nadippai perum veeriyathodum azhagunarchiyodum velippaduthakoodiya paathirangal (பெரிய தேவர் போல) avarukku adhiga alavil kidaikkamal ponadharku oru kaaranamaaga amaindhuvittadha ??? Theriyavillai... ???
Please, yaarum ikkelvigalai thavaraaga eduthukkolla vendam.
" எனக்கு ஏண்டா இது போன்ற வேடங்கள யாரும் தரவில்லை" endru avar aadangamaaga kettaare, adhaippondra en aadhangathin vilaivudhan meley koorappattulla en karuthukkal.
பிழையான கருத்தாக இருந்தால் மன்னிக்கவும் அல்லது தெளிவுபடுத்தவும்.
தில்லானா - எத்தனை முறை பார்த்தாலும் பரவசம்.
அண்மையில் இங்கே இது மிக விரிவாக அலசப்பட்டிருப்பதால் என் பதிவை சுருக்குகிறேன்.
மீண்டும் மனதில் அழுத்தமாக பதிந்தவை. நாதஸ்வரம் வாசிப்பதை விட வாசிப்பது போல் நடிப்பது மிக கடினம். அதுவும் ஒரு ஷாட் தொடர்ந்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு தொடரும் போது பாவனை கஷ்டம். பாடல் காட்சியில் கூட வரிகளை மனப்பாடம் செய்து வாயசைக்கலாம். ஆனால் இசை கருவிக்கு அதுவும் அவரே சொல்வது போல நாபி கமலத்திலிருந்து காற்று வர வேண்டும், அது வருவது போல் பார்வையாளர்களுக்கு தோன்ற வேண்டும். அதை எவ்வளவு லாவகமாக செய்கிறார் நடிகர் திலகம். அழகர் கோவில் கச்சேரியில் ஒரு விதம், இங்கிலீஷ் notes வாசிக்கும் போது ஒரு விதம், நாடக கொட்டகையில் ஒரு விதம், தில்லானா ஒரு விதம், நலம்தானா ஒரு விதம், எல்லாமே பிரமாதம். அது மட்டுமல்லாமல், மனோரமா நாயனம் வாசிக்க மிருதங்கம் வாசிப்பாரே, அங்கேயும் கைகள் பேசும்.
அது போல அந்த மனிதனுக்குள் இருக்கும் சிங்கார பாவம் எப்படி அழகாக வெளிப்படும்? "மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?" பாடலிலும், இரவு நேர ரயிலிலும் (நடிகர் திலகம் கைப்பற்றி பத்மினி ரயில் ஏறும்போது பின்னணி இசையாக சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா) அதை எவ்வளவு ரசிக்கும்படியாக பண்ணியிருப்பார்
"கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நானறியேன்", கண்ணீர் நிறைந்து நிற்கும் அந்த கண்களின் பாவம்(!). அவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
அவர் மட்டுமா? அனைவரும் தான். இங்கே பதிவுகளில் விட்டுப்போன C.K. சரஸ்வதி - அந்த வடிவாம்பாளகவே மாறியிருப்பார் ("வைத்தி! நிற்கிறாரே, எனக்கு கால் வலிக்குது")
.
நாகேஷ் - முன்பதிவுகளில் விட்டு போன எனக்கு பிடித்த சில வசனங்கள். மேற் சொன்ன காட்சிக்கு அவரது பதில் "பார்த்தேளா, நீங்க நிக்கறேள் அவா கால் வலிக்கிறதாம். உங்களுக்கு பசிச்சா அவா சாப்டற போறா" .
"நாசம் இல்லை மகாராணி, நாதஸ்வரம்"
"நான்தான் பாவி"
பாலையாவிற்கு சிறப்பு பாராட்டு. (அடிச்சு சொல்லு! அடிச்சு சொல்லு)
யாரையுமே விடமுடியாது. எல்லோரும் தங்கள் பங்கை நிறைவாக செய்திருப்பார்கள். ஏ.வி.எம்.ராஜன் அடக்கி வாசித்த சில படங்களில் தில்லானாவிற்கு தனி இடம் உண்டு.
ரசிகர்களுக்காக எழுதப்பட்ட வசனமும் உண்டு.
(உன் மேல் கத்தி எறிஞ்சானே நாகலிங்கம் அவனுக்கு 7 வருட கடுங்காவல் தண்டனை போட்டுட்டா தெரியுமோ
அவன் மட்டுமில்லே! எந்தெந்த பயலுகள்லாம் எனக்கு கெடுதல் நினைகிறானோ,அவனுகளுகெல்லாம் இதே கதிதான்.)
படத்தில் தில்லானா நடனம் முடிந்து கத்தி வீசும் காட்சி வந்த போது நமது ஹப்-ல் நடந்த சர்ச்சை நினைவிற்கு வந்தது. அதை தொடர்ந்து சிக்கலாரின் பாத்திர தன்மையை அங்கே நிலை நிறுத்தும் விதமாக வரும் வசனங்கள் ( எனக்கு மேடையிலே பேசி பழக்கமில்லை). அதை நமது நண்பர் பிரபு எவ்வளவு அழகாக விளக்கியிருந்தார். (அதாவது ஷண்முக சுந்தரத்திற்கு மேடை புதிதல்ல ஆனால் மேடை பேச்சு புதிது). அந்த நினைவுகளோடு பார்க்கும் போது கூடுதலாக ரசிக்க முடிந்தது. நன்றி பிரபு.
இந்த படத்தை பற்றி பேசும் போதெல்லாம் இரண்டு விஷயங்கள் என் நினைவிற்கு வரும். தில்லானா தொடர் கதையாக வந்த போது இரண்டு பாகங்களாக வந்தது. ஷண்முகம் - மோகனா திருமணம் முடிந்து அவர்களுக்கு ஒரு மகன் பிறந்து, இருவரும் இறந்து போவது வரை வந்து இறுதியில் இந்த நாயகன் நாயகி என் தாய் தந்தையர் என்று அவர்களது மகன் முடிப்பது போல வரும். (கல்யாணத்திற்கு பிறகும் வைத்தி தொல்லை செய்வது போல காட்சியமைப்புகள் உண்டு. ஓடும் ரயிலில் தன்னை தொந்தரவு செய்யும் வைத்தியை டி.டி.ஆர். மூலமாக மோகனா இறக்கி விடும் அத்தியாயமும் உண்டு). அவ்வளவு நீண்ட கதையை கச்சிதமான திரைக்கதையாக வடித்த ஏ.பி.என்., அதே கொத்தமங்கலம் சுப்புவின் "ராவ்பகதூர் சிங்காரத்தை" - "விளையாட்டு பிள்ளையாக" மாற்றியபோது சறுக்கியது ஏன் என்பதை பல முறை யோசித்திருக்கிறேன். (இதே வரிசையில் ராஜ ராஜ சோழனையும் சேர்க்கலாம்).
இரண்டாவது, இந்த படம் வெளி வருவதற்கு முன் பலவாறாக கிண்டல் செய்யப்பட்டது. (படம் பீ பீ-னு போயிடும்). ஆனால் ஏ.பி.என்னும் சரி, NT -யும் சரி கொஞ்சம் கூட கவலைப்படாமல் படத்தில் கவனம் செலுத்தி வெளியிட்டார்கள். ஆரூடம் கூறியவர்கள் எல்லாம் காணாமல் போக அந்த ஆண்டில் (1968) அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற பெருமையை தில்லானா பெற்றது.
அன்புடன்
பிரபு, பெரிய தேவருக்கும் உங்களுக்கும் இடையில் வந்ததற்கு ஸாரி.
Dear Mohan,
I understand your feelings. Exactly a year ago, I had attempted to answer such queries and I am giving you the link here.
http://forumhub.mayyam.com/hub/viewt...asc&start=1005
http://forumhub.mayyam.com/hub/viewt...asc&start=1050
http://forumhub.mayyam.com/hub/viewt...asc&start=1110
I won't say that these are the ultimate answers but only an attempt to address such querries from what I have understood.
Read and revert.
Regards
சன் தொலைகாட்சியில் முத்தான திரைப்படங்கள் வரிசையில் வரும் வாரம் நகைச்சுவை திரைப்படங்கள் இடம் பெறுகின்றன.
அதில் இரண்டு நடிகர் திலகத்தின் படங்கள்
24.03.2008 திங்கள் அன்று இரவு 10.30 "சபாஷ் மீனா"
27.03.2008 வியாழன் அன்று இரவு 10.30 " கலாட்டா கல்யாணம்"
அன்புடன்
டியர் முரளி,Quote:
Originally Posted by Murali Srinivas
வெள்ளி இரவு தில்லானா மோகனாம்பாள் படத்தை நானும் ரசித்துப்பார்த்தேன். அதுபற்றி எழுதலாம் என்று நினைத்தபோது, ஏற்கெனவே சமீபத்தில் அந்தப்படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் பற்றி பேசப்பட்டதாலும், பிரபுராம் எழுதிவரும், பெரிய தேவர் பற்றிய தொடர் கட்டுரைக்கு இடையூறு ஏற்படுத்துமோ என்று (உங்களைப்போலவே) நானும் நினைத்ததாலும், அந்த எண்ணத்தைத் தள்ளி வைத்தேன். ஆனால் தற்போது உங்கள் போஸ்ட்டில், தில்லானா பற்றி முற்றிலும் வேறு கோணத்தில் சொல்லியிருக்கும் விவரங்கள், மீண்டும் மீண்டும் அப்படத்தைப்பற்றிய நினைவுகளை தூண்டுகிறது. ஆம், ஏற்கெனவே அதுபற்றி இங்கு பேசப்பட்டிருந்தபோதிலும், தங்கள் கோணம் புதிய பரிமாணத்தில் அமைந்திருக்கிறது.
கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதி, ஆனந்தவிகடனில் வெளியான கதையை நான் படித்ததில்லை, எனினும் படத்தில் மேலும் வளர்க்காமல், சண்முகசுந்தரம் - மோகனா திருமணத்தோடு முடித்திருப்பது புத்திசாலித்தனமானது. அப்படியல்லாது, வயதான பின்னும் கதையை வளர்த்திருந்தால் சுவாரஸ்யம் குன்றியிருக்கும் என்பது, 'பலகோழி தின்ற வெரூஉ' ஆன ஏ.பி.என்னுக்கு தெரியாமல் போயிருக்காது.
அதுமட்டுமல்லாது, தில்லானா மூலம் அவரும் அவரது விஜலக்ஷ்மி பிக்சர்ஸும், மீண்டும் புத்துயிர் பெற்றனர் என்பது உண்மை. விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய 'நவராத்திரி' நூறுநாட்களைக்கடந்து ஓடியதும், அதே நிறுவனம் தயாரித்த 'திருவிளையாடல்' வெள்ளிவிழாவைக்கண்டதும், மீண்டும் 'சரஸ்வதி சபதம்' பத்தொன்பது வாரங்களைக் கடந்ததும் அனைவரும் அறிந்த ஒன்று. பின்னர் ஏ.எல்.எஸ்ஸுக்காக அவர் கதை வசனம் எழுதி இயக்கிய 'கந்தன் கருணை' நூறு நாட்களை மட்டுமே கடந்ததுடன், பின்னர் மீண்டும் விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய 'திருவருட்செல்வர்' எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை. (இந்தக் காவியப்படம் ஏன் வெற்றி வாய்ப்பை இழந்தது என்பது இன்றளவும் ஆச்சரியம். இதுபற்றி நடிகர்திலகத்தின் கமெண்ட் : "மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் இருந்தும் பட்ட பாட்டுக்கு பலன் எங்கே?"). இதைத்தொடர்ந்து, ரங்கநாதன் பிக்சர்ஸுக்காக அவர் கதை வசனம் எழுதி இயக்கிய 'திருமால் பெருமையும்' சரியான அளவில் வெற்றியை ரீச் ஆகவில்லை. ஏ.பி.என்.சற்று துவண்டிருந்த நேரத்தில் அவரைத் தூக்கி நிறுத்த வந்த படம்தான் 'தில்லானா மோகனாம்பாள்'. இந்தப்படம் பெற்ற மாபெரும் வெற்றிதான் ஏ.பி.என்.னுக்கு புத்துயிரளித்து, புராணத்திலிருந்து சற்று திருப்பி 'வா ராஜா வா', 'திருமலை தென்குமரி', 'கண்காட்சி' என்று சமூகப்படங்களின் பக்கம் பார்வையைத்திருப்பியது.
நீங்கள் குறிப்பிட்டபடி, 'தில்லானாவின்' மாபெரும் வெற்றிதான், ஆனந்த விகடனில் கொத்தமங்கம் சுப்பு எழுதிய இன்னொரு கதையான 'ராவ்பகதூர் சிங்கார'த்தை 'விளையாட்டுப்பிள்ளை'யாக படமாக்கும் ஆவலை எஸ்.எஸ்.வசனுக்கு ஏற்படுத்தியது. அதே கொ.சுப்பு, அதே ஏ.பி.என்.,அதே நடிகர்திலகம், அதே பத்மினி, (ஜெமினியின் வழக்கத்துக்கு மாறாக) அதே கே.வி.மகாதேவன்... இப்படி எல்லாமும் 'அதே'வாக இருந்தும், அதே வெற்றி கிடைக்காமல் போயிற்று. (விளையாட்டுப்பிள்ளை மதுரையில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியதாக தகவல், எந்த தியேட்டர் போன்ற விவரங்களை நீங்கள்தான் சொல்ல வேண்டும்).
1968ல் அதிநாட்கள் ஓடிய படம், அதிக வசூலைக்கண்ட படம் என்பதோடு, தமிழக அரசின் 'சிறந்த இரண்டாவது படமாகவும்' தில்லானா மோகனாம்பாள் (அன்றிருந்த 'ஒன்றுபட்ட' தி.மு.க. அரசால்) தேர்வு செய்யப்பட்டது. (அந்த ஆண்டின் சிறந்த படம் விருதினையும் நடிகர்திலகத்தின் 'உயர்ந்த மனிதனே' பெற்றது).Quote:
Originally Posted by Murali Srinivas
அப்படி நான் நினைக்கவில்லை. காட்ஃபாதரில் விடோ மிக நிறைவாக இறந்தார். பேரனுடன் விளையாடிக்கொண்டு, மைக்கேல் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுவிட்டதைக் கண்ட பிறகு. பெரிய தேவரின் மரணம் அவ்வாறு இல்லாமல் சக்தியையும் (சின்னத்தூவலூரையும்) நட்டாற்றில் விட்டுவிட்டு நிகழ்வது. அது கதையில் மிகச் சரியான இடத்திலேயே நிகழ்ந்தது.விதைத்தது முளைக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே பெரிய தேவருக்கு. நிறைவில்லாத மரணம். அதனாலேயே நம்மை அது ஆட்டுகிறது.Quote:
1. PD கதாபாத்திரம் திரையில் இன்னும் அதிக நேரம் வரும்படி கதையிலும் திரைக்கதையிலும் சிறிது மாற்றம் செய்திருந்தால் இன்னும நன்றாக இருந்திருக்குமோ ??
அது மிகச் சாதாரணமாக ஆகியிருக்கும். குடும்பப் புகைப்படம், திருந்திய மாயன் என்றெல்லாம் எடுத்திருக்க வேண்டும். சக்தி மீது நம்பிக்கை பெருகுவதை பல காட்சிகளில் மிக அழகாக காட்டிவிட்டதாகவே நான் நினைக்கிறேன்.Quote:
Shakthi மனம் மாற வேறு காட்சிகளையும் உத்திகளையும் பயன்படுத்தி PD இறுதிவரை சக்தியுடன் இருக்குமாறு கதை அமைந்திருந்தால் ?????
பெரிய தேவருக்கு அடுத்து நான் ரசித்தது அந்த நாள் ராஜன், சிக்கலார், முதல் மரியாதை மலைச்சாமி. அதைப் பற்றி பிறகு எப்போதாவது எழுத முயல்கிறேன். ஆனால் எல்லாமே, என்னைப் பொறுத்தவரை, பெரிய தேவரோடு இணைத்துச் சொல்ல முடியாது.
என் அபிப்ராயத்தில் அவர் பல சோத்னை முயற்சிகளில் ஈடுபடத்தான் செய்தார். பல சமயம் ஒரு சாதாரண மிகையுணர்ச்சிப் படத்திலும் அசத்தும் பற்பல காட்சிகளைக் காணலாம்.Quote:
Idhuv, Sodhanai muyarchigalil avar adhigam eedupadaamal irukkavum, melum, iyalbaana nadippai perum veeriyathodum azhagunarchiyodum velippaduthakoodiya paathirangal (பெரிய தேவர் போல) avarukku adhiga alavil kidaikkamal ponadharku oru kaaranamaaga amaindhuvittadha ??? Theriyavillai... ???
முன்னொருமுறை இத்திரியில் நான் சொன்னது என்னவென்றால் காலம் மாற மாற கதை சொல்லும் உத்திகள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. மெதுவாக (அந்தப் பய மெதுவாத்தேன் வருவேன்....மெதுவாத்தேன் வருவேன்"
எல்லாம் ஒன்றன்பின் ஒன்று சார்ந்த வளர்ச்சி தான். நாயகன் வானத்திலிருந்து வந்து குதித்து விடவில்லை. கல்யாணப் பரிசு, அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, உதிரிப்பூக்கள், மூன்றாம் பிறை எல்லாம் வந்தபிரகு தான் நாயகன் வரமுடியும். நேற்று "அஞ்சாதே" என்ற திரைப்படத்தைப் பார்த்தேன், இது போன்ற படங்கள் எடுக்க ஏன் நமக்கு இவ்வளவு நாள் ஆகியிருக்கிறது என்ற கேள்விக்கு பதிலில்லை.
அந்தந்த காலகட்ட வரையறைகளுக்குள் இயங்கியபோதும் சிவாஜியின் ஜொலிப்பு தனித்து தெரிகிறது தான் ஆச்சர்யம். அந்த காலத்திலேயே மிக அழகாக எடுக்கப்பட்ட "அந்த நாள்" போன்ற படங்களில் அவர் இன்னும் சிறப்பாகத் தெரிவது இதனால் தான்.
திரு.முரளி , தில்லானா பற்றி தகவல் சொன்னதற்கு முதலில் நன்றி..
சனிக்கிழமை அதிகாலை எங்கோ செல்ல வேண்டி இருந்ததால் நான் "இதோ தூங்கிவிடுவேன்" என்று அம்மாவிடம் வாய்தா வாங்கிக்கொண்டே படம் பார்த்துக்கொண்டிருந்தேன். இதோ ரயில் காட்சி முடிஞ்சதும், இதோ சிவாஜி-பாலையா திருவாரூர் போறதோட, கொட்டகையில வாசிக்கிறதோட, சபதக்காட்சியோட.....என்று தொடர் சங்கிலியாக நீண்டு கொண்டே போனது. திகட்டாத படம்.
தேதிகள் மட்டுமின்றி இங்கு எழுதப்படும் பதிவுகளை ரசித்துப் படித்து நீங்கள் நினைவில் வைத்துக்கொள்வது மிக சந்தோஷமாக இருக்கிறது. I feel flattered. Thank You.
:lol:Quote:
Originally Posted by முரளி ஸ்ரீநிவாஸ்
One example of perfect timing:
வெத்தலபெட்டி: கதவை துரந்திருந்தா நீ பாட்டுக்கு உள்ள வந்திடறதா ?
வைத்தி: பின்ன...சாத்தியிருந்தா அப்படியே போயிடறதா ? :rotfl:
Please don't hold back. I come here principally to read. I would hate to have an occasional contribution of mine come in the way of your posts.Quote:
Originally Posted by saradhaa_sn
Having said that, I shall write more quickly
பெரிய தேவர் - 5
என் குழந்தைகளிடத்தில் எனக்கு ஒரு பலவீனம் உண்டு. அவர்களுக்கு நான் அதிகமாக செல்லம் கொடுப்பதைத் தான் பார்க்கிறீர்களே....செவிசாய்க்க வேண்டிய நேரத்தில் அவர்கள் பேசுகிறார்கள். (I have a sentimental weakness for my children, and I spoil them as you can see; they talk when they should listen. )
இது காட்ஃபாதரில் பெரியவர், விடோ கொர்லியோன், பேசும் மிக அழகான வசனம். தவறு செய்த மகன் சான்டினோவை வெளியாட்கள் முன்னிலையில் கடிந்து கொள்ளும் இடத்தில் வரும் வசனம். அம்மனிதரின் கோபம் அவர் ஸ்டைலை இழக்கச் செய்யவில்லை. வெளி மனிதர்கள் சென்றபின் "உன் மூளை பழுதாகிவிட்டதா ?" என்றே திட்டுவார். ஆனாலும் மிதமாகவே.
பெரிய தேவர் அப்படி அல்ல. பெரிய தேவருக்கு சக்தி வந்ததிலிருந்தே ஏமாற்றம் தான். தெலுங்குப் பெண்தோழி, நகரத்துக்கு புலம்பெயர்ந்துவிட அவன் திட்டம் என்று. ஆனால் ஊரில் சக்தியால் பிரச்சனை கிளம்புகிறபோது கோபம்-ஏமாற்றத்துடன் சேர்ந்துகொள்கிறது.
அழைக்கப்பட்ட சக்தி அவருக்கு முன் நிற்காமல் பக்கவாட்டில் நின்று, அப்பாவிக்கு பின் நிற்கும். கணக்குப்பிள்ளையிடம் "எதற்காக அழைத்திருக்கிறார்" என்று சைகையில் கேட்டுக்கொண்டிருப்பான். பெரிய தேவர் ஒரு சாய்வு நாற்காலியில் சாயாமல் அமர்ந்திருப்பார். கைபனியனுக்குமேல் துண்டு போர்த்தி. "முன்னால் வா" என்று வலது கையால் சைகை செய்வார், எதன் மீதும் குறிப்பாக பார்வையை செலுத்தாமல்.
அவர் ஏன் கூப்பிட்டார் ? கோபமாக இருக்கிறா ? ஏன் ? இதுவரை நடந்தவற்றில் ஏதாவது அவரை கோபப்படுத்தியதா ? இவை சக்தி மனதில் மட்டும் இருக்கும் கேள்விகள் அல்ல. பார்வையாளர்கள் மனத்திலும். இந்த காட்சியில் ஓரிரு காமிரா கோணங்கள் இதை உணர்த்தும் வகையில் சக்தியின் நோக்கில் இருக்கும் (point of view shots)
அதனால் பெரிய தேவர் மீதே முழுக்கவனமும். இங்கு அவர் கதைமாந்தர் மட்டுமல்ல கிட்டத்தட்ட கதைசொல்லி.
"ஏன் போனீய ?" என்று கேட்கும்போது பார்வை நேராக யாருமில்லாத இடத்தில் பாயும்.
"கோவில் கும்பிடத்தானேய்யா" என்று பொறுப்பில்லத பதில் வந்த மாத்திரத்தில் ("ஐயோ" என்பதுபோல வாயை தட்டிக் கொள்ளும் கணக்குப்பிள்ளை) பெரிய தேவர் முதல் முறையாக மகனைப் பார்த்து "தர்க்கம் பண்றீய ?" என்பார்.
பானுவை காரணம் சொல்ல முயன்று, அது தவறை விட மோசமான காரணம் என்று சக்தி உணர்வதற்குள்
"பானு....பானு கோவில் பாக்கணும்னா பூட்டை உடைக்கணுமா ?" என்று கேட்டுவிட்டு மகனை கூர்மையாகப் பார்ப்பார். அவன் கூறும் பதிலை அளந்துகொண்டு. ஒரு தலைவனுக்கான பொறுப்பின் சுவடே இல்லாமல் அவன் இசக்கியை பழி சொல்ல.....
"ஓஹோ அப்பொ உங்க தலைமையில இசக்கி பூட்டை உடைச்சிறுக்கார். அப்பிடித்தானே ?" என்ற கேள்வியில் கடுங்கோபத்திலும் அவரிடமிருந்து பிரிக்கமுடியாதபடி கலந்திருக்கும் கிண்டல். சுட்டெரிக்கும் பார்வையில் தெளிவாகத் தெரியும் ஏமாற்றம். கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டதுபோலக் கூட இருக்கும்.
சக்தி:"என் தப்புத்தேன் யா"
கவனிக்கப்படவேண்டிய வசனம், பின்னர் ஒரு முறை படத்தில் வரும். அப்போது தான் சக்தி அதை மனமுணர்ந்து சொல்வான். அப்போது தான் அவன் தலைவன் ஆனது - சொக்காய் மாற்றிக்கொண்ட போது அல்ல.
இம்முறை இது இப்போதைய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்லப்படும் வாய்வார்த்தை. அதை நன்கு உணர்ந்த பெரிய தேவர்:
"அப்பா ...ஒத்துக்கிட்டாகப்பா....உங்க தப்பில்லையா...என் தப்பு..
.....எலேய் அந்தப் பயகள எந்த வம்பு தும்புக்கும் போகாம இருக்கச் சொல்லு.........பஞ்சாயத்தில வேணா நான் மன்னிப்பு கேட்டுக்கிர்றேன்...என்ன பண்ண முடியும்"
முதல் பாதியில் உத்தரவு பிறப்பிக்கும் தலைவனின் தொனி. இரண்டாவது பாதியில், வரவிருக்கும் அவமானத்தை இப்போதே அநுபவிப்பதுபோல கூனிக்குறுகும் தொனியும் உடல்மொழியும் (''என்ன செய்ய முடியும்' என்பது கையே பேசிவிடும்).
"எசக்கி மன்னிப்பு கேட்கட்டும் ? எங்கே எசக்கி ?" என்று , நமக்குத் தெரிந்த அளவே தெரிந்த சக்தி கேட்க,
"எலே....ஒண்ணும் தெரியாம திர்ரவென் !" என்று வெடிப்பார்.
பானுவின் வருகையால் ஒரு பொய்யான இடைப்பட்ட அமைதி நிலவும். சக்தி கணக்குப்பிள்ளை பூசினாற்போல சொல்லும் அறிவுரையை எதிர்த்து வாதிட "அவுக சொல்றாஹல்ல ?.....கேட்டா கௌரவம் குறைஞ்சிரும் உங்களுக்கு..." என்றுவிட்டு...."போங்க" என்பார்.
பானு வந்த நொடி அமைதிக்குப் பிறகும் அவள் குரல் சன்னமாகவே ஒலிக்கும். மறுமுறை சொல்லும்படி ஆகும். இம்முறை காலில் விழும்போதும் கண்டுகொள்ளவில்லை தான். ஆனால் இது முற்றிலும் வேறு மாதிரி தொனிக்கும் நிராகரிப்பு.
உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு ஆதங்கத்தையும், கடுஞ்சினத்தையும், நெஞ்சறுக்கும் ஏமாற்றத்தையும் உணர்வடிவத்தில் (palpable) ஒரு நடிப்பு நான் பார்த்ததில்லை.
(தொடரும்)
ஒவ்வொரு பகுதியும் எழுத எழுத, அந்த நடிப்பை சொற்களில் காட்டுவது கடினமாகிக் கொண்டே போகிறது. எந்த வடிவத்தையும் அப்படியே தான் உணர்ந்து அனுபவிக்க முடியும் என்பதை இன்னும் இன்னும் உணர்த்துகிறது.
:roll:Quote:
Originally Posted by Prabhu Ram
அநுபவம்/அனுபவம் இரண்டுமே புழக்கத்தில் இருப்பதால் பயன்படுத்தினேன். நீங்கள் சுட்டிக் காட்டியதால் தேடியதில் 'அனுபவம்' என்று எழுதுவதே சரி என்று தெரிந்துகொண்டேன். நன்றி சர்ணா.
//
PR annaa.... I am not able to view the tamil fonts properly in the link given by...can u pls help me?
//
Hi Sarna....I guess you don't have TSC fonts in your system. Use this link. Paste the text you can't read here and choose the TSC option. It will convert it to Unicode which you will be able to read.
In general, 'ந' or any other 'உயிர்மெய்' form of the letter ('நகரம்') -- ந, நா, நி, நீ etc. -- can occur only in the beginning of a word. Or so I think.Quote:
Originally Posted by Prabhu Ram
equanimus, it is a little more involved than that as explained by Thamizhannal in the link.
பெரிய தேவர் - 6
பெரிய தேவர் ஒரே ஒரு முறை தான் மூக்குக்கண்ணாடி அணிந்து காணப்படுகிறார். 'போற்றிப் பாடடி' பாடலில். அவ்ர் இறந்தபின் அந்த கண்ணாடி காண்பிக்கப்படும். சக்தி உடைமாற்றிக்கொண்டு வரும் இடைவேளிக் காட்சியில். பெரியாருடன் பெரிய தேவர் இருக்கும் புகைப்படத்திற்கு முன் ஒரு பகவத் கீதை (!). அதன் மேல் அவர் கண்ணாடி. ஒரே படக்கட்டதுள் அவர் பார்வையைப் பற்றி சொல்கிறார்கள்.
வெத வெதச்சதும் பழம் ச்சாப்டரணும்னு நெனைக்க முடியுமோ....இன்னிக்கு நான் வெதைக்கிறேன்.....நாளைக்கு நீ சாப்டுவ....அப்புறம் உன் மயென் ச்சப்டுவியான்....அப்புறம் அவன் மயென் ச்சப்டுவியான்.....இதெல்லாம் இருந்து பார்க்க நான் இருக்கமாட்டேய்ன்....ஆனா வெத நான் போட்டது....இதெல்லாம் என்ன பெருமையா..ஹான் ? கடமை.....ஒவ்வொருத்தன் கடமை.
கீதையை மிக மேலோட்டமாக (என்னைப்போல!) படித்தவர்களுக்குக் கூட மேற்சொன்ன வார்த்தைகளின் மூலம் கீதையில் உயர்த்திச் சொல்லப்படும் 'பலனை எதிர்பாராத கடமையாற்றல்' என்று புலப்படும். இதை சமூக சிந்தனையுடன் எளிமையாக சொல்ல முடிந்ததுதான் பெரியாரின் தாக்கமோ என்றெல்லாம் யோசிக்கவைத்த அந்த ஒரு படக்கட்டம் எழுத்தாளர்-இயக்குனருக்கு வெற்றி.
உபதேசம் சினிமாவின் மொழிக்கு அப்பார்ப்பட்டது. ஆனால் உபதேசக் காட்சிகள் தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கின்றான. உணர்ச்சியும், அறிவும் ஒன்றுபட இயங்கும் காட்சி பெரிய தேவரும் -சக்தியும் மழைக்கு இடையில் பேசும் காட்சி.
பிராண்டோ வசனத்தை முணுமுணுப்பவர் என்று சொன்னபோது, 'நிஜத்தில் யாரும் முழு சொற்றொடர்களை, ஒரே தொனியிலோ, அதன் பொருளுக்கு ஏற்ற ஏற்ற-இறக்கத்துடன் பேசுவதில்லை' என்றாராம். மேடையில் தான் முழங்கவேண்டிய நிர்பந்தங்கள். சினிமா முணுமுணுப்பையும் உணர வல்லது.
கோவில் கும்புடத்தான்னு பேசுநீயளே...இப்பொ இந்த ஊரோட நிலைமை உங்களுக்குப் புரிஞ்சதா ?
இதைச் சொல்லும் போது அந்த நாற்காலியில் புரண்டு படுப்பார் பெரியதேவர். அந்த அசைவிற்குத் தோதாக வசன உச்சரிப்பின் தொனி மாறும். இதை நேரொலியில் பதிவுசெய்திருந்தார்கள் என்றால் (live-recording) இது மிக நுணுக்கமான கவனிப்பின் வெளிப்பாடு எனலாம். ஒருவேளை இது பின்னணியில் தனியாக பேசப்பட்டது (dubbing) என்றால் பிரமிப்பு ஏற்படுகிறது.
சக்தி ஊரை விட்டுப் போகிறேன் என்றதும் சாய்வில் இருந்து உடனே முன்னால் வருவார். அதிர்ச்சியை மறைக்க ஒரு பொய்ச்சிரிப்பு. பொறுப்பு என்பது தான் இல்லை, பொறுப்பிற்கு அடித்தளமாக இருக்கும் வீரம் இருக்கிறதா என்பதை கிளரும் வகையில், சக்தியை கோழை என்பார். வீரத்தின் அடிக்கோல்கள் பிழையாக இருக்கிறதாக, வெளிநாட்டில் படித்த சக்தி சற்று காட்டமாகவே சொல்வான்.
"...இந்த காட்டுமிராண்டிப்பய கூட்டத்துல் ங்கொப்பனும் ஒருத்தந்தேய்ங்கறத மறந்துறாத" என்று சொல்வார் நெற்றியைத் தடவியபடி.
படத்தின் சாரமான வசனம் அதன்பிறகு தான்: "அப்படிப்பார்த்தா நானும் ஒருத்தந்தான்யா......ஆனா அத நெனச்சுப் பெருமப்பட முடியல". இதைத் தொடர்ந்தே உபதேசம் துவங்குகிறது. மரணத்தை வழக்கமாக வயசாளிகள் போல அல்லாமல், மிக யதார்த்தமாக எதிர்நோக்குவார் (போ....செத்துப்போ.....எல்லா பயபுள்ளையும் ஒரு நாளைக்கு போக வேண்டியது தேன்). கொஞ்சம் கடுமையாக பேசிவிட்டோமோ என்பதுபோல அடுத்த வரி சிறுபிள்ளையுடன் பேசுவதுபோன்ற எளிமையோடும், கனிவான தொனியிலும் வ்வரும் (வாழறது முக்கியந்தான்....இல்லைங்கல...).
கனிவும், பகுத்தறியும் பேச்சும் சக்தியின் முரட்டுத்தனமான முன்தீர்மானத்துடன் மோதி மோதி தோற்பதைக் கண்டு சட்டையை கொத்தாக பிடித்து முறைக்கும் நிலை வரும். அது அத்துமீறலா, இதுவரை மரியாதையுடன் நடத்தியதால் அப்படித் தோன்றுகிறதா என்ற குழப்பமும்-கோபமும் கலந்த பிரமாதமான பாவனை கமல் முகத்தில்.
அத்துமீறல்,உரிமை என்பது இவ்வுறவில் வயது சார்ந்தது என்பது ஒரு வலி கலந்த உண்மை. அந்தக் கணத்தில் அதை உணர்ந்துவிட்டதால் : "தாடியும், மீசையும் வச்சுகிட்டு...ஐயாவை நெஞ்சுநிமித்தி பேசுற வயசுல்ல" என்று காட்சியில் முதல்முறை தளர்வார் பெரிய தேவர்.
உணர்ச்சி கூட சக்தியிடம் தோற்க கணக்குப்பிள்ளையை பொறுமையில்லாமல் கத்திக் கூப்பிடுவார்: "ஏய்...யார்ராவென்....எங்க கணக்குப்புள்ள"
"டிக்கெட்ட ஒரு பத்து நாள் சென்டு எடுக்கட்டுங்களா ?"சக்தி, "ஏனய்யா இக்கட்டில் மாட்டி விடுகிறீர்" என்று சமிக்ஞை செய்வதை பார்த்துவிடும் பெரிய தேவர் "ஏம்ப்பு பத்து நாள் இருக்க மாட்டீயளா ?" என்று இருக்கமாக கேட்டுவிட்டு, தானே பதிலாக கையசைத்து கணக்குப்பிள்ளையை அனுப்புவார்.
அனுப்பிவிட்டு சக்தியை அருகில் அழைத்து தன் மகனை அருகில் வைத்துப் பார்க்க விழைவதை நெகிழ்வாகச் சொல்வார். வெளியாள் முன்னிலையில் உக்ரமாக மகனை திட்ட மறுக்கும் டான் விடோ போல அல்லாமல், கணக்குப்பிள்ளையிடமிருந்து தேவர் மறைக்க நினைப்பது தன் மென்மையைத் தான்.
"உங்களைத் தானே நம்பணும்....வேற யாரு இருக்கா இங்க நம்புறதுக்கு" என்கிறபோது முழுமையாக உடைந்து போன ஒரு பெரிய மனிதனை அவன் உள்பயங்களும் மனதை உருக்குவதைப் போல தெரியும்.
என் ஞாபகத்தில் இந்தக் காட்சியில் பாத்திரக் கோண படக்கட்டங்கள் மிகக் குறைவு, அல்லது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. குழுவாகப் பாடும் 'ஆ' காரத்தை ஒரு இசைக்கருவி போல் பயன்படுத்தும் மேல்நாட்டு இசை உத்தியை இளையராஜா இந்தப் படத்தில் சில இடங்களில் கையாண்டிருப்பார். இந்தக் காட்சியில் குழு வயலின்களும், கம்பீரமாக ஒலிக்கும் அடிக்கட்டை பேஸ் வாத்தியங்களும் மிகச்சரியான இடங்களில் ஒலித்து (உம். ஊரை விட்டு வெளியே வர பெரிய தேவர் மறுக்கும்போது) காட்சியை மெருகேற்றும்.
இதற்கு மேல், கிட்டத்தட்ட, பெரிய தேவரை புரிந்துகொள்ளுவதற்கு புதுத் தகவல்கள் படத்தில் இல்லை எனலாம். பாசம், கோபம், (மிகையான) மான/அவமான மதிப்பீடுகள், தலைமை குணங்கள் என்று எல்லாமே இக்காட்சியில் அடக்கம். இதற்குப் பிறகு நடப்பதெல்லாம் நமக்கு மிக நெருக்கமாகத் தெரிந்தவருக்கு நடப்பவை. கதையின் போக்குக்கும், பார்வையாளர்கள் பெரியவரின் உள்பயங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்வதற்கும் இந்தத் தன்னிலை-விளக்கக் காட்சி மிக முக்கியமானது.
பல உணர்ச்சி நிலைகளும், நிலைத்தடுமாற்றங்களும் காண்பிக்கப்படும் மிகக் கடினமானக் காட்சி. நன்கு எழுதப்பட்டிருந்தாலும் வெகு சுலபமாக நம் சினிமாவின் வழக்கமான உணர்ச்சிச் சுழலில் சிக்கி ஒரு சாதாரண மிகையுணர்ச்சி/உபதேசக் காட்சியாக மாறிய்யிருக்கும்.மிக இயல்பாக வெளிவந்து மக்களை கவர்ந்திழுத்தற்கு பெருங்காரணம் சிவாஜியின் அசாத்தியத் திறமை தான்.
(தொடரும்)
PR
Ur R&D on DM & Periya thevar is marvelous ! One character which I love watching forever . That scene where he casually delivers a dialogue while latching on a chair is wonderful observation of urs !
Great going . Definitely u r lifting the quality of this thread. :)
prabhu I donīt know how to express my feelings. Really very good writing. Romba anubavichu ezhudhi irukeenga. Naanum romba anubavichu padikkiren. Ippadiye neraiyaa NT characters pathi ezhudha vendum ena aasai padugiren
Pr
Pls take up movies like Andhanaal, gowravam, TP also soon.
Dear PR,
Onnum solradukkilla... :) , enna seyyaradhu, ungalathane nambiyaganum.. :) Potrippaadungal Devar pugazhai.
Actually, I've seen God Father quite a number of times and was easily able to releate Nayagan with the movie, as most of them used to do,bcoz of the core theme - Mafia / Kattapanchayathu.
We can also notice a scene in Annamalai where Rajini's sister gets beaten up by his husband and immediately with all the rage rajini smashes his in-law. This is very similar to the scene where Veto's eldest son Santino goes and beats his in-law after seeing his sister's bruised face.
But itwas really amazing to realise the similarities between GF & DM with respect to Father - Son relationship. First time I come across such comparison and I was stunned !! Excellent research & great writing.
This piece of writing really kicks off my imagination. If only our NT has got a chance to play the desi version of Don Veto...Wow !! Just imagine our NT in a full suit, jelled hair, bulging jaws, low tone..etc.etc... cchha!! we missed it.. :(
Rangan sir, I am using ur signature for PrabhuRam
நீயே உனக்கு என்றும் நிகரானவன்....
:clap: excellent writing both senthamizh & paechu thamizh :thumbsup:
//PR, I have read a lot times u writing about Devar magan, some 1 year back... then I used to think that ur age is somewhere between 35 - 40 :) //
Thank You Billgates, Sivan, rangan_08 and raaja_rasigan.
I wouldn't claim to have observed many characters of Sivaji - or even Kamal for that matter- as closely as I have enjoyed this performance. Will definitely attempt when I find time.Quote:
Originally Posted by sivank
Depends on the reading of the core theme. As always in good art there is room for more than one reading. To quote Kamal : காட்ஃபாதர் மாதிரி ஒரு படம் எல்லாரையும் பாதிக்கும். ஆழ்வார்பேட்டையிலயே ரெண்டு பேர் அதை எழுதினோம். இந்த பக்கத்துக்கு நான், அந்தப் பக்கத்துக்கு அவர் :D (Mani Ratnam lives in Venus Colony which is on the other side of Alwarpet).Quote:
Originally Posted by rangan_08
I was more attracted to the "unlikely son taking over", which was very universal in its appeal. I felt Kamal was able to translate and Indianize it beautifully. That was one of my first posts in the Hub, more than three years back. Was all into polemics then and started a thread titled: "Which is the better Godfather" :D Thread sank without a trace.
...then you can rest assured that the producer would have been Balaji (as saradhaa_sn once mentioned, he was a producer with a penchant for exact replication). While it would have been interesting, it wouldn't have been an Indian version. Which is what, in my opinion , takes it to another level.Quote:
Originally Posted by rangan_08
டியர் சாரதா,Quote:
Originally Posted by saradhaa_sn
விளையாட்டு பிள்ளை 100 நாட்கள் ஓடியது. ஆனால் ஒரே தியேட்டரில் ஓடவில்லை. 06.02.1970 அன்று வெளியான இப்படம் மதுரை - நியூ சினிமாவில் 84 நாட்கள் ஓடியது. அதன் பின் வேறு தியேட்டர் (வெள்ளைக்கன்னு என்று ஞாபகம்) மாற்றப்பட்டு 100 நாட்களை கடந்தது.
அன்புடன்
PS: Sorry for the digression PR.
ஆஹா .. தேவர்மகனின் பெரிய தேவரை எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் பிரபுராம். அந்த தேவருக்கே உரிய மிடுக்கும் பாசமும் கலந்த நடிப்பை வழங்க நடிகர் திலகத்தை விட்டால் யாருமில்லை என்பது மறுக்க முடியாத உண்மை .. சில பேர் சில கதாப்பாத்திரங்களுக்காகவே பிறந்தவர்கள் சில கதாபாத்திரங்கள் சில பேருக்காகவே பிறந்தவை அப்படித்தான் இந்த தேவர் கதாப்பாத்திரம் நடிகர் திலகத்திற்கென்றே பிறந்தது (Tailor made)
ஒவ்வொரு காட்சியிலும் ந*டிப்பு உச்ச*ம் அல்ல* அல்ல* அது ந*டிப்பு என்று சொல்வ*து வார்த்தைக்காக* அந்த* பாத்திர*மாக*வே மாறியிருப்பார் என்ப*து தான் 100/100 உண்மை
நம்முடைய பிரபுராம் அனுபவித்து விவரணை செய்த தேவர் மகன் காட்சி
http://www.youtube.com/watch?v=ul9Xvjt83eI
குருவும் சிஷ்யனும் ,தந்தையும் மகனுமாக.
நன்றி Joe, மிக நல்ல காரியம் செய்தீர்.
Dear Murali Sir,
Thanks for the explanation & the links. It was very informative as usual.
:clap:
டியர் பிரபுராம்,
அற்புதம், அருமை என்பதெல்லாம் உங்களின் ஆய்வுக்கு சாதாரண வார்த்தைகள். பெரிய தேவர் பற்றிய கருத்தாய்வு, களத்துக்கு புதிய பொலிவைத் தந்திருக்கிறது என்பது முற்றிலும் சரியான ஒன்று. பார்க்கும்போது தெரியாத பல்வேறு பரிமாணங்கள், உங்கள் ஆய்வைப்படிக்கும்போது தெளிவாகின்றன.
படத்தில் ஒவ்வொரு சின்ன அசைவுகளும் எவ்வளவு கவனமாகவும், பாத்திரப் படைப்புக்கு குந்தகம் வராமலும் கையாளப்பட்டுள்ளன என்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுக்களைச்சொல்லலாம்.
"நீங்க ஊரெல்லாம் சுத்திட்டு திரும்பி வரும்போது உங்க ஐயா இல்லேன்னா என்ன பண்ணுவீக?" எனும் இடத்தில் குரல் கம்முவதும், தன்னிடம் பேசிவிட்டுப்போகும் சக்தி, போகும்போது எதிலோ இடித்துக்கொள்ள, துடித்துப்போய் "பாத்து..!" என்று பதறுமிடத்திலும் ஒரு பாசமான தந்தைக்கே உரிய துடிப்பு. இப்படி ஒவ்வொரு அங்குலத்திலும் தன் கொடியை உயர பறக்க விட்டிருக்கும் பாங்கு... வேறென்ன சொல்ல...?.
நல்ல தீர்க்கமான ஆய்வு உங்களுடையது. அது இன்னும் பல்வேறு பாத்திரப்படைப்புகளையும் அலச வேண்டும் என்பது எங்களின் ஆவல் மற்றும் எதிர்பார்ப்பு.
பிரபுராம்,
பெரிய தேவர், முதல் மரியாதை மலைச்சாமி இவர்களோடு, தாவணிக்கனவுகள் 'மிலிட்டரி'யையும் நீங்கள் அலச வேண்டும் என்பது என் ஆவல்.
ரொம்ப பேர் அந்த பாத்திரத்தைக் கண்டுகொள்வதில்லை என்பது ஒரு வருத்தம்.
Then, we are fortunate in one way.. :) Who knows, people would have also gone to the extent of casting NT in both the Father & Son roles !!! :( , giving it a Masal-ic dimension...Quote:
Originally Posted by Prabhu Ram
பெரிய தேவர் - 7
இசக்கிக்கு நடந்ததற்குப் பழி வாங்கும் விதமாக எதிரிகளின் குடிசைகளுக்கு தீ இடப்படுகிறது. தீயின் கனல் கதையில் தகித்துக்கொண்டிருக்கையில் மழை வருகிறது. மருத்துவமனையில் இசக்கியை காணப்போகும்போதே மழை தான். கண்மாய் வெடிவைத்துத் தகர்க்கப்படும் வரை மழை ஓயாமல் பெய்கிறது. மழையின் ஈரம் காயாத ஒரு இடத்தில் தான் கோவில் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் அதிகாரி வரும் காட்சி.
ஊர் பிரச்சனைகளை பேச மகனை ஊக்குவிக்கிறார், அதிகாரிகளின் பொறுப்பின்மையை நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டுகிறார் (பஞ்சாயத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டிய நிலை வரவில்லை அல்லவா), வீட்டுக்கு வர அழைப்பு விடுக்கிறார் ("காப்பிகீப்பி "). நல்லது செய்து முடித்த தலைவன். அதற்கு அடுத்து அவர் தோன்றும் காட்சியிலும் ஒரு தலைவன். தன் மக்களுக்கு நடந்த கொடுமையைக் கண்டு அதிர்ச்சியும், சோகமும் கவிய பார்க்கிறார். சொற்கள் இல்லை.
கொடுஞ்செயல் செய்தவனைப் பிடித்துக் கொடுத்த மகன் தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கினான். (அதற்குக் காரணம் பொறுப்பின் சுவடுகளே இல்லாத மூத்த மகன்). சுற்றி, அவதியிலிருந்து சற்று ஆசுவாசம் பெரும் ஊர்மக்கள். மகனருகே சென்று அவனை தொடும்போது முகத்தில் ஒரு பெருமிதம். இவ்வளவு மோசமான சம்பவம் நடந்த ஒரு நாளில், பெருமிதம் போன்ற நல்லுணர்ச்சிகளுக்கு இடம் உண்டா ? முரண் தான். ஆனால் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?
மகன் சாப்பிடவில்லை.
பசிக்கலையா ?
பிடிக்கலை
ஒரு கண நேரம் அந்த பெருமிதம் மறைந்து அவ்ர் முகத்தில் ஒரு தொய்வு ஏற்படும். 'அவசரப்பட்டு பெருமிதம் கொண்டுவிட்டோமா ? மகன் இந்தக் (காட்டுமிராண்டிப்பய) வாழ்க்கைச்சுழலை இன்னும் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை போலிருக்கிற்றதே' என்று.
ஒரு தாய் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் காட்டி, ஒரு குழந்தையைப் பறிகொடுத்த அவள், தன் இரண்டாவது குழந்தைக்காக சாப்பிடுவதை சொல்வார். "மத்தவங்களுக்கு உதவி செய்யணும்னா முதல்ல நாம் திராணியோட இருக்கணும்" (திராணியோடு என்பதை சொல்லும் போது மீசை முறுக்கு சரி செய்து கொள்ளப்படும்!). அவர் சொல்வதுக்கும் மேலே புரிந்துகொண்டதுபோல சக்தி கணக்குப்பிள்ளையைக் கூப்பிடுவான்.
ஒரு குழந்தை இழந்துவிட்ட, இரண்டாம் குழந்தைக்கு வாழ்வையும் , எல்லாவற்றைய்யும் தருவதற்காகவே போராடும் அவளைக் கண்டதும், ஒருவேளை சக்திக்கு தன் தந்தையின் நிலையும் கிட்டத்தட்ட அப்படித்தானே என்று தோன்றியிருக்காலாம். இது தான் தோன்றியது என்றெல்லாம் சொல்ல முடியாது. நல்ல திரைக்கதைகளில் இந்த அனுமானங்களுக்கு இடம் உண்டு. தேவரின் பேச்சுக்குப் பதிலாக சக்தி உதிர்க்கும் அர்த்தம் பொதிந்த சிரிப்பைக் கண்டால் எனக்குத் தோன்றியது இதுதான்.
பயணச்சீட்டை தள்ளிப்போட வேண்டும் என்று சக்தி பூசினாற்போல சொல்ல, இப்போது விட்டுவிட்டால் கிடைப்பது கஷ்டம் என்று கணக்குப்பிள்ளை சொல்வார். "கூடி வரும் நேரத்தில் கெடுக்காதே" என்பது போல தேவர் சமிக்ஞை செய்வதில் ஒரு வித்தியாசமான முக்கோணம் முடிவடைக்கிறது. சக்தி-கணக்கு-பெரியவர் மூன்று பேருக்கும் உள்ள தனித்தனி நெருக்கங்களை காண்பிக்கப்படுகின்றன.
முதல் விசாரணையில் "எதற்கு அழைக்கப்பட்டோம்" என்று ஐயாவுக்குத் தெரியாமல் கணக்குப்பிள்ளையைக் கேட்பான். அடுத்து ஒரு காட்சியில், கணக்குப்பிள்ளையிடம் இருந்து தன் மென்மையான இயல்பை மறைப்பார் பெரியவர். இம்முறை தன் பாசத்தின் தீவிரத்தை கணக்குப்பிள்ளையிடம் மட்டும் காண்பிப்பார்.
இணைகோடாக: விடொ கொர்லியோனுக்கு வலது கையாக (consigliori) இருப்பது டாம் ஹேகன். அநேக சமயங்களில் தன் மகன்களைவிட இந்த வளர்ப்பு மகன் டாம்'ஐ டான் விடோ நம்புவார்.
சக்தி, தந்தையின் செய்கையைப் பார்த்துவிட்டு வெளிப்படையாக, அந்த பயணச்சீட்டை 'கேன்சல்' செய்யச் செல்வான். "சொல்றாஹள்ள...கேன்சல் கேன்சல்" என்று தாழ்திறந்து பாசம் வெடிட்த்தோடும். புல்லாங்குழல் கரு-இசையை அழகாக ஒலிக்க, சக்தியின் கையைப் பற்றி தன் நெஞ்சருகே வைத்துக் கொள்வார். பெருமிதம் மட்டுமே தெரிந்த முக்கத்தில் முத்ன்முதலாக ஒரு நிறைவு தெரியும். சாந்தமான பெருமூச்சே தேவையானவற்றைப் பேசிவிடும்.
(தொடரும்)
Thank You rajeshkrv and sarna_blr.
Thanks for the link Joe. As I posted earlier. It is far from possible to capture that performance in words. Unbelievable stuff. I am really curious to know whether the sound was live or dubbed. If it was indeed dubbed - I am just stumped.
நன்றி சாரதா அவர்களே.
நான் பெரிய தேவரை ரசித்த அளவுக்கு ஆழமாக வேறு எந்த நடிகரின் எந்த பாத்திரத்தையும் ரசித்ததில்லை. அதனால் இந்த ஆழமாக (நீளமாக் :-)) என்னால் எழுத முடியுமா என்பது சந்தேகம் தான். நிச்சயமாக நான் ரசித்த அளவு எழுத முயல்கிறேன்.
Dear PR,
Neenga ezhudhi ezhudhi tired aagitteengalo illayo, naan ungalai paaraattiye tired aagividuven polirukku.. :)
At times you make me feel whether Kamal himself is writing this article in disguise !! It's so profound in context that, I'm afraid, even the writer or director themselves were not aware abt the hidden meanings of a particular scene which you describe in detail here. It's really worthy enough to be produced in printed form.
Request the mods to compile this write-up and put it under a single thread.
I too have thought the same while reading his write upsQuote:
Originally Posted by rangan_08
பிரபுராம் அண்ணா,
நடிகர்திலகம் செய்த சாதனைகள் பல....அவற்றில் இதுவும் ஒன்று....இறந்த பின்னும் வாழ்கிறார்...உங்கள் எழுத்துக்களில்...
:clap: இந்த கைத்தட்டல் தங்களது உரைநடைக்கு....
பஞ்சாயத்தில் தன் தம்பி மகனால் நடந்த அவமானத்தால், உள்ளம் கூனிக்குறுகிப் போய்விட்டபோதிலும் அதை வெளிக்காட்டாமலேயே பேத்திகளோடு சிரித்துப்பேசிக்கொண்டே, உள்ளுக்குள் குமைந்துகொண்டிருந்த அவமானம் தனக்குள்ளாக வெடித்துச்சிதற, நொடிப்பொழுதுக்குள் எல்லாம் முடிந்து விட்ட நிலை. என்னவாயிற்று நாம் சுதாரிப்பதற்குக் கூட அவகாசம் கொடுக்காமல், 'என்னாச்சு' என்று புத்தகத்தை எறிந்துவிட்டு ஓடும் சக்தியோடு, நம் மனமும் பின்னே ஓட, முறுக்கிய மீசையும் கம்பீரப்புன்னகையுமாக பெரியவரைப்பார்த்து, "ஐயோ, சிங்கம் நிரந்தரமாக தூங்கி விட்டதா?".....
இசைஞானியின் வயலினுடன் சேர்ந்த கோரஸைத்தொடர்ந்து, எஸ்.பி.பியின் குரல்...
"வானம் தொட்டு போன மானமுள்ள சாமி... ஓ..
தேம்புதய்யா இங்கே தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு
தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு
திருந்தாம போச்சே ஊரு சனந்தா...ன்
தத்தளித்து நிக்குதய்யா தேவர் இனந்தா..ன்
போற்றிப்பாடடி பொன்னே...."
அதுவரை நீர்த்திரையிட்டிருந்த நம் கண்களிலிருந்து, கண்ணீர் சட்டென்று கன்னங்களில் வழிய..... இந்த இடத்தில் கண்களைத்துடைத்துக்கொள்ளாமல் படம் பார்த்தவர்கள் மிக மிகக்குறைவு.
ஆம், இவரது அபார ஆற்றலைப்பார்த்து, அங்கு மரணமே நாணி நின்றது.
Dear PR,
As I said earlier, even the creators of Devar Magan, would be rather surprised or feel happy to read your interpretations. And that, I would say, is because it's every individual's prerogative to observe, analyse & derive their own notions. That is the achievement of any great form of art.
You have done that in the right sense and that's the point where an ordinary film goer gets lifted to the next level. Once this transformation happens, then it becomes a perpetual process. Thanks for giving us a chance to observe the fine qualities of the film in a different perspective.
Another request. Either after you complete this article, or in between, pls write something about 2 other important characters in the same film. While we discuss about the close & strong bond between PD & Shakthi, the other 2 is in total contrast. Yes. MAAYATHEVAN & his father played by Nasser & Kaaka Radhakrishnan respectively. Their performances are so strong and on par with that of NT's in its own respect. Nasser was great & needless to say abt. KRK who simply excelled (look at the way he breaks down at the end, when he sees his dead brother's portrait). Ofcourse, he was senior to our NT @ Edhartham Ponnuswamy Pillai drama co., - Bala Ghana Sabha, Madurai. (Enna Murali Sir, correct-a ??)
Pls continue PR.