"அஹ்ஹாஹ்ஹா... இன்று தேன் நிலவு" 'எதிரிகள் ஜாக்கிரதை' திரைப்படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஆர்ப்பாட்டமான குரலில். இனி ஒருவர் இப்படிப் பாட முடியுமா?
http://www.youtube.com/watch?list=UU...&v=FtF6qfaTo7U
அன்புடன்,
வாசுதேவன்.
Printable View
"அஹ்ஹாஹ்ஹா... இன்று தேன் நிலவு" 'எதிரிகள் ஜாக்கிரதை' திரைப்படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஆர்ப்பாட்டமான குரலில். இனி ஒருவர் இப்படிப் பாட முடியுமா?
http://www.youtube.com/watch?list=UU...&v=FtF6qfaTo7U
அன்புடன்,
வாசுதேவன்.
"நடந்தது என்னவென்று நீயே சொல்லு"... 'குமரிப் பெண்' திரைப்படத்தில் ரவியும்,ஜெயலலிதாவும் மிதிவண்டியில் பாடுவதாக வரும் இந்த அற்புதப் பாடலைக் கேட்டு நீங்களே சொல்லுங்கள். (P.B.ஸ்ரீனிவாஸ் மற்றும் L.R.ஈஸ்வரி ஆகியோரின் அரிய அற்புதக் குரலில்)
http://www.youtube.com/watch?feature=player_detailpage&list=UUe5WmW7xj4lf ZH21gndsmdA&v=JABss-Qc4sw[/color][/B][/size]
அன்புடன்,
வாசுதேவன்.
thankyou sir. treat.
25-7-2012 அன்று 'கலைநிலவு' ரவிச்சந்திரன் அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி. தன்னுடைய அழகாலும், துடிப்பான சண்டைக்காட்சிகள், மற்றும் நடனக் காட்சிகளால் இளைஞர்களைக் கவர்ந்த ரவிச்சந்திரன் அவர்களை அவருடைய நினைவு தினத்தில் நினைவு கூர்வோம்.
http://i1087.photobucket.com/albums/...n31355/r-8.jpg
ரவிச்சந்திரன் அவர்கள் நினைவாக நடிகர்திலகம் அவர்களின் 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்திலிருந்து அவர் நடித்த பாடல் காட்சி. நடிகர் திலகம் ரசிப்பதாக வரும் பாடல் கூட.
http://www.youtube.com/watch?v=5x2LFD2KkOQ&feature=player_detailpage
இன்று 29.07.2012 ஞாயிறு காலை 9.15 மணிக்கு பொதிகை தொலைக்காட்சியில் என்றும் இனியவை நிகழ்ச்சியில் சிறப்பம்சமாக கலை நிலவு ரவிச்சந்திரன் படப் பாடல்கள் ஒளிபரப்பப் பட்டன. நன்றி பொதிகை தொலைக்காட்சிக்கு. மற்ற மொழி சேனல்கள் தங்கள் மொழியில் சாதனை படைத்தவர்களை அன்றைய தினம் முழுதும் அவர்களுடைய படத்தை லோகோ போன்று நாள் முழுதும் இடம் பெறச் செய்து பெருமை செய்யும். தமிழ்த் தொலைக்காட்சிகளில் வணிகமல்லவோ முதலிடம் பெறுகிறது..
நிகழ்ச்சியில் ஒளிபரப்பப் பட்ட பாடல்கள்
1. நாளாம் நாளாம்
2. மலரைப் போன்ற பருவமே
3. போதுமோ இந்த இடம்
4. புது வீடு வந்த நேரம்
மிக மிக நீண்ட.............நாட்களுக்குப் பின் ..... ரவி ரசிகர்கள், ஜெய் ரசிகர்கள் மட்டுமின்றி, எஸ் பி பாலா ரசிகர்களும் ஆவலுடன் விரும்பும் பாடல்... நான்கு சுவர்கள் படத்தில் இடம் பெற்ற ஓ மைனா பாடல் .... இது டி.எம்.எஸ். பாட ரவிச்சந்திரனின் குரல் இடையிடையே ஒலிக்கின்ற வடிவம். கலை நிலவு ரவி அவர்களின் நினைவு நாளை யொட்டி இப் பாடல் அவருக்கு அர்ப்பணிக்கப் படுகிறது.
http://youtu.be/Dg08Vs2-L_I
படத்தின் கதையைப் பாடல் வரிகளில் படியுங்கள்
சாட்சி வைத்துக் காதல் செய்யும்
காட்சியை நான் அன்று கண்டேன்
சாட்சியை நான் மாற்றி விட்டேன்
காட்சியைத் தான் திருப்புகின்றேன்
வந்துட்டாரய்யா வந்துட்டாரு....
ரவிக்காகவே அவதாரம் எடுத்த எஸ்.பி.பாலா வந்துட்டாரு ...
எஸ் பி பி என்ற மூன்றெழுத்தை உலகம் முழுதும் அறியச் செய்த மூன்றெழுத்துப் பாடல் ....
நான்கு சுவர்களில் இடம் பெற்று ஐம்புலன்களையும் வசீகரித்த பாடல் ...
ஏழு ஸ்வரங்களையும் இஷ்டப்படி ஆட்டிவைக்கும் வல்லமை பெற்ற மெல்லிசை மன்னர் என்ற
அஷ்டாவதானி உருவாக்கிய பாடல் ...
9 கோள்களும் இந்தப் பாடலைக் கேட்டால் நின்று விடும் ...
பத்து விரல்களும் நம்மை அறியாமல் தாளம் போடும் ...
இன்னும் என்ன தாமதம் ... பாருங்கள் ... கேளுங்கள்....
http://youtu.be/PfoaGs2muHc
ஒ மை காட்... ஒ மைனாவா!?. இது என் கண்ணா!? நம்பவே முடியலையே.... ஆஹா... ஆஹா.. முன்னுரையை ரசிகவேந்தர் எழுதி விட்டார். இனி என்ன.. கலக்கல் தான். பாடல்களின் மணிமகுடம் இது ஒன்றே அல்லவா? குழைத்தெடுத்த குரலுக்கு சொந்தக்காரரான பாலாவின் டாப்மோஸ்ட் ஹிட்டாயிற்றே! ரசிகர்களில் எங்கள் ரசிகவேந்தர் மணிமகுடம் அன்றோ...
காணக் கிடைக்காத பொக்கிஷத்தை கண்டு மகிழச் செய்த ராகவேந்திரன் சார், தங்களுக்கு நன்றி எப்படி நவில்வது என்றே தெரிய வில்லை.
நான்கு சுவர்கள் படத்திலிருந்து ....
நினைத்தால் நான் வானம் சென்று
நினைத்துப் பார்த்தீர்களா இப்பாடல் காட்சியினைக் காண்போம் என்று....
என்று சொல்கிறார்களோ ரவிச்சந்திரனும் வாணிஸ்ரீயும்
மெல்லிசை மன்னரின் சூப்பர் ட்யூனில் எஸ் பி பாலா சுசீலா குரல்களில் தேன் மழை பொழியும் தெவிட்டாத கானம்
http://youtu.be/Ci788YfG7OY
நண்பர்களே :
ரவிச்சந்திரனின் லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.அவரை கல்லூரி நாட்களிலேயே அவர் வீட்டில் என் நண்பர்களுடன்
சந்தித்திருக்கிறேன். இங்கு நண்பர்கள் எழுதும் செய்திகள் மிகவும் பிரம்மாண்டமாகவும், அருமையாகவும் இருக்கின்றன. ரவியின்
பல படங்களைபப் பற்றி விரிவான செய்திகளைக் கொடுத்திருந்தது மிக்க வியப்பை ஏற்படுத்தியது. "எங்களுக்கும் காலம் வரும்" அவர்
நடித்த படம்தானே, அதைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லையே ? அதைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள்.
சாரதா, பம்மலார், வாசுதேவன் போன்ற நண்பர்கள் மிகவும் சிறப்பாக பல புள்ளி விபரங்களுடன் எழுதுவது, அதுவும் நாற்பது ஆண்டுகளுக்குப்
பிறகு எழுதுவது என்பது பிரமிக்கத்தக்க நினைவாற்றலை வெளிப்படுத்துகிறது. ரவியின் மீதுள்ள அன்பின் காரணமாக அவர் ரசிகர்கள் எப்படியெல்லாம்
அவரை ரசித்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. தொடரட்டும் உங்கள் தொய்வில்லாத பணி.
நன்றியும், வாழுதுக்களுடன்,
வாஞ்சி.
Actually the original film is 'Professor', a Hindi film starring Shammi,Kapor and Kalpana released in 1963. It has beautiful songs with music by Shankar Jaikishen. 'Nadigan' is almost a carbon copy of 'Professor' whereas 'Naalum Therinthavan' is not so. Even P. Vasu, director of Nadigan only recently acknowledged that he got the 'inspiration' from 'Professor' although every inch it is an exact replica! When I saw 'Nadigan' in 1990 I was looking out for the credit title of the origin of the story but no where it was mentioned of Professor or its story writer. Just see the film 'Professor' online so that you can surmise for yourself.
நான் ஒரு ரவிச்சந்திரன் ரசிகன்(ஜெய்சங்கர் அறவே பிடிக்காது) அவரை எல்லோரும் ஷம்மி கபூருடன் ஒப்பிட்டாலும் , ஷம்மி கபூரை விட handsome ஆனவர். சிவாஜிக்கு பிறகு கேமரா பார்வையில் handsome ஆக தெரிந்த நடிகர். பொழுது போக்கு படங்களில் சிவாஜி style படி நடித்தவர்.
நேற்று இதய கமலம் என்ற அருமையான படம்(கலைஞர் TV ) ரவி-கே.ஆர்.விஜயா ஜோடி படு cute .
நீ போகுமிடமெல்லாம் பாட்டில் side ways ஆக துள்ளி ஒரு step எடுப்பார் பாருங்கள் அடடா.!!
மலர்கள் நனைந்தன பாட்டில், பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி என்ற வரிகளில் ஒரு விஷம வெட்க சிரிப்பு. ரவி, ரவிதான்.
கே.எஸ். பிரசாத் படப் பிடிப்பு, மாமா மியூசிக் என்று heavy dinner நேற்று .
அவர் நடித்த இரண்டாவது படம் இதய கமலம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நல்வரவு என்ற படம்தான் இரண்டாவதாமே?யாருக்காவது விவரம் தெரியுமா?
ரவி நடித்த ஒரு படம் கூட விட்டதில்லை.(சிங்கப்பூர் சீமான் உட்பட) . ஜெய்சங்கரை விட உயரமான நட்சத்திரமாக இருந்தும், சில பல பழக்கங்களால் தன் உயரங்களை இழந்தவர்.1964 இலிருந்து 1968 வரை இவரளவு வெள்ளி விழா படங்களையும், பிரம்மாண்ட வண்ண படங்களையும் அன்றைக்கு உச்ச பட்ச superstar நடிகர்திலகம் கூட அந்த 5 வருட காலகட்டத்தில் கொடுத்ததில்லை.
என்னுடைய ரவி பட்டியல்.
காதலிக்க நேரமில்லை,இதயகமலம், குமரி பெண், வாலிப விருந்து,நாம் மூவர்,நிமிர்ந்து நில், நான், மூன்றெழுத்து, அதே கண்கள்,பணக்கார பிள்ளை,மீண்டும் வாழ்வேன்,பாக்தாத் பேரழகி, அக்கரை பச்சை,மெட்ராஸ் டு பாண்டிச்சேரி,நினைவில் நின்றவள்,காதல் ஜோதி,சபதம்,உத்தரவின்றி உள்ளே வா,புகுந்த வீடு..
திருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியில் படிக்கும் போது , என் பெரியப்பா வீடிருந்த ஆனைகட்டி மைதானம் என்ற இடத்தில் இவர் மனைவி விமலா, விமலா தங்கை வத்சலா, மகன்பாலாஜி, மகள் லாவண்யா,மைத்துனர் கிருஷ்ணன் என்ற குட்டி பையா அருகாமையில் வசித்த நண்பர்கள். ரவி ,இவர்களை சந்திக்க வருவார்.(முழுவதும் மீளவில்லை அப்போது)என் பெரியப்பா வீட்டில் வந்துதான் போன் பேசுவார்.(அப்போது போன் அபூர்வம்)பொதுவாக நிலம்,விவசாயம் சம்பந்தமானது. பெரியப்பாவிற்கு இவர் மனைவி,பிள்ளைகளுக்கு இழைத்த துரோகம் உவப்பில்லாததால்,வாடா ஒன்னோட favourite வந்துட்டான்,நீயே வந்து நில்லு ,நான் போறேன் என்பார்.(1974-75). என்னுடன் சகஜமாக பேசுவார் ரவி. பிறகு 1982 இல் ஒரு முறை பார்த்தேன். மையமாக ஒரு புரிந்த சிரிப்பு. பிறகு தொடர்பிலில்லை.
ரவி படங்களை இன்று பார்க்கும் போதும் மனதில் அதே குதூகலம்.
கோபால் சாரின் தயவால் ரவிச்சந்திரன் திரி சிறிது சூடு பிடித்து விட்டது. நாம் சும்மா இருக்கலாமா..
இதயக் கமலம் படத்திலிருந்து சில நிழற்படங்கள்
http://102.imagebam.com/download/fR4...IKAMALAM01.jpg
http://104.imagebam.com/download/u8H...5/RAVIIK02.jpg
http://101.imagebam.com/download/zMx...1/RAVIIK01.jpg
http://102.imagebam.com/download/S7B...55/KRVIK01.jpg
http://105.imagebam.com/download/55H...SHEELAIK01.jpg
மொள்ள மாரி கேப் மாரி ...
ஐயையோ.. காலைலே என்ன இந்த மாதிரின்னு பாக்கிறீங்களா...
கோபால் சாரின் விருப்பமான சிங்கப்பூர் சீமான் படத்தில் மனோரமா பாடிய பாடல் இது
நீங்களும் தான் இந்த இணைப்பில் கேட்டுப் பாருங்களேன்
http://www.inbaminge.com/t/s/Singapore%20Seeman/
http://www.inbaminge.com/t/s/Singapo...man/folder.jpg
அன்புள்ள கோபால் சார்,
உங்கள் பதிவிலிருந்து நீங்கள் தீவிர ரவிச்சந்திரன் ரசிகரும் கூட என்று தெரிகிறது. (உங்களுக்குப் பிடிக்காதவர்கள் வரிசையில் எம்.எஸ்.வி.யைத் தொடர்ந்து ஜெய்சங்கரும் இருப்பதாக தெரிகிறது).
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ரவியின் பேவரைட் படப் பட்டியலிலுள்ள பல படங்கள் முந்தைய பக்கங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவைகளைப்படித்து ஒவ்வொரு படத்துக்கும் உங்கள் மேலதிக விவரங்களையும் கருத்துக்களையும் தரலாமே.
திரி இன்னும் சூடு பிடிக்கும்.
ஐயையோ ,தலைவரே எனக்கு மிக மிக பிடித்த இசையமைப்பாளர் எம்.எஸ்.வீ.(எனக்கு எம்.எஸ்.வீ. இசை கடவுளுக்கு சமம்.) என் குடும்ப நண்பரும் கூட. எனக்கு அவரிடம் பிடிக்காதது Politics & Assumed false humility .
ரவிச்சந்திரன் மறைந்தபோது அவரது வாழ்க்கைக்குறிப்பைப் பற்றி எழுதிய பத்திரிகைகள், ரவிச்சந்திரன் முதலில் நடிகை ஷீலாவை திருமணம் செய்து வாழ்க்கை நடத்தியதாகவும் பின்னர் அவரைப்பிரிந்து விமலாவை திருமணம் செய்து கொண்டார் எனவும் தவறாக எழுதியுள்ளனர். அது உண்மை அல்ல.
அவர் 1967-லேயே திருமதி விமலாவை திருமணம் செய்து, விமலாவும் ரவிச்சந்திரனும் தம்பதிகளாக காட்சி தரும் புகைப்படம் 67 இந்தியன் மூவி நியூஸ் பத்திரிகையில் வந்திருந்ததை பிற்காலத்தில் காண நேர்ந்தது. அதன் பின்னர்தான் ஷீலாவின் வலையில் விழுந்து, விமலாவையும் குழந்தைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஷீலாவுடன் வாழ்க்கை நடத்தினார்.
'மஞ்சள் குங்குமம்', 'அப்பா அம்மா' போன்ற சில படங்களை இருவரும் சேர்ந்து தயாரித்து நடித்தனர். அனைத்தும் 'ப்ளாப்' . 'காதலிக்க 90 நாள்' என்ற படத்தை எடுத்தபோது ரவிச்சந்திரன் மிகவும் நொடித்துப்போனார். கடனாளியானார். அவ்வளவுதான், ஷீலா ரவியை உதறிவிட்டு வேறு பசையுள்ள இடம் நோக்கி பறந்துவிட்டார். தன தவறை உணர்ந்த ரவி, மீண்டும் திருச்சியில் பிள்ளைகளை வைத்துக் கொண்டு கஷ்ட ஜீவனம் நடத்தி வந்த தன மனைவி விமலாவிடம் சரணடைந்தார். அவர் நடிகை அல்ல, குடும்பத்தலைவியான குத்துவிளக்கு. திரும்பி வந்த / திருந்தி வந்த கணவரை ஏற்றுக்கொண்டதோடு தான் வேலைக்குப்போய் அவரையும் காப்பாற்றினார்.
அதன்பின்னர் ரவிச்சந்திரன் ஷீலாவைப்பற்றியோ, அல்லது ஷீலா ரவியைப்பற்றியோ எந்த பேட்டிகளிலும் குறிப்பிடுவதில்லை.
விமலா ,ரவியின் சொந்த அத்தை மகள். காதலிக்க நேரமில்லை வந்த போதே கல்யாணம்.(கிட்டத்தட்ட சிவாஜி போலவே முதல் படம் வந்த சூட்டோடு). ஷீலா -ரவி தொடர்பு இதய கமலம்,கௌரி கல்யாண நேரத்தில் ஆரம்பம். முற்றி ,அவர் குடும்பத்தை ஒதுக்கி மது பிரியர் ஆனது 1967 இல் இருந்து. பிறகு ஷூட்டிங் நேரத்தில் தன்னிலை மறந்து குடிப்பது, நேரம் அனுசரிக்காமை, சரியான நிர்வாகியை கூட வைத்து கொள்ளாதது, Public Relation ,அனாவசிய தி.மு.க சார்பு எல்லாமே அவரை உயரத்தில் இருந்து ,இறக்கியதோடு அல்லாமல் குழியிலும் தள்ளின.
சிகரெட் தூக்கி போட்டு பிடிக்கும் style அவர் நான்கு சுவர்கள் படத்தில் பண்ண வேண்டியது.
அது படத்துக்கு பொருந்தாது என்று சொல்லி, கே.பீ பிறகு மூன்று முடிச்சில் அதை உபயோகித்து ரஜினியை தூக்கி விட்டார்.
விமலா, வத்சலா, கிருஷ்ணன் எனது நெருங்கிய நண்பர்கள். அப்போது பாலாஜி,லாவண்யா சிறுவர்கள்.
ஷீலா-ரவிக்கு ஒரு பையன் உண்டு
கோபால் அவர்களுக்காக இதயக் கமலம் திரைப்படத்திலிருந்து மேலும் சில நிழற்படங்கள்.
http://i1146.photobucket.com/albums/...ps0f45a70d.jpg
http://i1146.photobucket.com/albums/...ps6872f51b.jpg
http://i1146.photobucket.com/albums/...psb155faea.jpg
நீண்ட நாட்களுக்குப் பின்னர் காட்சிக்கு...
ஏன் திரைப்படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல்
இறைவன் என்றொரு கவிஞன்
http://www.dailymotion.com/video/xmm5fy_iraivan-endroru_creation#.Ua9qz9j_QnA
மற்றொரு அபூர்வ பாடல்.
திரைப்படம் - அமுதா - குங்குமப் பொட்டு என்கிற டைட்டில் பின்னர் அமுதா என மாற்றப் பட்டது -
பாடல் - அன்பே அமுதா
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
http://www.dailymotion.com/video/xmm58x_anbe-amudha_tech#.Ua9rq9j_QnA
இலங்கை வானொலியில் நம்மையெல்லாம் கட்டிப் போட்ட பாடல்... இதைக் கேட்காவிட்டால் பொழுதே விடியாது என்கிற அளவிற்கு நம்மை ஆக்கிரமித்த பாடல். வி.குமாரின் மிகச் சிறந்த பாடல். ஜானகி சபதம் படத்தில் இடம் பெற்ற இளமை கோயில் ஒன்று.
http://www.dailymotion.com/video/xld8sd_ilamai-kovil-onru-janaki-sabhatham_auto
ரவி சந்திரன் - ஒரு urbanised Handsome looks .துரு துருப்பு . அட்டகாசமான Style .Dance movements .ஷம்மியை விடவே நன்றாக dance பண்ணுவார். கற்றை முடி நெற்றியில் புரள அந்த கால கல்லூரி படித்த இளைஞர்களை மிக கவர்ந்தவர்.அவரின் பொன்னான கைகள், விஸ்வநாதன் வேலை வேண்டும், நெஞ்சத்தை அள்ளி, காத்திருந்த கண்களே, நீ போகுமிடமெல்லாம், வருஷத்தை பாரு, ஜாவ்ரே ஜாவ்,மலரை போன்ற, பயணம் எங்கே, என்ன என்ன நெஞ்சுக்குள்ளே, நான் போட்டால் தெரியும் போடு,அட பாதங்களே, க்வாக் க்வாக்,போதுமோ இந்த இடம், ஒத்தையடி பாதையிலே, ஆடு பார்க்கலாம்,சிங்கபுரு மச்சான்,கண்ணுக்கு தெரியாதா,பொம்பளை ஒருத்தி, லவ் லவ், அரசனை பார்த்த ,மாடி வீட்டு பொண்ணு, எல்லாம் என்னை பித்து கொள்ள வைத்த சாதனைகள். அதே கண்கள் படத்தில் கொள்ளை handsome இந்த ஆள். என்ன ஒண்ணு constipation வந்த மாதிரி குரல், stiff நடிப்பு, ஸ்டைல் என்ற பெயரில் தேவைக்கும் மேல் ரெண்டு இன்ச் கூட வளைவார். ஆனாலும் வண்ண இதய நாயகனே.பட்டண த்தில் பூதம்,வல்லவன் ஒருவன் இவர் நடித்திருக்க வேண்டியவை.
News: Front Page | National | Tamil Nadu | Andhra Pradesh | Karnataka | Kerala | New Delhi | Other States | International | Opinion | Business | Sport | Miscellaneous | Engagements |
Advts: Classifieds | Employment |
Tamil Nadu - Chennai Printer Friendly Page Send this Article to a Friend
Ravichandran on how he got into Tamil films
S.R. Ashok Kumar
"When I came to Madras in 1963, I was asked to see director Sridhar who was on the lookout for a new face"
Ravichandran...actor turned director
A veteran in the field of cinema, Ravichandran has carved a niche for himself in Tamil movies. It so happens that people always identify two personalities in each era of film history. In olden days, it was M.K. Thygaraja Bagavathar and P.U. Chinnapa, followed by MGR and Sivaji Ganesan. It was Jaishankar and Ravichandran in the second half of 60's. Ravichandran has now directed a film in which his son Hamsavardhan is cast as hero. Here Ravichandran talks about his early days in the industry, his likes and dislikes and his present directorial venture "Mandiran".
Though I am from Tiruchi, I stayed and studied in Kuala Lumpur, Malaysia. I came to India in 1951 for my sister's marriage. After the marriage I visited Madras before returning to Malaysia.
I came again to attend my brother's marriage. During that visit, my father asked me whether I was interested in staying back and studying. I said `Yes'. I had studied in English medium and my second language was Malay. But my father would ask me to write two pages of English and Tamil from newspapers everyday. It was perhaps because of this that I could top in the Tamil Sangam examination.
I studied in St. Joseph College, Tiruchi. I played almost all games, especially tennis and basketball.
After my Pre-University exams I wanted to become a doctor. But my fate changed after a sudden attack of chicken pox. My face was full of spots. When I came to Madras in 1963 I was asked to see director Sridhar who was on the lookout for a new face. I was chosen to do a lead role in "Kadhalikka Neramillai" which was released on February 27, 1964.
The film became a hit and the offers began to pour in. Some of the films I like include "Athe Kangal", "Nan", "Mundrezhthu" and Kumarippenn".
My favourite artists in Tamil are Sivaji Ganesan, MGR, Jayalalithaa and K.R.Vijaya.
After working in more than 150 films, and as a hero in a majority of them, I wanted to direct a film. My son Hamsavardhan became my first hero in "Manaseega Kadhal". That film was credited in my real name P.S. Raman. The film was released in 1999 and got rave reviews.
It was my second directorial venture, "Mandiran" that was credited to my film name. It was a film with a message.
I feel that my family including my son has helped me a great deal. Another son Balaji is the executive producer.
தமிழ் படம் பார்ப்பதே கொடுமை ஆகியவர் என்று அவர் ஒருவரே காரணம் என்று குறை கூறுவது எந்தவிதத்தில் நியாயம் . . உங்களுக்கு அவரை பிடிக்கவில்லை என்றால், நாகரிகமான முறையில் எழுதலாமே . இப்படி கிழ்தரமாக எழுதவேண்டாமே .
தமிழ் திரை உலகை கொடுமை ஆக்கியவர்கள் பலபேர் . ஒருவரை மட்டும் குறை கூறுவது நல்லதல்ல.
ரவி சந்திரனின் குறிப்பிடத்தக்க படங்கள்.
Year Film
1964 Kaadhalikka Neramillai Tamil
Nalvaravu Tamil
1965 Idhaya Kamalam Tamil
1966 Gauri Kalyanam Tamil
Kumarippen Tamil
Motor Sundaram Pillai Tamil
Madras to Pondicherry Tamil
Naam Moovar Tamil
1967 Adhey Kangal Tamil
Maadi Veetu Mapillai Tamil
Magaraasi Tamil
Naan
Tamil
Ninaivil Ninraval Tamil
Sabhash Thambi Tamil
Thanga Thambi Tamil
Valibha Virundhu Tamil
1968 Moonreluthu Tamil
Nimindhu Nil Tamil
Panakkara Pillai Tamil
Delhi Mapillai Tamil
1969 Odum Nadhi Tamil
Sikharangal Malayalam
Singapore Seeman Tamil
Chella Penn Tamil
Subha Dhinam Tamil
1970 Kadhal Jothi Tamil
Kaviya Thalaivi Tamil
Snegithi Tamil
Malathi Tamil
1971 Paatondru Ketten Tamil
Sabhatham Tamil
Justice Vishwanathan Tamil
Meendum Vazhven Tamil
Utharavindri Ulle Vaa Tamil
1972 Pugundha Veedu Tamil
Varaverpu Tamil
1973 Engal Thaayi Tamil
Baghdad Perazhagi Tamil
1974 Avalukku Nigar Avale Tamil
Doctoramma Tamil
Puthiya Manidhan Tamil
Sorgathil Thirumanam Tamil
1975 Hotel Sorgam Tamil
Thai Veetu Seedhanam Tamil
1979 Neeya Tamil
1986 Oomai Vizhigal Tamil
1995 Karna Arjun's father Tamil
1997 Arunachalam Tamil
2002 Pammal K. Sambandam Tamil
2003 Ramana Tamil
2003 Tagore Telugu
2009 Kanden Kadhalai Tamil
vasu Sir,
Thanks for your great postings on Ravichandran. Pl.continue and we will make this thread memorable one.
.......
ஓகே.சௌரி சார். நீங்கள் உணர்ச்சி வச படுகிறீர்கள். யார் நல்லவர் -கெட்டவர் என்ற ஆராய நாம் இங்கில்லை. என்னை பொறுத்த வரை ரவி Handsome ,நல்ல நடனம் தெரிந்த உற்சாகமான நடிகர்.(கொஞ்சம் stiff என்பதை நானே எழுதி விட்டேனே). நான் ஒரு சாதாரண ரசிகனாக எழுதுகிறேன். நீங்கள் எழுதுவதை பார்த்தால் கொஞ்சம் personal ஆவதாக தெரிகிறது. உங்கள் மனம் புண் பட்டிருந்தால் மன்னிக்கவும்.
திரைத்துறையில் தயாரிபாளர்களுக்கு நடிகர் திலகத்தை போல ஒரு உற்ற நண்பன் இருந்தார் என்றால் அது மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் என்பது இன்றளவும் அனைவராலும் ஒத்துகொள்ளபட்ட விஷயம் (ஒரு சில நடுநிலையற்ற தாழ்புனற்சிகொண்டவர்களை தவிர) !
ஒரு நடிகனின் வாழ்வு மற்றும் நட்சத்திர அந்தஸ்து தயாரிப்பாளர்களை துன்புறுத்துவதில் அல்ல ! அவர்களை கடனாளியாக்காமல் கடைசிவரை செல்வந்தராகவே வைத்திருப்பதில்தான் ! அப்படி ஒரு நட்சத்திர நடிகர் இருந்தால் என்றால் அவர் நடிகர் திலகத்தை போல திரு.ஜெய்ஷங்கர் ஒருவர்தான் !
மிக பிரபலமாக பேசப்பட்டு வெற்றிகரமாக வசூலில் சாதனை இன்றளவும் புரிகின்ற துணிவே துணை மொத்த செலவே ஐந்து லட்சம் தான் என்றால் யாரும் நம்புவது சற்றுகடினம் தான் ..அதிலும் தயாரிப்பாளர் பண பிரச்சனையால் அவதிப்பட்டபோது ..தனக்கு வரவேண்டிய பாக்கியை கேட்டு மேலும் தொந்தரவு செய்யாமல்..படம் வெளிவர ஆவன செய்ததோடு மட்டும் அல்லாமல் தயாரிப்பாளருக்கு பணம் வந்த பிறகு பெற்றுக்கொள்ள இசைந்து பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து அதை பெற்றுக்கொண்ட அந்த மனப்பாங்கு எந்த கலையின் நிலவுகளுக்கும் சூரியங்களுக்கும் வராது !
படம் தயாரிக்கவேண்டும் அதில் கொஞ்சம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம்கொண்டு வருபவரை படம் வெளியாகும்வரை காப்பாற்றும் தன்மை மக்கள் கலைஞர் ஒருவருக்கு தான் உண்டு...!
தூத்துக்குடி திரைஅரங்கு வளாகம் தீகிரயானபோது...அப்போதைய முதல்வர் திரு.m g r அவர்களிடம் ருபாய் பத்தாயிரதிர்கான காசோலையை அடுத்தநாளே தன் சிறிய மகளுடன் சென்று வழங்கிவிட்டு வந்தார். ! நிலவுகள் இந்த செயலை செய்ததா என்று நாம் பார்தால்...நிலவு ...மேகத்திற்கு பின்னால் மறைந்துதான் சென்றது !
அதே போல புயல் வெள்ள நிவாரணமாக...10,000 உணவு பொட்டலங்களை உடனடியாக ஸ்டாண்டர்ட் வேனில் கொடுதனுபியதும் முதலில் இதே மக்கள் கலைஞர் தான்...ஆனால்...அன்றைய முதல்வரின் தாழ்புனற்சியால் அந்த உணவுபொட்டலங்கள் அனைத்தும் விநியோகம் செய்யப்பட விடாமல் ரோடு முழுவதும் கொட்டப்பட்ட கதை இந்த நாடறியும். ! நிலவு அப்போதும் மறைந்துதான் இருந்தது..!
மக்கள் கலைஞர் இறந்த பிறகு அவருக்கு அவர் நடிக்கும் காலத்தில் பல தயாரிபாளர்களால் கொடுக்கப்பட்டு அதை வங்கியில் டெபொசிட் செய்தபோது காசிலாமல் திரும்பி வந்த காசோலைகளின் மொத்தத்தொகை எவ்வளவு தெரியுமா...? சுமார் 2.28 Cr . அதை ஒரு நோட்டுபுத்தகத்தில் அவர் இறந்த பின்னர் கணக்கு எழுதியவன் என்ற முறையில் நானே சாட்சி..!
மனிதரில் மாணிக்யம் என்று இன்றளவும் போற்றப்படும் நட்சத்திர நடிகர் மக்கள் கலைஞர் ஒருவரே !
சௌரி சார்,
நாம் இங்கு மதர் தெரசா, காந்தி இவர்களை விவாதிக்கவில்லை. எந்த ஒரு மனிதனும் ,தான் வாழும் நாட்களில் சிலருக்கு சில நன்மைகளையாவது செய்வார். நாம் இங்கு விவாதிப்பது ,ஒரு நடிகர் என்ற விதத்தில் அவர்கள் விட்டு சென்ற impressions (looks &other Aspects )பற்றி மட்டுமே.அவர்கள் படங்கள் பற்றி மட்டுமே. நான் கொஞ்ச நேரம் முன்பே வாசு சொல்லி ,நீங்கள் அந்த குடும்பத்திற்கு வேண்டியவர் என்று தெரிந்து கொண்டேன். அதனால் என்னுடைய பதிவுகளை நீக்கி விட்டு, அவரை பற்றி இனிமேல் எழுதுவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளேன். என்னை பொறுத்த வரை எனக்கு ரவியை ஒரு entertainer ஆக பிடிக்கும். அவ்வளவே.
அது சரி, எவ்வளவு நாட்களுக்குத்தான் எம்.ஜி.ஆர். சிவாஜி சண்டையே போட்டுக் கொண்டிருப்பது?. கொஞ்ச நாளைக்கு ஜெய்சங்கர் - ரவிச்சந்திரன் சண்டையும் நடக்கட்டுமே.
கோபால் சார்
ஜெய் - ரவி இருவரும் சம காலத்தில் வந்த நாயகர்கள் .
இருவரும் தொடர்ந்து 10 ஆண்டுகள் பல நல்ல படங்களை
கொடுத்தனர்.
இருவரின் படங்கள் அனைத்தையும் பார்த்தவன் என்ற
முறையில் என்னுடய பார்வையில் ஜெய் படமும் ரவி படமும்
சிறப்பாகவே இருந்தன
ஒரு நடிகரை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால்
இப்படியா தாக்குவது ?
பாராட்டுங்கள் ....
இகழாதீர்கள் ...
ஜெய்சங்கர் பற்றிய உங்களது வார்த்தைகளுக்கு நீங்கள்தான்
சொந்தக்காரர் என்பதை மறக்க வேண்டாம் .
ரவி சந்திரன் என்ற அழகிய 1964 இன் இளமை சுனாமி.
17/10/1952 இல் நடந்த அதிசயத்துக்கு சற்றும் குறையாத மற்றொரு அதிசயம் 27/2/1964 இலும் நடந்தது. அதுதான் முதல் படத்திலேயே ஒரு நாயகன் இமாலய வெற்றி பெற்று தமிழகம் முழுதும் தன் ரசிகர்களாக திருப்பிய விந்தை. ரவி சந்திரன் என்ற இனிய புயல் சுமுகமாக கரை கடந்தது. இது ஒரு வண்ண மயமான வாண வேடிக்கை. அதுவரை senior நடிகர்களின் மோகத்தில் மூழ்கியிருந்த தமிழகம் ,தமிழ் பட உலகம் சற்றே stale ஆக போனதை உணர்ந்து, தங்களுக்கு ஹிந்தியில் அன்றிருந்த musical romance trend படி sweet nothings பேச ஒரு இளம் அழகிய நாயகன் வருகையை உணர்ந்தது. அடுத்த நான்கு வருடம் அந்த அலை ஓயவே இல்லை.அது நம் சீனியர் நாயகர்களையும் தாக்கி ஒரு அன்பே வா கொடுக்க வைத்தது. நடிகர்திலகத்தை இளைக்க வைத்து தங்கையின் கலாட்டா கல்யாணத்தை நடத்தி ராஜாவாக்கியது.
அப்போது திலகங்களை தவிர ஜெமினி,எஸ்.எஸ்.ஆர் இவர்களாலோ ,முன்னேறி கொண்டிருந்த முத்துராமன்,ஏ.வீ.எம்.ராஜனாலோ கனவிலும் நினைக்க முடியாத ஒரு status மற்றும் மாற்றம்.
இத்தனைக்கும் அபார அழகு,துரு துருப்பு இருந்ததென்றாலும், நடிப்பு திறமை சுமார்தான்.சிவாஜி ஸ்டைலை பின்பற்றி பொழுது போக்கு படங்கள்தான் கொடுத்தார். ஆனால் நடனத்தில் ஒரு style ,grace ,unique execution இவற்றினால் கலக்கினார். இவர் வரவில்லையென்றால் ஒரு நான், ஒரு அதே கண்கள் சாத்தியமில்லாமல் போயிருக்கும்.madras to pondichery படத்தில் இவர் கலக்கிய கலக்கலில் 10% கூட அன்றைய இளம் அமிதாப் பச்சன் Bombay to Goa படத்தில் கொடுக்க இயலவில்லை. நான்,அதே கண்கள் remake ஆகியிருந்தாலும் ,அன்று ரவி கொடுத்த உணர்வை கொடுக்க அகில இந்தியாவிலும் ஆளில்லை.
டான்ஸ் பண்ணுவதிலும் மிக மிக கஷ்டமான movements ,படு பிரமாத படுத்தி விட்டு ,சாதாரண அசைவை சொதப்புவார்.ஆனாலும் நமக்கு இவர் படம் பார்க்கும் போது ஒரு pleasantness இழையோடும். கலாட்டா பண்ணி கொண்டே நடக்கும் இளமை திருவிழா.காதல் காட்சிகளில் ரசனை இருக்கும். அத்து மீறிய crassness அறவே இருக்காது.
நடிப்பு பற்றி யார் கவலை பட்டது?அதை கொடுக்கத்தான் நமக்கு நடிப்பு அசுரன் நடிகர்திலகம் இருந்த போது ,அதை கொடுக்க இன்னொருவர் எதற்கு என்று ரவியை ரசித்தோம்.
ஆனால், ஒரு புதையலை குப்பை தொட்டியில் வீசுவது போல ,சராசரிகளுக்கு இடமளித்து விட்டு, ரவி தன் ஸ்தானத்திலிருந்து தன்னை தானே இறக்கி கொண்டார். தயாரிப்பாளர் மற்று சக கலைஞர்களோடு ஒத்து போகாமல் ,குடித்து தொழிலில் போதிய கவனமின்றி,படங்களை சரியாக தேர்வு செய்யாமல், சறுக்குவதை உணர்ந்து சரியான நேரத்தில் விழித்து கொள்ளாமல் தான் வெட்டிய பள்ளத்தில் தானே விழுந்தார்.
சிவாஜி முதல் ரஜினி வரை தொடரும் சில ஸ்டைல் களின் மத்திய கால சங்கிலி இவர்.
நம்மிடையே ஒரு குறை. ஒருவர் நடிகராக வந்து விட்டால் அவர் looks , படங்களின் தரம் மற்றும் அவர்களின் performance விமர்சனத்துக்கு ஆளாகியே தீரும். அதை counter பண்ண அவர் அநாதை இல்லத்துக்கு 5000 கொடுத்தார், தன் வீட்டு நாய்க்கு சோறு போட்டார்,என்ற ரீதியில் பதில் போட்டால் சிரித்து ரசிப்பதை தவிர வேறு வழியில்லை.
நாமும் சிறிது அடக்கி வாசிக்க வேண்டியுள்ளது. internet யுகத்தில் சம்பத்த பட்ட நட்பு,சுற்றம் பார்க்க வாய்ப்புள்ளதால் சபை நாகரிகம் கருதி ,இவற்றின் உணர்வுகளையும் அனுசரித்தே போக வேண்டிய கலிகாலம்.