”தர்ம்ம் வென்றது!”
ஜெயித்தவர் கூறினார்..
“தர்ம்ம் தோற்றது”
தோற்றவர் கூறினார்
வழக்கம் போலவே
மக்கள் முழித்தனர்..
பின்னர் சிரித்தே
செய்யப் போயினர்
அவரவர் வேலையை....
Printable View
”தர்ம்ம் வென்றது!”
ஜெயித்தவர் கூறினார்..
“தர்ம்ம் தோற்றது”
தோற்றவர் கூறினார்
வழக்கம் போலவே
மக்கள் முழித்தனர்..
பின்னர் சிரித்தே
செய்யப் போயினர்
அவரவர் வேலையை....
வேலையை மட்டும் செய் என்று விரட்டுகிறார்
ஆயக்கலை அறுபத்தி நான்கும் கற்றவளிடம்
சகலகலாவல்லியாய் சுடராய் திகழ்பவளிடம்
விரல் சொடுக்கி ஏவிடும் காட்டுமிராண்டிகள்
காட்டுமிராண்டிகள் கூட கருணை கொள்வர்
நாட்டுமிராண்டிகளால் குமுறும் குடிகண்டு.
-
கிறுக்கன்
கண்டும் உணர்ந்தும் குடிப்போர் உடலில்தான்
உண்டியும் ஒன்றாய்க் கெடும்
கெடும் வாடிக்கைப் பணி
பயணம் செய்யும் போது
கூடும் இன்பம் வெகுவாய்
பேரன்களுடன் விடுமுறை
கொண்டாடத் துவங்கியதும்
விழாக்கால குதூகலம் இது
இது இப்படிதான் அது அப்படிதான்
என்பார் எதுவும் புரியாதார்.
-
கிறுக்கன்
புரியாதார் என்று இருக்கும்
சில மாணவர்களுக்குச்
சொல்லித் தருவேன் அவசியம்..
என்றார் ஆசிரியர்.
’புரிகிறதோ புரியவில்லையோ..
பிற்காலத்தில்
அவர்கள் மாறலாம்
அரசியல்வாதியாக..”
அரசியல்வாதியாக மாறினாள்
அன்று போரில் துணை நின்று
தேர் சக்கரத்தில் விரல் கொடுத்து
வென்று சாதித்து வரமிரண்டு பெற்று
பல்லாண்டு சென்றபின் தக்க சமயத்தில்
மகனுக்கு அரியணை கேட்ட கைகேயி
பல தாரம் பல மக்கள் என்றால் இங்கு
என்றும் தொல்லை திருகும் தலைவலி
தலைவலி
இட்து காதின் நேர்க்கோட்டில்
ஆரம்பித்து
உள்சென்று வியாபித்து
வலது காதுவரை வலிக்க
கைப்பையைத் திறந்து
எப்போதும் நண்பனான
மஞ்சள் மருந்தைத் தடவினால்...
கெக்கெக்கெக்கே என
வில்லத்தனமாய் சிரித்த வலி
கூடிக்கொண்டே செல்ல
‘இதைச்சாப்பிடு.. வாயுத்தொல்லைவராது’
எனத் தோழி கொடுத்த
எக்ஸ்ட்ரா மாத்திரையை
முழுங்க
ம்ஹீம்
கல்லுளிமங்கத்தனமாய்
போகாமல் படுத்தப் படுத்த
முகம் சற்றே வெளிற
காகி தத் துணி கொண்டு
அழுந் தத் துடைக்கும் போது
க்யூபில் எட்டிப் பார்த்தமேலாளர்
என்னம்மா முகம் வாடியிருக்கு..
நெத்திப் பொட்டு விலகியிருக்கு
எனக் கேட்ட கேள்விக்கு
சோகையாய் சிரித்துக்
கணிணியைப் பார்த்தால்
ம்ஹீம் மனம் ஒன்றாமல் போகையில்
கைப்பையிலிருந்து ஒலிவர
எடுத்து செல்லிடைப் பேசியைக் காதில் வைக்க...
”என்ன..ரொம்ப நேரமா அடிச்சேன்..
நிறைய வேலையா.. தொந்தரவு பண்ணிட்டேனா..
கொஞ்சம் சீக்கிரமா வ ந்துட்டேன்...
ஒண்ணுமில்லை..சின்னத் தலைவலி தான்..
காஃபி போட்டுக் குடிச்சுட்டேன்..
முடிஞ்சா சீக்கிரம் வா..
சேச்சே...கவலைப் படாதே..”
செல் அமைதியாக
‘அச்ச்ச்சோ.. இவருக்கு வலி தாங்காதே..
சுக்கு அரைச்சு தலையில்
மெலிசாத் தடவலாம்...
பக்கத்து பங்கஜம் மாமி
ஏதோ திப்பிலியோ மொளகோ
கஷாயம் சொன்னாளே..
அதப்போட்டுப்பார்க்கலாம்...
இப்போதைக்கு மேலாளருக்குச்
சொல்லிச் செல்ல்லாம்’
என நினைத்துக் கைப்பையை எடுக்கையில்
வாட்டிய வலி
போன இடம் தெரியவில்லை...
ஆச்சர்யமாய்...!
++
ஆச்சர்யமாய் பார்
அழகான சூரியோதத்தை
அன்றலர்ந்த பூவை
ஆகாயத்து மேகத்தை
அதில் பறக்கும் காகத்தை
அடுத்த விட்டு குழந்தையை
அன்றாடம் பார்த்தாலும்
அதிசயமாய் தோன்றும்
அலுக்காத நிகழ்வுகள்
ஆனந்தத்தின் கதவுகள்
கதவுகள்
மரத்தால் ஆனவை எனில்
பிறந்த இட த்தை விட
புகுந்த இட த்தில்
நன்மதிப்புடன் இருக்கும்...
**
வாசற்கதவுகள்
மூடியிருக்கும் போது
முறைத்தே நிற்கும்..
திற ந்திருந்தால் சிரித்திருக்கும்..
*
புதிதாய்த்திருமணமான
இளஞ்ஜோடிகளின்
படுக்கையறைக் கதவுகள்
குறுஞ்சிரிப்புடன் நின்றிருக்கும்..
*
குடும்பஸ்தரின் படுக்கையறைக் கதவுகளுக்கு
தொலைக்காட்சி இல்லாமலேயே
நன்றாய்ப் பொழுது போகும்..
வால்கள் இருந்தால்
கஷ்டம் தான்..
ஓடி ஆடி விளையாடுகையில்
டொம்மென்று
சாத்தப் பட்டு அடிவாங்கும்..
**
பீரோ லாக்கரில் இருக்கும் கதவுகள்
பெரும் பாலும் பூட்டுக் கணவனுடன்
இணைந்தே இருக்கும்..
*
துணிஅலமாரிக் கதவுகள்
பெண்களுடையது எனில்
சுமையுடனும்
குதூகலத்துடனும் இருக்கும்..
அதுவே
ஆண்களுடைய அலமாரி எனில்
கொஞ்சம்
சுவாரஸ்யமில்லாமல்
சோம்பியே நிற்கும்..
**
குளியலறைக் கதவுகள்
பெரும்பான்மை
சற்றே அழுக்குடனும்
கண்கள் மூடி
வெட்கத்துடனும் நின்றிருக்கும்
**
ஜன்னல் கதவுகள்
காற்றைக் கண்டாலோ
படபடவென
தன்னையே தட்டி மகிழும்..
*
புத்தக் அலமாரிக் கதவுகள்
உள்ளே இருக்கும் பொக்கிஷத்தைப்
படிக்கமுடியாத்தை எண்ணி
சோர்ந்தே இருக்கும்..
**
கண்ணாடிக் கதவுகள்
கிட் ட த்தட்ட
குழந்தை மனம் கொண்டவை..
உள்ளிருப்பதை வெளிக்காட்டும்..
*
சமையலறைக் கதவுகள்
வாசனையை மட்டும் உண்டு
ஏங்கியே நிற்கும்
*
அடுக்குமாடிக் குடியிருப்பின்
கதவுகள்
நகரத்தின் குணம் கொண்டவை..
தான், தன்னுள் இருப்பவரின்
சுகம்மட்டும் நினைவில் கொண்டு
முக்கால்பொழுது
மூடியே இருக்கும்
**
புதிய இளமையான
கதவுகளை விட
பழங்காலக் கதவுகள்
வேலைப்பாட்டில்
சிறந்தும் பொலிவுடனும் இருக்கும்..
**
பெண்களின் மனக்கதவு மட்டும்
ஆண்களுக்கு
எப்போதுமே புரியாதவிஷயம்
எப்போது திறக்கும்;
எப்போது படபடக்கும்;
எப்போது மூடியிருக்கும்;
எனத் தெரியவே தெரியாது...
எந்தக் காலத்திலும்....!
**
எந்தக் காலத்திலும்
மேற்கே சூரியன் உதிப்பதில்லை
கோழி கூவப் பழகியதில்லை
கருப்பை ஆணுக்குள் வளர்வதில்லை
பருவம் தப்பி பூத்தலில்லை
மாறாத அமைப்பிதில் பிழையில்லை
பிழையில்லை தான்..
இருந்தாலும் ஏதோ குறை..
நிதானமாய் மறுபடி பார்க்கையில்...
நெடுநாள் பிரிந்திருந்தவள் அவள்..
திடீரென
அவன் நட்டநடு காய்கறி மார்க்கெட்டில்
கார் நிறுத்தி இறங்கி
அவளை நோக்கி
வருவான் என எதிர்பார்க்கவில்லை..
கண்கள் நீருடன் சிரிக்க..
வெளிர் சிகப்பு உதடுகள் துடிக்க
கருநீல மேலும் வெளிர்மஞ்சள் கீழுமான
சுடிதாரில்..
அழகிய செருப்பணிந்த ஒருகால் உயர்த்தி.
ஒருகால் தரையிலென நிற்க..
சிகப்புக் கட்டம் போட்ட சட்டை
நீல நிற ஜீன்ஸ் ; கறுப்பு ப்ரேம் கண்ணாடியில்
கண்கள் தெளிவாய்த் தெரிய
அழகிய மீசையும் நான்கு நாள் தாடியும்
சிவந்த உதட்டில் முறுவலுமாய் அவன் நிற்க...
பின்புலத்தில் சாம்பல் வண்ண கார்
கறிகாய்க் கடைகள்;
ஓரிரண்டு பேர் குறுக்கே செல்வது போல...
அழகாய்த் தான் இருக்கிறது..
இருந்தும் இன்னும் கொஞ்சம்
செதுக்கியிருக்கலாமோ..
அவளது முக உணர்ச்சிகளை...
வாவ்..ரொம்ப அழகு...த்த்ரூபம்...!~
பின்னால் குரல் வர
திரும்பினால் இவள்..
‘ஏய்..நிஜமாகவா...’
‘பின்னே’
‘எனக்கு ஏதோ குறைவது போல..’
அருகில் வந்து கிள்ளினாள்..
‘உன் ஓவியம் வெகு அழகு..
உனக்குத் தெரியுமா..
எந்த ஒரு கலைஞனுக்கும்
எளிதில் வராத விஷய்ம்..
தன் படைப்பில் முழு திருப்தி...”
***
திருப்தி கடையில் விற்பதில்லை
வரிசையில் நின்று வாங்கிச் செல்ல
வரமாய் வாங்கி வரவேண்டுமதை
வளமாய் வாழ்ந்து விடை பெற்றிட
விடைபெற் றிட வே போகுது பார்..
..வாழ்வில் உந்தன் துன்பமெலாம்..
தடைகள் எல்லாம் தான் தகரும்..
,,,தானாய்க் கவிதை அகம்மலரும்..
மடையைத் திறந்து விட்டாற்போல்
..மன துள் மகிழ்ச்சி பொங்கிவரும்
கடைக்கண் பார்வை திருமகளும்
..கனிவாய் அருள்வாள் அழகாக..
அழகாய் அரங்கேறும்
ஆழமாய் சிந்தித்து
அகலமாய் கணித்து
அதிகமாய் திட்டமிட்டு
அர்த்தமுடன் உழைத்து
அருமையாய் அடைகாத்தது
அடைகாத் த்து அழகாகவே மரக்கூட்டிலே காகம்
தடையாய்வரும் அரவம் தனை தய ங்காமலே எதிர்த்தே
விடையாகவே பொரிந்தேநடம் புரியும்குயிற் குஞசும்
கடைப்பார்வையில் சிறைப்பட் ட தால் கலங்கித்தின மழுமே...
அழுமே அந்த வானம்
ஐப்பசி கார்த்திகையில்
அதிரடியாய் கொட்டி
ஆவணி புரட்டாசியில்
ஆலங்கட்டியாய் சித்திரையில்
ஆண்டு முழுக்க மாரி
அவதாரம் மட்டும் மாறி
அதிலே செழிக்குது பூமி
பூமித் தாயே..
உன்னிடம் ஒரு கேள்வி..
எது வெல்லும்.. தர்ம்மா அதர் ம மா...
கேட்டான் பாமரன்
சிரித்துச் சொன்னாள்..
தர்ம்ம்
நீள்விடுப்பில் சென்று
பல காலம் ஆகிறது..
இப்போது இருப்பது இரண்டு..
சின்ன அதர்ம்ம்
பெரிய் அதர்ம்ம்..
சின்ன அதர்ம்ம் இன்று ஜெயித்து
நாளை மிகப் பெரிய அதர்ம்மாய் மாறும்..
நாளை பெரிய அதர்ம்ம் ஜெயிக்கும்..!
இது தான் உன் தலைவிதி..
பாமரனுக்கு வந்த்து மயக்கம்...
மயக்கம் சூழ்ந்தது சுகமாய்
மறந்தது வெயில் சுத்தமாய்
மணலில் கால் புதைய அலையில்
மனமகிழ்ந்து நின்றிருந்தபோது
மக்கள் கூட்டம் ஆரவாரிக்க
மொத்தமாய் கவலைகள் பறக்க
மாறாத ஈர்ப்பினை மறுபடியும்
மறக்காமலுணர்த்திய மெரினா
மெரினாவில் வந்த சுனாமி
மக்கள் வாழ்வை பறிக்க
தேர்தல் முடிவு சுனாமி
மக்களை வாழ வைக்குமா
இல்லை வீழ்த்தி சிரிக்குமா
என சொல்லுமா மெரினா!!!
--
கிறுக்கன்
மெரினா ஒரு மௌன சாட்சி என்றும்
தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்
வறுத்த கடலை சோளக்கதிர் மீன்
வகை வகையாய் குடித்து உண்டு
ராட்டினம் கிளி ஜோசியம் ரசித்து
தொடுவானம் வரை நீளும் கனவு
இன்பம் துன்பம் இரண்டும் பகிர்ந்து
கடல் நீரில் கண்ணீரை கரைத்து
புது அத்தியாயம் எழுத எழுந்து
துவக்கமும் முடிவும் அரங்கேற்றி
அமைதியாய் அப்பாவியாய் கிடக்கும்
நீண்ட அதிசய அழகிய மர்மமே
’அழகிய மர் மமே
எனச் சொல்லும்படியாகத் தான்
இருக்கிறது வாழ்க்கை..
அதுவும்
இறுதிக்காட்சி எப்படி என்று
வாழ்ந்தவனுக்குத் தெரியாது
எப்போதும்..
**
அழகிய மர் ம மே
என எல்லாவற்றையும்
கொண்டாட முடியாது..
நாவல்களில், திரைப்படங்களில்
மர்ம்ம் துலங்கினால்
அவ்வளவு தான்..
சுவாரஸ்யம் போய் விடும்..’
‘இப்போது தான் புரிகிறது..
முன்பெல்லாம்
அழகிய மர் ம மே
அழகிய கவிதையே
என்றெல்லாம் புகழ்வீர்கள்..
இப்போதோ பேச்சற்று இருக்கிறீர்கள்..
திருமணமாகி
பலவருடங்கள் கழிந்த தாலா..
‘அசடே..
எவ்வளவு வருடமானால் என்ன
பெண்களின் மனது மர்ம்ம் தான்..
உனக்குத் தெரியுமா
வயதாவதால்
கவிதைக்கு வந்துவிடாது முதுமை..!’
முதுமை ரசிப்புக்கு கூர் தீட்டுமோ
மாயாஜாலெனும் கேளிக்கையரங்கிலே
பறக்கப் பழகாத நீலக்கிளியும்
புத்திசாலி பெட்டை நீலக்கிளியும்
பல வித சாகச அனுபவம் தாண்டி
ரியோ நகரத்து திருவிழா அமளியில்
அனுபவித்த அமர்க்களம் எத்தனை
நண்பர்கள் உவந்து உதவியதில்
தீயவர்களை அதகளம் செய்தே
அரிய அருகிய இனத்து பறவைகள்
காதலில் விழுந்து கனிந்து மகிழ
முப்பரிமாண வேடிக்கையை வியந்து
பேரப்பிள்ளைகளுடன் கண்டு மகிழ்திட
காலம் கனிந்து வந்தது வரமல்லவோ
வரமல்லவா
மக்கள் என்னை மறுபடி
தேர்ந்தெடுத்த்து...
**
ஆரம்பத்தில்
எல்லோரையும் போல
குழந்தைப் பருவத்தில்
நான் சமர்த்து தான்..
நல்ல ஆற்றல் கொண்டவள் தான்..
ஆனால்
சூழ்நிலைகள் அமைய
திரையில் நடிக்க ஆரம்பித்தேன்..
கற்ற பாடங்கள் என்னை
வாழ்க்கையிலும் தொடர வைத்தன
*
அடிபட்டு அடிபட்டு
அனுபவங்கள் பல பட்டு
இருந்த போதில்
குரு பார்வையாலோ
அல்லது
மறைந்த என் குருவின் பார்வையாலோ
சிம்மாசானம்
எனக்கு வ ந்த்து..
உடன் பிறவாமல்
வரக்கூடாத
ஆணவம் அகந்தை
கூட்டுச் சேர
மனம் கட்டுக்கடங்காமல் செல்ல
சிம்மாசனம் கை நழுவ..
மறுபடி முயற்சித்து
அரியணை ஏற
கூடவே உடன் பிறவாதவர்கள் வர
அரியணையிலிருந்து
இறங்கினேன் மக்களால்..
இதோ
இப்பொழுது
பல வருடங்கள்
காய் நகர்த்திப்
போராடி
சிம்மாசனத்தில்
ஒருவராக அமர்வது
கடினம் என நினைத்த போழ்தில்..
நடந்தே விட்ட்து
மெளனப் புரட்சி..
தவறுகள் யார்செய்தாலும்
தாங்க மாட்டோம் எனச்
சொல்லிவிட்டனர் மக்கள்..
என்னைத் தேர்ந்தெடுத்த்து
என் மேல் உள்ள நம்பிக்கையாலா..
அல்ல
நான் தான் ஒரே ஆல்டர்னேட்..
இருந்தாலும்
எஞ்சியிருக்கும் கொஞ்சம் நம்பிக்கையில்
தனிப்பெரும்பான்மையாய்
என்னை அமர வைத்திருக்கிறார்கள்...
பெறுவதற்கான இலவசங்களால்
அவர்கள் கவரப் படவில்லை..
கொஞ்சூண்டு துக்குணியூண்டு
இருக்கும்
என நம்பும் தர்மத்தால் தான்..
நானென்ன செய்ய வேண்டும்..
என் கடமையைச் சரிவரச் செய்வேனா..
எதிரிi களை வசைபாடி
அழிப்பதில் குறியாய் இருப்பேனா..
வடக்கில் சென்று மாறுவேனா..
சுற்றி இருக்கும் கூட் ட்த்தால்
மனம் கலைந்து
சூழ்நிலைக் கைதியாகி
மக்களை மறப் பேனா..
தெரியாது..
ஆனால்
ஒன்று தெரியும்..
நான் செய் த்தை; செய்து கொண்டிருப்பதை;
செய்யப் போவதை
மேலே உள்ள ஆண்டவன்
பார்க்கிறானோ இல்லையோ
அமைதியாகவும் ஆழமாகவும்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
பாமர மக்கள் என
ஒளஒளாக்கட்டிக்காக அதாவது சும்மா
சொல்லப் படும்
புத்திசாலிகள்.....
***
புத்திசாலிகள் ஆவதுண்டு கோமாளிகள்
பூனைகளுக்கு தனித் தனி வாசல் செய்து
வலது இடது பைக்குள் தவளை ரொட்டி மாற்றி
அல்லது அறிவோடு தந்திரம் கொஞ்சம் கலந்து
பணத்தை சேர்த்து பாதுகாத்துப் பெருக்கியும்
புகழை இலகுவாய் கைத்தடிகளால் வளர்த்தும்
உயரங்கள் தொடலாம் வியர்வையின்றி விந்தையில்லை
பெரிய படிப்பும் பட்டமும் வேணா போதும் நல் யோகம்
நல்யோகம் உமக்கு காத்திருக்கிறது
ஆனால் கொஞ்சம்
தன்னம்பிக்கையுடன் முயற்சியும் வேண்டுமென
எஜமான் சொல்வதைக் கேட்டபடி
நெல்மணி எடுத்து உள்செல்கையில்
எழுந்த சிரிப்பு மறித்த்து..
சும்மா பொழுது போகவில்லை என வந்தேன்..
நீ சொல்வது எனக்கே தெரியும்...
எஜமான் மேலும் ஏதோ சொல்ல
எனக்குள் எழுந்த கோபத்தால் சற்றே பறந்து
சிரித்தவன் கையைக் கொத்தப் பார்த்து... பின்
த த் தித் த த் திக் கூண்டில் மேலேறினால்
மறுபடி சிரிப்பு..
பார் நல் யோகம் உன் கிளிக்குத் தான்..
இறகு முளைத்து விட்ட்து..
பறக்கப் போகிறது...
எஜமான் ஆதரவாகக்
கழுத்தைப் பிடித்துத் தடவ
அதில் நான் மெய்மறக்க
சற்றே தூக்கி கீழே வைத்து அழுத்தி
கூண்டினுள் தள்ளி விட்டு
அருகிலிருந்த பையைத் துழாவ
ஆஹா மறுபடி நெல்மணி என
அலகைத் திறக்க, பார்த்தால்
வெளிவந்த்தென்னவோ ஒரு
கத்தரிக் கோல்...
கத்திரிக்கோல் வெட்டியது பட்டை நறுவிசாய்
அளந்து பிசிறின்றி பேசிய வார்த்தைகள்
துல்லியமாய் விளங்கியது எடுத்த முடிவு
தொடர்ந்தே வரும் தண்டவாள இடைவெளி
ஒட்டாத உறவின் மாற்றமில்லா போக்கிது
பறக்க விரும்பியது என் வீட்டு படித்த கிளி
கிளி தானே...
கொஞ்சம் கோணல் மாணலாய்
குண்டாக
கிளையில் இருப்பது போல் தெரிந்ததை
உற்சாகப் படுத்துவதற்காகச் சொன்னால்..
அம்மா இங்கே பாரேன்
புறான்னு தெரியலை அப்பாக்கு எனக்
கைகொட்டிச் சிரிக்கிறது குழந்தை..
அப்பாவுக்கு எதுவுமே தெரியாதுடா
சொன்ன அம்மாவின் முகத்தில்
சின்னப் புன்னகை..
புன்னகை புரியத் தெரிந்திருப்பது
முதல் தகுதி முக்கியத் தேவை
பொதுமக்களின் தொடர்பு சேவைக்கு
மலர்ந்த முகம் தெளிவான ஒப்பனை
பொறுமையான பதில் பணிவு தயவு
அலுக்காதோ எந்திரப் பதுமைகளுக்கு
பதுமைகளுக்குச் சோர்வு ஏற்பட்டிருந்தது..
காரணமென்ன எனத்
தலைவி மதிவதன மோஹினி கேட்க..
“யாரோ போஜ ராஜனாம்..
இங்கு வந்து
நம் விக்கிரமாதித்த மன்னன்
சிம்மாசனத்தில்
அமர்வானாம்..
இது என்ன அநியாயம்..”
மதிவதன மோஹினி சொன்னது..
கவலையை விடுங்கள்..
நான் பார்த்துக் கொள்கிறேன்..
படை புடைசூழ போஜராஜன்
படிக்கட்டில் கால் வைத்ததும்
‘வாருங்கள் மன்னா..
தங்கள் வரவு நல்வரவாகுக..
அனைத்திலும் சிறந்தவரான நீங்கள்
இப்புவியை நன்றாக
சிறப்பாக ஆள
வாழ்த்துக்கள்’
மதிவதனி சொல்ல மற்றவை திகைத்தன..
போஜராஜன் சென்றதும் கேட்டன..
புன்முறுவலுடன் சொன்னது மதிவதனி...
“விக்ரமாதித்தன் ஆட்சி என்பது இறந்த காலம்..
இப்போது போஜ மன்னன் ஆட்சி
நிகழ்காலத்துக்குத் தக்கபடி மாறுவதும்
மன்னனைப் போற்றுவதும் தவறில்லை!.”
தவறில்லை தவறுகள் என்று
பழைய தலைமுறைகள் பழக்கி
பெரும் பூதமாய் வளர்ந்ததின்று
ஊழலெனும் கொடிய நோய்க்கிருமி
தவறில்லை தவறுகள் என்று
சீர்திருத்தங்கள் பல வந்தனவே
பெண்கள் குழந்தைகள் வாழவே
பகுத்தறிவும் பரிவும் போற்றுவோம்
போற்றுவோம் தான்..
நல் மன்னன்
நல் ஆட்சி
நல் மக்கள்...
நல்ல மழை...
இவை கிடைத்தால்...
தற்போது
கண்மூடி கிடைப்பதுபோல்
காணலாம் கனவு..
கனவு வரும் இரண்டு வித வேளையிலே
உறக்கத்திலும் விழித்திருக்கும் போதும்
உறக்கத்து கனவு மறையும் நீர்க்கோலம்
கண் விழித்தபடி காணும் கனவு கத்தி
கலாம் விரும்பியபடி தீட்ட வேண்டியது
கதையில் வரும் பால்க்காரி குடம் போலுடைந்து
வீணாய் போகாமல் விழிப்புடன் முனைப்புடன்
அடியெடுத்து வைத்து அடைய வேண்டிய இலக்கு
இலக்கு எதிரிகளுக்குச் சிக்கல் ஏற்படுத்துவது தானே அண்ணா..
இல்லை தம்பி
நம்முடன் இருந்து நம்மை விட வளர்ந்து,
நம்மை மிரட்டி பணிய வைத்து,
ஆமாம் போட வைத்து,அவமானப் படுத்தி
இப்போது சிக்கலில் மாட்ட வைத்திருக்கும்
உறவினர்க்கு ஏதாவது செய்யவேண்டும்..
‘அது தான் ஏற்கெனவே
நமது தொலைக்காட்சியில் அந்த
தமிழ்க் கதானாயகனின் ப்டங்களாகப்
போடுகிறோமே அண்ணா..
என்ன செய்வது தம்பி
சமயத்தில் பார்வையாளர்களை
இப்படிக் கொடுமைப் படுத்த்த் தான்
வேண்டியிருக்கிறது..
பிற்காலத்தில் அவரால் நமக்கு
உபயோகம் வரும்..
அண்ணா.. நான் சிறை செல்வேனா...
எனக்கும் கொப்புளங்கள் உடலில் வருமா..
நீங்களும்
கண்ணாடியைக் கழற்றி அழுவீர்களா...
என்ன தம்பி இது
அப்படி எல்லாம் விட்டு விடுவேனா என்ன..
முடிதிருத்திக் கொண்டிருந்தவர் சொன்னார்..
ஐயாக்களே தயவு செய்து அந்தப் பலகையைப் பாருங்கள்..
பலகையில் எழுதியிருந்த து...
தயவு செய்து கீழ்க்கண்டவற்றை
இங்கு பேசாதீர்கள்..
அரசியல் மற்றும் நகைச்சுவை..!
நகைச்சுவை உணர்வோடு நெருங்கி
அடுத்தடுத்து வரும் அலையென
அடுக்கடுக்காக கதை சொல்லியே
கடலை போடும் காதல் மன்னர்கள்
வலையில்லாமல் மீன் பிடிக்கையில்
சிக்குவது விதி நழுவுவது மதி காண்
காண்கின்ற காட்சியிது கற்பனையா இல்லை..
...கன்னிமனம் காதலினால் கனிந்துவிட்ட உண்மை
ஊண்மறந்தாள் உளம்நினைத்தாள் உடையவனின் தோற்றம்
..உறக்கமதைத் தொலைத்துவிட்டே புரளுகிறாள் அங்கே..
ஆண்டவனை தொழுவதறகு மறந்தேதான் நெஞ்சை
..ஆண்டவனைத் தான்நினைத்தே உருகுகிறாள் பாவை..
மாண்டவரை உயிர்ப்பிக்கும் மருந்தாமோ காதல்..
..மாற்றங்கள் நொடிப்பொழுதில் கொண்டுவரும் அன்றோ...
அன்றோ இன்றோ என்றும் மாறா
தள்ளையின் பிள்ளை பாசம்.
-
கிறுக்கன்.
பாசம் எனும் வலை
போராட்டமான நிலை
பகிர்தல்தான் வேலை
புரிதலும் ஒரு கலை
பதற்றமேதும் இல்லை
பற்று முடியும் மாலை
மாலையிட மண்டபத்தில் நுழைந்திட்ட மங்கை..
...மன்னவர்கள் தோற்றத்தைக் கண்டவுடன் நெஞ்சம்
கோழையெனக் கணநேரம் துணுக்குற்றுக் குமுற
..கூட்ட்த்தில் இருப்பவரை மறுபடியும் பார்க்க
வேலைவிடும் பயிற்சியினால் விரிந்திருக்கும் மார்பு
..விழிகளிலோ சாந்தமென அமர்ந்திருக்கும் ஐவர்
காளைகள்தாம் இருந்தாலும் காதலனின் தோற்றம்
...கொண்டவந்த நால்வரையும் தெரிவதுதான் எப்போ..
கண்மூடி தமயந்தி கடவுளையே வேண்ட
...கணப்பொழுதில் தோன்றியது ஓரெண்ணம் மனதில்..
மண்ணோக்கி இருப்பதுபோல் பார்த்திடவே நான்கு
..மன்னர்களின் கால்களும்தான் தரைதொடாமல் தொங்க
தன்மனதை ஆட்கொண்ட நளன்காலோ கீழே.
...தொட்டபடி தானிருக்க மனம்சிலிர்த்து அங்கே
வண்ணமயில் போல்நடந்த வஞ்சியவள் மாலை
...வல்லவனின் தோளிலிட்டு மனம்மயங்க நின்றாள்..