டியர் ஜீவ் சார்,
கனடாவில் "கர்ணன்" வெளியாகியுள்ள தகவலை, ஊர்-அரங்கம் மற்றும் காட்சி நேரங்களோடு நேர்த்தியுடன் அளித்த தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..!
"கர்ண"னின் வெற்றி விவரம் குறித்தும் தங்களிடமிருந்து அறிய ஆவலாய் உள்ளோம்..!
அன்புடன்,
பம்மலார்.
டியர் esvee சார்,
"பேசும் படம்" இதழிலிருந்து அரிய புகைப்படப் பொக்கிஷத்தை அளித்தமைக்கு குதூகலமான நன்றிகள்..!
நன்மை செய்து, நன்றி சொல்லி, நட்பை வளர்க்கும் தங்களின் நற்பண்பை மனமாரப் பாராட்டுகிறோம்..! அந்த உயர்ந்த நட்புப் பாதையில் தங்களுடன் கைகோர்க்கிறோம்..!
இதனை எழுதும்பொழுது இரு திரைப்பாடல்கள் என் நெஞ்சில் மின்னலாய் பளிச்சிடுகின்றன..!
"கூடும் உறவு கூட்டுறவென்று ஒன்றாய் வாழுங்கள் !
கூடியபிறகு குற்றம் காணும் கொள்கையைத் தள்ளுங்கள் !"
என்ற நடிகர் திலகத்தின் "என்னைப் போல் ஒருவன்" பாடலும்,
"ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி"
என்ற மக்கள் தில்கத்தின் "தொழிலாளி" பாடலும் நினைவில் நிழலாடுகின்றன..!
தங்களுக்கு மீண்டும் பாராட்டும், நன்றியும்..!
அன்புடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் அன்பான பாராட்டுக்கு கனிவான நன்றி..!
'ஜெமினி சினிமா' 1.1.1983 இதழின் 'நினைத்ததும் நடந்ததும்' பகுதியில் வெளிவந்த இயக்குனர் கே.விஜயன் அவர்களின் கருத்துரை, ஒரு சுவாரஸ்யமான அரிய ஆவணப்பதிவு. இடுகை செய்தமைக்கு இனிய நன்றிகள்..!
[அட்டைப்படம் அட்டகாசப் படம்..!]
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகம் அளித்த பேட்டிகள் /
எழுதிய கட்டுரைகள் : 1
ஒலிம்பிக்ஸ் ஸ்பெஷல்
பொக்கிஷாதி பொக்கிஷம்
1996-ல் அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸை நேரில் கண்டு களித்த நடிகர் திலகம், அதுகுறித்து 'குமுதம்' வார இதழுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி
வரலாற்று ஆவணம் : குமுதம் : 19.9.1996
அட்டை
http://i1110.photobucket.com/albums/...GEDC6156-1.jpg
முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC6150-1.jpg
இரண்டாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...DC6151-1-1.jpg
மூன்றாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC6152-1.jpg
நான்காம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC6153-1.jpg
[இந்த நேர்காணல் அட்டையுடன் ஐந்து பக்கங்களை உள்ளடக்கியது.]
பக்தியுடன்,
பம்மலார்.
இன்று 28.7.2012 சனிக்கிழமை முதல், திருநெல்வேலி 'சென்ட்ரல்' திரையரங்கில், தினசரி 4 காட்சிகளில், நமது நடிகர் திலகத்தின் "எங்க மாமா".
தித்திக்கும் தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு இனிய நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் : 6
நடிகர் திலகத்தின் 84வது காவியம்
சித்தூர் ராணி பத்மினி [வெளியான தேதி : 9.2.1963]
பொக்கிஷாதி பொக்கிஷம்
காவிய விளம்பரம் : The Hindu : 14.1.1962
http://i1110.photobucket.com/albums/...GEDC6159-1.jpg
"சித்தூர் ராணி பத்மினி" முதல் வெளியீட்டு விளம்பரங்கள் தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 3
நடிகர் திலகத்தின் 194வது காவியம்
என்னைப் போல் ஒருவன்
[முதல் வெளியீட்டுத் தேதி : 18.3.1978 (தென்னகம்), 14.4.1978(சென்னை)]
முதல் வெளியீட்டில் அதிகபட்சமாக சென்னை 'தேவிபாரடைஸ்' திரையரங்கில் 70 நாட்களும் மற்றும் சேலம் 'நியூசினிமா'வில் 70 நாட்களும் ஓடிய சிறந்த வெற்றிக்காவியம்
பொக்கிஷாதி பொக்கிஷம்
மறு வெளியீட்டு விளம்பரம் : தினகரன்(மதுரை) : __.4.1991
http://i1110.photobucket.com/albums/...GEDC6162-1.jpg
முதல் வெளியீட்டில், ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான மதுரை 'தங்கம்' திரையரங்கில், 41 நாட்கள் ஓடி பெரும் வெற்றி..!
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
நடிகர் திலகம் ஆதங்கப் பட்டது போல் விளையாட்டு ஒலிம்பிக்ஸில் இந்தியா தங்கம் வெல்கிறதோ இல்லையோ, ஆவணங்களுக்கென்று ஒலிம்பிக்ஸ் வைத்தால் நடிகர் திலகம் நினைத்தது நடக்கும். அந்த பதக்கத்தை பம்மலார் வென்று இந்தியாவுக்கும் நடிகர் திலகத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளம் குளிர வைப்பார் என்பது திண்ணம்.
அட்டகாசம் சார்...
அகில இந்திய சிவாஜி மன்றம் நடத்தும் கர்ணன் 150வது நாள் வெற்றி விழா 04.08.2012 மாலை 4.30 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. திருமதி ராதிகா சரத்குமார், இயக்குநர் திரு பி.வாசு, திரு ஒய்.ஜி.மகேந்திரா, திரு மருதுமோகன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். இளைய திலகம் பிரபு அவர்கள் கேடயங்களை வழங்கி உரையாற்றுகிறார். நிகழ்ச்சிக்கான அழைப்பிதழின் மாதிரி இங்கே நம் பார்வைக்கு ...
http://i872.photobucket.com/albums/a...fainvite01.jpg
டியர் esvee சார்,
நன்றி! தூள் கிளப்பி விட்டீர்கள். இதுவரை பார்க்காத நடிகர் திலகத்தின் அபூர்வ ஸ்டில்லை பதித்து எங்கள் நெஞ்சில் நீங்கா இடத்தைப் பிடித்து விட்டீர்கள். பொக்கிஷமாக அதை இறுதி வரை பாதுகாத்து வைத்துக் கொள்வோம். மக்கள் திலகத்தின் மகத்தான ரசிகருக்கு என் கோடி நன்றிகள்.
அன்பு பம்மலார் சார்,
ஒலிம்பிக்ஸ் ஸ்பெஷல்
அடடா! என்ன ஒரு டைமிங் பதிவு சார்! ஆச்சர்யம், வியப்பு, திகைப்பு, சந்தோஷம், திருப்தி என அத்தனை உணர்ச்சிகளையும் ஒருசேர வரவழைத்து வைத்து விட்டீர்கள்.
இன்ன நேரத்தில் இதைத் தர வேண்டும் என்பதில் உங்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
மிக மிக அழகான, நேர்த்தியான பதிவு. தலைவரின் நெஞ்சக்குமுறல் பொங்கி வரும் வெள்ளப் பிரவாகமாய் பேட்டி முழுதும் பெருக்கெடுத்து ஓடுகிறது. நம் நாட்டுக்கான அங்கீகாரம் எங்கும் இல்லை, எதிலும் இல்லை என்ற அவருடைய ஆதங்கம் நியாயமானதே! காரணம் பாழாய்ப் போன அரசியல். பல திறமைசாலிகள் அடையாளம் காணப்படாததற்கு இந்த அரசியல் தான் காரணம். உலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய நடிகர் திலகத்திற்கு நம் நாட்டில் கிடைத்த அங்கீகாரம் தான் தெரியுமே!
"என்னென்னமோ நடக்குது... ஒரு வார்த்தை இதுவரைக்கும் நான் வாய் திறந்து சொன்னது கிடையாது...
எப்ப நீ இல்லன்னு ஆயிட்டியோ அப்ப நீ எந்த விஷயத்திலும் தலையிடக் கூடாதுங்குறது எனக்கு நல்லாத் தெரியும்...
இது தெரியலன்னா இருந்து என்ன புண்ணியம்...
நீ இல்லேன்னு சொன்னா தலையிடாதேன்னுதானே அர்த்தம்"...
ஆஹா! நடிகர் திலகம் என்ற அந்த தீர்க்கதரிசியின் வரிகள் இன்றைய சூழ்நிலைகளில்கூட எவ்வளவு அழகாகப் பொருந்துகின்றன! நமக்காகவே நடிகர் திலகம் அப்போதே சொல்லிவிட்டாரோ! பலதடவை பலரும் நெருப்பிலே இட்டு பொசுக்கி சாம்பலாக்கினாலும் பீனிக்ஸ் பறவை போல உயிர்த்து வந்து நமெக்கெல்லாம் உவகை தந்தாரே நமது இதய தெய்வம்... அவருக்கிருந்த அதே தன்மான உணர்வு அவர் பக்தர்களான நமக்கு இயற்கையாக அமைந்ததில் ஆச்சரியமென்ன!
விளையாட்டுகளில் நடிகர் திலகத்திற்கு எப்போதுமே மிகுந்த interest உண்டு. அப்போதெல்லாம் தியேட்டர்களில் படம் பார்க்கச் செல்லும் போது படம் துவங்குமுன் காட்டப்படும் செய்திப்பிரிவு படங்களில் (இந்தியன் நியூஸ் ரிவ்யூ) பல கிரிக்கெட் போட்டிகளை அவர் வெளிநாடுகளில் கண்டு களித்ததை நான் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். தலைவருடன் அவருடைய உடன் பிறவா சகோதரி 'இசைக்குயில்' லதா மங்கேஷ்கர் அவர்களும் போட்டிகளை கண்டு ரசிப்பார். ('சிவந்த மண்' காவியத்தில் காளையை அடக்கும் காட்சிகளை படு உற்சாகமாய் கண்டு ரசிப்பாரே அது போல). ம்... அதெல்லாம் ஒரு பொற்காலம்.
ச(சா)ரி! எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்து விட்டேன்...
தலைவரின் ஐந்து பக்க நேர்க்காணலை ஒரேநேரத்தில் பதிவிட்டு எங்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்த திரியின் பசும்பொன்னே! எங்கள் பத்தரை மாற்றுத் தங்கமே! ஈடு இணை உண்டோ உங்களின் அரிய சேவைக்கு! நன்றிகள்! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!. தொடரட்டும் தங்களுடைய சர்ப்ரைஸ் அசத்தல்கள்.
அன்பு பம்மலார் சார்,
'சித்தூர் ராணி பத்மினி' காவியத்தின் 'விரைவில் வருகிறது' விளம்பரம் பேஷ்! "சித்தூர் ராணி பத்மினி" முதல் வெளியீட்டு விளம்பரங்கள் தொடரும்...என்ற செய்தி தேனாய் இனிக்கிறது.
'என்னைப் போல் ஒருவன்' மறு வெளியீட்டு விளம்பரம் உங்களை விட்டால் இது போன்ற சூப்பர் பதிவுகளுக்கு யார் என்று மீண்டும் கேட்க வைக்கிறது.
திருநெல்வேலி 'சென்ட்ரல்' திரையரங்கில்"எங்க மாமா" தன்னந்தனிக் காட்டு ராஜாவாக சாம்ராஜ்யம் புரிவது ஜோர்.
அற்புத பதிவுகள் அனைத்துக்கும் ஆனந்த ஆராதனை நன்றிகள்.
நெல்லை சென்ட்ரல் திரையரங்கில் எங்க மாமா ... நாம் அங்கு இல்லையே என்று அப்போது ஏங்குவோம். இப்போது சென்ட்ரலும் நம் மிடம் எங்க மாமாவும் நம்மிடம். உட்கார்ந்த இடத்தில் சென்ட்ரலையும் பார்க்கலாம், எங்க மாமாவையும் பார்க்கலாம்.
எப்படி
http://nellailive.in/wp-content/uplo...heatreTvli.jpg
http://youtu.be/S2DdvvlgpIA
இன்று பிறந்த நாள் காணும் நமது நண்பர் சங்கரா 1970 அவர்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். மென்மேலும் சிறப்பு பெற்று நீண்ட ஆயுளுடனும் நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ்க.
புத்தம் புதிதாய் இணையத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல் அவருக்காக
http://youtu.be/7aDsRLCqxsA
சில சமயங்களில் மிகவும் முக்கியமான படங்கள் தோல்வி அடையும் போது பல விதமான பரிமாணங்களில் காரணங்கள் அலசப் படும். ஆனால் சில படங்களுக்கு காரணங்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாய்த் தெரிந்து விடும். அதற்கு உதாரணமாய்...
http://youtu.be/yxRGctq9SJc
'ஸ்போர்ட்ஸ் மேன்' நடிகர் திலகம் (ஒலிம்பிக்ஸ் சிறப்பு வீடியோப் பதிவு)
அன்பு பம்மலார் சார் வழங்கிய அற்புத பதிவான 'ஒலிம்பிக்ஸ் ஸ்பெஷல்' நடிகர் திலகத்தின் கட்டுரையை சார்ந்து அடுத்து நடிகர் திலகம் ஸ்போர்ட்ஸ்மேனாக தூள் கிளப்பும் ஒரு காட்சியை 'இரத்தத் திலகம்' படத்தில் 'ஒலிம்பிக்ஸ் ஸ்பெஷல்' ஒலி-ஒளிக் காட்சியாக முதன் முதலாக இணையத்தில் கண்டு ரசிப்போமா!
http://www.youtube.com/watch?v=fMOO34G2dLA&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
Dear Sankara1970 sir,
Wishing you many more happy years to come. Happy birthday!
http://t1.gstatic.com/images?q=tbn:A...kNuTbW7gxxdSog
http://www.bestbirthdaywishes.net/wp...0714473587.jpg
ஓய்வின்றி உழைத்து நடிகர் திலகத்திற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள நம்முடைய நண்பர்கள் பம்மலார் மற்றும் வாசுதேவன் ஆகியோரின் சிறந்த பதிவுகளுக்கு உள்ள வரவேற்பிற்கான சான்று ...
வாசுதேவன் பாகம் பத்தினைத் துவக்கி வைத்த நாள் - ஜூன் 14.06.2012.
பாகம் பத்தில் ஜூன் 30.06.2012 முடிய இடம் பெற்ற பதிவுகள் எண்ணிக்கை - 548
பாகம் பத்தில் ஜூலை 1 முதல் இன்று 29.07.2012 காலை 9.40 வரை இடம் பெற்ற பதிவுகளின் எண்ணிக்கை - 132.
பாகம் பத்தின் மொத்த பார்வையாளர் எண்ணிக்கை சுமார் 48000. நாட்கள் 46.
ஜூன் 30 வரையிலான பார்வையாளர் எண்ணிக்கை தெரியவில்லை.
தற்போது நமது பம்மலார் துவக்கி வைத்துள்ள திரியின் துவக்க நாள் - 22.07.2012
இன்று 29.07.2012 காலை 9.40 மணி வரை இடம் பெற்றுள்ள பதிவுகளின் எண்ணிக்கை 217.
பார்வையாளர் எண்ணிக்கை சுமார் 6,500 . நாட்கள் 8.
இதனை வெறும் எண்ணிக்கை சாதனையாக மட்டும் கொள்ளாமல் உழைப்பின் அடையாளமாய்க் காண வேண்டும், நண்பர்களின் வரவேற்பின் அடையாளமாய்க் காண வேண்டும். பெரும்பான்மையோர் விரும்பாமல் இந்த எண்ணிக்கையும் இந்த அளவிற்கு பதிவுகளும் இடம் பெறுமா என்பது ...
சிந்திக்க வேண்டிய விஷயம்...
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்பிற்கு உயரிய நன்றி!
http://i295.photobucket.com/albums/m...ri/Nandri6.gif
]அன்புள்ள நண்பர் திரு பம்மலர் சார் அவர்களுக்கும் , திரு வாசுதேவன் சார் ,அவர்களுக்கும் எனது இனிய நன்றியினை தெரிவித்து கொள்ளுகின்றேன் .http://i47.tinypic.com/2h4lv86.png
இணையதளத்திலும் 'கர்ணன்' சாதனை. ('இதயக்கனி' சினிமா ஸ்பெஷல், July 2012)
http://i1087.photobucket.com/albums/...5/6_0001-1.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் esvee சார்,
கலக்குகிறீர்கள் சார். அருமையான நடிக மன்னரின் நிழற்படங்கள். பார்க்க பார்க்க திகட்டவில்லை. உங்கள் நல்ல அன்பு மனம் "இன்று போல் என்றும் வாழ்க"
நன்றியுடன்,
வாசுதேவன்
பண்டைய இலக்கியங்கள்.. குறிப்பாக பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவான இலக்கியங்களை நாம் அறிவது எப்படி ... அவர்கள் உயிருடன் நம்மிடம் வந்து சொல்கிறார்களா...அந்த இலக்கியங்களின் அருமையை அறிந்தவர்கள் அவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற கலையார்வத்தோடும் உள்ளன்போடும் செய்யும் தொண்டுகளால் தான் அவை இன்றளவும் மக்களிடம் சென்று சேர்கின்றன. ஒரு உ.வே.சாமிநாதய்யர் இன்று நம்மிடம் இல்லை, ஆனால் அவருடைய தலைமுறையினர் அவருடைய சிறப்பை அடுத்தடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்ததன் மூலமாகத் தான் இன்று ஓலைச் சுவடிகளாயிருந்த இலக்கியங்கள் நம்மிடையே புதினங்களாக வருகின்றன. இந்த நிலை அனைத்துக் கலைகளுக்கும் பொருந்தும். தொல்காப்பியர் காலத்தவர்கள் செய்த தொண்டின் பயனாகத் தான் இன்று நம்மிடையே தமிழ் இலக்கணம் இன்றியமையா இடம் பெற்றுள்ளது. இந்த அடிப்படையில் தான் நடிகர் திலகம் என்கிற மாமனிதரின் மாபெரும் கலைஞனின் சிறப்பையும் நோக்க வேண்டும். அவருடைய திறமையை அவருடைய படங்கள் பறை சாற்றும். ஆனால் அவற்றை அடுத்தடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் பணி காலங்கடந்து நிற்கும். அது மட்டுமல்ல, நடிகர் திலகம் இன்றும் தன்னுடைய ஆளுமையை ஆணித்தரமாய் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இதனை அவருடைய படைப்புகள் பெருகின்ற மாபெரும் வரவேற்புகள் பறை சாற்றுகின்றன. அவருடைய வெற்றிகள், அவருடைய நற்பண்புகள், அவருடைய ஈகை போன்றவை மக்களிடம் கொண்டு செல்வது ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் கடமையாகும். பல்வேறு கால கட்டங்களில் அவருடைய வெற்றிகளும் சாதனைகளும் மக்களின் சிந்தனைக்கு சரியான முறையில் எடுத்துச் செல்லப் படாததன் விளைவுகள் தான் முதல் வெளியீட்டில் கர்ணன் தோல்வி என்று பொதுவாக நிலவும் கருத்துக்களுக்குக் காரணம்.
பம்மலாரும் வாசுதேவனும் மேற்கொண்டுள்ள இந்தப் பணி கடல் கடந்து வாழும் தமிழர்களால் பெரிதும் விரும்பப் படுகிறது.
இன்றைக்கும் கர்ணன் வெற்றி பற்றிய செய்திகள் அதிக அளவில் மக்களை சென்றடையாமல் செய்ய முயற்சி மேற்கொள்ளப் பட்டும் வளர்ந்து விட்ட விஞ்ஞான யுகத்தில் இது நடைபெறாத காரணத்தால் மக்களிடையே கர்ணனின் மிகப் பெரிய வெற்றி முழு அளவில் கவனத்தை ஈர்த்ததும் நாம் பார்க்கிறோம். இது தான் நமக்கு காலம் கனிந்து வருவதன் அடையாளம். இன்றைக்கு மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள் மூலமாக எதிர்காலத்தில் நடிகர் திலகத்தின் படங்கள் மட்டுமல்ல, அவருடைய படங்களின் வெற்றி மூலம் அவர் எப்படிப்பட்ட சாதனைகளையெல்லாம் செய்துள்ளார் என்பதை வரும் தலைமுறையினர் தெளிவாகத் தெரிந்து கொள்வர்.
இந்த அடிப்படையில் தான் திரிகளின் வரவேற்பினைப் பற்றிய புள்ளி விவரங்கள் தரப்பட்டுள்ளன என்பதைப் பணிவோடு கூற விரும்புகிறேன்.
அன்புடன்
நடிக தெய்வத்தின் பதினோராம் ஆண்டு நினைவு தினம் புதுவை மாநிலத்தில் (உழந்தைகிரப்பாளையம்) அகில இந்திய புதுவை மாநில சிவாஜி மன்ற பொதுச் செயலாளர் திரு A.கமலக்கண்ணன் அவர்கள் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது. நினைவாஞ்சலி தினத்தன்று பள்ளி மாணவிகளுக்கு பேனா, பென்சில், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டதோடு ஏழை,எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி பொட்டலங்களும் வழங்கப்பட்டன. பேதங்கள் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் நமது இதய தெய்வத்திற்கு அஞ்சலி செலுத்தியதாக திரு.கமலக்கண்ணன் அவர்கள் தெரிவித்தார்.
நினைவாஞ்சலி நிழற்படங்கள் சில
http://i1087.photobucket.com/albums/...355/6_0002.jpg
http://i1087.photobucket.com/albums/...5/6_0003-1.jpg
சுவரொட்டிகள் சில
http://i1087.photobucket.com/albums/...5/IMG0175A.jpg
http://i1087.photobucket.com/albums/...5/IMG0170A.jpg
http://i45.tinypic.com/1yidz.png[QUOTE
Dear BR SIR
thanks for your compliments.
அன்புள்ள பம்மலார் சார்,
1964 பேசும்படம் இதழில் வெளிவந்த 'கர்ணன்' திரைக்காவியத்தின் நிழற்படங்களை அள்ளி வழங்கி ஆனந்தப்படுத்தி விட்டீர்கள். இன்றைக்கு நாம் பலமுறை கர்ணன் படத்தைப்பார்த்தபின்னும் இப்படங்கள் நமக்கு சுவையூட்டுகின்றன என்றால், படம் வெளிவருவதற்கு முன் இவற்றைப்பார்த்த ரசிகர்களுக்கு இவை எவ்வளவு பரபரப்பையும், எதிர்பார்ப்புகளையும் தூண்டியிருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. அது ஒரு காவியப்படைப்பு என்பதனால்தான், தொடர்ந்து ஆண்டுகள் பலவாக மக்களைக் கவர்ந்து வருகிறது. முன்னர் பேசும்படம் இதழில் வெளியான 'கர்ணன் உருவான வரலாறு' பதிவுகளுடன் இவற்றையும் சேமித்து விட்டோம்.
Lots and Lots of Thanks for your great efforts.
அன்புள்ள பம்மலார் சார், வாசுதேவன் சார், ராகவேந்தர் சார், சந்திரசேகர் சார், பாரிஸ்ட்டர் சார் மற்றும் எஸ்வீ (வினோத்) சார்......
தங்கள் எல்லோருடைய அனைத்துப்பதிவுகளையும் பார்த்து, பரவசமடைந்து மகிழ்கிறேன். அனைத்தையும் தனித்தனியே பாராட்டி மகிழ என் மனம் துடிக்கிறது. ஆனால் எனது கணிணியில் பதிவுகளை இடுவது பெரிய பகீரதப்பிரயத்தனமாக இருக்கிறது. ஒரு பதிவை இட குறைந்தது முப்பது நாற்பது முறை போராட வேண்டியுள்ளது. எப்போது பதித்தாலும் 'the page cannot be displayed' என்ற வாசகம் வந்து பாடாய் படுத்துகிறது.
எனவே இதையே அனைவரது அற்புதப்பதிவுகளுக்கும் எனது பாராட்டாக, நன்றியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
பம்மலார் சார், 'குமுதம்' இதழுக்கு தலைவர் அளித்திட்ட மனக்குமுறல் பேட்டியை தாங்கள் வெளியிட்டிருப்பது டைம்லி ஆக்ஷன். சித்தூர் ராணி பத்மினி முதல் வெளியீடு மற்றும் என்னைப்போல் ஒருவன் மறு வெளியீடு விளம்பரங்கள் தூள்.
ராகவேந்தர் சார், தங்கள் அனைத்துப்பதிவுகளுக்கும் பாராட்டுக்கள்.
சந்திர சேகர் சார், திருச்சி விழா நிகழ்ச்சிகளும், சிலைதிறப்புக்கான முயற்சிகளும் அற்புதம். பேரவையின் சீரிய முயற்சியால் விரைவில் தலைவரின் கம்பீர சிலையை திருச்சி மக்கள் தரிசிக்க வழிபிறக்கும் என்று நம்புவோம்.
எஸ்.வீ.சார், நடிகர்திலகம் திரியிலும் மக்கள் திலகம் திரியிலும் தங்கள் ஆவணப்பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை. தங்கள் சேவை தொய்வின்றித் தொடர வாழ்த்துக்கள்.
அன்புள்ள வாசுதேவன் சார்,
இரத்தத்திலகம் படக்காட்சியும், இதயக்கனி இணையத்தின் சிறப்பு ஏடும், புதுவையில் நடந்த நடிகர்திலகத்தின் அஞ்சலி நிகழ்ச்சியின் நிழற்படங்களும் அருமையாக உள்ளன.
பதிப்பித்து அனைவரையும் மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி.
Saw Ananada Kanner . A wonderful portrayal of typical Middle class Brahmin , central Government officer , who life is Topsy turfy when he retires and plans to conduct his daughter's marriage. A very much underestimated movie.
NT with his wife Lakshmi celebrates his 30th Wedding anniversary . He has 3 sons & a Daughter. Elder one Rajeev, next Nizhalgal Ravi, last son Ravi Ragavendar , No idea of daughter name. Rajeev is married to visu's daughter (who is Lakshmi's brother). Thengai seeks alliance for his boy with NT daughter just @ that time Problem crops how everything is sorted out is told in a griping heart touching climax.
His brahmin acting is different from Vietnam veedu, Gouravam, Manitharum Deivamagalam, Partichaiku Neramachu.
Those of you who says NT acting after 80's is not like that of 60-70's must watch it.
Sheer brilliant, Mature performance.
Story, Dialouge by BArath. By the way can anyone say who is he?
Produced by Sivaji Films
Directed by: K. Vijayan
By the way congarts this thread is really good. What happened to NT thread 10th part
one million likes...............................raghulram..... ............Quote:
Those of you who says NT acting after 80's is not like that of 60-70's must watch it.
259. ஆனந்தக் கண்ணீர் Anandha Kanneer
http://3.bp.blogspot.com/_F0A8FGQxSp...aKanneer02.jpg
வெளியான நாள் - 07.03.1986
நீளம் – 3876 மீட்டர்
பாடல்கள்
1. எங்கள் குடும்பம் –
2. அம்மா நீ வாழ்க
3. நினைத்தால் நீ வர வேண்டும்
4. மாலை போடுற கல்யாணமா
இசை – கணேஷ் ( சங்கர்)
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், லட்சுமி, விசு, வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், ராஜீ்வ், நிழல்கள் ரவி, ஜெயஸ்ரீ, ராஜலட்சுமி, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஜனகராஜ், ஒரு விரல் கிருஷ்ணாராவ், சுப்புணி,
கதை வசனம் – பரத்
பாடல்கள் – வாலி, புலமைப் பித்தன்
குரல்கள் – எஸ்.பி.பாலா, மலேசியா வாசுதேவன், பி.சுசீலா, வாணி ஜெயராம், ரமேஷ்
ஒலிப்பதிவு வசனம் – மூர்த்தி
ரிக்கார்டிங் மற்றும் ரீரிக்கார்டிங் – ஜே.ஜே.மாணிக்கம் ஏவி.எம.ஈ.தியேட்டர்
கலை – தோட்டா அசோஸியேட்ஸ்
ஒப்பனை
ரங்கசாமி, கதிர்வேலு, கோதண்டபாணி, நாஞ்சில் ராஜேந்திரன், ராஜன், வாசுதேவன், சாந்தாராம், ராம்பாபு
நடனம் தாரா
டிசைன்ஸ் – ஈஸ்வர், விளம்பரம் – எலிகண்ட், டைட்டில்ஸ் – ஜெயராமன்,
ஸ்டில்ஸ் – திருச்சி அருணாச்சலம்
போஸ்டர் பிரிண்டிங் – கணேஷ் லித்தோ பிரஸ்
ஸ்டூடியோ – அரசு ஸ்டூடியோஸ்
பிராசஸிங் – பிரசாத் பிலிம் லேப்
தயாரிப்பு நிர்வாகம் – ஆர்.கே.என். மோகன்தாஸ்
எடிட்டிங் – செழியன்
ஒளிப்பதிவு – திவாரி
தயாரிப்பு - சாந்தி நாராயணசாமி, டி.மனோகர்
திரைக்கதை இயக்கம் – கே. விஜயன்
Anandha Kanneer has been released on DVD by Moserbaer and Raj Video Vision. RVV has uploaded the film on Youtube.
Part 1
http://youtu.be/ihArhStdAF8
Part 2
http://youtu.be/T9fqMMYeVB0
Part 3
http://youtu.be/uvXEn7DohYg
Part 4
http://youtu.be/ifrvVHFqwa4
Part 5
http://youtu.be/0-_51xi-P90
Part 6
http://youtu.be/WuYmGG20Va0
Part 7
http://youtu.be/Yqy0vFDouk4
Anadha Kanneer
Part 8
http://youtu.be/SE9yaxyWj1w
Part 9
http://youtu.be/0LAQvMc3kI4
Part 10
[video]http://youtu.be/GHjUD8WAHOo[video]
Part 11
http://youtu.be/Y2tJWbwZWw0
Part 12
http://youtu.be/HCdQoagNDM4
Part 13
http://youtu.be/8SEbZb6MPcc
Part 14
http://youtu.be/YdBCHWvLBiQ
Anandha Kanneer full movie uploaded by Pyramid
http://youtu.be/i_CV_Af7Mpo
புதுவை மாநிலத்தில் இதய தெய்வத்திற்கு நினைவாஞ்சலி.
நாள் : 21-7-2012
மனிதப் புனிதரின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி.
தலைவரின் திருவுருவப் படத்திற்கு கற்பூர ஆராதனை.
பள்ளிச் சிறார்களுக்கு நலத்திட்ட உதவிகள்.
அனைத்தும் ஒலி-ஒளிக் காட்சியாக.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=xeJYMLjNZ_M
அன்புடன்,
வாசுதேவன்.
ஆனந்தக்கண்ணீர் அனைத்து விவரங்கள் - ரசிக வேந்தர்.
ஆனந்தக்கண்ணீர் வீடியோக்கள் - ரசிக வேந்தர்
ஆனந்தக்கண்ணீர் முழுப்படமும் காண உதவி - ரசிக வேந்தர்.
அனைத்திற்கும் நன்றி - வாசுதேவன்.
God amazing quick response Ragavenderan sir thank u for recognizing small people like me
அன்புள்ள ராகவேந்தர் சார்,
'ஆனந்தக்கண்ணீர்' திரைக்காவியத்தை ஆனந்தமாக தரிசித்தோம். ஏற்கெனவே பலமுறை பார்த்த படமாயினும், இப்போதும் புதியதாகவே இருக்கிறது. மைலாப்பூர் கச்சேரி ரோடு போஸ்ட் ஆஃபீஸ் போஸ்ட் மாஸ்ட்டர் பார்ப்பதற்கு அச்சு அசலாக நடிகர்திலகம் போலவே இருக்கிறார். மனைவி லட்சுமியுடன் போஸ்ட் மாஸ்ட்டரின் புரிந்துணர்வும் நெருக்கமும் மிக மிக அருமை.
இப்படத்தில் விசுவை நினைத்தால் எனக்கு சட்டென நினைவுக்கு வருவது, அவருடைய அறுவைப்பேச்சுக்கு பயந்து டாக்ஸிக்காரர்களும், ஆட்டோக்காரர்களும், பழக்கடை வண்டிக்காரர்களும் திடீரென மாயமாய் மறைவது.
நல்ல படம், ஆனால் மக்களால் அதிகம் கண்டுகொள்ளப்படாத படம்.