குணசித்திர நடிகை ஆச்சி மனோரமா அவர்கள் இரவு 12.10 a.m. க்கு காலமானார். அன்னாரது ஆன்மா சாந்தி அடைவதாக.
Printable View
குணசித்திர நடிகை ஆச்சி மனோரமா அவர்கள் இரவு 12.10 a.m. க்கு காலமானார். அன்னாரது ஆன்மா சாந்தி அடைவதாக.
May her soul rest in peace.
Here is a song in her memory:
From Bommalattam (1968)
vaa vaathiyaare veettaaNde........
http://www.youtube.com/watch?v=oiqJrRG1b7s
நடிகர்திலகத்தின் தீவிர பக்தையாகவும் அவருடன் தோன்றிய படங்களையே தனது வாழ்நாள் சாதனையாகவும் பல சந்தர்ப்பங்களில் நினைவு கூர்ந்து பெருமைப்
படுத்திய மனோரமா அவர்களின் ஈடு செய்ய முடியாத இழப்புக்கு எங்கள் நினைவஞ்சலியை இறைவன் பாதங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்
http://i62.tinypic.com/jqgkz8.jpg
மாபெரும் நகைச்சுவை நாயகி, சகலகலாவல்லி நடிகை மனோரமாவின் மறைவு மனதை ரணமாக்கிவிட்டது. ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவர் செய்த சாதனைகள் கொஞ்சநஞ்சமல்ல. பொம்பளை நடிகர் திலகம் என்னும் அளவிற்கு தன் நடிப்பால் தமிழக மக்களைக் கவர்ந்தவர் அவர்.
அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
சகல கலா வல்லி நகைச்சுவை நடிப்பில் பல பரிமாணங்களைக் காட்டிய ஆச்சி மனோரமாவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு..
அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக..
நகைச்சுவை நடிகை, கதாநாயகி, பாடகி, வில்லி, டான்ஸர், என்று பல அவதாரங்கள் எடுத்தவர் மனோரமா.
'மஞ்சக் கயிறு... தாலி மஞ்சக் கயிறு'
என்று 'உனக்கும் வாழ்வு வரும்' திரைப்படத்தில் மனோரமா தள்ளுவண்டியில் தாலிக் கயிறு விற்று பாடிய பாடல் மிகவும் புகழ் பெற்றது.
அது போல,
'வாழ நினைத்தால் வாழலாம்' படத்தில் 'கானாங் குருவிக்குக் கல்யாணமாம்' என்ற வாய் குழறிப் பாடும் பாடலும் அப்போது ரொம்பப் பிரசித்தம்.
'நீதி'படத்தில் ஜெயலலிதாவைவிட மனோரமாவே பிரதானம். இவரே நடிகர் திலகத்தின் ஜோடி என்னுமளவிற்கு நடித்திருப்பார். இவர் நடிகர் திலகத்திடம் 'ராசா... ராசா' என்று உருகுவது அப்படியே நிஜம். நடிப்பல்ல.
'காசேதான் கடவுளடா' படத்தில் ஆங்காரம் மிகுந்த பணக்காரியாய் நகைச்சுவை மிளிர இவர் நடித்தது யாராலும் மறக்க முடியாது.
'தில்லானா மோகனாம்பாள்' பற்றி சொல்லவும் வேண்டுமோ!
சட்டைக்காரியாக கவுன் அணிந்து ஆங்கிலம், தமிழ் கலந்து பேசி அசத்த மனோரமாவை விட்டதால் வேறு யார்? இந்த மாதிரி வேடத்தில் பல படங்கள்.
'ஜாம்பஜார் ஜக்கு'வைக் காதலிக்கும் சென்னைத் தமிழ் பேசும் 'சைதாப் பெட்டைக் கொக்கு' ஆச்சியை வேறு யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
ஆச்சியுடன் ஓரிருமுறை பேசி பழகிய சம்பவங்கள்....அவருக்கு தேநீர் வாங்கிக் கொடுத்த சம்பவங்கள் இப்போது நினைவுக்கு வந்து மிகுந்த துயரத்தில் ஆழ்த்துகின்றன. அவரிடம் 'வா வாத்யாரே ஊட்டாண்டே' பாடிக் காட்டி, அவர் வாய்விட்டு சிரித்ததை இன்று நினைத்தால் அழுகை பீறிடுகிறது. 'டிராக்டர் பொன்னம்மா'வை என் வாயால் புகழக் கேட்டு அவர் சந்தோஷமடைந்தது பசுமையாக நினைவில் இருக்கிறது.
'தியாகம்' படத்தில் ஐயராத்து மாமியாக வந்து சிலம்ப சண்டை போட்டு எப்படி அசத்துவார்!
நேற்று கூட சினிமாவில் கூத்து, நாடகம் தலைப்பிட்டு பதிவுகள் ஆரம்பித்ததும் இவரை மனதில் கொண்டே.
'ராஜாபார்ட்'டில் இவர் நாடக நாயகியாக வலம் வந்து பிகு பண்ணிக் கொள்வது அருமையோ அருமை.
அதையே பின்னால் 'எமனுக்கு எமன்' படத்தில் எமன் நடிகர் திலகத்தை 'ராசபார்ட்டு... ராசபார்ட்டு' என்று காலம் கடந்தும் கன் டின்யூட்டியாகத் தொடர்வது அற்புதமல்லவா!
திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் 'சந்திரோதயம்' படத்தில் நாகேஷை காசிக்கு ஓட வைக்கும் மனைவியாக அடிதூள் ஆச்சி.
நாகேஷுடன் எத்தனை படங்கள்! சோவுடன் ஜோடி சேர்ந்து அமர்க்களம். 'முகம்மது பின் துக்ளக்'கில் துக்ளக் நியமிக்கும் பெண் அமைச்சர். தேங்காயுடன் சேர் ந்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பாடல். சுருளியுடன் அனாயாசமாக ஜோடி சேர்ந்து இணை....கவுண்டமணியுடன் ஜோடி. மூர்த்தியிளிருந்து ஐ.எஸ்.ஆர் வரை. அடுக்கிக் கொண்டே போகலாம்.
எல்லாவற்றுக்கும் சிகரமாய் நடிகர் திலகத்துடன் இணைந்து 'ஞானப்பறவை'. நெடுநாள் ஆசைக்கனவு நிறைவேறியது இந்த ஞானப் பெண்ணுக்கு.
நடிகர் திலகத்தின் மறைவுக்கு சொந்த சகோதரியாய் இருந்து கதறியவர். எங்களைக் கதற வைத்தவர். இன்று பதறவே வைத்து விட்டார்.
இனி விண்ணுலக தேவர்களுக்கு சோகமில்லை. ஆச்சியின் நகைச்சுவையால் ஆண்டவர்கள் அனைவரும் ஆனந்த சிரிப்பிலே இனி மிதப்பார்கள். நமக்குத்தான் இனி ஆச்சி இல்லை. ஆனால் அவரின் திரையுலக ஆட்சி என்றும் நிலையானது.
பாதிப் பாடலாக 'மஞ்சக் கயிறு'
https://youtu.be/sJ42XaRPmJE
'கானாங் குருவிக்குக் கல்யாணமாம்'
https://youtu.be/WiPgv2Sh9Qw
Radharavi at Aachi Manorama Death | Funeral Video
https://youtu.be/jFh5AHOhV4Y
AACHI MANORAMA JOURNEY IN CINEMA
https://youtu.be/xzt5atKVMzM
Aachi Manorama's Last Speech Before Her Death
https://youtu.be/P0HoxHw6Q0o