சுதா, நீங்க சொல்வது சரிதான்...Quote:
Originally Posted by sudha india
ரொம்ப இக்கட்டான நேரத்தில் நேற்று போட்டு சொதப்பிவிட்டனர்.
அபி வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறாள். தொல்ஸ் பற்றி விவரம் அவளுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சரி என்ன முடிவடுக்கப்போகிறாள் என்பதை நேற்று காண்பிப்பார்கள் என்று பார்த்தால், ஒரே ஏமாற்றம்...
எடுத்த எடுப்பில், அலமேலு விக்கல் எடுத்து தண்ணீர் கேட்க அதை வேலைக்காரி கொண்டுவர தாமதமாக, பின்னர் தன் மருமகள் சங்கீதாவின் அறைக்குப்போக, அவள் பார்த்து முறைக்க... (விளம்பரம்)
விளம்பரம முடிந்து பாஸ்கர் வர, அவனிடம் அலமேலு விவரம் சொல்ல, அவனும் போய்ப்பார்க்க, இதனிடையே அலமேலுவிடம் திருவேங்கடம் தேர்தல் நிதி கேட்டு வர, அவள் மழுப்ப (விளம்பரம்)
மூன்றாவது பாகத்தில், தோழரின் அலுவலகத்தில் தோழரும் ஆனந்தியும் ஏதோ ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையில் வந்த செய்தியைப்பற்றி சிலாகித்துப்பேச, அப்போது அங்கு தொல்ஸ் வர, ஆனந்தி அங்கிருந்து போக, தோழரின் இடத்தைவிட்டு தொல்ஸ் காலிசெய்யப் போவதாகச் சொல்ல, தோழர் வருத்தத்துடன் விடை கொடுக்க... (நேற்றைய எபிசோட் முடிந்தது).
இப்படியே போனால், நாளுக்கு நாள் பெருகிவரும் சிக்கல்களுக்கு எப்போது, எப்படி விடை சொல்லப்போகிறார் தொல்ஸ் (திருச்செல்வம்...??).