பஞ்சணை வந்தாள் அவள் பேர்
சாந்தி.
வாவ். பாலா தி கிரேட்
Printable View
'மஞ்சள் இட்ட நிலவாக'
அற்புதமான பாடல். சுசீலாவால் மட்டுமே முடிந்த ஒன்று. நன்றி ராகவேந்திரன் சார்.
http://i.ytimg.com/vi/hLKb4tChqUU/0.jpg
குத்தால அருவியில் குஜால் பாட்டு
ராஜேஷ் சார்!
சித்தி, சிக்கம்மா என்று 'பின்னி' எடுக்கிறீர்கள்.
அனைத்தும் அருமை. நீங்கள் திரியின் பெருமை.
வாசு சார், ஆம் அந்த நடிகர் டி.கே.பாலசந்தரின் தான்
எனக்கு எப்பவுமே முஸ்தபா மற்றும் இவருக்கு சிறு குழப்பம் உஇண்டு
இவர் எம்.ஜி.ஆருக்கு தம்பியாக ஒரு படத்தில் நடித்திருந்தார்
இதோ இவரும் ஷைலஸ்ரீயும் பாடும் மலையாள டூயட்
மென்குரலோனும், இசையரசியும்
http://www.youtube.com/watch?v=ylWpNW7FfO0
வணக்கம் ராஜேஷ் சார்.
நன்றி!
இதே போல நம் அருமைப் பாடகி 'கஸ்தூரி விஜயம்' திரைப்படத்தில் ஒரு பாடலை பாடி அசத்தோ அசத்து என்று அசத்தியிருப்பார்.
கே.ஆர்.விஜயா பாடுவதாக அமைந்த இப்பாடல் காட்சி நம் தமிழ்நாட்டு திருமணச் சடங்குகளை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது.
மங்களகரமாக ஒலிக்கும் இசையரசியின் இந்தப் பாடல் என் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று.
'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு'
'தம்பதிகள்' உச்சரிப்பு அருமை. (மாப்பிள்ளையாக நடிப்பவரை எங்கு பிடித்தார்கள்? அப்படியே 'சோளக் கொல்லை' பொம்மை மாதிரியே இருக்கிறார். ஆனால் உறுத்தவில்லை.)
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=MuYQxWBEsB4
ராஜேஷ் சார்
தங்கள் விளக்கத்திற்கு நன்றி.
டி.கே. பாலச்சந்தர், சௌகார் ஜானகியின் ஜோடியாக அவள் யார் படத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் உள்ள டூயட் பாடல் தான் ஏ.எம்.ராஜா பாடிய பட்டுப்பூச்சிப் போலும் ராஜா.
வாசுதேவன் விஜயம் கஸ்தூரி விஜயத்துடன் மங்கலகரமாக வாழ்த்துக்களுடன் தொடங்கியுள்ளது. சூப்பர்... சார்...
வாசு சார், தங்களை நடிகர் திலகம் திரி ரொம்பவுமே மிஸ் பண்ணுகிறது...
ஒன்று கவனித்தீர்களா
புன்னகை அரசிக்கு லேடி எம்ஜிஆர் என்ற நினைப்பு வந்து அக்கிரமங்களைத் தட்டிக் கேட்பது, ஏழைகளுக்காகப் போராடுவது, பெண் உரிமை காப்பது என்று ஹீரோயின் சப்ஜெக்ட்டாக நடித்த படங்கள் நிறைய.
http://www.5eli.com/Lyrics/wp-conten...uriVijayam.jpg
திருடி
வாயாடி
மகராசி வாழ்க
கஸ்தூரி விஜயம்
மேயர் மீனாட்சி
ரோஷக்காரி
கியாஸ்லைட் மங்கம்மா
ஆயிரத்தில் ஒருத்தி
என்ன முதலாளி சௌக்கியமா
கண்ணம்மா
நாடகமே உலகம்
நத்தையில் முத்து
சபதம்
இதுவல்லாமல் நிறைய சாமி படங்கள் (நம்ம வீட்டு தெய்வம் மாதிரி)
'
என்று ஹீரோயின் ஓரியண்டெட் சப்ஜெக்டாகவே நடித்தார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், அவினாசி மணி, மதுரை திருமாறன் புண்ணியம் கட்டிக் கொண்டார்கள்.
ஆனால் எல்லாவற்றிலும் பாடல்கள் அருமையாக இருக்கும் என்பது ஒரு சிறப்பு.
கண்ணதாசன் நினைவுகள்-3
கவிஞரின் கதாநாயகர்கள் சிறந்த வர்ணனையாளர்கள். அவன் நாயககிகள் கிட்டத்தட்ட நான்கு குணங்கள் கொண்டவர்கள்தான். அவர்கள் லேசாக எட்டி பார்ப்பது தங்கள் நாயகர்களுடன் சேர்ந்து பாடும்பொழுது மட்டும்தான்.
வாயின் சிவப்பு விழியிலே மலர்கண் வெளுப்பு இதழிலே
என்று அவன் கூறும்பொழுது கொஞ்சம் வெளியில் வந்து
இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே கூவாதே சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே என்பார்கள்.
ஆனால் இவன் நாயகர்கள் என்ன பிரமாதமாக வருணிப்பார்கள் தெரியுமா?
எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில்
ஆடுதம்மா காதல் கொண்ட மனது
என்பதோடு நில்லாமல்
முன்னிரண்டு மலர் எடுத்தாள்
என் மீது தொடுத்தாள்
முக்கனியும் சர்க்கரையும்
சேர்த்தெடுத்துக் கொடுத்தாள் என்கிறான் ஒருவன். என்ன ஒரு ரசனை அவனுக்கு.
கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவோ?
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவோ?
அம்பிகாபதி அணைத்த அமராவதி
சென்றபின்னர் பாவலர்க்கு நீயே கதி
என்று நாயகியை ஒருவன் தலையில் வைத்துக் கொண்டாடுகிறான்.
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா -அவள்
தளதள என்று ததும்பி நிற்கும் பருவமடா
என்று இன்னொருவன் காதல் Phd வாங்கி விடுவான் போல வருணிக்கிறான்.
இடையழகு மயக்கம் தந்தது
இசையழகு மொழியில் வந்தது
நடையழகு நடனம் ஆனது
நாலழகும் என்னை வென்றது. என்று ஒருவன் பட்டியல் போடுகிறான்.
கொடித்தேன் இனிஎங்கள் குடித்தேன்
என் ஒரு படித்தேன் பார்வையில் படித்தேன்
துளித் தேன் சிந்தாமல் களித்தேன்
கைகளில் எடுத்தேன் அழகினை ரசித்தேன்.
என்றும் தனது தேனான வர்ணனையை கொட்டித் தீர்க்கிறான் ஒருவன்.
இந்தப் பாடலும் அதன் சூழ்நிலையும் அதற்குக் கவிஞர் தனது அபாரமான கற்பனைத் திறனையும் புகுத்திய விதம் கூறினால்தான் கண்ணதாசன் ஒரு பிருமாண்டத் கவிஞன் என்பது விளங்கும்
மகாபாரத யுத்தம் முடிந்து அசுவத்தாமன் அத்தனை பாண்டவக் கொழுந்துகளையும் வெட்டி சாய்த்து விடுவான். அபிமன்யு கௌரவர்களின் சூழ்ச்சியால் முதலிலேயே இறந்து விடுவான். உத்தரை வயிற்றில் இருக்கும் பரிட்சித்து மகராஜாவின் உயிரைக் கூட அசுவத்தாமன் ப்ரும்மாஸ்திரம் மூலம் கொல்லப் பார்ப்பான். ஆனால் ஸ்ரீ கிருஷ்ணரால் அந்தக் கரு காப்பாற்றப் படும்.
கொடித்தேன் இனி எங்கள் குடித்தேன் என்ற ஒரே சொல்லான குடித்தேன் என்பதில் மகாபாரதக் கதை முழுவதையும் கவிஞர் சொல்லி முடித்து விடுவார்.
இந்தப் பாடலை கவிஞர் திக் என்று நெஞ்சு துக்கிக்கும் விதமாக முடிப்பார்.
உத்தரை பதிலுக்கு “ இனி தேன் இல்லாதபடி கதை முடித்தேன்” என்று பாடுவாள். மறுநாள் போருக்குப் போகும் அபிமன்யு மீண்டும் திரும்ப மாட்டான் என்பதற்குக் கட்டியங்கூறும் விதமாக அவள் பாடல் அமைந்திருக்கும்.கண்ணதாசன் அபாரமானப் பாடல்களில் இதுவும் ஒன்று.
இன்னொரு நாயகன் உருகும் அழகைப் பாருங்கள்
பால் என்று சொன்னாலும் பழம் என்று சொன்னாலும்
ஏன் என்று தேன் வாடுமே
நூல் கொண்ட இடை இன்னும் நூறாண்டு சென்றாலும்
தேர் கொண்ட ஊர்கோலமே.
வண்ணம் பாட ஒரு வார்த்தை நான் தேடினேன்
எங்கும் தேடி முகம் பார்த்துப் பதம் பாடினேன்.
நிஜமாகவே கண்ணதாசன் வரிகளுக்கு அபிநயம் பிடித்த நாயகர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
காலங்களில் அவள் வசந்தம் என்று வருணிக்கும் நாயகன் போடும் பட்டியல் மிகப் பெரிது.
கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா?- இல்லை
கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா?
செண்டாடும் சேயிழைதானா? தெய்வீகக் காதலிதானா?
செந்தூரம் கொஞ்சும் முகத்தில் செவ்வாய் மின்னும் தேன்மொழிதானா?
என்ற அவனுடைய வர்ணனைபிரவாகம் மலைக்க வைக்கிறது.
இன்னும் கூறிக் கொணடே போகலாம். இவை ஒரு சில மாதிரிகள்தான். கவிஞரை ரசிக்க அவருடனே பயணித்தால் மட்டுமே முடியும்.
ஆண் மயிலுக்குத் தோகை என்பார்கள். கவிஞரின் நாயகர்களுக்குப் பந்தல் போட்டு படரும் வருணனைதான் தோகை.
இப்படி இணைத்த இருவரின் இல்லற வாழ்வினை கவிஞரின் வரிகள் மூலம் நாளை கூறுகிறேன். அப்பொழுதுதானே காதலைப் போற்றிய கவிஞரின் உண்மையான பிறந்தநாளைக் கொண்டாடியது போலாகும்?
முகலே ஆசாம் தமிழில் “அக்பர்”
இந்த பாடல் பதிவிற்கு இசையரசியும், கவிஞர் கம்பதாசனும் மும்பை சென்று அங்கே பாடல்கள் பதிவாயின
என்னை என்றுமே பிரமிக்க வைக்கும் “கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே” பாடல்
ஹிந்தியில் சபையில் இரு பெண்கள் பாடும் பாடலாக ”தேரி மெஹபில் மே” ஷம்ஷத் பேகமும் லதாவும் பாடியது
தமிழில் ஜிக்கியும் இசையரசியும் பாடும் “உந்தன் சபையில் எந்தன் விதியை சோதித்தே ராஜாவே நானும் பார்த்தேனே”
கம்பதாசன் பற்றிய என் கட்டுரை முகனூலில் எழுதியது .. இதோ
பாடலாசிரியரை அறிவோம் 11- கவிஞர் கம்பதாசன்
எனக்கு இவர் பெயரை அறிமுகம் செய்தது இலங்கை வானொலி ஆம் “கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே “ என்ற அக்பர் படப்பாடல் மூலம்.
ஆம் இவரும் 1940லிருந்தே பாடல் எழுதியுள்ளார். கண்ணதாசனுக்கு முன்னால் இருந்தவர்களில் இவர் மிக முக்கியமானவர்.
கம்பதாசன் அவர்கள் 1916’ல் திண்டிவனம் அருகே ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார் இயற்பெயர் ராஜப்பா, கம்பன் மீது கொண்ட ஈர்ப்பு/ஆர்வத்தின் காரணமாக
தன் பெயரை கம்பதாசன் என்று வைத்துக்கொண்டார்.
படிப்பை விட நாடகங்களில் நடிப்பது அதில் பாட்டெழுதுவது என அவரது ஆர்வம் வேறு பக்கம் இருந்தது. ஆர்மோனியமும் வாசிப்பாராம்.
அதே சமயம் தொழிலாளர் கொள்கைகளிலும் நாட்டம் உடையவராக இருந்தவர் அதனால் எழுதிய பாடல்களில் முற்போக்கு கொளகைகளில் புகுத்தி எழுதுவார்.
நாடகங்களில் பாட்டு எழுதி வந்த இவரை திரைப்படத்துறையும் இழுத்துக்கொண்டது. ஆம் 1940’ல் வெளிவந்த வாமன அவதாரம் என்ற படத்திற்கு முதலில் பாட்டெழுதினார்.
அதை தொடர்ந்து வேணுகானம், பூம்பாவை படங்களுக்கு எழுதினார்.
வேணுகானம் திரையில் இவர் எழுதிய எப்ப வருவாரோ பாடலை என்.சி.வசந்தகோகிலம் பாடினார்.
1948’ல் வெளிவந்த ஞானசெளந்தரி (ராஜம்மா,மகாலிங்கம் நடித்த படம்)படத்தில் நிறைய பாடல்கள் எழுதினார். இன்றும் நம் மனதில்
இனிமையாக ஒலிக்கும் “ஆதியே இன்ப ஜோதியே” பாடல், ஜென்ம பயன் அடைந்தேனே, ஜீவிய பாக்கியமே, காதலில் காணும் இன்பம்,
குல மாமணி, மன மோகனனே என்ற பாடல்கள் எல்லாமே இனிமையானவை அழகு தமிழில் இவரது பாடல்கள்..
1949’ல் வெளிவந்த பி.யு.சின்னப்பாவின் மங்கையர்க்கரசி படத்தில் இவர் இயற்றிய பாடல்கள் மிகவும் அருமையானவை
“பார்த்தால் பசி தீரும்”,விண்ணில் பறந்து செல்லும் வெண்புறாவே, மிகவும் பிரபலமான “காதல் கனிரசமே” எல்லாமே மறக்க முடியாத பாடல்கள்.
1951’ல் வெளிவந்த வனசுந்தரி படத்தில் இடம்பெற்ற காணாத காதல் பேரின்பம்,கண்ணிலே விளையாடுது போன்ற பாடல்கள் இவரது
தமிழுக்கு எடுத்துக்காட்டு.
50’களில் நிறைய புகழ்பெற்ற ஹிந்தி படங்கள் தமிழ் மொழிமாற்றம் செய்யப்பட்டன் .. ஆம் வானரதம், அவன் போன்றவை
மிகவும் பிரபலம்
அவன் (ஆன் ஹிந்தியில்)1953’ல் வெளிவந்த ப்டத்தில் எல்லா பாடல்களையும் எழுதியது இவரே
“கல்யாண ஊர்வலம் வரும் “ ஜிக்கி குரலில் ஒலித்த பாடல் இன்றும் ஹிந்தி பாடலுக்கு இணையான பாடல்.
1956'ல் வானரதம்(ஹிந்தியில் உதான் கோட்லா), இதில் லதா மங்கேஷ்கர் தமிழில் பாடியிருப்பார்.
எந்தன் கண்ணாளன்,என்னை கண்டே ஏங்குவாய்,என் உள்ளம் விட்டு ஓடாதே, ஆசை தாரை போன்ற பாடல்கள்
இவரைத்தவிர பாலசரஸ்வதி பாடிய சுடர் தாரை சபையில், நெஞ்சின் நிலமை என்ன சொல்வேன்,
டி.ஏ.மோத்தி பாடிய பாடல்கள் என வானரதம் பாடல்கள் அனைத்தும் தமிழ் மக்களின் மனதை மயக்கிய பாடல்கள்
இவை எல்லாவற்றையும் எழுதியது கம்பதாசன் அவர்கள்.
சினிமா பாடல்கள் எழுதிக்கொண்டே கவிதைகளையும், நூல்களையும் எழுதி தள்ளினார்.
1961’ல் ஹிந்தியில் பிரபலமான முகலே ஆசாம் தமிழில் அக்பர் என்று மொழி மாற்றம் செய்யப்பட்டது. இதன் பாட்லகள்
மும்பையில் தமிழுக்காக மீண்டும் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. மும்பைக்கு கம்பதாசனும்,சுசீலாம்மாவும் சென்றனர்.
அனைத்து பாட்லகளும் அங்கே திரு நெளஷாத் அவர்கள் ஒலிப்பதிவு செய்ததை இசையரசி மனதோடு மனோவில் நினைவு கூர்ந்தார்.
லதாவின் குரலில் ஒலித்த அனைத்து பாடல்களும் இசையரசியின் குரலில் ஒலித்தது.
காதல் கொண்டாலே பயம் என்ன,ஆற்றின் கரைதனிலே கண்ணன் என்னை கேலி செய்தான்,
ஜிக்கியுடன் உந்தன் சபையில் எந்தன் விதியை என்ற பாட்லகள் அருமையாக அமைந்தது,
மைல்க்கல்லாக அமைந்த பாடல் “கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே” பாடலின் வரிகள் ஹிந்தி பாடல் என்ன சூழலில் ஒலித்ததோ
என்ன அர்த்தம் பொதிந்து வந்ததோ அதே பலத்தை தமிழில் அருமையாக கொண்டு வந்திருப்பார் கம்பதாசன்.அதை இசையரசி பாடியிருக்கும் விதம்
வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாது .. அருமை அருமை.
காச நோயின் காரணமாக 1973’ம் ஆண்டு இந்த தமிழ் கவி இந்த உலகத்தை விட்டு மறைந்தது.
கம்பதாசன் தமிழ் நாட்டின் முதல் தர கவிஞர்கள் வரிசையில் உள்ளவர்... இவரைப்பற்றி இன்று பலருக்கு தெரியாது.
அறிமுகம் செய்வதே இந்த தொகுப்பின் நோக்கம்..
http://www.youtube.com/watch?v=gctkrVBkpKQ
அருமை யுகேஷ் சார். நன்றிகள் பல.
/கம்பதாசன் பற்றிய என் கட்டுரை முகனூலில் எழுதியது .. இதோ/
அருமையான கட்டுரை. எனக்குப் பிடித்த பல விஷயங்கள் இருக்கின்றன. நடிகர் திலகம் திரியில் கூட சமயம் கிடைக்கும் போதெல்லாம் 'முகலே ஆசாம்' படத்தைப் பற்றி நான் குறிப்பிட மறந்ததே இல்லை. அந்த அளவிற்கு என்னை ஆட்கொண்ட படம்.
நம் திரியில் கூட 'கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே' (அக்பர்), 'எந்தன் கண்ணாளன்' (வானரதம்) பாடல்களை 'இன்றைய ஸ்பெஷலா'க தந்திருக்கிறேன்.
நன்றி ராஜேஷ் சார்.
மதுபாலாவின் மயக்கும் அந்த 'pyar kiya to darna kya' வைப் பற்றி அங்குலம் அங்குலமாக அலச ஆசை. அதை பற்றிய அபூர்வ விஷயங்களைப் பதிவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அயல்நாடுகளில் இருந்து இப்பாடலுக்காகவே தருவிக்கப்பட்ட வைர வைடூரியங்கள் வரை. ...ஆறுமாத காலம் படமாக்கப்பட்ட விந்தை வரை.
'முகலே ஆசாம்' முழுதும் டிஜிட்டல் கலர் செய்யப்பட்ட போது 'அக்பர்' படத்துக்காக தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட அருமையான பாடல்களை தூக்கிவிட்டு, எக்ஸ்ட்ரா பாடகர்களை வைத்து மீண்டும் பாட வைத்து பாடல்களையே கொலை செய்து விட்டார்கள் ராஜேஷ் சார். சகிக்கவே இல்லை.
கலைஞர் தொலைக்காட்சியில் ஆவலாகப் பார்க்க உட்கார்ந்து நொந்து போனேன்.
வாசு சார்
1984ல் ரேகா நடித்த படம் ''உத்சவ் ''. மிகவும் பிரபலமான படம் .
ரேகாவின் எழிலான தோற்றம் - நகை அலங்காரம் கண்ணுக்கு விருந்து ,
http://youtu.be/c4AXOmUhtUc
http://antrukandamugam.files.wordpre...ss-2.jpg?w=471http://s2.dmcdn.net/CiX1C.jpghttp://i1.ytimg.com/vi/O3HbgyxHcW4/default.jpg
நீலகிரி எக்ஸ்பிரஸ் 1968
இயக்கம் திருமலை மகாலிங்கம்
ALS Production
இசை மெல்லிசை மாமன்னர் ராமமூர்த்தி
ஜெய் சங்கர்,சோ,விஜய நிர்மலா,விஜயலலித,அசோகன்,ராமதாஸ் ,ராகவன் மற்றும் நிறைய சண்டை பயிற்ச்சி நடிகர்கள்
கதை களம் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் நிலகிரி எக்ஸ்பிரஸ்.பட ஆரம்பத்தில் ராகவன் 50000 பெறுமானமுள்ள நகைகள் உடன் அந்த ரயிலில் பயணம் செய்கிறார் அவருடன் பயணம் செய்யும் சக பயணி சோ ,விஜயலலிதா.விஜயலலிதா சோவை மயக்கி அரக்கோணம் நிலையத்தில் இறக்கி உணவு வாங்க சொல்லி விட்டு காணமல் போய் விடுகிறார் இதற்கு நடுவில் ராகவன் கொலை செய்யபடுகிறார். வழக்கம் போல் CID சங்கர் இதை துப்பு துலக்கி சோ வெகுளி .அவர் கொலை செய்யவில்லை என்று தெரிகிறது
இறுதியில் உண்மை குற்றவாளி யார் என்று கண்டு பிடிக்கிறார்
5 பாடல்கள் படத்தில்
1."வாலிபம் ஒரு வெள்ளி தட்டு ' கல்லூரி மாணவர்கள் பாடும் ரயில் பாடல் (நமது சு எ சு பாடல் போன்று ) - பாடகர் திலகம் மற்றும் ஈஸ்வரி குரல்களில்
2.அருமையான பரத நாட்டிய பாடல் - ஸ்ரீவித்யா பானுமதி நடனம்
'திருத்தணி முருக தென்னவ தலைவா ' சூலமங்கலம் மற்றும் சுசீலா குரல் என்று நினைக்கிறன்
3.'நான் கலைஞனல்ல உன்னை சிலையாகக ' பாடகர் திலகம் உடன் ஈஸ்வரி ஹம்மிங் மட்டும் (ஜெய் டூயட் சாங் )
4.'கல்யாண பெண்ணை கொஞ்சம் முன்னும் பின்னும் பாரு '
சோ பெண் வேடம் அணிந்து நடனம் ஆடுகிறார் - சுசீலா மற்றும் ஈஸ்வரி குரல்களில்
5. இறுதி பாடல் cabarat டான்ஸ் 'கடவுள் மதுவை கண்களில் ஆட வைத்தான் ' ஈஸ்வரி குரல்
சோவின் நகைச்சுவை கொஞ்சம் நன்றாக இருந்தது
இதே படம் ஹிந்தியில் 1970 இல் ராஜேஷ் கண்ணா ஹீரோஆக நடித்து
தி ட்ரைன் என்று வெளியானது
நீலகிரி எக்ஸ்பிரஸ் படமே மலையாள கொச்சின் எக்ஸ்பிரஸ் 1967 (பிரேம் நசிர் ஹீரோ) ரீமேக்
http://www.malayalamcinemahistory.co...hinExpress.jpghttp://upload.wikimedia.org/wikipedi...Train_1970.jpg
http://www.youtube.com/watch?v=78fMesacCzU
http://www.youtube.com/watch?v=O3HbgyxHcW4
நேற்று சன் லைப் தொலை காட்சி இந்த திரை படத்தை ஒளிபரப்பினார்கள்
நாம் இதன் பாடல்களை அலசவில்லை என்று நினைவு
ராஜேஷ் வாசு அவர்களே
நினைத்தாலே இனிக்கும் ''எங்கேயும் எபோதும் ' பாடலை ரீமிக்ஸ் செய்யும் போது பாடகர் பாலாவின் அங்கலாயிப்பு நினைவிற்கு வருகிறது
அந்த பாடலின் இடையே திரு யோகி என்பவர் என்ன பாடுகிறார் என்பதே புரியாது . இதை பாடகர் பாலா கூட விரும்பவில்லை. இருந்தாலும் காலத்தின் கட்டாயம் என்று பேசாமல் இருந்து விட்டார் என்று ஒரு பேட்டி படித்த நினைவு
இன்று 'கலைநிலவு' ரவிச்சந்திரன் அவர்களின் நினைவு தினம்.
பெரியவர், சிறியவர், ஆண்கள், பெண்கள் என்றில்லாமல் அனைவரையும் கவர்ந்த அந்தக் கால ரஜினி.
வண்ணத்திலேயே குழைந்த வடிவழகன்
இளைஞர்களை இன்றுவரை ஈர்ப்பவன்
வெள்ளி முளைக்கும் போதே வெள்ளி விழாக்கள் தந்தவன்
விஸ்வநாதனிடம் வேலை கேட்டு போராடி 'இதயக் கமல'ங்களில் அமர்ந்த 'வாலிப விருந்த'ன்.
ரவி என்ற இரண்டெழுத்து அழகு என்ற 'மூன்றெழுத்'தானது
'சாட்டை கையில் கொண்டு' 'நான் போட்டால் தெரியும் போடு' என்று டிஷ்யூம்களை தங்கத் தமிழால் தந்த 'நாலும் தெரிந்தவன்'.
'மீண்டும் வாழ்வேன்' என்று 'சபதமி'ட்டவன் மீண்டு வராமல் மாண்டு போன நினைவு நாள் இன்று.
அதனால் என்ன?
அன்று உன்னைப் பார்த்த 'அதே கண்களா'ல் என்றும் உன் அழகைப் பருகுவோம்.
இன்று நமது திரியில் இதுவரை இணையத்தில் வெளிவராத ரவிச்சந்திரனின் அழகிய புகைப்படம்
'பேசும் படம்' இதழிலிருந்து.
நீங்கள் அதிகம் கேள்விப் பட்டிராத, வெளிவராத 'மெட்ராஸ் மைனர்' திரைப்படத்திலிருந்து.
http://i1087.photobucket.com/albums/...ccfd9eb1a2.jpg
1980 கால கட்டத்தில் ரவி அனுராதா நாகேஷ் நடித்து ஷீலா தயாரிப்பில் 'காதலிக்க 90 நாள் ' வெளி வந்ததா வாசு அவர்களே
http://s.ecrater.com/stores/47612/48...ba9_47612n.jpg
காலையில் 'நீலகிரி எக்ஸ்பிரெஸ்' விட்ட கிருஷ்ணா சார். பதிவும் அதே வேகம். சுகம். 'வாலிபத்து'க்கு நான் அடிமை:)ஐ மீன் வாலிபம் ஒரு வெள்ளித்தட்டு பாட்டிற்கு. படம் அறுவைதான்.
ஒன்னு கவனிச்சு பாருங்க
நேற்று முன் தினம் ஹோட்டல் சொர்க்கம் ஜெய் விஜயலலிதா
நேற்று நீலகிரி எக்ஸ்பிரஸ் ஜெய் விஜயலலிதா
அந்த கண் என்ன பாடு படுத்துது சார் (விஜயலலிதா வின் கண் )
ஊமை விழிகள் படத்தில் இன்றைய நினைவு நட்சத்திர நாயகன்
ரவி சொல்வாரே "கண்கள் கண்கள் ஒ ஆஷா' பின்னாடியே பொந்தெலி சங்கீதா ரெட் கலர் னு நினைவு ஸ்விம்மிங் சூட் ஓடி வருகை
ஊமை விழிகள் படத்தில் ரவி மீள் வருகை வில்லனாக னு நினைவு
செம்பட்டை விக் தாடி கையில் ஸ்டிக் குதிரை வண்டி ஏறும் போது த்ரில்
வில்லன் பாடி language மிக அருமை
http://www.aambal.co.uk/static/uploa...07/ravicha.pnghttp://www.aambal.co.uk/static/uploa...vichandran.jpghttp://antrukandamugam.files.wordpre...am-1.jpg?w=593
ரவிச்சந்திரன் – அற்புதமான ஒரு திரைப்படக் கலைஞன்
ரவிச்சந்திரன் திருச்சியில் பிறந்த ஒரு தமிழர்; ஆனால் அவரது இளமைக் காலம் மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூரில்தான் கழிந்தது. அவர் 1951ஆம் ஆண்டு தனது சகோதரியின் திருமணத்திற்காக இந்தியா திரும்பினார். அதன்பின் திருச்சியில் பட்டப்படிப்பை செயின்ட் ஜோசப் கல்லூரியில் மேற்கொண்டார்.
1963ல் பிரபல இயக்குநர் ஸ்ரீதரைப் பார்த்தபொழுது அவரது வாழ்க்கையில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டது. 1964ல் தமிழில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றான ‘காதலிக்க நேரமில்லை’ வெளிவந்தபொழுது, அதன் நேர்த்தியான கதை அமைப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் மற்றும் நடிகர்கள் நாகேஷ், பாலையா போன்றோரின் நகைச்சுவை, புதிய பொலிவுடன், துடுக்கான இளைஞனாக கதாநாயகனாக அறிமுகமாகிய ரவிச்சந்திரனை மிகவும் எதிர்பார்ப்புடன் மக்கள் கவனிக்கத் தொடங்கினர்.
தமிழ் திரைப்பட வரலாற்றில் தியாகராஜ பாகவதரா, பி.யூ. சின்னப்பாவா? எம்.ஜி. ராமச்சந்திரனா அல்லது சிவாஜி கணேசனா என்ற ரசிகர்களின் போட்டியின் தொடர்ச்சியாக ரவிச்சந்திரனா, ஜெய்சங்கரா என்ற போட்டியும் விவாதமும் ஆரோக்கியமான வளர்ச்சியாக அமைந்தது.
ரவிச்சந்திரன் தனது ஆளுமையால் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் திரைப்படங்களின் பல நுணுக்கங்களையும், பெற்றிருந்தார். நடிப்புடன் நில்லாது தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, பாடல்கள், படத்தொகுப்பு என பல்துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகிறார். பல குணசித்திர வேடங்களிலும் நடித்தவர் நடிகர் ரவிச்சந்திரன்.
ஒருகாலகட்டத்தில் தமிழ்ப்பட வளர்ச்சியில், திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினர். அந்த வகையில் திரைப்படக் கல்லூரியில் பயின்ற அரவிந்தராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘ஊமை விழிகள்’ படம் இளந்தலைமுறையை ஒரு உசுப்பு உசுப்பியது. அதில் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றி தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் உள்ளத்தில் மாறாத இடத்தை பிடித்தவர் நடிகர் ரவிச்சந்திரன்.
பிரபல மலையாள நடிகை ஷீலாவைத் திருமணம் செய்த இவர், பின்னர் அவரை விட்டு பிரிந்து, மீண்டும் முதல் மனைவியிடம் தஞ்சம் அடைந்தார்
அண்மையில் இவரது மகனான அம்சவிர்தனை வைத்து ‘மந்திரன்’ என்னும் திரைப்படத்தை இயக்கினார்.
நடிகர் ரஜினிகாந் நடித்த ‘அருணாச்சலம்’, கமல்ஹாசனின் ‘பம்மல் கே சம்பந்தம்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றிய இவர் அண்மையில் வெளிவந்த ‘ஆடு புலி’ திரைப்படத்திலும் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடித்திருக்கிறார்.
தமிழ்த் திரைப்படத்தில் ஸ்டைல் நடிப்பை புகுத்திய பெருமைக்கு சொந்தக்காரராக இவர் விளங்குகிறார்.
(நன்றி - ஆம்பல)
அக்கறை பச்சை திரைபடத்தில் பாலா ஈஸ்வரி குரல்களில்
மெல்லிசை மன்னர் இசை
'ஊர்கோலம் போகின்ற கிளி கூட்டங்கள் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் இன்று ரவி யின் நினைவு நாள் என்று "
http://www.youtube.com/watch?v=oBoKpG3pFqA
கிருஷ்ணா சார்,
ரவியின் மிரட்டும் தோற்றம் 'ஊமை விழிகளி'ல் இருந்து
http://i1087.photobucket.com/albums/...art%20-2/r.jpg
இன்றைய ஸ்பெஷல் (38)
http://img6a.flixcart.com/image/av-m...3fyhzjfy9.jpeg
ரவிச்சந்திரன் நினைவு தினத்தையொட்டி
ரவிச்சந்திரனின் அட்டகாசமான துள்ளல் பாடல். 'குமரிப் பெண்' திரைப்படத்திலிருந்து.
'தங்கச்சுரங்கம்' தந்த அதே 'ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ்' தயாரித்தது. ராமண்ணா இயக்கம். ஜெயலலிதா, நாகேஷ், மனோகர், மேஜர் என்று வழக்கம் போல நட்சத்திரப் பட்டாளம்.
பொதுவாக ஹீரோ வில்லனிடம் பாடிக் கேட்டிருப்போம். இந்தப் பாடல் கொஞ்சம் வித்தியாசமான கற்பனை கலந்தது.
ஹீரோ ரவியை அந்த வீட்டில் நுழைய விடாமல் கூர்க்கா தடுக்க, ரவி செம கலாட்டா செய்து அந்த கூர்க்காவிடம் பாடுவார். அதனால் பாடலின் தொடக்கமே இந்தியில் 'ஜாவ்ரே ஜா' என்று. ஜம்மென்று.
கூர்க்காவின் வேலையை ஆரம்ப வரிகளில் கிண்டல் செய்து இந்தப் பாட்டு இருக்கும்.
'நீ இந்த வீட்டின் கேட்டுக்கு ராஜாவாக இருக்கலாம்... ஆனால் நான் இந்த வீட்டுக்கே ராஜா' என்ற பொருள்படப் பாடுவார் ரவி.
கூர்க்கா காவலாளியிடம் செம கலாய்ப்பு.
'டெய்லி ராத்திரியில் காவல் காக்காம தூங்கு திருட்டுப் பசங்க திருடிக்கிட்டுப் போறதுகூட தெரியாம.... அப்புறம் எவன் அகப்படுகிறானோ அவனைப் பிடிச்சி திருடன்னு சொல்லு...இதில ஆர்ப்பாட்டம் வேறயா?' என்ற அர்த்தத்தில் கூர்க்காவிடம் பாடுவது வித்தியாசம்தானே!
அப்புறம் வீட்டுக்குள் சி.கே.சரஸ்வதி, 'என்னத்தே' கன்னையா போன்றோரிடம் படுசுறுசுறுப்பாக ஆட்டமும், பாட்டுமாய் இளங்கன்று போல் துள்ளுமிடங்களில் ரவி அமர்க்களப்படுத்துகிறார். இளமை பொங்கி வழிகிறது. மனிதர் அங்கே ஓடி இங்கே ஓடி, இப்படித் தாவி அப்படித் தாவி ஒரு இடத்தில் நிற்காமல் படுசுட்டித்தனம்.
மென்மையான பாடல்களுக்கு சொந்தக்காரரான பி.பி.ஸ்ரீனிவாஸ் இப்பாடலில் முழுதும் வித்தியாசம் காட்டி இருப்பார். இசை மெல்லிசை மன்னர். பாடல்கள் கவிஞர் கண்ணதாசன். ('நாலு காலுக்கொரு வால் சொந்தமோ' எழுத இவரை விட்டால் வேறு யார்)
http://sim03.in.com/2/1788d20f30bf0c...184f1_ls_t.jpg
'வருஷத்தைப் பாரு' (ராட்சஸி ஒரு முறை... பாடகர் திலகம் மறுமுறை)
'நடந்தது என்னவென்று நீயே சொல்லு' (ரவி, ஜெயா சைக்கிள் குதூகலம்)
'யாரோ ஆடத் தெரிந்தவர் யாரோ'...(எல்.ஆர்.ஈஸ்வரியின் மாஸ்டர் பீஸ்).
'தேனிருக்கும் மலரினிலே நீ இருக்க சம்மதமா' (ஜெயலலிதா கஜல்)
என்று சூப்பர் பாடல்கள்.
http://i1.ytimg.com/vi/QWKGrRiiyKk/sddefault.jpg
சரி! இன்றைய ஸ்பெஷலுக்கு வந்து விடுவோம்.
ஜாவ்ரே ஜா...இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜாஅந்த வீட்டுக்கு நான் ராஜா
ஜாவ்ரே ஜா...இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா...அந்த வீட்டுக்கு நான் ராஜா
தினம் தினம் இரவினில் தூங்கி விட்டு
திருடரைத் திருடிக் கொண்டோட விட்டு
தினம் தினம் இரவினில் தூங்கி விட்டு
திருடரைத் திருடிக் கொண்டோட விட்டு
அகப்பட்ட மனுஷனைப் பிடிக்கிற வேலை
ஆர்ப்பாட்டம் என்ன ராஜா
ஜாவ்ரே ஜா...இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா...அந்த வீட்டுக்கு நான் ராஜா
ஹாஹஹஹா ஓஹோஹோஹோ லாலாலல
பம்பம்பம்பம்...
காக்கைக்கும் குருவிக்கும் கடல் சொந்தமோ
கழுதைக்கு சுமக்கிற பொதி சொந்தமோ
காக்கைக்கும் குருவிக்கும் கடல் சொந்தமோ
கழுதைக்கு சுமக்கிற பொதி சொந்தமோ
நாட்டுக்கு ஆயிரம் மொழி சொந்தமோ
நாலு காலுக்கொரு வால் சொந்தமோ
ஜாவ்ரே ஜா...இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா...அந்த வீட்டுக்கு நான் ராஜா
வருகிற உறவுக்கு மனை சொந்தமோ
மயக்கிற முகத்துக்கு எழில் சொந்தமோ
ஹாஹஹஹா ஹாஹஹா
வருகிற உறவுக்கு மனை சொந்தமோ
மயக்கிற முகத்துக்கு எழில் சொந்தமோ
குவிக்கிற பணத்துக்கு எடம் சொந்தமோ
கூடும் கூட்டத்துக்கு மடம் சொந்தமோ
ஜாவ்ரே ஜா...இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா...அந்த வீட்டுக்கு நான் ராஜா
தினம் தினம் இரவினில் தூங்கி விட்டு
திருடரைத் திருடிக் கொண்டோட விட்டு
தினம் தினம் இரவினில் தூங்கி விட்டு
திருடரைத் திருடிக் கொண்டோட விட்டு
அகப்பட்ட மனுஷனைப் பிடிக்கிற வேலை
ஆர்ப்பாட்டம் என்ன ராஜா
ஜாவ்ரே ஜா...இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா...அந்த வீட்டுக்கு நான் ராஜா
http://www.youtube.com/watch?feature...&v=QWKGrRiiyKk
டியர் வாசு,
கலைநிலா, ஆணழகன் ரவிச்சந்திரனின் நினைவு நாளையொட்டி தங்கள் பதிவுகள் அருமை, எனினும் அனுபவிக்க முடியாத சோகம் தலைநீட்டுகிறது. அவர் நடித்த படங்களின் பெயர்களை வைத்தே நினைவஞ்சலி செலுத்தியிருப்பது சிறப்பாக அமைந்துள்ளது.
'இன்றைய ஸ்பெஷல்' பகுதியில் நீங்கள் வழங்கியுள்ள குமரிப்பெண் படத்தின் 'ஜாவ்ரே ஜாவ்' பாடல் நன்றாக இருந்தபோதிலும் அதைக் கேட்கும்போதெல்லாம் 'இது டி.எம்.எஸ்.பாடியிருக்க வேண்டிய பாடல்' என்ற எண்ணம் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும். அதற்குக்காரணம் டீசிங் பாடல்களுக்கு ஏற்றவர் பாடகர் திலகம்தான். மேலும், பேசும்போது ஆண்மை நிறைந்த குரலில் பேசும் ரவிக்கு மென்மையான பி.பி.எஸ். குரல் ஸூட் ஆகவில்லைஎன்பது உண்மையே. மென்குரலுடைய ஜெமினி, முத்துராமன், ராஜன் ஆகியோருக்கு ஒக்கே.
ரவியின் மற்ற டீஸிங் (கலாய்ப்பு) பாடல்களைப்பாருங்கள்.
'ராஜா கண்ணு போகாதடி நீ போனா நெஞ்சுக்கு ஆகாதடி'
'இரவில் வந்த குருவிகளா அடி குட்டிகளா'
'ஆடு பார்க்கலாம் ஆடு'
'பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்'
இதே படத்தில் வந்த 'வருஷத்தைப்பாரு 66'
'ஜாவ்ரே ஜாவ்' பாடலில் குரல் வித்தியாசம் காட்டினாலும், அதைத்தாண்டி கண்ணதாசனின் வரிகளும், ரவியின் உற்சாக நடிப்பும் அதை ஈடு செய்யும்.
பாடலைப்பற்றிய நல்ல ஆய்வு..., பாராட்டுக்கள்.
டியர் ராஜேஷ்,
ஒவ்வொரு தமிழ்ப்படத்தையும் பற்றி அலசும்போதும், அது மற்ற மொழிகளில் எந்த வடிவில், யார் யார் நடிப்பில், என்ன பெயரில் மறு அவதாரம் எடுத்துள்ளது என்ற தங்கள் ஆய்வு சூப்பர். இதன்மூலம் மற்ற மொழிப்படங்களின் பாடல்களின் வடிவத்தையும் பார்க்க முடிகிறது.
இதன்மூலம் நமது திரி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் ஹிந்திப்பாடல்களையும் ஆய்வு செய்வதாக அமைந்துள்ளது.
பாராட்டுக்கள்...
டியர் கிருஷ்ணா,
நீலகிரி எக்ஸ்பிரஸ் பட மற்றும் பாடல்கள் ஆய்வு நன்றாக உள்ளது. ஜெய்சங்கரின் அப்போதைய சீரியஸ் படங்களுக்கு நடுவே இதுபோன்ற கிச்சுகிச்சு மூட்டும் படங்களிலும் நடித்து வந்தார். இதுபோன்ற இன்னொரு படம் 'புத்திசாலிகள்'.
'நான் கலைஞன் அல்ல உன்னை சிலையாக்க' பாடலில் ஞானஒளி விஜயநிர்மலாவின் நடன அசைவுகள் கொஞ்சம் அமெச்சூர்த்தனமாக இருந்தாலும் ரசிக்க முடிந்தது. (என்ன செய்வது, ஒருவரைப் பிடித்துவிட்டால் அவரது அசட்டுத்தனம் கூட அழகாக் தோன்றுகிறது).
சேனல்களின் தயவால் இப்பாடல்கள் தற்போது நம்வீட்டு வரவேற்பறைக்கு வருகின்றன. எவ்வளவு காலம் இருட்டில் கிடந்துள்ளன...
http://antrukandamugam.files.wordpre.../lr-eswari.jpg
கூட்டத்தோடு கூட்டமாக 'கோரஸ்' பாடத்தொடங்கிய எல்.ஆர்.ஈஸ்வரி வெகு விரைவிலேயே சிறந்த பின்னணி பாடகியாக உயர்ந்தார்.
எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ஒருவித வசிய சக்தி இருக்கும், பாடும் முறையில் 'கிக்' இருக்கும். எனவே, லட்சக்கணக்கான ரசிகர்களை அவர் பெற்றார்.
'இது எனக்கு இறைவன் கொடுத்த வரம்' என்று கூறிய ஈஸ்வரி, தொடர்ந்து சொன்னார்:
'ஏழ்மையில் பிறந்த நான், இந்த அளவு உயர்ந்திருக்கிறேன் என்றால், அதற்காக நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம். எனக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் டி.எல்.ராஜேஸ்வரி. பரமக்குடிதான் எங்களுடைய பூர்வீகம். ஆனால், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை புதுப்பேட்டைதான்.
எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில்தான் நான் பிறந்தேன். எனது தந்தை பெயர் அந்தோணி தேவராஜ். தாயார் ரெஜினா மேரி நிர்மலா. எனக்கு அமல்ராஜ் என்ற தம்பியும், எல்.ஆர்.அஞ்சலி என்ற தங்கையும் உண்டு.
எனது தந்தை இளம் வயதிலேயே (36 வயது) இறந்து விட்டார். அப்போது எனக்கு வயது 6. வறுமையின் பிடியில் சிக்கி தவித்த எங்களது குடும்பத்தை எனது தாயார் சினிமாவில் கோரஸ் பாடி, அதில் கிடைத்த மிக சொற்ப வருமானத்தைக் கொண்டு காப்பாற்றி வந்தார்.
எப்படியோ கஷ்டப்பட்டு என் தாயார் என்னைப் பள்ளி இறுதி வகுப்பு வரை படிக்க வைத்தார். அதற்கு மேல் கல்லூரிக்கு என்னை அனுப்பி படிக்க வைக்க முடியாத சூழ்நிலை எனது தாயாருக்கு. ஆகவே, எனது தாயாருக்கு உதவி செய்ய நான் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டேன்.
அப்போது எனக்கு வயது 16. என் தாயார் சினிமாவில் கோரஸ் பாடச் செல்லும்போது, அவருடன் செல்வேன். அவர்கள் பாடுவதை கேட்டு அதே மாதிரி நானும் பாடுவேன்.
ஒரு நாள் ஏ.பி.நாகராஜன் தயாரித்த 'வடிவுக்கு வளைகாப்பு' என்ற படத்திற்கு கோரஸ் பாட எனது தாயார் சென்றபோது, நானும் அவருடன் சென்றேன். பாடலின் இடையே 'ஹம்மிங்' கொடுக்க வேண்டிய பெண் அன்று வராததால், தற்செயலாக நான் அந்தப் பாட்டுக்கு 'ஹம்மிங்' கொடுத்தேன். இதுதான் நான் முதன் முதலில் சினிமாவிற்கு கொடுத்த குரல்.
இதைக்கேட்ட அங்கிருந்த ஏ.பி.நாகராஜனும், இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனும் 'உனக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. நீ எதிர்காலத்தில் பெரிய பாடகியாக வருவாய், பார்!' என்று மிகவும் பாராட்டினார்கள்.
இதைக்கேட்டவுடன் அந்த நிமிடமே எங்களது குடும்ப கஷ்டமெல்லாம் பறந்து விட்டதுபோல் உணர்ந்தேன். இது எனக்கு வாழ்க்கையில் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.
'வடிவுக்கு வளைகாப்பு' படத்தை அடுத்து ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும் சேர்ந்து 'லட்சுமி பிக்சர்ஸ்' என்ற படக்கம்பெனியைத் தொடங்கி, 'நல்ல இடத்து சம்பந்தம்' என்ற படத்தைத் தயாரித்தனர். அதில் கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் எனக்கு பாட வாய்ப்பு கிடைத்தது.
'புதுப்பெண்ணே புதுப்பெண்ணே நிமிர்ந்து பாரு; உன் பிறந்த இடத்தை மறந்து விடாதே நினைத்துப்பாரு.'
'பொண்ணு மாப்பிள்ளை ஒன்னா போகுது ஜிகு ஜிகு வண்டியிலே.'
'இவரேதான் அவரு அவரேதான் இவரு'
'துக்கத்திலும் சிரிக்கணும்; துணிவுடனே இருக்கணும்' என்ற 4 பாடல்கள் பாடுமë வாய்ப்பை எனக்கு ஏ.பி.நாகராஜன் வழங்கினார்.
எனது பெயர் டி.எல்.ராஜேஸ்வரி என்று இருந்ததை சுருக்கமாக 'எல்.ஆர்.ஈஸ்வரி' என்று மாற்றி வைத்தவரும் ஏ.பி.நாகராஜன்தான்.
அப்போதெல்லாம் ஒரு பாடல் பாடினால் 100 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அக்காலத்தில் அது பெரிய தொகை. வறுமையில் வாடிக்கொண்டிருந்த என் குடும்பத்தை, வசதியாக வாழ வைக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது' என்றார் எல்.ஆர்.ஈஸ்வரி.
'டெல்லி மாப்பிள்ளை' என்று ஒரு படம். ரவி ஹீரோ. ராஜஸ்ரீ ஹீரோயின்.
இந்தப் படத்தில் பட்டான் என்ற ஈட்டிக்காரன் வேடத்தில் ரவிச்சந்திரன் அவர்கள் சௌந்தரராஜன் குரலில் சக்கை போடு போடும் பாடல் மிக வித்தியாசமான ஒன்று. 'சர்தானா' என்று பாடகர் திலகம் பாடுவது பலே பலே.
ஹரே நம்மிள்கி சொல்றத நிம்பிள்கி கேட்டுக்கோ
தம்பிடிக்கு தம்பிடி வட்டியும் போட்டுக்கோ
சரிதானா அது இல்லாம ஈட்டிக்காரன் தருவானா
யஹூம்..யஹூம்
ஹரே சைத்தான் கி பச்சா... கியாரே
பாடகர் திலகமும், ரவியும் செம கலக்கு.
அதிகம் வெளியே தெரியாத ஒரு பாடல்.
இந்தப் பாடலை யூ டியூப் தளத்தில் அப்லோட்செய்த புண்ணியவானுக்கு ஒரு வேண்டுகோள். பாடல் காட்சி முழவதையும் எழுத்தாலேயே மறைத்து விட்டால் எப்படி அந்தப் பாடலைப் பார்ப்பது?
டி.எம்.எஸ்.மேலே உங்களுக்கு உள்ள பக்தி புரிகிறது. அதற்காக இப்படியா? இதற்கு நீங்க பாடலைப் போடாமலேயே இருக்கலாம்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cvFyDxUydSY
ராட்சஸியின் முதல் பிரவேசம்.
இவரேதான் அவரு
அவரேதான் இவரு
'நல்ல இடத்து சம்பந்தம்' படத்தில். மாமா இசையமைப்பில்.
முதல் பாட்டிலேயே அந்த ராட்சஸத்தனம் தெரிகிறது.
http://www.youtube.com/watch?v=OmH8CjA7uTE&feature=player_detailpage
வாசு ஜி... இதோ அதே பாட்டு எழுத்துக்கள் மறைக்காமல்...
http://youtu.be/1twsisZDh-A
மிக்க நன்றி மது சார். அப்பாடி! இப்போதாவது நிம்மதியாகப் பார்க்கலாம்
Mr Neyveli Vasudevan Sir,
Your presence is required urgently in Our Acting
God Thread. Pls do come and start your posting.
It is not only my humble request but also most of
our hubbers.
Regards