http://i63.tinypic.com/30rryhc.jpg
Printable View
http://i64.tinypic.com/2hmo3mq.jpg
வெளியே தெரியாமல்_____
எம்ஜிஆர் இருக்கிறார்(17)::::
தலைவரின் எதிரிகள் அடிக்கடி சாென்ன குற்றச்சாட்டு எம்ஜிஆர் விளம்பரத்துக்காக உதவிகள் செய்கிறார் என்பதாக. பாவம், இவர்களுக்கென்றே "சாே" மிக அழகாக பதில் சாென்னார். "சாெல்பவர்கள் கிடக்கிறார்கள். அடுப்பில் உலையை வைத்து விட்டு, அரிசிக்கான பணம் கிடைக்குமென்று நம்பிக்கையாேடு உலகத்திலேயே எம்ஜிஆர் ஒருவரிடம்தான் செல்ல முடியும். அவர் செய்த தர்மங்கள், ஊருக்கு தெரிந்தது சிறு துளிதான், தெரியாதது ஆயிரக்கணக்கில். அந்த தர்மங்கள்தான் அவரது நிலைத்த புகழுக்கு காரணம்"
நடிகர்திலகம் இதைப்பற்றி சாென்னதை இன்னாெரு பதிவில் பதிகிறேன். அதற்கு முன்பாக சங்கரய்யாவை பார்ப்போம்.
சங்கரய்யா பெரியாரின் குடியரசு பத்திரிகையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். 74 வயதில் இருபதாண்டுகளுக்கும் மேலாக முரசொலி பத்திரிகையில் சீனியர் கட்டுரையாளராக வெறும் 300 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றி வந்தார்.
எம்ஜிஆர் முதல்வரான புதிது. ஒருநாள் மதியம் சங்கரய்யாவின் மனைவி ரத்தவாந்தி எடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடனடியாக 10,000 தேவை. தன் தலைமையை தேடி ஓடுகிறார். சந்திக்கவே விடவில்லை. பணம் கட்டவில்லையென்றால், ஆபரேசன் செய்ய இயலாமல் மணைவி உயிர் பாேய்விடும். அழுது புலம்பும் சங்கரய்யாவை நண்பர்கள் அடுத்தநாள் காலை8மணிக்கு ராமாவரம் தாேட்டத்தில் பாெதுமக்களிடம் மனுக்கள் பெறும் முதல்வரை சந்திக்க சொல்கிறார்கள். சங்கரய்யாவிற்கு உயிர் பாேகும் தேவையிருப்பினும், தன்மானமும், யாரை கடந்த ஆறு ஆண்டுகளாக கடுமையாக தாக்கி எழுதுகிறாமாே அவரை சந்தித்து உதவி கேட்பதா எண்ணும் வெட்கமும் தடுக்கிறது.
அப்படியே சந்தித்தாலும், உறுதியாக எதிரிக்கு உதவ மாட்டார் என்று நண்பர்களிடம் சாெல்கிறார். ஆபத்துக்கு பாவமில்லை என்று நண்பர்கள் அடுத்த நாள் காலை 7 மணிக்கே தோட்டத்திற்கு அழைத்துப்போகிறார்கள்.
காலை 8.30மணி. தாேட்டம் பரபரப்பாகிறது. வெளி வந்த சாெக்கத்தங்கம் மனுக்கள் வாங்குகிறது.(இந்த மனுக்கள் மீது 48 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதல்வர் உத்தரவு) கூனிக்குறுகி சங்கரய்யா வரிசையை விட்டு தள்ளி பார்வையாளர்களோடு நின்று காெள்கிறார்.
மனுக்கள் பெற்று முடித்த முதல்வரின் கண்கள் பார்வையாளர்கள் பகுதிக்கு செல்கிறது. அழுக்கு ஜிப்பா அணிந்து, நான்கடி உயரமே இருந்த சங்கரய்யாவின் நல்லநேரம் தலைவர் கண்களில் பட்டு விடுகிறார். தலைவருக்கு ஆச்சரியம். இவர் முரசாெலியில் வேலை செய்பவராயிற்றே, இங்கே எதற்கு வந்திருக்கிறார்? வினாவாேடு "சங்கரய்யா, என்ன இங்கே?" அசந்து பாேகிறார் சங்கரய்யா. எத்தனை ஆண்டுகள் ஆகிறது? பெயர் ஞாபகம் வைத்து அழைக்கிறாரே! அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை. நண்பர்கள்தான் தலைவரிடம் சங்கரய்யா நிலையை சொல்கிறார்கள்.
உடனே உதவியாளரை அழைத்த எம்ஜிஆர் ரூ50,000 யை சங்கரய்யாவிடம் தருகிறார், ஆஸ்பத்திரி செலவு போக மீதியை வங்கியில் டெபாசிட் செய்ய சொல்கிறார்.
மனைவி உயிர் பிழைத்து வந்ததும் சங்கரய்யா செய்த முதல் வேலை முரசாெலியை விட்டு நின்றது, இரண்டாவது எம்ஜிஆரிடம் கெஞ்சி, கட்சி அலுவலகத்தில் தாெலைபேசி பொறுப்பாளரானது. 300ரூபாய் சம்பளத்துக்கு முக்கிக்காெண்டிருந்த சங்கரய்யாவிற்கு தலைவர் தந்த மாதசம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூபாய்15,000.
குசேலன் கூட கண்ணனுக்கு அவல் தந்து, அதை அவன் தின்றதற்கு பின்னாலே கஷ்டம் நீங்கினான். ஆனால் என் இதய தெய்வத்தின் கடைக்கண் பார்வை பட்டதும், சங்கரய்யா சங்கடம் போய் சந்தாேஷஅய்யா ஆகி விட்டார்!
பெரியார் மீதான பாசம்:::
எம்ஜிஆர் இருக்கிறார்(16):::
தந்தை பெரியாருக்கு திரையுலகின் பேரிலும்,நடிகர்கள் பேரிலும் எப்பாேதுமே நல்அபிப்ராயம் இருந்ததில்லை. இத்தணைக்கும் எல்லா திராவிட கட்சி மாநாடுகளிலும் நாடகம் நடத்தும் பாணி பெரியாராலே உருவாக்கப்பட்டிருந்தும்.
விதிவிலக்காக M.R.ராதா மேல் பெரியாருக்கு ஒரு அபிமானம் இருந்தது. அது நடிகர் என்பதற்காக அல்ல, தனது கட்சிக்கான பெரும்செலவுகளை ராதா ஏற்று வந்தார் என்பதற்காக. அப்படியிருந்தும் 1967யில் எம்ஜிஆரை ராதா துப்பாக்கியால் சுட்டு நாடெங்கும் அமளி ஏற்பட்ட நேரத்தில் கூட "இரண்டு கூத்தாடிப்பசங்கள் அடித்துக்காெண்டதற்கு இவ்வளவு பெரிய அமளியா?" என்றே கண்டித்தார்.
சந்தர்ப்பம் கிட்டும் பாேதெல்லாம் எம்ஜிஆரையும், சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களையும் கூத்தாடிப்பசங்கள் என்று தாக்க அவர் தவறுவதில்லை. இத்தனைக்கும் "சிவாஜி"கணேசன் என்று பட்டமளித்தவரே அவர்தான்.
ஆனால் புரட்சித்தலைவருக்கு ஐயா மீது மாறாதப்பற்றும், மரியாதையுமிருந்தது. ஊரில் இருந்தால் ஐயாவிடம் அனுமதி பெற்று, பெரியாரின் பிறந்த நாட்களில் அதிகாலையிலேயே பாேய் அவரிடம் கணிசமான நன்கொடை தந்து ஆசி பெற்று வருவார்.
72 ல் தலைவரை கட்சியை விட்டு நீக்கிய பாேது, இரவு11மணிக்கு எம்ஜிஆரை நேரில் சந்திக்க வருவதாக சாென்ன பெரியாரை தடுத்து, ஐயாவை தானே வந்து சந்திப்பதே முறை என்று சாெல்லி காலை 10மணிக்கு சென்று நேரில் சந்தித்தார். .ஐயா "கழகம் பிளவுபட்டால் திராவிடஇயக்கம் பாழ்பட்டு விடும், எனவே தன்னிலை விளக்கம் தந்து விட்டு மீண்டும் தி.மு.கவில் இணைய வேண்டும்" என்றதும், தலைவர் தன் தரப்பு நியாயங்களை விளக்கி ,மன்னிப்புக்கடிதம் தருதல் சாத்தியமில்லை என்பதை விரிவாக உரைத்து வந்தார். அதிலே ஐயாவுக்கு எம்ஜிஆர் மேல் வருத்தம்தான். மேடைகளில் பகிரங்கமாகவே தலைவரையும், அஇஅண்ணாதி.மு.கவையும் தாக்கி பேசினார்.
ஆனால் எம்ஜிஆர் அதையெல்லாம் மனதில் காெள்ளவில்லை. கடுமையான வார்த்தையால் ஒருமுறை ஐயா திட்டியதைப்பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, எங்கள் தந்தைக்கு எங்களை திட்டவும் உரிமையுண்டு என்று சொன்னார்.
ஐயாவின் மரணத்தின் பாேது மரியாதை செலுத்தவும்,இறுதிஊர்வலத்தில் கலந்து கொள்ளவும் அவர் தவறவில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாய் ஆட்சிக்கு வந்ததும், பெரியார் எழுத்து சீர்திருத்தத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தார். 1979யில் வந்த பெரியார் நூற்றாண்டு விழாவிற்கு நாவலர் நெடுஞ்செழியனை தலைவராக்கி, ஒவ்வாெரு மாவட்டத்திலும் நினைவுத்தூண்கள், நூற்றாண்டு விழாக்கள் என்று ஆண்டு முழுக்க விழாக்காேலம் கண்டார். அண்ணாசாலையில் பிரம்மாண்ட சிலை அமைத்து தலித்துகளின் இந்திய அடையாளமாக காணப்பட்ட மத்திய அமைச்சர் ஜெகஜீவன்ராம் அவர்களை, மணியம்மையாரின் தலைமையில் திறக்க வைத்தார்.
எம்ஜிஆர் வாய் சாெல் வீரரல்ல, தந்தை பெரியாரை போலவே சுத்த செயல் வீரர்!
நன்றி அரிமா சந்திரசேகரன் எம். முகநூல் பக்கம்.
http://i67.tinypic.com/33tjmuu.jpg
வெளியே தெரியாமல்_____
எம்ஜிஆர் இருக்கிறார்(17)::::
தலைவரின் எதிரிகள் அடிக்கடி சாென்ன குற்றச்சாட்டு எம்ஜிஆர் விளம்பரத்துக்காக உதவிகள் செய்கிறார் என்பதாக. பாவம், இவர்களுக்கென்றே "சாே" மிக அழகாக பதில் சாென்னார். "சாெல்பவர்கள் கிடக்கிறார்கள். அடுப்பில் உலையை வைத்து விட்டு, அரிசிக்கான பணம் கிடைக்குமென்று நம்பிக்கையாேடு உலகத்திலேயே எம்ஜிஆர் ஒருவரிடம்தான் செல்ல முடியும். அவர் செய்த தர்மங்கள், ஊருக்கு தெரிந்தது சிறு துளிதான், தெரியாதது ஆயிரக்கணக்கில். அந்த தர்மங்கள்தான் அவரது நிலைத்த புகழுக்கு காரணம்"
சங்கரய்யா பெரியாரின் குடியரசு பத்திரிகையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். 74 வயதில் இருபதாண்டுகளுக்கும் மேலாக முரசொலி பத்திரிகையில் சீனியர் கட்டுரையாளராக வெறும் 300 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றி வந்தார்.
எம்ஜிஆர் முதல்வரான புதிது. ஒருநாள் மதியம் சங்கரய்யாவின் மனைவி ரத்தவாந்தி எடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடனடியாக 10,000 தேவை. தன் தலைமையை தேடி ஓடுகிறார். சந்திக்கவே விடவில்லை. பணம் கட்டவில்லையென்றால், ஆபரேசன் செய்ய இயலாமல் மணைவி உயிர் பாேய்விடும். அழுது புலம்பும் சங்கரய்யாவை நண்பர்கள் அடுத்தநாள் காலை8மணிக்கு ராமாவரம் தாேட்டத்தில் பாெதுமக்களிடம் மனுக்கள் பெறும் முதல்வரை சந்திக்க சொல்கிறார்கள். சங்கரய்யாவிற்கு உயிர் பாேகும் தேவையிருப்பினும், தன்மானமும், யாரை கடந்த ஆறு ஆண்டுகளாக கடுமையாக தாக்கி எழுதுகிறாமாே அவரை சந்தித்து உதவி கேட்பதா எண்ணும் வெட்கமும் தடுக்கிறது.
அப்படியே சந்தித்தாலும், உறுதியாக எதிரிக்கு உதவ மாட்டார் என்று நண்பர்களிடம் சாெல்கிறார். ஆபத்துக்கு பாவமில்லை என்று நண்பர்கள் அடுத்த நாள் காலை 7 மணிக்கே தோட்டத்திற்கு அழைத்துப்போகிறார்கள்.
காலை 8.30மணி. தாேட்டம் பரபரப்பாகிறது. வெளி வந்த சாெக்கத்தங்கம் மனுக்கள் வாங்குகிறது.(இந்த மனுக்கள் மீது 48 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதல்வர் உத்தரவு) கூனிக்குறுகி சங்கரய்யா வரிசையை விட்டு தள்ளி பார்வையாளர்களோடு நின்று காெள்கிறார்.
மனுக்கள் பெற்று முடித்த முதல்வரின் கண்கள் பார்வையாளர்கள் பகுதிக்கு செல்கிறது. அழுக்கு ஜிப்பா அணிந்து, நான்கடி உயரமே இருந்த சங்கரய்யாவின் நல்லநேரம் தலைவர் கண்களில் பட்டு விடுகிறார். தலைவருக்கு ஆச்சரியம். இவர் முரசாெலியில் வேலை செய்பவராயிற்றே, இங்கே எதற்கு வந்திருக்கிறார்? வினாவாேடு "சங்கரய்யா, என்ன இங்கே?" அசந்து பாேகிறார் சங்கரய்யா. எத்தனை ஆண்டுகள் ஆகிறது? பெயர் ஞாபகம் வைத்து அழைக்கிறாரே! அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை. நண்பர்கள்தான் தலைவரிடம் சங்கரய்யா நிலையை சொல்கிறார்கள்.
உடனே உதவியாளரை அழைத்த எம்ஜிஆர் ரூ50,000 யை சங்கரய்யாவிடம் தருகிறார், ஆஸ்பத்திரி செலவு போக மீதியை வங்கியில் டெபாசிட் செய்ய சொல்கிறார்.
மனைவி உயிர் பிழைத்து வந்ததும் சங்கரய்யா செய்த முதல் வேலை முரசாெலியை விட்டு நின்றது, இரண்டாவது எம்ஜிஆரிடம் கெஞ்சி, கட்சி அலுவலகத்தில் தாெலைபேசி பொறுப்பாளரானது. 300ரூபாய் சம்பளத்துக்கு முக்கிக்காெண்டிருந்த சங்கரய்யாவிற்கு தலைவர் தந்த மாதசம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூபாய்15,000.
குசேலன் கூட கண்ணனுக்கு அவல் தந்து, அதை அவன் தின்றதற்கு பின்னாலே கஷ்டம் நீங்கினான். ஆனால் என் இதய தெய்வத்தின் கடைக்கண் பார்வை பட்டதும், சங்கரய்யா சங்கடம் போய் சந்தாேஷஅய்யா ஆகி விட்டார்!
நன்றி அரிமா சந்திரசேகரன் எம். முகநூல் பக்கம்
http://i66.tinypic.com/fnxzk0.jpg
திரு ஜெமினிகணேசன் அவர்கள் புரட்சித்தலைரஐ பற்றி சொல்லிய மிகுந்த நெகிழ்ச்சியான செய்தி.
"அண்ணன் எம்ஜிஆர் அவர்களின் கொடைத்தன்மை குறித்து நான் சொல்லித்தான் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இருப்பினும் இந்த முக்கியமான நிகழ்வு மக்களுக்கு அவசியம் தெரியவேண்டிய ஒன்று... "
"நல்ல காரியங்களுக்கு உதவி செய்வதில் அண்ணன் எம்ஜிஆர் க்கு ஒப்பாக ஒருவரையும் சொல்ல இயலாது. செய்திருக்கிறார். செய்கிறார். செய்வார். இதை யாரும் மறுக்கவே முடியாது.
ஒரு முக்கிய நிகழ்ச்சி...!
" என் அத்தை டாக்டர் முத்துலட்சுமி பொறுப்பில் சென்னை அடையாறில் அவ்வை ஹோம் பள்ளி நடத்திவந்தார். அந்தப்பள்ளிக்கு அண்ணன் எம்ஜிஆர் அவர்களிடம் நிதியுதவி கேட்டிருந்தார். அவரும் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் குறித்த நேரத்திற்கு அவரால் பணம் கொடுக்க இயலவில்லை. ஆனால் தான் வாக்குறுதி கொடுத்துவிட்டோமே என்று சிறிதளவும் கவலைப்படாமல் ஒருவரிடம் கடன் வாங்கித்தான் அந்த நிதியுதவியை செய்தார் என்று என் அத்தை கண்கலங்கியபடி கூறியதைக் கேட்டு நான் அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தேன். இப்படி கையில் பணமில்லாமல் கொடுத்த வாக்குறுதிக்காக கடன் வாங்கி ரூபாய் முப்பதாயிரத்தை சர்வசாதாரணமாக நிதியாக கொடுத்த அண்ணன் எம்ஜிஆர் ஐ நான் என்னென்று சொல்ல ".
ஆம்.....எவ்வளவு உண்மை...!!!
இப்படியெல்லாம் கூட ஒருவர் தர்மத்தையும் வள்ளல் தன்மையையும் நிலைநாட்ட முடியுமா ? என்று கடவுள் கூட பொறாமை கொள்ளும் அளவிற்கு இருந்தது அன்னாரின் ஒவ்வொரு செயலும்... என்று மிகையாக சொன்னாலும் அது நம் தலைவரைப் பற்றிய மிகக் குறைவான மதிப்பீடாகத் தெரிகிறது.
l
நன்றி - திரு. பாலசுப்ரமணியன் (Bala Subramanian) முகநூல் பக்கம்.
http://i67.tinypic.com/douiat.jpg
சென்னையை அடுத்திருக்கும் ஒரு பகுதியில் புரட்சித்தலைவர் நடித்த உதயம் புரொடக்ஷன்ஸாரின் "பல்லாண்டு வாழ்க" படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது...
அந்த இடம் சரியான குடிநீர் வசதி, மின்வசதி, சாலை வசதி எதுவுமே இல்லாத இடம். அங்கிருந்து சென்னை க்கு போனில் தொடர்பு கொள்ள முயன்றால் இரவில் தான் பேசமுடியும். அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் எப்படி தான் வந்தார்களோ தெரியவில்லை.
தலைவரை சந்திக்க காலை 9 மணியளவில் அடிக்கும் வெயிலில் வரிசையாக நின்று கொண்டிருந்த அத்தனை குழந்தைகளையும் மேக்கப்போடு வியர்க்க வியர்க்க சந்தித்து தழுவி தட்டிக்கொடுத்து முத்தம் தந்து பிஸ்கட் பாக்கெட்டுகளைக் கொடுத்ததை கண்ட அனைவரின் கண்களும் கலங்கின.
அதுமட்டுமில்லாமல் அங்கிருந்த தயாரிப்பாளருக்கும் மற்றவர்களுக்கும் மிக ஆச்சரியம் தந்த விஷயம்,..!!
"அருகில் கடைகள் எதுவும் இல்லாத இடத்திற்கு எப்போது யாரை அனுப்பி இவ்வளவு விலையுயர்ந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை வரவழைத்தார்? " என்பது தான்...!!
இதுபற்றி கேட்டதற்கு...
அனைவருக்கும் ஒரு புன்னகையை மட்டும் பரிசாகத் தந்தார்.
"ஒருவருக்கு உதவி செய்வதில் கூட மற்றவர்களுக்கு தெரியாமல் அந்த உதவியை செய்யவேண்டும்" என்ற உயர்ந்த குணம் மக்கள்திலகம் அவர்கள். அவரால் மட்டுமே தான் இப்படி மனிதநேயத்தோடு நடந்துகொள்ளமுடியும் என்பதை அடியேன் சொல்லித்தான் விளக்கவேண்டுமா...!!!???
நன்றி - திரு. பாலசுப்ரமணியன் (Bala Subramanian) முகநூல் பக்கம்.
http://i67.tinypic.com/28ksndu.jpg
புரட்சித்தலைவரின் "இதயக்கனி" [ நான் சொல்லுவது இதயக்கனி திரைப்படத்தை பற்றி மட்டுமே] மாபெரும் வெற்றி படம் அதில் என்றும் அனைவரின் கவனத்தை கவரும் பாடல் "நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற" என்ற பாடல்.
இந்த பாடலில் புரட்சித்தலைவர் சொல்லித்தான் கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் "பஞ்ச பூதங்களை" பற்றி எழுதினார் என்பது எவ்வளவு நபர்களுக்கு தெரியும்?
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
நன்றி = திரு. சைலேஸ் பாசு அவர்கள் முகநூல் பக்கம்.
http://i68.tinypic.com/2wel9xw.jpg
K Sankar
to
அ.இ.அ.தி.மு.கழகம்-சென்னை
September 17 at 9:19am ·
எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள்-II
# ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி திட்டத்தின்
கீழ் ரூபாய் 10000 வழங்க உத்தரவிட்டார்.
# விதவை மறுமணத்திட்டத்தின் கீழ் தம்பதியர்களுக்கு ரூ.5300 வழங்க உத்தரவிட்டார்.
# கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு தாழ்த்தப்பட்டோரை மற்ற இனத்தவர்கள் மணம் புரிந்து கொண்டால் தலா ரூ.4300 வழங்க உத்தரவிடப்பட்டது.
# 10000 ஏழை தாய்மார்களுக்கு தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டது.
# மதுரை மாநகரில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தி தமிழறிஞர்களை கவுரவப்படுத்தினார்.
# நக்சலைட்டுகளை அறவே ஒழித்து தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழச்செய்தார்.
# Encounters இல்லாமல் தமிழகத்தில் ரவுடியிசம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கை நிலை நாட்டினார்.
# புதிய தொழிற்கொள்கையை ஏற்படுத்தி அன்னிய முதலீடுகளுக்கு அடிகோலினார்.
# தமிழறிஞர்கள் திரைப்பட கலைஞர்கள் மற்றும் நாடக கலைஞர்களுக்கு கலைமாமணி விருது தொடர்ந்து வழங்கிடச்செய்தார்.
# ஆஸ்தான அரசவைக் கவிஞர் பதவி நாமக்கல் கவிஞருக்குப் பிறகு நீண்ட காலம் கொடுக்கப்படாமல் இருந்து வந்தது. கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் தகுதியான ஒருவருக்கு அப்பதவி வழங்கப்பட வேண்டும் என கருதி கவிஞர் கண்ணதாசனுக்கு அரசவைக் கவிஞர் பதவி வழங்கி ஒரு அமைச்சருக்குரிய சலுகைகளையும் அளித்து அழகு பார்த்தார்.
# சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் wholesale steel market ஐ மிகப்பெரிய அளவில் திருவொற்றியூரை அடுத்துள்ள சாத்தங்காடு என்ற இடத்தில் நிறுவினார்.
# ஆசியாவிலேயே பெரிய அங்காடி கோயம்பேட்டில நிறுவிட திட்டம் தீட்டி செயல்படுத்த முனைந்தார்.
# சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை நவீன கருவிகளுடன் புதிய கட்டிடம் கட்டிட ஏற்பாடு செய்தார்.
# தமிழகமெங்கும் கிராம மக்களின் வசதிக்காக அதிக எண்ணிக்கையில் சுகாதார மையங்கள் அமைத்தார்.
# சென்னை கோட்டுர்புரத்தில் வெள்ளம் சூழ்ந்தபோது முழங்கால் அளவு நீரில் அதிகாரிகளுடன் பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை சரி செய்ய உத்தரவிட்டார்.
# சென்னை திருவல்லிக்கேணியில் அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலின் குளத்தை பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சுத்தம் செய்து நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந் தேரோட்டத்தை நடைபெறச்செய்தார்.
# முறையான நிர்வாகமில்லாமல் நன்கு பராமரிக்கப்படாமல் பாழடைந்த புராதன கோயில்களை இந்து அறநிலையத்துறையின்
கீழ் கொண்டுவந்து அவைகளை சீரமைத்தார்.
# நாட்டின் முன்னேற்றத்திற்காக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நடைமுறைபடுத்திய இருபது அம்ச திட்டத்தின் கீழ் ஒரு அம்சமான கொத்தடிமை ஒழிப்புத் திட்டத்தை முழுயைாக செயல்படுத்தினார்.
# அறிஞர் அண்ணாவன் பவள விழா மூதறிஞர் இராஜாஜி எழுச்சி
கவிஞர் பாரதியார் மற்றும்
புரட்சி கவிஞர் பாரதிதாசன் பகுத்தறிவுப்பகவலன் பெரியார் ஆகியோரின் நூற்றாண்டு விழாவினை தமிழக அரசு சார்பில் கொண்டாடி சிறப்பு செய்தார்.
# அரசு விழாக்களில் ஆடம்பரத்தை தவீர்த்து சிக்கனத்தைக் கடைபிடித்தார்.
# தமிழக அரசின் சார்பில் அளித்த முதல்வருக்குரிய வாகன வசதியை தவிர்த்து சொந்த காரிலேயே பயணித்து அனைவருக்கும் முன்னோடியாய் விளங்கினார்.
# 1977 முதல் 1983 வரைபெரிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் 449 தமிழகத்தில் அமைக்கப்பட்டன.இவற்றின் மொத்த மூலதனம் ரூ.850 கோடி ஆகும்.
# தொழிலாளர் நலவாரியம் மூலம் தொழிறசாலைகளில் தொழில் அமைதி நிலவ தனி அக்கறை எடுத்து கிளர்ச்சி வேலை நிறுத்தங்கள் இன்றி உற்பத்தி திறன் பாதிக்கப்படாவண்ணம் செயலாற்றினார்.
# சென்னை புறநகரில் TAMIN என்றழைக்கப்படும் தமிழ்நாடு மினரல்ஸ் தொழிற்சாலையை நிறுவினார். 1979-ல் தமிழகத்தின தொழில் வளர்ச்சி 5.2% சதவீதத்திலிருந்து 1982-ல் 12.1% சதவீதமாய் உயர்ந்தது.
# இது தவிர மத்திய அரசின் நிதி உதவி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறுவதில் தமிழகம் இந்தியாவிலேயே 3-ஆவது இடத்தைப பிடித்தது.
# 1977-78ல் தமிழகத்தில் 2124 மெகாவாட்டாக இருந்த மின்உற்பத்தி 1983-84 ஆம் வருடத்தில்
3344 மெகாவாட்டாக உயர்ந்தது.
# 20,000 இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க நிதி உதவி அளிக்க உத்தரவிட்டார்.
# கடுமையான வெள்ளத்தின்போது ரேஷன் கடைகளில் அரிசி விலையை ரூ1.75-ஆக குறைக்க உத்தரவிட்டார்.
# அரசு அலுவலகங்களில் வருகைப்பதிவேட்டில் தமிழில் கையொப்பமிட ஆணை பிறப்பித்தார்.
# பெயர் பலகை விளம்பர பலகைகளில் முதலில் தமிழில் எழுதப்படவேண்டும் என உத்தரவிட்டார்.
# தமிழ் சான்றோரகளின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு விழாக்கள் சிறப்பாக கொண்டாட வழிவகுத்தார்.
# வறுமையில் வாடும் தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கிட ஏற்பாடு செய்தார்.
# திருக்குறள் நெறி பரப்பிடும் வகையில் குறள் நெறி பரப்பு மையத்தை உருவாக்கினார். அதற்கு திருக்குறள் முனுசாமி என்ற அறிஞரை தலைவராக நியமித்தார். திருவள்ளுவர்
திருநாளன்று சிறந்த அறிஞர்களுக்கு திருக்குறள் விருது வழங்க ஏற்பாடு செய்தார்.
# தமிழகத்தின் பழங்கலைகளைப் பாதுகாக்க பழங்கலை இயக்ககம் ஒன்றை உருவாக்கினார்.
# சிறந்த எழுத்தாளருக்கு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் திரு.வி.க. விருது வழங்க ஏற்பாடு செய்தார்.
# மதுரையில் சங்கப் புலவர்களை கௌரவிக்க நினைவுத்தூண் ஒன்று நிறுவினார்.
# மேலும் அதே மதுரை மாநகரில் தமிழன்னை சிலையையும் நிறுவினார்.
# காவலர்கள் சீருடையில மாற்றங்கள் கொண்டு வந்தார்.
# சென்னை வெப்பேரியில் கால்நடை மருத்துவ பல்கலை கழகம் நிறுவ அடித்தளமிட்டார்.
# பல்வேறு புதிய அரசுக் கட்டிடங்களை தானே திறக்காமல் தன் தலைமையில் நடைபெற்ற விழாக்களில் எளிய மேஸ்திரிகளைக் கொண்டு திறக்கச் செய்து எளியவர்களையும் கௌரவித்தார்.
# திருச்சிக்கும் தஞ்சைக்கும் இடையே புதிய தலைநகரை உருவாக்க தீர்மானித்து அதற்கான வேலைகளை தொடங்குமுன்னர் எப்போதும் முட்டுகட்டை போடும் சில தலைவர்களின் போராட்டம் காரணமாக அவருடைய மனதுக்குகந்த முடிவை தள்ளி போடவேண்டியதாயிற்று. பின்னர் அவரின் உடல்நலக்குறைவால் திட்டம் நடைபெறவில்லை. இன்றும் பல கருத்தாய்வளர்களால் அத்திட்டம் மட்டு்ம் நிறைவேவறியிருந்தால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டிருக்கும் என கருதப்படுகிறது.
# மற்றொரு அவரது முடிவாக பொருளாதார ரீதியாக இட ஒதுக்கிடு அமுல்படுத்தப்பட்டது. இதுவும் அவரது எதிர்ப்பாளர்களால் முடக்கப்பட்டது. அதன் காரணமாக இட ஒதுக்கீடு பெறும் சமூகங்களில் பொருளாதாரத்தில் மிக பின்தங்கிய மக்களுக்கு கடைக்க வேண்டிய சலுகைகள் பெற முடியாமற போயிற்று.
# சத்துணவுத்திட்டம் இந்தியாவுக்கும் முன்னோடடி திட்டமாக இன்று உள்ளது. ஐ.நா.வின் நிறுவனங்கள் சத்துணவால் குழந்தைகளுக்கு பல பிணிகள் நீங்கியுள்ளதை ஆவணப்படுத்தி உள்ளன.
# பூரண மது விலக்கு 1977 முதல் 1980 வரைஅமுல்படுத்தினார். அதன் பிறகு அமுல் படுத்த முடியாமைக்கு பல அரசியல் காரணங்கள் உள்ளன.
# பெண்களுக்கென பேரூந்துகள் அவரது ஆட்சியில்தான் முதன்முதலாக இயக்கப்பட்டன.
# சுற்றுலாத்துறை மேம்பட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
# குடிசைகளுக்கு வீட்டுக்கொரு மின்விளக்கு திட்டத்தினை அமுல்படுத்தினார்.
# மின்சாரத்தேவையை மனதில் கொண்டு குந்தா போன்ற நீர் மின்நிலையங்களை அமைத்தார். காற்றாலைகள் அமைத்திட அரசு உதவி அளித்தார்.
# தமிழக மக்களின் நலனை மனதிற்கொண்டு மத்தியில் அமையும் மாற்று கட்சி அரசுடனும் சுமுக உறவு கொண்டு தமிழகத்திற்கு தேவையான நலத்திட்டங்களை கொண்டு வர ஏற்பாடு செய்தார்.
# பள்ளி குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்கிட அன்றைய பிரதமர் ராஜிவிடம் உதவி வேண்டினார். முதலில் மறுத்த ராஜிவ் பின்னர் எம்.ஜி.ஆரின் மீதுள்ள அன்பின் காரணமாக சம்மதித்தார். இத்திட்டங்களையெல்லாம் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லவில்லை.
எம்.ஜி.ஆர் சொன்னதை செய்தார்.சொல்லாததையும் செய்தார். முக்கியமாக செய்ததை சொல்ல மாட்டார் வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்.
அவரது மனித நேயத்தைப் போற்றுவோம்.
நன்றி = திரு. கே.சங்கர் அவர்கள் முகநூல் பக்கம்.
http://i68.tinypic.com/9jg93m.jpg
இந்தப் படத்தைப் பார்த்ததும் தங்கத்தில் குழைத்தெடுத்த சிரிக்கும் ரோஜா மலர் என்று ஏதாவது எழுதலாம் என்று பார்த்தேன். என்ன எழுதினாலும் புரட்சித் தலைவரின் அழகு சிரிப்புக்கு ஈடாகாது என்பதால் விட்டு விட்டேன்.
ஆயிரத்தில் ஒருவன் படம் இருக்கட்டும் இந்தப் படத்தையே மூன்று மணி நேரம் பார்த்தாலும் இன்னும் பார்க்க வேண்டும் போல தோன்றுகிறது.
20.9.1968
மக்கள் திலகத்தின் 100 வது திரைப்படம் ''ஒளிவிளக்கு '' இன்று 49வது ஆண்டு விழா துவக்கம் .
மெல்லிசை மன்னரின் இசை .
இந்தி பட கதையின் தழுவல் .
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வந்த படம் .
எம்ஜிஆரின் ஸ்டைல்
எம்ஜிஆரின் உடை அலங்காரம்
எம்ஜிஆரின் உன்னதமான நடிப்பு
எம்ஜிஆரின் சுறுசுறுப்பான சண்டை காட்சிகள் .
எம்ஜிஆரின் இளமையான எழில் தோற்றம் .
தத்துவங்கள் - கொள்கைகள் - இனிய பாடல்கள் .
விறுவிறுப்பான படம் .
மொத்தத்தில் எம்ஜிஆரின் ''ஒளிவிளக்கு '' -1968ல் கொடுத்த ஒளி வட்டம் - 48 ஆண்டுகளாக ஜெக ஜோதியாக
அணையா விளக்காக பிரகாசத்துடன் அகிலமெங்கும் கோடானுகோடி ரசிகர்களின் உள்ளங்களில் ஜொலித்து
கொண்டு இருக்கிறார் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
1968-
1968 ஆண்டில் மக்கள் திலகத்தின் ரசிகர்களை தீவிர எம்ஜிஆர் ரசிகர்களாக மாற்றிய படங்கள்.
ரகசிய போலீஸ் 115
குடியிருந்த கோயில்
ஒளிவிளக்கு
***************************
ரகசிய போலீஸ் 115
--------------------------------
பறக்கும் பாவை -1966 படத்திற்கு பின் வந்த படம் பந்துலுவின் ரகசிய போலீஸ் 115 வண்ணப்படம் . எம்ஜிஆர் ரசிகர்களுக்கு விருந்து வைத்த படம் . மக்கள் திலகம் எம்ஜிஆர் துப்பறியும் அதிகாரியாக நடித்த படம் .புதுமையான சண்டை காட்சிகள் - இனிமையான பாடல்கள் என்று வந்த படம் .எம்ஜிஆரின்
ஸ்டைல் , உடைகள் , சுறுசுறுப்பான சண்டை காட்சிகள் மக்கள் திலகத்தின் ரசிகர்களை மேலும்தீவிர ரசிகர்களாக மாற்றியது .11/1/1968ல் வந்து மாபெரும் வெற்றி அடைந்த படம் .
குடியிருந்த கோயில் - 15.3.1968
.................................................. .........
மக்கள் திலகம் இரட்டை வேடங்களில் அசத்திய மாபெரும் வெற்றி படம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .எம்ஜிஆரின்
மாறுபட்ட நடிப்பு படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி . திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் திருவிழா கோலம்.
மக்கள் திலகத்தின் பெருமைகளுக்கு பெருமை சேர்த்த படம் . ரசிகர்கள் தீவிர பக்தர்களாக மாற்றிய படம் .வசூலில் புதிய வரலாற்றை உருவாக்கிய படம் .
ஒளிவிளக்கு - 20.9.1968
*********************************
ஜெமினியின் முதல் வண்ணப்படம் .மக்கள் திலகத்தின் 100 வது படம் .பிரமாண்ட படைப்பு .மக்கள் திலகத்தின் சிறந்த
நடிப்பில் , பிரகாசித்த படம். ஜெமினி தயாரித்த படங்களில் அதிக வசூல் , அதிக நாட்கள் என்று பல சாதனைகள் புரிந்த படம் .மறு வெளியீட்டில் இலங்கையில் மீண்டும் 100 நாட்கள் ஓடிய படம் . மதுரை நகரில் 21 வாரங்கள் ஓடிய படம்
1968ல் மக்கள் திலகத்தின் மூன்று வண்ணப்படங்கள் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ் கடித்தன என்றால் மற்ற 5 படங்கள் ஆனந்த வெள்ளத்தில் மிதக்க விட்டது .
தேர்த்திருவிழா - பொழுது போக்கு நிறைந்த படம் .
கண்ணன் என் காதலன் - இன்னிசை சித்திரம் .
புதிய பூமி - ரசிகர்களை ஆண்டார் .
கணவன் - புதுமையான படம்
காதல் வாகனம்- ரசிகர்கள் விரும்பிய வாகனம் ..
M.G.R. முதல்வராக அரியணையில் அமரும் வரை அவர்தான் தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும்; அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும்; நம்பர் 1 ஹீரோவாகவும் இருந்தார். நாடகத்தில் நடித்து, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து, சாதாரண நடிகராக அறிமுகமாகி, துணை பாத்திரங்களில் நடித்து, பின்னர் கதாநாயகனாக உயர்ந்து நம்பர் 1 இடத்தை அவர் பிடித்தது ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தால் அல்ல. அதற்கு பின்னால் இருந்தது அவருடைய ஈடுபாடு மிகுந்த திட்டமிட்ட கடும் உழைப்பு.
எம்.ஜி.ஆரின் 100-வது படம் ஜெமினியின் ‘ஒளிவிளக்கு’. எஸ்.எஸ்.வாசன் தயாரித்தார். எம்.ஜி.ஆரின் முதல் படமான ‘சதிலீலாவதி' கதையை எழுதியவர் வாசன். ஜெமினி பேனரில் அவர் தயாரித்த படமே எம்.ஜி.ஆரின் 100வது படமாகவும் அமைந்தது சிறப்பு. இந்தியில் நடிகர் தர்மேந்திரா நடித்த ‘பூல் அவுர் பத்தர்’ என்ற படமே தமிழில் ‘ஒளிவிளக்கு’ ஆக மாறியது.
படத்தில் ஒரு காட்சியில் தீ பிடித்து எரியும் வீட்டில் சிக்கிக் கொண்டு தவிக்கும் குழந்தையை எம்.ஜி.ஆர். காப்பாற்றுவார். இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடும் நிலை யில், அவரை காப்பாற்ற இறைவனிடம் மன்றாடி சவுகார் ஜானகி பாடும்
‘ஆண்டவனே உன் பாதங் களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...’
பாடல் 1984-ல் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
‘ஒளிவிளக்கு' படத்தில் இன்னொரு விசேஷம். எம்.ஜி.ஆர். மது குடிப்பது போன்ற காட்சி அமைப்பு. படங்களில் கூட சிகரெட், மதுவை தொடாத எம்.ஜி.ஆர். குடியின் தீமையை உணர்த்துவதற் காக, தானே குடிப்பது போல நடித்த ஒரே படம். குடியின் தீமையை உணர்த்தும் வகையில்
‘தைரிய மாக சொல் நீ மனிதன்தானா? நீ தான் ஒரு மிருகம். இந்த மதுவில் விழும் நேரம்...’
பாடலில் எம்.ஜி.ஆரின் மனசாட்சி அவர் வடிவில் மேலும் 4 பேராக; மொத்தம் 5 எம்.ஜி.ஆர்கள் பல வண்ண உடைகளில் திரையில் தோன்றும் காட்சியில் தியேட்டர் இரண்டுபடும்.
இப்போது போல எல்லாம் அப்போது சினிமாவில் தொழில்நுட்பம் முன்னேறவில்லை. ‘மாஸ்க்' முறையில் ஒவ்வொரு எம்.ஜி.ஆராக இந்தக் காட்சியை எடுத்திருப்பார்கள். காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, காலையில் இருந்து இரவு முதல் பல நாட்கள் இந்தப் பாடல் காட்சிக்காக எம்.ஜி.ஆர். மெனக்கெட்டார்.
பாடல் காட்சி முழுவதும் படமாக்கப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவிலேயே ரஷ் போட்டு பார்க்க வேண்டும். படத்தின் தயாரிப்பு வேலை களை எஸ்.எஸ்.வாசனின் மகனும் ‘ஆனந்த விகடன்’ ஆசிரியராக இருந்தவரும் ஊழியர்களால் மரியாதையாக ‘எம்.டி’ என்று அழைக்கப்பட்டவரு மான எஸ்.பாலசுப்ரமணியன் கவனித்து வந்தார். பின்னர், எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்' படத்தையும் இவர்தான் இயக்கினார்.
பாடல் காட்சிக்காக காலையில் இருந்து இரவு வெகு நேரமாகியும் நடித்துக் கொடுத்த எம்.ஜி.ஆர். களைப்பு காரணமாக, பாடல் காட்சியின் ரஷ் பார்க்காமலேயே நள்ளிரவில் வீட்டுக்குப் புறப்பட்டார். ‘‘ரஷ் பார்த்துவிட்டு எப்படி வந்திருக்கிறது என்று எனக்கு போன் பண்ணி சொல்லுங்கள்’’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார்.
சிறிய அரங்கில் ரஷ் பார்த்தபோது ‘தைரியமாக சொல் நீ... ’
பாடல் காட்சி சிறப்பாக வந்திருந்தது. உடனே, ‘‘எம்.ஜி.ஆருக்கு போன் செய்து நல்லா வந்திருக்குன்னு சொல்லிடுப்பா..’’ என்று உதவியாளரிடம் கூறினார் பாலசுப்ரமணியன். அப்போது, பின்னாலிருந்து அவரது தோள் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தபோது புன்னகையுடன் நின்றிருந்தார் எம்.ஜி.ஆர்.
விஷயம் என்னவென்றால், களைப்பால் வீட்டுக்குக் கிளம்பிய எம்.ஜி.ஆருக்கும் பாடல் காட்சி எப்படி வந்திருக்கிறது என்று பார்க்க ஆசை. அதனால், களைப்பை உதறிவிட்டு ரஷ் திரையிடும் அரங்குக்குள் வந்து, படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக பின்னால் அமர்ந்திருக்கிறார். தொழிலில் அவ்வளவு ஆர்வம். அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு!
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் முதன்முதலில் பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் ‘நாடோடி மன்னன்.’ சரவணா ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘படகோட்டி.’ விஜயா கம்பைன்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’ ஏவி.எம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘அன்பே வா’ படம்தான் அந்நிறுவனத்தின் முதல் வண்ணப்படம். ஜெமினி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் வண்ணப்படம் ‘ஒளிவிளக்கு’. சத்யா மூவிஸ் பேனரில் தயாரான முதல் வண்ணப்படம் ‘ரிக் ஷாக்காரன்’. தேவர் ஃபிலிம்ஸ் முதல் வண்ணப்படம் ‘நல்ல நேரம்’. இந்த எல்லா படங்களிலும் கதாநாயகன் வண்ணமிகு நாயகன் எம்.ஜி.ஆர்.
courtesy - the hindu tamil.
மக்கள் திலகத்தின் ''ஒளி விளக்கு '' ஒரு சிறப்பு பதிவு .
1936 ல் ஜெமினியின் தயாரிப்பில் சதிலீலாவதி - தமிழ் படத்தின் மூலம் சிறு வேடங்களில் நடிக்க துவங்கி 10 ஆண்டுகளில் பல போராட்டங்களுக்கு பிறகு1947ல் தமிழ் சினிமாவில் -ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 1968ல் 100 வது படமான ஜெமினியின் தயாரிப்பில் வந்த
படம் ''ஒளிவிளக்கு ''
பிரம்மாண்ட வண்ணப்படம்
மக்கள் திலகத்தின் அசத்தலான அலங்கார உடைகள் -ஒப்பனைகள் - ஸ்டைல் காட்சிகள் .
குடியின் தீமைகளை பாடல் காட்சிகளில் மூலம் சித்தரித்த மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .
திருடுவதால் ஏற்பாடும் தீமைகள் - சமூகத்தில் கிடைக்கும் கேட்ட பெயர் - யாருமே திருடனாக
மாறக்கூடாது என்ற சமூக சீர்திருத்த கதையில் நடித்த புரட்சி நடிகர் .
1968ல் அன்றைய அண்ணாவின் அரசின் சாதனைகளை ''நாங்க புதுசா '' என்ற பாடல் மூலம்
கொள்கைகளை பரப்பியவர் எம்ஜிஆர் .
மெல்லிசை மன்னரின் அட்டகாசமான டைட்டில் இசை - மக்கள் திலகத்தின் போஸ் சூப்பர் .
ஆரம்ப காட்சியில் மனோகருடன் மோதும் சண்டை காட்சி -புதுமையான முறையில் இருந்தது .
சொர்ணம் அவர்களின் வசனங்கள் - பல இடங்களில் நெஞ்சை தொடுவதாக இருந்தது .
நான் கண்ட கனவில் நீ ..... பாடலில் ஜெயாவின் அறிமுகம்
மாங்குடி கிராமத்திற்கு மக்கள் திலகம் செல்லும் காட்சி
சோ வின் சந்திப்பு
ஜமீன்தார் வீட்டில் சௌகார் ஜானகி அறிமுகம்
அவருக்கு செய்யும் மக்கள் திலகத்தின் சேவை
கள்ள பார்ட் நடராஜனை புரட்டி எடுத்த காட்சி
சௌகாரை மீட்டு தன் வீட்டுக்கு அழைத்து வருதல்
வலுக்கட்டாயமாக மக்கள் திலகத்தை குடிக்க வைக்கும் காட்சியும்- ஜெயாவின் நடனமும்
மெல்லிசை மன்னரின் பிரமாதமான இசையும் அதை தொடர்ந்து ''தைரியமாக சொல் ''
பாடலும் காண்போர் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு படம் விறுவிறுப்பாக செல்லும் .
சௌகாரை கேவலமாக பேசிய ஜஸ்டினை மக்கள் திலகம் படிக்கட்டுகளில் ஏறி தூங்கி கொண்டிருந்த அவர எழுப்பி வீதிக்கு அழைத்து வந்து புரட்டி எடுக்கும் இடம் - சூப்பர் .
கவர்ச்சி வில்லனிடம் ''வீரன் கோழையான வரலாறு ''என்று அசோகன் கூறும் பிளாஷ் பேக் காட்சி
மொட்டை நடராஜனிடம் மக்கள் திலகம் மோதும் ஆவேசமான சண்டை
''ருக்குமணியே '' என்ற வித்தியாசமான பாடலில் அந்தரத்தில் தொங்கி கொண்டே மக்கள் திலகம்
பாடல் காட்சி - புதுமை
திருடன் என்று பெயர் வாங்கியதால் எங்குமேவேலை கிடைக்காமல் சோர்வுடன் திரும்பும் எம்ஜிஆரின் நடிப்பு - முக பாவம் அசத்தல் .
தீயில் சிக்கிய குழந்தையை காப்பாற்றும் காட்சி - மரணப்படுக்கையில் இருந்த மக்கள் திலகத்தின் உயிரை காப்பாற்ற ஆண்டவனிடம் சர்வ மதத்தினரும் பிராத்தனை - சௌகாரின் பாடல் -உருக்கமான காட்சிகள் -
மாம்பழ தோட்டம் -பாடல் சீர்காழி - ஈஸ்வரி குரலில் இனிமையான பாடல் .
இறுதி காட்சிகளில் மக்கள் திலகம் - மனோகர் சண்டை
மக்கள் திலகம் - அசோகன் சண்டை என்று 15 நிமிடங்கள் விறுவிறுப்பாக சென்ற காட்சிகள் என்று ''ஒளிவிளக்கு '' படம்
ரசிகர்கள் - பொதுமக்களுக்கு விருந்து படைத்த படம் .
மொத்தத்தில் எம்ஜிஆரின் ஒளிவிளக்கு -
உலகம் உள்ளவரை எம்ஜிஆரின் ''அணையா விளக்கு ''
எம்.ஜி.ஆர் திரைபடப்பட வசனங்களும் & பாடல்களும்
சினிமாவில் லாபம் மட்டுமே நினைப்பவர்களுக்கு மத்தியில், தரமான சிந்தனைகளையும், ஒழுக்கம் தரும் பண்புகளையும் தமது படங்களின் கதாபாத்திரங்களின் மூலம் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவ்ர் எம்.ஜி.ஆர். அநாகரீக வார்த்தைகளை பேசுதல். புகைபிடித்தல், குடிபழக்கம் போன்றவறை தமது படங்களில் முற்றார் தவிர்த்த இவர் நடிகர் என்பதையும் மீறி, சமுதாய பற்றாளராகவும் பரிணாமித்தார். எம்.ஜி.ஆர். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய கருத்துக்களை வசனமாக இடம் பெற செய்வார். அவை மக்கள் மனதில் மிகவும் பிரபலமடைந்தன.
நாடோடி: படிக்கிறவங்க புத்திசாலியாகலாம் எல்லோரும் அறிவாளி ஆக முடியாது. அனுபவந்தான் அத தர முடியும்.
நம்நாடு: எனக்குள்ள மூலதனம் என்ன தெரியுமா? மக்களுடைய அன்பும், என்னுடைய நாணயமுந்தான். அதுக்கு என்றுமே மோசம் வராது.
தாயைக் காத்த தனயன்:பிள்ளைகளின் ஆசையை தீர்த்து வைக்கும் பெற்றோர்கள் இருந்து விட்டால் நாட்டில் தற்கொலை என்ற சொல்லுக்கு இடம் இருக்காது.
ஆயிரத்தில் ஒருவன்: யாரோட தாகமாக இருந்தாலும் தாகத்தை தீர்ப்பதுதான் தண்ணீரின் கடமை.
விவசாயி: நாம் பிறர் திருந்துவதற்கு உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர கெடுவதற்கு காரணமாக இருக்கக் கூடாது.
கணவன்: சத்தியம் சில நேரம் தூங்கும். ஆனால் என்றுமே சாகாது.
சமூகத்திற்குண்டான நல்ல கருத்துக்களை தன் படத்தில் இடம்பெற வைப்பது எம்.ஜி.ஆரின் பாணி. இப்படி, சினிமாவின் மூலம் எவ்வளவு கருத்துக்களையும் நல்ல விஷயங்களையும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க முடியுமோ. அத்தனையயும் தமது திரைப்படங்களின் வழி கொண்டு போர் சேர்த்த பெருமை இவருக்கு உண்டு. அதே வேளையில் தமது திரைப்படங்களின் இடம் பெறும் பாடல்களும் குழந்தைகள், பெண்கள், உழைப்பாளிகள், பாட்டளிகள், இளைஞர்கள், பெரியோர்கள் என்று எல்லா தரப்பினருக்கும் நன்மையையும், தன்முனைப்பான விஷயங்களை எடுத்துணர்த்தும் வகையிலேயே எழுத செய்திருப்பார். தமது பாடல்களின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தை எல்லா மக்களின் மனதிலும் பதியவைக்க முடியாது. சினிமா மூலம் தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு, சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது என்று நம்புகிறவர் எம்.ஜி.ஆர்..
வேட்டைக்காரன் - உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
நாளை நமதே - நாளை நமதே இந்த நாளும் நமதே, தாய்வழி தங்கங்கள் எல்லாம் நேர்வழி
சென்றால் நாளை நமதே
நம்நாடு - அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம், பேரை வாங்கலாம்.
உலகம் சுற்றும் வாலிபன் - சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைக்க வாழ்ந்திடாதே.
திருடாதே - திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே..!
மன்னாதி மன்னன் : அச்சம் என்பது மடமயடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா! ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயாகம் காப்பது கடமையடா..
படகோட்டி : கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவர் யாருக்காக கொடுத்தார், ஒருத்தரக்கா கொடுத்தார் இல்லை ஊருக்காக கொடுத்தார்.
இப்படி எத்தனை எத்தனை பாடல்கள்.. எல்லாமே சமுதாய பற்றோடு மக்களுக்காக கொடுக்கப்பட்ட பாடல்கள். அன்று எழுதப்பட்ட இந்த கருத்தாழமிக்க பாடல்கள் இன்றைய நவீன காலத்திலும் நம் இதயங்களில் இளையோடுகிறது. சமுதாய பாடல்களைத் தவிர்த்து எம்.ஜி.ஆரின் காதல் பாடல்களை பற்றி சொன்னால் அது தித்திக்கும் தேன் போல் இருக்கும். அத்தனையும் முத்தான காதல் பாடல்கள். இந்த வெற்றிக்கெல்லாம் மிக முக்கியானவர்கள் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, கவிஞர் கண்ணதாசன், வாலி, பாடகர்கள் டி.எம்.எஸ். செளந்தராஜன், பி.சுசீலா கூட்டணி. இந்த கூட்டணிக்காகவே எம்.ஜி.ஆர். படங்களின் பாடல்களை பார்க்க திரையரங்கம் சென்ற கூட்டம் உண்டு.
எம்.ஜி.ஆர். நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். கவிஞர் வாலி, பாபநாசம் சிவன், கலைஞர் கருணாநிதி, உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா, அ.மருதகாசி, ஆலஙகுடி சோமு ஆகியோர் எம்.ஜி.ஆரின் பாடகளில் மூலம் மக்களைக் கவர்ந்தவர்களாவர்.
courtesy - net
http://i64.tinypic.com/334hx6s.jpg
புரட்சித் தலைவர், வலது ஓரத்தில் வருபவர் என்.டி.ராமராவ். நடுவில் சி.சுப்பிரமணியம். அபூர்வ படம்.
அபூர்வமான புகைப்படம். நன்றி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி திரு.சிவா.
http://i63.tinypic.com/2vdjx29.jpg
புரட்சித் தலைவர் அமர்ந்திருக்கும் வரிசையில் முதலில் இருந்து…. நாகிரெட்டி, பட்சிராஜா ஸ்டூடியோ மோதி ஸ்ரீ ராமுலு நாயுடு போல தெரிகிறது.உறுதியாக தெரியவில்லை, கண்ணதாசன் அண்ணன் ஏ.எல்.சீனிவாசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இயக்குநர் கே.சுப்பிரமணியம்,
திரு.சிவாஜி கணேசன் அமர்ந்திருக்கும் வரிசையில் முதலில் இருந்து…. ஏ.வி.மெய்யப்ப செட்டியார், எஸ்.எஸ்.வாசன், சி.சுப்பிரமணியம், சிவாஜி கணேசன்,
திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அமைச்சர் சி.சுப்பிரமணியம் கலந்து கொண்டிருப்பதால் அரசு சார்பில் திரைப்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் என்று தெரிகிறது. விவரங்கள் தெரியவில்லை.
தற்போது (காலை 11 மணி முதல் ) சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர். நடித்த "கொடுத்து வைத்தவள் " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i64.tinypic.com/34y8pip.jpg
இன்று (21/09/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த " நல்ல நேரம் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i65.tinypic.com/wtiwdf.jpg
குமுதம் லைப் -28/09/2016
http://i63.tinypic.com/29oqtkk.jpg
http://i63.tinypic.com/2hi9tvn.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் , நடிகை சாவித்திரி, மகாதேவி, பரிசு, வேட்டைக்காரன் ஆகிய படங்களிலும், நகைச்சுவை நடிகர் சந்திரபாபு , தயாரித்து
இயக்கி, வெளிவராமல் போன "மாடி வீட்டு ஏழை "படத்திலும் கதாநாயகியாக
நடித்து இருந்தார் .
வேட்டைக்காரன் படத்தில், மக்கள் திலகத்துடன் , நடிகை சாவித்திரி நடித்த காதல்
மற்றும் பாடல் காட்சிகள் பற்றி அந்த காலத்தில் கொஞ்சம் முணுமுணுப்பு இருந்தது .
மக்கள் திலகத்தின் படங்கள் 1956ல் ஒரு புதிய வரலாற்றை
படைத்தது .
மக்கள் திலகத்தின் ''தாய்க்கு பின் தாரம் ''
60 வது ஆண்டு நிறைவு.
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் மக்கள் திலகம் நடித்த முதல் வெற்றி படம் .
1.மாடர்ன் தியேட்டரின் ''அலிபாபாவும் 40 திருடர்களும் '' முதல்; தென்னிந்திய வண்ணப்படம் . 1956 பொங்கல் அன்று வெளிவந்து பிரமாண்ட வெற்றி அடைந்த படம் .மக்கள் திலகத்தின் புகழுக்கு புகழ் சேர்த்த படம் .
2. தமிழ் புத்தாண்டு அன்று வந்த ''மதுரை வீரன் '' வெள்ளிவிழா காவியம் .அதிக அரங்கில் 100 நாட்கள் ஓடிய வரலாற்று காவியம் .
3.மக்கள் திலகம் நடித்த சமூக படம் .'' தாய்க்கு பின் தாரம் '' அவரின் சிறந்த நடிப்பாற்றல் இந்த படத்தின் மூலம் அறியப்பட்டது .
மக்கள் திலகத்தின் நடிப்பு - வீர தீர சண்டைகாட்சிகள் - ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது .
http://i67.tinypic.com/1zvc3kh.jpg
“நடிகத் தோழர்களின் சேவை, நாட்டுக்குப் பலவகைகளிலும் பயன்படுகிறது. கலையை மட்டும் அல்லாது, நாட்டின் பல்வேறு நிறுவனங்களையும் வளர்க்கும் பெருமை நடிகத் தோழர்களில் பலரைச் சாருகிறது.
கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், தன் கொடைத்திறனால் மக்கள் மன்றத்தில் பெருமதிப்புப் பெற்றவர். பிறர் கண்ணீரைக் காணச் சகியாத உள்ளம், அவர் உள்ளம். இல்லையென வருவாருக்கு, இயன்ற மட்டும் தருவது அவர் பழக்கம். கைப்பணத்திலும் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.
அந்த வரிசையிலே இப்பொழுது புரட்சி நடிகர் எம்ஜிஆர் இடம் பெறுகிறார். புயல் நிவாரண நிதிக்கு அவர் வாரி வழங்கிய தன்மையை நாடறியும். இப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கும், தெற்குத் திட்டங்களத்து ஆதிதிராவிடப் பள்ளிக்கும், சென்னை தியாகராயர் கல்லூரிக்கும் முறையே ரூ 1000, 2000, 2500 நன்கொடையாகத் தந்துள்ளார். அதன்றியும் அகில இந்தியப் பெண்கள் உணவு சங்கத்தின் சென்னைக் கிளைக்கும் ரூ. 500ம் தந்துள்ளார்.
வருமானம் அதிகரிக்கலாம்; புகழ் பெருகலாம். பெரிய மனிதர்கள் கூட்டுறவு ஏற்படலாம். ஆனாலும் தாராள மனது எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. கையிலிருந்து பணம் கொடுப்பது என்றாலே, கண்களில் ரத்தம் கசியும் சிலருக்கு. வந்த பணத்தை, எப்படித் தன் குடும்பத்துக்குச் சொத்தாக்குவது என்றுதான் எல்லோருமே செய்யும் உபதேசமே, ‘பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளப்பா’ என்பதுதான். பணம் கைக்கு வந்ததும் மடிக்கு மாறி, பெட்டிக்குள் பதுங்கப் பார்க்கிறது. ‘நாம் தொல்லைப்படும் போது, யார் நமக்குத் தருகிறார்கள்? நமக்கெதற்கு வள்ளன்மை!’ என்ற பேச்சுப் புறப்படுகிறது.
‘ஐயா பசி!’ என்று அலறுபவனைப் பார்த்து, ‘எல்லார்க்கும் அப்படித்தான்! போ! போ!’ என்று இரக்கமின்றிக் கூறத் தோன்றுகிறது. கைப்பணத்துக்கும், தன் பெண்டு பிள்ளைகளுக்குமே தொடர்பு ஏற்படுத்தி, மனம் கணக்கிடுகிறது. பெரும்பகுதி மனித மனம் இப்படி இருப்பதால்தான், ஈந்து சிவக்கும் இருகரம் படைத்தோரை வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.
கலைவாணர் என.எஸ்.கே, நடிப்பிசைப் புலவர் ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதலியோர் நடிகர்களில் வள்ளல்கள் ஆவார்கள்.
திருச்சியிலும், மதுரையிலும் சமீபத்தில் மதுரைவீரன் 200 ஆவது நாள் விழா நடந்தபோது, அவற்றில் பேசிய எம்.ஜி.ஆர். ‘எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் என் கொள்கையை விட்டு நடிக்க மாட்டேன். தயாரிப்பாளர்கள் இருக்கும் இந்த மேடையிலேயே அதை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்’, என்றார்.
நான் நடிக்கப் போகும் கதையை, முன்கூட்டியே பரிசீலித்துத்தான் நடிக்கிறார். கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு. ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர். இன்றையத் திரை உலகில் தலையாய நடிகர் என்ற பெருமை புரட்சி நடிகருகுக்க் கிட்டியுள்ளது. தென்இந்திய நடிகர் சங்கத்தைத் தொடங்கி சிறப்புடன் வளர்க்கும் பெருமை இவருக்கு உண்டு.
நடிகர்களில், அழகாகப் பேசக்கூடியவர் இவர். இவர் புகழில் நாம் பெருமைப்பட நியாயம் இருக்கிறது. காரணம், இவர் நம் குடும்பத்துத் திடமான பிள்ளைகளில் ஒருவர்! வாழ்க!”
- 27 - 10 - 1956 , ' தென்றல் ' இதழில் கவியரசு கண்ணதாசன் .
நன்றி : திரு. சந்திரன் வீராசாமி முகநூல் பக்கம்
http://i67.tinypic.com/osd7pl.png
எம்ஜிஆரிடம் துணை மந்திரியாக பதவி வகித்த ஐசரி வேலன், 14:6:87ல் விருதுநகரில் அரசு பிரச்சார நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது மேடையிலே மாரடைப்பால் இறந்து விடுகிறார்அதற்கு அடுத்த மாதமே அவர்களின் வீடு ஜப்திக்கு வருகிறது
பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அவரது மகன் ஐசரி கணேஷ் மிகுந்த கஷ்ட நிலைக்கு ஆளாகிறார் இதிலிருந்து மீள ஒரே வழி எம்ஜிஆரை சந்திப்பதுதான் என்று முடிவெடுக்கிறார்
வீட்டின் பேரில் வாங்கிய கடன், வட்டிக்கு வாங்கிய கடன் அனைத்தையும் பட்டியலிடுகிறார் ஐசரி கணேஷ்
மக்கள் திலகம் ஆச்சரியப்படுகிறார். காரணம் ஐசரி வேலனுக்கு எதில் குறை வைத்தோம் நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் "எல்லாத்தையும் நான் பார்த்து கொள்கிறேன் நீ கவலைப்படாமல் யார் யாருக்கு எவ்வளவு தரணுங்கிறதை எழுதிக் கொடுத்திட்டு போ என்கிறார்
இரண்டாவது நாள் ஜசரி கணேஷ் வீட்டிற்கு இரண்டு பேர் வந்து விசாரித்து விட்டு செல்கின்றனர்.மறுநாள் ஐசரி கணேஷ் ராமாவரத் தோட்டத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார்
உதவியாளர் மாணிக்கத்தை அழைத்த எம்ஜிஆர் அந்த பையை எடுத்திட்டு வா என்கிறார்
எம்ஜிஆர் ஐந்து விரலை காட்டி "இதிலே ஐந்து லட்ச ரூபாய் இருக்கிறது. இதை வச்சு கடனை அடைச்சு மிச்சம் இருக்கிற ஓரு லட்ச ரூபாயைக் கையில வச்சுகிட்டு ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணனும்" என்று வார்த்தையாலும் சைகையாலும் சொல்லி அந்த பணப்பையை கொடுக்கிறார் எம்ஜிஆர்
ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய தொகையை கண்ணால் பார்த்த ஐசரி கணேசிற்கு கை காலெல்லாம் நடுங்க ஆரம்பித்தது
உடன் இரண்டு பேருடன் ஐசரி கணேசை ஜீப்பில் அனுப்பி வைக்கிறார் எம்ஜிஆர்.முதலில் ஜீப் நேராக புரசைவாக்கம் பெனிபிட் பண்டிற்கு செல்கிறது. உடன் வந்த உதவியாளர்களே பணத்தை கட்டி, பத்திரத்தை வாங்கி ஐசரி கணேசிடம் தருகின்றனர்
பிறகு, அங்கிருந்து மந்தைவெளி மார்வாடி கடைக்கு வந்து அடமானம் வைத்திருந்த நகைகளை மீட்டு தருகின்றனர். பிறகு ராயபுரம் சென்று, கடன் கொடுத்த பைனான்சியரிடம் கடனை திருப்பி அடைக்கின்றனர்
உடன் வந்த உதவியாளர்களே எல்லா கடன்களையும் செட்டில் செய்து விட்டு மீதமிருந்த ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை ஐசரி கணேஷிடம் கொடுத்து விட்டு சென்று விடுகிறார்கள்.
எம்ஜிஆர் கொடுத்த ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை வைத்து கன்ஸ்டிரக்சன் வேலையை தொடங்கி வெற்றி மேல் வெற்றி குவித்து இன்று பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரராகி , வேல்ஸ் கல்லூரியையும் நிர்வகித்து வருகிறார் ஐசரி கணேஷ்
நன்றி. தலைவரின் நூற்றாண்டு விழாவை நோக்கி காத்திருக்கும் கடைகோடி தொண்டன் மதுரை பா.பாலசுப்ரமணியன்.. மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைசெயலாளர் மதுரை மாநகர்
http://i63.tinypic.com/280nmdu.jpg
இந்த காட்சியை இப்படித்தான் படமாக்கவேண்டும் [ Low Angle Shot - பிரமாண்டமாக தெரியும்] என்று புரட்சித்தலைவர் சொல்ல ஒளிப்பதிவாளரும் அதற்கு ஏற்பாடு செய்தார். படத்தின் இயக்குனர் திரு. சாணக்யா இதை கண்டதும் நான் தான் இந்த படத்தின் (எங்க வீட்டுப் பிள்ளை) இயக்குனர் அவர் எப்படி சொல்லலாம் என்று திரு.நாகிரெட்டி அவர்களிடம் செல்ல அவர் தலைவர் சொல்லுவதை கேளுங்கள், அவர் சொன்னால் எதாவது காரணம் இருக்கும் என்று அனுப்பிவிட்டார்.
படம் முடிந்த பின் அந்த கட்சி வரும்போதுதான் இயக்குனர் திரு சாணக்யா அவர்களுக்கு தலைவரின் புத்திசாலித்தனம் தெரிந்தது. தலைவர் இந்த காட்சி வந்தவுடன் அவரை பார்த்து அவருக்கு உரிய பாணியில் புன்னகை வீசினார்.
அதற்கு பிறகு அவருக்கு ஒளிவிளக்கு இயக்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது தலைவர் எதாவது காட்சி எப்படி படம் எடுக்கவேண்டும் என்று சொன்னதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
நன்றி - திரு.சைலேஸ் பாசு முகநூல் பக்கம்
ஒருவரை பாராட்டி ...
அடையாளம் காட்ட - அழைக்க ...
நாம் எப்படி சொல்வோம் ...?!
ஒருவனை மிரட்டி ...
அவனை சுட்டிக்காட்ட - கண்டிக்க ...
நாம் எப்படி சொல்வோம் ... ?!
முன்னதில் நம் அனைத்து விரல்களும் நீளும்...
http://i66.tinypic.com/9huh7d.jpg
பின்னதில் ஒருவிரல் மட்டுமே நீளும்...
http://i66.tinypic.com/2qdzshx.jpg
அந்த விரல் சுட்டு விரல்...
ஆம்...!
ஆளை சுட்டி காட்டும் சுட்டு விரல்...
ஆள் காட்டி விரல்...
இந்த உலகில் நாம் எதற்கும் பயப்பட தேவை இல்லை...
ஒன்றே ஒன்றை தவிர... ஆம்...
இந்த ஆட்காட்டி விரல் தவிர...
"எவரது விரலும் என்னை சுட்டிக் காட்டி விடக்கூடாது..."
- இந்த நினைவு மட்டும் நம் ஆழ் மனதில் இருந்து விட்டால்...
தப்பில்லை... தவறே செய்யமாட்டோம்...
இது என் அனுபவம்...
- மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்
நன்றி - மயில்ராஜ் முகநூல் பக்கம்
http://i66.tinypic.com/jpufs3.jpg
புரட்சித் தலைவருடன் எச்.வி. அண்டே, நாஞ்சில் மனோகரன், எஸ்.டி.எஸ்.
புரட்சித் தலைவருக்கு இடது பக்கம் நி்ற்பவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த டி.கே. பரூவா. இவர்தான் நெருக்கடி நிலையின்போது ‘இந்தியாவே இந்திரா, இந்திராவே இந்தியா’ என்று வாசகத்தை தந்தவர்.
http://i66.tinypic.com/fz2ezp.jpg
திமுக தலைவர் கருணாநிதிக்கும் புரட்சித் தலைவருக்கும் ஒரு முறை அறிக்கை மூலம் வாக்குவாதம். அந்த சமயத்தில் நிருபர்களை புரட்சித் தலைவர் சந்தித்தார். அவரிடம் கருணாநிதியின் அறிக்கைகள் பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு புரட்சித் தலைவர் சொன்னார்.
‘‘கலைஞர் கதை வசனகர்த்தா இது எனக்கும் தெரியும். நான் நடிகன், படங்களில் நடிப்பவன். இது கலைஞருக்கும் தெரியும். ஆனால் நானும் கதை வசனம் எழுதுவேன். இது கலைஞருக்குத் தெரியாது’’
புரட்சித் தலைவர் எழுதிய கதை வசனத்தின் தொடர்ச்சியாகத்தான் திமுக தலைவர் முதல்வராக இருந்தபோது 1974-ம் ஆண்டு விட்டுக் கொடுத்து தமிழகத்துக்கு துரோகம் செய்த காவிரி உரிமையை இப்போது சுப்ரீம் கோர்ட் மூலம் புரட்சித் தலைவி மீட்டுள்ளார். காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் செவ்வாய்கிழமை (நேற்றைக்கு முன்தினம்) உத்தரவிட்டுள்ளது. தமிழகத்துக்கு நீதி கிடைத்துள்ளது. புரட்சித் தலைவிக்கு நன்றி.
காவிரி தந்த கலைச்செல்வியைப் பார்த்துத்தான் புரட்சித் தலைவர் அன்றே பாடினாரோ?
திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ?
http://i67.tinypic.com/140c904.jpg
தினகரன் -22/09/2016
http://i67.tinypic.com/5o7bc0.jpg
இன்று (22/09/2016) இரவு 7 மணி முதல் சன் லைப் சானலில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த "புதிய பூமி " ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/2l896hc.jpg
http://i68.tinypic.com/11r7kv5.jpg
"என்னால் இதுபோல் நடிக்கமுடியாது ஜி...இந்த முயற்சியைக் கைவிட்டுவிடுங்கள்"...
இந்திநடிகர் திலிப்குமார் திரு நாகிரெட்டியிடம் கூறியது... விஷயம் என்னவெனில் திரு ரெட்டிக்கு "எங்க வீட்டுப்பிள்ளை" படத்தை இந்தியில் திலீப்குமாரை நடிக்கவைத்து தயாரிக்க விருப்பம். தலைவருக்கும் இதில் சம்மதம். ரெட்டி அப்படத்தை போட்டுக்காண்பித்தார். உடன் மக்கள்திலகமும் இருந்தார். படம் முழுவதையும் பார்த்துவிட்டு திலீப் சொன்னதாவது....
"எம்ஜிஆர் அளவிற்கு இந்த படத்தில் என்னால் நடிக்கமுடியாது. முக்கியமாக 'நான் ஆணையிட்டால்' பாடல் காட்சியில் எம்ஜிஆர் சாட்டையை சுழற்றியபடி வேலைக்காரர்கள் ஆரவாரம் சூழ ஆடிப்பாடி நடிப்பது எனக்கு சிறிது கஷ்டமான விஷயமே. அந்த ஷாட்ல அந்த வேலைக்காரர்களுக்கும் எம்ஜிஆர் க்கும் இடையில் என்ன ஒரு அன்னியோன்னியம், உற்சாகம். அவர்போல என்னால் அப்படி நெருங்கி நடிக்கமுடியாது. எங்கள் (இந்தி) படங்களில் நாங்கள் வீட்டு வேலைக்காரர்களை இப்படிக் காண்பிக்கமாட்டோம். எங்க மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஏனெனில் வேலைசெய்யறவங்க கிட்ட Distance keep up பண்ணுவோம்"...
இதற்கு மக்கள்திலகம் கூறியதாவது... " நான் கஷ்டப்பட்ட போது அதை என்னுடன் பங்கு கொண்டது இவர்கள் போன்ற தொழிலாள சகோதரர்கள்தான். இவர்களின் கஷ்டநஷ்டங்களை நான் நன்கு அறிவேன். இவர்களின் மேல் நான் வைத்திருக்கும் பாசத்தையும் நன்றியையும் வெளிப்படுத்த நான் தான் இக்காட்சியை படத்தில் சேர்க்கச்சொன்னேன். உங்களுக்கு தேவையில்லையெனில் வேறு மாதிரி அமைத்துக்கொள்ளுங்கள் " ... இதைக்கேட்ட திலீப்குமார் மெய்சிலிர்த்துவிட்டார்.
இது தான் மக்கள்திலகம். தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தொழிலாளர்களின் மீதான தன் பாசத்தையும் நன்றியையும் தனது படங்களில் காட்சிகளை வைக்கத் தவறியதே இல்லை.
"மாண்பு என்பதற்கு பொருளே மக்கள்திலகம் தான்" என அடியேன் சொல்லித்தெரியவேண்டுமோ...???
நன்றி - திரு. பாலசுப்பிரமணியன் முகநூல் பக்கம்
http://i66.tinypic.com/2rxiq6e.gif
எங்கவீட்டுப்பிள்ளை-------ரீல்7:--
தலைவர் இளங்கோ லீலா சரோவின் தூண்டுதலால் குளித்து விட்டு அமர்க்களமான உடை அணிந்து சாப்பாட்டு மேஜையை ஆக்ரமிக்கிறார். தலவரும் ரெங்காராவும் அமர சரோ பரிமாறுகிறார்.
இதில் ஒரு விஷயம்.தலைவரும் ஒர் நடிகர். ரெங்காராவும் ஒரு நடிகர். இருவரும் சாப்பிடும் காட்சி. இதில் கவனித்தீர்களானால் தன் ரசிகர்களை கவர தலைவர் எவ்வளவு ஈடுபாட்டுடன் சாப்பாட்டுக் காட்சியில் நடித்துள்ளார் என்பதை பார்க்கலாம். தனது தட்டில் பரிமாறப்பட்ட உணவுகளை அழகாகாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டு ஒரு மென்று கடித்து வாயை அரைப்பார் பாருங்கள். குறிப்பாக கோழிக்கறியை சாப்பிடும் அழகு தனி! நான் சைவம்.இதுக்கு மேல் வர்ணிக்கமுடியாது.
பணியாள் கொண்டு வைக்கும் உணவை தன் இரு கைகளால் தட்டில் போட்டுக் கொண்டு அதகளம் செய்வார். இப்போது ராவ் கேட்பார். ‘மாப்பிள்ள வேறு என்ன வேண்டும்’ என்று. தலைவர் ‘எனக்கு சினிமா சூட்டிங் பார்க்கனும்னு ஆசை’ என்பார். ‘ஓ சினிமால எனக்கு நண்பர்கள் அதிகம் போகலாமே’ என்பார்.
எனவே தலைவர் லீலா/ ரெங்காராவ் சகிதம் சினிமா ஸ்டுடியோ வருகிறார். வாசலில் உளறு வாயன் நாகேஷ் சான்ஸ் கேட்டுக் கொண்டிருக்க, விரட்டுகிறார்கள். தலைவர் இருவரிடமும் தமது நண்பர் ராமன் என அறிமுகப் படுத்த நாகேஷ் காதில் ‘யாரு புளியங்கொம்பா புடிச்சிருக்கே’ என்பார்!
தலைவர் ‘உஷ் ஒன்ன மாதிரி தான் எனக்கும் புரியல அமைதியா வா’ என அணைத்து இழுத்து செல்ல உள்ளே பாடல் காட்சிக்கு டைரக்டர் கே.கே.சௌந்தர் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறார். வாசலிலேயே வந்து இவர்களை வரவேற்பார் சௌந்தர்.அவர் ராவிடம் ‘இவர்!’ என இழுக்க ‘நம்ம மருமகப்பிள்ள’ என்பார்.
தலைவர் ‘சார் எனக்கு ஒரு சான்ஸ்’ என காதை கடிக்க, ‘சார் ஒங்களுக்கு எதுக்கு நீங்க கோடீஸ்வரன்!’ என்பார். நாகேஷ் ‘நான் பிச்சக்காரன் எனக்கு சான்ஸ் கொடுங்க’ யாரும் சிரிக்காமல் இருக்க முடியாது. உடனே ராவ் தலைவரிடம் மாப்ள எனக்கு சினிமா சூட்டிங் பார்த்து போரடித்து விட்டது. நீங்க பாருங்க! நான் நண்பரை பார்த்து வருகிறேன் என கிளம்பி விட நாற்காலிகள் போடப்பட்டு தலைவர் இளங்கோவும் சரோவும் அமர நாகேஷ் நிற்கிறார்.
ஒரு பாடல்காட்சி குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும் யாரோ பிண்ணணி பாட நாயகன் நாயகி பாவனை செய்ய இந்த காட்சியின் போது கண்ணால் சரோவை பார்ப்பதும் மனதுக்குள் பாடலை முணுமுணுத்தவாறு தலையை இன்றைய ரஜினி ஸ்டைலை அன்றே முடியுடன் அசைத்தவாறு விழியாலே சரோ தன்னை கவனிக்கிறாறா? என தலைவர் பார்த்தவாறு பாடலில் ஆழ்வதும் வர்ணிக்க கோடி கவிஞர்கள் வேண்டும்!
இந்த சேஷ்டையை எல்லாம் சரோவும் கவனித்து மகிழும் காட்சி அமர்க்களம்! நாகேஷும் இதனை கவனித்து முகபாவனையில் அட்டகாசம் செய்வார்! தலைவர் பாடலில் அமிழ்ந்து ஐக்கியமாகி கனவு போல் ஆரம்பித்து வீட்டில் குட்நைட் சொல்வதாக முடித்திருப்பர்!
டடன் டன்டடடாடன் டன்டடடாடன் டடன் டடன் டன்டடடாடன் டன்டடடாடன் டன் டிடிங் டிங்.. திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம் கன்னி ஊர்வலம் வருவாள்! அவள் உன்னை கண்டு உயிர்காதல் கொண்டு தன் உள்ளம் தன்னையே தருவாள்! நான் அள்ளி கொள்ள அவள் பள்ளி கொள்ள சுகம் மெல்ல மெல்லவே புரியும்! கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ துணையை தேடி நீ வரலாம்!
இந்த பாடலில் தலைவரின் உடையமைப்பும் இடக்கையால் சரோவை லாவகமாக அணைக்கும் ஸ்டைலும் சரோ தன் வெண்ணிற மேலாடையை ஒவ்வொன்றாக காற்றில் தலைவர் மீது வந்து விழுமாறு பறக்க விடும் ஸ்டைலும் படமாக்கப்பட்டது டைரக்டரின்/ தலைவரின் சாணக்யத்தனமா? யாருக்கு தெரியும்?
பாடலில் தலைவர் காட்டும் நான் அள்ளி கொள்ள என்ற ஸ்டில் தான் இன்றைய காட்சி புகைப்படம்!
http://i65.tinypic.com/10df5zm.jpg
நன்றி - திரு.சுந்தரராஜன் முகநூல் பக்கம்
http://i68.tinypic.com/2yxlwg9.png
மாலை நாறலையே:::
எம்ஜிஆர் இருக்கிறார்(19)::::
ஊட்டி குன்னூர் சிம்ஸ் பார்க்கில் 1969ல் 'என்அண்ணன்' படப்பிடிப்பு. "ஆசை இருக்கு" பாடல் படமாகிக்காெண்டிருந்தது. வழக்கம் பாேல் மக்கள் வெள்ளம். தலைவரின் வேண்டுகாேளுக்கிணங்க அமைதியாக 'ஷுட்டிங்' பார்த்துக்காெண்டிருக்கிறார்கள்.
திடீரென பேரிரைச்சல். பத்தடி உயரத்திலிருந்து ஒரு எட்டு வயது பெண் குழந்தை கூட்ட நெரிசலால் தள்ளப்பட்டு, குப்பைகள் போட்டு வைக்கும் காலி தார் டின்னில் விழுந்து விடுகிறாள். நடித்துக்காெண்டே இதை பார்த்து விட்ட மக்கள்திலகம் பத்தடி குதித்து ஓடி வருகிறார். அருகிலிருந்த துப்புரவு தொழிலாளியை அழைத்து அந்தப்பெண்ணை மீட்கிறார். நல்லவேளையாக பெரிதாக அடிபடாதப்பெண்ணுக்கு முதலுதவி செய்து அந்தக்குழந்தை ஒரு துப்புரவு தாெழிலாளியின் குழந்தை என்பதை அறிந்து, காப்பாற்றிய தாெழிலாளியிடமே ரூ500யை தந்து அந்தகுழந்தைக்கு உடைகள் வாங்கி, வீட்டில் விடச்சாெல்கிறார்.
அடுத்தநாள் காலை. எம்ஜிஆர் தங்கியிருந்த ஹோட்டல் முன் நூற்றுக்கணக்கான துப்புரவு தாெழிலாளிகள். அவர்களின் தலைவர் தங்களின் குழந்தையை காப்பாற்றியதற்காக நன்றி சாெல்லி விட்டு, ராேஜாப்பூ மாலையை எம்ஜிஆர் கையில் தரப்பாேகிறார். எம்ஜிஆர் புன்முறுவல் பூத்தவராக, தலையை குனிந்தவராக "கழுத்திலேயே பாேடலாம்" என்கிறார். தீண்டாமை உச்சத்தில் இருந்த நேரம். தயங்கியவாறே நிற்பவரின் கைகளை பிடித்து தலைவரே மாலையை போட்டுக்காெள்கிறார். அடுத்த நொடி எம்ஜிஆர் வாழ்க கோஷத்தில் ஊட்டிமலை அதிர்கிறது.
மாலையோடு உள்வரும் எம்ஜிஆரை பார்த்து ஒரு வில்லன் நடிகர்(பெயர் வேண்டாம்) "மரியாதைக்கு கையில் வாங்கியிருக்கக்கூடாதா? அந்த தோட்டிகளின் கைகளை பிடித்து போட்டுக்காெள்ள வேண்டுமா?" என்கிறார். கழுத்திலிருக்கும் மாலையை தூக்கி நன்றாக முகர்ந்து விட்டு எம்ஜிஆர் சொன்னார். "அவர்கள் பாேட்டாலும் ராேஜா மணக்கத்தானே செய்கிறது? நாறவில்லையே? நியாயமாக ஊரை சுத்தம் செய்து, நாட்டுக்கு சேவை செய்யும் அவர்கள்தான் நம்மை பாேன்ற அழுக்கு மனிதர்களை தீண்டக்கூடாது"
அப்புறம் சில நாட்களுக்கு அந்த வில்லன் நடிகர் வெட்கம் தாளாமல் எம்ஜிஆர் கண்ணில் தென்படுவதை தவிர்த்தார்.
நன்றி - அரிமா எம்.சந்திரசேகரன் முகநூல் பக்கம்