A Lesson in Gratitude from the Movie Maestro Sivaji Ganesan
http://www.sangam.org/taraki/article...n.php?uid=1382
Printable View
A Lesson in Gratitude from the Movie Maestro Sivaji Ganesan
http://www.sangam.org/taraki/article...n.php?uid=1382
சுமதி என் சுந்தரி பற்றிய விவாதம் மிகவும் அருமை. நண்பர் tac குறிபிட்டது போல் உணர்ச்சிமயமான காட்சிகள் என்பது எதவும் சுசு வில் கிடையாது . ஆனால் கற்பனையில் நடக்கும் முதல் இரவு காட்சியை மறக்கமுடியுமா மேலும் இறுதி காட்சியில் சுமதி ஒரு நடிகை என்று தெரிந்தவுடன் Ntin முகபாவங்கள் குறிப்பிடத்தக்கவை. சுசு ஷர்ட் என்று 70 கால கட்டங்களில் famous ஆனது நாகேஷ்/வ.கோபாலகிருஷ்ணன்/தங்கவேல் முன்னால் jj சிவாஜி இன் பின்னால் முகத்தை மறைதுகொள்வது மற்றும் எஅய் பிள்ளை சச்சாயி ஏனுங்க பாடல் முடிந்தவுடன் கையில் பலூனுடன் NT அண்ட் ஜ்ஜ் இரவில் நடந்து வரும் போது MSV backround மியூசிக் மற்றும் ஹம்மிங் மறக்கமுடியுமா
நட்புடன் GK
டியர் tac.....
நீங்கள் சொலவ்து உண்மைதான். (உங்கள் லிஸ்ட்டில் வரவேண்டிய இன்னொரு படம் 'பலே பாண்டியா' -1962). ஆனால் கலாட்டா கல்யாணம் படத்துக்குபின் நடிகர்திலகத்தின் படங்களில் நகைச்சுவைப்படங்களுக்கு பெரிய இடைவெளி விழுந்து விட்டது. அப்போது வந்தவை (அரிச்சந்திரா, எங்க ஊர் ராஜா, உயர்ந்த மனிதன், தெய்வமகன், திருடன், சிவந்த மண், விளையாட்டுப்பிள்ளை, வியட்நாம் வீடு, எதிரொலி, ராமன் எத்தனை ராமனடி, சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், பாதுகாப்பு, இரு துருவம், தங்கைக்காக, குலமா குணமா) போன்ற படு சீரியஸ் படங்களே. எங்கமாமாவில் கூட பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்த அளவுக்கு நகைச்சுவை குறைவுதான். அதே நேரத்தில் மற்றவர்களின் படங்களில் நிறைய நகைச்சுவைக் காட்சிகள் இடம் பெற்றதோடு வீட்டுக்கு வீடு, உத்தரவின்றி உள்ளே வா போன்ற முழுநீள நகைச்சுவைப்படங்களும் வந்து கலக்கிக்கொண்டிருந்த நேரத்தில், அப்போதைய நடிகர்திலகத்தின் படங்களைப்பற்றி (சிலரால்) அப்படி ஒரு கேலிப்பேச்சு எழுந்தது உண்மையே. அந்நேரம், எதிர்பாராத சமய சஞ்சீவியாக வந்து கேலிபேசியோரின் வாயை அடைத்த படம்தான் சுமதி என் சுந்தரி.. (இதற்குப்பின் அதே ஆண்டில் வந்த படம் 'மூன்று தெய்வங்கள்')
'சுமதி என் சுந்தரிக்கே இந்த வசூல் எனும்போது...' என்ற வரிகள்தான் என்னையும் சகோதரர் ராகவேந்தர் அவர்களையும் உசுப்பி விட்டது. இன்னொன்று கவனித்தீர்களா?. பம்மலார் தந்துள்ள வசூல் விவரங்களே, அப்படம் மதுரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதைத் தெளிவாக்குகிறதே.
இன்றிரவு சிங்கப்பூர் வசந்தம் செண்ட்ரல் தொலைக்காட்சியில் ..குலமா குணமா.
திரு முரளி மற்றும் சாரதா madem அவர்கள் கவனத்திற்கு
மன்னவன் வந்தானடி திரைபடத்தில் ஒரு காட்சி NT ஐ அடிபதற்காக திரு நம்பியார் குருசாமி 4 அடியாட்கள் பெயரை கூறுவார்
ஆய் மாதவா பாலமுருகா சங்கரா ஆறுமுகம் - படத்தின் டைரக்டர் ப.மாதவன் கதை வசனம் பாலமுருகன் தயாயிருப்பு சங்கரன் ஆறுமுகம் (ஜேயார் movies producers
forum படிக்கும் போது memory வேறு யாராவது சொல்லியிருந்தாலும் நன்றி
நட்புடன் GK
Sun Oct 08, 2006 10:01 am you have posted the review of ennai pol oruvan
சகோதரி சாரதா அவர்களின் என்னை போல் ஒருவன் திரைப்படம் விமர்சனம் 2006 -2007 காலகட்டங்களில் (பார்ட் ௨) எழுதி உள்ளீர்கள் திருநெல்வேலியில் அந்த திரைப்படம் 1976 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது என்று நினவு அந்த திரைபடத்தின் விநியோகஸ்தர் (நெல்லை-கன்னியாகுமரி) திரு சூரிய நாராயணன் அவர்கள் முயற்ச்சியால் திரு முரளி கூறியது போல் 1976 ஆம் ஆண்டே censor ஆகி விட்டது ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேண்டும் என்று TMS பாடல் ஒன்று உண்டு (வித் சாய்பாபா இங்கிலீஷ் poem ) உங்கள் விமர்சனத்தில் அந்த பாடல் விடுபட்டுவிட்டது என்று நினைகிறேன்.
நட்புடன் Gk
அன்புள்ள ஜி.கிருஷ்ணா...Quote:
Originally Posted by gkrishna
அந்த 'என்னைப்போல் விமர்சனம்' நான் தமிழில் எழுதக்கற்றுக்கொள்ளும் முன் ஆங்கிலத்தில் எழுதியது. இப்போது படிக்கும்போது இன்னும் விவரமாக எழுதியிருக்கலாமோ என்று தோன்றும். ஆனால் இந்த 6-ம் பாகத்தில், மார்ச் 18 தேதிகளில், என்னைப்போல் ஒருவன் வெளியீட்டு நாள் பதிப்பில், நான், முரளியார், பம்மலார், ராகவேந்தர் மற்றும் நண்பர்கள் அப்படம் பற்றிய மேற்கொண்டு தகவல்களையும், 'ரிலீஸ் மேளா' விவரங்களையும் பதிந்துள்ளோம் பார்த்திருப்பீர்கள். என் விமர்சனத்தில் 'ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேண்டும்' பாடல் விடுபட்டிருந்ததை, அப்போதே ஒரு நண்பர் சுட்டிக்காட்டியிருந்தார்.
என்னைப்போல் ஒருவன் தமிழகமெங்கும் 1978 மார்ச் 18-லும், சென்னையில் மட்டும் 1978 ஏப்ரல் 14-லிலும் வெளியானதாகத்தான் நினைவு. ஆனால் திருநெல்வேலியில் மட்டும் 1976-லேயே (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே) வெளியானதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. இதுபற்றி 'புள்ளிவிவர நிபுணர்கள்' முரளியாரும், பம்மலாரும்தான் விளக்க வேண்டும்.
கண்துளிர்க்க வைத்த பாசமலர் மூன்றாம் பாகம் அளித்த முரளிசாருக்கு நன்றி.
சரியான அவர் கணினிக்கும் நன்றி.
பம்மலார் பற்றி ராகவேந்திரா சார் சொன்ன வார்த்தைகள் சத்தியமானவை.
தொடர்ந்து நடிகர்திலகத்தின் சாதனைப்பட்டியலைத் தீட்டும் பம்மலாரின் அன்புக்கரங்களுக்கு நன்றி..
சாரதா அவர்கள் சொல்லும் சுமதி என் சுந்தரி தொடர்பான சேதிகள் எல்லாமே சுவை --
சட்டையின் அரைக்கைப் பகுதியின் நுனியில் சின்ன வெட்டு வைத்து தைப்பது - கல்லூரி மாணவர்கள் அனைவரும் பின்பற்றிய ஸ்டைல் என ஒரு பேட்டியில் இப்படம் பார்த்து ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி சத்யராஜ் சொல்லியிருந்தார்.
கருப்பு வெள்ளையிலேயே ஸ்டைலில் கலக்கி, ட்ரெண்ட்செட்டர் ஆச்சே நம்ம நடிகர்திலகம்.
ராமன் எத்தனை ராமனடி பொம்மைகள் போட்ட ஸ்டைல் சட்டை
பட்டிக்காடா பட்டணமா பெல்பாட்டம், ஹேர்ஸ்டைல்..
-------------------
நம் கலாச்சாரச் சின்னம் நடிகர்திலகம்.
இன்னும் சவாலே சமாளியை விஞ்சும் வேட்டிசட்டைத் தோற்றம் வேறு எவரிடமும் கண்டதில்லை.
புதியபறவையில் முழுக்கைச்சட்டையை புஜம் வரைமடித்துவிடும் ''அலட்சியநேர்த்தி'' அழகை அடிக்க ஆளில்லை..
----------------------------------
ஜோ அவர்கள் கொடுத்த சுட்டி படித்து நெகிழ்ந்தேன்.
ஒருமுறை பெருமாள் அவர்கள் வந்ததால், எழுந்து மறைத்த சிகரட்டை கையாலே அழுத்தி அணைத்தவராம் நம் நடிகர்திலகம்.
அன்பிற் பணியுமாம் பெருமை!
Dig/......Quote:
Originally Posted by gkrishna
இதைப்படித்ததும் நினைவுக்கு வரும் இன்னொன்று....
காசேதான் கடவுளடா படத்தில் முத்துராமனும் லட்சுமியும் ஒரு பூங்காவில் அமர்ந்திருக்க, அங்குள்ள ஒலிபெருக்கியில் நேயர் விருப்பம் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கும். 'அடுத்த பாடல் காசேதான் கடவுளடா படத்தில் கோவை சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடியது. விரும்பிக்கேட்டவர்கள் சரவணன், கோபு, விஸ்வநாதன், வாலி ஆகியோர்'. (இவர்கள் அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர்). .....dig ends.
முழங்கை வரை மடக்கிவிடப்பட்ட முழுக்கை சட்டையென்றதும் எனக்கு நினைவுக்கு வருவது 'பொன்னூஞ்சல்' படத்தில் வரும் 'நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்' பாடல் காட்சிதான். என்ன ஒரு அழகு. கதாநாயகனும் நாயகியும் ஐம்பது மீட்டர் இடைவெளியில் நின்று பாடும், அருமையான கருப்புவெள்ளை ஓவியம். வேஷ்ட்டி சட்டையில் தலைவர் சூப்பரா இருப்பார்.Quote:
Originally Posted by kaveri kannan