not only this..Quote:
Originally Posted by saradhaa_sn
at one stage they both ready to marry - by Abi's request
Printable View
not only this..Quote:
Originally Posted by saradhaa_sn
at one stage they both ready to marry - by Abi's request
sothappal - every alternative day ...Quote:
Originally Posted by saradhaa_sn
your comments - very good
keep on
Love and loyalty are very strange buddies to characters of people. I am sure Thol will be convinced by Abhi about her suspiscions of Thol. Thol's whole adult life has revolved around Abhi. He has no other life. Arathi and Manohar will be caught when Abhi sees her financial statement. I hope she kicks them out of her life. Anandi's behavior is understandable in view of the convincing acting by Arathi. Another interesting character is Krishnan [all purpose self serving opportunist]. I think he is going to tell Abhi everything to get into her favors. Arathi is not the most powerful anymore. Mother Karpagam is hopelessly old fashioned thinking that marriage is the salvation for women. She probably embraces the idea women should suffer and shed tears all the time.
I see Tamil comments. I regret I cannot read Tamil. Can this be written in English script? Is it too much to ask?
Anyone have a clue how long this show will last?
saradhaa mam.. updates pls.... :?
From the episode of 8/5/08 it looks like Abhi is getting a handle on Thol's non-involvement and Arathi's treachery. She needs to expose Arathi and boot her to Adhi's mercies.
Menaka's character is intriguing. Is she a front for something else or a sting operation to look into police dept and Adhi's network?
I am sure Abhi and Thol are going to make up. After all they have invested a lot of time in their relationship.
Thanks for listening to me.
ஆர்த்தியின் சூழ்ச்சியின்படி, ஏற்கெனவே தொல்ஸ் ஏற்பாடு செய்திருந்த இடத்தின் சொந்தக்காரரை வரவழைத்து, அபியின் முன்னால் அந்த இடத்தை தொல்காப்பியன், மேனகாவுக்கு கொடுக்கும்படி சொன்னதாக சொல்ல வைக்கின்றனர். இதற்குப்பின்னால் ஆதியின் சூழ்ச்சி இருக்கிறது.
இடையே கதையை நகர்த்த, திருவேங்கடத்தின் தேர்தல் பிரச்சார கோமாளித்தனங்கள். (இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் தேர்தல் பிரச்சாரம். தேர்தல் நடக்குமா, அல்லது அதுவும் கோலங்கள் போலவே இழுத்துக்கொண்டு போகுமா?).
தொல்ஸ் இருக்கும்போது தான் மிரட்டி சாதித்ததுபோல நினைத்துக்கொண்டு, இப்போது தான் வாங்க இருக்கும் இடத்துக்காக அபியிடம் ஆர்த்தி அறுபது லட்சம் பணம் கேட்க, அபி மறுத்துவிடுகிறாள். இப்போது தன்னுடைய கவனம் மட்டுமல்ல ஆர்த்தியின் கவனமும் கூட, தான் புதிதாக செய்ய இருக்கும் டிஜிட்டல் வேல்லி ப்ராஜக்ட பற்றித்தான் இருக்க வேண்டும் என்கிறாள். முதல் முறையாக அலுவலகத்தில் ஆர்த்திக்கு மூக்குடைப்பு. உடைத்தவள் அபி என்பதால் ஆர்த்தியால் எந்த ட்ராமாவும் போட முடியவில்லை.
விஷயத்தைக்கேட்ட கிருஷ்ணன், தனக்கு தெரிந்த பேங்க் மேனேஜரிடம் லோன் ஏற்பாடு செய்வதாக சொல்லி ஆர்த்தியை அழைத்துப்போகிறார். அங்கே இவர்களுக்கு முன்னமே வந்து காத்திருக்கும் தொல்ஸ் இவர்களைப் பார்த்துவிட இவர்களுக்கு அதிர்ச்சி. முதலில் தொல்ஸ் மேனேஜரை சந்தித்து, பாண்டிச்சேரி ஆஸ்ரமம் ஒன்றுக்கு பேங்கின் நிதியுதவி கேட்க மேனேஜரும் அதை ஒப்புக்கொள்ள அவன் சென்றபின், 'நரிகள்' இரண்டும் உள்ளே போகின்றன. நிலம் வாங்க இப்போது லோன் தருவதில்லை என்று மேனேஜர் மறுத்துவிட, இது தொல்ஸின் சதிதான் என்று அவர்கள் குறுக்குப் புத்தி நினைக்கிறது.
அபிக்கும் தொல்ஸுக்கும் இடையில் பிரச்சினை பண்ணி அவர்களை பிரித்துவிட்டதாக ஆதி, மேனகாவிடம் சொல்ல அதற்கு அவள் தொல்ஸை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று கூறி ஆதிக்கு மேனகா அதிர்ச்சியளிக்கிறாள். (தொல்ஸ் விஷயத்தில் மேனகா எப்போதும் 'ஸாஃப்ட் கார்னரை'யே கையாள்கிறாள். அவன் தன் அண்ணன்தான் என்று அவள் உள்மனம் சொல்கிறதோ?. தன்மீது கொலை முயற்சி விஷயமாகக் கூட மற்றவர்கள் தொல்ஸ்மீது பழி சுமத்தினாலும் மேனகா நம்ப மறுக்கிறாள்).
ஆர்த்தி மீண்டும் அபியிடம் வந்து, தொல்ஸ் தனியாக தொழில் செய்ய லோன் பெற முயற்சிப்பதாக சொல்ல, இதனிடையே, ஆர்த்தியை புகைப்படம் எடுத்தவனை அபி அழைத்து, சில பொறுப்புக்களைக் கொடுக்கும் கையோடு, தொல்ஸ் ஆர்த்தியை போட்டோ எடுத்த விஷயத்தையும் விசாரிக்கிறாள்.
Thank You for the updates Saradhaa. I really appreciate it.
:rotfl:Quote:
Originally Posted by saradhaa_sn
தேர்தலில் தோழர் பாலகிருஷ்ணனைத் தோற்கடிக்க ஆதி, தேவராஜ் பாண்டியன், திருவேங்கடம் ஆகியோர் (வழக்கமாக எல்லா சீரியல்களிலும் வருவதுபோல, அரைகுறையாக கட்டப்பட்டிருக்கும் ஒரு கட்டிட மாடியில் நின்றபடி) சதியாலோசனைகளில் ஈடுபடுகின்றனர். இதுவரை நடந்த பிரச்சாரத்தில் திருவேங்கடத்தின் பின்னடைவுக்கும், தோழரின் முன்னேற்றத்துக்கும் காரணம் திருவேங்கடத்தின் அர்த்தமற்ற உளறல் பிரச்சாரங்களும், தோழரின் ஆணித்தரமான அணுகுமுறையும்தான் என்று ஆதி சித்தப்பாவிடம் கோபிக்கிறான். தோழரைவீழ்த்த ஒரு நல்லதிட்டம் இருப்பதாக தே.பா.சொல்ல, அது வழக்கம்போல பின்னணி இசையுடன் வெறும் வாயசைப்பில் காண்பிக்கப்படுகிறது.
தோழரின் போஸ்ட்டர் ஒட்டிய அதே இடத்தில் அவரது போஸ்ட்டருக்கு மேலேயே திருவேங்கடத்தின் போஸ்ட்டர் ஒட்டப்பட, தொண்டர்களுக்கிடையே கைகலப்பு, அடிதடி, சண்டை. தோழரின் இரண்டே ஆட்களை எதிரணியினர் ஒரு ஆட்டோ நிறைய வந்து அடித்து நொறுக்கிப் போகின்றனர். வழக்கம்போல (கையூட்டு பெற்ற) காவல்துறை தோழரின் ஒரு தொண்டரை விசாரணை என்ற பெயரில் அழைத்துப்போகிறது. இன்னொரு தொண்டர் நிலை கவலைக்கிடம்.
அபியின் அலுவலகத்தில் அவளது அழைப்பின் பேரில் அம்மா, ஆனந்தி, மனோ, ஆர்த்தி எல்லோரும் ஆஜர். கூடவே குடும்பத்துக்கு சம்பந்தமில்லாத 'நரி கிருஷ்ணன்'. தன் கம்பெனி தற்போது பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக மாற இருப்பதால் அவர்கள் அனைவரையும் டைரக்டர்களாக்க இருப்பதாக அபி சொல்ல எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஆனால் ஆனந்தி, தான் பத்திரிகைத்துறையில் இருப்பதால், தன்மீது கேஸ், அது இது என்று பிரச்சினைகள் வரக்கூடும் என்றும் அது கம்பெனியின் நடவடிக்கைகளை பாதிக்கும் என்பதால், தான் அந்த பொறுப்பை ஏற்கமுடியாது என்றும், மற்றவர்கள் இருந்தால் போதும் என்று கூறி விலகிவிடுகிறாள். புதிய பொறுப்பால் ஆர்த்திக்கும், மனோவுக்கும் நாக்கில் ஜலம். அம்மா வழக்கம்போல 'எனக்கெதுக்கும்மா இதெல்லாம்' என்று விலக முயற்சிக்க, அபி சம்மதிக்க வைக்கிறாள்.
இப்போது ஒரு புதிய பிரச்சினை கிளம்புகிறது. தொல்காப்பியனும் கம்பெனியில் இருப்பாரா என்று அம்மா கேட்க, அவரும் ஒரு ஷேர் ஹோல்டர் என்பதால் இருப்பார் என்று அபி சொல்ல, தொல்ஸ் கம்பெனியில் இருந்தால், தன்னால் இந்த பொறுப்பை ஏற்க முடியாது என்றும், தான் வீட்டைவிட்டே வெளியேறி முதியோர் இல்லத்தில் போய் தங்கப்போவதாகவும் அம்மா குண்டைப்போட, அபி அதிர்கிறாள். அம்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்த்தி, மனோ, ஆனந்தி மூவரும் வெளியேறுகின்றனர்.
நேற்று கொஞ்சம் சுறுசுறுப்பு... இன்று எப்படியோ...
எப்படி ...Quote:
Originally Posted by saradhaa_sn