https://www.youtube.com/watch?v=wTfFZF13LDU
Printable View
AFTER 1984 VICOTRY THE FOLLOWING SONGS TELECASTED.
https://www.youtube.com/watch?v=73Ew2YCWqR4
THE GREAT DIRECTOR MANIRATHNAM TAKEN IRUVAR MOVIE (STORY OF THALAIVAR AND MK)
https://www.youtube.com/watch?v=YD5dddtwtKk
https://www.youtube.com/watch?v=W_6goZ7p1bE
VAIRAMUTHU TOLD ONE OF THE INTERVIEW I AM FULLY WRITTEN THE SONGS REMEMBERING LIKE MGR LYRICS.
THALAIVAR RULED MALAYALAM FILM INDUSTRY
https://www.youtube.com/watch?v=6R5ltUkIP-0
ROOP SIR PLEASE TELL WHAT SHE TOLD ABOUT OUR THALAIVAR
https://www.youtube.com/watch?v=SkJ5o4089fE
WATCH THE CLIPPINGS FROM 8.20 TO 10.54 THIS IS RANGA MOVIE MASTER TINGU , HAJAA SHERIFF PLAY STICK FIGHT IN FRON OF TV LOOKING THALAIVAR FIGHT SEQUENCE THAYA KATHA THANAYAN . ALONGWITH KARATHA MANI
https://www.youtube.com/watch?v=ialM5uM8cH8
’நீரும் நெருப்பும்’ படத்துக்கு வருவோம். தலைப்பே என்னைக் கவர்ந்தது. கதை, கதாநாயக நடிகர் என எதைப் பற்றியும் யோசிக்காமல், காளிதாஸ் முதல் நேற்றைக்கு வெளியான மாசிலாமணி வரைக்கும் வெறுமே சினிமா தலைப்புகளை மட்டுமே கொடுத்து எனக்குப் பிடித்த முதல் பத்து தலைப்புகளைப் பட்டியலிடச் சொன்னால், அந்த முதல் பத்தில் முதலாவதாக ’நீரும் நெருப்பும்’ இருக்கும். அது ஏன் என்றே தெரியவில்லை, எனக்கு அந்தத் தலைப்பு அத்தனைப் பிடிக்கும். அந்தத் தலைப்புக்காகவே அந்தப் படத்துக்கு நான் போனேன்.
படத்தின் கதை அந்த நேரத்தில் எனக்கு மிகப் புதுமையாகத் தெரிந்தது. அண்ணனை அடித்தால் தம்பிக்கு வலிக்கும் என்கிற சமாசாரமே வித்தியாசமாக இருந்தது. பிரமாதமான கலரில் படமாக்கப்பட்டு இருந்தது அந்தப் படம். எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேஷம். நன்றாகவே வித்தியாசம் காட்டி நடித்திருந்ததாக ஞாபகம். இதெல்லாவற்றையும்விட படத்தில் எனக்கு ரொம்பப் பிடித்திருந்த அம்சம், இரண்டு எம்.ஜி.ஆர்களும் ஒருவரோடொருவர் சண்டை போடும் காட்சி. படு த்ரில்லிங்காக இருந்தது. அதற்கு முன் இப்படியான டபுள் ஆக்ட் படம் எதையும் நான் பார்த்திருக்கவில்லை.
http://youtu.be/BfJlIXfZIU0
எனவே, இரண்டு எம்.ஜி.ஆர். ஒரே காட்சியில் தோன்றியதே எனக்குப் புதுசாக இருந்ததென்றால், அவர்கள் ஒருவரோடொருவர் வாள் சண்டை வேறு ஆக்ரோஷமாகப் போட, ரொம்பவே ரசித்துப் பார்த்தேன். அந்தக் காட்சியில் எடிட்டிங் படு பிரமாதம்! இவர் வாளை வீச, சட்டென்று அவர் தலையைப் பின் வாங்க, அவர் கத்தி சுழற்ற, இவர் ஒதுங்கித் தப்பிக்க என இருவரையும் மாறி மாறி எடிட் செய்து காட்டுவது அத்தனை லேசான சமாசாரமில்லை. ஆனால், அந்த நேரத்தில் எனக்கு இந்த டெக்னிக் எதுவும் தெரியாது. என்றாலும், ‘அட, எப்படி ரெண்டு எம்.ஜி.ஆர். சண்டை போடுற மாதிரி எடுத்தாங்க?!’ என்று வியந்துகொண்டே படம் பார்த்தேன்.
அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ஆங்கிலக் கதையை, 1949-லேயே எஸ்.எஸ்.வாசன் அவர்கள், ‘அபூர்வ சகோதரர்கள்’ என்ற தலைப்பில் எம்.கே.ராதா (இரு வேடங்கள்), பானுமதி ஆகியோரைப் போட்டு, இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படமாக எடுத்து வெளியிட்டார். அதிலும் எம்.கே.ராதாவும் எம்.கே.ராதாவும் போடும் கத்திச் சண்டை படு பிரமாதம் என்பார்கள். நன்றாக ஓடிய படம் அது. அதைத்தான் 1971-ல் எம்.ஜி.ஆரை வைத்து ப.நீலகண்டன் டைரக்ட் செய்து வெளியிட்டார்.
Courtesy- net
துக்ளக் சோ எம்.ஜி.ஆரைத் தன் பத்திரிகையில் எத்தனையோ கேலிச் சித்திரங்கள் போட்டு, எம்.ஜி.ஆருக்கு ஆட்சி செய்யவே தெரியாது, கோமாளி ஆட்சி என்றெல்லாம் விமர்சித்தார். எதுவுமே எடுபடவில்லை!
எம்.ஜி.ஆர். எதையுமே கண்டுகொள்ளவில்லை. கலைஞர் போல் பதிலுக்குப் பதில் வரிந்து கட்டிக்கொண்டு அறிக்கை விடவில்லை; பதில் சொல்லிக்கொண்டு இருக்கவில்லை. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தார். அவர் மீது அம்பு எய்தவர்களே களைத்துப் போய் ஒரு கட்டத்தில் வில்லைக் கை நழுவ விட்டார்கள்.
யாரையும் எம்.ஜி.ஆர். எடுத்தெறிந்து பேசியதாக, யோசித்துப் பார்த்தாலும் எனக்குத் தெரியவில்லை. குறிப்பாக, தொழிலில் போட்டியாக இருந்த சிவாஜி கணேசன், அரசியலில் போட்டியாக இருந்த கருணாநிதி இருவரையும் எம்.ஜி.ஆர். ஒரு நாளும் தரக் குறைவாகவோ, மரியாதைக் குறைவாகவோ விமர்சித்ததில்லை. ‘என் நண்பர் கருணாநிதி அவர்கள்...’, ‘என் தம்பி கணேசன்...’ என்றுதான் பேசுவார்.
ஒருமுறை, சென்னை வானொலியில் வி.ஐ.பி. தொகுத்து வழங்கும் தேன் கிண்ணம் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக்கொண்டு இருந்தது. தொகுத்து வழங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிவாஜி ரசிகன் என்ற முறையில் அந்த நிகழ்ச்சியை நானும் ரசித்துக் கேட்டேன். டி.எம்.எஸ். பாடல்கள் பட்டையைக் கிளப்பின. சிவாஜி ஒவ்வொரு குறிப்பைச் சொன்ன பிறகும் அதற்கான பாட்டு ஒலிபரப்பாகும். இப்படிப் பத்துப் பன்னிரண்டு பாடல்கள் அன்று ஒலிபரப்பாயின. பெரும்பாலும் தான் நடித்த படங்களிலிருந்தும், ஒன்றிரண்டு பாடல்களை மட்டும் வேறு சில படங்களிலிருந்தும் தொகுத்து வழங்கினார் சிவாஜி. நிகழ்ச்சியின் இறுதிவரையில் எம்.ஜி.ஆர். பாடல் எதையுமே சிவாஜி குறிப்பிடவில்லை; ஒலிபரப்பவில்லை. சிவாஜி ரசிகனாக இருந்தபோதிலும், எனக்கே இது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது.
மறுநாள், செய்தித்தாள்களில் எம்.ஜி.ஆர். தேனியிலோ அல்லது பெரியகுளத்திலோ கூட்டத்தில் பேசிய பேச்சு முழுமையாகப் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. படித்தேன். சிவாஜியைப் பற்றிக் குறிப்பிட்டு ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்திருந்தார். “தம்பி கணேசனுக்கு இணையான நடிகர் உலகிலேயே இல்லை. ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ சிறந்த நடிகர். அதனால், நமது கணேசனை ‘தென்னகத்து மார்லன் பிராண்டோ’ என்பார் அறிஞர் அண்ணா. உண்மையில், மார்லன் பிராண்டோதான் தன்னை ‘ஹாலிவுட் சிவாஜி’ என்று பெருமையோடு சொல்லிக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு ஈடு, இணையற்ற நடிகர் தம்பி கணேசன்” என்று பேசியிருந்தார். சிலிர்த்துப் போனேன்.
எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்தான். அவர் இடத்தை இனியொருவர் பிடிக்க முடியாது!
Courtesy - ravi prakash
Regarding the Malayalam movie clip Meleparambil Aanveedu, Jayaram secretly marries Shobana ailing from Tamil Nadu, takes her to his house in Kerala and tells his family she found a servant for the house. Janardhanan in the above clip ask Shobana who is in the photo she says that this is her GOD.
A detailed post about this movie and the MGR photo is given below.
http://www.mgrroop.blogspot.in/2011/...lam-movie.html
Today update of srimgr.com
http://www.mgrroop.blogspot.in/2014/...elease-16.html
Odum Megangale song and the dialogs.
http://www.youtube.com/watch?v=_UrWm...r_embedded#t=0
Reel and real fuses in 2.44 to 2.47. Meeting of life size MGR on the screen and real people with camphors lighted.
உலகின், அழகிய மிகப் பெரிய பூங்காவில், பூக்களின் நடுவே நம் புரட்சி தலைவரின் புன்னகை ததும்பும் எழில் மிகு தோற்றம் !
கடும் வெப்ப சூழ்நிலையில் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் பதிவினை வழங்கிய சகோதரர் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
புரட்சித் தலைவரின் புகழ் பரப்புவதையே பிரதான நோக்கமாக கொண்டு அவர் தொடர்பான அரிய செய்திகளை பலரும் அறியும் வண்ணம் பதிவிட்டு, குறிப்பாக மக்கள் திலகத்தின் படமும் , பெயரும் இடம் பெற்ற மற்ற படங்களின் வீடியோ தொகுப்புகளை மிக அழகாக பதிவிட்டு இத்திரியினை பார்வையிடும் எண்ணற்ற எம். ஜி. ஆர். பக்தர்களையும், ரசிகர்களையும், அபிமானிகளையும், அன்பர்களையும், மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடிக்கும் அருமை சகோதரர் திரு. யூகேஷ் பாபு அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் கலந்த நன்றி !
http://i62.tinypic.com/hu0jzl.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
நம் இதயதெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள், வழங்கிய "சிறப்பு தேன்கிண்ணம்" நிகழ்ச்சியில், மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களின் படப் பாடலாகிய " சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் " ஒலிபரப்பியதாக நினைவு. ரஷிய கலைஞர்கள் தமிழகத்துக்கு விஜயம் செய்த போழ்து, அவர்களுக்கு, தான் நடித்த வெற்றிக்கவியங்கள் பல இருக்கையில், சிவாஜி கணேசன் நடித்த "தில்லானா மோகனாம்பாள்" திரைப்படத்தை தான் காண்பித்தார்.
இது ஒரு சிறு உதாரணம் தான். இது போல் பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.
சாதனைகளின் சிகரம் மட்டுமல்ல, பெருந்தன்மையின் சிகரமும் நம் மக்கள் திலகம் தான். அதனால்தான், மறைந்து 26 வருடங்கள் நிறைவு பெற்றும், இன்றும் மக்கள் மனதில் நீங்காத நினைவுகளுடன், அசைக்க முடியாத வாக்கு வங்கியை கொண்டு, தான் உருவாக்கிய இரட்டை இலை சின்னத்துக்கு அபரிதமான வெற்றியை குவித்து, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார். இதன் மூலம் அரசியலிலும் சாதனை மன்னனாக இன்றும் கருதப்படுகிறார், தோல்வியை கண்டறியாத நம் பொன்மனச்செம்மல்.
http://i60.tinypic.com/2pqomdv.jpg
செய்தியினை பதிவிட்ட திரு வினோத் அவர்களுக்கு நன்றி. !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
இனிய நண்பர் திரு எஸ்வி அவர்களுக்கு
தாங்கள் இங்கே தொகுத்துள்ள, இணையதளத்தில் ஒருவர் எழுதியுள்ள செய்தி படித்தேன்.
தவறான தகவலை கூறியிருக்கிறார் அந்த இனிய நண்பர். அதுவும் சிவாஜி ரசிகன் என்று கூறிக்கொண்டு. எழுதிய விதத்திலிருந்தே அவர் சிவாஜி ரசிகர் அல்லர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
அவர் குறிப்பிட்ட அந்த இரண்டு சிறப்பு தேன்கிண்ணம் நிகழ்சிகள் அப்போதைய நிகழ்சிகளில் பெரிதாக பேசப்பட்டது. காரணம், உண்மையான ரசிப்புத்தன்மை நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகத்திற்கு பரஸ்பரம் உண்டு என்று அனைவராலும் பேசப்பட்டது.
இனி விஷயத்திற்கு வருகிறேன் - அந்த சிறப்பு தேன்கிண்ணம் நிகழ்ச்சியில் அந்த நண்பர் பொய் உரைதிருப்பதை போல சிவாஜி, mgr அவர்கள் பாடலை கூறாமல் இல்லை.
திரு.mgr படங்களின் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று நடிகர் திலகம் "ஆடாத மனமும் உண்டோ" என்ற பாடலை கூறி அந்த பாடலும் தேன்கிண்ணத்தில் ஒலிபரப்பப்பட்டது.
அதுபோல திரு mgr அவர்களும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடலை விரும்பி ஒளிபரப்பியதை நண்பர் எழுதியுள்ளார். அந்த தகவல் மட்டும்தான் உண்மை.
இந்த உண்மையை அறியவேண்டுமானால் வானொலி அண்ணா என்றழைக்கப்படும் திரு,கூத்தபிரான் அவர்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம் அல்லது அப்போதைய சவுண்ட் engineer , திரு நடராஜன் (இப்போது அவர் ஒரு consultant - air ) அவர்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
திரு. MGR புகழை பரப்ப "சிவாஜி" என்ற யுக கலைஞன் பெயர் எப்படியெல்லாம் இவரகளைபோல் உள்ளவர்களுக்கு உதவுகிறது என்பதை நினைத்துபார்க்கும்போது புளகாங்கிதம் அடைகிறது !
சிவாஜியின் பெயர்க்கே இவ்வளவு பெருந்தன்மை குணம் இருக்குபோது சிவாஜி என்கிற மாபெரும் கலைஞனுக்கு எவ்வளவு பெருந்தன்மை குணம் இருக்கும் என்பது இதிலிருந்தே விளங்கும் !
இணையதள பதிவுகளில் ரசிகர் பதிவிடும் பதிவுகள் எந்தளவுக்கு நம்பகத்தன்மை கொண்டது என்பதற்கு இது ஒரு உதாரணம் !
இப்படி சிவாஜி ரசிகன் என்ற பெயரில் சிவாஜியை சிறுமை படுத்துவதில் என்ன சந்தோஷம் அந்த நண்பர் அடைவாரோ தெரியவில்லை.
அதை எழுதியவர் சிவாஜி ரசிகர் அல்லர் என்பது தான் உண்மை. !
இன்றைய மாலை மலர் விளம்பரம்.
http://i62.tinypic.com/faa3y9.jpg
http://i1170.photobucket.com/albums/...psc9a5bf3d.jpg
26 - 6 - 1966 , காஞ்சி இதழ்
அட்டைப்படம் .
ஒட்டிப்பிறக்காத இரட்டையர்கள், தமிழ்சினிமாவும் எம்ஜிஆரும் -
இன்று ஜனவரி 17, 2014., மறைந்த புரட்சித்தலைவர் மக்கள் திலகம் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 97ஆவது பிறந்ததினம். 1917 இல் கோபாலமேனன் – சத்யபாமா தம்பதியருக்கு ஸ்ரீலங்கா கிண்டி அருகே உள்ள கிராமத்தில் மகனாகப் பிறந்தார். பால்ய காலத்திலும் அதனைத் தொடர்ந்து அவரது இளமைப் பருவத்திலும் பல்வேறு சோதனைகளைச் சந்தித்த எம்.ஜி.ஆர் தனது அன்னையின் வளர்ப்பினில் நல்லவராகவே வளர்ந்தார்.
சிறுவயதில் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த அவர் 1936 ஆம் வருடம் சதிலீலாவதி படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து 1978 இல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை வசூல் சக்ரவர்த்தியாக தமிழ்த்திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கினார். அதே காலகட்டங்களில் தீவிர அரசியலிலும் ஈடுபட்டதால் தொடர்ந்து படங்களில் நடிக்க அவருக்கு நேரம் கிடைக்கவில்லை.
அதனையடுத்து, அவர் நடித்த அவசர போலீஸ் 100, நல்லதே நாடு கேட்கும் ஆகிய படங்கள் முற்றுப்பெறாமலேயே நின்று விட்டன. இதில் அவசர போலீஸ் 100 இல் எம்ஜிஆர் நடித்த சில காட்சிகளை அடிப்படையாக வைத்து கே.பாக்யராஜ் இயக்கி நடித்து அதேபெயரில் முழுப்படமும் வெளிவந்து வெற்றிபெற்றது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் வெற்றிப்படங்களில் ஒன்றான எங்க வீட்டுப்பிள்ளை பாணியில் திரைக்கதை அமைத்திருப்பார் கே.பாக்யராஜ்.
தனது இளமைப்பருவத்தில் தான் சார்ந்த ஹிந்து மதத்தின் மீது மிகுந்த நம்பிக்கையும் தீவிர முருக பக்தராகவும் விளங்கினார் எம்.ஜி.ஆர். அதன் பிறகு திராவிட இயக்கங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டபிறகு பகுத்தறிவுக்கொள்கையைக் கடைபிடித்தாலும் தீவிர நாத்திகராக என்றும் அவரை வெளிக்காட்டிக்கொண்டதில்லை. போலிமதச்சார்பின்மையைக் கடைபிடித்து மக்களை ஏமாற்றாமலேயே அனைத்து சமூகத்தினரையும் நேசித்து அவர்களின் மனதில் நீக்கமற நிறைந்த மாமனிதராக விளங்கினார்.
எம்.ஜி.ஆர், திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டது , அதனைத் தொடர்ந்து அதிமுகவை ஆரம்பித்து அவரது ஆயுட்காலம் வரை யாராலும் வீழ்த்த முடியாத சக்தியாக விளங்கியது எல்லாம் நாடு நன்கறியும்.
திரையுலகம் என்று வரும் போது. தமிழில் முதல் படமாக நடராஜ முதலியாரின் தயாரிப்பு-இயக்கத்தில் வெளீவந்த கீசக வதம் வெளியான ஆண்டு 1917. அதே ஆண்டில் பிறந்த எம்.ஜி,ஆர் தமிழ்த்திரையுலகின் ஒட்டிப்பிறக்காத இரட்டையராக விளங்கினார் என்றால் அது மிகையாகாது. ஆக, தமிழ்த்திரையுலகிற்கும் எம்.ஜி.ஆருக்கும் ஒரே வயது. தமிழ்த்திரையுலகம் உள்ளவரை எம்.ஜி.ஆர் புகழ் நிலைத்து நிற்கும். 1936 முதல் 1978 வரையிலான 38 ஆண்டுகளில் 136 படங்களில் நடித்திருக்கிறார். ரிக்*ஷாவை ஓட்டியே பாரதவாங்கியவர் எம்.ஜி.ஆர் என்று சொன்னால் அதுமிகையாகாது. ஆம், அவர் நடிப்பில் 1972 இல் வெளிவந்த ரிக்*ஷா காரன் என்கிற படம் அவருக்கு பாரத் வாங்கிக் கொடுத்தது. சமூகக் கருத்துக்களை உள்ளடக்கிய, அதே நேரம் வணிகரீதியலான வெற்றியும் பெறக்கூடிய படங்களுக்கு அவரது படங்கள் தாம் முன்னோடி என்று சொல்லாம். அந்த அளவிற்கு இன்றளவும் அவரது பாணிபின்பற்றப்பட்டு வருகிறது.
எம்.ஜி.ஆர், அவர் வாழும் காலம் வரை வள்ளலாகவேத் திகழ்ந்திருக்கிறார். தேடி வந்தவர்களின் பசியையும் வறுமையையும் போக்க அவர் தவறியதே இல்லை.
அவரைத் தேடி வந்த பலருக்கும் அவர் அள்ளித்தான் கொடுத்திருக்கிறாரேயன்றி ஒருபோதும் கிள்ளிக்கொடுத்ததில்லை. அவர்களும் நன்றாக இருந்து அவர்களை நம்பிவருவர்களும் பயன்பெற்றால் ஒட்டுமொத்த சமூகமும் பயன்பெறுமே என்கின்ற எம்.ஜி.ஆரின் நல்லெண்ணத்தைத் தவிர அதில் வேறு எதுவும் இருக்கமுடியாது. அவரால் பயன்பெற்ற பலர் இன்று பல்கலைக்கழங்களும் கல்லூரிகளும் நடத்திக்கொண்டு எம்.ஜி.ஆரின் நல்லெண்ணத்தை முழுமையாகச் செயல்படுத்த முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள். இன்னும், எம்.ஜி.ஆருடன் பழகியிருக்கிறேன், அவர் எனது நண்பர், அவர் தோட்டத்தில் விளையாடியிருக்கிறேன், அவருடன் அமர்ந்து உணவருந்தியிருக்கிறேன் என்று சொல்பவர்கள் பலராலும் அவரைப்போல் பொது நலவாதியாக விளங்கமுடியாததும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
எம்.ஜி.ஆரைப் பின்பற்றுகிறேன் என்று சொல்பவர்கள் , அவரளவுக்கு முடியாவிட்டாலும் தங்களால் இயன்றதை இந்தச் சமுதாயத்திற்குச் செய்யவேண்டும். செய்யத்தவறுபவர்களுக்கு எங்கவீட்டுப்பிள்ளை எம்.ஜி.ஆரின் சாட்டை மேலோகத்தில் காத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
courtesy net
today i watched ram our shyam (engaveetu pillai hindi remake ) my favourite hotel scene watch two legends performance
http://www.youtube.com/watch?v=6iEz3U0DUII
http://www.youtube.com/watch?v=mVYEC_6CXTg
"தாய் சொல்லைத் தட்டாதே" சூப்பர் ஹிட், நூறு நாட்கள், தொடர்ந்து ஹவுஸ்புல்
"திருடாதே" வெற்றியின் மூலமாக, சமூகப் படங்களில், நவீன உடைகளில் நடிக்கலாம் என்ற நம்பிக்கை எம்.ஜி.ஆருக்கு உண்டாயிற்று. சரித்திரப் படங்களை உருவாக்க செலவு அதிகம். அதிக காலம் பிடிக்கும். ஆனால், சமூகப் படங்களை குறைந்த செலவில், குறுகிய காலத்தில் தயாரிக்கலாம். எனவே, எம்.ஜி.ஆர். படங்கள் வரிசையாக வரத்தொடங்கின.
1961_ல் "திருடாதே"க்கு பிறகு, "சபாஷ் மாப்பிளே", "நல்லவன் வாழ்வான்", "தாய் சொல்லைத் தட்டாதே" ஆகிய மூன்று படங் கள் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந் தன. இதில், "சபாஷ் மாப்பிளே" என்ற படம் நடிகை மாலினியின் சொந்தப்படம். (சபாஷ் மீனா வில் சிவாஜியுடன் கதாநாயகி யாக நடித்தவர், மாலினி) மாலினிக்கு படங்களே இல்லை. அவர் வேண்டிக் கொண்டதால், "சபாஷ் மாப் பிளே" படத்தில் நடிக்க எம்.ஜி. ஆர். சம்மதித்தார்.
எம்.,ஜி.ஆரு டன் கதாநாயகியாக மாலினி நடித்தார். படத்தை மாலினியின் கணவர் ராகவன் டைரக்ட் செய்தார். டைரக்ட் செய்தார் என்பதை விட, டைரக்ட் செய்யக் கற்றுக் கொண்டார் என்றுதான் கூற வேண்டும். விளைவு, இந்தப்படம் சரியாக ஓடவில்லை. அரசு பிக்சர்ஸ் தயாரித்த "நல்லவன் வாழ்வான்" படத்தில் எம்.ஜி.ஆரும், ராஜசுலோசனா வும் ஜோடியாக நடித்தனர். அண்ணா எழுதிய கதை இது. ப.நீலகண்டன் டைரக்ட் செய் தார். இது சராசரி படம். 7_11_1961_ல் வெளியான "தாய் சொல்லைத் தட்டாதே" பெரிய வெற்றிப்படம். இது சாண்டோ சின்னப்ப தேவர் தயாரித்த படம்.
1956_ல் படக்கம்பெனி தொடங்கிய சின்னப்ப தேவர், எம்.ஜி.ஆரை வைத்துத்தான் தனது முதல் படத்தை ("தாய்க் குப்பின் தாரம்") தயாரித்தார். இருவரும் நீண்ட கால நண்பர்கள். எனினும் "தாய்க்குப்பின் தாரம்" படத்தை எம்.ஜி.ஆரிடம் அனுமதி பெறாமல் தெலுங்கில் "டப்" செய்து வெளியிட்டதால் தேவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் சின்னப்பதேவர், வேறு நடிகர்களை வைத்து "நீலமலைத்திருடன்" (ரஞ்சன்), "யானைப்பாகன்" (கல்யாண்குமார்), வாழவைத்த தெய்வம் (ஜெமினிகணேசன்), கொங்கு நாட்டுத் தங்கம் (ஆனந்தன்) முதலிய படங்களை எடுத்துக்கொண்டிருந்தார்.
எம்.ஜி.ஆருக்கும், தேவருக் கும் கருத்து வேற்றுமை ஏற்பட்ட போதிலும் ஒருவர் மீது ஒருவர் அன்பும், பாசமும் கொண்டிருந் தனர். "நல்ல நண்பர்களாக இருந்து, இப்படிப் பிரிந்து விட்டோமே" என்று இருவரும் வருந்தினர்.
1961_ம் ஆண்டின் பிற்பகுதி யில், "தாய் சொல்லைத் தட் டாதே" என்ற பெயரில் புதிய படத்தை தயாரிக்க தேவர் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். இதற்கான கதை_வசனத்தை ஆரூர் தாஸ் எழுதி முடித்திருந்தார். இந்தப் படத்துக்கான பாடல் பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, வேறொரு படப்பிடிப்புக்காக ஸ்டூடியோவுக்கு எம்.ஜி.ஆர். வந்தார். அவரும், தேவரும் எதிர்பாராமல் சந்தித்துக் கொண்டனர். இருவரும் கட்டித் தழுவிக் கொண்டனர். ஐந்து வருட இடைவெளிக்குப்பிறகு, இருவரும் நட்பை புதுப்பித்துக் கொண்டனர்.
"என் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் அண்ணே!" என்று தேவர் கேட்டுக் கொண்டார். "நிச்சயமாக நடிக்கிறேன் அண்ணே" என்றார், எம்.ஜி.ஆர். (எம்.ஜி.ஆரை விட தேவர் கொஞ்சம் மூத்தவர். எனினும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்று தான் அழைப்பார்.)
"தாய் சொல்லைத் தட்டாதே" படத்தில் ஜெமினி கணேசனை யும், சரோஜாதேவியையும் ஜோடியாக நடிக்க வைக்க தேவர் திட்டமிட்டிருந்தார். அந்தத் திட்டத்தை மாற்றி, எம்.ஜி.ஆரையும், சரோஜாதேவி யையும் நடிக்க வைத்தார். ஏற்கனவே கதை_வசனம் தயா ராக இருந்ததால், படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்க எம்.ஜி.ஆர். சம்மதித்து, அதற் கேற்றபடி `கால்ஷீட்' கொடுத் தார். கதை அமைப்பிலும், வச னத்திலும், எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி ஒரு சில மாற்றங்களை மட்டும் ஆரூர்தாஸ் செய்தார். எம்.ஆர்.ராதாவும் இப்படத் தில் நடித்தார். கே.வி.மகாதேவன் இசை அமைக்க, எம்.ஏ.திருமுகம் டைரக்ட் செய்தார்.
படப்பிடிப்பு வேகமாக நடந் தது. ஒரே மாதத்தில் படம் முடி வடைந்து, 7_11_61 தீபாவளித் திருநாளில் ரிலீஸ் ஆகியது. "தாய் சொல்லைத் தட்டாதே" சூப்பர் ஹிட் படமாக அமைந் தது. நூறு நாட்கள், தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி, வெற்றி விழா கொண்டாடியது. எம்.ஜி.ஆர் _ தேவர் நட்புறவு முன்பைவிட பலமாக அமைய, தொடர்ந்து தேவரின் படங்களில் எம்.ஜி.ஆர். நடிக்கலானார்
courtesy -net
மக்கள் திலகத்தின் படங்கள் சன் லைப் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிப்பரப்பாகி வருவது மகிழ்ச்சியான தகவல் .
இன்று காலை - காவல்காரன்
இன்று இரவு - பறக்கும் பாவை
சனிக்கிழமை - கூண்டுக்கிளி
Courtesy - Ramakrishna -net
1975ல் எம்.ஜி.ஆர். அவர்களை அதிக கும்பல் இல்லாமல் மிக அருகில் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.
எங்கள் BHEL Factory க்கு வருகை தந்திருந்தார். கேண்டீன் வாசலில் இருந்த மேடையில் ஏறி நின்று 10 - 15 நிமிடங்கள் பேசினார். நான் அங்கு அவருக்கு மிக அருகில் நின்று இருந்தேன். மொத்தமாக ஒரு 1000-2000 ஊழியர்கள் மட்டுமே இருந்தோம்.
Protected Area ஆகையால் பொதுமக்கள் கூட்டமாக வர முடியாமல் இருந்தது. அந்த ஷிஃப்டில் இருந்த ஊழியர்கள் மட்டுமே.
பேசி முடித்த பிறகு அந்த சற்றே உயரமான [சுமார் 4 அடி இருக்கும்] மேடையிலிருந்து படி இறங்கி வராமல் தொப்பென்று குதித்து விட்டார். பிறகு ரெடியாக இருந்த ஜீப்பில் ஏறி ஃபேக்டரியின் பல்வேறு தொழிற்கூடங்களைப் பார்வையிட்டுவிட்டு, கிளம்பி விட்டார்.
வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, வெள்ளைத்தொப்பி, கருப்பு கூலிங் க்ளாஸ், ரோஸ் கலரில் முகம், இன்றும் நன்றால நினைவில் உள்ளது.
சுகமான நினைவலைப்பதிவுக்கு நன்றிகள், ஐயா.
V.c guganathan
‘கண்ணன் 1 காதலி 2’ திரைப்பட இசை வெளியிட்டு அவர் பேசியதாவது,
“நான் பள்ளியில் படித்த காலத்தில் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகனாக இருந்தேன். ஒரு முறை அவருடைய படங்களைப் பார்த்து அவருக்கு கடிதம் எழுதினேன். தங்களைப் பார்க்க எனக்கு அனுமதி அளித்து நேரம் தருமாறு கேட்டிருந்தேன்.
அதற்கு அவருடைய உதவியாளர் பதிலளித்தார். நீங்கள் நேரில் வரவேண்டாம், உங்கள் ஊருக்கு அவர் வரும் போது நீங்கள் சந்திக்கலாம் என்றார்.
ஆனால், அவரைச் சந்திக்கும் நாட்கள் எனக்கு உடனே கிடைத்தது. பள்ளிப் படிப்பு முடிந்து பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த போது, ஒரு விழாவிற்கு அவரை அழைத்து வர சந்தர்ப்பம் கிடைத்தது.
அந்த விழா முடிந்ததும், அவரிடம் எனக்கு நடிக்கும் ஆசை உள்ளது, வாய்ப்பு கிடைக்குமா என கேட்கலாம் என்றிருந்தேன். ஆனால், அவரை நேரில் பார்த்ததும், அவருடைய அழகுடன் என்னை ஒப்பிட்டுப் பார்த்து, அந்த ஆசையையே அறவே வெறுத்தேன்.
அவர் படிப்பைத் தவிர வேறு என்ன தெரியும் என்று என்னிடம் கேட்ட போது, கதை எழுதுவேன் என்றேன். உடனே, அவருக்கு ஒரு கதை எழுதித் தருமாறு கேட்டார்.
சில நாட்கள் கழித்து, அவரிடம் போய் ஒரு கதை சொன்னேன். ஆனால், அந்த கதை பெண்களை மையப்படுத்திய கதை. எனக்காக நீ கதை எழுத வேண்டுமென்றால் இப்படியா எழுதுவாய் என்றார். நானும் சில நாட்கள் சந்தர்ப்பம் கேட்டு, நான்கு நாட்கள் கழித்து வேறு ஒரு கதையுடன் சென்றேன்.
அந்த கதைதான் ‘புதிய பூமி’ திரைப்படமாக வெளிவந்தது. என்னை முதன் முதலாக திரையுலகில் ஒரு கதாசிரியராக அறிமுகப்படுத்தியது அவர்தான்.
அதன் பின் ஒரு நாள் என்னை சந்திக்க தயாரிப்பாளர் கோவை செழியனை, எம்ஜிஆர் அவர்கள் அனுப்பி வைத்தார். அவர் நேராக வகுப்பறைக்கு வந்து பேராசிரியடம், உங்களைப் பார்க்கத்தான் நான் வந்தேன் என்றார். அவரோ என்னையா என்று கேட்டார். நீங்கள்தானே வி.சி.குகநாதன் என்றார். அவரோ, நானில்லை, குகநாதன் இந்த வகுப்பின் மாணவன் , என்று என்னை அழைத்து அறிமுகப்படுத்தி வைத்தார்.
கோவை செழியன் அவர்களுக்கு மிகவும் ஆச்சரியம். ஒரு கல்லூரி மாணவரைப் பார்க்க எம்ஜிஆர் நம்மை அனுப்பி இருக்கிறாரே என்று.
அவருக்கு நான் சொன்ன கதைகளில் ஒன்றுதான் பின்னர் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘குமரிக்கோட்டம்’ திரைப்படம்.
எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட நான் அதன் பின் பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட கதைகளை திரைப்படங்களுக்காக எழுதியிருக்கிறேன்.
ஒருவரிடத்தில் உள்ள திறமையை, அத்துடன் நிறுத்திக் கொள்ள வைக்காமல், அவர் மேலும் வளர்வதற்கு வாய்ப்புத் தரும் ஒரே மனிதர் எம்ஜிஆர் அவர்கள்.
அவர் ஏற்றி வைத்த விளக்குதான் இன்று வரை என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது, ” என்றார்.
THANKS - THIRU MANISEGARAN -MGR FILM SONGS ARE ALWAYS POPULAR
MGR was certainly "prophetic" in his own ways. He knew that his acting parameters were limited. He retained same style of acting from day one. Yet he felt that his ultimate strength would be songs. As has been stated several times, MGR looked into every angle and aspect of songs in his films.
1) MGR decided the song writers
2) Sat with them and went through the lyrics word for word and line for line. ( The late Marudhakazi and Valee related to me this)
3) He sat with MDs and approved the tunes. RM Veerappan said that all the tunes in MGR songs were approved by MGR. MGR event went to the extent of buying western vinyl records for the listening of the MDs- Kunnakkudi Vaithiyanathan has said this when songs for Navarathinam were composed
4) MGR decides the singers as well.
5) MGR decided the screenplay for the song scenes (Puthaneri Subramaniam related this with me at a breakfast talk in his house. He wrote a song "Veesu Thendrale Veesu" for Nadodi Mannan, for which MGR imagined the song scene. However the song was left out and later used in Ponni Thirunaal. But MGR does contribute to the picturisation)
The man's intense and deep involvement rewarded we fans very well in that his songs were instant hits, and his song scenes were powerful and left indelible impressions upon us.
Singers who sang for him and lyricists who wrote for him received many chances from other MDs as well.
Many of his songs bagged several coveted awards.
His song scenes were too costly and yet enriching. The song scene with the biggest expenditure in those days was Azhagiya Thamizh Magal Ival- Rickshawkaran- two lakhs then. (One of the fours immortal songs where MSV used too many instruments)
His dream songs were simmply matchless!
See the song scene of "Nadagamellaam Kanden Unthan Aadum Vizhiyile" in Madurai Veeran- the staring point of major dream songs. How about "Kannnil Vanthu Minnal Pol" in Nadodi Mannan - underwater scene, that drew the attraction of the press.
All his efforts paid off. ADMK stood for elections in December 1984, in the absence of MGR. MGR was admitted in Brooklyn Hospital USA for multiple ailments. Tamilnadu felt desperate. The video clipping of MGR conversing with his doctor was screened in all theatres. But more importantly, MGR's famous songs were played over AIR over and over for two weeks. His songs carpetted the entire country and permeated the hearts and souls of his ardent fans.
And MGR won with the biggest mandate.
Cho ramasamy wrote" THis is the biggest mandate MGR has received. With this mandate MGR could do two things:
a) Use his tremeondous influence to do something good for the country; or
b) decide to be arrogant.
When MGR was in the Brooklyn Hospital one particular song became a prayer for MGR- again a prayer by all major religious groups. The song is "Aandavane Un Pathangalai Naan Kanneeril Neerattinen" - Oli Vilakku. By Vaalee.
When MGR recovered and returned to Tamilnadu V. N Janagi, MGR's consort told Valee that it was Valee Bagyam that saved MGR. Valee said it was actually VN Janagi's Taali Bagyam that rescued him!
When you listen to MGR songs, there is a special power. And that undeniable and irrepressible power is this: When you listen to his songs, the MDs who composed for his songs would be lost out. The singers will be lost out. Automatically the image of MGR and MGR alone would appear before our faces.
An example: Naan Aanayittaal Athu Nadanthuvittaaal....
Mannadhi Mannan (Tamil, 1960) - Can you imagine! MGR pitted against the inimitable Padmini in a dance competition? MGR certainly gives his all (starting around 1:25) in trying to perform some semblance of Kathak, and the way he is edited makes it even more giggle-worthy. Padmini dances brilliantly as always! A humorous and enjoyable number. It even contains the "images made with the feet" technique mocked by the Tamil Padam song above.
http://youtu.be/tFvxoi3eEE0
MAKKAL THILAGAM IN WESTERN STYLE DANCE
http://youtu.be/EsKcsULcPmk
MAKKAL THILAGAM MGR - ANOTHER SUPER HIT DANCE AND SONG FROM ENKADAMAI -1964
http://youtu.be/aNaScr3eqVA