வெகுளிப்பெண் 'வெண்ணிற ஆடை நிர்மலா'விடம் 'வெண்ணிற ஆடை...வெண்ணிற ஆடை சின்னக்கா...மின்னற மின்னும் பின்னற பின்னும் என்னக்கா!' பாடும் குரல் யாருது?
Printable View
வெகுளிப்பெண் 'வெண்ணிற ஆடை நிர்மலா'விடம் 'வெண்ணிற ஆடை...வெண்ணிற ஆடை சின்னக்கா...மின்னற மின்னும் பின்னற பின்னும் என்னக்கா!' பாடும் குரல் யாருது?
மதுண்ணா முன்னம் பதிவிட்ட 'தித்திக்கின்றதா முத்தமிட்டது' நிரம்ப வித்தியாசம். தித்தித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஜமுனாராணியா அது? அடி சக்கை. என்னா ஒரு போதை! குமார் எங்கயோ போய்விட்டார். பாடலில் இளமை மாறா புதுமை வரிக்கு வரி தெரிகிறது.
மிக்க நன்றி வாசு சார்
வாசுஜி... தித்திக்கின்ற பாடலில் ஜமுனா ராணியுடன் சுவர்ணாவும் பாடி இருக்காராமில்ல.. ?
கோபால் ஜியின் பத்துமணி படப் பதிவுகள் இன்னும் பல பட டிரெயிலர்களை மனசுக்குள் ஒட்டுதே !
இது என்ன ஒரு நாள் ராத்திரியிலேயே மூன்று பக்கங்களா..பேஷ் பேஷ்..திருஷ்டி சுற்றிப் போட வேண்டும்
காலம் எனக்கொரு பாட்டெழுதும் ஏ.ஆர் ரஹ்மானின் தந்தை சேகர் என எனக்குத் தெரியாது.. தாங்க்ஸ் மதுண்ணா..
சொ சூ சு.. ஐ திங்க் பரமேஸ்வரி போஸ்டரில் பார்த்த நினைவு.. English title Its hot in paradise என்பதுபோல் வரும்..இஸிண்ட் இட்.. :)
ஊமைப் பெண்ணை ப் பேசச்சொன்னால்.. கேட்ட போது எனக்கும் கொஞ்சம் இடித்தது லிரிக்ஸ்..பின் எழுதலாம் என இருந்தேன் மதுண்ணா எழுதிவிட்டார்.. தாங்க்ஸ்..
கோ அஸ்யூஸ்வல் குட் கலக்குங்கள்..
காலையில் மனதிற்குள் வந்த பாடல்.. டி.எம்.எஸ் பி.எஸ்.. ஈவ்னிங்க் வீட் போய்ப் பார்கக்ணும்..மாய்ந்து மாய்ந்துபாதி ஆங்கிலத்தை தமிழ் ப்படுத்தி எழுதினால்..பின் ஏற்கெனவே வேறு ஒரு சைட்டில் இருக்க வெறுத் போனேன்.. அழகிய பாட் ..பட் ந.திக்குக் கொடுத்திருக்கலாம்..ஐ திங்க் ராகவேந்தர் சாரும் சொன்ன நினைவு..
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா..
கன்னத்துக்குள்ளே கனிந்திருப்பது ஆயிரம் கண்ணே
கண்ணால் அதைக் கண்டால் மட்டும் சுகமில்லை கண்ணே
அல்லிப்பூவை ப் போலிருக்கும் அழகிய மேனி
நான் அங்கு வந்து தேனெடுத்துப் பாடிடும் தேனி
இங்கு போதை கொண்டு ஜாடை காட்டும்
மலையினில் ஏறி
நான் பொய்கை மீது தாவிடுவேன்
உன் பெயர் கூறி
வாழை தோட்டம் போட்டது போல்
கால்கள் இரண்டு
அதை வட்டம் போட்டு வருவதென்ன
கண்கள் இரண்டு
நல்ல பாலும் தேனும் பெண் வடிவில்
ஒன்று திரண்டு
உன்னைப் பருக சொல்லி உருகியதோ
அருகினில் வந்து
மெல்ல மெல்ல கண்ணை மூடி
திறந்திட வேண்டும்
கதை சொல்லச் சொல்ல இதழ் இரண்டும்
சிவந்திட வேண்டும் (பேய்க் கதையா இருக்குமோ)
சொல்லும் போது பெண்ணை கொஞ்சம்
கவனிக்க வேண்டும்
என்னை தோழி பார்த்து சிரித்திடாமல்
அருள் செய்ய வேண்டும்
*
வெகு நாசூக்கான வரிகள்.. தோழி பார்த்துச் சிரித்திடாமல் அருள் செய்யணுமாம்..பட் அந்தக்காலப் பாட்டுல (?!) என்ன வருதுன்னா..
தலைவியின் அம்மாக்கு டென்ஷன்..என்னபண்றது..ஆசையா வளர்த்த மகள்..கொஞ்சம்கொஞ்சம் ஜாடையாச் சொல்லிடலாம்..மற்றபடி மகளே உன் சமர்த்துத்தான்..காலையில் கல்யாணம் இப்போ இந்தப் பொண்ணு மாப்பிள்ளையோட இருக்கப் போறா.. சரி சந்தோஷமா இருந்தாளா.. மறு நாள் தோழியை அனுப்பிக் கேக்கறா அம்மா..
தோழி வந்து கன்னஞ்சிவந்த அடையாளங்கள் கீறல்கள் சொல்ல அம்மாக்காரி அந்த நகம் மேலும் மேலும் வளரட்டும்னு வாழ்த்தறாளாம்..! அப்படின்னு சங்கப்புலவர் சின்னக்கண்ணனார் சொல்றாராம்.. :)
வளமாய்த் தலைவியின் வாழ்க்கையைச் சொல்லி
நலமே பயக்கும் நகம்
சரி இப்ப பாட் கேட்டுப் பார்க்கலாமா :)
https://youtu.be/DUgmdCmb898
சின்னா,
இந்த பாடல் திட்டமிட பட்டதல்ல.படம் பார்த்த நடிகர்திலகம்,ரொம்ப சீரியஸ் என்று மக்கள் புறக்கணிக்க வாய்ப்புள்ளதால்,ரிலாக்ஸ் பண்ண இதை வைக்க சொன்னாராம்.
இன்னொரு நடிகருக்கு, தன்னுடைய இணையை விட்டு கொடுத்து காதல் பாடல் வைத்த பெருநதன்மை. இது எஸ்.எஸ்.ஆர் ,டி.வீயில சொன்னது.
என் பிடித்தமும் கூட.
ஓ. கோபால்..தாங்க்ஸ் ஃபார் த வாழ்த்துகள் அண்ட் தாங்க்ஸ் ஃபார் த க்விக் ஃபீட் பேக்..
ம்ம்..யா..பெருந்தன்மை தாங்க..யாருக்கும் வராது.. அழகான பாட்
//சின்னா! போட்டிருக்கேனே! படிக்கலியா?// ஃபாஸ்ட் ரீடிங்ல நினைவில் தங்கவில்லைவாஸ்ஸு..சாரி..
அந்தப் பக்கம் என்னமோ இடி மின்னல் மழை போலத் தெரியுதே..புகை கூட வருது..ம்ம் அதனால நமக்கென்ன நாம பாட் கேப்போம் :)
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா ( நான் என்னை ச் சொல்லலை!) :)
சுசீலாம்மாவின் குரல் வெகு இனிமை..
https://youtu.be/LKJ2BTbrIS4
-deleted with warning-
From GG's Island !
Quite unexpected and energetic dance by GG!!
Thaththakkaa puththakkaa naalu kaalu.....?!
https://www.youtube.com/watch?v=Bkn4OgRcapY
The lyrics of this song has reference in a Vadivelu comedy movie Piraku! enjoy!!
https://www.youtube.com/watch?v=3mWY1B4YTM8
கிலுக்காதே கிலுங்குன்ன கிலுக்காம்பெட்டி நின் கிண்கிணி அரண்மனை எவிடே
(கலகலவென சதங்கைச் சரவொலிகளாய் வருகின்ற நங்கையே..உன் கிண்கிணிச் சிரிப்புகளால் ஆக்ரமித்து அழகுறும் அரண்மனை எங்கு உள்ளது)
சிரிக்காத சிரிக்குன்ன சிரிக்கொடுக்கே நின் சித்திரச் சிலம்புகள் எவிடே
சிரிக்காமல் சிரித்துக் கொண்டு சிரிப்பை வழங்கும் ஓவியமே.. உனது அழகிய சித்திர வேலைப்பாடுகள் அமைந்த கொலுசுகள் எங்கே
ஒளிச்சு வச்சு ஞான் ஒளிச்சு வச்சு
அன்பரே அதை நான் ஒளித்து வைத்துவிட்டேன்..
ப்ரியத்ம லயிக்கும் ப்ரேம ரசத்தில் ஒளிச்சு வச்சு ஞான் ஒளிச்சுவச்சு
உனது ப்ரியங்களுடன் கூடிய காதல் ரசத்தில் அந்தக் கொலுசுகளை ஒளித்து வைத்துவிட்டேன்..
**
என்னது அப்புறமா அதெல்லாம்முடியாத்.. இதுக்கு மேல ட்ரான்ஸ்லேஷன் மாதிரி பண்ணிப்பார்க்க த் தெரியலை..
படம் மந்திரக் கொடி பாடியவர்கள் ஜெயச்சந்திரன் பி.சுசீலா நடிப்பு.. பிரேம் நசீர் விஜய ஸ்ரீ..
(வாஸூ விஜய ஸ்ரீ பற்றி அலசும் போது ஈ படத்தை நீர் பேசினிரோ)
அழகானபாடல்..
https://youtu.be/30bIS9Qve9k
அதே படத்தில் இன்னொரு பாடல் சுசீலாம்மா
கதிர் மண்டபமொருக்கி யாமொரு மண்டபமொருக்கி
நானொரு கல்யாண ப் பந்தலொருக்கி
https://youtu.be/BTtagW8_pT0
மந்திரக் கொடி பாடல்கள் தொடரும் :)
மந்திரக் கொடி பாடல்கள் தொடர்கிறது
அப்புறம் ..
இங்க பார்ங்க மன்மதன் தமிழ்காரெக்டர்னு தானே நினைச்சோம்..
மலரம்பனெழுதிய மலையாளக் கவிதையாம் விஜயஸ்ரீ.. நான் சொல்லலை
ப்ரேம் நஸீர் சொல்றார்..
https://youtu.be/W9IhWDCLw28
இந்தப் பாட்டைப் போடலைன்னா வாஸு மன்னிக்க மாட்டார்..எல்.ஆர். ராட்சஸி.. நாகப் பாம்பாய் குரல் வளைத்துப் பாடும் பாடல்..
ஆடி வருன்னு ஆடிவருன்னு ஆயிர மாயிர பெள்ர்ணமிகள்..சிஐடி சகுந்தலா மற்றும் ஜெயபாரதி..
https://youtu.be/og3xL18FoOM
சஸ்பென்ஸ் படம் போல இருக்கே.. ப்ரேம் நசீர் சிஐடி வேணு..வல்சலையாக ஸாரி வத்சலையாக விஜய ஸ்ரீ.. கண்ணா நீ எப்ப இந்தப் படம் பார்க்கப்போற…
திடீர்னு தேடிக்கொண்டிருக்கையில் கிட்டிய பாடல்கள்..நன்னா இருக்கா..(போட்டாச் சா?)
one of the musical hit.
https://youtu.be/3GYp_B2J_hI
From Dhisai Maariya ParavaigaL
arutjothi dheivam enai aaNdukoNda dheivam........ (preceded by a Sanskrit verse)
http://www.youtube.com/watch?v=QNmUD72zyeY
ஒரு நண்பர் வானம்பாடி படத்தில் வரும் ஆண்கவியை வெல்ல வந்த பெண்கவியே வருக பாடலில் வரும் தாதி தூது தீது பாடலின் அர்த்தம் கேட்டார்,, அவருக்கு நான் சொன்ன பதில்:
அனைவருக்கும் புரியறா மாதிரி கண்ண தாசன் எழுதிட்டாரே..
அடிமைத்தூது பயன்படாது கிளிகள் பேசாது
அன்புத் தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது
தெய்வத்தையே தொழுது நின்றால் பயனிருக்காது
இளம் தேகம் கொண்ட தோழி வாழ இனியது கூறு..
ஆக்சுவலா இது அர்த்தம் இல்லை.. அது என்னான்னு தெரிஞ்சுக்கணும்னா ஹீ ரோட் திஸ்னு ஒரு கேள்விய மன்சுக்குள்ள கேட்டுக்கணும்..
யார் எய்தினா இந்த போயம்..
ஒரு க்ரேட் கவி.. கவிராஜ காள மேகம்பாங்க.. கொஞ்சம் குறும்பும் ஜாஸ்தி அவருக்கு..
அவர்கிட்ட ஒங்களை மாதிரி ஒரு தோஸ்த் போய் “யோவ்... ஓரெழுத்துல ஒரு பாட்டுச் சொல்லுமேன்”னு கேட்டாராம்..
காளமேகம் புன்சிரித்து “பா” என்றாராம்..
இல்லை ஓய்.. அதாவது க கா கி கீ என் ஒரே ஒரு எழுத்து வ்ரிசையினால பாடல்..பாடமுடியுமா உம்மால..
ம்றுபடியும் சிரிப்பு காளமேகமிடம் இருந்து..
சரி நான் பாடுவேன் நீர் அர்த்தம் சொல்லும் எனச் சொல்லி பாடின பாட்டு என்ன தெரியுமா..
தாதிதூ தோதீது
தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த
தூததே தாதொத்த
துத்திதத் தாதே
துதித்துத்தேத் தொத்தீது
தித்தித்த தோதித்திதி
கேட்ட நண்பருக்குச் சின்னதாய் தலை, அறை, உலகம் எல்லாம் சுற்ற
மடமடவென வார்ட்ரோபைத்திறந்து சின்னதாய் சோம பானக் குடுவையை
எடுத்து இர்ண்டு பெக் போட்டுக் கொண்டு காளமேகத்திட்ம்..
ஸ்வாமி.. இப்படி எமமைத் துன்புறுத்தலாகுமா” என நாடக நங்கையரைப் போல பணிவாய்ப் பொருள் கேட்டார்..
ஏன்..
இது சும்மா. தூ தூன்னு வெத்தலை போட்டுத்துப்பற மாதிரி எழுதியிருக்கறா மாதிரி எனக்குப் படற மாதிரி இருக்கிறது
எத்தனை மாதிரியயா.. புரிஞ்சுதா இல்லையா
ப்ளீஸ் இதற்கு அர்த்தம் கூறி இந்தாரும் எம் பரிசு இதையும் பெற்றுக் கொள்ளும்..
காளமேகம் சொன்னார்:
தலைவியிடம் சொல்வது போல் அமைந்திருப்பது இந்தப் பாடல்...
தாதி தோழியிடம் தலைவனுக்கு தூது அனுப்பினால் அவளால் ஒழுங்காகச் செய்ய முடியுமா எனச் சொல்ல முடியாது.. தோழியின் நாக்குக் குழறலாம்..
வெட்கப் படலாம்..இன்னும் ஏன் தோழியே தலைவனைக் காதலித்து கதையை +தலைவன் மனதை மாற்றலாம்.. ஸோ தாதி தூது தீது
தத்தை தூது தோதாது - கிளி என்ன பார்க்க நல்லா இருக்கும்.. சேப்பு மூக்கு பச்சை நிறம்.. சொல்றதைத் திருப்பி உன்கிட்ட் தான் சொல்லும்.. தலைவன் கிட்டப் பறந்து போய் அதுக்குச் சொல்லத் தெரியாது.. அது தோதுப் படாது வேஸ்ட்
அப்புறமேல்ட்டுக்கு என்ன.. நீ பாட்டுக்கு தலைவனை நினைத்த படி பஞ்சணையில் புரண்டபடி பாலும் கசந்ததடி சகியே பஞ்சணை நொந்ததடின்னு சொல்லிக்கிட்டிருப்ப.. ஒழுங்கா சாப்பிட மாட்ட..கண்கள் வெறிச்சோடும் உடல் இளைக்கும்..இந்த பிரிவுத்துயரம், ப்ளஸ் பருவத் துயரத்துக்கு ஒரு நோய் வேற பீடிக்குமே..உனக்குத் தெரியாதா பசலை நோய்..
அதுக்கு தலைவியே, நீ இன்னா செய்யணும் தெர்யுமா..
கோவிலுக்கு அல்லது வீட்டிலேயே சாமி கும்பிடு.. ஓ காட், என்னை என்னோட தலைவன்கிட்ட சேர்த்து வை அப்படின்னு ப்ரே பண்ணிக்கிட்டே, கூடவே உன் தலைவனோடஞாபகத்தையும் குவித்து வச்சுரு.. சரியா.. டோண்ட் வொர்ரி..ஆல் வில் பி வெல்..”
இதான் அர்த்தமாம்
சரி தானே
(இதே நாள் 2013 இல் முக நூலில் எழுதியது)
https://youtu.be/8GTpHGuobXo
தித்தா... ம்ம்.. ச்சட்... சிக்கா..
அது "இளம் தேகம் கொண்ட தோழி வாழ இனியது கூறு.." இல்லே.... இளம் தேமல் கொண்ட கன்னியாக்கும்...
இளம் தேமல் கொண்ட கன்னிவாழ இனியது கூறு..அப்படின்னா.. தேமல் நா விட்டமின் டிஃபீஸியன்ஸியோன்னோ.. வீட் போய் பாட் கேட் பாக்கணும்
http://www.tamilsongslyrics123.com/detlyrics/636
http://songlyrics.lakshmansruthi.com...age&Language=0
இதுல இளம் தேவை கொண்ட கன்னி வாழ இனியது கூறுன்னு போட்டிருக்காங்க :) தமிழிசைல இளம்தேமல்..
சிக்கா...
காதலில் வாடும் பெண்ணின் உடலில் தேமல் படரும் என்பதை வள்ளுவர் கூட பசப்புறு பருவரல் என்ற அதிகாரத்தில் சொல்லி இருக்காரு.. ப்ளீஸ் நோட் த பாயிண்ட்
தினம் ஒரு பாவின் பதிலில் இருந்து எடுத்தது..//தெனாலிராமன் படத்தில் இடம்பெற்ற தந்தகாரப் பாடலும் காளமேகம் கொடுத்ததுதான். அந்தப் பாடல்,
தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே – தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி
தெனாலிராமன் படத்தில் வரும் இந்தப் பாடலின் ஒலி/ஒளி வடிவம் கிடைக்கவில்லை. மெல்லிசை மன்னர் இசையில் டி.எம்.சௌந்தரராஜன் மிக அழகாகப் பாடியிருப்பார்.
இந்தப் பாடலுக்குப் பொருள்?
தாதிதூ தோதீது – தாதி தூதோ தீது – தாதி(பணிப்பெண்) செல்லும் தூது தீயது
தத்தைதூ தோதாது – தத்தை தூதோதாது – தத்தை தூது ஓதாது – கிளியானது தூதைச் சிறப்பாகச் சென்று ஓதாது
தூதிதூ தொத்தித்த தூததே – தூதி தூது ஒத்தித்த தூததே(தூது அதே) – தோழி செல்லும் தூது தள்ளிப்போடப்பட்டுக் கொண்டேயிருக்கும் தூதாகி விடும்
தாதொத்த துத்தி தத்தாதே – தாது ஒத்த துத்தி தத்தாதே – பூந்தாதை ஒத்த பசலை நிறம் கொண்ட தேமல் என் மேல் படராது
தேதுதித்த தொத்து தீது – தே துதித்த தொத்து தீது – தே(இறைவனை) துதித்துத் தொற்றிக் கொள்வதும் தீதே
அப்போ எதுதான் நல்லது?
தித்தித்த தோதித் திதி – தித்தித்தது ஓதித் திதி – தித்திப்பான காதலன் பெயரையே ஓதிக் கொண்டிருப்பேனாக!
இதுதான் இந்த அழகான பாடலின் விளக்கம்.//
இந்தப் பாட் தெனாலி ராமன் ல தேடிப் பார்த்தேன் கிடைக்கலை..
ஆக இளம் தேமல் என்றால் பசலையா.. அது ஒரு நோயோன்னோ..தேமல் என்பது தோல் நிறத்தில் நடுவே பேட்ச் போல வருவது அன்றோ..ம்ம் என்னமோ போங்க :)
சின்னவரே!
சில திருத்தங்கள்.
'தெனாலிராமன்' படத்தில் 'தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது' பாடலை நடிகர் திலகத்துக்காகப் பாடியவர் வி.என்.சுந்தரம் என்று நினைவு. அது டி.எம்.எஸ்.அல்ல.
தாதிதூ தோதீது ---- அடியார்களுடைய தூது தீமையைப் பயப்பது
தத்தை தீதோதாது--- கிளி போய் தூது சொல்லாது
தூதிதோ தொத்தித்த தூததே---தோழியின் தூதானது நாட்கடத்தி வைக்கப்பட்டதாகும்
துதித்ததே தொத்தீது----தெய்வத்தை வழிபட்டுத் தொடர்வது பயன்தராது. வீணாகும்.
தாதொத்த துத்தி தத்தாதே--- முந்தாதி போன்ற தேமல் என் உடல் மேல் பாய்ந்து அதிகப் படாமல்
தித்ததோ தித்திதி-- இனிமையான தலைவன் நாமத்தைச் சொல்லி என்னைக் காப்பாற்றுக.
இதுதான் பொருள். உம் விளக்கமும் இதையொத்துதான் உளது.
இப்படி பொருள் தந்து அருமையாக அறிவிலிக்கும் புரியும்படி விளக்க நடிகர் திலகத்தை விட்டால் வேறு எவருண்டு?
ஆதியும் அந்தமும் எங்களுக்கு அவர்தானே!
சிக்கா... தாதொத்த என்பதற்கு பூக்களில் உள்ள மகரந்தப் பொடி(தாது) படர்ந்தது போன்ற தோற்றம் கொடுக்கும் தேமல் என்று அர்த்தம் என ஒரு தமிழாசிரியர் சொல்றார்
From the calm waters surrounding Jai's Archipelago!
Monotony breaker!
From The Cow Boy genre D'Jango starring Franco Nero! 1966
Besides Sean Connery's James Bond OO7 , 'Makkal Kalaignar' Jai Sankar was the perfect fit for tamilized cow boy movies replacing Clint Eastwood, Terence Hill and Franco Nero's depictions to suit tamil moods!
https://www.youtube.com/watch?v=Bz7VrgkgMMA
https://www.youtube.com/watch?v=lYF6K1HGKIs
The Clint Eastwood western sphagatti 'For a Few Dollars More' theme music by the greatest composer Ennio Morricone!!
https://www.youtube.com/watch?v=WtblCZQXRsA
தேமல் என்பதும் பசலை நோய் என்பதும் ஒன்றல்ல. இரண்டுமே தோலின் மீது படர்வதால் ஒன்றென கொள்ளக்கூடாது. தேமல் என்பது நிரந்தரமாக தோலின் மீது படிந்து விடுவது. பசலை என்பது சாம்பல் போன்ற ஒரு படர்க்கை. துணியால் துடைத்தால் நீங்கி விடுவது.
தலைவனைப் பிரிந்த தலைவி தன்மீது படர்ந்த பசலையை ஒருபுறம் துடைத்துக் கொண்டு இருக்கும்போதே மறுபக்கம் பசலை படர்ந்து கொண்டிருந்தது என்பதாக ஒரு இலக்கிய குறிப்பு உண்டு.
நன்றி.. நேற்று ஒரு ரைட் அப் எழுதினேன்..கொஞ்சம் குறள் குறுந்தொகை என.. மக்கள்ஸ் ஜொள் பார்ட்டி எனச் சொல்லிவிடுவார்கள் என்ற பயத்தில் நீக்கிவிட்டேன்..பட் ஈவ்னிங்க் படித்து ஓகே என்ப்பட்டால் -எனக்கு - மறுபடி இடுகிறேன்.. :)
பெரியவரே! :)
முநதாதி போன்ற தேமல் என்றால்.. முற்றிய நிறம் கொண்ட என்று அர்த்தமா..
வாஸ்ஸூ..யூ நோ ஒன் திங்க்.. ட்யூரிங்க் மை காலேஜ் முடித்த டேஸ் ஐ ஹேட் த ஸேம் ப்ராப்ளம் மீன்ஸ் லவ்லாம் இல்லாமலேயே தேமல் வெரி லைட்டா தோளில் வந்தது..
அந்த சமயம் என் சகோதரி அய்யம்பேட்டையில் இருந்தார்கள்..எனில் தஞ்சாவூர் சென்று ஒரு டாக்டரிடம் காண்பித்தோம் (அந்தக்காலத்தில் தஞ்சாவூர் இஸ் பெஸ்ட் ஃபார் டெர்மடாலஜிஸ்ட் என அத்திம்பேர் சொன்னார்) பாஷ் வீடு..ஆனால் டாக்டர் சிம்ப்பிள்..ஜஸ்ட் பார்த்து விட்டு ஏதோ ஒரு க்ரீம் எழுதிக் கொடுக்க அது பத்து ரூபாயோ என்னமோ.. வாங்கி மறுபடி அய்யம்பேட் வந்து இரவில் தோளில் தடவ..கொஞ்சம் செவேல் நிறம் கொண்டது.. பட் சொன்னா நம்ப மாட்டீங்க.. காலையில் பார்த்தால் தேமல் போயே போச்சு இட்ஸ் கான்..
அப்போல்லாம் இந்தப் பசலை நோய் பத்திக் கண்ணாக்குத்தெரியாது.. அந்தக்கால- ச்ங்க கால வைத்தியர்களுக்கும் தெரியாதென்றே நினைக்கிறேன்...:)
அதுக்கு சரியான காரணம் தெரிஞ்சு போச்சு.... நீங்க அந்த க்ரீம் பிசுபிசுன்னு இருந்ததால் மறு நாள் நல்லா குளிச்சீங்க.. ( காலேஜ் முடிச்ச டேஸ்-ல வாரம் ஒரு முறை குளியல்தானே ?...ஹெய்..ஹெய்.. உண்மையை சொல்லிடுங்க சிக்கா ? )
நல்ல காவேரித் தண்ணி குளியல் என்பதால் தேமல் கலரில் இருந்த கறை போயே போச்... அதுதான் விஷயம்..
( இப்போ அடி வாங்குமுன் நான் ஜூஊஊஊஊஊட்ட்ட்ட் )
வாசு ஜி..
ரொம்ப நாளைக்கு முன்னாடி நான் தேடிக் கொண்டு இருப்பதாக சொன்ன ஜெயச்சந்திரன் பாட்டின் வீடியோ இன்னைக்கு யாரோ போஸ்ட் செஞ்சிருக்காங்க
பௌர்ணமி நிலவில் (ssssssnake ) படத்தில் விஜயன்... ( கூட யாருங்கோ ? ).. முழு நிலவு காயும் நேரம்.. தாழை மடல் பூவின் வாசனை
https://www.youtube.com/watch?v=ZLEpVuDGovo
ங்க அந்த க்ரீம் பிசுபிசுன்னு இருந்ததால் மறு நாள் நல்லா குளிச்சீங்க.. ( காலேஜ் முடிச்ச டேஸ்-ல வாரம் ஒரு முறை குளியல்தானே ?...ஹெய்..ஹெய்.. உண்மையை சொல்லிடுங்க சிக்கா ? )// அதெப்படி உங்களுக்குத் தெரியும்! :) கண்ணா எந்தக்காலத்துலயும்குளிச்சுட்டு தான் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவானாக்கும்.. பட் அந்த க்ரீம் ஒரே ஒரு தபா தான் தடவிக்கிட்டேங்க.. அப்புறம் அந்த சுவடே காணோம்..இது நாள்வரை என் மனதில் பொதிந்து இருக்கும் விந்தை அது (ஹை என்னே தமிழ்) :)
Mr CK
Is it true that during your college days you are taking bath only once in a week.
மதுண்ணா!
நானும் ரொம்ப நாளாக பௌ.நி பாடல் சர்ச் செய்து ஓய்ந்து விட்டேன். இப்போது பார்க்கக் கிடைத்து விட்டது. பதித்ததற்கு ஒரு 'ஓ'
அப்படியே தெலுங்கு வெர்ஷன் பாடலையும் பார்த்து வைப்போம். இங்கே மேனகாவும், சிரஞ்சீவியும். 'புன்னமி ராதிரி...பூவுல ராத்ரி' யில் சின்னா போன்றவர்களை புளகாங்கிதம் அடைய வைக்கிறார்கள். சிரஞ்சீவியைப் பார்த்தால் ஏனோ 'திண்டுக்கல்' லியோனி ஞாபகம் வருது.:)
சரி இந்தப் பாடல் வேறெந்தப் பாடலின் டியூன்? சின்னா! கண்டுபிடிக்க.
https://youtu.be/yrV51sj7w-o