உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி சாரதா madem என்னை போல் ஒருவன் பற்றி நான் குறிப்பிட்டது ஒரு நினைவில் வருடம் தவறாக இருக்கலாம். ஏன் என்றால் க்ரஹப்ரவேசம் (D.யோகானந்த் இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம் ) நெல்லை பூர்ணகலவில் திரையிடப்பட்டு 55 நாட்கள் ஓடியதாக நினவு தீடீர் என்று இன்றே இப்படம் கடைசி என்று நண்பர்கள் கூறியவுடன் கிட்டத்தட்ட 20 ரசிகர்கள் சென்று நெல்லை பூர்ணகலா திரைஅரங்கு உரிமையாளர் அவர்களடிம் சென்று முறையிட்டோம் மேலும 5 நாட்கள் மட்டுமாவது நீடித்து 60 நாட்கள் என்று முடிதுகொள்ளுமாறு கேட்டோம் ஆனால் வசூல் குறையவில்லை மேலும் தொடரசசியாக அந்த வருடத்தில் 2 /3 படங்கள் சரியாக போகவில்லை.ஆனால் இது சம்பந்தமாக எதுவும் செய்ய முடியாது நீங்கள் சுவாமி pictures உரிமையாளர் SK என்ற ச.கல்யாணசுந்தரம் இடம் சென்று முறையிடவும் என்று சொல்லிவிட்டார் இதில் காமெடி என்னவென்றால் இருவரும் பக்கா காங்கிரஸ்/சிவாஜி ரசிகர்கள். ஆனால் பிசினஸ் என்றவுடன் மாறிவிட்டனர். க்ரஹப்ரவேசம் திரைபடத்தை மாற்றிவிட்டு என்னை போல் ஒருவன் திரையிடபட்டதாக நினவு சிவாஜி மன்றத்தில் இருந்து கொடி மற்றும் தோரணம் கட்ட முடியாது என்று கூறி விட்டோம் பின்னர் கூலி ஆட்களை வைத்து காங்கிரஸ் கொடியும் அண்ணன் banner வைத்தார்கள் நிகழ்வு இன்னும் என் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்து இருக்கிறது. யாரவுது நெல்லை ரசிகர் அந்த காலகட்டததை சேர்ந்தவர்கள் இருந்தால் நமது போரத்தில் இருந்தால் உறுதி படுத்தலாம்
காசேதான் கடவுளடா படத்தில் மேலும் ஒரு காட்சி தேங்காய் ஸ்ரீனிவாசன் சாமியார் வேடம் போட்டு உள்ளே வரும் போது வரிசையாக சுருளிராஜன்/வெண்ணிறாடை மூர்த்தி/மனோரமா/முத்துராமன்/லக்ஷ்மி/ஸ்ரீகாந்த் என்று நின்று கொண்டு இருப்பார்கள் அப்போது தேங்காய் கூறும் ஒரு வசனம் "சுருளிராஜ மனோரம் மூர்த்தி முத்துராம லக்ஷ்மி ஸ்ரீகாந்த நாம சுஷ்ம பிரசிதக' இதை பற்றி திரு கோபு/cvr ஒரு பேட்டியில் தேங்காய் ஸ்ரீனிவாசன் இன் timing sense பற்றி கூறி இருந்தார்கள்