Yes! :)
Printable View
வென்கிராம் சார் அவர்கள் உறுமி,பம்பை பற்றி சில பாடல்கள் கேட்டு இருந்தார் என்று நினைவு
'பம்பை உடுக்கை கட்டி பரிவட்டம் மேலே கட்டி ' - ரிக்க்ஷாகாரன்
'கேட்டுகோடி உறுமி மேளம் '
'அம்பிகையே ஈஸ்வரியே '
இந்த பாட்டு எல்லாம் நீங்கள் கேட்டவர் கொடுத்துட்டாரா என்று தெரியவில்லை .இருந்தாலும் இப்போது என் நினைவில் வந்தவை
உங்கள் நட்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி ராஜ்ராஜ் sir
எப்பவுமே நீங்க funny professor தான்.எங்களை எல்லாம் சிரிக்க வைக்கிற professor
சுந்தர காண்டம் திரை படத்தில் பாக்யராஜ் கூட professor ரோல் தானே
முந்தானை முடிச்சு படத்தில் ஹை ஸ்கூல் டீச்சர் or முதியோர் கல்வி
புதிய வார்ப்புகள் ஆரம்ப பள்ளி கூட டீச்சர்
கேட்கலாமா இந்த கேள்வி
இந்த மாதிரி roles நடிச்ச தமிழ் actors வேறு யாராவது சார்
Thank you again. Unfortunately I don't know much about Tamil movies after 1965, the year I left for the US. In fact, I am learning about those movies here ! :lol: Learning never ends! :) If I recall any I will post.
( Another aberration. I revealed some personal information! :) )
படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரையா
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரையா
http://youtu.be/3IDTDy7pYE0
சிக்கா... உங்களுக்காக ஒரு ஸ்பெஷல் பாட்டு..
சாருகேசி ராகம் கேட்டதுண்டோ ? "வசந்த முல்லை போலே வந்து" , "வரச்சொல்லடி அவனை வரச்சொல்லடி" மற்றும் " தூது செல்வதாரடி" என்று விதவிதமா கேட்டிருப்பீங்க..
டி.எம்.எஸ்ஸின் ஜாலி பாடலைக் கேளுங்கள்.. "நான் இசைக்கும் ராகமெல்லாம் அவன் தந்த யோகம்"
படம் "சிரி சிரி மாமா".... பாட்டைக் கேட்கும்போது பாகவதர் பாடிக் கொண்டிருக்கும் மேடைக்கு பாம்பு வந்திருக்குமோ என்று தோன்றுகிறது
http://youtu.be/D5nlBtiYK2E
ஆஹா.. லா.டி.ரா பாட்டு, தும்பி வா தும்பக் குடத்தில் ஆரம்பிச்சு நாலு பாட்டு…நான் இசைக்கும் ராகமெல்லாம் அவன் தந்த யோகம்.. கேட்டு முடிச்சேன்.. ஆனா அதுக்கு ம் முன்னாலே கேட்டது – மாம்பழத்தோட்டம் மல்லிகைக் கூட்டம் மணக்க வரும் மாலைப் பொழுதோடு மருவி அணைக்கும் மயக்கம் கொடுக்கும் மன்மதன் வந்தான் தேரோடு.. அங்கே காதலர் உள்ளம் ரெண்டும் படக் படக் பட்பட்.. கேட்டேன்.. ரொம்ப நாளாச்சு கேட்டு..
தாங்க்ஸ் டு மதுண்ணா தும்பியில் ஆரம்பித்து நா.இ.ராகமெல்லாம் பாட்டு வரைக்கும்..கைராசிக்காரன் பாட்டு கேட்கலை..படம் பார்த்திருக்கேன்..கதை மிக அழகான நல்ல கதை.. கதை..ரா.கி ரங்கராஜன் எனப் போட மட்டும் அவரிடமிருந்து வாங்கி உல்டா பண்ணி ஒருவழியேத்தி இருப்பார்கள்.. சிரிசிரி மாமா பார்த்ததில்லை..வெ.ஆ.மூர்த்தியா.. பாட்டுக்கு தாங்க்ஸ்..
தாங்க்ஸ் எஸ்விசார்..மாம்பழத் தோட்டத்திற்கு.. நோ தாங்க்ஸ் ஃபார் செளகார் ஜானகி ஃபோட்டோ..
தாங்க்ஸ் வாசு சார் ஃபார் இ.ஸ்பெஷல் பாட்டுக்கு.. நான் இப்போ தான் கேட்கறேன்..
வாங்க ராஜ் ராஜ் சார்..கரெக்டா காக்காக் கடி பிடிச்சுட்டீங்களே.. தாங்க்ஸ்..
கிருஷ்ணாஜி எனக்குத் தெரிஞ்ச ஒரு கடிப் பாட்டு..வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா.. பால் நிலா ராத்திரி பாவையோர் மாதிரி அழகு ஏராளம் அதிலும் தாராளம் என்று டிம்பிள் தாராளமாய் ஆடும் பாடலில்..
தேக்கு மரத்தில் வார்த்து வைத்த தேஹம் இது தானா…என்ற வரிகள் வரும்போது வாளால் ஆப்பிள் கடிப்பார் கமல்ஹாசன் (கத்தி டைரக்டர் தரலையாம்) என்று நினைவு.. அப்புறம் ஒரு விளம்பரப் படம் பளிச்சிடும் ஈறுகள் மற்றும் பற்களுக்கு கர்ரக் என ஒருஆப்பிள் கடிபட்டு ஒருகரும்பு கடிக்கப் பட்டு வஜ்ரதந்தி வஜ்ர தந்தி வீக்கோ வஜ்ர தந்தி டூத் பவுடர் டூத்பேஸ்ட்… என்ற விளம்பரப் பாடல்… அடிக்க வருமுன் எஸ்கேப்ப் ஆகலாம்னா..இதென்ன
கண்ணே கலைமானே பாட்டை டைப்படிக்கலாம் என்று வேகமாக அடித்ததில் இவ்வளவு தான் மிச்சம்..டைப்படிப்பதை நிறுத்திப் பாட்டைக்கேட்டு விட்டேன்..ஏன் வீடியோ கிடைக்கலையா..
நீர்வீழ்ச்சி தீமூட்டுதே தீக்கூட குளிர் காயுதே
ஆண்பார்வை மின்சாரம் தந்திட பெண் தேகம் சிலிர்க்கின்றதே
செம்மாந்து மழைவந்து பெய்யுது தேன் சிட்டு நனைகின்றது
கண்மீன்கள் தரை வந்து கொஞ்சுது தேன் சொட்டித் திரள்கின்றது
தண்ணீரில் அப்புறம் வேகமாயிடுத்து…:)
கிருஷ்ணா ஜி , வாசு ஜி பதிவுகள் அருமை அற்புதம்
ஏன் காதுதான் சங்கர்-கணேஷ்,விஜய பாஸ்கர் இசை கேட்டு ஒரு மாதிரி ஆகி விட்டதென்றால் ,கண்ணுமா கெட்டு தொலைத்தது? கேள்வியை படித்தவர்,அதன் பதிலை பார்த்து விட்டு தொடரவும்.அல்லது ஒதுங்கி நில்லுங்கள். என் எழுத்துக்கு வந்த பிரதி வாதத்திற்கு நான் பதில் சொல்லி கொள்வேன். எந்தெந்த படங்களில் அவர் என்ன கருவிகள் உபயோக படித்தினார் என்பதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.
Madhu- Seriously ,I have a question for you. Do you have the system with special provision to search for a non-existent songs? I am surprised the way you brought those ones!!!
RajRaj- Welcome to professor Double Raj. My Teaching was limited to my lectures to B.Tech students during my M.tech Days (thanks to my insincere lazy lecturers who volunteered to trust their work as I showed my inclination),My SITRA(Research Institute)Days with South India Mill owners Techno-commercial classes,Costing Institute ,management development classes and Seminars. Trust me,this is the profession closest to my heart next only to Film-making. I envy you. I was rated as the friendliest ,effective lecturer and awarded by SIMA best lecture Award.(I became a Chief Executive in a Multi-national with a flourishing career but my heart is still in teaching).
I envy you Professor. Welcome here.
Chinna Kanna- Enjoying your style thoroughly.
Krishna- Enjoying your spontaneous kuthals and your enthusiasm.
Rajesh- Expected a song today. Just stopped with a remark?
Vasu- what is surprise shock or shocking surprise today?
Karthik- If I don't get your response today,I am halting my serial on M.S.V. Much more to write.
அமைதி அமைதி திரு கோபால்.. கடைசில கலகமே என்னாலதான் வந்தது என யாராவது ஒருத்தர் இடையில புகுந்து தீர்ப்பு சொல்லிவிடப் போகிறார்! ஆயிரம் வவ்வால்கள் ஒன்றோடொன்று இடைவெளியில்லாமல் ஒட்டிக்கொண்டு அடைந்து கிடந்தாலும் ஒரு தாய் வவ்வால் தனது சேயை சரியாக கண்டுபிடித்துவிடுமாம். அதுபோல ஒரே கேள்விக்கு பலதரப்பட்ட பதில்கள் துணுக்குக் களஞ்சியமான இத்திரியில் பலரிடமிருந்தும் வந்தாலும், உங்களின் பதில்/பதிவு சிறப்புதான். அதுபோல ஒவ்வொருவரின் பதில்/பதிவும் ஒவ்வொருவிதத்தில் முக்கியமானதுதான். (அவையெல்லாம் எனக்கு ஒத்துப்போகிறதா/இல்லையா என்பது வேறுவிஷயம்) அதனால் கோபத்தை தணியுங்களேன்.
Special Thanks ESVEE for visual treat with avanangal .Only Baddie to be accepted in our Camp!!!!????
Venki,
I value your response as a discerning reader. I want to segregate casual conversation/Comical interractions with serious interaction on the subject deserve special attention. I don't have anger or enmity but sometime people don't have synch or Goal Congruence with the subjects under discussion and purpose.Thats it. Even in my work ,I show two distinct faces.Serious matters ,only the deserving people can enter and contribute. Having fun with team,other normal operations ,all are welcome. It has become my success formula. Provocation is the best Tonic for Indians.
நன்றி திரு வென்கிராம் உங்கள் பதிவுக்கு
வண்டிப் பாடல்.
இந்தப் பாடலைப் பாருங்கள். வித்தியாசமான முயற்சி. காதலி இங்கே காதலனுக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுக்கிறாள். அதுவும் பாடல் மூலமாகவே.
"இது கிளட்ச்....இது கியர்... இது பிரேக்.... கிளட்சை மிதித்து கியரை மாத்தி ஆக்சிலேட்டரை கொடுக்கணும்... ஸ்டீரிங்கைப் பிடித்து ஹாரனை அமுக்கி பாதையைப் பார்த்து போகணும்... சமயத்தில் பிரேக்கையும் போடணும்"
என்று அழகாகச் சொல்லித் தருகிறாள்.
'புதுசு இது புதுசு
இளசு இது இளசு'
என்று ஆனந்தக் கும்மாளமிட்டே சாலைகளில் காரோட்டிச் செல்லும் இந்த காதலர்களின் ஆனந்தம் நம்மையும் தொற்றிக் கொள்ளுமே.
சுசீலா அவர்களின் இளசுக் குரல் இனிமையான இதம்.
'சபாஷ் தம்பி' படப்பாடல்.
http://www.youtube.com/watch?v=ZQmgg...yer_detailpage
குட்மார்னிங்க் ஆல்..
ஹாய் வாசு சார்.. கார் பாட்டில் அழகிய மிதிலை நகரினிலே சச்சு தான் நினைவுக்கு வருகிறார்..இளையவரென்றால் ஆசை வரும் முதியவரென்றால் பாசம் வரும்.. ம்ம் தாங்க்ஸ் ஃபார் த கார் பாட்..
கிருஷ்ணாஜி,
வணக்கம்.
எப்படியோ எதிர்பாராமல் கலகங்கள் நன்மையிலேயே முடிந்தது. இல்லையென்றால் இவ்வளவு பெரிய ஆசுவாச விடுதலை கிடைத்திருக்காது. இதற்காக கலகம் நினைக்காத (!) கலகக்கார்களுக்கு :) கலக்கல் கலக நன்றிகள் கூறியே தீர வேண்டும். கிருஷ்ணாஜி! நாட்டாமை தீர்ப்பு நல்ல தீர்ப்பா? ஆனால் நான்... நான் நாட்டாமை இல்லை சாமி.
வணக்கம் சின்னக் கண்ணன் சார்,
//ஃபார் த கார் பாட்..// எப்படி ராஜா இப்படியெல்லாம் முடிகிறது.? ஷுபா. தாங்கல சாமி :)
Thanks Vasuji for LDR song. Fantastic song with NT as usual very smart and handsome.
வாகன பாடல் வாசு சார்
நம்ம ஜெமினி அண்ணாவும் சரோஜா அக்காவும்
'ஜிகு ஜிகு எங்கும் போவோம் ' பாலா சுசீலா குரல்களில்
ஸ்கூட்டர் வாகனம் தானே
படம் மாலதி தானே
ஏற்கனவே இந்த பாடல் போடப்படவில்லை தானே
கிருஷ்ணா சார்,
'பேசும் படம்' இதழில் வெளிவந்த 'மதுரை மன்னன்' (நம் காந்தாராவ் நடித்தது) நியூஸ் பாருங்கள்.
http://i1087.photobucket.com/albums/...355014/IMG.jpg
எதிரிகள் ஜாக்கிரதை, மணமாலை, வேதா என்று கலக்கும் எஸ்வி சார்,
அரிய ஆவணங்களுக்கு நன்றிகள்.
சூப்பர் வாசு சார்
வந்து விட்டான் விட்டல் ப்ரோடக்ஷன் மதுரை மன்னன்
வடநாட்டு mgr காந்தா ராவ் ஜோடி யாரு வாசு சார்
வசனம் பாடல்கள் புரட்சிதாசன்
இயக்கம் பி v ஆச்சார்யா
மீசை பென்சில் மீசை
இன்று ஒரு கேள்வி
தமிழ் படத்தில் முதன் முதலில் ஒரிஜினல் மீசைவைத்து நடித்த நடிகர் யாரு வாசு சார்
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
எழுபதுகளின் இறுதி.. சினிமாவை ஒரு விஷுவல் ஊடகமாக பெரிதும் பயன்படுத்தத் துவங்கிய காலக் கட்டம் என்பேன். கவியரசரும் அதற்கு அச்சாணியாக இப்படி பாடலை ஆரம்பிக்கிறார்.. கவிதையின் கட்டமைப்பே ஒரு புதிய உடை உடுத்திவந்து நிற்கிறது. இந்த ஒரே அடியில் கேட்போரின் மனதில் அழகான ஒரு காட்சியினை உருவகப்படுத்தி விடுகிறார். கற்பனை வானத்தில் வர்ணம் தீட்டும் கவித்துவமான தூரிகை வரிகள. படத்தில் நாயகி நாயகனைப் பார்த்து பாடுவதாக இவ்வரிகள் இருந்தாலும், நாம் தனியாக இதைக் கேட்டுரசிக்கும்போது, ஒரு பறவையாக மாறி மலையின் எழிலை ரசிக்க ஆரம்பித்துவிடுவோம். ஒரே கல்லில் இரு மாங்காய் போல இசைக் கண்ணாடியில் நிறப்பிரிகை நடத்திய ராஜா-கவியரசர்-ஜென்சி.
https://www.youtube.com/watch?v=rNge1N2Imsk
வரவேண்டும் வெங்கிராம் சார் உங்களை வெங்கி என்று அழைக்கலாமா?
நிறம் மாறாத பூக்கள் பாடலை வழங்கி உள்ளீர்கள் .அருமையான பாடல் .ஜென்சி மலையாளமும் தமிழும் கலந்த ஸ்லாங் .
78-79 களில் இப்படி ஒரு கலவை தமிழுக்கு புதிது.
மாதுரி கூட மலையாள பாடல்கள் நிறைய பாடி இருக்கிறார் . ஆனால் தமிழுக்கு பாடும் போது தமிழ் ஸ்லாங் தான் வரும். உதாரணம் 'வெள்ளி ரதங்கள் அழகு மேனி ','தேடி வந்த கண்களுக்கு ஓடி வரும் சாமி'
பாடலின் சில வரிகள் கண்ணதாசனின் கவித்துவத்தை பறைசாற்றும்
இலை மறைவினில் இரு கனிகளும்
அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
கிருஷ்ணா ஜி
தேடுகின்ற கண்களுக்குள் பாட்டை பாடியது அம்பிலி என்று நினைக்கிறேன்.
http://youtu.be/gqgC1bGWr1I
madhu: Here is a song for you and others:
aasai koLLum meesai uLLa aambaLaiya paathiyaa ....... from vazhkkai(1949)
http://www.youtube.com/watch?v=ZelSkcKSXec
It was popular in the early 50s.
//ஜோடி யாரு வாசு சார்//
வேற யாரு கிருஷ்ணா சார்?
சௌகாரின் தங்கச்சிதான்.
இன்றைய ஸ்பெஷல் (73)
http://archives.deccanchronicle.com/...b/jaya22_0.jpg
'இன்றைய ஸ்பெஷலி'ல் ஒரு மாற்றத்திற்காக 'கங்கா கௌரி' (1973) திரைப்படப் பாடல்.
கதை உரையாடல்: ஏ.எஸ்.நாகராஜன்
பாடல்கள்: கண்ணதாசன்
இசை: 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன்.
தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்
இயக்கம்: பி ஆர்.பந்துலு
http://img.youtube.com/vi/VMM40Uy7hwY/0.jpg
http://i.ytimg.com/vi/iPddY8zI7Xo/0.jpg
சிவன், 'பர்வத ராஜகுமாரி' பார்வதி திருமணத்திற்கு சனீஸ்வரனை அழைக்கவில்லை என்று சனி பகவானிடம் தூபம் போடுகிறான் நாரதன். ஏற்கனவே சிவன் மீது கடுப்பு கொண்டிருக்கும் சனி பகவான் கல்யாணத்தை தடுத்து நிறுத்துகிறேன் என்று கிளம்புகிறான். ஆனால் அதற்குள் சிவன் பார்வதி திருமணம் நடந்து முடிந்து விடுகிறது. திருமணத்தை பிரம்மா முன்னின்று புரோகிதராக நடத்தி வைக்கிறார்.
சனியும், நாரதனும் தங்கள் திருவிளையாட்டைத் தொடங்குகிறார்கள். தட்சப் பிரம்மன் மூலம் சிவனுக்கு இடர் வர திட்டம் தட்டுகிறார்கள். புரோகிதம் செய்து வைத்த பிரம்மாவின் தலைகள் ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு திசையில் இருந்தும் சிவன் தட்சணை அளிக்க வேண்டும் என்று நாரதன் யோசனை கூறுகிறான். சிவனும் அப்படியே சம்மதித்து பிரம்மனின் ஒவ்வொரு தலைக்கும் ஒவ்வொரு திசையிலிருந்தும் புரோகித தட்சணை அளிக்கிறான்.
சனி இப்போது விதி வடிவில் விளையாடுகிறான். பிரம்மன் நான்கு தலைகளுக்கும் தட்சணை பெற்றுக் கொண்டு தனது ஐந்தாவது தலைக்கும் தட்சணை கேட்கிறான் அதுவும் இதுவரை கொடுக்காத திசையிலிருந்து. விவரமறியாத சிவன் "அதற்கென்ன கொடுத்தால் போகிறது" என்று அப்பாவியாய் கூறுகிறான்.
தனது ஈசான திக்கிலிருந்து தட்சணை தருவதாக சிவன் கூற, அதற்கு பிரம்மன் "கிழக்கும், வடக்கும் சேர்ந்தது ஈசான திசை... அதனால் அது புது திசை ஆகாது" என்று மறுக்கிறான் சனியின் சதியால். "அப்படியானால் அக்கினி திசையிலிருந்து தருகிறேன்" என்கிறான் சிவன். அதற்கு திருமாலோ "அக்கினி திசை கிழக்கும் தெற்கும் சேர்ந்தது. வாயு திக்கு மேற்கும் வடக்கும் சேர்ந்தது. பிரம்மா சொல்வது போல இதுவெல்லாம் புது திசை ஆகாது" என்று எடுத்துரைக்கிறார்.
"என்ன செய்வது?" என்று சிவன் விழிக்க, பிரம்மா "திருமால் அடிகாணாமல் அழிந்தான் என்றும், நான் முடி காணாமல் மயங்கினேன் என்றும் கேலி செய்தார்களே.... அந்த சிவன் இப்போது திசை காணாமல் திக்கற்று திகைக்கிறாரே.... திருமணம் செய்து வைத்த புரோகிதருக்கு தட்சணை கொடுக்க வழியில்லாமல் திக்கற்று நிற்கும் இவர் புவனங்கள் அனைத்தையும் படைத்த என்னை விட எவ்விதத்தில் உயர்ந்தவர்? இவரைப் போய் பரம்பொருள் என்கிறார்களே" என்று சிவனை அவமானப்படுத்தி கேலி பேசுகிறான் பிரம்மன்.
இதைக் கேட்டு பெரும் கோபம் கொள்கிறான் சிவன். ஐந்தாவது தலைக்கு புது திக்கிலிருந்து தட்சணை கேட்டதால் பிரச்சனைக்குரிய அந்த பிரம்மனின் ஐந்தாவது தலையை சிவன் கிள்ளி எடுத்துவிடுகிறான் அதுமட்டுமல்ல. "ஐமுகன் நீ இனி நான்முகன் என்றே அழைக்கப் படுவாய்... இதுவே உன் கடைசி புரோகிதமாய்ப் போகட்டும்... உலகில் உனக்கு கோவில்களே இனி இல்லாமல் போகட்டும்" என்றும் சாபமிட்டு விடுகிறான்.
இதனால் ஆத்திரமுற்ற பிரம்மன் பதில் சாபமிடுகிறான். "நீ கிள்ளி எடுத்த எனது ஐந்தாவது தலை பிச்சை ஓடாக மாறி உன் கையிலேயே ஒட்டிக் கொள்ளட்டும். அதற்கு பிச்சை எடுத்து ஜீவிப்பதே உன் தொழிலாகும் அந்த ஓடு அதில் இடப்பட்ட பொருள்களை பாதி தின்றுவிட்டு நிரம்பாமலே போகும். அது எப்போது நிரம்புகிறதோ அப்போதுதான் உனக்கு சாப விமோசனம்" என்று சிவனுக்கு கடுமையாக சாபம் இட்டு விடுகிறான்.
கையில் பிச்சை கபால ஓடுடன் பரிதாபமாக நிற்கிறான் சிவன். அதைக் கண்டு சனி மௌனமாகக் கொக்கரிக்கிறான்.
பிச்சை ஓடுடன் எல்லோரிடமும் பிச்சை எடுக்கிறான் சிவன். ஆனால் பிச்சைப் பாத்திரம் நிரம்பியபாடில்லை.
இந்த சூழ்நிலையில் ஒலிக்கும் அற்புத பாடல். சிவன் மேல் பரிதாபம் கொள்ள வைக்கும் கவிஞரின் பாடல்.
http://i.ytimg.com/vi/W901TPriAUc/hqdefault.jpg
சிவனாக காதல் மன்னன் ஜெமினி கணேசன். பிரம்மாவாக ஜெமினி மகாலிங்கம். திருமாலாக சிவக்குமார். சனி பகவானாக ஓ..ஏ.கே தேவர் நாரதராக 'துகளக்' ஆசிரியர். பார்வதியாக ஜெயந்தி.
பாடகர் திலகத்தின் அற்புதமான குரல் பாவங்களில் ஒலிக்கும் பாடல். இந்தப் பாடலை இவரைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாகப் பாடிவிட முடியுமோ!
பிச்சை ஓடு நிரம்புவது எப்போது? சிவன் சாபம் தீருவது எப்போது? எல்லாம் அந்த 'கோபாலனு'க்குதான் வெளிச்சம்.
'இச்சமயம் என்னிடத்தில் அன்பு வையுங்கள்' என்று சிவன் கதறும் ஒரு வரியிலேயே அவனின் துன்ப நிலையை நம் மனதில் அப்படியே பதிய வைக்கும் கவிஞரின் வரிகள். அதற்கேற்றவாறு அருமையான இசை அமைத்த 'மெல்லிசை மன்னர்' அவர்கள்.
இனி பாடலின் முழு வரிகள்
http://i1087.photobucket.com/albums/...t%20-2/fgj.jpg
பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்
பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்
இச்சமயம் என்னிடத்தில் அன்பு வையுங்கள்
இச்சமயம் என்னிடத்தில் அன்பு வையுங்கள்
இந்த ஈசனுக்கும் சாபம் உண்டு கண்டு கொள்ளுங்கள்
இந்த ஈசனுக்கும் சாபம் உண்டு கண்டு கொள்ளுங்கள்
பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்
எத்தனை அடியாரை வாழ்த்திய கைகள்
இப்போது திருவோடு ஏந்திய கைகள்
எத்தனை அடியாரை வாழ்த்திய கைகள்
இப்போது திருவோடு ஏந்திய கைகள்
கட்டி வைத்த பொன்னரிசி கொட்டி விடுங்கள்
கையில் ஒட்டி உள்ள ஓடு தன்னை தட்டி விடுங்கள்
கையில் ஒட்டி உள்ள ஓடு தன்னை தட்டி விடுங்கள்
பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்
ஆண்டவன் என்று சிலர் என்னை அழைத்தார்
ஆண்டி இவன் என்றே பிரம்மன் அழைத்தான்
சாத்திரத்தில் வந்ததில்லை இந்த பாவம்
என் ஆத்திரத்தில் வந்ததுதான் இந்த சாபம்
என் ஆத்திரத்தில் வந்ததுதான் இந்த சாபம்
பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=O41LtUgHRt4
இன்றைய ஸ்பெஷல்
ஒரு அபூர்வமான பாடல் வாசு சார்
கங்கா கௌரி படத்தின் கதை முழுவதையும் விளக்கி விட்டீர்கள்
விஜய் டிவி காலை பக்தி ஸ்பெஷல் பார்த்த நிறைவு