http://i62.tinypic.com/dlt5d1.jpg
Printable View
நண்பர்களே!
இன்று உச்சகட்டமாய் தொழிலார்கள் ஒன்று திரண்டு நெய்வேலி தலைமை அலுவலகத்தை காலை 9 மணிக்கு மேல் முற்றுகை இட இருக்கிறோம். நேற்று மாலை ஒவ்வொரு தொழிலாளி வீட்டிற்கும் சென்று பேரணியில் கலந்து கொள்ள வேண்டுமாய் வேண்டுகோள் விடுத்தோம்.
நேற்று நடந்த பேச்சு வார்த்தையிலும் நிர்வாகம் கொஞ்சமும் மசிந்து கொடுக்காததால் அனைத்து தொழிலாளர்களும் கொதிப்படைந்து இருக்கின்றனர். நெய்வேலியில் கலவர ரேகை படிய ஆரம்பித்திருக்கிறது. இன்றைய காலை போராட்டம் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக பேரணி தடுத்து நிறுத்தப்பட்டு அனைவரும் கைதாகலாம். கிட்டத்தட்ட 12000 தொழிலார்கள். இதில் குறைந்தது 6000 பேராவது பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2990 மெகாவாட் உற்பத்தி மின்சாரம் தற்சமயம் 1000 மெகாவாட் குறைந்து விட்டது. ஆனால் நிர்வாகம் பராமரிப்புப் பணியால்தான் உறபத்தி குறைந்துள்ளது என்று சப்பை கட்டு கட்டுகிறது. அதிகாரிகளின் கோழைத்தனமும், பயந்த போக்கும், நிர்வாகத்தின் அதீதமான அச்சுறத்தல்களும் அவர்கள் தொழிளார்களுக்கு சப்போர்ட் பண்ண முடியாத சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் அதிகார வர்க்கத்துக்கு இன்று சாவு மணி அடிக்கப்படவேண்டும் என்பதே தொழிலார்களின் நிலைப்பாடு.
மிகப் பெரிய கலவர சூழ்நிலையை உருவாவதற்கு நிர்வாகமே முழுப் பொறுப்பு. இதற்கு அதிகாரிகள் என்ற அடிமாடுகள் உடந்தை.
எந்தக் கட்சிகளும் கண்டுகொள்ளாத நிலையில், கட்சித் தலைவர்களும் கண்டுகொள்ளாத நிலையில் தென்னகத்திற்கே மின்சாரம் வழங்கும் ஆசியாவின் மிகப் பெரிய நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தன்னுடைய தொழிலார்களுடன் அனாதையாய் நிற்கிறது. மின்சாரம் மட்டும் சொகுசாக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதுமா? அதை உழைத்து உருக்குலைந்து தரும் தொழிலாளிகளின் நிலைமையை எந்தக் கட்சியாவது நினைத்துப் பார்க்கிறதா?
எங்களுக்காக இனி நாங்களே போராடிக் கொள்வது என்று தீர்மானம் எடுக்கும் நிலை வந்துவிட்டது. அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம். சுயநலம் பிடித்து அலையும் கட்சிகளையும், அதன் தலைவர்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தொலைக்காட்சிகளில் கூட எங்கள் நிலைமை வெளியே தெரியாமல் மறைக்கப்படுகிறது. சன் டிவி, ஜெயா டிவியில் எல்லாம் இதெல்லாம் ஒரு செய்தியே அல்ல என்பது போல நடக்கிறார்கள். மின்சாரம் முழுதும் நின்றுவிட்டால் என்ன செய்வார்கள்? அவரவர்களுக்கும் அவரவர் தலைவர்களின் ஒப்பாரிதான் முக்கியம்.
இந்த நிலையில் இந்தப் பாடலைத்தான் நினைக்க வேண்டியுள்ளது.
எரிமலை எப்படிப் பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
ரத்தச் சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும்
விலங்கு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி
https://youtu.be/_ZgDcgGpzjk
திரு வாசுதேவன் சார்
நெய்வேலி நிலக்கரி சுரங்க நிர்வாகத்தின் நேர்மையற்ற போக்கும் அதற்கு துணை போகும் அதிகாரிகள் மற்றும் சில சுயநல யூனியன் தலைவர்களும் , பாராமுகமாக இருக்கும் அரசியல்
கட்சிகள் - இவர்களை நினைத்தால் ...............
உங்கள் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது . எல்லாம் நல்லபடி நடந்திட வேண்டுகிறேன் .
I read somewhere today (5th August) is Chandrababu's birthday. In his memory here is a song he sang for VeeNa Balachander in Penn (1953)
kalyaaNam ha ha ha kalyaanam.......
http://www.youtube.com/watch?v=JgtZk34-5WM
From the Hindi remake Ladki
shaadi shaadi.....
http://www.youtube.com/watch?v=tya2ViAqh64
From the Telugu remake Sangham
pelli pelli...
http://www.youtube.com/watch?v=J1DzcwW7xo8
வாசு சார்
இந்தப் பதிவினை நான் எழுதும் போது தங்கள் போராட்டம் துவங்கியிருக்கலாம்.
அதிகாரி வர்க்கம் நிர்வாகத்தின் பக்கமே நின்று தங்களுடைய சுயநலத்தை மட்டுமே குறியாய்க் கொண்டு செயல்படுவது இந்த நூற்றாண்டிலும் தொடர்வது உள்ளபடியே வேதனையாய்த் தான் இருக்கிறது
என்றாலும் வியர்வையின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
தங்கள் போராட்டம் வென்றே தீரும். இதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
என் மனமார்ந்த பிரார்த்தனைகள் தங்கள் எல்லோருக்காகவும்.
Vasu ji..
My prayers for you and NLC employees. Ellam nallathagave nadakkum.
தேன் சொட்டும் வானமும் தேள் கொட்டும் வனமும்
Quote:
கற்பனை வளம் மிகுந்த பாடல் வரிகள் பொருத்தமான இசைகோர்ப்பில் வளமான குரல் குழைவில் வண்ண மயமான நடனம் கலந்த காட்சியமைப்பில் திறமையான நடிகர்களின் மெருகேற்றலில் வரும்போது அது தேன் சொட்டும் வானமே!!
ஏனோதானோ என்று நாராசமான கற்பனை வறட்சி நிறைந்த சொதப்பலான காட்சியமைப்பில் அதுவே தேள் கொட்டும் வனமாகிவிடும் வாய்ப்பும் உண்டே !!
பகுதி 1 : நடிகர்திலகத்தின் வீரபாண்டிய கட்டபொம்மன்
இன்பம் பொங்கும் வெண்ணிலா Vs ஆத்துக்குள்ளே ஊத்தை வெட்டி...
தேன் சிந்தும் வானமான இனிமை பொங்கி வழியும் காட்சியமைப்பு !
https://www.youtube.com/watch?v=DjbFwPJgDTE
விழிபிதுங்கி வெளியே ஓட வைக்கும் வனத் தேள்கடி !!
https://www.youtube.com/watch?v=e6Wjfzdm2Hg
மாற்றார் தோட்ட மதுரங்கள்
பகுதி 29 : டீன் மார்டின் - ஜெர்ரிலூயி ஆடல் பாடல் கலக்கல் !!
Quote:
சைலன்ஸ்ர்ஸ் படப் புகழ் டீன் மார்டின் மிகச் சிறந்த பாடகரும் கூட ! ஜெர்ரிலூயி நாகேஷின் மானசீக நகைச்சுவை குருநாதர்...அங்கசேஷ்டைகள் கொனஷ்டைகள் நிறைந்த ஆடல் பாடல்களிலும் தூள் பரத்தியவர்!!
இரு ஜாம்பவான்களும் இணைந்து ஏராளமான திரைவிருந்து பங்களிப்பினை நல்கியுள்ளனர் ..கறுப்பு வெள்ளை டு கலர் காலம் வரை!
https://www.youtube.com/watch?v=BLQybyaWt6s
https://www.youtube.com/watch?v=cJ3RecyeJ_U
https://www.youtube.com/watch?v=v-JUON0gmv8
https://www.youtube.com/watch?v=0mPaC0chAVM
https://www.youtube.com/watch?v=ypSJO8SSgw4
மாற்றார் தோட்ட மனங்கவர் மதுரங்கள் !
ஜேம்ஸ் பாண்ட் படங்களின் இசை மற்றும் டைட்டில் பாடல்கள் தொகுப்பு
பகுதி 30 : டுமாரோ நெவர் டைஸ் / TOMORROW NEVER DIES(1997) / PIERCE BROSNAN as James Bond OO7!
Quote:
கோல்டன் ஐ வசூல் மழை கொடுத்த புத்துணர்ச்சியில் அடுத்த படமான டுமாரோ நெவர் டைஸ் படத்திலும் பியர்ஸ் பிராஸ்னன் தனது உளவுப் பணியைத் தொடர்ந்தார். வழக்கமான ஜேம்ஸ் பாண்ட் அம்சங்கள் தூக்கலாக இருந்தாலும் சற்றே ஸ்கூல் பையன் மாதிரி கெச்சலான தோற்றம் ஷான் கானரியின் முரட்டுத் தனத்தை இமிடேட் செய்யும்போது கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தது. சற்று ஓவரான முகச் சுழிப்புக்களும் ரோஜர் மூரை இமிடட் செய்கிறார் என்பதை உணர்த்தியது. வரவர கிராபிக்ஸ் ஆதிக்கமும் அதிகரிக்க பாண்ட் படங்கள் கொஞ்சம் ரசிகர்களின் ஈடுபாட்டை குறைய வைக்க துவங்கியது. படமும் பெரிய வெற்றியை அடையவில்லை இசையும் பாடலும் பெரிதாக ரசிகர்களை சென்றடையவில்லை ஆனாலும் ரசிக்கத் தகுந்ததே !
https://www.youtube.com/watch?v=0IKVYHgghiE
https://www.youtube.com/watch?v=n8FLB4LuFCE
https://www.youtube.com/watch?v=IcRbEPRt1_Y
https://www.youtube.com/watch?v=JQSSvDQyUNA
RARE ADVT- TRICHY
http://i61.tinypic.com/nmkzrn.jpg
Courtesy: Tamil Hindu
சூழல் ஒன்று: பார்வை இரண்டு- சென்று வா நிலவே
காதலனைப் பிரிந்து வாடும் நாயகி சந்திரனைப் பார்த்துத் தன் பிரிவாற்றாமையைப் பாடுவது இந்தியத் திரை மரபு. இந்தச் சூழலில் அமைந்த இந்தி - தமிழ் கதாநாயகிகளின் பார்வைகளைக் காண்போம்.
‘நாம் மகிழ்வோடு இருந்தபோது உதித்த சந்திரன் வானில் எழும்பிவிட்டதே, நீ இன்னும் வரவில்லையே’ என்ற இந்திப் பாடலையும் ‘எங்களுடன் இணைந்திருந்த நிலாவே இப்பொழுது என் தலைவன் இங்கு இல்லை, எனவே நீ இன்று போய்விடு; நாளை இதே நேரம் அவன் இருக்கும்பொழுது வா’என்று கோரும் தமிழ்ப் பாடலையும் பார்ப்போம்.
இந்திப் பாடல்
படம்: பேயிங் கெஸ்ட். பாடியவர்: லதா மங்கேஷ்கர்.
பாடலாசிரியர்: மஜ்ரூர் சுல்தான் பூரி. இசை: எஸ்.டிபர்மன்.
பாடல்
சாந்த் ஃபிர் நிக்லா மகர் தும் ந ஆயே ஜலாஃபிர் மேரி தில், கரூங்கி யா மே ஹாய்யே ராத் கஹத்திஹை வோ தின் க யே தேரே யே ஜாண்த்தா ஹை தில் கே தும் நஹீன் மேரே
பொருள்
நிலா மீண்டும் வந்ததே வானில் – ஆனால்
நீ இன்னும் வரவில்லை
எரிகிறது மீண்டும் என் இதயம்
என்ன செய்வேன் அய்யோ நான்
இந்த இரவு சொல்கிறது உனது அந்த
இன்பமான நாள் எங்கோ சென்றுவிட்டது
இதயம் எனது அறிந்து கொண்டுவிட்டது
இனி நீ என்னுடையவனில்லை என
இருந்தும் நிற்கிறேன் என் இமை விரித்து
என்ன செய்வேன் ஐயோ நான்
எழுகிறதே உன் நினைவு
இந்த இரவு சொல்கிறது உன் அருமை
அந்த நாட்கள் அகன்றுவிட்டன
அறிந்துகொண்டது (என்) உள்ளம் அல்ல
நீ எனது என நிற்கிறேன் கண் இமை விரித்து
என் செய்வேன் நான் எழுகிறதே உன் நினைவு
தகிக்கும் நெஞ்சின் கரும் புகை சூழும்
சகிக்க நான் இயலேன் சடுதியில் கிளம்பி வா
எரித்துவிட்டது எனை இந்த வசந்தத்தின் நிழல்
இருந்தும் நிற்கிறேன் என் இமை விரித்து
என்ன செய்வேன் ஐயோ நான்
நிலா மீண்டும் வந்ததே வானில் – ஆனால்
நீ இன்னும் வரவில்லை.
தமிழ்ப் பாடல்
படம்: உயர்ந்த மனிதன். பாடலாசிரியர்: வாலி.
பாடியவர்: பி.சுசிலா. இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய் ?
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு
வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
கன்னியழகைப் பாடவோ அவன் கவிஞன் ஆகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞன் ஆகினான்... ( நாளை )
சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்?
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்?
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்?
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்? ( நாளை )
சிறந்த பாடலுக்கான தேசிய விருது பெற்ற பாடல் இது.
Courtesy: Tamil Hindu
காற்றில் கலந்த இசை 16: காலைப்பனி, காதல் மற்றும் கானம்
ர்மறையான கதாபாத்திரங்களைப் பிரதானப் பாத்திரங்களாக வைத்து திரைப்படம் எடுப்பதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டும். இயக்குநர் மகேந்திரனிடம் அந்தத் துணிச்சல் உண்டு. அவர் இயக்கிய ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ திரைப்படம் ஒரு உதாரணம்.
படத்தில் மோகன், பிரதாப் போத்தன், சுஹாசினி ஆகியோரின் பாத்திரங்கள் மனத் தெளிவு கொண்டவை அல்ல. ஆனால், சூழல் கைமீறிச் செல்லும்போது தவறுகளைத் திருத்திக்கொள்ள அத்தனைப் பிரயத்தனப்படும் பாத்திரங்கள் அவை. நகரப் பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படத்துக்கு மேற்கத்திய இசைப் பாணியில் அற்புதமான இசையைத் தந்திருந்தார் இளையராஜா.
பருவத்தின் முதல் பாடல்
நகரத்தின் சாலையில் அதிகாலையில் ஜாகிங் செல்லும் நாயகிக்கு வழித்துணையாகச் சேர்ந்துகொள்கிறான் நாயகன். இருவரும் ஜாகிங் செல்லும் காட்சியின் பின்னணியில் ஒலிக்கும் பாடல் ‘பருவமே… புதிய பாடல் பாடு’. காலடிச் சத்தங்களைத் தாளமாக வைத்து இளையராஜா இசையமைத்த பாடல் இது. இப்பாடல் பதிவுசெய்யப்பட்ட விதம் பற்றி இசை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டார் இளையராஜா. ஜாகிங் செல்லும் ஜோடியின் காலடிச் சத்தங்களை உருவாக்கப் பல்வேறு முயற்சிகளைச் செய்தும் திருப்தியடையாததால், கடைசியில் இசைக் கலைஞர்கள் இருவர் தங்கள் தொடைகளில் கைகளால் தட்டி எழுப்பிய ஒலியே பொருத்தமானதாக இருக்கும் என்று முடிவுசெய்தாராம்.
கிராமம் அல்லது வனப் பிரதேசம் பின்னணியிலான நிலப்பரப்புகளின் சித்திரத்தை உருவாக்குவதற்கும், நகரத்தின் பூங்காக்கள், நெடுஞ்சாலைகளின் இருபுறமும் விரியும் நிலப்பரப்புகள் போன்றவற்றைச் சித்தரிப்பதற்கும் இடையிலான நுட்பமான வேறுபாட்டை இளையராஜாவின் இசையில் உணர முடியும். அந்த வகையில் நகரம் சார்ந்த இயற்கை நிலப்பரப்பின் காட்சிகளைச் சித்தரிக்கும் இசையைக் கொண்ட பாடல் இது. ஓடிச் செல்லும்போது மாறிக்கொண்டே வரும் காட்சிகளுக்கு ஏற்ப, இசைக் குறிப்புகளை எழுதியிருப்பார் இளையராஜா.
காலடிச் சத்தத்தின் அதிர்வுகளால் பூச்செடிகளில் அமர்ந்திருக்கும் பட்டாம்பூச்சிகள் மேலெழுந்து பறப்பதைப் போல் முதல் நிரவல் இசையின் கிட்டார் இசை ஒலிக்கும். தொடர்ந்து ஒலிக்கும் வயலின் இசைக் கோவைக்கும் சரணத்துக்கும் இடையில் சில நொடிகளுக்கு ஹார்மோனியத்தின் இசையைக் கரைய விட்டிருப்பார் இளையராஜா.
அக்காட்சியில் சுள்ளிப் பொறுக்கிக் கொண்டு செல்லும் ஏழைச் சிறுமியைக் காட்டுவார் மகேந்திரன். மேன்மையான ரசனை கொண்ட இரு கலைஞர்களின் கூட்டுப் பங்களிப்புக்கு உதாரணம் அக்காட்சியும் இசையும். இரண்டாவது நிரவல் இசையில், அதிகாலைப் பனியில் உடலை வருடும் குளிர் காற்றைப்போல் தழுவிச் செல்லும் வயலின் இசைக் கோவையைத் தந்திருப்பார் இளையராஜா. மென்மையான இப்பாடலின் சுவை எஸ்.பி.பி. – எஸ். ஜானகி குரல்களில் மேலும் கூடியிருக்கும்.
காதலின் மர்மம்
விவரிக்க இயலாத உணர்ச்சிகளை எழுப்பும் மர்மமான உறவு காதல். குறிப்பாக, நட்பு காதலாக மலர்வதற்கு முன்னதான இடைவெளியில் ஏற்படும் உணர்ச்சிகள் விவரணைகளுக்கு அப்பாற்பட்டவை. கலைப்படைப்புகளில் அவற்றைப் பதிவுசெய்ய நுட்பமான பார்வை தேவை. மர்மங்கள் நிறைந்த அந்தப் பக்கங்களை அற்புதமாகப் பதிவுசெய்த படைப்புகளில் ஒன்று ‘உறவெனும் புதிய வானில்’ பாடல்.
புதிரான விஷயத்தை அணுகும் மனது, மர்மமான உலகில் சஞ்சரிப்பது போன்ற உணர்வைத் தரும் பாடல் இது. எதிர்பாராத திகைப்பில் உறைந்திருக்கும் மனதைப் பிரதிபலிக்கும் முகப்பு இசையுடன் பாடல் தொடங்கும். சஞ்சலமான மனதின் படபடப்பும், பரவசம் ததும்பும் காதல் உணர்வும் கலந்த குரலில் ‘பா..பபப்பா…’ எனும் ஹம்மிங்குடன் பாடத் தொடங்குவார் ஜானகி. ‘கனவிலும்… நினைவிலும் புது சுகம்’ என்று அவர் பாடும்போது, அதே உணர்வு கொண்ட காதலனின் குரலாக எஸ்.பி.பி.யின் ஹம்மிங் இணைந்துகொள்ளும்.
கிட்டார், எலெக்ட்ரிக் கிட்டார், வயலின், பியானோ என்று மேற்கத்திய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி, வெவ்வேறு அடுக்குகளில் விரிந்துசெல்லும் இசைக் கோவையை உருவாக்கியிருப்பார் இளையராஜா. பனி படர்ந்த நிலப்பகுதி, நகருக்கு வெளியே புதர்களில் புதைந்திருக்கும் பழைய கட்டிடங்கள், அறையின் இருளை ஊடுருவிச் செல்லும் ஒளிக்கீற்று என்று வெவ்வேறு கற்பனை அடுக்குகளின் மேல் பாடல் மிதந்துகொண்டே செல்லும். ‘பார்வை ஒவ்வொன்றும் கூறும் பொன் காவியம்’ எனும் வரிகளைப் பாடும்போது எஸ்.பி.பி.யின் குரலில் இருக்கும் காதல் கலந்த கம்பீரம் தனி அழகு.
திருமண உறவின் சிக்கலில் தவிக்கும் நாயகியின் மனப்பதிவாக ஒலிக்கும் ‘ஏ.. தென்றலே’ எனும் பாடலை பி. சுசீலா பாடியிருப்பார். ஜானகியை ஒப்பிட சுசீலாவுக்குக் குறைவான பாடல்களையே வழங்கியிருந்தாலும், அவருக்கென தனிச் சிறப்பான பாடல்களை வழங்கத் தவறவில்லை இளையராஜா.
இப்பாடல் அவற்றுள் ஒன்று. பாடலின் தொடக்கத்திலும், இடையிலும் வரும் சோக தேவதைகளின் கோரஸ் இப்பாடலின் உணர்வைக் கூட்டிவிடும். ’மம்மி பேரு மாரி’ என்று ஒரு பாடலும் படத்தில் உண்டு. ‘கீச்சு’ எனும் செல்லப் பெயரில் அழைக்கப்படும் பதின்பருவ இளைஞன் பாடுவதாக அமைக்கப் பட்ட அப்பாடலைப் பாடியவர் எஸ். ஜானகி!
Courtesy: Tamil Hindu
எம்.ஜி.ஆருக்கே சவாலாக அமைந்தவர்!
அந்த நாள் ஞாபகம்: ரஞ்சன்
புகழின் உச்சாணிக் கொம்பில் சூப்பர் ஸ்டாராக இருந்தார் எம்.ஜி.ஆர். தனது சொந்தத் தயாரிப்பான ‘நாடோடி மன்னன்’ படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது பத்துக்கும் அதிகமான படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆரை மட்டுமே வைத்துப் படங்களைத் தயாரித்துவந்த சாண்டோ சின்னப்பா தேவர், அவருக்கென்றே உருவாக்கிய ‘ராபின் ஹுட்’ டைப் கதைதான் ‘நீலமலைத் திருடன்’.
எம்.ஜி.ஆரின் நட்சத்திர அந்தஸ்துக்கு ஏற்ப திரைக்கதை, சென்டிமென்ட் காட்சிகள், பாடல் காட்சிகள், ஆக்*ஷன் காட்சிகள் ஆகியவற்றை அமைத்து சூப்பர் ஹிட் மசாலா படம் எடுப்பதில் தேவர் கெட்டிக்காரர். அவ்வண்ணம் எம்.ஜி.ஆருக்காகப் பார்த்துப் பார்த்து உருவாக்கிய நீலமலைத் திருடன் (1957) படத்தின் கதையை, தனது சகோதரரும் இயக்குநருமான எம்.ஏ. திருமுகத்தை அழைத்துச்சென்று எம்.ஜி.ஆரிடம் சொல்ல வைத்தார்.
கதையைக் கேட்டு ‘சபாஷ்’ என்று பாராட்டினாரே தவிர கால்ஷீட் தராமல் இழுத்தடித்துவந்தார். தேவர் அதற்கு முன் எம்.ஜி.ஆரை வைத்துத் தயாரித்த ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் ஏற்பட்ட மனஸ்தாபத்தை எம்.ஜி.ஆர். மறக்கவில்லை. தேவரோ தெய்வ பக்தியும் பொறுமையும் கொண்டவர். அப்படிப்பட்டவர் இனி எம்.ஜி.ஆருக்காகக் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்தார். இந்தக் கதைக்கு எம்.ஜி.ஆரை விட்டால் வேறு யார் சரியாகப் பொருந்துவார் என்று யோசிக்க ஆரம்பித்தார். அப்போது தேவரின் எண்ணத்தில் சட்டென்று வந்து அமர்ந்துகொண்டார் நடிகர் ரஞ்சன்.
எஸ். எஸ். வாசன் இயக்கிய ‘சந்திரலேகா’, ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் இந்தி மறுஆக்கம் ஆகிய படங்களின் மூலம் இந்திப் படவுலகில் பிஸியான சாகஸ நடிகராகப் புகழ்பெற்றிருந்தார் ரஞ்சன். சில ஆண்டுகள் மதராஸ் பக்கமே தலைவைத்துப் படுக்காமல் பம்பாயில் தங்கிவிட்டார். அவரை மீண்டும் இங்கே அழைத்து வந்தார் தேவர். தேவருக்கு எம்.ஜி.ஆரைப் போலவே ரஞ்சனும் ஆரம்ப கால நண்பர்.
‘சாலிவாகனன்’(1944) படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரும் ரஞ்சனும் மோதிய வாள் சண்டைக் காட்சியின் படப்பிடிப்பு பல நாட்கள் நடந்தது. படப்பிடிப்பு என்ற போர்வையில் எம்.ஜி.ஆர் தன்னைத் தாக்குவதாக ரஞ்சனும், ரஞ்சன் தன்னைத் தாக்குவதாக எம்.ஜி.ஆரும் மாறி மாறி இயக்குநரிடம் புகார் செய்தனர். படப்பிடிப்பில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட இந்த உரசலை நன்கு அறிந்தவர் தேவர். இருவரையும் மத்தியஸ்தம் செய்து சமாதானப்படுத்தியவர்களில் தேவரும் ஒருவர். சாலிவாகனன் படத்தில் எம்.ஜி.ஆருக்குச் சவாலாக அமைந்த ரஞ்சன்தான் இந்தக் கதையில் நடிக்க முடியும் என்று தேவர் நம்பினார்.
கவலையடைந்த எம்.ஜி.ஆர். ரசிகர்கள்
1957-ல் வெளியான ‘நீலமலைத் திருடன்’ படத்தில் வில்லன் பி.எஸ். வீரப்பாவை ஒழித்துக்கட்ட நீலமலைத் திருடனாகத் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞன் வேடத்தில் நடித்தார் ரஞ்சன். மருதகாசி எழுதி கே.வி. மகாதேவன் இசையமைத்து டி.எம்.சௌந்தர்ராஜன் உச்சஸ்தாயில் கம்பீரமாகப் பாடிய ‘சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா! தலை நிமிர்ந்து உன்னை உணர்ந்து செல்லடா!’ என்ற பாடல் காட்சியில் வெள்ளைக் குதிரையில் ஏறி ரஞ்சன் திரையில் வந்தபோது எம்.ஜி.ஆர். ரசிகர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். “நம்ம வாத்தியார் நடிச்சுருக்க வேண்டிய பாட்டு நைனா” என்று கவலைப்பட்டுப் புலம்பித் தள்ளினார்கள். படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. படத்தை எம்.ஜி.ஆர். பார்த்துவிட்டு “தேவருக்கு கால்ஷீட் கொடுக்க முடியாமல் போய்விட்டதே!” என தன் அண்ணன் சக்கரபாணியிடம் வருந்தினார். இந்தச் செய்தி தேவர் காதுக்கும் வந்துசேர்ந்தது.
அப்போது, ‘ரஞ்சனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் கத்தி சண்டை வைத்தால் இருவரில் யார் வெல்வார்கள்?' என்று டீக்கடையில் வாய்ச் சண்டை நடக்கும். “ எம்.ஜி.ஆர்தான் ஜெயிப்பார்” என எம்.ஜி.ஆர் ரசிகர்களும், “ரஞ்சனை ஜெயிக்க முடியாது” என்று ரஞ்சன் ரசிகர்களும் வாக்குவாதம் செய்துகொள்வார்கள். இதற்குக் காரணமாக அமைந்தது ரஞ்சனின் வாள் வீசும் வேகம்.
காவிரி மைந்தர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், அரியலூர் வட்டத்தைச் சேர்ந்த ஊர் லால்குடி. ரஞ்சனின் அப்பா வி. ராமநாராயண சர்மா லால்குடிக்காரர். ரஞ்சனின் தாயார் அலமேலு அம்மாள் திருச்சி ரங்கத்தைச் சேர்ந்தவர். பாரம்பரிய இசை, நடனம், பக்தி மூன்றுக்கும் பெயர்பெற்ற இந்த ஊர்களைச் சேர்ந்த பெற்றோருக்கு 10 பிள்ளைகள். அவர்களில் 4-வது பிள்ளையாகப் பிறந்தார் ரஞ்சன். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட ரமணன். வீட்டில் செல்லமாக ரமணி. சென்னை மயிலாப்பூருக்கு ரஞ்சனின் குடும்பம் குடிபெயர்ந்தது. சென்னையில் படித்து வளர்ந்த ரஞ்சன் நாமக்கல் சேஷையங்காரிடம் கர்நாடக சங்கீதம் பயின்றார்.
‘பரதம்’ நாராயணஸ்வாமி ஐயரிடம் நாட்டியம் கற்றார். படிப்பிலும் ’பலே’ என்று சொல்ல வைத்தார். பாட்டில் சுட்டி, பரதத்தில் படு கெட்டி என்று பள்ளிப் பருவத்தில் பெயரெடுத்தார். கல்லூரியில் படித்துக்கொண்டே நாட்டிய நாடகமொன்றில் நடிக்க ஆரம்பித்தார் ரஞ்சன். ஜெமினி ஸ்டூடியோவின் ஊழியர் வேப்பத்தூர் கிட்டு, ரஞ்சனின் துருதுரு நடனத்தையும் நடிப்பையும் கண்டார். அவர் படபடவென்று திக்காமல் திணறாமல் வசனம் பேசிய அழகைக் கண்டார்.
எம்.கே. தியாகராஜ பாகவதர் நாயகனாக நடித்துவந்த ‘அசோக்குமார்’(1941) படத்தில் இளம் புத்தராக நடிக்க ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தார் அந்தப் படத்தின் இயக்குநர் பி. ஜி. ராகவாச்சாரி. அவரிடம் ரஞ்சனை அழைத்து அறிமுகப்படுத்தினார் கிட்டு. வாய்கிழிய வசனம் பேசலாம் என்று வந்த ரஞ்சனுக்கு ஒரு வார்த்தைகூட வசனம் பேசாமல் ஒரே ஒரு காட்சியில் அமைதியாக அமர்ந்திருக்கும் புத்தர் வேடம் கிடைத்தது. இதே படத்தில் எம்.ஜி.ராமச்சந்தர் என்று பெயர் போடப்பட்ட எம்.ஜி.ஆருக்குத் துணை வேடம்.
சகலகலா வல்லர்
ஆனால், அதே ஆண்டில் ரஞ்சனுக்கு ஏற்றம் ஏற்பட்டது. ஜெமினி ஸ்டூடியோவில் சுற்றிவந்த ரஞ்சனைக் கண்டார், அன்று புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் விளங்கிய நியூடோன் ஸ்டூடியோ ஜிடன் பேனர்ஜி. ரஞ்சனின் தோற்றத்தைப் பார்த்து அவரும் தன்னைப் போல் ஒரு வங்காளி என்று நினைத்த ஜிடன், ஆர். ரமணி என்ற பெயரை ரஞ்சன் என்று மாற்றினார். அவரை நாயகனாக்கவும் உறுதியளித்தார்.
இதற்கிடையில் ஜெமினியின் நந்தனார் (1941) படத்தில் சிவபெருமானாக ரஞ்சன் ஆடிய சிவதாண்டவ நடனம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து எஸ். சௌந்தர்ராஜன் இயக்கிய ‘ரிஷ்யசிருங்கர்’(1941) படத்தில் நாயகனாக நடித்தார். அதற்கு முன் ரஞ்சன் நாரதராக நடித்திருந்த பக்தநாரதர் (1942) என்ற படமும் வெளியாகிக் கவனம் பெற்றது. ஆனால், ரஞ்சனுக்கு முதல் பெரிய வெற்றியாக அமைந்த படம் மங்கம்மா சபதம் (1943). இதில் ரஞ்சன் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தார்.
அதன் பிறகு பிஸி நாயகனாக மாறிய ரஞ்சனின் திரைப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது 1948-ல் வெளிவந்த எஸ். எஸ். வாசனின் பிரம்மாண்டமான படமாகிய ‘சந்திரலேகா’. இதில் கதாநாயகனாக நடித்த எம்.கே. ராதாவுக்கும் கதாநாயகியாக நடித்த டி.ஆர். ராஜகுமாரிக்கும் இணையாக வில்லன் சஷாங்கனாக நடித்திருந்த ரஞ்சன் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். ரஞ்சனின் துடுக்குத்தனம் நிரம்பிய வில்லன் நடிப்புக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்ட வாசன், அவரை இந்தியில் நடிக்க வைத்துப் பல படங்களை இயக்கினார். நிஷான், மங்களா, சிந்துபாத் தி செய்லர் படங்களில் தொடங்கி இந்திப் படவுலகில் பத்துக்கும் அதிகமான படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார் ரஞ்சன்.
விமானம் ஓட்டுதல், குதிரை ஏற்றம், வாள் வீச்சு, ஓவியம் வரைதல், பரத நாட்டியம், பக்கவாத்தியம் இசைத்தல் போன்ற பல கலைகளிலும் சிறந்தவராக விளங்கிய சகலகாலா வல்லவர் இவர். ‘நடனம்' என்ற பெயரில் பத்திரிகையொன்றைச் சில காலம் நடத்தி எழுத்தாளராகவும் விளங்கினார். ரஞ்சன் அந்தக் காலத்து பி.ஏ., எம்.லிட்., பட்டதாரி.
1959-ல் ரஞ்சன் நடித்த படம், ராஜா மலையசிம்ஹன். கடைசியாக அவர் நடித்த படம்1969-ல் வெளியான ‘கேப்டன் ரஞ்சன்’. இதன் பிறகு தனது மனைவி டாக்டர் கமலாவுடன் அமெரிக்காவில் வசித்துவந்தவர் தனது 65-வது வயதில் மறைந்தார். தமிழ் சினிமாவில் ரஞ்சன் போல் ‘சகலகலாவல்லவர்’களாக இருந்த நடிகர்கள் மிகவும் குறைவே.
எஸ்.வாசுதேவன்..வெண்ணிலாப் பாடல் தேர்ந்தெடுத்துப் போட்டதற்கு நன்றி..
*
எரிகின்ற என்னிதயம் குளிர நீயும்
…ஏறித்தான் வந்துவிட்டாய் நிலவுப் பெண்ணே
விரிகின்ற புன்முறவல் தோற்றம் மேலும்
…விகசித்தே விரிகின்ற ஒளியைக் கூட்டி
சிரித்தபடி என்மனதில் சிரிப்பூ பூக்க
…சீக்கிரமாய் வந்துவிட்டாய் பரவா யில்லை
நெறிக்கின்ற புருவங்கள் கொண்டு நானும்
…நீங்காத வேதனையில் இருக்கின் றேனே
நேற்றுத்தான் சென்றநீயும் திரும்பி விட்டாய்..
…. நெஞ்சகத்தில் புகுந்துவிட்ட அவனோ கொஞ்சம்
மாற்றங்கள் கொண்டானோ அறியேன் நானே
..மறுநாளில் வருவேனே என்றே சொல்லி
ஆற்றல்கள் அன்புதனைக் கலந்து என்னை
..அணைத்தேதான் இதழ்பதித்துச் சென்ற பின்பே
தூற்றலென நாட்களுந்தான் ஓடி மாதம்
…சீக்கிரமாய் கடந்ததுவே அவனைக் காணோம்..
இந் நிலையில் ஒன்றுசெய்வாய் நிலவே நீயும்
…இன்றுசென்று நாளைவாடி பரவாயில்லை
வெண்ணிலவே உனைப்போலே நிறத்தில் உள்ளம்
…வெட்கிவிடும் கன்னத்தின் சிவப்பு கண்ணில்
மென்னிதயம் கொண்டவளாய் இங்கு நானும்
…மேவிநொந்து நிற்பதையே தானு ணர்ந்தே
வெண்புரவி மீதினிலே வருவான் என்றே
…வேட்கையுடன் காத்திருப்பேன் நாளை வாடி..
*
https://youtu.be/ii8D7gNn318
chand phir nikla
1968 வருடத்துக்கான சிறந்த பாடகிக்கான விருதை இந்த நிலாப் பாடலுக்காக சுசீலாம்மா பெற்றார். தேசிய ஒருமைப்பாட்டு விருதுக்கான பாடலாக குழந்தைக்காக படத்தில் இடம் பெற்ற தேவன் வந்தான் தெரிவு செய்யப் பட்டது.
சிறந்த பாடலுக்கு என்று தேசிய விருது வழங்கப் படுகிறதா ? குழப்பத்தைத் தீர்த்து வையுங்க நண்பர்களே !
ஆம். மதுஜி. ஆனால் ஒரு சிறிய திருத்தம். பாடலுக்கு அல்ல, பாடலாசிரியருக்கு.
கவியரசர் கண்ணதாசனுக்கு ஒரு PLAQUEம் Lyric Writer of the Best Film Song on National Integration விருதும் வழங்கப்பட்டது.
http://iffi.nic.in/Dff2011/16th_nff/...970_img_49.jpg
'கலர்' காஞ்சனாவின் கான மதுரங்கள் : வானவில் பார்வை VIBGYOR view!
Quote:
வானத்தில் விமான நங்கையாக பறந்து கொண்டிருந்த காஞ்சனாவை கனவுத் தொழிற்சாலை அதிபர் ஸ்ரீதர் பூமியில் இறங்கிவந்து கால் பதித்த நட்சத்திரமாக்கினார்!
சிவந்த மெலிந்த அழகிய உடலமைப்புடன் வசீகரமான முகத் தோற்றத்துடன் காதலிக்க நேரமில்லைக்குப் பிறகு அதிக அளவு வண்ணப் படங்கள் அமைந்து கலர் கதாநாயகி பட்டம் வென்று அனைத்து கதாநாயகர்களாலும் விரும்பப்பட்ட கனவுக் கன்னியாக ரசிக நெஞ்சங்களில் கொடிகட்டிப் பறந்தார்!
KANCHANA VIBGYOR VIEW 1
சாந்தி நிலையம்(1969)
வானவில்லின் முதல் வண்ண அடுக்கின் உச்சியில் சிவப்பு (RED)!
Quote:
எந்த வண்ணத்தையும் விட பளீரிடுவது சிவப்பு வண்ணமே !
அவ்வண்ணமே கலர் காஞ்சனாவின் எழில் தோற்றம் 'பச்'சென்று மனதில் இறங்கியது காதல் மன்னரின் இணைவில் சாந்தி நிலையம் (a neat adoption of the Hollywood's legendary musical extravaganza THE SOUND OF MUSIC starring Julie Andrews and Christopher Plummer 1965) திரைக் காவியத்திலேயே !
மார்கஸ் பர்ட்லெ என்னும் ஒளி ஓவிய சக்கரவர்த்தியின் பசுமைக் குளுமையான படப் பதிவில் ஜெமினி கணேசன் மிக இயற்கையான ஆண்மையழகில் ஏ எம் ராஜா பி பி ஸ்ரீனிவாசுக்கு எவ்வகையிலும் குறைந்திடாத பாடும் நிலா பாலுவின் பொருத்தமான குரல் குழைவில் மின்னினார் காதலின் மன்னராக !!
அவருக்கு மிகவும் பொருந்திய ஜோடியாக காஞ்சனா அழகின் அஜந்தா எல்லோரா சிற்பமாக இனிமை சேர்த்து இயற்கையின் இளைய கன்னியாக உருவகப் படுத்தப் பட்ட இப்பாடலே வானவில்லின் உச்ச அடுக்கு சிவப்பு எக்காலத்திலும் !!
https://www.youtube.com/watch?v=LC5-vQtAQx4
சாந்தி நிலையம் காஞ்சனா புயல் மையம் கொண்ட வண்ணத் திரை மதுர கான மழைப் பொழிவே! இப்புயல் கடந்த கரைகள்!!
https://www.youtube.com/watch?v=uVH9o1_kyXE
https://www.youtube.com/watch?v=hp5b-ZmgQJ8
https://www.youtube.com/watch?v=WbitNDIYlXk
https://www.youtube.com/watch?v=XChwaujC198
மாற்றார் தோட்ட தேன் மதுரங்கள் / PART 31
REX HARRISON with AUDREY HEPBURN in My Fair Lady1964
மிகச்சிறந்த இசையும் பாடலும் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஹாலிவுட் காவியம் !
ரோமன் ஹாலிடே நாயகி ஆத்ரே ஹெப்புர்ன் உயரிய நடிகர் ரெக்ஸ் ஹாரிசனுடன் நம்மை மகிழ்வித்த மதுர கானப் பதிவு !!
Quote:
My Fair Lady is a 1964 American musical film adaptation of the Lerner and Loewe eponymous stage musical based on the 1938 film adaptation of the original 1913 stage play Pygmalion by George Bernard Shaw. With a screenplay by Alan Jay Lerner and directed by George Cukor, the film depicts a poor Cockney flower seller Eliza Doolittle who overhears an arrogant phonetics professor, Henry Higgins, as he casually wagers that he could teach her to speak "proper" English, thereby making her presentable in the high society of Edwardian London.
The film won eight Academy Awards, including Best Picture, Best Actor, and Best Director.
இப்படத்தின் வசன நடை பாடல் ஸ்டைலை அடிப்படையாகக் கொண்டே உயர்ந்த மனிதனில் நடிகர்திலகம் அசத்திய அந்தநாள் ஞாபகம் பாடல் அமைக்கப் பட்டது என்று கேள்விப் பட்டிருக்கிறேன்
https://www.youtube.com/watch?v=HroAq_E075Y
https://www.youtube.com/watch?v=QLue_qt8etk
https://www.youtube.com/watch?v=Doz5w2W-jAY
https://www.youtube.com/watch?v=RZmazN1bPgQ
https://www.youtube.com/watch?v=wefP_aEl6_I
https://www.youtube.com/watch?v=MnOI7G0rJ18
1956- SUDHESA MITHRAN
http://i61.tinypic.com/e1bxg7.jpg
TRICHY- ADVTS
http://i61.tinypic.com/12540md.jpg
மாற்றார் தோட்ட மதுரங்கள்
பகுதி 32 : rock and roll ராக் அண்டு ரோல் இசை நடனப் பாடல்களின் தாக்கம்!
https://www.youtube.com/watch?v=_u0OmHXWEvwQuote:
ராக் அண்டு ரோல் உலக திரை நடன வரலாற்றில் மைல்கல்லான நிகழ்வே!
மிக வேகமான நடன ஸ்டெப்புகளுடன் உடலை வளைத்து நெளித்து கைகளையும் தட்டிக்கொண்டு ஆடுவது த்ரில்லிங்கான அனுபவமே !
Quote:
ஈடு இணையற்ற நடன மேதைகள் பிரெட் ஆஸ்டையர் மற்றும் ஜீன் கெல்லியின் ஒப்புயர்வற்ற நடனத்தை கண்ணுற்ற கண்கள் புண்ணியம் செய்தவையே !
https://www.youtube.com/watch?v=lMKbGRCbsaw
https://www.youtube.com/watch?v=mOLOeaYjRME
https://www.youtube.com/watch?v=Cm-BXU4w5rA
தமிழ்த் திரையுலகின் முதல் ராக் ன் ரோல் அதிரடி ஆட்டம் நடிகர்திலகத்தின் விக்கிரமன் வாயிலாகவே !
https://www.youtube.com/watch?v=a63IlNFGip8
Quote:
ராக் ர்ராக் ராக் ராக் ன் ரோல் நடிகர்திலகத்தின் பதிபக்தியில் சந்திரபாபுவின் ஜீன் கெல்லி பாணி நடனத்தில் !!
டி எஸ் பாலையாவின் சாஸ்திரீய பாட்டும் பரத ராக்கின் முயற்சியும் ரசனையே !!
Enjoy with head phones in tact! feel the happiness!!
https://www.youtube.com/watch?v=MU-vw_bBO28
கண்ணதாசனின் வைர வரிகள்
தொடர்1
ஏழ்மையை படைத்தது அவனென்றால்
இறைவன் என்பவன்
எதற்காக?
(இறைவன் உலகத்தை படைத்தானாம்.)
கண்ணதாசனின் வைர வரிகள்
தொடர்2
இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால்
உள்ளம் ஒன்று போதாதே
Gap filler / Monotony breaker
High Decibels of Kollywood Vs Hollywood !
கணீர் குரலாளுமை இசை ராணிகள்
கே பி சுந்தராம்பாள் Vs ஹாலிவுட்டின் சுந்தராம்பாள் ஷர்லி பாஸி
திருவிளையாடலில் சுந்தராம்பாளின் வெண்கலக் குரல் கலக்கல்!!
https://www.youtube.com/watch?v=KDNSM0RyUa8
கோல்டுபிங்கரில் ஷர்லி பாசியின் நரம்பூசிக் குரல் பாய்ச்சல்!!
https://www.youtube.com/watch?v=CS8SPiBI-8c
https://www.youtube.com/watch?v=Ixny_7WUFCw
From Diamonds are Forever!
https://www.youtube.com/watch?v=qPeSPB68i2c
Dear Neyveli Vasu Sir
We pray His Almighty to put an end to the unwanted stalemate situations and shower His blessings towards resuming your duties soon with an amicable solution and settlement,
senthil
இந்த அடக்க ஒடுக்கம் ரொம்பப் பிடிச்சிருக்கு
BLOW HOT BLOW COLD DANCING DAMSELS OF KOLLYWOOD!
இனக்கவர்ச்சி மயக்க கானங்கள் Vs மனக்கவர்ச்சி மதுர கீதங்கள்!
Quote:
வியாபார ரீதியாக வலியப் புகுத்தப் படும் குத்தாட்டங்களும் பன்முக அனர்த்தப் பாடல்களும் மலிந்து பழகிப் போய் விட்ட திரையுலகில் அத்தி பூத்தாற்போல 'இந்த அடக்க ஒடுக்கம் ரொம்பப் பிடிச்சிருக்கு' என்று சொல்லுமளவில் நமது கவர்ச்சித் தாரகைகளும் எல்லை மீறாத கவர்ச்சியுடன் கௌரவமான பாடல் நடனக் காட்சிகளிலும் நடித்திருக்கிறார்கள் என்பது வியப்பின் சரித்திரக் குறியீடே !
கவர்ச்சித் தாரகை 1 : விஜயலலிதா
விஜய லலிதா காந்தக் கண்ணழகுடன் மிகக் கவர்ச்சிகரமான செழுமையான உடலமைப்புக் கொண்டவர். ஓரளவு நடிப்புத் திறமையும் வாய்ந்தவர்.
ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் பெரும்பாலும் அவரை கச்சை கட்டி கவர்ச்சியாட்டமே ஆட வைத்தன. பின்னாளில் இந்த கவர்ச்சி எல்லைகளையும் மீறி ஸ்டண்ட் கதாநாயகியாக ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களிலும் அசத்தினார்,விஜய சாந்தியின் சித்தி.
வல்லவன் ஒருவன், நூற்றுக்கு நூறு, சொர்க்கம், சாந்தி நிலையம், எதிரொலி திரைப்படங்களில் அவரது நடனங்கள் மனதைக் கவர்ந்தன .
பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் உயரத்தில் ஒரு கோபுரம் காட்டும் ஜேம்ஸ் பாண்ட் வில்லி ...
https://www.youtube.com/watch?v=5MDOr0gq0-8
நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும் ....மக்கள் கலைஞருக்கு நூற்றுக்கு நூறு வாழ்நாள் நடிப்பு மகுடம்!
https://www.youtube.com/watch?v=IEK6uVBuhB8
பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூமேடை வாசல் பொங்கும் சொர்க்கத் தேனாக...நடிகர்திலகத்தின் காலங்கடந்து நிலைத்து நிற்கும் கனவுக் காட்சி!
https://www.youtube.com/watch?v=3xzlyze2Fuo
பெண்ணைப்; பார்த்தும் பேச்சு வராத காதல் மன்னரைக் கவிழ்க்க முடியுமா ?
https://www.youtube.com/watch?v=Ypri1gs9U_k
நடிகர்திலகத்தின் நல்ல மனசுக்கொரு குறையுமில்லையே !!எதிரொலிக்கிறார் எட்டுத்திக்கும் !
https://www.youtube.com/watch?v=IG-TGZyPBEM
இந்த அடக்க ஒடுக்கம் ரொம்பப் பிடிச்சிருக்கு
BLOW HOT BLOW COLD DANCING DAMSELS OF KOLLYWOOD!
இனக்கவர்ச்சி மயக்க கானங்கள் Vs மனக்கவர்ச்சி மதுர கீதங்கள்!
Quote:
வியாபார ரீதியாக வலியப் புகுத்தப் படும் குத்தாட்டங்களும் பன்முக அனர்த்தப் பாடல்களும் மலிந்து பழகிப் போய் விட்ட திரையுலகில் அத்தி பூத்தாற்போல 'இந்த அடக்க ஒடுக்கம் ரொம்பப் பிடிச்சிருக்கு' என்று சொல்லுமளவில் நமது கவர்ச்சித் தாரகைகளும் எல்லை மீறாத கவர்ச்சியுடன் கௌரவமான பாடல் நடனக் காட்சிகளிலும் நடித்திருக்கிறார்கள் என்பது வியப்பின் சரித்திரக் குறியீடே !
கவர்ச்சித் தாரகை 2 : ஜோதிலட்சுமி
Quote:
சிறந்த நடனத் தாரகையான ஜோதிலட்சுமி அருமையான உடம்பின் வளைவுகளால் ரசிக நெஞ்சங்களைக் கிறங்கடித்து அக்காலத்தில் திரையரங்குகளுக்கு கூட்டத்தை ஈர்த்து Crowd Puller ஆக புகழ் பெற்றவர். அக்கட தேசத்தின் கவர்ச்சி வெடிகுண்டாக டான்சுலு ஆடியவர் !
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா என்னும் இந்தப் புகழ் பெற்ற பாடல் காட்சியமைப்பில் முத்துராமனுடன் இணைந்து கண்ணியமான நடன
அசைவுகளால் உள்ளம் கவர்ந்தார்! அதுவரை போட்ட கெட்ட ஆட்டமெல்லாம் மறந்தே போச்!!
இவரும் ராக்கட் ராணி என்ற மொழிமாற்றப் படத்தில் கதாநாயகியாக சாகசங்கள் செய்தார்! இப்படத்தின் கவர்ச்சி நடன டிபார்ட்மெண்டை விஜயலலிதா பெருந்தன்மையுடன் கவனித்துக் கொண்டார்!!
பூவும் போட்டும் திரைப்படம் ஜோதிலக்ஷ்மியிடம் பொதிந்திருந்த நடிப்பம்சங்களையும் வெளிக் கொணர்ந்தது !
https://www.youtube.com/watch?v=LKJ2BTbrIS4
மக்கள்திலகத்துடன் அடிமைப் பெண்ணில் காலத்தை வென்றவன் நீ ஆடல் பாடல் பங்களிப்பு !!
https://www.youtube.com/watch?v=NAkxBhg8b3s
இதழை விரித்த ரோஜா பட்டணத்தில் பூதம் துணையுடன்
https://www.youtube.com/watch?v=uSlqdZjEK_g
Not losing her dance touch even with younger generations!!
https://www.youtube.com/watch?v=SqJjygA8Jpk
காமெடியர்களின் ஷாம்பெயின் கலக்கல் மதுரங்கள்
பகுதி 6 வெண்ணிற ஆடை மூர்த்தி
காதலிக்க நேரமில்லை நாகேஷ் பாணியில் ....Quote:
சற்று வரம்பு மீறிய இரட்டை அர்த்த வசனங்களால் கொஞ்சம் சங்கடப் படுத்தினாலும் மூர்த்தி அவர்களும் ஒரு தவிர்க்க இயலாத நகைச்சுவையாளரே!
அறிமுகப் படமான ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை, உத்தரவின்றி உள்ளே வா, சிவந்த மண் மற்றும் மூன்று தெய்வங்கள் படத்திலும் பாடல் காட்சிகளில் நகைச்சுவை பங்களிப்பு செய்திருக்கிறார் !
https://www.youtube.com/watch?v=PoTPg0wL51g
உத்தரவின்றி உள்ளே வா ..
https://www.youtube.com/watch?v=kdu45A-2a1w
மூன்று தெய்வங்கள் ...நானொரு சின்னப் பிள்ளை
https://www.youtube.com/watch?v=7hXbJGf8mEw
சிவந்தமண்
https://www.youtube.com/watch?v=3bIXJ3oW1YI
Gap filler / Monotony breaker
To and Fro / அங்கும் இங்கும் / இங்கும் அங்கும் / Here and There
அங்கும் இங்கும் 1
ஹிந்தி பிரம்மச்சாரியில் ஷம்மிகபூர் மும்தாஜ்
https://www.youtube.com/watch?v=y1JYQ4P24s8
எங்கமாமா நடிகர்திலகத்துடன் நிர்மலா
https://www.youtube.com/watch?v=7KqCOT4Qito
இங்கும் அங்கும்
சபாஷ் மீனாவில் நடிகர்திலகம் மாலினியுடன்
https://www.youtube.com/watch?v=MewOsMqwg3Y
தில் தேரா தீவானா ஷம்மிகபூர் மாலா சின்ஹாவுடன்
https://www.youtube.com/watch?v=JwnXbIDm_EE