மதுண்ணா!
உங்களுக்கு பத்மப்ரியா நினைவு வந்திருக்குமே!:) அதுவும் வண்ணம் வேறு.
Printable View
மதுண்ணா!
உங்களுக்கு பத்மப்ரியா நினைவு வந்திருக்குமே!:) அதுவும் வண்ணம் வேறு.
அதே ஷாந்தா ஜானகிராமன் அவர்கள் தரவேற்றிய 'பௌர்ணமி நிலவு' படப் பாடலில் பாவம், நடிப்பு என்றால் 'கிலோ என்ன விலை?' என்று எப்போதுமே கேட்கும் விஜய்பாபு 'பசிக்குது இலை போடம்மா' என்று பூமாதேவி போல வாழ்ந்த ஜீவனை வளர்த்தவரிடம் வச(ந்)தியாகக் கேட்கிறாரே. (அந்த பெல்பாட்டமும், ஸ்டெப் கட்டிங்கும் இல்லாத விஜய்பாபு ரொம்ப ரேர்). அப்போ படமும், பாடல்களும் பரபரப்பைக் கிண்டியது நெசந்தான்.
https://youtu.be/3yK2t2z9noY
“நான் போய்ட்டு வர்ரேன்னு சொன்னார்ப்பா.. சரி இங்க இருக்கு மஸ்கட்டு தோ ரெண்டரை அவர் ல வந்துருவாராங்காட்டியும்னு போய்ட்டுவா மாமான்னேன்
போனார் போனாருதான்.. அதுசெரி.. பேசறாரான்னு கேக்கறியா.. ம்ம்..அதுமாட்டுங்கெடக்கு...வாஸ்ஸப் ஐஎம்மோ.. அப்பப்ப தும்பிக்கையாட்டம் டை கட்டிகினு புது க்ளாஸ் போட்டுகினு போட்டு அனுப்பிகினு தான் இருக்கார்..என் ஃபோட்டோ ஆனமட்டும் அனுப்புன்னு கெஞ்சறார்.. மாட்டேன் முடியாதுன்னுட்டேன்..
ஏன்ங்கறியா.. நான் இன்னாத்த சொல்வேன்..அது பாட்டுக்கு போய்டுச்சு..வரத்துக்கு அடுத்தவருஷம் தான் வருமாம்.. என்னதான் பேசி போட்டோலாம் பாத்துகினு இருந்தாலும் நேர்ல கூட இருக்கறா மாதிரி வருமா.. வராது தான்.. உனக்குத் தெரியுது..என் உடம்புக்குத் தெர்லையே..
இத்தனைக்கும் வெளிய கூட போறதில்லை..ஹிந்தி சீரியலும் பார்க்கறதுல்ல..சாப்பாடு எப்பவும் கொஞ்சமாத்தான் சாப்பிடுவேன்னு உனக்குத் தெரியும் பட் பசிக்கலை.. கொஞ்சம் செவேல்னு இருப்பேன்னு அடிக்கடி நீ பொறாமைப் படுவியே..இப்ப எப்படி இருக்கேன்.. கொஞ்சம் கறுத்துட்டேனில்லை..ம்ம் காரணம் அந்தச் சண்டாளன் தான்..திருட்டுப் பயபுள்ள.. அவர் பிரிஞ்சதாலத் தான் எனக்கு இப்படி ஆகிடுத்து “ என்று ஒரு தலைவி தன் தோழியிடம் பகிர்ந்து கொள்கிறாள் என்பதை வள்ளுவர் கீழ்க்கண்டவாறு உரைக்கிறாராக்கும்..
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தஎன்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.
ஸோ இது பசலைங்கறது நிறமாற்றம்.. அதாவது காதலன் பிரிந்ததால் ஏற்பட்ட நிற மாற்றம்..
இதையே ஒரு திரு நெல்வேலிக் காரம்மா என்னவாக்கும் சொல்றாக..
“ஆமா வந்துட்ட கேக்கறதுக்கு..என்னத்த சொல்வேன் போ..அவிய ஊருக்குப் போய்ட்டாக.. ஆமா.. அதுக்கென்ன..
தோ..அங்க பாரு..புதுசா வாங்கின ஜெர்ஸிப் பசு.. கோனார் வரலை.. நானும் மறந்துபுட்டேன். பார்த்தா என்னாச்சா
பால் முச்சூடும் காம்பிலிருந்துபொங்கி தரையில கொட்டிக்கிட்டிருக்கு..ம்ம் கன்னுக்குட்டிய அவுத்து வுடலாம்னா ரொம்பச் சின்னதா தூங்கிவழிஞ்சுது..விட்டுட்டேன்..அப்புறமா ஃபீடிங்க் பாட்டில்ல கொடுக்கலாம்னு..
என்னது..எளச்சுருக்கேனா.. எக்ஸர்ஸைஸா.ஸூம்பா க்ளாஸஸா.அதெல்லாம் இல்லை.. தானா இளைக்குது..உடம்பும் கொஞ்சம் கறுத்துப் போச்சுதேன்..எல்லாம் இந்தப் பால் இப்படி கன்னும் குடிக்காம நமக்கும் உபயோகப்படாம வேஸ்ட் ஆச்சு பாத்தியா..அது போல ஹும் என்னோட யூத் எல்லாம் வேஸ்ட் ஆகட்டும்..அவிய தான் இல்லையே..எப்போ வருவாரோ எந்தன் கலிதீர... சிரிக்காத புள்ள..வகுத்தெரிச்சல்”
இதைத்தான் ஒரு குறுந்தொகைப் பாடல் சொல்கிறது..
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே.
இங்க தலைவி பசலையை நோய் என்றே சொல்கிறாள் போல..
ம்ம் ஒரு பாட்டுல கூட வரும்ல
மாலைக்கு நோயாகிப் போனேன்
காலை மலருக்குப் பகையாக ஆனேன் .. என்கிறா இந்தப்பொண்ணு..
எதுக்காம்.. அந்த ஹீரோப்புள்ளையாண்டன் கொஞ்சம் லூஸு போல..
மொதல்லையே நைஸா விண்ணப்பிக்கிறா..
அழகானபழம் போலும் கன்னம்
அதில் தரவேண்டும் அடையாளச்சின்னம்
இது இருக்கே ஜடம் தத்தி (சிசெ..கோச்சுக்கப்போறார்)
பொன் போன்ற உடல் மீது மோதும்
இந்த கண் தந்த அடையாளம் போதும்
அதுக்கப்புறம் தான் இந்த மாலைக்கு நோயாகிப் போனாளாம்.. ஃபீலிங்க்ஸ்..அழகாச் சொல்றா பாருங்க.பிரிஞ்சாலும் கஷ்டம் கூட இருந்து சும்மா இருந்தாலும் கஷ்டம்..:) யாருக்கு யாருக்கோ :)
வாங்க பாட் பார்க்கலாம்..
துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே இங்கே என்னாளும்..ம்ம்
https://youtu.be/k-os3ksSZVY
//நேற்றெழுதி இட்டு சரியா வரலையோன்னு சந்தேகப்பட்டு டெலீட் பண்ணி மறுபடியும் இடுகிறேன்..ஓகேயா//
வாசு ஜி...
அந்த "பசிக்குது" பாட்டைப் பார்த்த பிறகுதான் உடனே அங்கே ஒரு ரிக்வெஸ்ட் வச்சேன். யூடியூபில் இந்தப் பாட்டுக்கு கீழேயே இருக்கு பாருங்க... சிலர் இது போல் கையில் இருந்தா உடனே அப்லோட் செய்வாங்க... நீங்க முழுப்படமும் கேட்டிருக்கீங்க.. பரங்கிமலை ஜோதியில் ரிலீஸ் ஆனபோது பார்த்தேன். அப்புறம் கண்ணில் படவே இல்லை.. கிடைச்சா மறுபடி பார்க்கலாம்.
சிக்கா.. துயிலாத பெண்ணை தூங்க வைக்கப் போறீங்களா ?
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்னு சொல்வது எந்த நோய் ? சொல்லுங்க..
அது பாடல்கள் வரிசையில் வராது. போட்டிக்கவிக்கு புத்தி புகட்ட ராமகிருஷ்ணா ஈற்றடி தந்து பின் உரைக்கும் வெண்பா. அதனால் அது அம்பிகாபதி நூறுக்கு முன் பாடிய கடவுள் துதி போல 'தெனாலிராமன்' படப் பாடல் வரிசையில் இடம் பெறாமல் போய் விட்டது. உங்களுக்கு வேண்டுமென்றால் சொல்லுங்க செல்லம்.:) நான் என் டிவிடியிலிருந்து எடுத்து அப்லோட் செய்கிறேன். அதே உங்க ஓ.கே.யா?
இன்னொன்று. என்னுடைய நடிகர் திலகத்தின் டாப் 10 வரிசையில் எப்போதுமே 'தெனாலிராம'னை வைத்திருப்பேன். அவ்வளவு அறிவுபூர்வமான படம் அது. இரண்டாவது நடிகர் திலகம் திரையில் நடிக்க வந்து நான்கு ஆண்டுகளிலேயே, அதாவது 1956 -ல் இந்த அற்புதமான 'தெனாலி ராமன்' என்ற வெளியே எளிமையாக தமாஷாகத் தெரியும் அவ்வளவு கடினமான பாத்திரத்தை சிறு வயதிலேயே தலையில் சுமந்து அட்டகாசம் செய்தார் தன் அபார நடிப்பால். (அப்போது அவருக்கு வயது இருபத்து எட்டு தான்) இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவரது விழிகளும், முகபாவங்களும் புரியும் அதிசயங்களை எப்படிப்பட்டவரும் வார்த்தைகளில் வடித்து விட இயலாது. எவ்வளவோ அதியற்புதமான பாத்திரங்களை அவர் ஊதித் தள்ளியிருக்கிறார். ஆனால் அதில் 'தெனாலிராமன்' தனி ரகம் என் உயிரான 'ஆண்டனி அருண்' போல.
இதை நான் நடிகர் திலகம் திரியில் எழுதலாம். ஆனால் 'தெனாலிராமன்' படத்தில் ராமன் ஒரு கவி என்பதால் படத்தின் ஆரம்பத்தில் இருந்து ராயரிடம் பணியில் சேர்ந்து, போட்டியாளர்களை சந்தித்து அவரகளை தன் அறிவுத் திறனால் ஓட ஓட விரட்டி முடிக்கும் வரை நிறைய சிறு சிறு கவிகளும் வெண்பாக்களும் பாடல் வடிவில் இப்படத்தில் அடிக்கடி ஒலிக்கும். அதனால்தான் இங்கு எழுதினேன். இந்தப் படத்தில் நடிகர் திலகம் கவி பாடும் போது அதற்கு பின்னணிக் குரல் கொடுப்பவர் வி.என்.சுந்தரம் என்ற அற்புதமான கலைஞர். இவர் புகழ் பெற்ற நடிகரும் கூட.
ஒரு மூன்று மணி நேர ஓய்வு கிடைத்தால் இந்த அற்புத படத்தை அணுஅணுவாக கண்டு ரசித்து மகிழுங்கள். ஜென்மமே சாபல்யம் அடைந்தது போல இறுதியில் உணரலாம்.
படத்தின் டைட்டிலின் போது பின்னணியில் ஒலிக்கும் 'உலகெலாம் உனதருளால் மலரும்...'கிருபாகரியே! மஹேஸ்வரியே!' என்ற அருமையான பாடலை மறக்கவே முடியாது. அமைதியும், சாந்தமும் ஒருசேரப் பொங்கினால் அது இந்தப் பாடலே. (இதே பாடல் ஜமுனா பாடும் சோக வடிவத்திலும் உண்டு)
From Tenali Raman (1959)
ulagelaam unadharuLaal........
http://www.youtube.com/watch?v=4-perS-xQGc
வாசு சாருக்கு எங்கே தட்டினா எங்கே வலிக்கும் என நல்லா தெரியும்.
தெனாலி ராமனை வைத்து என்னை இங்கே இழுத்து விட்டார்..
நடிகர் திலகத்தின் முதல் பத்தில் இதுவும் இடம் பெற வேண்டும்.
தெனாலி ராமன் படத்திற்காகப் பதிவு செய்யப்பட்டு கடைசி நேரத்தில் படத்தில் இடம் பெற முடியாமல் போன பாடல் உங்களுக்காக
http://www.pradosham.com/msv/1956%20...Kannadasan.mp3
தென்னவன் தாய்நாட்டு சிங்காரமே..
இந்த ராகத்தை ரீதி கௌளை என்பார்கள். இதை முதலில் கவிக்குயில் படத்தில் தான் பயன் படுத்தியதாகக் கூறி வந்தார்கள் சிலர். ஆனால் எப்படி நடிப்பில் எதிலும் முதன்மையாக பல வகை நடிப்பை நடிகர் திலகம் கொண்டு வந்தாரோ அது போல இசையில் அத்தனை விதமான அம்சங்களையும் முதலில் கொண்டு வந்தவர் மெல்லிசை மன்னர். அதே போல் இந்த ரீதி கௌளை ராகத்தை 1956லேயே கொண்டு வந்து விட்டார்.
இந்த ராகம் கேட்க மிகவும் இனிமையாகவும் அதே சமயம் மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும் படியும் திகழும் தன்மை வாய்ந்தது.
குறிப்பிடத்தக்க சில பாடல்கள்
சின்னக்கண்ணன் அழைக்கிறான், தலையைக் குனியும் தாமரையே, உன்னி கிருஷ்ணன் பாடிய ஒரு பாடல், முதல்வன் படத்தில் அழகான ராட்சசியே உள்ளிட்ட பாடல்கள் இந்த ராகத்தில் அடங்கும்.,
Hi all ...
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... ரோஜாவின் ராஜா படத்தில் வரும் "ஜனகனின் மகளை" பாடலை எழுதியவர் வாலியா, கண்ணதாசனா, புரட்சிதாசனா ?
சொல்லுங்க் ப்ளீஸ்..
நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள்
கண்களை மறைக்கவில்லை
ஒரு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான்
ஜானகி கலங்கிவிட்டாள்.
அவரைத் தவிர வேறு எவரால் இப்படி எழுத முடியும்? கண்ணனின் தாசனுக்கு நாமெல்லாம் தாசர்கள்தானே! மதுண்ணாவின் சந்தேகத்தை தனி ஒருவராக ஆதாரத்தின் மூலம் தீர்த்து வைத்த ரசிக வேந்தருக்கு நன்றியோ நன்றி! அதே போல தெனாலி ராமனைக் கண்டு ஓடோடி வந்து பெருமைப்படுத்தியதற்கும் நன்றி. சந்தேகத்தைக் கிளப்பியவருக்கும் அதே அதே.
ஒரு மூன்று மணி நேர ஓய்வு கிடைத்தால் இந்த அற்புத படத்தை அணுஅணுவாக கண்டு ரசித்து மகிழுங்கள். ஜென்மமே சாபல்யம் அடைந்தது போல இறுதியில் உணரலாம். // ஏற்கெனவே பார்த்திருக்கிறேன் வாசு.. பல வருடங்களுக்கு முன்..பட் சுத்தமாய் மறந்துவிட்டது.. எனிவே மறுபடி பார்க்கப் பார்க்கிறேன்.. அழகாய் எழுதியிருப்பதற்கு தாங்க்ஸ்..பின்னூட்டம் அளித்த ராகவேந்தர் சாருக்கும் ஒரு ஓ..
ரோ.ரா வும் இதுவரை முழுமையாகப் பார்த்த்தில்லை..ம்ம்
சின்னா!
உங்கள் பதிவுகளை இனிமேல்தான் படிக்கப் போகிறேன். கொடைக்கானல் போவதற்குள் படித்து விடுகிறேன்.:)
ஹி ஹி..:) இப்படி டபக்குன்னுகேட்டா எப்படி.. இருந்தாலும் லிஸ்ட் கம்மியாத்தான் இருக்கும்.. :)
இது என்ன.. திடீர் பயணம் ..என்சாய்.. ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே எடுத்த இடம் சாந்தி valley தானே..அங்கும் சென்று பாருங்கள்..பட் கொஞ்சம் மேலே ஏறினால் பூம்பாறை என ஒரு ஊர் அதைத் தாண்டி மன்னவனூர்.. பார்த்ததில்லை எனில் டோண்ட் மிஸ்..
அண்ணா! சின்னா! (ஹய்... ரைமிங்... டைமிங்)
உண்டாயின் உண்டென்று மணம் கொள்ளுவோம்
இல்லாயின் இல்லென்று வான் செல்லுவோம்.
காதலியின் மனதில் புதைந்து கிடக்கும் காதலின் ஆழத்தையும், உறுதியையும், நம்பிக்கையையும் அற்புதமாக வார்த்தைகளில் வடித்தெடுத்துத் தந்த கவிஞன். எப்போது கேட்டாலும் இவ்விரு வரிகளையும் இசையோடு கேட்கும்போது கண்கள் ஆச்சர்யத்தால் விரிவடையும்.
நமக்கு லக் இருந்தால், கடவுள் அருள் இருந்தால், உனக்கு நான்... எனக்கு நீ என்பது உண்மையானால் நாம் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளலாம். இல்லை நம் காதலுக்கு பெற்றோர்களாலோ அல்லது மற்றோர்களாலோ தடையோ அல்லது வேறு ஏதும் தடங்கல்களோ இருந்தால் அதுபற்றியும் கவலை கொள்ளவேண்டாம். விதி விட்ட வழி என்று மனமொத்து, மரணமெய்தி, மண்ணைத் துறந்து விண்ணை அடைவோம்.
இந்த அர்த்தத்தில்தானே காதலி அப்படி கானமிசைக்கிறாள்?
'உண்டாயின் உண்டென்று மனம் கொள்ளுவோம்' என்பது பாடல் புத்தகத்தில் உள்ள வரி.
அது சரி! 'மணம்' சரியா, 'மனம்' சரியா அல்லது இரண்டுமே பொருந்துமா?
சந்தேகத்தை நிவர்த்தி செய்பவர்களுக்கு இரண்டு விஜயகுமாரி சோகப் பாடல்கள் பரிசாக வழங்கப்படும்.
அப்பாடா! இதைப் படித்து மதுண்ணா கண்டிப்பாக பதில் தெரிந்தும் சொல்லாமல் எஸ்கேப் ஆகி விடுவார்.:)
இன்னொருத்தர் கண்டிப்பாக வலையில் சிக்குவார் என்று நம்புவோமாக.:)
தேங்க்ஸ் சின்னா!
பார்க்கிறேன். ஒன்றுமில்லை. பெரிய பையன் காலேஜ் லீவில் (4 நாட்கள் மட்டுமே) பொங்கலுக்குப் பிறகு வீட்டுக்கு வந்திருக்கிறான். எங்காவது வெளியே நெய்வேலியை விட்டு 'போய் வரலாமே' என்றான். முதலில் ஏற்காடு ப்ளான் பண்ணி, அப்புறம் பிச்சாவரங்காடு மாற்றி, பின் வெயிலில் இரண்டுமே அவ்வளவாக சரிப்பட்டு வராது என்று மீண்டும் குழம்பி, இறுதியில் கொடைக்கானல் முடிவு செய்யப்பட்டது. இன்று இரவு 11 மணிக்கு பயணம். தங்கை ஆத்துக்காரர் 'கொடை'யில் டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் ஆபிஸராக முன்பு பணிபுரிந்ததால் அங்கு தங்க ஏற்பாடு செய்து விட்டார். பிள்ளைகளும் சிறுவயதில் பார்த்ததுதான். அதான் கொஞ்சம் ஜாலியாக....
கொடைக்கானல் சென்றதும் முதலில் செல்ல இருப்பது வழக்கம்போல 'ஞானஒளி' தேவாலயம்தான். அப்புறம்தான் மற்றதெல்லாம். ஆமாம்! 'குணா' பாறை பார்க்க முடியுமா?
கோடைக்கானல் தோட்டம்
இங்கு கொஞ்சும் பறவை கூட்டம்
அடுத்த வரி தங்களுக்கு:)
ஆடிக் கலக்கும் ஆட்டம்:)
அதில் ஆணும் பெண்ணும் நாட்டம்
ஹையா! சொந்தக் கதையோடு நைஸா பாட்டையும் இணைச்சாச்சு. அதுவும் 'குலம்' போற்றும் 'குண'வானின் பாட்டு.
'உலகில் இரண்டு கிளிகள்'.
https://youtu.be/wkqLdxfHaPE
வாசு சார் நீங்கள் கோடைக்கானல் போவது அறிந்ததும் எங்களுக்கெல்லாம்...
https://www.youtube.com/watch?v=ygjqxrk-Hsc
'பூம்பாறையில் பொட்டு வைத்த பூங்குருவி'யை பார்த்துவிட்டு வரவா?' ஹோம்காரம்மா பக்கத்திலேயே இருப்பாக.:) பட்டை உரிக்கப்பட்டுவிடும்.:) அப்புறம் 'தடியன் குடிசை' என்ற பகுதியில் மசாலாப் பொருட்கள் கிட்டுமாமே!
அனைத்துப் பதிவுகளுக்கும் சளைக்காமல் 'லைக்' குகள் தந்து உற்சாகப்படுத்தும் 'கோபு' சாருக்கு உளமார்ந்த நன்றிகள் என்றென்றும். :ty:
Good..Cool Vasu..Relax and enjoy your trip. (oru payanak katturai ezhuthunga)
ரெண்டு வி கிடைச்சாலும் நோ பயம்..அது மணம் தான்.. விரிவா ஈவ்னிங்க்.. முடிஞ்சா..
ஒருமனமாய்ச் சொல்லிடுவேன் உள்ளத்தின் எண்ணம்
திருமணம்தான் என்றே திரி.. :)
கோக்கர்ஸ் வாக்கில் எடுக்கப்படாத படங்கள் கம்மி... வாசு ஜி... குணா குகைக்குள் இறங்க விடுவதில்லை. மேலேயிருந்து எட்டிப் பார்க்கலாம். பேரிஜம் ஏரி, தொப்பி தூக்கி பாறை போயிட்டு வாங்க.. வருஷம் தோறும் வசந்தம் தேடி போவோம் அங்கே...
( விஜயகுமாரின்னு சொல்லாட்டியும் நான் எஸ்கேப்புதான் )... ஹாப்பி ஜர்னி....
நானும் என் பங்குக்கு கொடைக்கானலில் படமாக்கப்பட்ட ஒரு பாடலை இங்கே போஸ்டி விடுகிறேன். வாசுஜி வந்து இப்படி இருந்த இடம் இப்போ எப்படி ஆயிடுச்சுனு சொல்லட்டும்..
https://www.youtube.com/watch?v=3iNa9AA81zI
சிக்கா... நீங்க எங்கே தலைமறைவாயிட்டீங்க ?
யாரும் இல்லாதபோது வந்து புதுசா எதாவது தலைப்பு ஆரம்பிக்கலாமில்ல ?
ஹாய் மதுண்ணா.. தலை மறைவாய் த் தான் இருக்கேன்..இங்க வெய்யில் ஆரம்பிச்சுடுத்து :) இன்னிக்கு ஃப்ரை டேயா தண்டா தண்ட்டா கூல் கூல் ஆயில் தேய்ச்சுக் குளிச்சனா வீக்லி பர்ச்சேஸ் கூட போகலை.. லஞ்ச் சாப்பிட்டா (டயட் காய்கறிகள்) அதுக்கே கண்ணைக் கட்டிண்டு வந்தது.. டயட் நு சொல்றேனேஒழிய இன்னிக்கு க் கொஞ்சம் சீட்டிங்க் தான்..
ரொம்ப நாளைக்கப்புறம் கொத்தவரங்காய் பருப்புசிலி, சேனை எரிசேரி, வத்தக் குழம்பு, சீராமிளகு ரசம், காலிஃப்ளவ்ர் ரைஸ்(ரைஸ்க்கு ப் பதிலாக) ம்ம் சுகமாயிட்டு சாப்பாடு சுகமாயிட்டு தூக்கம்..இப்ப எழுந்து வீக்லி ஷாப்பிங்க் போகணும்..
என்ன த்லைப்பு நீங்களே சொல்ங்க..:)
வீட் பால்கனி தரை சுடுது..மீன்ஸ்..ஸம்மர்..
வெயிலுக்கேத்த நிழலுண்டு
வெயிலோடு விளையாடி..
ம்ம் சட்ட்னு வெயில் பாட் வரலை.. நைட் வர்றேன்..
From GG's Treasure Island....commemoration of our own world...GG songs!
Earth Day 2016!
Quote:
This world is a clockwork Orange! We do not know when this orange like entity came into existence alongside millions and trillions of Stars and Planets around us in this Universe!!
The beauty of this globe on which we survive is the Centre of Gravity that keeps us intact even as the world is revolving on its own slant axis and orbiting around the Sun!! The Sun is the prime mover supplying all energy to all living and inanimate objects of our environment!!
The world is so cool and warm on its mantis but boiling as the volcanic magma as we go deep and deep!!So are the eruptions of human mind when explore or implore ourselves by way of the human relationships and interactions therin!!
ஜெமினி கணேசன் அவர்களின் நடிப்புப் பார்வையிலோ இது ஒரு சின்னஞ்சிறு உலகம்!
https://www.youtube.com/watch?v=QQkDoi9biAQ
உள்ளமென்பது உலகமாகலாம்.............. உலகமென்பது உள்ளமாகுமோ?
https://www.youtube.com/watch?v=IDhaiDfXfok
பழகத்தெரிய வேண்டும் உலகில் பார்த்து நடக்க வேண்டும் ...மிஸ்ஸியம்மா!
https://www.youtube.com/watch?v=FkRV2zhjZB0
இறைவன் உலகத்தை படைத்தானா.....
https://www.youtube.com/watch?v=f_EQYsvrL1I
நகைச்சுவை கலைஞர்களின் பார்வையில் இந்த உலகம் !!
https://www.youtube.com/watch?v=Eeod3MiL-YQ
https://www.youtube.com/watch?v=UMskywbSCDQ
https://www.youtube.com/watch?v=FUKVgcKmtXw
டியர் வாசு சார்,
கொடைப்பயணம் வெற்றிகரமாக (அதாவது இனிமையாக, இடைஞ்சல் இல்லாத,மகிழ்ச்சியாக, வெட்டிச்செலவுகள் குறைவாக) அமைய வாழ்த்துக்கள்.
நான் இந்தியா வந்ததும் நாமிருவரும் (முடிந்தால் மற்ற நண்பர்களும்) சேர்ந்து செல்லவேண்டிய சாத்தனூர் பயணம் ஒன்று நாம் ஏற்கெனவே திட்டமிட்டு உள்ளோம் என்பதை நினைவூட்டுகிறேன்).
எதிர் பாராமல் சின்னக்கண்ணன் புதுப்புது தலைப்புகளில் பாடல் பட்டியல் இடுகிறாரே நாமும் அதுபோல செய்தால் என்ன என்று (அசட்டுத்தனமாக) தோன்றியதால் எழுதிப் பார்த்தேன். முரளி சாருக்கும், சீனா கானாவுக்கும் பிடிக்கும் தலைப்பு (நம்ம திரியின் தலைப்பிலேயே சின்ன உல்டா)
மனதைக்கவரும் 'மதுரை' கானங்கள்
மதுரையில் பறந்த மீன் கொடியில் (பூவா தலையா)
மதுரை மரிக்கொழுந்து வாசம் (ராமராஜனின் எதோ ஒரு படம்)
தேரோடும் எங்க சீரான மதுரையிலே (பாகப்பிரிவினை)
தென் மதுரை வைகை நதி பாடும் தமிழ் பாட்டு (தர்மத்தின் தலைவன்?)
மச்சான் பேரு மதுரே (மதுர)
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை (மாநகர காவல்)
மானாமதுரை குண்டு மல்லிகை (மேட்டுக்குடி) ஓ..அது வேறு ஊரோ?.
மதுரை நல்ல ஊர்தானே, அப்புறம் ஏன் இப்படி ஒரு பாட்டு
'மதுரைக்கு போகாதடீ' (அழகிய தமிழ் மகன்)
இன்னிக்கு ஜானகியம்மா பிறந்த நாளாமே.. வாழ்த்துக்கள் சொல்லி அவர் பாட் ஒண்ணு போடலாமா
வீணை மீட்டும்கைகளே.. வாழ நினைத்தால் வாழலாம் படமாம்.. பாடல் அழகு படமாக்கம் ஸோ ஸோ
வீணையொலி வீணை எஸ்காயத்ரியினுடையதாம்..
https://youtu.be/GCkrKM_t9s0
யாராக்கும் ஆக்ட்ரஸ்..
//எதிர் பாராமல் சின்னக்கண்ணன் புதுப்புது தலைப்புகளில் பாடல் பட்டியல் இடுகிறாரே நாமும் அதுபோல செய்தால் என்ன என்று (அசட்டுத்தனமாக) தோன்றியதால் எழுதிப் பார்த்தேன். முரளி சாருக்கும், சீனா கானாவுக்கும் பிடிக்கும் தலைப்பு (நம்ம திரியின் தலைப்பிலேயே சின்ன உல்டா)// ஆதிராம் சார் நன்றி :)
மதுரைப் பாடல் தொகுப்புகள் ஜோர்.. பட் இன்னும் தேடிப் பாக்கலாமா என்று ஸ்ட்ரெய்ட்டாக ச் சொல்லவெல்லாம் சின்னக்கண்ணனால் முடியாதாக்கும்.. ( அப்படிச் சொன்னா அது சீனா கானா இல்லை..
ஆதிராம் குரு.. என்னைக் கிளறிவிட்டீர்கள்..அதாவது என் நினைவுகளை..பதினொரு பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் சந்தவசந்தம் புலவர் மின் குழுவில் நானும் ஒரு சிறு துகளாய் இருந்தேன்.. அப்போது ஒரு கவியரங்கத்தில் கலந்து கொண்டேன்.எனது முதல் கவியரங்கம்...தலைப்பு என்ன தெரியுமா..எங்கள் ஊர்..
அதற்கு நான் படித்தது என்னவென்று சொல்லட்டுமா ( சொல்லித்தொலை..வேணாம்னா விடவா போற.. யார்ப்பா அங்க குரல் விடறது :)) பின் தேடி டிஎஸ்ஸியிலிருந்து யூனிகோட்டிற்கு மாற்றி இதோ..உங்களுக்காக..
(எழுதும் போது பட்ட நடுக்கம்..எல்லாரும் சிறந்த பாவலர்கள்.. வெகு அருமையாகக்கவிதை நெய்பவர்கள் மரபிலே.. நானோ சிறியேன்..கொஞ்சம் புதிதாய்க் கல்யாணமான இளம்பெண் பதட்டத்துடன் பாற்கரம் நடுங்க உள் நுழைவது போல் நுழைந்தேனாக்கும்..:) )
**
*
*******************
இறை வணக்கம்..
*******************
முந்தி வணங்கிடுவேன் முக்கண்ணன் மைந்தனாம்
தொந்திக் கணபதியின் தாள்
*************
தலைவர் வணக்கம்..
***********
மணிமணியாய்ச் சொல்வளத்தில் பேசுகின்ற தன்மை
மனதினிலே தொட்டிலிட்டு மயங்கவைக்கும் மென்மை
அணிஅணியாய் வார்த்தைகளில் தோரணங்கள் கட்டி
அழகுறவே நடத்துகிறார் சுவைபலவே கூட்டி
**
பனித்திரையில் இவரெடுத்த ஒளிப்படங்கள் எல்லாம்
பளிச்சென்றே இவர்திறமை தெளிவாகக் காட்டும்
மணித்தலைவர் இவரென்றே சொல்லிநானும் இன்று
வணங்குகிறேன் அவைத்தலைமை அழகுக்காய் நன்கு..
**
அவை வணக்கம்
***************
பவித்திரமாய்ப் பைந்தமிழைப் போற்றிவரும் பாவலர்காள்
கவித்திறனில் அடியேனோ கைக்குழந்தைக் கீடாவேன்
குவிந்திருக்கும் கற்பனையில் கொஞ்சமென இங்கெடுத்து
நவில்வதற்கு முன்னும்மை வணங்குகிறேன் வாழ்த்துவிரே..
**
எங்கள் ஊர்:
***********
கற்பனை என்றுவிட்டேன் இல்லையிலை கண்களுக்குள்
பற்பல ஆண்டுகளாய்ப் புதைந்திருக்கும் பேரழகு
கற்றவர் பலவிதமாய்க் கவிபாடிச் சென்றதது
மற்றவூர் முன்னாலே மலர்ந்திருக்கும் மதுரையதே...
**
மனமெல்லாம் முதிராத பாலகனாய் இருந்தமுதல்
கனவுகளில் பூப்பறிக்கும் காளையிளம் பருவம்வரை
கணப்பொழுதில் மறைந்துவிட்ட காலத்தைக் கழித்தவிடம்
தனமென்றே என்மனதில் தங்கிவிட்ட மதுரையதே..
**
துயிலாத நகரமெனத் தென்னாட்டில் போற்றுவர்தான்
கயிலாய மலையீசன் கண்ணான மீனாட்சி
உயிராக நின்றங்கே உணர்வில்நல் ஆட்சிதன்னை
குயிலதனின் குரலினிமை போலங்கே வழங்குகிறாள்..
**
சதுரச் சதுர வீதிகளாம் சற்றும் குறையா அழகுகளாம்
புதுமை சற்றும் ஏறாமல் பழமை தன்னைக் கொண்டதுவாம்
பதுமை உயிராய் வந்ததுபோல் பாங்காய் நங்கையர் நடந்திடுவர்
மதுரை அழகை நினைக்கையிலே மலரும் நவரச நினைவுகளே..
***
அன்னை மீனாள் கோவிலிலே ஆடி வீதி வெளியிலுண்டு
பின்னர் உள்ள தெருக்களுக்கும் பாங்காய் மாதப் பெயருமுண்டு
வண்ணச் சித்திரை ¢ வீதியின்பின் ஆவணி வீதி வந்துவிடும்
இன்னும் மாசி, வெளியென்றே வீதி எல்லாம் உண்டங்கே..
***
8* சற்றே நீளம் ஆகிடுமோ சிந்தை மயங்க வைத்திடுமோ
கற்ற இடமும் அங்கேதான் காதல் வந்ததும் அங்கேதான்
மற்ற கவிஞர் சுவையுடனே தம்மூர் வளத்தைச் சொல்கின்றார்
சுற்றி வளைத்துப் போகாமல் சுருங்கச் சொல்லப் பார்க்கின்றேன்.
**
சுருங்கச் சொல்வதால் எங்கள் ஊரின்
அழகெதுவும் சுருங்கிடாது கேளும்நீவிர்.
**
பாரதியார் சிலகாலம் பணிபுரிந்த பள்ளி1
படித்தேன்நான் சிலவாண்டு பாங்குடனே அங்கு
ஆரத்தைக் கழுத்தினிலே சூட்டியது போலே
அறிவூற்றின் கண்களையே திறந்துவிட்டார் நன்கு...
**
மாற்றங்கள் வாழ்வினிலே வேண்டுமென அன்று
மரியன்னைப் பள்ளியிலே சேர்த்துவிட்டார் அண்ணா..
ஆற்றலையும் அழகினையும் ஒருங்கிணைத்த மஹலும்2
அப்பள்ளி அருகினிலே அமைந்திருந்த தன்றோ..
*
எத்திசையில் இருந்து நோக்கின் மக்கள்வெள்ளம்
சித்திரைத் திருவிழாவில் பொங்கி மோதும்..
பத்திரமாய் நிற்கின்ற ஆல்பர்ட் விக்டர்3
பாலத்தில் பேருந்தும் அணியாய் நிற்கும்..
**
தங்கக் குதிரை வாகனத்தில் தரமாய் அழகர் பெருமாளும்
சிங்கம் போலே இறங்கிடுவார் சிறப்பாய்த் தரிசனம் தந்திடுவார்
பங்கம் ஏதும் விளைக்காமல் பாங்காய் மக்கள் கூட்டமதும்
தங்கத் தோற்றம் பரவசமாய் தங்கள் மனதில் நிறுத்திவிடும்.
**
நறுமணத்தை வீசுகின்ற மல்லிகையும்
நன்றாக மதுரையதன் புகழ்பரப்பும்
அறுசுவையாம் உணவுகளும் எங்களூரில்
அழகாக உமிழ்நீரைப் பெருக்கிவிடும்..
**
3aசுறுசுறுப்பாய் இரவினிலே போடப்படும்
சூடான, மனங்கொத்தும் பரோட்டாவும்
விறுவிறுப்பாய்த் தாளலயம் கொண்டுவந்து
வீதியதன் அமைதியையும் கலைத்துவிடும்..
**
ஆவி பறக்கும் நள்ளிரவில் ஆவிபறக்கும் இட்டலிகள்
தாவிமனமும் செல்கிறதே தாக்கம் நெஞ்சில் இனிக்கிறதே..
நாவில் இட்டால் வழுக்கித்தான் நயமாய் ஓடும் அல்வாவும்
காவி அணிந்த முனிவரையும் கருத்தை மயக்கிக் கிறங்கவைக்கும்..
**
கோபியெனும் அய்யங்கார் ஹோட்டல் சட்னி
கூப்பிட்டு வரவழைக்கும் கண்ணில் நீரை..
3baகாபியென்றால் நாகரீக உணவக முண்டு..
3c கரும்பதன் சாற்றுக்கும் நல்ல கடையுமுண்டு...
**
பலபுலவர் பலஇசைஞர் உருவான மதுரை
பார்த்ததிலே நானறிந்த பொன்னுச்சாமி4, சோமு..
கலகலப்பாய்க் கேட்டிடுமே முன்னவரின் நாதம்
காதுகளில் ரீங்கரிக்கும் மற்றவரின் கீதம்..
**
உற்றார் உறவினர் கூட நன்றாய்
சுற்றுலா செல்லுமிடம் அழகர் கோவில்
வற்றாத அருவியாய்க் கொட்டி நிற்கும்
நூபுர கங்கையுண்டு சோலை5 மேலே..
*
குடையைப் பிடித்த கரத்துடனே6 குமரி பூரணி விழுந்திருந்த
குன்றம் இங்கே அருகில்தான் குமரன் அருள்வான் அங்கேதான்..
தடைகள் வாழ்வில் வந்தாலே தகர்த்தே எறியும் மாகாளி
6aமடப்புரம் தன்னில் இருக்கின்றாள் மாறா அருளும் செய்கின்றாள்..
**
இன்னும் இன்னும் எங்கள்ஊர் எழிலைச் சொல்லி மாளாது
இன்னும் அரங்கில் பெருங்கவிஞர் இனிதாய்ச் சொல்ல இருப்பதனால்
வண்ண நினைவில் சற்றேதான் வாழ்ந்து பார்த்த அடியேனும்
சின்னக் கவிதை ஒன்றினையே சொல்லி இங்கே முடிக்கின்றேன்..
**
வானுறையும் தேவமயன் வையகத்தில் கட்டியதாம்
நான்மாடக் கூடல் நகர்..7
************************************************** **********
1. சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பாரதியார் சிலகாலம் ஆசிரியப்பணி ஆற்றினார். அங்கே
படித்தது 6.7ம் வகுப்பு.
2. திருமலை நாயக்கர் மஹால்.. அதன் அருகில் இருந்தது தூயமரியன்னைப் பள்ளி..
3.ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்..பல வெள்ளங்கள் பார்த்தும் பலவருடங்கள் (200 என நினைக்கிறேன்)
ஆகியும் அசையாமல் கம்பீரமாய் நிற்கின்றது..
3a:மதுரையில் இரவு நேர சாலையோர அசைவ உணவகங்கள் அதிகம்.. அதுவும்இரவு சுமார் பதினொரு
மணி வாக்கில் அங்கு போடப் படும் கொத்துப் பரோட்டாக்களின் சப்தம் 'டக டக டக டக்' ஒருவித
இசைத்தன்மை கலந்து இருக்கும்..
3b:நாகரீக உணவகம் - மாடர்ன் ரெஸ்டாரண்ட் - டவுன்ஹால் ரோட்டில் உள்ளது 3c: தலைமைத் தபால்
நிலையத்தின் அருகில் கரும்புச் சாறு கடை ஒன்று உண்டு.. பள்ளி கல்லூரி நாட்களில் பலதடவை அதை
ருசித்து மகிழ்ந்திருக்கிறேன்..
4. கல்லூரி நாட்களில் நடராஜ சுந்தரம் என நண்பன் ஒருவன்.. அவன் அப்பா வாசிக்கும் நாதஸ்வரத்தைப்
போலவே வெடவெடவென ஒல்லியாக இருப்பான்..அவனது தந்தை எம்.பி.என்.பொன்னுச்சாமி..நடிகர்
திலகம் தில்லானா மோகனாம்பாள் படத்தில் வாயசைப்பதற்காக- பொன்னுச்சாமியையும் சேதுராமனையும்
வாசிக்கச் சொல்லி- முடித்ததும் அதேபோல் செய்து காட்டினாராம்..அப்படியே தி.படத்திலும் இடம்
பெற்றிருக்கிறது..ந.சு. கல்லூரி முடித்ததும்உடனே அவனுக்குத் திருமணமும் செய்துவிட்டார்கள்..அந்தத்
திருமணத்தில் வாசித்தவர் யார் தெரியுமா.. நாமகிரிப் பேட்டை கிருஷ்ணன்.
4a மதுரை சோமு நல்ல பாடகர்..கணீர்க் குரலுக்குச் சொந்தக் காரர்.. ஆடிவீதியில் இவரது
கச்சேரி கேட்டதாக நினைவு.
5.பழமுதிர்ச் சோலை..முன்பெல்லாம் அழகர் கோவில் மலை மீது ஏறிச்செல்வதே இனிய
அனுபவம்..அந்தக் காடுகள் இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை..
6. நா.பாவின் குறிஞ்சி மலரில் அவரது கதாநாயகி பூரணி திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு
தெருவில் மயங்கி விழுவாள்.. ஒரு அழகிய கவிதை வரும்.."குடையைப் பிடித்த கரம்-மனக்
கொதிப்பைச் சுமந்த முகம்; பெரும்பசியில் தளர்ந்த நடை..' என..முழுதும் நினைவில்லை..
6a: மடப்புரம் காளியம்மன் மிகவும் சக்திவாய்ந்தவள்..எதிரிகள் அழியவேண்டும் என்று காசு வெட்டிப்
போடுபவர்கள் இன்றும் உண்டு..ஒரு தடவை சென்றிருக்கிறேன். ஒரு ஒன்றரை மணி நேரப் பேருந்துப் பயணம்
என நினைவு..
7.பரிபாடலில் வரும் ஒரு வெண்பாவின் ஈற்றடி மட்டும் நிமிண்டினேன்..பரிபாடலில் இன்னொரு பாட்டும்
நினைவில் நிற்கிறது..
**
'ஈந்தாரைக் கொண்டாடி ஏற்போரைப் பார்த்துவக்கும்
சேய்மாடக் கூடலும் செவ்வேள் பரங்குன்றும்
வாழ்வாரே வாழ்வா ரெனப்படுவார் மற்றையார்
போவாரார் புத்தே ளுலகு'
**
7a. மதுரை மேலமாசி வீதியில் இருக்கும் பிள்ளையாரின் பெயர் ஸ்ரீ நேரு ஆலால சுந்தர விநாயகர்.
(நேருவிற்கு அவருக்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்கு இன்னும் தெரியாத புதிர்). அங்கு தான் வைகுண்ட
ஏகாதசி அன்று பட்டி மன்றங்கள், வழக்காடு மன்றங்கள் நடக்கும்.
8. முன்பின் கவியரங்கில் கலந்துகொண்டதில்லையாதலின் முதலில் நீளமாகச் சில
எழுதியிருந்தேன்.பின் மாற்றி எழுதியது தான் மேற்கண்டது..சுவைக் குறைவின் மன்னிக்க..
***********
அன்புடன்
சி.க.
**
நம் நண்பர்களுக்கும் தான்.. நாஸ்டால்ஜியாவில் படுத்தி விட்டேனென்றால் பொறுக்க வேண்டுகிறேன் :)
மதுரை வீரன் தானே அவனை உசுப்பி விட்டேன் நானே (உங்களைச் சொல்லலீங்க்ணா பாட்டு..) :)
மதுரை அரசாளும் மீனாட்சி.. மா நகர்க் காஞ்சியிலே காமாட்சி..
ஆடல் காணீரோ திருவிளையாடல் காணீரோ பாடல் மதுரையில் ராஜ செளந்திர
பாண்டியராம் எங்கள் ஆண்டவன் திருவிளையாடல் காணீரோ.. (உடுமலை நாராயண கவியாக்கும்)
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த கலை அன்னமே ந்னு நெய்வேலி ஓடி வருமாக்கும்..
சிங்கார மதுரையின் வெள்ளையம்மா கதை தினம் தினம் நடக்குதடி..
சின்னக்கண்ணன் சார்,
'கொஞ்சம் உசுப்பி விட்டால் போதுமே, சாமியாடி விடுவாரே' என்று ஒரு சொல்வழக்கு உண்டு. நெய்வேலியாரை போல நீங்களும் அந்த ரகம் போலும். சும்மா அதிர வச்சுட்டீங்களே. கவிதை சூப்பரோ சூப்பர். அதுவும் அத்துனூண்டு வயதிலேயே.
Hats Off.
//அதுவும் அத்துனூண்டு வயதிலேயே. // :) நன்றி ஆதிராம் சார்..கடைசியில வச்சீங்க பாருங்க பன்ச்.. கல் நாயக்கோட சாயல் தெரிகிறது..அவரும் இப்படித்தான்..ரொம்ப நாளாக் காணோம்..
கலகலக்குது காத்து சலசலக்குது கீத்து
பளபளக்குது சோலையெல்லாம் பருவப் பெண்ணைப் பாத்து
ஆஹாஹாஹா ஓஹோஹோஹோ ம்ஹ்ம்ம்ஹ்ம்
இந்தப் பாட்டு காலைலருந்து முணுமுணுத்துக்கிட்டிருக்கேன்..
ஆமா வளர்பிறை படமாம்..வீடியோ கிடைக்கலை..
சிக்கா... வளர்பிறை பட வீடியோ யார்கிட்டேயோ சிக்கிகிட்டு இருப்பதாக் ராகவ்ஜி சொன்ன நினைவு. அதிலும் ஒரு பாட்டு இல்லையாம். பூஜ்ஜியத்துக்குள்ளே, கூண்டு திறந்ததம்மா, கலகலக்குது காத்து, மௌனம் மௌனம் மௌனத்தினாலே, பச்சைக்கொடியில், கன்னங்கருத்த மச்சான்... இப்படி பல பாடல்கள். எல்லாமே நல்லா இருக்கும். ( ஹிஹி.. நாமெல்லாம் பழமை ரசிகர்களாச்சே )
வைகையின் வெள்ளம் போல கவிதை பொங்கி வழியுதே.. பலே பலே !
பிறந்து வளரவில்லை என்றாலும் "மது"ரை எனக்கும் பிடிச்ச ஊராச்சே.. பொற்றாமரைக் குளக்கரை விபூதிப் பிள்ள்ளையாரைக் கேட்டால் சனிக்கிழமை சாயந்திரம் 5 மணிக்கு அவர் பக்கத்தில் வந்து படிக்கட்டில் உட்காரும் அந்த அழகான (?) ஓகே..ஓகே.. சுமாரான இளைஞனைப் பற்றி சொல்லுவார். ( இந்த வம்பு போதுமா ? )
ஹப்புறம்.. அங்க யாரப் பார்த்தீஙக்ளாம்.. நான்பொற்றாமரைக் குளத்திலெல்லாம் அமர்ந்ததில்லை..ஆடி வீதி தான்..ரொம்ப ச் சின்னப் பையனா இருந்தப்ப ராஜம் சந்தானம், லஷ்மி நரசிம்மன் (முக்கூரில்லை) போன்றவர்களின் கதாகாலட்சேபத்திற்காக அம்மாவுடன் சென்றிருக்கிறேன்..(உப்புக்கடலை நன்னா இருக்கும்..) அம்ம்புட்டு தான்.. ஆயிரங்கால் மண்டபம் நான் பார்த்ததில்லை தெரியுமா..
ஆதிராம் சார், சிக்கா... மதுரை மணத்தை மனதில் நிறைத்து விட்டீங்க
பல்லவியில் மதுரையுடன் இன்னும் பல பாடல்கள் உண்டு
மதுரைக்கு சென்றால் மேகங்களே - தாலியா சலங்கையா
மயங்குகிறாள் இந்த் மதுரை மீனாட்சி - பிராயச்சித்தம்
மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு - முகூர்த்த நாள்
மதுரை மீனாட்சி மணிக்கரத்தில் - செல்லக்கிளி
என் ஊரு மதுரை பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும் - வாசலிலே ஒரு வெண்ணிலா
மதுரை பக்கம் என் மச்சான் ஊரு மச்சானும்தான் கை வச்சான் பாரு - படம் பேரு மறந்து போச்சு
மதுரை பக்கம் என் சொந்த ஊரு - தர்ம தேவன்
தென் மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள் - அன்புக்கோர் அண்ணன்
இன்னும் நடுவுல மதுரை வர பாட்டுகள் நெறைய இருக்குங்க..
அதாவது..
மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே - உதய கீதம்
நாடு கடந்து மதுரைக்கு வாராக...தென் மதுரைக்கு வாராக.. - காவியத் தலைவன்
மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன் - அமர்க்களம்
காணும்போது இனிக்கும் மதுரை கதம்பம் போல மணக்கும் - ஆட்டுக்கார அலமேலு
வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோ - திருவிளையாடல்
ஏ..மதுரை ராஜ்ஜியம் என்னது.. உனக்கொரு பாதியை - முள்ளும் மலரும்
மதுரையிலே வாங்கி வச்ச மருக்கொழுந்து வாடும் முன்னே - மனிதரில் மாணிக்கம்
சிக்கா... அது ஒரு பெர்ர்ரிய கதை. பி.வி.ஆர் எழுதிய மதுர நாயகி கதை படிச்சிருக்கீங்களா ? அருமையாக இருக்கும்.