http://i65.tinypic.com/2n1u92p.jpg
Printable View
Our Makkalthilagam devotees will be register several matters about our Emperor... Kindly participate continue mode...
BLAST FROM THE PAST
Oru Thai Makkal (1971) TAMIL.
M.G. Ramachandran, Jayalalithaa, R. Muthuraman, S.A. Ashokan, M.N. Nambiar, V.K. Ramasami, Cho Ramaswamy, Pandari Bai, Udaya Chandrika, Lakshmi Prabha, Tiruchi Selandhar Rajan
Oru Thaai Makkal was based on the 1960s superhit Hindi movie Ayee Milan Ki Bela, starring Rajendra Kumar, Dharmendra, Saira Banu, and Shashikala that was directed by Mohan Kumar. The film is set in the house of Rajan, a rich man. Rajan’s maid (Pandari Bai) gives birth to male twins. At the same time, Rajan’s wife delivers a stillborn baby, and is told she cannot conceive thereafter. Rajan then decides to take one baby born to the maid, and begs Pandari Bai to keep it as a secret from his wife.
His wife raises the child as her own. Years later, the maid’s son (MGR) grows up and works on a farm, while the other son, (Muthuraman), growing up as Rajan’s son, goes abroad and returns to India highly qualified. The manager of the farm (Ashokan) has a daughter (Jayalalithaa), who is drawn to MGR, but because of the difference in their status he keeps himself away, even though he falls in love with her. The parents propose to marry Jayalalithaa to Muthuraman, who has already fallen in love with her. But Jayalalithaa is not interested in him. Further complications arise at the farm. The manager (M.N. Nambiar), the villain, cheats the farm owner by stealthily selling away agriculture produce from the farm. When he is caught red-handed, he puts the blame on MGR. Muthuraman, in the meantime, kidnaps Jayalalithaa in order to force her into marrying him. MGR then rushes in to save her from the clutches of Muthuraman. The brothers separated at birth are unaware of their relationship.
All the complications are solved and the couple unites in the end.
Oru Thaai Makkal was produced by Nanjil Productions and T.A. Durai Raj, and directed by Pa. Neelakantan, who made as many as 17 films with MGR, with most becoming hits.
The Tamil version was written by Sornam, a close associate of MGR and Neelakantan, and music was composed by M.S. Viswanathan, with lyrics by Vaali and Kavignar Kannadasan.
Cinematography was by V. Ramamurthi and editing was by R. Devarajan.
This movie, including the lead cast of the main roles, had many similarities with another MGR-Jayalalithaa movie, Kannan En Kadhalan, which came out a few years earlier.
Remembered for: Fine performances of MGR and Jayalalithaa as the lovers, and the polished performance of Muthuraman.
courtesy - the hindu
ரொம்ப நாள் கழிச்சு அடுத்துஅடுத்து தியேட்டரில் இரண்டு சினிமா பார்த்தேன்.
சாயங்காலம் வீட்டுக்கு வந்தா, யாரும் இல்ல. சரின்னு டிவியா போட்டா, கேடிவில வாத்தியார் நடிச்ச குடியிருந்த கோயில். எம்ஜிஆர் பட்டைய கிளப்பின படம். அதிலும் "என்னை தெரியுமா" பாட்டும், "என் வாளும் உன் விழியும்" பாட்டும் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்கள். கிளைமாக்ஸ் ல அண்ணன் எம்ஜிஆர் சண்டை போட்டுகிட்டே தம்பி எம்ஜிஆர் பார்த்து "இது எப்படி"ன்னு கேட்பாரு. செம ஸ்டைலான சீன் அது. சண்டை காட்சில வாத்தியார் மாதிரி leg lock போடுறதுக்கு யாராலும் முடியாது. செமைய என்ஜாய் பண்ணினேன்.
courtesy - net
15.3.1968
மக்கள் திலகத்தின் ''குடியிருந்த கோயில்'' இன்று 48 ஆண்டுகள் நிறைவு தினம் .
மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை - 1965 பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் 1968ல் வெளிவந்த ''குடியிருந்த கோயில்''மிகப்பெரிய வெற்றி .
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் , இனிய பாடல்கள் , சண்டை காட்சிகள் என்று பல புதுமைகள் நிறைந்த வண்ண படைப்பு .
superb claimax
https://youtu.be/PxCjo3TpS6Y
சத்யா ஸ்டுடியோ வாங்கும் முன் அதில் இருந்த பழைய ஸ்டுடியோவில் ஒரு சிறு காட்சியில் நடிக்க எம் ஜி ஆர் சென்று அரங்குக்கு வெளியே தன் சகாக்களுடன் அமர்ந்திருந்தார் தண்ணீர் தாகம் ஏற்ப்பட குளிர் பானத்தோடு சென்ற ஊழியரிடம் தண்ணீர் கேட்க இது உங்களுக்கு கிடையாது எனகூறிச்சென்றார்
அதே ஸ்டுடியோ வை எம் ஜி ஆர் வாங்கி போதும் அந்த ஊழியரையே பணியில் அமர்த்தி சிறப்பித்தார் எம் ஜி ஆர்
படித்ததில் கவர்ந்தது
http://i1170.photobucket.com/albums/...psapyjabqd.jpg
courtesy sailesh his facebook
எம்ஜிஆர் அவர் வகுத்த பாதை தான் இன்றும் அரசியலில் பின்பற்றப்படுகிறது
வட்டம் மாவட்டம் என்று பிரித்து அதற்கு பொறுப்பா ஆட்கள் அமைப்பது செயல் வீரர் கூட்டம் நடத்தி கட்சியை வளர்ப்பது
கரை வேஷ்டீ துண்டு போடுவது
கைவிரலில் சின்னத்தை அடையாளம் காட்டியது கொடி தோரணம் அமைப்பது
மேடை ஏறியதும் மக்களை பார்த்து உற்சாகம் பிறக்க கையை அசைப்பது
எங்க ஊருக்கு நீங்கள் வரவில்லை என்றால் ஓட்டு போட மாட்டோம் என்ற மக்களின் அன்பு கட்டளையால் பிறந்தது தான் திறந்த ஜீப்பில் ஊரு ஊருக்கு பிரச்சாரம் செய்வது பேச நேரம் இல்லை தடை என்றாலும் இரட்டை விரலை மட்டும் காட்டி ஓட்டுகளை அள்ளியது பின்பு ஆள் உயர மாலை என மாறியது பிறகு மாலையில் வெடி வைத்து கொல்ல பார்த்ததில் பிறந்தது தான் சால்வே போத்து வது தங்க வாள் பரிசு என என்னற்ற கலைகளை அரசியலுக்கு மட்டும் அல்ல சினிமா துறைக்கும் வழி வகுத்து சென்ற அரிய வித்தகர்
அவர் செய்யாதது ஓட்டுக்கு துட்டு இலவசம்
courtesy net
http://i1170.photobucket.com/albums/...ps1fc88aa9.jpg
evergreen clasical movie rerleased in woodlands 2012
http://i1170.photobucket.com/albums/...psznqwejll.jpg
courtesy sathya vp
தமிழக தேர்தல் களத்தில்
புரட்சித்தலைவரின் இயக்கம்
1972ல் விதையாகி ...
1973ல் இலையுடன் செடியாக மலர்ந்து
1974ல் காய்கள் பூத்து கனியாகி
1977ல் நிழல் தரும் ஆலமரமாக தழைத்தோங்கி ..
44 ஆண்டுகளாக உறுதியாக தலை நிமிர்ந்து நிற்கும் ஆலமரம் .
மக்கள் திலகமே
வாழும் இறைவனே
உன் முகராசி
வெற்றி - உன் திரு மந்திரமே
இம் முறையும் வென்றிடுமே
எம்ஜியார் பிரியன் - net
தமிழகத்தில் 1967ம் ஆண்டு தேர்தலில்தான் கார் மற்றும் பிரச்சார வேன்களை அதிகமாக பயன்படுத்தும் வழக்கம் தொடங்கியது. திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்வது எம்ஜிஆர் பாணி. அப்போதெல்லாம், ஒரே நாளில் தேர்தல் நடத்துவது இல்லை. 1952ம் ஆண்டு முதலாவது பொதுத் தேர்தல் ஜனவரி மாதத்தில் 9 நாட்கள் (9 கட்டமாக) நடந்தது. பின், அது படிப்படியாக குறைந்து 1967 தேர்தல் மூன்று கட்டமாக பிப்ரவரியில் நடந்தது.
இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியது போக 174 தொகுதிகளில் திமுக நின்றது. தேர்தலுக்கு சரியாக ஒரு மாதம் முன்பு ஜனவரி 12ம் தேதி எம்ஆர் ராதாவால் எம்ஜிஆர் சுடப்பட்டார். தேர்தலில் இந்த விவகாரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல்வேறு பிரச்சினைகளுடன் எம்ஜிஆர் சுடப்பட்டதால் எழுந்த அனுதாப அலையும் சேர்ந்து காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் சுருட்டி எறிந்தது.
தேர்தல் முடிவில், 179 தொகுதிகள், திமுக கூட்டணி வசமானது. திமுக மட்டும் தனியாக 137 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸுக்கு 51 இடங்கள் மட்டுமே கிடைத்தன. அப்போது, இந்தியா முழுவதும் 9 மாநிலங்களில் ஆட்சியை எதிர்க்கட்சிகளிடம் காங்கிரஸ் பறிகொடுத்தது. அதில், தமிழகத்தில் மட்டும் தான் அறுதி பெரும்பான்மையுடன் எதிர்க்கட்சி ஆட்சி அமைந்தது. முன்னதாக, 1957ல் முதன் முதலில் கேரளாவில் காங்கிரஸ் அல்லாத கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது. 1967 தோல்விக்கு பிறகு, தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்பது இன்னமும் கனவாகவே நீடிக்கிறது.
விருதுநகர் தொகுதியில் 1200 வாக்குகளில் காமராஜரும், தமிழக முதல்வராக இருந்த பக்தவத்சலம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் தோல்வியடைந்தனர். பக்தவத்சலம் அமைச்சரவையில் பூவராகவனை தவிர அனைத்து அமைச்சர்களுமே தோல்வியை தழுவினர். மருத்துவமனையில் படுத்துக்கொண்டே சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் தொகுதியில் எம்ஜிஆர் வெற்றி பெற்றார்.
அதே நேரத்தில், தென்சென்னை தொகுதியில் இருந்து எம்பியாக அண்ணா வெற்றி பெற்றிருந்தார். தனிப் பெரும்பான்மையுடன் திமுக வென்றதை தொடர்ந்து, எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அண்ணா. பிறகு, தமிழக சட்ட மேலவை உறுப்பினராகி (எம்எல்சி) 1967ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி அன்று தமிழக முதல்வராக பதவியேற்றார். தமிழகத்தில் திராவிட கட்சிகளின் அசைக்க முடியாத ஆதிக்கம் ஆரம்பமானது.
அண்ணா தலைமையிலான தமிழகத்தின் காங்கிரஸ் அல்லாத முதல் அமைச்சரவையில் நெடுஞ்செழியன், கருணாநிதி, மதியழகன் உட்பட 9 பேர் அமைச்சராகினர். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இருந்து தேர்வான நாம் தமிழர் கட்சி தலைவர் சி.பா. ஆதித்தனார், சபாநாயகரானார்.
courtesy - diliban sindhanai
‘காவியத்தாயின் இளைய மகனும்... காதல் பெண்களின் பெருந்தலைவனுமான’ கண்ணதாசனும் சிலப்பதிகார காவியத்தின் மீது அளப்பரிய பற்று கொண்டிருந்தார். கவியரசராக மட்டுமே அவரை நோக்கும் பலரும் பல்வேறு தமிழ் திரைப்படங்களுக்கு அவர் கதை, வசனம் எழுதியதை அறிந்திருக்க முடியாது.
எம்ஜிஆர் நடிப்பில் உருவான மதுரை வீரன், மன்னாதி மன்னன், நாடோடி மன்னன் ஆகிய படங்களுக்கும் அவரே , வசனகர்த்தா. அதில், மன்னாதி மன்னன் என்ற திரைப்படமானது சேர, சோழ மன்னர்களைப் பற்றிய கற்பனை கலந்த கதை. அந்த படத்தை பார்த்தால் சிலப்பதிகார காட்சிகள் ஒத்துப் போவதை அறியலாம்.
வஞ்சி அரண்மனையின் ஆடல் பெண்ணான (நர்த்தகி) பத்மினி மீது இளவரசரான எம்ஜிஆர் மையல் கொண்டு மோதிரம் அணிவித்து கந்தர்வ முறையில் ஏற்றுக் கொள்வது, சோழ மண்டலமான உறையூரில் காவிரி கரையில் நடைபெறும் இந்திர விழா, சோழ அரச குல பெண்ணை எம்ஜிஆர் மணம் புரிந்ததும் புத்த நெறியை பத்மினி தழுவுவது என ‘மன்னாதி மன்னன்’ திரைப்பட கதையின் பெரும்பகுதியும் சிலப்பதிகாரத்தை நினைவூட்டியபடியே செல்லும்.
மன்னர் காலத்து கதையை கற்பனை கலந்து எழுதியிருந்தாலும் கூட சிலப்பதிகாரம் மீது கண்ணதாசன் கொண்டிருந்த காதலால் சிலப்பதிகார காட்சிகள் வருவதை அவரால் தவிர்க்க முடியவில்லை. படத்தின் பாடல்களும் கூட சிலப்பதிகாரத்தின் பிரதிநிதியாகவே அமைந்துள்ளன.
இது ஒருபுறம் இருக்க, தென் தமிழகத்தின் மிகப் பழமையான கர்ண பரம்பரை கதைகளில் ஒன்றான ‘மதுரை வீரன்’ கதையை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் உருவான ‘மதுரை வீரன்’ படத்துக்கும் திரைக்கதை, வசனம் கண்ணதாசன் தான். அந்த திரைப்படத்திலும் சிலப்பதிகார காட்சிகளை அவரால் தவிர்க்க முடியவில்லை.
கதையின் இறுதி காட்சியில் மதுரை வீரன் (எம்ஜிஆர்) மீது கள்வர்களுடன் கூட்டு சேர்ந்ததாக குற்றம் சாட்டி திருமலை மன்னன் அரசவையில் நடைபெறும் விசாரணை காட்சி, மன்னனிடம் நீதி கேட்டு வெள்ளையம்மாள் (பத்மினி), பொம்மி (பானுமதி) இருவரும் வாதிடும் காட்சி ஆகியவற்றை பார்க்கும்போது பற்களை நறநற என கடித்தபடி கண்ணகி வாதிடும் கோபாவேச காட்சிக்கு இணையாகவே இருக்கும். அரசவையில் கதறும் பொம்மி, ‘சிலப்பதிகார கண்ணகி’யை சுட்டிக் காட்டியே பேசுவார்.
இருவருடைய வாதங்களைக் கேட்டதும், ‘தவறு இழைத்து விட்டேன்’ என திருமலை மன்னன் மனம் திருந்தி தண்டனையை நிறுத்த புறப்பட்டுச் செல்வார். ஆனால், அதற்குள் தண்டனை நிறைவேற்றப்பட்டு விடும். சிலப்பதிகாரம் போலவே துன்பியலில் முடியும் இந்த கதையையும் கடைசி நேரத்தில் இன்பியலாக மாற்றி விடுகிறார், கண்ணதாசன். எப்படி..?
மாறு கால், மாறு கை வாங்கப்பட்டு வீழ்ந்து கிடக்கும் வீரனுடன் சேர்ந்து அவனது இரண்டு மனைவிகளும் உயிர் துறக்கின்றனர். விடுகின்றனர். அதன் பிறகு, விண்ணில் இருந்து பூமாரி பொழிந்து மூவருமே தெய்வமாகி விடுகின்றனர்.
இப்படி, கவியரசு கண்ணதாசனை கவர்ந்த சிலப்பதிகார காப்பியமானது தமிழின் மிக உன்னத காப்பியம் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. முற்கால தமிழ் பேரரசுகளான சோழ, பாண்டிய மண்டலங்களை கதைக்களமாக கொண்ட இந்த காப்பியத்தின் ஆசிரியரான இளங்கோவடிகள், சேர குலத்து இளவரசர்.
முத்தமிழும், மூன்று மண்டலங்களும் ஒரு சேர நிறைந்திருக்கும் சிலப்பதிகாரமானது, காலங்களை கடந்து தமிழர்களின் காதுகளில் சிலம்பு ஓசையாய் ஒலித்துக் கொண்டிருக்கும்.
Ravindhran - net
மனிதருள் புனிதர் என்ற பெயர் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ.... சமகால சரித்திர நாயகரான புரட்சித் தலைவர், பொன் மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிகப் பொருந்தும்... அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.
ஒரு மனிதன் கடவுளை வேண்டுவது பெரும்பாலும் இந்த இரண்டிற்காகவும்தான். அந்த வகையில் வாழ்ந்தபோதே பலருக்கும் கடவுளாகத் திகழ்ந்தவர் பொன்மனச் செம்மல்.
தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் மத்தியில் தமிழனுக்கு தனி நாடு அமையவே பாடுபட்ட புரட்சியாளர் இந்த பெருமகன்! அவரைப் பற்றி ஏதாவது சொல்லத் தொடங்கினால்... அல்லது எழுத ஆரம்பித்தால் கண்களை நீர் மறைக்கிறது. இந்த வாழ்நாளில் இன்னொரு முறை இப்படியொரு மனிதரின் அருள் பார்வை கிடைக்குமா? மக்களை மட்டுமே நினைத்த ஒரு தலைவர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தின் விளைவு அது!
'என் மனதை நானறிவேன்.. என் உறவை நான் மறவேன்... எதுவான போதிலும் ஆகட்டுமே' என நெஞ்சில் உரமும் நேர்மைத் துணிவும் கொண்டு தமிழருக்காக பாடுபட்ட தலைவர் அவர். பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000! புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை. எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.
எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது! எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது! வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்து பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை... என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!
courtesy - net
The Hindu - tamil
Excellent article about our Makkal Thiagam M.G.R
BLAST FROM THE PAST
Oru Thai Makkal (1971) TAMIL
RANDOR GUY
MGR and Jayalalitha in Oru Thai Makkal (1971)
M.G. Ramachandran, Jayalalithaa, R. Muthuraman, S.A. Ashokan, M.N. Nambiar, V.K. Ramasami, Cho Ramaswamy, Pandari Bai, Udaya Chandrika, Lakshmi Prabha, Tiruchi Selandhar Rajan
Oru Thaai Makkal was based on the 1960s superhit Hindi movie Ayee Milan Ki Bela, starring Rajendra Kumar, Dharmendra, Saira Banu, and Shashikala that was directed by Mohan Kumar. The film is set in the house of Rajan, a rich man. Rajan’s maid (Pandari Bai) gives birth to male twins. At the same time, Rajan’s wife delivers a stillborn baby, and is told she cannot conceive thereafter. Rajan then decides to take one baby born to the maid, and begs Pandari Bai to keep it as a secret from his wife.
His wife raises the child as her own. Years later, the maid’s son (MGR) grows up and works on a farm, while the other son, (Muthuraman), growing up as Rajan’s son, goes abroad and returns to India highly qualified. The manager of the farm (Ashokan) has a daughter (Jayalalithaa), who is drawn to MGR, but because of the difference in their status he keeps himself away, even though he falls in love with her. The parents propose to marry Jayalalithaa to Muthuraman, who has already fallen in love with her. But Jayalalithaa is not interested in him. Further complications arise at the farm. The manager (M.N. Nambiar), the villain, cheats the farm owner by stealthily selling away agriculture produce from the farm. When he is caught red-handed, he puts the blame on MGR. Muthuraman, in the meantime, kidnaps Jayalalithaa in order to force her into marrying him. MGR then rushes in to save her from the clutches of Muthuraman. The brothers separated at birth are unaware of their relationship.
All the complications are solved and the couple unites in the end.
Oru Thaai Makkal was produced by Nanjil Productions and T.A. Durai Raj, and directed by Pa. Neelakantan, who made as many as 17 films with MGR, with most becoming hits.
This film, however, was not a major success and ran only for 70 days, which, is a disappointment for an MGR movie.
The Tamil version was written by Sornam, a close associate of MGR and Neelakantan, and music was composed by M.S. Viswanathan, with lyrics by Vaali and Kavignar Kannadasan.
The songs, however, did not become hits as expected. Cinematography was by V. Ramamurthi and editing was by R. Devarajan.
This movie, including the lead cast of the main roles, had many similarities with another MGR-Jayalalithaa movie, Kannan En Kadhalan, which came out a few years earlier.
Remembered for: Fine performances of MGR and Jayalalithaa as the lovers, and the polished performance of Muthuraman.
COURTESY - THE HINDU
BLAST FROM THE PAST
Oli Vilakku (1968)
RANDOR GUY
M.G. Ramachandran, Jayalalithaa, Sowcar Janaki, S.A. Asokan, Cho Ramaswami, R.S. Manohar, ‘Thengai’ Srinivasan, ‘Kallapart’ Natarajan, S. Rama Rao, V.S. Raghavan, Sundari Bai, Justin, CID Sakunthala
Oli Vilakku is a remake of one of the biggest hits of Hindi cinema, Phool Aur Patthar, a box-office hit that catapulted Dharmendra to superstardom. The story is about Muthu (MGR), a vagrant with a good heart, who falls prey to a blackmailer, Jambhu (S. A. Asokan), a gangster who hides behind his facade as the director of a cabaret group.
Another beautiful dancer, Geetha (Jayalalithaa) is also a victim of the blackmailer, and in order to save her, Muthu steals from Jambhu.
Then Muthu meets Shanthi (Sowcar Janaki), a young widow, who is bullied and left behind in a large house by the obnoxious family of her husband.
Sowcar Janaki, who plays the role of the young widow, steals the show. In the film, she sacrifices her life to help the lovers (MGR and Jayalalithaa) unite.
Jayalalithaa plays a glamorous role, and pulls it off with élan, showcasing her superb talent in dancing and acting. She excelled as a dancer in love with the hero Muthu (MGR).
The song and dance sequences became a hit due to this hit pair, contributing to the success of the movie.
Dialogues were written by Sornam, cinematography was by U. Rajagopal and the film was edited by M. Umanath.
One of the biggest hits of 1968, Oli Vilakku, ran for a long period not only in Tamil Nadu, but also in Sri Lanka. Interestingly in Chennai, the film ran for 14 weeks (98 days, missing the coveted 100-day run by a mere two days.
Oli Vilakku was produced by Gemini Studios and the Indian movie mogul S.S. Vasan, though his name does not appear in the film credit titles.
The film was directed by Thapi Chanakya, a successful filmmaker, who has made hit movies in Telugu and Tamil. He had directed Enga Veettu Pillai earlier with MGR.
There are seven songs in the film, with most of them becoming big hits. This includes ‘Nanga pudhusa kattikitta jodi thanungo…’ (voices: T. M. Soundararajan and P. Susheela; lyrics: Vaali), ‘Dhairiyamaaga sol nee manithan thanaa…’ (T. M. Soundararajan; lyrics: Vaali) and an unusual composition by the movie music maestro M.S. Viswanathan with no lyrics, known as ‘Whistlings, sips and drunkenness’, a dance song with CID Sakunthala being the main dancer.
Remembered for: The melodious music by MSV and the dance sequences of Jayalalithaa and MGR
COURTESY - THE HINDU
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா துவக்க நேரத்தில் அவருடைய 100 வது படமான''ஒளிவிளக்கு '' படத்தின் விமர்சனத்தை [ இந்து-ஆங்கில நாளிதழ் ] பதிவிட்ட இனிய நண்பர் திரு ரவிகிரண் அவர்களுக்கு நன்றி ,.
திரை உலகில் 1936ல் சிறிய வேடங்களில் நடித்தாலும் , 1947ல் வெற்றி கதாநாயகனாக வலம் வந்து 1968ல் 100 வது படமாக ஒளிவிளக்கு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது . மதுரை மீனாக்ஷியில் அதிக நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது . இலங்கையில் மறு வெளியீட்டில் 100 நாட்கள் ஓடிய பெருமை ஒளிவிளக்கு படத்திற்கு கிடைத்தது .
https://youtu.be/188kAngDagM
தென்னகத்தில் ஒளிவிளக்கு மறு வெளியீடுகளில் கடந்த 48 ஆண்டுகளாக பல முறை பல திரை அரங்குகளில் ஓடியது .ஒரு நடிகரின் 100 வது படம் - சாதனைகள் மேல் சாதனைகள் புரிந்தது என்றால் அது மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கே . நூற்றாண்டு விழா நேரத்தில் நூறாவது படத்தின் சிறப்புகளை பதிவிட ஒளிவிளக்கின் விமர்சன பதிவு மூலம் பதிவிட தூண்டிய இனிய நண்பர் திரு ரவி கிரணுக்கு மீண்டும் நன்றி .
என் வாழ்க்கையின்
முதல் வெளிச்சத்தை...
http://i67.tinypic.com/2rx9w6h.png
1969 இல்...
'ராஜா' தியேட்டர் இருட்டில் கண்டு பிடித்தேன்!'
'ஒளி விளக்கு'...
நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படம் !
ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தடுமாற்றம்
என்று இருந்த என்னை...
நம்பிக்கை என்னும் தடம் மாற்றி...
வாழ்க்கையின் முதல் பிடிப்பைத் தந்தவர்...
நீங்கள் தான்!
நாத்திகராக உங்களை நீங்கள்
அடையாளங் காட்டினாலும்...
உண்மையான ஆன்மீகம் எது ?என்பதை
எனக்குக் கற்றுத் தந்தது...
உங்கள் வாழ்க்கை தான்!
ஒரு தெய்வத்தால் மட்டுமே
தரக் கூடிய ஆறுதலை...
உங்கள்...
'என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே'
எனக்குத் தந்திருக்கிறது.
ஒரு குருவினால் மட்டுமே
வரக் கூடிய ஞானத்தைஉங்கள்...
'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்'
பாடல்எனக்கு அருளியிருக்கின்றது.
ஒரு தாயிடமிருந்து வரக் கூடிய
கனிவையும் அரவணைப்பையும்
'செல்லக் கிளியே மெல்லப் பேசு'
எனக்கு அள்ளித் தந்தது.
ஒரு தந்தையிடமிருந்து பெறக்...
கூடிய தைரியத்தை
'வெள்ளி நிலா முற்றத்திலே'
பாடல்எனக்குச் சொல்லித் தந்தது.
'உன்னை அறிந்தால்..' பாடலைக் கேட்டதால் தான்
எனக்குள் உயர்ந்து நின்ற
சோதி மரத்தையான் உணர ஆரம்பித்தேன்.
'நாளை நமதே' பாடலைக் கேட்டதால் தான்
எனது பாலைகளையும் சோலைகளாக..
மாற்றும்'அற்புதம்' அறிந்து கொண்டேன்.
'உலகம் பிறந்தது எனக்காக'
என்று ஒலிக்க ஒலிக்க...
உரிமை கொண்டாடி ரசிக்கும்
உற்சாக குணம் என்னுள்
துள்ளி வளர்வதை
உணர்ந்து சிலிர்த்தேன்.
உங்கள் பாடல் காட்சிகளில்
இரு கையுயர்த்தி நீங்கள்
'இமய' தைரியம்தந்திராவிட்டால்...
நேற்றைய என் கனவுகள்
காவியுடை பூண்டிருக்கும்.
'எங்கே போய் விடும் காலம்?!
' என்றுநீங்கள் கரம் உயர்த்திப் பாடிய போது...
பொறுமை காத்து...ஆனால்
தலை உயர்த்திக் காத்திருந்தன
எனது திறமைகள்.
உங்கள்...கம்பு வீசும் சாகசங்களில்
பித்தனானேன்.
கத்திச் சண்டைகளில்
முத்தியடைந்தேன்!
'நல்ல நேரம்' படத்தில்சுருண்ட
முடி நெற்றியில் சுந்தரம் கூட்ட..
மஞ்சள் உடையுடன் மலையருவி
போல் துள்ளிக் குதித்துமாடிப் படியிறங்கிய
உங்கள் அழகில்.....
நான் வானம் ஏறினேன்!
கிட்டத்தட்ட் 12 ஆண்டுகளுக்குப் பிறகு
'ஒளி விளக்கு'மீண்டும் 'ராஜா'வில்..
ஏற்றி வைக்கப்பட்ட போது
எனக்கும் என் நண்பனுக்கும் [ நெல்லியடி முரளிதரன் ]
இடையே..ஒரு நூதனமான போட்டி!
'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?'
பாடல் காட்சியில் வரும்
நான்கு எம்.ஜி.ஆரில்
எந்த எம்.ஜி.ஆர் அதிக அழகு?'
இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்காகவே....
ஒளி விளக்கை மீண்டும் மீண்டும் பார்த்தோம்.
சந்தோஷமாகத் தோற்றோம்!
உங்கள் கணக்கில் வரவு வைத்திருக்க..
வேண்டிய வசந்தங்களை எல்லாம்
வறுமை...விரட்டியடித்திருக்கிறது.
உங்கள் இளமைக் காலத்தின்
எண்பது சத வீதத்தை...விதி...வீணாக்கி இருக்கிறது.
உங்கள் கனவுகளுக்குக் கூடமறுக்கப்பட்டது களம்.
கடவுள் மீதான நம்பிக்கையை நீங்கள்
கவிழ்த்துப் போடும் அளவுக்கு
உங்களைப் பந்தாடியிருக்கிறது
கடந்த காலம்.
பெரிய பெரிய திறமைகளை..
வைத்துக் கொண்டே..
சின்னச் சின்ன வாய்ப்புகளுக்கும் கூடநீங்கள்..
'பகீரதப் பிரயத்தனம்' செய்ய வேண்டியிருந்தது.
உங்கள் துவக்கப் பாதைகளில் எல்லாம்
தூவப்பட்டன அவமான முட்கள்.
உங்கள் கலைப் பயணத்தின் பாதித் தூரம்..
வரைக்கும்'சூழ்ச்சி'யெனும் தடைக் கற்கள்.
பாவம்....உங்கள் 'மன வலிமை'யை
அவை உணரத் தவறின.
தடைக் கற்கள்-
உங்கள் கால்களுக்கும்அவமானங்கள்-
உங்கள் மனதுக்கும் உலுக்க முடியாத உறுதியைத் தந்தன!
ஏளனங்கள் எல்லாம் உங்களை..
ஒரு வேழமாய் மாற்றின!
எதிர்ப்புகள் எல்லாம் உங்கள் ஏணியாய் உயர்ந்தன!
ராமச்சந்திரன் முகவரி தேடி வந்துவட்டியும்
முதலுமாகஅதிசயங்கள் நிகழ்த்த..
ஆரம்பிக்கிறாள்அதிர்ஷ்ட தேவதை!
'ஒரு போதும் தோற்காது உண்மை உழைப்பு'
என்று...உங்கள் வெற்றி வாழ்க்கை
விளக்கு ஏந்தி வந்துவிளக்கம் சொல்கிறது.
'யாம் பெற்ற துன்பம்
இரு மடங்காகயாம் காண்பவர்
எல்லாம் பெறுக...
'என்று அலையும்சேடிஸ்ட்டுகள் செறிந்த உலகில்...
'யாம் பெற்ற துன்பம் இனி யாருக்கும் வேண்டாம்'
என்றுசத்துணவு தந்தீர்கள்.
இல்லாதவரை எல்லாம் தேடிப் பிடித்து
அவர்கள் தேவைள் படித்தறிந்து
அதனிலும் மேலாகஅள்ளித் தந்தீர்கள்.
போனால் போகட்டும் என்று கொடுத்தால் கூட..
அளந்து கொடுக்கின்ற சிறிய உலகில்
கணக்குப் பார்க்காமல் வாரிக் கொடுத்தது
கண்டிக் கர்ணனின் 'பெரிய' மனம்.
உங்களைப் பழித்தவர்களாக இருந்தாலும்
அவர்கள் ஒடிந்து நின்ற காலங்களில்
ஓடிப் போய் உதவியிருக்கிறீர்கள்.
ஆரம்ப காலங்களில் உங்கள்கைக்கு
எட்டிய வாய்ப்புகளை...
வாய்க்கு எட்டாமல்தட்டி விட்டவர்கள்...
பின்பு..வாழ்ந்து கெட்டு....
உங்கள்
வீட்டுக் கதவை வந்து தட்டிய போது...
உங்கள் மனக் கதவையும் அகலமாகவே
அவர்களுக்காகதிறந்து வைத்தீர்கள்.
இறப்பு என்பது...இயற்கையின் நிஜம்.
ஆனால்...என்னைப் பொறுத்தவரையில்...
இந்த இருவர் மரணமும்
உண்மைக் கலப்பற்ற பொய்கள்!
ஒருவர்...என் தந்தை!
மற்றவர்...நீங்கள்!....
courtesy - யாழ் சுதாகர்