http://i65.tinypic.com/2di0i1i.jpg
Printable View
http://i67.tinypic.com/x25pv7.jpg
நன்றி தோழரே.
நன்றி நண்பரே. எங்கள் கூடல் மாநகரில் மக்கள் திலகத்தின் ரிக்க்ஷாக்காரன் வெளியாகும் திரையரங்குகள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்ற தகவலுக்கும் நன்றி.
http://i66.tinypic.com/impkjn.jpg
மக்கள் திலகத்தின் ஸ்டைல் தோற்றம் இதயவீணை படப்பிடிப்பில்.
http://i64.tinypic.com/2rppqgz.jpg
http://i67.tinypic.com/1fzqyu.jpg
ஜெ., உடல்நலம்; வதந்திகளை நம்ப வேண்டாம்: அப்பல்லோ மருத்துவர்கள்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அப்பல்லோ மருத்துமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 22ம் தேதி இரவு சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைப்பாட்டினால் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர் கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துமனை தினமும் ஊடகங்களுக்கு அதிகாரப்பூர் தகவல்களை அளித்து வருகிறது.
அதன்படி, இன்று வெளியிட்ட தகவலில், "முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்" என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் தொடர்பாக வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.
நன்றி - தினமலர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1615034
http://i63.tinypic.com/23twl1.jpg
எளிமை:::
எம்ஜிஆர் இருக்கிறார்(21):::
தலைவர் எப்போதும் எளிமையையே விரும்புபவர். தாேட்டத்தில் லிஃப்டே அவர் உடல்நலம் சீர்கெட்ட பிறகே பாெருத்த அனுமதித்தார்.
இரவில் பழைய சாேறு உண்பதும், தரையில் படுத்து உறங்குவதுமே அவரது விருப்பமாக இருந்தது. 1964,65களில் ஓயாதபடப்பிடிப்பின் காரணத்தால் ஒரு வாரம் மஞ்சள் காமாலை நாேயால் தாேட்டத்தில் ஓய்வெடுக்கும் நிலை ஏற்பட்டது.
தலைவரின் படங்களுக்கு 'பைனான்ஸ்' செய்யும் ஸ்ரீசந்த் என்னும் மார்வாடி பைனான்சியரும், இயக்குநர் தாதாமிராசியும் தலைவரை காண தாேட்டம் வந்தவர்கள், படுக்கை அறையில் சாதாரண கட்டிலில் வெறும் பாயை விரித்து படுத்திருந்த எம்ஜிஆரை பார்த்து அசந்து பாேயினர். ஆற்றமாட்டாதவராக ஸ்ரீசந்த் "மிஸ்டர் எம்ஜிஆர், நீங்கள் ஹம்சதூளிகா மஞ்சத்திலே உறங்க வேண்டியவர். எங்கள் மார்வாடி இனத்தில் ஏழையின் படுக்கை அறைக்கூட மெத்தை, திண்டுகளோடே இருக்கும். உடனடியாக உங்கள் படுக்கை அறையை மாற்ற வேண்டும்" என்றார்.
எம்ஜிஆர் சிரித்தவாறே "அய்யா, நான் உறங்குவதே நான்கு, ஐந்து மணி நேரம் மட்டுமே. படுத்ததும் உறங்கி விடுவேன். தூக்கம் வரவில்லை என்றால்தானே சொகுசு தேவை?" என்றார்.
அதைப்பாேலவே தலைவர் நாடாேடிமன்னன் காலத்திலிருந்து முதல்அமைச்சர் ஆகி மரணிக்கும்வரை இந்திய அம்பாசிடர் காரிலேயே பயணித்தார். 84யில் உடல்நலம் கெட்டதும் அமைச்சர்கள் வெளிநாட்டு சொகுசுகார் வாங்கிக்காெள்ள சொல்லி தலைவரை நச்சரித்தார்கள்.
அவர்களுக்கு தலைவர் சாென்னார், "அமெரிக்க தூதர் நம்மை பார்க்க வரும் போது அவர்கள் நாட்டு சாெகுசு காரில் வருவார். நமதுநாட்டு தூதர்கள் அயல்நாடுகளில், நமது நாட்டு அம்பாசிடர் காரைத்தான் பயன்படுத்துகிறார்கள். முடிந்தவரை பதவியில் இருக்கும் நாம், நமது நாட்டு பாெருட்களையே பயன்படுத்த வேண்டும்" என்று சாெல்லி இறுதி வரை அம்பாசிடரையே பயன்படுத்தினார் அந்த ஏழை பங்காளன்.
http://i68.tinypic.com/2nvfkeq.jpg
நன்றி - அரிமா எம். சந்திரசேகரன் அவர்கள் முகநூல் பக்கம்
http://i64.tinypic.com/2wnpsmp.jpg
மிகவும் சுருக்கில் நூறு தரமான பதிவுகளை போட்டுள்ள நண்பர் சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
http://i68.tinypic.com/x3ww8h.jpg
இன்று பன்முக கலைஞன் திரு. நாகேஷ் அவர்களின் பிறந்த நாள்..... நாம் அன்றாடம் சந்திக்கும் எத்தனையோ நபர்களில் மிகச் சிலரே முக்கியமானவர்களாக நம் இதயத்தில் இடம் பிடிப்பர்... அப்படி நான் சந்தித்த முக்கியமானவர்களில் மிக முக்கியமானவர் இந்த அற்புத கலைஞன்..... மிக முக்கியமானவர் - அற்புத கலைஞன். ஏன் என்கிறீர்களா......? தொடர்ந்து படியுங்கள்..... தெரியும்.......
எம்.ஜி.ஆர். அண்ணனை பத்தி சொல்லனும்ணா .... இந்த புக்கை பேசாம ஸ்பெஷல் புக்கா போட்டுடுங்களேன்..... எம்.ஜி.ஆர். - நாகேஷ் சிறப்பிதழ் னு....
கண்ணா ... அவரால தான் நான் இன்னக்கி இங்கே உக்காந்து உனக்கு பேட்டி குடுத்துட்டு இருக்கேன்....
உனக்கு தெரியுமா..... நான் அந்த மனுஷன்கிட்டே எவ்ளோ அடி வாங்கி இருக்கேன்னு..... அவ்ளோ ப்ரியம் என் மேல.... அவருக்கு.... இப்போ சத்யராஜ் எப்படி நக்கலா பேசுறாரோ.... அப்படித்தான் நான் நார்மலாவே......
தம் அடிக்காதேன்னு சொல்லுவாரு.... குடிக்காதேன்னு சொல்லுவாரு..... நான் ரெண்டையும் கேக்க மாட்டேன்.... செமத்தையா வாங்குவேன்.....
ஆயிரத்தில் ஒருவன் பட ஷூட்டிங்ல கப்பல்ல ஒரு பைட் ஸீன்... நான் லாங் ஷாட் தானேனு நினச்சு கொஞ்சமா குடிச்சுட்டேன்.... அவரோட துள்ளலை தான் உனக்கே தெரியுமே.....அப்படி இப்படின்னு ஜம்ப் பண்ணி என் பக்கத்துல வந்துட்டார்..... வாடை அடிச்சு.... ஒரு மொற மொறச்சு ஷாட் ஓகே ஆனதும் ... அதுல ஹீரோயின் இருக்குறது போல ஒரு சின்ன காபின் வரும்ல அதுல கூட்டிட்டு போய் நல்லா நாலு அர உட்டாறு..... நான் கோபத்துல போயிட்டேன்.... நான் இல்லாத ஷாட்சா நாலு நாள் ஷூட் போச்சு.....
அப்புறமா நான் போய் மன்னிப்பு கேட்டேன்......
அன்பே வா படத்துல போன் பண்ணுவாரு எம்.ஜி.ஆர். அண்ணன் சிம்லாவுக்கு வந்தவுடனே... அவர்தான் முதலாளின்னு தெரியாம நான் ரொம்ப லோக்கலா பேசணும்.....
எதார்த்தமா பேசுறேன்னு நான் டப்பிங் அப்போ .... முன்ன பின்ன போன் பேசி இருக்கியா ...? காட்டான்.... நு சொல்லிடுவேன்..... காட்சி யதார்த்தமா வரணும்னு நானா பேசின வசனம் அது..... அதை ரொம்பவே அப்ரிசிஏட் பண்ணினாரு....
படம் வந்த உடனே அந்த ஸீனுக்கு ரசிகர்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்களோனு நான் ரொம்பவே பயந்தேன்.... அவரை போலவே அவரோட ரசிகர்களும் ரொம்பவே பரந்த மனசு காரங்க.... அதை கதையோட போக்கிலேயே ஜோக்காவே எடுத்துட்டாங்க..... இன்னைக்கி நான் உடல் ரீதியா நிறைய பிரச்சனைய சந்திக்கிறேன்..... அண்ணன் சொன்னது போல இருந்திருந்தா நான் ஆரோக்கியமா இருந்து இருப்பேன்.... இப்போ கவலைப்பட்டு ஒன்னும் ஆயிடபோரதில்லை .... ஆமா உனக்கு பழக்கம் இருக்கா.....என்றார்..... தம் அடிப்பது போல கையை வைத்து கண்ணையும் அடித்தபடி......???!!!
தனது வீர பராக்கிரமங்களை மட்டுமே நிருபர்களிடம் பகிர்ந்து கொள்ளும் பிரபலங்களுக்கு மத்தியில்..... தான் அடி வாங்கியதையும் - கெட்ட பழக்கம் உள்ளதையும் அதை நினைத்து கவலையும் படும் நாகேஷ்..... ஒரு முக்கியமான அற்புத கலைஞன் தானே.....???!!!
நன்றி - மயில்ராஜ் முகநூல் பக்கம்
இன்று உலக சுற்றுலா தினம்
எல்லா உலகிலும் நின் அரசாட்சி
என்றைக்கும் உனக்கே என் தலை தாழ்ச்சி
http://i68.tinypic.com/15o8obm.jpg
நன்றி - சைலேஸ் பாசு அவர்கள் முகநூல் பக்கம்
http://i66.tinypic.com/b5jpg0.jpg
புரட்சித்தலைவரின் "ரிக்க்ஷாக்காரன்" இந்த வெள்ளி வெள்ளித்திரைக்கு டிஜிட்டல் தொழிநுட்பத்தில் வருகிறது. இந்த படத்தில் நடித்ததற்கு தான் புரட்சித்தலைவர் அவர்களுக்கு பாரத் [ உண்மையில் இதன் பெயர் பரத், என்றால் முழுமையான அல்லது பூர்த்தி என்று பொருள்] வழங்கப்பட்டது.
இதை சென்னையில் ஒரு உணவகத்தில் [ வூட்லன்ட்ஸ்என்று நினைவு] வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழா ஏற்பாடு உயர்திரு. "மதி ஒளி" ஷண்முகம் அவர்கள். இந்த நிகழ்ச்சியில் தலைவர் பேசியது அனைவருக்கும் தெரியும். இந்த ஒலிநாடாவின் உரிமை இன்றும் எனது இனிய நண்பர் [35 ஆண்டுகளாக] திரு சண்முகத்தின் மகன் "மதி ஒளி" ஹேமந்த் குமார் அவரிடம் தான் இருக்கிறது.
அனைவரும் கேட்கவேண்டிய பேச்சு.
மேலும், தலைவருக்கு பட்டம் கிடைத்தவுடன் சிலர் சில புரளிகளை கிளப்பி விட்டார்கள். நமது தலைவர் விருதை திருப்பி கொடுத்திவிட்டார், "எந்த பேச்சும் இல்லை". பிறகு நாவலர் அவர்கள் நாங்கள் ஒன்றும் அப்படி சொல்லவே இல்லை என்று அறிக்கை விட்டார் அதற்கு ஆதாரம் உள்ளது.
தலைவரை போல "மானஸ்தனாக" இருப்பது என்பது பலர் கற்கவேண்டிய பாடம்.
நன்றி - சைலேஸ் பாசு முகநூல் பக்கம்
1973 ஆம் ஆண்டு மாலைமுரசு நாளிதழில் அப்போது திமுக அரசில் அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் அறிக்கை வெளியானது.
http://i66.tinypic.com/mbjqix.jpg
புரட்சித் தலைவரின் நீண்ட பேட்டி. பொறுமையாக படித்துப் பாருங்கள். அவர் நேர்மையாக மனசாட்சிக்கு துரோகம் இல்லாமல் பந்தா இல்லாமல் நியாயமாக பேட்டி அளித்திருக்கிறார். இங்கிலீஸ் படத்தில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு அலட்டிக் கொள்ளாமல் ‘எனக்கு இங்கிலிஸே சரியா தெரியாதுங்க’ என்று படு யதார்த்தமாக சொல்கிறார். நடிக்க வந்ததற்கு காரணம் வறுமை என்கிறார். சிக்கலான கேள்விக்கு கூட நியாயமான எல்லாரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பதிலை அளித்திருக்கிறார். மனதில் உண்மையும் நேர்மையும் சத்தியமும் இருந்தால்தான் இப்படி பதில் சொல்ல முடியும்.
தொப்பி சம்பந்தமாகவும் கேள்வி வருகிறது. அந்தக் கேள்வியின் பதிலுக்கு ஏற்றார்போல இந்த அரிய புகைப்படம். 1974-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம். இந்தப் பேட்டி வெளியாகி 5 ஆண்டுக்குப் பின் எடுக்கப்பட்ட படம். உடன் இருப்பவர் கோவை செழியன்.
http://i63.tinypic.com/2db2rtc.jpg
இனி புரட்சித் தலைவரின் பேட்டி.. நன்றி - நண்பர் சென்றாயப் பெருமாள் முகநூலில் இருந்து..
http://i67.tinypic.com/2cp5iwy.jpg
பொன்மான செம்மலின் பதில்கள்… ஒரு ஃப்ளாஷ்பேக்! -கதிர்
நீங்கள் நடிக்க வந்தது ஏன்?
வறுமைதான்.
நடிகன் ஆனதை உங்கள் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா?
வேறு என்ன செய்ய முடியும்? பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்களே. பசியை போக்க நடிக்க வந்தேன். அதற்கு ஏன் தடை சொல்ல போகிறார்கள்.
முதல் அனுபவம் எப்படி? நடிப்பு சொல்லிக் கொடுத்தது யார்?
ஆறு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். நாடகம் பெயர் லவகுசா. அதில் நான் குசன். அந்த பாத்திரத்தை எப்படி நடிக்க வேண்டும் என்பதை என்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லித் தந்தார். அவர் பெயர் ஞாபகம் இல்லை.
மேடையில் எப்படி அனுபவம்?
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தேன். அங்கே காளி என் ரத்தினம் நடிப்பு சொல்லித் தந்தார். அப்புறம் எம். கந்தசாமி முதலியார் கற்றுக் கொடுத்தார்.
பெண் வேடம் போட்டீர்களா? கதாநாயகன் வேடம் எது?
பல நாடகங்களில் பெண் வேடம் போட்டிருக்கிறேன். மனோகரா நாடகத்தில் முதல் தடவையாக கதாநாயகன் ஆனேன். மனோகரன் பாத்திரம்.
உங்களுக்கு பாட வருமா?
பின்னணி, டப்பிங் எல்லாம் அப்போது இல்லை. நடிப்பவர்கள் சொந்தக் குரலில் பாட வேண்டும். பாடத் தெரிந்தால்தான் கதாநாயகன் வேடம் கிடைக்கும். நானும் அதில் தப்பவில்லை.
சினிமாவுக்கு வந்தபோது கேமராவை பார்த்தபோது எப்படி இருந்தது?
வேல் பிக்சர்ஸ் என்று ஒரு ஸ்டுடியோ இருந்தது. பிற்பாடு அதுதான் வீனஸ் ஸ்டுடியோ ஆனது. அங்கேதான் முதல் ஷாட். எம்.கே.ராதா, என்.எஸ்.கே., டி.எஸ்.பாலையா உடன் இருந்தார்கள். எங்கள் எல்லாருக்குமே நாடக அனுபவம் இருந்ததால் கேமரா முன்னால் நடிக்க தயக்கம் இல்லை.
நாடகம், சினிமா இரண்டில் உங்களுக்கு அதிக திருப்தி தருவது எது?
நாடகம். அதனால்தான் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் விடாமல் ஊர் ஊராக சென்று நாடகம் நடத்துகிறேன், நடிக்கிறேன். ஒரு காட்சி நன்றாக நடித்தால் மக்கள் உடனே கைதட்டி பாராட்டுவதை நாடக கொட்டகையில்தான் பார்க்க முடியும். சினிமாவில் அது முடியாதே.
நாடகத்துக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்?
நிறைய உண்டு. ஒன்றை சொல்கிறேன். என் தங்கை நாடகத்தில் நன்றாக அழுவேன். மக்களும் நன்றாக ரசித்தார்கள். அதனால் சினிமாவிலும் அசலாக அழ நினைத்தேன். கிளிசரின் போட மாட்டேன் என்று சொல்லி விட்டேன். அப்புறம் படம் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே இல்லை. கஷ்டப்பட்டு நான் விட்ட கண்ணீர் மொத்தமும் ஆர்க் லேம்ப் வெளிச்சத்தின் சூட்டில் உடனே உலர்ந்து விட்டது. பிறகுதான் நானும் கிளிசரின் பயன்படுத்த ஆரம்பித்தேன்.
பம்பாயில் நாடகம் போட்டீர்களே, எப்படி வரவேற்பு?
நாடகம் எப்படி என்பதை பார்த்தவர்கள்தான் சொல்ல வேண்டும். ஆனால் நல்ல வரவேற்பு. கடைசி நாளில் வந்தவர்கள் பலர், ‘ஆரம்பம் முதலே வராமல் தவற விட்டேனே’ என்று வருத்தப் பட்டார்கள். பிருதிவிராஜ் வந்திருந்தார். பழைய அனுபவங்களை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டோம்.
உங்களை வளர்த்தது நாடகமா, சினிமாவா?
சினிமாவுக்கும் தாய் நாடகம்தானே. நடிப்பு கற்றுக் கொள்கிற பட்டறையாக நாடகம் இருக்கிறது. சினிமாவில் நிறைய வசதிகள், தொழில்நுட்ப உத்திகள் இருக்கிறது. காட்சிகளை நமது வசதிப்படி மாற்றி மாற்றி எடுக்கலாம். திரும்பத் திரும்ப எடுக்கலாம். பிறகு தேவை இல்லாததை வெட்டி எறிந்து விட்டு தொகுக்கலாம். ஒவ்வொரு காட்சிக்கும் மெருகூட்ட முடியும். நாடகத்தில் அப்படி இல்லை. ஒரே காட்சியில் சிரிப்பு, அழுகை, கோபம் என்று பல பாவங்களை வெளிப்படுத்த வேண்டும். சுருக்கமா சொல்வதென்றால் நாடகத்தில் நான் என் திறமையை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். சினிமாவில் மற்றவர்களின் திறமையில் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி பார்க்கும்போது இரண்டுமே என்னை வளர்த்தது என்பதுதான் சரி.
ஆங்கில படத்தில் நடிப்பீர்களா?
இங்கிலீஷே நமக்கு சரியா தெரியாதுங்க. இதுல இங்கிலீஷ் படத்துல நடிக்கிறதாவது. அடிமைப்பெண் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடந்தபோது ராஜ்ஸ்ரீ பிக்சர்ஸ் தாராசந்த் ஒரு விருந்து கொடுத்தார். இந்திப் படத்தில் நான் நடிக்கணும்னு சொன்னார். நான் பேசுகிற இந்தியை தாங்கிக் கொள்ளும் சக்தி இந்தி ரசிகர்களுக்கு இருக்குமானால் நடிக்கிறேன்னு சொன்னேன். இங்கிலீஷ் படத்துக்கும் அதுதான்.
மலையாளம் தெரியுமா? மலையாள படத்தில் நடிப்பீர்களா?
தெரியும். முன்னோர் மலையாளிகள் என்றாலும் நான் பிறந்தது இலங்கை கண்டியில். அங்கிருந்து தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பேசவும் எழுதவும் தெரிந்த மொழி தமிழ்தான். மலையாளம் மட்டும் தெரிந்தவர்களுடன் அதில் பேசுவேன். மலையாளப் படம் தயாரித்து நடிக்கும் எண்ணமும் உண்டு. இந்தியிலும் அப்படி செய்ய விருப்பம்.
கடவுள் நம்பிக்கை உண்டா? கோயிலுக்கு போவீர்களா?
நிச்சயமா கடவுள் நம்பிக்கை உண்டு. கோயில்களுக்கு போவேன். 12, 13 வயதில் திருப்பதிக்கு இரண்டு தடவை போயிருக்கிறேன். அங்கே தாமரை மணி மாலை வாங்கினேன். ரொம்ப காலம் அதை கழுத்தில் அணிந்திருந்தேன். சிலர் நினைப்பது போல அது ருத்ராட்ச மாலை இல்லை. கோயில்களுக்கு போவேனே தவிர, அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் கிடையாது. வேண்டுவதுகூட தப்பில்லை. நமக்கு நேரும் கஷ்டங்களுக்கு கடவுளை குறை சொல்வதுதான் எனக்கு பிடிப்பதில்லை.
உங்களுக்கு குல தெய்வம் உண்டா?
காளி எங்கள் குல தெய்வம். காளியையும் விஷ்ணுவையும் தவறாமல் வணங்கி வந்தார் என் தாய். திருப்பதி வெங்கடாஜலபதி மேல் அவருக்கு ரொம்ப பக்தி.
உங்கள் வீட்டு பூஜை அறையில் எந்தெந்த கடவுளை வணங்குகிறீர்கள்?
என் வீட்டு பூஜை அறையில் இருப்பதெல்லாம் என் தாய், தந்தை, என் மனைவியின் தாய் தந்தை, மகாத்மா காந்தி ஆகியோரின் படங்கள்தான்.
நிறைய பேருக்கு உதவி செய்கிறீர்கள். நீங்கள் யாரிடமாவது உதவி கேட்டிருக்கிறீர்களா?
என்ன இப்படி கேட்டுட்டீங்க. நான் வளர்ந்ததே மற்றவர்கள் செய்த உதவிகளால்தான். என்றுமே அதை மறக்க மாட்டேன்.
அப்படி உதவி செய்தவர்களில் ஒருவரை சொல்லுங்களேன்?
கலைவாணர் அப்போது கீழ்ப்பாக்கத்தில் குடியிருந்தார். அவர் வீட்டில் கோவிந்தன் என்ற தோழர் வேலை செய்தார். மாதம் 15 ரூபாய் சம்பளம். அந்த நிலையில் எனக்கு ஒரு தேவை வந்தபோது 2 ரூபாயை உடனே எடுத்துக் கொடுத்தார். இன்றும் மனதில் நிறைந்து இருக்கும் அந்த நண்பனைத் தேடுகிறேன். கிடைக்கவில்லை.
ஸ்டுடியோ பணியாளராக இருந்து அதன் உரிமையாளராக உயர்ந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நெப்டியூன் ஸ்டுடியோவில் யாரோ ஒரு ஊழியனாக வேலை செய்தேன். முதலாளி ஜூபிடர் சோமு மிகப் பெரிய மனிதர். அனுபவத்திலும் ஆற்றலிலும் என்னைவிட எத்தனையோ மடங்கு உயர்ந்தவர். அவருக்கே இந்த நிலைமை என்றால் நானெல்லாம் எத்தனை காலம் முதலாளியாக இருந்துவிட முடியும் என்று தோன்றுகிறது. இதுதான் வாழ்க்கை. மனிதனின் உடல் நிரந்தரம் இல்லாதது; நீர்க்குமிழி போல் எந்த நொடியும் அழையக் கூடியது என்பார்கள். உடல் மட்டுமா? பெயர், புகழ், செல்வாக்கு எல்லாமும் அப்படித்தான். அதைத்தான் நினைத்துக் கொள்வேன்.
தமிழ் சினிமா முன்னேறி இருக்கிறதா?
சினிமா ஒரு கூட்டு முயற்சி. ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள ஆனால் வெவ்வேறான செயல்களின் விளைவுதான் ஒரு திரைப்படம். கதை, வசனம், காட்சி அமைப்பு, இசை, நடிப்பு, உடை, ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் என வேறு வேறு அம்சங்கள் இருக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பிரிவிலும் தமிழ் சினிமா நிச்சயமாக முன்னேறி இருக்கிறது.
சினிமா விமர்சனம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு பத்திரிகை என் நடிப்பு அற்புதம் என்கிறது. இன்னொரு பத்திரிகை மோசம் என்கிறது. மூன்றாவது பத்திரிகை அந்த இரண்டுக்கும் பொதுவாக என் நடிப்பு சுமார் என்கிறது. இதில் எதை நான் எடுத்துக் கொள்வது? எப்படி என் நடிப்பை திருத்திக் கொள்வது? இங்கே சினிமா விமர்சனம் பெரும்பாலும் இப்படிதான் இருக்கிறது. எம்ஜிஆர் என்ற நடிகனின் நடிப்பை மட்டும் பார்க்காமல் என் கட்சியை, என் கட்சியின் கொள்கையை என் தனிப்பட்ட வாழ்க்கையை மனதில் தேக்கிக் கொண்டு பார்ப்பதால் விமர்சனத்தின் நேர்மை கேள்விக்குறி ஆகிறது. படத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் குறைகளை அடுத்த படத்தில் நிவர்த்தி செய்து கொள்ள ஊக்கமாக விமர்சனம் இருந்தால் நல்லது என்பேன்.
சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா?
இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன். ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம். காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது. படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான். அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன். நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?
அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லிவரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்? லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது.
ஹீரோ விரும்புகிற மாதிரியெல்லாம் கதையை மாற்றினால் பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர் கதி என்னாவது?
ஒன்றும் ஆகாது. நான் நடிகன் மட்டுமல்ல. படம் எடுத்திருக்கிறேன். இயக்கியும் இருக்கிறேன். எவ்வளவு காலமாக நடித்துக் கொண்டிருக்கிறேன். என்ன செய்தால் படம் ஓடும் என்பது தெரியும். மதுரை வீரன் படமும் காத்தவராயன் மாதிரி கர்ணபரம்பரை கதைதான். வெள்ளையம்மாள் பாத்திரம் படுமோசமாக சித்தரிக்கப் பட்டிருக்கும். படத்தில் அந்த பாத்திரத்தை வேறுமாதிரி மாற்ற ஆலோசனை சொன்னேன். தயாரிப்பாளர் சம்மதித்தார். படம் பெரிய வெற்றி. அதே மாதிரி மலைக்கள்ளன் படத்திலும் அலிபாபாவும் 40 திருடர்கள் படத்திலும் சில ஆலோசனைகளை சொன்னேன். பட முதலாளிகள் ஏற்றுக் கொண்டு மாற்றியமைத்தார்கள். அந்த படங்களும் பெரும் வெற்றி பெற்றன. என்னுடைய கருத்தை நான் திணிப்பதாக நினைப்பது தவறு. என்னுடைய அனுபவத்தை அதில் கிடைத்த அறிவை பட முதலாளிகள் பயன்படுத்திக் கொள்ள நான் அனுமதிக்கிறேன், அவ்வளவுதான்.
சம்பளம் வாங்கும் நடிகர் அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நடித்துவிட்டு போவதுதானே முறை? நீங்கள் செய்வது சர்வாதிகாரம் ஆகாதா?
ஊதியம் வாங்கும் பணியாளன் என்றாலும், நடிகனுக்கும் சமூக கடமைகள் உண்டு. அர்த்தமில்லாத, போலியான, பித்தலாட்டமான மூடத்தனமான காட்சிகளை அமைத்து மக்களை நம்ப வைக்க முயன்றால் அது தப்பில்லையா? அதற்கு நடிகன் உடந்தையாக இருக்க முடியுமா? நம்பத்தகுந்த, நம்பக்கூடிய காட்சிகள் என்றால் பரவாயில்லை. நம்பவே முடியாத, தர்க்க ரீதியாக ஏற்க முடியாத காட்சிகளை திணித்து மக்களிடம் காசு பறிக்க முயல்வது பேராசை. அதை ஒரு நடிகன் என்ற முறையில் நான் அனுமதிக்க முடியாது.
பத்து இருபது பேரை ஏக காலத்தில் தன்னந்தனியாக அடித்து வீழ்த்துவது மட்டும் நம்பக் கூடியதா?
தமிழ் சினிமாவில் வந்தால் மட்டும் நம்ப மாட்டீர்களா? புராணங்களில் அப்படி வரும் காட்சிகளை மக்கள் ரசிக்கத்தானே செய்கிறார்கள். மகாபாரதம் கதையில் அர்ஜுனன் பெரிய வில் விற்பன்னர்களுடன் மோதுகிறான். சிக்கலான வியூகத்தை எளிதாக உடைத்து, எதிரிகள் அத்தனை பேரையும் முறியடித்துவிட்டு திரும்புகிறான். அதை நம்பி ஏற்றுக் கொள்கிறீர்கள். அர்ஜுனனால் அது சாத்தியம் என்றால் என்னை போன்ற ஹீரோக்களால் இதுவும் சாத்தியம்தான்.
வயதுக்கு பொருந்தாத பாத்திரங்களில் நடிக்கிறீர்களே?
விமர்சகர்கள் சொல்கிறார்கள். மக்கள் அப்படி என்னைச் சொல்லவில்லையே. தவிர இன்னொன்றையும் கவனியுங்கள். 25 வயது நடிகன் கல்லூரி மாணவனாக நடிப்பது புதுமையல்ல. அவனே மேக்கப் போட்டு முதியவனாக நடிப்பதும் சுலபம். தத்ரூபமாக நடித்ததாக அதை பாராட்டவும் செய்கிறார்கள். ஆனால், வாலிப பருவத்தை கடந்த ஒரு நடிகன் தொடர்ந்து இளைஞனாக நடிப்பதும், மக்கள் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டுவதும் சுலபமான காரியம் அல்ல. அந்த கடினமான காரியத்தை நான் செய்து அதற்கு மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறேன். இதைப்போய் சிலர் குறை கூறுகிறார்கள்.
உங்கள் படங்கள் சரியாக ஓடாததால் அரசியலில் தீவிரம் காட்டுவதாக சொல்கிறார்கள். நடிப்பதை நிறுத்திக் கொள்ளும் எண்ணம் இருக்கிறதா?
வியாபரம் ஓகோ என்று நடக்கும்போது யாராவது கடையை மூட நினைப்பார்களா? என் படங்களின் வசூலில் எந்த குறைவும் இல்லை. நீங்கள் வேறு யாரையும் கேட்க தேவையில்லை. என் படம் ஓடும் எந்த தியேட்டருக்கு போனாலும் நீங்களே தெரிந்து கொள்ளலாம். இதோ, சமீபத்தில் வெளியான என் படத்துக்கு 1 ரூபாய், 20 பைசா டிக்கெட், தியேட்டருக்கு வெளியே 16 ரூபாய்க்கு விற்கப்படுவதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது.
கோயில், கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நீங்கள் நடிக்க மாட்டீர்களாமே?
அது வெறும் வதந்தி. யார் கிளப்பியதோ தெரியாது. நான் கடவுள் மறுப்பாளன் கிடையாது. ஜெனோவா படத்தில் நடித்தேன். பரமபிதாவில் நடிக்கிறேன். பெரிய இடத்து பெண் படத்தில் எல்லாரையும் கோயிலுக்கு அழைத்து செல்வேன். சமீபத்தில் மருதமலை கோயிலுக்கு போய் வந்தேன்.
பிறகு ஏன் பக்தி படங்களில் நடிப்பதில்லை?
படம் எடுத்து அல்லது படத்தில் நடித்துதான் பக்தியை வளர்க்க முடியுமா. அப்படி இல்லை. பக்தி என்பது பரிசுத்தமானது. முன்பெல்லாம் மனசையே கோயிலாக்கி கடவுளை அதில் அமர்த்தி வைத்திருந்தார்கள். மனசு அழுக்கானதாலோ என்னவோ பிறகு கடவுளை கோயிலுக்கு அனுப்பி விட்டார்கள். எங்கு பார்த்தாலும் கோயில்கள். இத்தனை கோயில்களை வைத்துக் கொண்டு வளர்க்க முடியாத பக்தியை சினிமா படங்களா வளர்த்து விடப் போகிறது? என்னை பொருத்தவரை தாயிடம் அன்பு, தந்தையிடம் மரியாதை, ஆசானிடம் பயபக்தி, நண்பனிடம் பாசம், ஏழையிடம் இரக்கம். இந்த பண்புகள்தான் மனதை தூய்மையாக்கும். மனம் தூய்மையானால் அதுதான் பக்தி. கடவுளாக வேஷம் போடாமலே அந்த பக்தியை நான் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறேன்.
திடீரென்று வெள்ளை தொப்பி போட என்ன காரணம்?
அடிமைப்பெண் ஷூட்டிங் நடத்த ராஜஸ்தான் சென்றபோது பாலைவனத்தில் வெயில் தாங்க முடியாமல் இருந்தது. ஒருத்தர் இந்த தொப்பியை கொடுத்து, ‘தலையில் போட்டுக்குங்க, வெயிலுக்கு இதமா இருக்கும்’ என்றார். அப்ப்டித்தான் இருந்தது. பிறகு தேர்தல் வந்தது. பிரசாரத்துக்கு வெயிலில் மழையில் ரொம்ப சுற்ற நேர்ந்தது. அப்படியே தொப்பியை பழக்கமாக்கிக் கொண்டேன்.
வேறு மாதிரி காரணம் சொல்கிறார்களே?
தெரியும். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனக்கு எது தேவையோ அதை நான் பயன்படுத்துகிறேன். என் தலையில் முடி இல்லை என்றே வைத்துக் கொள்வோம். உடனே நான் எம்ஜிஆர் இல்லை என்று சொல்லி விடுவீர்களா, என்ன? இந்தி சினிமா நடிகர்கள் நிறைய பேர், என்னைவிட வயதில் குறைந்தவர்கள் தலையில் விக் இல்லாமல் வெளியே வருவதில்லை. அதுக்கு என்ன சொல்வீர்கள்? யார் என்ன சொல்வார்களோ என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் எதுவும் செய்ய முடியாது. முன்பு ஜிப்பா போட்டேன். அப்புறம் காலர் வைத்த முழுக்கை சட்டைக்கு மாறினேன். அதை ஏதோ பேசினார்கள். ஒருநாள் சட்டையில் கை கிழிந்து விட்டது. சுருட்டி விட்டிருந்தேன். அதை பார்த்ததும், ‘எம்ஜிஆர் ரவுடி மாதிரி சட்டையை சுருட்டி விட்ருக்கார், பாரு’ என்றார்கள். இதுக்கெல்லாம் நான் என்ன பதில் சொல்ல முடியும்.
சினிமாவில் உங்களுக்கு எதிரிகள் உண்டா?
என்னைச் சுட்டது கூட பாசத்தால் என்கிறீர்களா? எதிரி யாருக்குதான் இல்லை? மனிதன் பிறக்கும்போதே அதுவும் தோன்றி விடுகிறது. தளர்ச்சி, அயர்ச்சி, பலவீனம் என்று இயற்கை எத்தனை தடைகளை மனிதன் மீது சுமத்துகிறது. அதைவிட பெரிய எதிரி என்று யாரும் இல்லையே. அதையெல்லாம் தாண்டித்தானே வளர்கிறோம். சினிமாவில் அப்படி எதிர்ப்பு, ஆதரவு கலந்துதான் இருக்கும். மேக மூட்டம் மாதிரி. மேகத்தை பார்த்ததும் இங்கு மழை பெய்யும் என எதிர்பார்ப்போம். எங்கிருந்தோ வரும் காற்று மேகத்தை தள்ளிக் கொண்டு போய்விடும். மழை வேறு எங்கோ பெய்யும். எதிர்ப்பை அப்படித்தான் எடுத்துக் கொள்வேன்.
எந்த எதிர்ப்பையும் தாங்கும் இந்த மனப் பக்குவம் எப்படி வந்தது?
இன்று நான் பெரிய நடிகன். வசதியாக வாழ்கிறேன். எனது வளர்ச்சி சிலரை பாதிக்கலாம். எனக்கு சிலர் தரும் ஆதரவு பலரை பாதிக்கலாம். நானே தெரியாமல் சில தவறுகள் செய்திருக்கலாம். இந்த காரணங்களால் எதிரிகள் உருவாகலாம். ஆனால் இந்த காரணங்கள் எதுவுமே இல்லாத காலத்தில் பல துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்து பரிதாப நிலையில் வாழ்ந்தேனே, அதற்கு யாரை குற்றம் சொல்ல முடியும்? அந்த நிலையை நினைத்துப் பார்க்கும்போது இன்று எல்லா எதிர்ப்பும் சாதாரணமாக தெரிகிறது.
நடிகர்கள் கருப்பு பணம் வாங்குவது உண்மைதானே?
உண்மைதான். ஏன் வாங்குகிறார்கள்? ஒரு லட்சம் சம்பாதித்தால் அதில் 97 ஆயிரத்தை வரியாக கேட்கிறார்கள். நடிகன் சாதாரணமாக வாழ முடியாது. அதிகம் செலவு செய்தாக வேண்டிய கட்டாயம். எங்கள் தொழில் அப்படி. இதில் நுழைந்த முதல் நாளே லட்சங்களில் சம்பாதித்துவிட முடியாது. யாரும் தர மாட்டார்கள். நல்ல வாய்ப்பு கிடைக்கும் வரையில் ஒவ்வொரு நடிகனும் படாத கஷ்டம் இல்லை. அங்கே இங்கே கடன் வாங்கி காலத்தை கழிக்கிறான். அதை எல்லாம் வரி அதிகாரிகள் கணக்கில் எடுப்பதில்லையே.
கருப்பு பணத்தை நியாயப்படுத்த முடியுமா?
அப்படி பார்த்தால் அரசும் சட்டமும்தான் இப்படி ஏமாற்ற வைக்கிறது. அவர்கள் பார்வையில் நாங்கள் திருடர்கள். ஆனால் அவர்கள் கேட்கும் வரியை செலுத்திவிட்டு மீதி பணத்தில் ஒரு நடிகன் வாழவே முடியாது. வருமானத்துக்கு மட்டுமா இவ்வளவு வரி? ஒரு நல்ல காரியத்துக்கு லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்தேன். அதற்கும் வரி போட்டார்கள். ஆத்திரம் வந்தது. நேரே டெல்லிக்கு போனேன். நிதி மந்திரி சி.சுப்பிரமணியம். அவரைச் சந்தித்து கேட்டேன். ‘சட்டம் அப்படி; நான் என்ன செய்ய முடியும்?’ என்று கேட்டார். ‘தேசத்தின் பாதுகாப்புக்காக நன்கொடை கொடுத்தாலும் வரி விதிப்போம் என்பது நியாயமா?’ என்று திரும்பவும் கேட்டேன். விளக்கம் சொன்னாரே தவிர, விலக்கு தரவில்லை. சட்டத்தை ஏமாற்றும் நோக்கம் நடிகர்களுக்கு இல்லை. ஆனால், நாங்கள் ஓரளவு நன்றாக வாழவாவது சட்டம் அனுமதிக்க வேண்டாமா? அதனால்தான் மனம் குறுக்கு வழியைச் சிந்திக்கிறது.
அப்படியானால் இதுதான் (வரி ஏய்ப்பு) தொடருமா?
திரும்பத் திரும்ப அரசிடம் கேட்டுப் பார்க்க வேண்டியதுதான். நடிகன் வாழ்க்கை நிலை இல்லாதது. புகழும் மார்க்கெட்டும் குறிப்பிட்ட காலம் வரைதான். அதன் பிறகு வரும் வருமானமில்லாத காலத்துக்கு அவன் சேமிக்க வேண்டாமா? பிள்ளை குட்டிகளுக்கு எதுவும் செய்ய வேண்டாமா? ஓகோ என்று வாழ்ந்த பல நடிகர்கள் வரி கட்டியே வீடு, சொத்து எல்லாம் இழந்த கதைகள் உண்டு.
சினிமாவுக்கு புதுசு புதுசாக நடிகர் நடிகைகள் வருவது நல்லதா?
நிசயம் நல்லது. ஆனால் அப்படி நடக்கவில்லை. பயிற்சி பெறாதவர்கள் வந்தால் நீடிக்க முடிவதில்லை. இப்படியே போனால் நடிகனுக்கு பஞ்சம் வந்து விடும்.
அதற்காக நீங்கள் ஏதாவது செய்யக் கூடாதா?
செய்ய வேண்டும். 1948-ம் ஆண்டிலேயே இது பற்றி ஜூபிடர் சோமுவுடன் பேசி இருக்கிறேன். புதிதாக நாடக கம்பெனிகளை உருவாக்க வேண்டும். அதில் சிறப்பாக நடிப்பவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தர வேண்டும். அவர்கள் அவ்வப்போது நாடகத்திலும் நடிக்க வேண்டும் என்று ஒரு திட்டம் போட்டேன். அது நடக்கவில்லை.
அதோடு விட்டு விட்டீர்களா?
நடிகர் சங்கத்தில் இதை விவாதித்தோம். சிறந்த எழுத்தாளர்களை அழைத்து நாடகம் எழுத சொல்வோம். அமெச்சூர் நாடக நடிகர்களை அதில் நடிக்க சொல்வோம். பட முதலாளிகள் அந்த நாடகங்களை பார்த்து திறமையானவர்களை தேர்வு செய்யட்டும். அவர்களுக்கு சினிமா வய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சங்கத்தில் தீர்மானமே போட்டோம்.
அதுவும் நடக்கவில்லையா?
நடக்கவில்லை. பிறகு பட முதலாளி என்ற வகையில் ஃபிலிம் சேம்பரில் ஒரு யோசனை சொன்னேன். ஒரு நடிகனை ஒரே நேரத்தில் 6 படங்களுக்கு மேல் ஒப்பந்தம் போடக்கூடாது. அப்படி உச்சவரம்பு வைத்தால் புது நடிகர்கள் வர வழி கிடைக்கும் என்று சொன்னேன். இப்படி பல யோசனைகள் சொல்லியும் ஏனோ நடக்கவில்லை.
நடிகர் சங்கம் மூலமாக நடிப்பு பயிற்சி அளிக்கலாமே?
அதையும் முயற்சி செய்து பார்த்தேன். ஒவ்வொரு வருடமும் நாடக போட்டி நடத்தி, அதில் முக்கியமான வேடங்களை புதுமுகங்களும் சின்னச் சின்ன வேடங்களை பிரபல நடிகர்களும் ஏற்று நடிக்க வேண்டும். புதிய நடிகர்களின் திறமையை அதில் வெளிப்படுத்தி சினிமா உலக முக்கியஸ்தர்கள் அதை அங்கீகரிக்க செய்ய் வேண்டும் என்று முயற்சி செய்தேன். பலரும் ஒத்துழைப்பு தந்தார்கள். ஆனால் சில முக்கிய புள்ளிகள் இடையூறாக இருந்து திட்டத்தையே நடக்க விடாமல் தடுத்து விட்டார்கள். நடிப்புக்கென்று தனியாக பள்ளிகள் இல்லாததால் சங்கம்தான் அதை எடுத்து செய்ய வேண்டும்.
உங்களை போல மற்ற நடிகர்கள் ஏன் ஏழைகளுக்கு வாரி வழங்குவது இல்லை?
வாரியெல்லாம் நான் வழங்குவதில்லை. தேவைகளைப் பார்த்துக் கொடுக்கிறேன். அதிலும், உதவி கேட்ட எல்லாருக்கும் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் உண்டு. மற்ற நடிகர்கள் செய்யவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவரவர் வசதிக்கு ஏற்ப கொடுத்துக் கொண்டுதான் இருப்பார்கள். வெளியே தெரியாமல் இருக்கலாம். கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்?
மேலே உள்ள இந்தப் பேட்டியில் கடைசிக் கேள்விக்கு பதிலாக, ‘வாரியெல்லாம் கொடுக்கவில்லை தேவைகளைப் பார்த்துக் கொடுக்கிறேன்’ என்று அடக்கத்துடன் கூறியிருக்கிறார். கேள்வி கேட்டவர் கடைசி கேள்வியில் மற்ற நடிகர்களை இழுத்து சிண்டு முடியப் பார்த்தும் நியாயமாக பதில் சொல்லி இருக்கிறார்.
‘வாரிக் கொடுக்கவில்லை, தேவைகளைப் பார்த்துக் கொடுக்கிறேன்’ என்று புரட்சித் தலைவர் சொன்னதைப் படித்தபோது இந்த வரிதான் நினைவு வந்தது.
‘பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளையில்லையா?...’
http://i64.tinypic.com/29ops7m.jpg
http://i67.tinypic.com/2zdob9l.jpg
இன்று (28/09/2016) காலை 11 மணி முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"கண்ணன் என் காதலன் " சன் லைப் சானலில் ஒளிபரப்பாகியது
இன்று இரவு 7 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த, தேவரின் "விவசாயி "
சன் லைப் சானலில் ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/2lcrxxd.jpg
http://i68.tinypic.com/6frwud.jpg
இன்று மெகா டிவியில் 3 மணிக்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இருவேடங்களில்
நடித்த "ராஜா தேசிங்கு " ஒளிபரப்பாகிறது .
அரங்குகள் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது என தகவல்கள் வந்துள்ளன .
http://i67.tinypic.com/2mct4kl.jpg
திரு சுந்தர பாண்டியன் அவர்களுக்கு,
மகத்தான மாமனிதர் மக்கள் திலகத்தின்
அரிய பதில்களை மிகச்சிறப்பாக தொகுத்து பதிவிட்ட
தங்களுக்கு எனது பாராட்டுக்களை
தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்,
எஸ் ரவிச்சந்திரன்
தொலைக்காட்சிகளில் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்கள்
ஒளிபரப்பாகும் விபரங்களை மிக அழகாக படத்துடன்
பதிவிட்டு வரும் இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களுக்கு
எனது பாராட்டுக்கள்.
நண்பர் சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வணக்கம் .
அற்புதம், அருமை, அட்டகாசம், அசத்தல், ஆனந்தம் , ஆஹா இப்படி பல வார்த்தைகள் பிரயோகித்து , பாராட்டக்கூடிய அளவில் இருந்தது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் பேட்டி .
அதை மிக அழகாக தொகுத்து, பொறுமையுடன் பதிவிட்டு என் போன்ற பதிவாளர்கள் நெஞ்சை தொட்டதற்க்கு மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.
இந்த மாதிரி பதிவுகள் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழுக்கு மேன்மேலும்
பெருமை சேர்க்கக் கூடியது. ஆகவே, தகுந்த இடைவெளியில் , அவ்வப்போது
இதை போன்ற பதிவுகள் தொடரட்டும் .
ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு.
http://i68.tinypic.com/29fsa37.jpg
நண்பர்கள் ரவிச்சந்திரன், ஆர்.லோகநாதன் உங்கள் இருவரின் பாராட்டுகளுக்கும் நன்றி.
லோகநாதன் சார், புரட்சித் தலைவரின் படங்கள் டிவியில் ஒளிபரப்பாகும் விவரங்கள், பத்திரிகையில் வரும் செய்திகளை ஒன்றுவிடாமல் பதிவிடும் உங்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்.
http://i64.tinypic.com/jt2det.jpg
எம்ஜிஆர் இருக்கிறார்(22)::::
தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களை எவ்விதம் பாதுகாத்து, அவர்தம் தேவையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்பதிலும் எம்ஜிஆரே வழிகாட்டியாக இருக்கிறார்.
அவரிடம் பணிக்கு வந்த மேலாளர் ஆர்.எம்.வீரப்பனிலிருந்து, ஸ்டண்ட் நடிகர்கள் ராமகிருஷ்ணன், ஜஸ்டீன், குண்டுமணி உள்ளிட்ட துணை நடிகர்கள், சத்யா ஸ்டுடியாே பத்மநாபன்,குஞ்சப்பன், மேக்கப் பீதாம்பரம், கணக்கர் சாமி,ரத்தினம்,மாணிக்கம்,சின்னசாமி,காரோட்டி கதிரேசன்,கேசவன்,கிருஷ்ணன்,சமையல்காரர்கள், கதைவசனகர்த்தா கே.ரவீந்தர் என்று நூறு பேருக்கும் குறையாமல் இருபதாண்டு்க்கும் மேலாக தலைவர் மறையும் வரை பணிபுரிந்தார்கள்.
அவர்கள் வீட்டு விசேடங்களை தலைவரே பத்திரிகை அடித்து, முன் நின்று ஜானகி அம்மையாராேடு நடத்துவார். துக்கங்களுக்கு முதல் ஆளாக முன்நின்று இறுதிவரை உடனிருப்பார். எல்லாவற்றிற்குமான மொத்த செலவு அவருடையதாகத்தான் இருக்கும்.
வெளியூர் பயணங்களில் அவரது கவனம் தன் டிரைவர்கள், உதவியாளர்கள் பற்றியதாகவே இருக்கும். உறங்குவதற்கு முன், அவர்களுக்கு உணவு, ஓய்வெடுக்க அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பது அறிந்தே உறங்க செல்வார்.
பல ஆண்டுகளாக மாம்பலம் அலுவலகத்தில் காவல்காரராக மகேந்தர் என்னும் கூர்க்கா இருந்தார். ஒர் நாள் தலைவர் பின்வாசல் வழியாக இறங்கியவர் அவர் சமைத்துக்கொண்டிருப்பதை பார்த்து விட்டு தனது காரியதரிசி கேசவனை அழைத்து "இவர் ஏன் சமைக்கிறார்? ஓட்டலிருந்து தருவிப்பதில்லையா?" என்றார்.
கேசவன் "இரவிலே ஒரு சாப்பாடுதான் எடுப்பாேம். மதியம்தான் இரண்டு எடுத்து அவருக்கும் தருவாேம்"
கடுமையான காேபம் வந்தது தலைவருக்கு. "ஏன் இரண்டு சாப்பாடு எடுத்தால் ராமச்சந்திரன் ஏழையாகி விடுவானா? உழைப்பவன் வயித்துக்கு வஞ்சகமில்லாமே பாத்துக்குங்க"
குஞ்சப்பனை அழைத்தவர் அந்த கூர்க்காவிற்கு எவ்வளவு சம்பளம் என்று கேட்டார். 150ரூபாய் என்று பதில் வர "இதை வைத்து நேபாளத்தில் இருக்கும் அவர் பெண்டு, பிள்ளைகளை எப்படி காப்பாற்றுவார்?" முன்னூறா போட்டுக்காெடுங்க. இந்த மாதிரி வேலை செய்றவருக்கு கொடுக்கிறதுல இருக்கிற புண்ணியம், பிச்சை காெடுக்கிறதுல இல்லே"
அந்த கூர்க்கா அவர் மறையும் வரை, அங்கேதான் பணிபுரிந்தார்.
நன்றி - அரிமா சந்திரசேகரன் எம். முகநூல் பக்கம்.
http://i63.tinypic.com/291dgeb.jpg
எத்தனையோ தடைகளை சோதனைகளை சூழ்ச்சிகளை தாண்டிய புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இப்போது உடல் நலக் குறைவால் ஏற்பட்டுள்ள சோதனையையும் புரட்சித் தலைவரின் ஆசியோடு இப்படித் தாண்டி விடுவார்.
http://i67.tinypic.com/157lxr6.jpg
மாலை மலர் -29/09/2016
http://i65.tinypic.com/dnhfr4.jpg
சென்னை மாநகரில் மற்ற அரங்குகளில் வெளியாவதாக , தினத்தந்தி நாளிதழில்
பிரசுரமான விளம்பரத்தின்படி வந்த செய்திகள் உண்மை அல்ல . நிறைய புதிய
படங்கள் வெளியாவதன் காரணமாக , அரங்குகள் கிடைப்பதில் மிகுந்த சிக்கல்
ஏற்பட்டதாக , விநியோகஸ்தர்கள் ரசிகர்களிடம் தெரிவித்தனர் . ஆகவே, கடைசி நேர மாறுதலின்படி , உரிமைக்குரல் மாத இதழ் , மற்றும் அனைத்து ரசிகர்கள்
சார்பாக , இன்றைய மாலை மலர் தினசரியில் சரியான விளம்பரம் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது என்பது பார்வையாளர்களின் கவனத்திற்கு.
மதுரை மாநகரில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் ,"ரிக்ஷாக்காரன் " , அலங்கார்
மற்றும் மீனாட்சி அரங்குகளில் வெளியாவதாக , மதுரை நண்பர் திரு. எஸ். குமார்
தகவல் தெரிவித்துள்ளார்.
http://i64.tinypic.com/140loq9.jpg
வெள்ளி (30/09/2016) முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். (பேரறிஞர் அண்ணாவின் ) "இதயக்கனி " திரைப்படம் தினசரி 3 காட்சிகளில் திரைக்கு வருகிறது .
http://i64.tinypic.com/208ikqd.jpg