ரவி சார்,
//நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை !! //
மகாபாரதத்தில் ராதை சீதை ஆன கதை படித்து பரவசப்பட்டேன். அருமையாக இருந்தது.
Printable View
ரவி சார்,
//நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை !! //
மகாபாரதத்தில் ராதை சீதை ஆன கதை படித்து பரவசப்பட்டேன். அருமையாக இருந்தது.
சின்னா!
எங்கிருந்தோ வந்தாளின் நாடகப் பாடலை அளித்து ஆனந்தப் பட வைத்து விட்டீர்கள்.
//( எப்போ கேட்டாலும் பார்த்தாலும் அலுக்காத கானம்)//
உண்மை... உண்மை... முக்காலும் உண்மை. துஷ்யந்தன் தூள்.
சினிமாவுக்குள் நாடகம்.
'உனக்காக நான்' படத்தில் மில் தொழிலாளிகள் நடத்தும் டிராமா.
https://i.ytimg.com/vi/nwrqwmVBIEE/mqdefault.jpg
காடு கண்டா வெறகு வெட்டுறது... ஆமா ஆமா
அதைக் கட்டுக் கட்டா வெலைக்கு விக்கிறது... ஆமா ஆமா
நாங்க தலையில் வைக்கிறது
நல்லா தளுக்கி விக்கிறது
யாரும் வடிக்க வந்தா வெறகுமில்லே
புலியைக் கண்டா உயிருமில்லே
அந்தரத்தில பொழைப்பு நிக்கிறது
அந்த ஆண்டவன்தான் துணைக்கு நிக்குறது
வி.கே.ஆர். புலியாக வந்து (அப்பா! எம்மாம் பெரிய தொப்பைப் புலி!:) பாவம் வி.கே.ஆர்.) நிர்மலா உள்ளிட்ட விறகு பொறுக்கும் பெண்களை செட்டில் விரட்டுவார்.
பெண்டுகள் நடுங்கி ஆறுமுக சாமியை வேண்ட, ஒய்.ஜி.மகேந்திரனின் ஹார்மோனியம் ஒலிக்க, ஆச்சி புலித்தோல் அணிந்து வேல் பிடித்து முருகனாக அவதாரம். பாகவதர் ரேஞ்சுக்கு பாடல். அலட்சிய நடை
'பாடுபடும் ஏழை நிலையே
பார்க்கவே சகிக்கலயே'
தொல்லை கொடுத்த புலி வி.கே ஆருடன் ஆச்சி முருகன் சண்டையிட்டு சூரசம்ஹாரம் பண்ணுவார்.
அப்படியே மேடையிலேயே யூனியன் லீடரை தேர்ந்தெடுக்க நாடகம் பார்க்கும் ஜனங்களிடம் ஓட்டு வேட்டை வேறு.
'சங்கரனை (ஜெமினி) தேர்ந்தெடுத்தா சங்கடமில்ல
தர்மலிங்கத் தாத்தா (எஸ்.வி.சுப்பையா) மேல நம்பிகையில்ல'
எஸ்.சி.கிருஷ்ணன், ஈஸ்வரி, ஆச்சி பாடியது.
சுவையான ஜாலி சாங்.
http://s2.dmcdn.net/C50ro.jpg
http://www.dailymotion.com/video/x17...agu_shortfilms
'உணர்ச்சிகள்' படத்தில்
பொன்னாசையா
பெண்ணாசையா
மண்ணாசையா
மனிதன் ஆசைகள்
பாடல். சுமார்தான். ஆனால் வித்தியாசமான குரலில். சின்னா! குரல் யாரென்று தெரிகிறதா?
https://youtu.be/5YeCyVOwN7Q
vanakkam ji
வணக்கம்ஜி! வணக்கம் வாங்கோ! வாங்கோ!
மதுண்ணா!
'சக்கரம்' படத்தில்
'ஒருநாள் இரவு ஒரு மணியளவு விழித்துக் கொண்டாள் ஒரு மாது'
என்று ராட்சஸி பாடும் ஒரு பாடல் உண்டே! படத்தில் யார் பாடுவது போல வரும்? நினைவில்லையே!
//பாடல். சுமார்தான். ஆனால் வித்தியாசமான குரலில். சின்னா! குரல் யாரென்று தெரிகிறதா? // கோபு சார் வந்து எதுவும் சொல்லிவிடும் முன் நாம் நம்ம கெஸ்ஸ சொல்லிடலாம் ..என்ன மன்ச்சு.. சொல்லு எப்படியும் தப்பாத்தான் இருக்கப் போகுது..ஆனா நீ ஒரு கேள்வி கேக்கலையே.. ஹிஹி..அது ஷீலுவா இருக்கும்னு ஒரு சம்சயம்..ஆண்குரல் நாகூர் ஹனிபா சாயல்ல இருக்கு கரெக்டா..
ம்ம் வாழ்த்துங்கள் படப் பாட்டு தேடிக் கெடைக்கல..பட் நேத்துக்கு சிச்சுவேஷன்ல ஒரு எழுத்து மாறியபடபாட்டு கொடுக்க முடியலை..இப்பக் கொடுக்கறேன்..
பட் என்னா பாட்டு அது தெரியுமா.. சரிதாண்டி போடி என் தங்க வானம் பாடி..
https://youtu.be/i77xCHFRi-0