-
காலப் பெட்டகம்
ராஷ்டிரபதி ராதாகிருஷ்ணன் கையால் 'பத்மஸ்ரீ' விருது பெறுவதற்காக நடிகர்திலகம் சிவாஜிகணேசன் டெல்லி சென்றார். அந்த அனுபவங்களை விகடனில் நான்கு வாரங்களுக்குச் சுவைபட எழுதியுள்ளார். அதிலிருந்து, இதோ ஒரு துளி!
1966 ( vikatan)
ஜனாதிபதியுடன் ஒரு மணி நேரம்..
- பத்மஸ்ரீ சிவாஜிகணேசன்
சென்னையிலிருந்து டெல்லிக்கு 'காரெவெல்' விமானத்தில் நான் பலமுறை பயணம் செய்திருக்கிறேன். ஆனால் அவற்றில் இரண்டு பயணங்களை என்னால் என்றுமே மறக்க முடியாது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின்போது நமது படை வீரர்களை உற்சாகப்படுத்த கலைஞர் தூதுக்குழு ஒன்று சென்றதல்லவா? அந்தக் குழுவில் ஒருவனக நான் டெல்லிக்குப் பறந்தபோது, 'இந்த நாட்டின் குடி மகன் என்ற முறையில் நம் கட மையை ஆற்றப் போகிறோம்' என்ற பெருமித உணர்வு என்னிடம் குடி கொண்டிருந்தது. அதேபோல், சென்ற மாதக் கடைசியில் நமது மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களி டமிருந்து 'பத்மஸ்ரீ' பட்டத்தைப் பெற டெல்லிக்குச் சென்றபோதும், 'இந்த நாட்டுக் கலைஞன் என்ற முறையில், கலைஞர்களின் பிரதிநிதியாக கிடைத்த கௌரவத்தைப் பெறப்போகிறோம்' என்ற எண் ணம் ஒருவித உவகையை என்னுள் உண்டாக்கியது. இந்த இரண்டும் என் வாழ்க்கையில் மிக முக்கியமன பயணங்கள்.
நடுவே ஜனாதிபதி - அந்தப் பக்கம் 'பத்மஸ்ரீ' பானுமதி - இந்தப் பக்கம் நான். எங்களைத் தவிர திரு. ஸி.ஆர்.பட்டாபிராமன், திருமதி சௌந்தரம் ராமச்சந்திரன், இன்னும் நம் ஊரைச் சேர்ந்த பலர் அந்தக் கொட்டகையில் குழுமி இருந்தோம். 'திருவிளையாடல்' படம் ஆரம்பமாகியது. இன்டர்வெல் கிடையாது. மூன்று மணி நேரம், இப்படி அப்படி நகராமல், தொண்டையைக் கனைக்காமல், பொம்மைபோல் உட்கார்ந்து நான் படம் பார்த்த ஒரே நாள் அதுவாகத்தான் இருக்க முடியும். அவர் அருகே அமர்ந்து படம் பார்க்கும்போது, ஏதோ ஒருவித பக்தி உணர்வு என்னைப் பீடித்தது. ஒரு மாபெரும் அறிவாளியின் அருகில் அமரும் பாக்கியம் கிடைத்ததே என்றெண்ணி, அக மகிழ்ந்தேன். படத்தைப் பார்க்கும் போது ஜனாதிபதி நகைச்சுவை யுடன் சொன்னார்: ''நான் சிவா ஜியுடன் அமர்ந்து 'சிவ்ஜி'யைப் பார்க்கிறேன்!''
இதற்கு முன்பு, அதே தியேட்டரில் தலைவர் காமராஜ் அவர்க ளுடன், 'நவராத்திரி' படத்தை ஜனாதிபதி பார்த்து மகிழ்ந்ததாகவும் அறிந்தேன்.
மறைந்த மாவீரர் லால்பகதூர் சாஸ்திரிக்கு 'பாரத ரத்னா' பட்டம் அவர் மகன் ஹரிகிருஷ்ணாவிடம் வழங்கப்பட்டபோதும், பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை முதன்முதலா கக் கண்டுபிடித்துக் கொடுத்த முகம்மத் தின் ஜகால் அவர்களுக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்ட போதும், அந்தக் கூடத்தில் எழுந்த கரவொலி விண் அதிரச் செய்தது. விருது வழங்க என் பெயர் வாசிக் கப்பட்டபோது, ''அடடே! உங்க ளுக்கு அவ்வளவு பெரிய பெயரா? விழுப்புரம் சின்னய்யா கணேசனா நீங்கள்'' என்று சிரித்துக்கொண்டே கேட்டார் நம் அருமை ஜனாதிபதி.
விழா முடிந்ததும், விருது பெற்ற கலைஞர்களுக்கு ஒரு தேநீர் விருந்து. அந்த விருந்தின்போது, ஜனாதிபதி என்னைப் பிரதமர் இந்திராகாந்தி அவர்களுக்கு அறி முகப்படுத்தி வைத்தார். ஏற்கெனவே அவர்களை எனக்கு நன்கு தெரிந் திருப்பினும், ஜனாதிபதி அறிமுகம் செய்துவைத்தது தனிப் பெரு மையை அளித்தது.
''மிகச் சிறந்த நடிகர். நொடியில் முகபாவங்களை மாற்றி, உணர்ச்சிகளை அள்ளிக் கொட்டுவார்'' என்றார் ஜனாதிபதி.
பலமுறை, பலரிடம் பாராட்டுக்களைப் பெற்றிருந்தபோதிலும், அவரிடமிருந்து வந்த அந்தச் சொற் கள் என்னைப் புல்லரிக்கச் செய் தன.
-
ராணி வாரப் பத்திரிகையின் சென்ற இதழிலும்(18.4.2010), அதன் தொடர்ச்சியாக இந்த இதழிலும்(25.4.2010), தனது மானசீக குருவான நடிகர் திலகத்தைப் பற்றி அவரது சிறந்த சிஷ்யர் சிவகுமார் அவர்கள் எழுதியவற்றைப் படிக்க கீழ்க்காணும் சுட்டிகளைச் சொடுக்கவும்.
http://pammalar.webs.com/apps/photos...otoid=79795690
http://pammalar.webs.com/apps/photos...otoid=79795691
http://pammalar.webs.com/apps/photos...otoid=79795692
http://pammalar.webs.com/apps/photos...otoid=79795693
அன்புடன்,
பம்மலார்.
-
கலையுலக சுந்தரேஸ்வரரின் "சுமதி என் சுந்தரி" திரைக்காவியம், மதுரையம்பதியின் சென்ட்ரல் சினிமா திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, வெற்றிகரமாக நடைபெற்றுள்ள ஒரு வார காலகட்டத்தில் [16.4.2010 வெள்ளி முதல் 22.4.2010 வியாழன் வரை], அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.40,000/- (ரூபாய் நாற்பதாயிரம்).
இக்காவியத்தை வெளியிட்டவருக்கு, இந்த ஒரு வாரத்தில் மட்டும், சற்றேறக்குறைய ரூ.10,000/-த்துக்கும் மேல் (ரூபாய் பத்தாயிரத்துக்கும் மேல்) லாபம் கிடைத்துள்ளது.
இத்தகவலை அளித்த ரசிக நல்லிதயம் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
-
சென்னை பெரம்பூர் மஹாலட்சுமி : பாசமலர் : தினசரி 3 காட்சிகள் : மொத்த வசூல்(சற்றேறக்குறைய)
13.4.2010 - செவ்வாய்
பிற்பகல் 2:30 = ரூ.2,200/- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு)
மாலை 6:15 = ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்)
இரவு 9:45 = ரூ.1,500/- (ரூபாய் ஓராயிரத்து ஐநூறு)
14.4.2010 - புதன்
பிற்பகல் 2:30 = ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்)
மாலை 6:15 = ரூ.2,300/- (ரூபாய் இரண்டாயிரத்து முந்நூறு)
இரவு 9:45 = ரூ.1,400/- (ரூபாய் ஓராயிரத்து நானூறு)
15.4.2010 - வியாழன்
பிற்பகல் 2:30 = ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்)
மாலை 6:15 = ரூ.1,800/- (ரூபாய் ஓராயிரத்து எண்ணூறு)
இரவு 9:45 = ரூ.1,300/- (ரூபாய் ஓராயிரத்து முந்நூறு)
அன்புடன்,
பம்மலார்.
-
திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களே உண்மை என்ன ஒரு அருமையான கணக்கு . அந்தமான் காதலி திரைப்படமும் நெல்லை பூர்ணகலவில் வெளியானது 55 நாட்கள் ஓடியதாக நினவு. அப்போது நான் PUC முடித்துவிட்டு இன்ஜினியரிங் காலேஜ்/சயின்ஸ் admission ஆக வெயிட் செய்து கொண்டிருந்த காலகட்டம்.
இந்த தருணத்தில் இந்த தளத்திருக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று. ஆண்டாள் அருளிய திருபாவை அதை மு ஸ்ரீனிவாச iyengar என்ற ஆராட்சியாளர் எந்த கால கட்டத்தில் திருபாவை எழுத பட்டிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சி செய்யும்போது ஒரு பாசுரத்தில் "வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று" என்ற வரி வைத்து இந்த பாடல் 10 அல்லது 11 வது பாடலில் வரும் மார்கழி என்பது decemeber 14 அல்லது 15 வது தேதியில் வரும் அன்று பௌர்ணமி அதிலிருந்து என்று வெள்ளி கிழமை வந்தது என்று கண்டு பிடித்து 8 வது century என்று கூறி யதாக writer சுஜாதா சொல்லியிருந்தார் கிரேட் Mr .முரளி என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் நீங்கள் சென்னையில் இருந்தால் ஒரு முறை உங்களை எல்லாம் நேரில் சந்திக்க ஆவல்
நட்புடன் gk
-
நன்றி திரு பம்மலார் சார்,
ராணி வாரப் பத்திரிகையில் நடிகர் திலகத்தைப் பற்றி அவரது சிறந்த சிஷ்யர் சிவகுமார் அவர்கள் கூறியவற்றை படித்தேன்.
அருமை அத்தனையும் அருமை.
எங்கள் கண்களுக்கு விருந்தாக்கிய உங்களுக்கு மீண்டும் நன்றி.
-
அன்புள்ள கிருஷ்ணா...
இப்போது தெளிவாக புரிந்துகொண்டீர்கள் என்று நினைக்கிறேன். 'அந்தமான் காதலி'யை 'கிரகப்ரவேசம்' என்று நினைத்ததன் விளைவாக, 'என்னைப்போல ஒருவனை' 1976-லேயே ரிலீஸ் பண்ணிட்டீங்க. :D (just joke)
நமது பம்மலார், முரளியார், ராகவேந்தர் இவர்களின் 'புள்ளிவிவரக் கணக்கு' எல்லோரையும் அசர வைக்கும். அவர்களிடம் யாரும் தவறான ஒரு தகவலைச்சொல்லி விட்டு தப்பிவிட முடியாது. ஏற்கெனவே மாற்று முகாம் ரசிகர்களுடன் சண்டை நடந்து, தற்போது பூட்டப்பட்டிருக்கும் திரிகளின் பக்கம் சென்று பார்த்தீர்களானால் தெரியும். நடிகர்திலகத்தின் படங்களின் புள்ளிவிவரம் மட்டுமல்ல, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் படங்களெல்லாம் கூட எப்போது வெளியானது, எத்தனை நாட்கள் ஓடியது, திரையரங்கிலிருந்து அப்படம் எடுக்கப்பட்ட அடுத்தநாள் என்ன படம் அங்கே திரையிடப்பட்டது என்பதெல்லாம் அவர்களுக்கு அத்துப்படி. (1976-ல் நான் சொன்ன ஐந்து படங்கள் தவிர ஜனவரி 26 அன்று 'உனக்காக நான்' மட்டும் ரிலீஸாகியிருந்தது).
நெல்லை திரையரங்க வெளியீடுகள் பற்றிய உங்களின் பதிவுகள் சுவையாக உள்ளன. தொடர்ந்து பதிவிடுவீர்கள் என ஆவலுறுகிறோம். அந்தமான் காதலியை பூர்ணகலாவில் மேலும் நீட்டிக்க நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
பம்மலார், முரளி, ராகவேந்தர் மூவருமே சென்னையில்தான் உள்ளனர். சந்தித்தீர்களானால் அந்த தங்கச்சுரங்கங்களில் ஏராளமான தங்க(த்தகவல்)களை வெட்டியெடுத்துச்செல்லலாம்.
-
மிக்க நன்றி சாரதா madem அவர்களுக்கு
நீங்கள் கூறியபடி வேறு எந்த திரியும் இவ்வளுவு நீண்டதாக இல்லை. எத்தனை தகவல் எத்தனை நிகழ்வுகள் படிக்க படிக்க இன்ப தேன் வந்து பாயுது காதினிலே இந்த தருணத்தில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது திரு மேஜர் சுந்தர்ராஜன் அவர்களுடுன் ஒரு சந்திப்பு எனக்கு நிகழ்ந்தது அப்போது தமிழக முன்னேற்ற முன்னணி இயக்கத்தின் ஒரு பொது கூட்டத்திற்கு மேஜர் அவர்கள் (தென்காசி) வந்திருந்த்தார்கள் அவரை அழைத்து செல்ல வேண்டிய கார் சற்று தாமதமாக வந்தது அதனால் அவர்கள் திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷன் பிளாட்போர்ம்இல் வெயிட் செய்து கொண்டிருந்தர்கள். நிகழிசுக்கு ஏற்பாடு செய்த ரசிகர்கள்/கட்சி அங்கத்தினர்கள் யாரும் வரவில்லை நான் வேறு ஒரு வேலை ஆக ரயில்வே ஸ்டேஷன் சென்று இருந்தேன். நானே வலிய சென்று அறிமுகம் செய்து கொண்டேன். அப்போது அவர்கள் சற்று ஜோவியல் ஆக கூறினார்கள் 'சிவாஜி மட்டும் 75 காலகட்டங்களில் பெருந்தலைவர் மறைவுக்கு பிறகு கட்சி ஆரம்பித்து இருந்தால் எங்கோ சென்று இருப்பார். உண்மையான ரசிகர்கள் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இன்று கட்சி வளர பெரும் பாடுபட வேண்டி இருக்கிறது' கடைசியில் அவரும் பிரிந்து சென்று விட்டார். அவர் நம்மவரை விட்டு பிரிந்தற்றுகு எதாவது மிக பெரிய காரணம் உள்ளதா தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன் ஆனால் VKR இறுதி வரை அண்ணனுடன் நட்பாகவே இருந்தார் என்று கேள்வி பட்டேன் சிவாஜி/மேஜர்/vkr இல்லை என்றால் நடிகர் சங்கம் என்றோ காணாமல் போய் இருக்கும்.
தியாகம் 100vadhu நாள் விழா நெல்லை பார்வதி திரை அரங்கில் நடந்ததை மிக விரைவில் நினைவுக்கு கொண்டு வர முயற்ச்சி செய்கிறேன்
ஸ்ரீநிவாஸ் அவர்களின் அரசியல் நிகழ்வுகள் கட்டுரை பாதி படித்தேன் 1984 வரை மீதி நமது போரும் இல் உள்ளதா
நன்றியுடன் GK
-
திரு சிவகுமார் அவர்களின் கட்டுரை படித்தேன் பம்மலர் அவர்களின் வெப்.கேம்ஸ். தளத்தில். இது ஏற்கனவே அவருடய "இது ராஜா பாட்டை அல்ல" புக் இல் வெளியானது என்று நினைக்கிறன் அந்த புத்தகத்தில் அவர் எல்லா நடிகர்களையும் பற்றி எழுதி உள்ளார். ஆனால் சிவாஜிக்கு மாத்திரம் 5 chapters
திரு பம்மலார் அவர்கள் பம்மல் கண்ணதாசன் மன்றம் தலைவர் அல்லது செயலாளர் ஆக உள்ளார்களா
ஏன் என்றால் கடந்த வருடம் வாணி மஹால் ஒரு நிகழிசயில் திரு ஸ்ரீகாந்த் அவர்களுக்கும் திருமதி ஜெயசித்ரா அவர்களுக்கும் சிறந்த சாதனையாளர் விருது வழங்கினார்கள் அப்போது அங்கே சென்று இருந்தேன் திரு ஸ்ரீகாந்த் உடல் நலம் குன்றி மேடை ஏறவே மிகவும் கஷ்டபட்டார்கள் அப்போது சுவாமிநாதன் என்ற ஒருவரடுன் பேசிய நினவு திரு ஜெகத்ரட்சகன் அவர்கள் தலைமை வகித்தார்கள் திரு தமிழருவி மணியன் அவர்கள் சிறப்பு பேச்சாளர் கண்ணதாசன் அவர்களின் பாடல்களுக்கு சிறந்த நாட்டிய நிகழ்ச்சி அமைத்து இருந்தார்கள் காதல் மன்னன் heroine மிஸ்.மனு நடனம் ஆடினார்கள்
நட்புடன் Gk
-
டியர் திரு கிருஷ்ணா,
தங்களுடைய நினைவுகளைப் படிக்கும் பொழுது பல சுவையான தகவல்கள் தெரிய வருகின்றன. நடிகர் திலகத்தின் ரசிகர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு தகவல் களஞ்சியமே இருக்கும். அதற்கு நீங்கள் மட்டுமென்ன விதிவிலக்கா என்ன.
நடிகர் திலகம் அவர்கள் சிறந்த நடிகராக மட்டுமல்ல சிறந்த மனிதராகவும் திகழ்ந்தார்கள். 1975 என்ற ஆண்டினைப் பற்றிப் பலர் கூறும் ஒரே கூற்று அவர் ஸ்தாபன காங்கிரஸை விட்டுச் சென்றிருக்கக் கூடாது என்பது. இதைப் பற்றி அலசும் முன் அன்றைக்கு இருந்த சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது. சரி நடிகர் திலகம் தான் சென்று விட்டார். அதன் பிறகு மற்றவர்கள் அதைத் தொடர்ந்திருக்கலாமே, யார் வேண்டாம் என்றார்கள். ஸ்தாபன காங்கிரஸிலேயே தங்கி விட்ட காமராஜ் விசுவாசிகள் என்று கூறிக்கொண்டவர்கள் ஏன் அக்கட்சியைத் தொடரந்து நடத்தவில்லை. பின்னர் எமர்ஜென்சி காலத்திலேயே அது ஜனதா வாகி பல கட்சிகள் ஒருங்கிணைந்து தானே உத்தமத் தலைவர் மொரார்ஜி தேசாய் அவர்கள் தலைமையில் ஆட்சி அமைந்தது. அந்த ஆட்சியையும் அவர்களால் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லையே. ஆனால் அவர்கள் என்ன கூறினார்கள், இனிமேல் சிவாஜி படம் போணியாகாது, யார் பார்ப்பார்கள் என்றெல்லாம் ஏளனம் செய்தார்கள். கலை வேறு அரசியல் வேறு என்பதில் நடிகர் திலகம் மட்டுமல்ல, அவரது ரசிகர்களும் மக்களும் நன்கு உணர்ந்ததால் தான் அதற்குப் பின்னர் அவருடைய வாழ்க்கையிலேயே மிகப் பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்ற திரிசூலம் வெளிவந்தது.
இப்படி பல கேலிகள், ஏளனங்கள் அனைத்தையும் தாண்டித் தான் நடிகர் திலகம் வெற்றிகளைக் குவித்தார். இதில் ஒரு பெரிய விஷயம் என்ன வென்றால் இநதக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் நடிகர் திலகம் அவர்களுக்கும் இடையே நட்பு மேலும் இறுகியது நெருக்கமானது. இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்து தம் உண்மையான நட்பைப் பேணிக் காத்தனர். இது தான் நடந்தது. அவர் யாருக்கு ஆதரவளித்தாரோ அந்தக் கட்சியினர் தான் அவரைப் புழுதி வாரித் தூற்றினர். இது ஊரறிந்த உண்மை.
1977-80க்குப் பின் அவர்களெல்லாம் எங்கே. அன்று நடிகர் திலகத்தைத் தூற்றியவர் பலரும் பின்னர் இந்திரா அம்மையார் மீண்டும் பிரதமரான போது அந்தக் காங்கிரஸில் தானே ஐக்கியமாயினர்.
இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது எம்.ஜி.ஆர். சிவாஜி இருவரிடையே இருந்த நெருக்கத்தின் முக்கியமான சான்று. எனக்குத் தெரிந்த வரை நடிகர் திலகமும் எம்.ஜி.ஆர். அவர்களும் அரசியலில் நேருக்கு நேர் மோதியதாகத் தெரியவில்லை. இருவருமே அவரவர் சார்ந்த இயக்கத்திற்காகப் பாடுபட்டு தங்களுடைய உழைப்பினையும், பொருள், நேரம் யாவையும் ரசிகர் பலத்தையும் அர்ப்பணித்தனரே யன்றி தமக்காகப் பயன் படுத்திக் கொள்ளவில்லை. 1977ல் தான் முதன் முதலாக எம்.ஜி.ஆர். அவர்கள் தமக்காக மக்களிடம் போய் நின்றார். அப்போது அவருக்குக துணையாக ஆதரவாக பிரச்சாரம் செய்தவர் நடிகர் திலகம். 1980 மற்றும் 1984 ஆண்டுகளில் காங்கிரஸில் நமது சிவாஜிரசிகர் மன்றம் கண்ட சோதனைகள் ஊரறிந்த வரலாறு. 1984ல் பின்னர் எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலமுற்றிருந்த போது நடிகர் திலகம் அவர்களுக்காக குடும்பத்துடன் ஆலயங்களிலும், தேவாலயங்களிலும் மசூதிகளிலும் கூட்டுப் பிரார்த்தனை நடத்தி அவர் நலம் பெற வேண்டிக் கொண்டார். அது மட்டுமன்றி அமெரிக்கா சென்று அவரை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
இவையெல்லாவற்றையும் விட 1987ல் அவர் மறைந்த பொழுது அவருடைய இயக்கம் சிதறக்கூடாது, ஒன்றாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத் தானே காங்கிரஸுடன் கருத்து வேறு பாடு கொண்டு விலகினார். பின்னர் அதிமுக மீண்டும் ஒன்றாக இணைந்த போது மகிழ்வுற்றார். அதே போல் 1989ல் தமது உடன் பிறவா சகோதரர் எம்.ஜி.ஆர். அவர்களின் துணைவியார் ஜானகி அம்மையாருக்காகத் தானே வாக்குக் கேட்டார். அப்போதும் தனக்கெனக் கேட்க வில்லையே. அவருடைய தமிழக முன்னேற்ற முன்னணி போட்டியிட்டதே 50 தொகுதிகளில் மட்டும் தானே.
இதையெல்லாம் சொல்லக் காரணம் நடிகர் திலகம் தேர்தலிலும் தோற்றிருக்கலாம், அரசியலிலும் தோற்றதாக சிலர் எண்ணலாம். ஆனால் அதில் மனிதாபிமானமும் நட்பும் சகோதரத்துவமும் காப்பதற்காக உழைத்த உண்மையான மனிதனுக்கேற்பட்ட தோல்வியாகத்தான் கருத வேண்டும். அந்தத் தோல்வியினால் நட்டம் அந்த மனிதருக்கல்ல. அதனால் நாம் சிறுமைப்படத் தேவையில்லை என்பதே என் பணிவான தனிப்பட்ட கருத்து. இதில் கருத்து மாறுபட எவருக்கும் உரிமையுண்டு என்பதையும் நானறிவேன். இது என் தனிப்பட்ட கருத்து என்பதை மட்டும் கூறிக் கொள்ள விழைகிறேன்.
அன்பு நண்பர் கிருஷ்ணா மட்டுமல்ல பல சிவாஜி ரசிகர்களுக்கு நடிகர் திலகத்தின் தோல்வி பற்றிய ஒரு ஆதங்கம் மனதில் இருந்து கொண்டே யிருக்கும். அதைக் களைவதற்கான முயற்சியே இவ்வளவு நீளமான பதிவு.
ராகவேந்திரன்.